Sunday, December 8, 2013

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் தமிழ்மாமணி வா.மு.சே. .திருவள்ளுவர் தலைமையில் மலேசியாவில் ஈப்போ நகரில் மகாகவி பாரதியார் விழாவில் பங்கேற்கும் தமிழ்ச் சான்றோர்கள்.



1. தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

42 காலமாக வெளிவரும் தமிழ்ப்பணி இதழின் ஆசிரியர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர். உலகளாவிய நிலையில் செருமணி, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆறு மாநாடுகள் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்.உலகத் தமிழர்களின் சிந்தனைப்பெட்டகமாக மாநாட்டு மலர்களை தமிழுலகுக்கு வழங்கியவர். மிகச் சிறந்த கவிஞர் எழுத்தாளர் உரையாளர் பதிப்பாளர் இதழாளர். பயணம் கவிதை கட்டுரை ஆய்வு என 12 நூல்களின் நூலாசிரியர். தமிழ் தமிழர்  சிந்தனையில் தந்தையின் வழித்தடத்தில் உலகெங்கும் பயணித்த பண்பாளர். உலகெங்கும் இவர் பெற்ற விருதுகள் ஏராளம் இருப்பினும் தமிழ்த் தொண்டராக வாழ்வதையே பெரும் பேறாக எண்ணுபவர்.

2. புலவர் ஆ..நெடுஞ்சேரலாதன்.

தமிழாசிரியர் நெடுஞ்சேரலாதன் பாவாணர் கோட்டம் அமைத்தவர்.பாவாணருக்கு முழு உருவச்சிலை நுலகம் இதழ்ப்பணியகம் நூற்றாண்டுவளைவு அமைத்து ஆண்டுக்கு 23 கூட்டங்கள் நடத்தி வருபவர். தந்தைபெரியார்  பாவேந்தர் பாரதிதாசன் திருவள்ளுவர்  புகழ்பரப்ப அமைப்புகளை உள்ளடக்கி விழாக்களை நடத்தி வருபவர். பாவாணர் கண்ட உலகத்தமிழ்க் கழகத்தில் மாநிலப் பொருளாளார்.முதன்மொழி இதழ் ஆசிரியக்குழு உறுப்பினர். பாவாணரியல் எனும் முத்திங்களிதழின் ஆசிரியர். பாவலர் நூலாசிரியர் சொற்பொழிவாளர் கட்டுரையாளார் என பன்முக சிந்தனையாளர்.

3. கவிஞர் செம்பை சேவியர்

திராவிட இயக்கத்தின் தீரர். இலக்குவனார் இலகியப் பேரவை நிறுவி மாதம் தோறும் இலக்கியாவிழா நடத்தி ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் பொன்மனத்தர். மிகச் சிறந்த நூலாசிரியர் கவிதை கட்டுரை என 14 நூலகளை வெளியிட்டுள்ளார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர். பெருந்தலைவர் காமராசரிடம் கவிதைக்கான முதற்பரிசு பெற்ற பெருமைக்குரியவர்.

4 புலவர். உ. தேவதாசு.

தமிழ் இலக்கியங்களைக் கற்று பெரும்புலவராக தமிழகத்தில் வலம் வருபவர். இலக்குவனார் இலக்கியப்பேரவையின் செயலர். மிகச் சிறந்த கவிஞர். கம்பராமயண தொடர் சொற்பொழிவு ஆற்றியவர். அம்பத்தூர் கம்பன்கழக ஆட்சிமன்ற உறுப்பினர். காரைக்குடி கம்பன் கழக பவள விழாவில் கட்டுரைப்போட்டியில் முதற்பரிசு பெற்றவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர்.

5. முனைவர் க. பன்னீர்செல்வம்

மாநில மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பெருமைக்குரியவர். பொம்மலாட்டக் கலைஞர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொறுப்பாளர். அறி.வியல் இயக்கப் பொறுப்பாளர். 9 நூல்களின் நூலாசிரியர். . பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர்.பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்றவர். தாய்லாந்து பாரதியார் விழாவில் பங்கேற்று கவி பாடியவர். தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றும் தூய தொண்டர்.

6. கவிஞர் சுந்தரமூர்த்தி

பள்ளித்தலைமையாசிரியராகப் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கியர். தமிழ்கத்தின் பல்வேறு அமைப்ப்புகளில் சிறப்பு விருது பெற்ற வர். மிகச்சிறந்த கவிஞர் தமிழகத்தின் பல்வேறும் இதழ்களில் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சமூகப் பணிகளில் பணியாற்றி மனித நேயராகத் திகழ்பவர்
.
7. தலைமையாசிரியர் அ .செல்லதுரை

பாவாணர் கோட்ட அறக்கட்டளையின் அறங்காவலர். அறிவொளி இயக்கக்கருத்தாளர். கலைக்குழு தலைமையாளர்.கிராமிய கலைஞர்கள் சங்கச்செயலாளர். அறிவியல் இயக்கத் துணைத்தலைவர். நாட்டுப்புறப் பாடல்களை  இயற்றிப் பாடுபவர். நடிப்பு  பேச்சு வில்லிசைப் பாடும் திறன்மிக்கவர்.

8. புலவர் கு. துரைராசு

தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர் எழுத்தாளர்.. வானொலி உரை, பட்டிமன்றம் நாடகம் சொற்பொழிவு தொலைக்காட்சி நிகழ்வுகளில்  பங்கேற்றவர்.மும்மதமும் சம்மதம் எனும் தலைப்பில் 5 பாகங்கள் எழுதிய நூலாசிரியர். திருக்குறள்சீர்பரவுவார் பட்டம் பெற்றவர். தன் மகளை திருக்குறள் கவனகராக்கி திருக்குறள்மணி விருதுபெற பயிற்சி கொடுத்தவர். திருக்குறள் பேரவையின் திருக்குறள் பட்டம் பெற்றவர்.

9.  மனிதநேயமாமணி அ. சேதுராமன்.

இந்திய தொடர்வண்டித் துறையில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றி விருதுகள் பலபெற்றவர். தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகள் ஏற்று தொழிலாளர் நலம் பெணுபவர். மதுரையில் நடைபெற்ற பன்னாட்டுத் தழிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டில் பெரும்பங்காற்றியவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் எனும் குறளுக்கு சான்றாக வாழ்பவர்.

10. இலக்கியத்தேனீ கவிஞர் சு. வாசு

இந்திய பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாங்காக்கில் உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்றவர். இந்திய சமாசுவாடி கட்சியின் தமிழ்நாட்டின் மாநில பொதுச்செயலாளர்.தலைவர் முலாயாம் சிங் யாதவின் வாழ்கைவரலாற்று நூலை எழுதி உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேசு யாதவ் திருக்கரத்தால் வெளியிட்ட  பெருமைக்குரியவர். மலேசியாவில் 10 ஆம் உலகப் பண்பாட்டு மாநாட்டில் பங்கேற்று உலகப் பொருளாதாரம் பற்றி உரையாற்றியவர்.

11. நடிகர் வா. இராசு

  முன்பேர வர்த்தகத்தில் முன்னணி ஆலோசகராக பணியாற்றுபவர் செல்லமே, வால்மீகி போன்ற படங்களில் நடித்தவர். குறும்பட ஆலோசனைக் குழுவில் பொறுப்பு வகிப்பவர்.இவர் நடித்த ஸ்டேட்டஸ் என்ற குறும் படம் இந்திய சிறப்பு விறுது பெற்றுள்ளது.

12.  ஆசிரியை. து. அங்காள ஈசுவரி

நடுநிலைப்பள்ளி ஆசிரியர். முதுகலைப் பட்டம் பெற்றவர். வழக்காடு மன்றங்களில் தம் கணவருடன் சென்”று பேசுபவர். தன் கணவர் துரைராசுவின்  எழுத்துக்கும் பேச்சுக்கும் இலக்கியப் பணிகளுக்கும் துணைபுரிபவர். திருக்குறள் பேரவையின் உறுப்பினர்.

Thursday, December 5, 2013

விழிமின் எழுமின் விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள்

(4-12-2013 அன்று பாரதிய வித்யாபவனில் விழிமின் எழுமின் விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள் எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


       மனத்துக்கண்  மாசிலன் ஆதல் அனைத்தறன்  
ஆகுல நீர பிற.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.   

   
தமிழகப் புலவர் குழுவும் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் இணைந்து ஒராண்டு காலமாக  நடத்தும் விழிமின் எழுமின் விவேகாநந்தரின் சிந்தனைகள் தலைப்பில் 11 சிந்தனையாளர்கள் பேசியுள்ளனர். இதுநாள்வரை 11 சான்றோர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். விவேகானந்தரின் 150 அகவைத் திருவிழாவை அறிவுப்பூர்வமாக பெருமகனின் சிந்தனையை எண்ணி உணர்ந்து மகிழும் சூழலை உருவாக்கிய சகோதரி கி.ஆ.பெ.வி யின் திருமகள் மணிமேகலைக் கண்ணன் அவர்களையும் நினைத்தாலே இனிக்கும் கிருட்டிணா இனிப்பக உரிமையாளர் முரளி அவர்களையும் துணை நிற்கும் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெருவித்துக் கொள்கிறேன்.

            நிறைவு மாதத்திற்கு விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள் எனும் தலைப்பில் என்னைப் பேச அழைத்துள்ளீர்கள். விருது வழங்க பாவேந்தர் பரம்பரையை உருவாக்கி வரும் பெருங்கவிஞர் பொன்னடியார் அவர்களை அழைத்துள்ளீர்கள். நூற்றாண்டு விழாக்கண்ட பேரறிஞர் மு. வரதராசனாரின் பெயரில் வழங்குவது சாலப் பொருத்தமாகும்.

நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்கிய மூத்த வழக்கறிஞர் காந்தி மிகச் சிறந்த புரவலர். அவர் தம்முடைய வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். தம் இளமைக்காலத்தில் மிகச்சாதரண மாணவனாக  இருந்து உயர்ந்துள்ளதை பதிவு செய்துள்ளார்.இளைஞர்கள் அனைவரும்  படிக்கவேண்டிய நூல். முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் இன்றைய சமச்சீர் கல்விக்கு மூல காரணமானவர். பெருமக்களின் வருகையெல்லாம் மன மகிழ்வைத் தருகிறது. வருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

நரேந்திரர்
                அருள்ஞானி நரேந்திர தத்தா 12-1-1863 அன்று விசுவனாத தத்தா புவனேசுவரி இணையருக்கு மேற்கு வங்கத்தில் கல்கத்தாநகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில்  பிறந்தார். கொல்கத்தா மாநிலக்  கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றார்.  1884 ஆம் ஆண்டில் சுகாட்டிசு சர்ச் கலலூரி  உயர் கல்வி பயின்று தத்துவத்தில் இளங்கலை  பட்டம் பெற்றார்.. தந்தையாரின் தொழில் நலிவால் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த நாரேந்திரர் கல்லூரியின் ஏழைமாணவர்களில் ஒருவராகப் பயின்றார்.

குருநாதர்
1881 பிற்பகுதி 1882 முற்பகுதி  காலங்களில் தம் குருநாதர் இராமகிருட்டிண பரமகம்சர் அவர்களை தக்சனேசுவரத்தில் சந்தித்தார். இந்த அருட் சந்திப்பே நாரேந்திரரின் வாழ்கையின் திருப்பும்னையானது. குருநாதரிடம் தொடக்கத்தில் சாதாரணமாகச் சென்றவர் இராமகிருட்டிண பரமகம்சரின் தலைசிறந்த சீடரானார். நான்கு ஆண்டுகள் இராமகி ருட்டிணரின் தொடர்ந்து சென்று அருட்பணிஆற்றினார். 1895 இல் குருநாதருக்கு புற்றுநோய் தொண்டையில் தாக்க மருதுத்வதிற்கு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அந்தக் காலக கட்டங்களில் இராமகிருட்டிணரின் சீடர்கள் அருளுரைகள் வழங்கினர். நரேந்திரர் குருநாதரின் தொண்டினை சிறப்புறச் செய்தார். 1886ஆம் ஆண்டு இராமகிருட்டிணர் காலமானார்.

இந்தியப் பயணம்
      குருநாதரின் மறைவுக்குப் பின் நான்கு ஆண்டுகள்  இந்தியா முழுமையும் பயணம் செய்து அருளுரை ஆற்றி ஆண்மீகத் தொண்டாற்றினார். .1892 1893 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மதுரை கும்பகோணம் சென்னை தமிழகத்தின் பகுதிகட்கு வந்தார். மதுரையில் இராமனாதபுரம் அரசர் பாற்கர சேதுபதி அவர்களைச் சந்தித்தார். இராமநாதபுரம் அரசர் தனக்கு வந்த அமெரிக்கா அழைப்பை நரேந்திரரை செல்லுமாறு வேண்டினார். தென்னகத்துப் பெருமக்களும் தமிழக ஆன்மீக சிந்தனையாளர்களும், சென்னையைச் சேர்ந்த பெருமாள் என்ற பெருமகன் வீடு வீடாகச் சென்று நரேந்திரரின் பயணத்திற்கு பொருள்சேர்த்தனர்

விவேகாநந்தர் உலகப் பயணம்
உலகச் சமய  மாநாட்டிற்கு 31 – 5 - 1893  மும்பையிலிருந்து அமெரிக்கா செல்லும்போது சுவாமி.  விவேகாநந்தராக செல்கிறார். சப்பானின் (நாகசாகி, கோபே, யோக்கோமா, ஒசாகா,) சினா கனடா வழியாக   30 – 7 -1893 அன்று சிகாக்கோ அடைந்தார். சுவாமி விவேகாநந்தர்  கார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்றி ரைட் அவர்களைத் தொடர்பு கொண்டு  பலகலைக்கழகத்தில்  உரையாற்றினார். சிக்காக்கோ பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முறையான அனுமதி இன்மையறிந்து தங்களிடம் அனுமதி கேட்பது என்பது சூரியனிடம் தன் அருளொளியை வழங்க அனுமதி கேட்பதைப் போன்றது என்கிறார். பேராசிரியர் ரைட்.("To ask for your credentials is like asking the sun to state its right to shine in the heavens" )

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் 11 – 09 – 1893 அன்று உலகச் சமய மாநாட்டில் அரியதொரு உரையாற்றினார் தொடக்கத்திலேயே அமெரிக்கா சகோதர சகோதரிகளே என முங்கிய முழக்கம் அரங்கமே எழுந்துநின்று கரவொலி எழுப்பியது. சுவாமி விவேகாநந்தரின் 150  அகவை நிறைவின்பொதும் உலகமே போற்றும் முழ்க்கமாக உள்ளது

இங்கிலாந்தில் நவம்பர் 1895ல் மார்க்கெட் எலிச்பத் என்ற புனித் ஐரிசு மங்கையை சந்தித்தார். இவர்தான் அருட்சகோதரி நிவேதிதா. 1896ல் இந்தியவரலாற்று அறிஞர்  அக்ச்போர்டு பல்கலைக்கழக மாக்சுமுல்லரை சந்தித்தார். தம் குருநாதர் இராமகிருட்டிணர் வரலாற்றை பதிவு செய்தார். செருமணியில் இந்திய வரலாற்று அறிஞர் பவுல் டூயுசன் அவர்களைச் சந்தித்தார்.

தமிழக வரவேற்பு
சுவாமி  விவேகாநந்தர் 15-1-1897 அன்’று கொலம்போ வழியாக பாம்பன் குந்துக்கால் பகுதிக்கு வந்தடைந்தார். பாம்பனில் மிகச்சிறப்பான வரவேற்பளித்தார் இராமநாதபுரம் அரசர் பாட்கர சேதுபதி. பின் இராமேசுவரம் இராமநாதபுரம் மதுரை கும்பகோணம் சென்னை வழியாக சென்னை வந்தடைந்தார். 1 – 5- 1897 அன்று கல்கத்தாவில் இராமகிருட்டிண மடத்தைத் தொடங்கினார்.

சுவாமி விவேகாநந்தர் மீண்டும் 1899 – 1892 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வேதாந்த கருத்துக்களை உலகம் முழுமையும் பரப்பினார்.

ஆசை
”ஆசைகள் இருந்து அவற்றை நிறைவேற்றும் வழி  கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் எனற வினோதமான் பிரதிச்செயல் உண்டாகிறது. ஆசைக்குக் காரணம் யார்? நான்,  நானே எனவே இப்போது நான் படும் துன்பங்களுக்கெல்லாம் நானே காரணம்.” 11 12 1895

வண்ணத்துப்புழு தன் உடலிலிருந்து சுரக்கின்றபொருளால் தன்னைச் சுற்றி தானே கூடமைத்துக் கொண்டு அதில் தானே சிறைப்படுகிறது அங்கே அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் இறுதில் அதுவே ஞானம் பெறுகிறதது அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது

மனிதனே கடவுள்
 மனிதன் இயல்பிலேயே கொடியவன் அல்ல அவன் தூயவன் முற்றிலும் புனிதமானவன்  தெய்வீகமாணவன் நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான். 11 12 1895
 சோலனும் குரோசனும் பற்றியகதை  ஆசியாமைனர் மகிழ்ச்சி நிறைந்த இடம் என்று அரசன் குரோசசு முனிவர் சொலனிடம் கூறுகிறான்.உங்கள் வாழ்வின் இறுதிவரை  பொறுங்கள் என கூறிகிறார். என்ன உளறிகிறீர்கள்  என கோபமுறுகிறான். நாளடைவில் பாரசீகர்கள் குரோசனை வென்று அவனை உயிருடன் எரிக்குமாறு கட்டளையிட்டனர் சிதை அடுக்கப்பட்டவுடன் சோலன் சோலன் என்று கத்தினான். யாரை நினைத்துக் கத்துகிறாய் என பாரசீகமன்னன் கேட்டபோது தனக்கும் சோலனுக்கும் நடந்த உரையாடலைக் கூறியவுடன் மன்னன் இரக்கம் கொண்டு விடுவித்தான். 18 – 12-  1895.
      இன்பம் எங்கிருக்கிறதோ ஆனந்தம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் இறைவனாகிய சக்தி இருக்கிறது. 8 – 1 – 1896
மாயை
மாயையை இன்னொறு மாயையால் முறியடிக்கலாம். அதுதான சாதனைப் பயிற்சி என்கிறார் சுவாமி நெருப்பு நெருப்பையே தின்றுவிடும். ஒருமேகம் பழைய மேகத்தைத் துரத்தும் பிறகு இரண்டுமே மறைந்து விடும். முகமதியர்கள் இந்துக்கள் நரி நாயை அமங்களமான மிருகங்களாகவே காண்கிறார்கள் நாய் முகர்ந்துவிட்டாலே உண்ணத் தகுதியற்றதாகிவிடுகிறது. ஒரு ஏழை முகமதியன் வீட்டில்  உணவில்  ஒரு நரி சிறுபகுதியை தின்று விடுகிறதுன. தனக்காக சிரமப்பட்டு செய்த உணவை திண்ண முடியவில்லையே என்ற கவலையில்  முல்லாவிடம் நரி என் ஆசையில்  மண்ணைப் போட்டுவிட்டது என முறையிட்டான்.முல்லா ஒரு பரிகாரம் கூறினார் ஒரு நாயைப் பிடித்து சிறிது உணவை சாப்பிடச் செய்துவிடு. நாயும் நரியும் பிறவிப் பகைவர்கள் ஒன்றின் அசுத்தத்தை மற்றொன்று மாற்றிவிடும். முள்ளை  முள்ளால்  எடுத்துவிட்டு எறிந்துவிடுவது போன்றது. 22 – 1 – 1896

இருப்பது ஒன்றே
 பிரபஞ்சத்தில் மூன்றும் இல்லை இரண்டும் இல்லை இருப்பது ஒன்றே. மாயையால் பலவாகத் தெரிகிறது. நெடுந்தூரத்தில் உங்கள் நண்பன் வருவதாக வைத்துக் கொள்வோம் இருவருக்கும் இடையே உள்ள இருள் மூடுபணி புகை காரணமாக யாரோ என நினைக்கிறீர்ககள். நண்பனை வேறு ஒருவராக நிணைக்கும்போது அவன் வேறொருவனாகத் தெரிகிறான். நண்பனைக் காணும்போது அ அவன் மறைகிறான். இரண்டு நிலையிலும் நீங்கள் பார்ப்பது ஒருவரைத்தான்.
சுவாமி அவர்கள் விந்தை உலகில் ஆலிசி(Alice in woderland) சிறுவர் கதைகளில் தாம் படித்தவற்றை கூறுகிறார்கள். ஒன்றிற்கும் மன்றொன்றிற்கும்  தொடர்பு இல்லாத நிகழ்ச்சி வரும் ஒரு சம்பந்தமும் இல்லாத அடுத்த சம்பவத்தில் அது முடியும் சிறுவர்களாக இருக்கும்போது அதில் பெரியதொடர்பு இருப்பது போல் தோன்றியது. கனவு காணும்போது தொடர்பு உடையதாகத்தான் தோன்றும் விழித்தபின்பு அதன் தொடர்பிண்மை புரிகிறது.
“ மாயை வான்வெளியில்  ஓடும் மேகக் கூட்டங்களைப்போல் தோன்றி மறைபவை. மா/றாத அந்தக் கதிரவன் நீங்களே இரண்டும் ஒன்றே. அதனை வெளியில் நின்று பார்க்கும்போது கடவுள் என்கிறீர்கள் உள்ளிருந்து பார்க்கும்போது அது நீங்களே.இரண்டும் ஒன்றே உங்களிருந்து வேறான இறைவன் இல்லை. உங்களைவிட  உயர்ந்த உண்மையான இறைவனும் இல்லை.” 29 – 1 - 1896 

மதத்தின் தோற்றம்
      மதங்கள் தோன்றியதைப் பற்றி சுவாமிகள் கூறுகிறார். தற்கால அறிஞர்கள் இரண்டு கொள்கைகளை ஒப்புகின்றனர். ஒன்று இறந்தமுன்னோர்களை வழிபடுதல் மற்றொன்று எலலையற்ற பரம்பொருள் கருத்தின் பரிணாம வளர்ச்சி இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்தி  வழிபடத் தொடங்கியதிலிருந்துதான் மதம் தோன்றியது. எகிப்தியர் , பாபிலோனியர்,சீனர்கள் அமெரிக்கர்கள் மற்று பல இடங்களில் முன்னோர் வழிபாடே மதங்களாக தோன்றியுள்ளன. பண்டைய இந்துக்களும்  முன்னோர் வழிபாடே மதத்திற்கு அடிப்படையாக இருந்தது (7 – 6 – 1896)
      புலன்களின் மூலம் எல்லையற்ற சக்தியையும் ஆனந்தத்தையும்  அடைய முயலும்போது  அவன் விடாது பிடித்துக்கொண்டிருக்கும் தனித்துவத்தைப் பற்றிய கருத்துக்களைத் துறந்துவிடவேண்டும். நான்தான் முதலில் என்று புலன்கள் கூற்கின்றன அறநெறியோ நான்தான் கடைசி என்று கூறுகிறது.
      பழைய ஏற்பாட்டில்  உள்ள பிரளயக் கதையையும் பழங்கால எகிப்தியர் , பாபிலோனியர்,சீனர்கள் இந்துக்கள் இவர்களிடையேயும் இக் கதை நிலவுவதை சுவாமி  கூறுகிறார்.  மனு என்ற பண்டைய முனிவர் கங்கைக் கரையில்  தவம் செய்யும்போது ஒரு சிறிய  மீன் தன்னை பெரியமீன் துரத்துவதாகவும்  அடைக்களம் புகுந்தது. அதைத் தம்மின் கமண்டலத்தில் விட்டார். பெரிதாக வளர்ந்ததால் கமண்டலத்தில் வாழமுடியாது  என்றது மனு குளத்தில் விட்டார். அது குளத்தளவு வளர்ந்த்தால் குளத்தில் வாழமுடியாது என்றது மனு அதை ஆற்றில் விட்டார். ஆறளவு வளர்ந்துவிட்டதால் மனு அதை கடலில் விட்டார். அப்போது அந்த மீன் ஓ மனௌ நான்தான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததவன் நான் இந்த உலகத்தை பெருவெள்ளத்தால் நிரப்பப் போகிறேன்.  நீ ஒரு பெரிய கப்பல் செய்து  ஒவ்வொரு மிருகத்திலும் ஒரு ஆண் ஒரு பெண் பாதுகாத்து வை. உன்  குடும்பத்தையும்  ஏற்றிக்கொள் என் கொம்பு தண்ணீரில்  நீட்டிக் கொண்டிருக்கும் கப்பலை அந்தக் கொம்பில் கட்டி விடுபிரளயம் நின்றவுடன் கப்பலை விட்டு வெளியே வந்து உலகில  மனித இனத்தைப் பெருக்கு என நீரில் மூழ்கியது. அது கூறியபடியே செய்தார். மனுவிலிருந்து தோன்றியதால் மனிதன் ஆனோம் என்று சுவாமி கூறுகிறார் (21-6-1896)

ஆன்மா
      ”தன்னைத் தேடும்படியும் உணரும்படியும் உங்களைத் தூண்டுவது உங்களுக்கு உள்ளே இருக்கும் கடவுள்தான்.கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலுக்  விண்ணிலும் மற்றெல்லா  இடங்களிலும் தேடிவிட்டு பலகாலமாக கட்வுளைத் தேடிவிட்டு ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே  வந்து சேறுகிறீர்கள்.” (21-6-1896)
இருள்
      சுவாமி அவர்கள் முதலில் இருளே எங்கும் இருந்த்து. மூன்று பெரிய கவிஞர்கள் கவிதையில் மில்டன் “வெளிச்சம் இல்லை கண்ணுக்கு புலனாகிற இருள் உண்டு. “ஊசியாள் துளைக்கக்கூடிய இருள் என்கிறார் காளிதசர்.ஆனால் வேதத்தில் இருளில் மறைந்து கிடக்கும் இருள்” சிறிது நேரத்தில் வானம் முழுதும் பரவுகின்றது  இருண்டமேகங்கள் ஒன்றன்மேல் ஒன்று வந்து குவிந்து வெள்ளமாய் பொழிகின்றன(13-10-1896).
      மிருகங்கள் தாவரத்தை அழித்து வாழ்கின்றன.மனிதர்கள் மிருகங்களை அழித்து வாழ்கிறார்கள்.மிக மோசமானது என்னவென்றால் வலியவர் எளியவரை அழித்து வாழ்வதுதான் இது உலகம் முழுதும் நடைபெறுகிறது. இதுதான் மாயை   (13-10-1896)


கற்புநெறி.
ஒருநாட்டின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி கற்புநெறி பிறழ்வதே. கற்புநெறி நிலைபிறழத் தொடங்கிவிட்டால் அந்த இனத்தின் அழிவு அழிவு ஆரம்பித்துவிட்டது.இந்த துன்பங்ளூக்கு எங்கே போய் தீர்வு காண்பது, (13-10-1896).

சண்டைக்கு காரணம்
பிறருடைய தெய்வங்களை நமது தெய்வங்களை வைத்தும் பிறருடைய இலட்சியங்களை நமது லட்சியங்களை வைத்தும் பிறருடைய நோக்கங்களை நமது நோக்கங்களை வைத்தும் எடைபோடுவதுதான் பெருமளவு சண்டைகளுக்கு காராணம் என்கிறார் சுவாமி. (20 – 10 – 1896)

கருணைகாட்டுங்கள்
கருணையே இல்லாமல் அறிவுமட்டும்  நிறைய இருப்பதைவிட அறிவே சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதையே விரும்புகிறேன் என்கிறார் சுவாமி. (27 – 10 – 1896)
இதயமும் அறிவும் இணைந்த ஒரு நிலையே நமக்குத்தேவை எல்லையற்ற பரந்த இதயமும்  உணர்ச்சியும் அதேவேளையில் எல்லையற்ற  அறிவும் நமக்கு இருக்க வேண்டும். (27 – 10 – 1896)

விடாமுயற்சி
      ஈசாப்பின் கதை ஒன்றை சுவாமிகள் கூறி ஆசை என்ற மாயை பற்றிக் கூறுகிறார்.ஒரு கலைமான் தன் குட்டியிடம் தன் அழகு வலிமை ஆற்றல் அனைத்தையும் கூறி பெருமைபட்டுக்கொண்டிருந்தது. அப்போது தொலைவில் வேட்டை நாயின் குரைக்கும்  சப்தம் கேட்டவுடன் அவ்வளவுதான் எடுத்தது ஓட்டம் பின் மூச்சுத்திணர வந்தது. குட்டி சக்திவாய்ந்தவன் என்று கூறினாயே நாய் குரைத்த்தும் இப்படி ஓடி விட்டாயே அது எப்படி. தைரியமானவந்தான் ஆனால் நாய் குறைக்கு சப்தம் கேட்டால் தைரியமெல்லாம் பறந்து விடுகிறது. நம் மனித குலம்   பலமும்  தைரியமும் வாய்ந்தவர்கள் என்று கருதுகிறோம். துன்பம் ஆசைகளாகிய நாய்கள் நம்மைப் குரைக்கும்போது மானைப் போலவே நடந்துகொள்கிறோம் நிலைமை இதுவானால் அறிவுரைகளால் என்ன பயன். விடாமுயற்சி முடிவில் வெற்றிதரும். ஒருநாளில் எதையும் சாதிக்க முடியாது. (27-10-1896)

குறிக்கோள்
      இலட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகளைச் செய்வானால் இலட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான். எனவே இலட்சியம் நமது இதயத்தில் மூளையில் நாடிநரம்புகளில் புகும் வரை நமது இரத்தத் துளிகளில் கலந்து துடிக்கும்வரை உடலில் அனுக்கள்தோறும் ஊடுறுவும் வரை நாம் அதைப் பற்றியே  பேச சிந்திக்க வேண்டும் உள்ளம் நிறையும்போது வாய் பேசுகிறது உள்ளத்தின் நிறைவுதான் கைகளை வேலைசெய்யத் தூண்டுகிறது என சுவாமி அருளுரை வழங்கியுள்ளார். (27-10-1896)

அறியாமை
      சுவாமிகள் ரோமாபுரி பணக்காரனைப் பற்றிக் கூறுகிறார். தன்சொத்தில் 10 இலட்சம் பவுண்ட்தான் எஞ்சியிருந்தன என்பதை ஒரு நாள் கண்டான். நாளைகு என்ன செய்வது என்று திகைத்துபோய் தற்கொலை செய்துகொண்டான்.10 இலட்சம் பவுண்ட்கூட அவனு ஏழ்மைதான். தன் இளமையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதுதான் இன்பத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லும் இப்போது அப்படி நினைக்கவில்லை இறுதியில்  அகன்று செல்லும் மூட நம்பிக்கையாகும். என சுவாமிகள் அறியாமையைக் கூறுகிறார். (29-10-1896)
      பழங்காலத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று தின்றார்கள். ஆனால் இன்று ஒருவரை ஒருவர் சாப்பிடுவதில்லை. ஆனால் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.இதனால் நாடுகளும்  நகரங்களுமே அழிந்து போகின்றன. (29-10-1896)
      நாம் எல்லோரு நாத்திகர்களே. ஆனாலும் நான் நாத்திகன் என்பவனோடு சண்டை போடுகிறோம் நாம் எல்லோரும்  அஞ்ஞான் இருளில் மூழ்கி இருக்கிறோம். நம்மைப் பொறுதுவரை ஆன்மீக என்பதெல்லாம்  வெறு சாத்திர அறிவு வாய் சம்பம் வெறும்  வெறுமை மட்டுமே. ஒருவனுக்கு நன்றாகப் பேசத்தெரிந்தால் போதும் அவனை ஆன்மீகவாதி  என்று கூறிவிடுகிறோம் இதுவெல்லாம் ஆன்மீகம் அல்ல என்று சுவாமி கூறுகிறார்.

இன்பமும் துன்பமும்

      தீமை நன்மை இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போவதாக உலக வரலாறு கூறுகிறது. காட்டில் வசிக்கும் மானிடனுக்கு இன்பமனுபவிக்கும்  சக்தி மிகக் குறைவு. வயிற்றுக்கு உணவு கிடைக்காவிட்டால் துன்பமடைகிறான். காட்டில் அவன் விருப்பம்போல் சுற்றி விருப்பம்போல் வேட்டையாடும் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவனைப் போல் இன்பம் அடைபவர்கள் யாரும் கிடையாது.அதே மனிதன் அறிவை வளர்த்துக் கொண்டால் அவனுக்கு இன்பனுபவம் அதிகரிக்கிறது. ஓர் அழகிய கவிதையை படிப்பதில் இன்பம் காண்கிறான்.கணிதப்பிரச்சனையில் அவன் தன்னை மறந்துவிடுகிறான் அதன் கூடவே நுட்பமடைந்த நரம்புகள் மனத்துன்பத்திற்கு அடிமைப் படுகின்றன். காட்டுமனிதனுகு மனத் துன்பம் என்பதே இல்லை. (3-11-1896)
      உலகின் பணக்காரநாடான உங்கள் நாட்டையே எடுத்துக்  கொள்வோம்.உங்கள் நாடு மற்ற நாடுகளைவிட போகம் மிகுந்தது. அதே நேரத்தில் இங்கே உள்ள துன்பத்தின் தீவிரத்தையும் நோக்குங்கள்.உங்கள் நாட்டில்தான் பைத்தியக்காரர்கள்   அதிகம். உங்களைவிட இன்பம் குறைவாக  அனுபவிப்பவர்களுக்கு துன்பமும் குறைவாகவே இருக்கிறது.

மூடநம்பிக்கை

      சுவாமிகள் இளைஞனாக இருந்த போது ஒரு நிகழ்ச்சியை நினைவுப்டுத்துகிறார்.ஒரு வாலிபனின் தந்தை சொத்தில்லாத நிலையில் பெரிய குடும்பத்தை அவன் தலையில் கட்டிவிட்டு .இறந்துவிடுகிறார்.தந்தையின் நன்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஒரு மதவாதியிடம் சென்று துன்பத்தைக் கூறியபோது அவர் எல்லாம் நண்மைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே என அறிவுரை வழங்கினார். பழுத்த புண்ணின் மீது தங்க இலையை வைத்து மறைப்பது போன்ற செயல் இதெல்லாம் மிகப் பழைமையான் பரிகாரம். ஆறு மாத்திற்குப் பின்னால் மதவாதிக்கு ஒரு குழந்தை பிறந்து ஒரு விருந்து வைத்தார். அந்த வாலிபரையும் அழைத்திருந்தார்.கடவுளின் கருனைக்கு நன்றி என வழிபட்டார். உடனே வாலிபன் எழுந்து நின்று நிறுத்துங்கள் இதெல்லாம் துன்பம் என்று கூறினார் .என் தந்தை வெளிப்படையாக் இறந்ததை நன்மை என்று கூறினீர்கள் அதன்படி உங்களுக்கு குழந்தை பிறந்திருப்பது தீமைதானே என்று கூறினான்.இதுதான் துன்பத்தைத் துடைக்கும் வழியா நல்லவர்களாக இருங்கள். அதிமூடி மறைக்க முயலாதீர்கள். துன்புறுவோருக்கு அன்பு காட்டுங்கள் என சுவாமி அருளுரை வழங்குகிறார். (3-11-1896)
கவிதைகளின் அருளுணர்வு
      கவிதைகள் வாயிலாக மக்களுக்கு அருளுணர்வு உண்டாகிறது என்கிறார் பிளாட்டோ.. உண்மையை உணர்ந்தவர்களாகிய பழங்கால கவிகள் சாதரன மனித் நிலையிலிருந்து உயர் நிலைக்குச் சென்று கவிதைவடிவமாக  எடுத்துக் காட்டினார்கள்.(11-12-1896) என்று சுவாமி கூறுகிறார்.
      சுவாமி கூறிய வண்ணம் அவர் வழங்கிய கவிதையை கேளுங்கள். சௌந்திர கைலாசம் அம்மையார் மொழிபெயர்த்தது.
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்தில் எல்லாம் உளன்

        என்ற குறளுக்கு சான்றாக இலக்கணமாக வாழ்ந்த பெருமகன். உலகமக்கள் உள்ளதில் எல்லாம் வாழ்கிறர். விழாவிற்கு வருகை தந்த பெருமக்கட்கும் நடதிய பெருமக்கட்கு நன்றி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.


Thursday, November 21, 2013

மணமகன் சத்திசுகுமார் மணமகள் சுரேகா திருமணத்தை கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் நடத்திவைத்து வாழ்த்திய உரை


கங்காதரன் பானுமதி இணையரின் மகன் சத்தீசுகுமாருக்கும் அண்ணக்கிளி அருணாச்சலம் மகள் சுரெகாவிற்கும் இன்று (17-10-2013) இல்லறம் மேற்கொள்கின்றனர். பெரியார் அண்ணா கலைஞரின் தொண்டராக திருப்போரூரில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமகன் சொக்கலிங்கம் இல்லத் திருமணத்தை நடத்திவைப்பதில் பெரு மகிழ்ச்சி கொளின்றேன். திருமண விழாவிற்கு தலைமையேற்றுள்ள முன்னாள் சட்ட்டமன்ற உறுப்பினர் நன்னிலம் நடராசன், கழக பேச்சாளர் சாமி நாகப்பன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அன்புதுரை மற்றும் வருகைதந்துள்ள கழகக் குடும்பத்தினர் தாய்மர்கள் சான்றோர்கள் இரு வீட்டார் உறவினர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக்கொள்கிறேன்

. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இருகோப்புகளில் கையெழுத்திட்டார்கள் ஒன்று சென்னை இராசதனியை தமிழ்நாடு என்று மாற்றியமைக்கு. மற்றொன்று சீர்திருத்த திருமணத்திற்கு எனபதை நாம் எல்லோரும் அறிவோம். இல்லறம் மேற்கொண்டுள்ள மணமக்களுக்கு திருக்குறள் நூல் ஒன்றை பரிசாகத் தந்துள்ளேன். திருக்குறள் படித்திருப்பீர்கள். தற்போது தாங்கள் இருவரும் இணைந்து குறளைப் படியுங்கள். குறள் வழி வாழுங்கள். இயல்பினான் இல்வாழ்ககை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. முயற்சியுடைய வாழ்க்கையின் தலைமையுடைய இல்வாழ்க்கை வாழ்பவர் எவர் என்றால் இயல்பான நடைமுறையில் இல்வாழ்வைச் சமைத்து வாழ்பவரே ஆவர். இல்வாழ்கை மெற்கொண்டுள்ள இணையர்களே நீங்கள் திருக்குறள் நெறி நின்று சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்.

 தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் அயராது தொண்டாற்றும் தளபதி ஸ்டாலின் வழியில் தொண்டற்றுங்கள். தமிழின்ம் எழுச்சியுற தமிழன் தமிழனாக வாழ அயராது பாடுபடும் உறுதியை திருமண நாளில் ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய கையில் இருக்கும் நூலைப் பாருங்கள். புரட்சிக்கவிஞரின் குடும்ப விளக்கு. பாவேந்தர் ஒரு தமிழ்க்குடும்பத் தலைவன் தலைவி மக்கள் உறவு தொழில் காதல் திருமணம் மகப்பேறு தமிழ்க்கல்வி தொண்டு முதுமை என அனைத்தையும் கொஞ்சு தமிழில் தந்துள்ளார். படியுங்கள் படித்து வாழ்க்கைய முழு இன்பத்தோடு வாழுங்கள் என் வாழ்த்துகிறேன்.

 ஒருசெய்தியை நான் இங்குகுறிப்பிட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் வீட்டுத் திருமணத்தை மதுரையில் நடத்தி வைக்க நாள் கொடுத்திருந்தார்கள். அப்போது அவர் முதல்வர் அன்றைய இரவு ஆட்சியைக் கலைக்கும் கொடுங்கொண்மையை மத்திய அரசு செய்கிறது. இருப்பினும் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு சென்ன்னை வந்தார்கள். தலைவர் கலைஞரைப்போன்ற தலைவரின் மன உறுதியும் எதையும் தாங்கும் இதயமும் நாம் பெறவேண்டும். நம் தலைவர்களின் தடத்தில் நாம் தடம்புரளாமல் நடை போட வேண்டும் எனக் கூறி மணமக்கள் நீடூ வாழா நெஞ்சார வாழ்த்துகிறேன்.

பாவாணர் கோட்டம் நடத்திய தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழா


(முரம்புவில் பாவாணர் கோட்டம் நடத்திய தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

          முரம்புவில் பாவாணர் கோட்டத்தைக் பாவாணரை ஆண்டுதோறும் நினைவில் நிறுத்தி தொண்டாற்றும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் நெடுஞ்சேரலாதன் அவர்களே தலைநகர் தமிழ்ச்சங்க நிறுவனர் ஐயா அழகரசன் அவர்களே வில்லுப்பாட்டுக்கலைஞர் செல்லதுரை அவர்களே திரளாக வருகை தந்துள்ள முரம்பு வாழ் பெருமக்களே சான்றோர்களே முச்சந்திக் கூட்டம் ஆகையால் நெடுஞ்சாலைக் கடைகளில் ஆர்வத்தோடு நிகழ்வைக் கேட்கும் வணிகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை உரித்தாக்குகிறேன் பரிசளிப்பு பொன்னாடை போர்த்தல் வாழ்த்துரைத்தல் என இப் பகுதிவாழ் மக்கட்கு ஒரு மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை பாவாணர்கோட்டம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பாவாணர் கோட்டத்து.ப் பெருமககளை நெஞ்சாரப் போற்றுகிறேன்

        எனனை தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பற்றிப் பேசப் பணீத்துள்ளீர்கள். சென்னை பல்லாவரத்தில் தன் இல்லத்திற்கு முன் உள்ள பூங்காவில் தம் மகள் நீலாம்பிகை அம்மையாரோடு வள்ளலாரின் பாடலான

 பெற்றதாய்தனை ம்கமறந் தாலும்
 பிளையை பெறுதாய் மறந்தாலும்
 உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

 பாடியபோது தேகம் என்ற வட்டமொழிச்சொல்லே சிந்தையில் வேராக நுழைந்து யாக்கை என்ற தமிழ்ச் சொல்லை போட்டிருந்த்தால் சிற்ப்பாக இருக்குமே என்ற எண்ணம் அடிகளாரிடம் முளைவிட்டது. மறைமலையடிகள் 1876 – 1750 வரை வாழ்ந்து தம் வாழ்நாளையே தமிழ் தமிழர்க்கு ஒப்புவித்த பெருமகன்.. இயற்பெயர் சுவாமி வேதாச்சலம்.ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லுனர், கிருத்துவக்கல்லுரியில் பணியாற்றியபோது அவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள் தணிகைமணி வ.சு செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சிதம்பரனார், திருப்புகழ்மணி டி.எம்.கிருட்டிணசாமி ஐயர்,பெருநாவ;லர் சோமசுந்தர பாரதியார்,திவான்பகதூர் ஆ.வி.கிருட்டிணன் சி.என்.முத்துரங்க முதலியார் பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை, டாக்டர் சுப்புராயன் என ஒரு மாபெரும் தமிழ்ப் பரம்பரையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். அறிவுக்கடல் என தனித்தமிழ் இதழும் ஆங்கில இதழும் நடத்தி தமிழ் உலகில் வலம் வந்துள்ளார்.

         வடமொழியில் செறிவான புலமையுடைவர் அடிகளார்.மகாகவி காளிதாசரின் சாகுந்தலத்தை தனித்தமிழில் அதன் நயம் குறையாமல் மொழிபெயர்த்து சாதனை படைத்துள்ளார். அடிகளாரின் திருவடி படாத இடங்களே இல்லை எனும் அள்விற்கு தமிழகம்,கொல்காத்தா ,டார்சிலிங் காசி பொன்ற இடங்களுக்குச் சென்று தமிழ் தமிழ்ர் பெருமையை நிலைநிறுத்தியுள்ளார். ஈழம் இருமுறை சென்றுள்ளார். கொழும்பு அனுராதபுரம்,மாத்தளை பொன்ற இடங்களில் தமிழுரை ஆற்றியுள்ளார். ஈழத்து இசை மேதை விபுலானந்த அடிகளைச் சந்தித்துள்ளார். தமிழர்களின் தவப் பேற்றினால் மிகப் பெரும் மாற்றம் உருவானது.அடிகளார் தம் 40ஆம் அகவையில் 1916ஆம் ஆண்டு அவர் ஆற்றிய அனைத்துப் பணிகளுக்கும் உயிரோட்டமாக தனித்தமிழ் இயக்கம் இன்ற பேரியககத்தைக் கண்டார்.

     அடிகளார் அவர்கள் ஒருவர் அல்ல அவர் இயக்கம் என நாடு அறிந்து தனித்தமிழ்த்தந்தை எனப் போற்றி மகிழ்ந்தது. தனித்தமிழுக்காகப் நாமெல்லாம் போராட்டிக்கொண்டிருக்கிற வேளையில் தமிங்கிலத்தமிழ் தமிழ் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நம்மை ஆள்கிற அரசுக்கு தமிழைப் பற்றி எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசுப் பள்ளிகள் ஒன்றுதான் தமிழ் வழியாகப் பயிற்றுவித்து வருகிறது. அதிலும் இடி விழுந்தார்போல் அங்கும் ஆங்கிலக் வழியை புகுத்துகிறார்கள்.

       இதை வண்மையாக கண்டித்து இக்கூட்டத்தின் வாயிலாக கண்டத்தை தெருவித்துக்கொள்கிறேன்.. இதை உடனெ நிறுத்தி எல்லாநிலைகளிளும் தமிழை நடைமுறைப்படுத்தவேண்டும். இதுவே நாம் அடிகளாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

தீக்குச்சி


 கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

 கலைவளர் அறுபத்தி நான்கு
       கயமையை பொசுக்க நாமும்
 தவதீக் குச்சிகள் கொண்டே
      தீய்த்திட்டே தமிழைக் காப்போம்
கவலைகள்  சொன்ன ஆசான்
     கவனமாய் தீர்க்க நாமும்
 புவனத்து தமிழ்த்தாய் எண்ணி
      பூமியில் ஓங்கி வாழ்வோம்!

 ஒளியினை வழங்கும் குச்சி
       ஒண்டமிழ் காக்கும் வேள்வி
 பழியினைப் போக்க என்றும்
       பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்
 விழிகளின் தோழன் ஒளியே
        விண்டிடும் தீக்குச்சி வழியே
 தளிர்விடும் அறத்தைக் காக்க
        தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்!

 தீக்குச்சி தலைப்பு தந்து
        தீமைகள் கலையும் ஆசான்
 பாக்குச்சி சமைத்து நானும்
        பாதைவழி காணல் நன்றே
 பூக்குச்சி மலரைத் தந்து
        பூமணம் காத்தல் போல
 தேக்குச்சி போன்றே நாமும்
         தேந்தமிழ் காப்போம் சென்றே !

 குச்சுகள் கூடியே கூடாய்
        குவலயம் இணைந்து காப்போம்
 மெச்சிடும் நலமே காண
         மாண்புகள் காத்து வாழ்வோம்
 தச்சனும் செதுக்கும் உருவாய்
        தரணியில் மனிதம் போற்றி
 உச்சமாய் தமிழார் மேன்மை
        உயர்த்திட வாழ்வோம் வாரீர்!

Tuesday, November 19, 2013

முரம்பு தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா


[தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை]

          முரம்புவில் பாவாணர் பணியாற்றிய பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெறுவது சாலச் சிறந்த்தாகும். பாவாணர் தனித்தமிழிற்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்தவர். அவர் வழித் தோன்றல்களாக உலகம் முழுமையும் தனித்தமிழ்ச் செம்மல்கள் சீரிய தொண்டாற்றி வருகின்றனர். விழாவை தமிழ் உணர்வோட்டு கூட்டியுள்ள ஆசிரியப் பெருமக்களையும திரளாக ஆர்வத்தோடு அமர்ந்துள்ள மாணவச் செல்வங்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

        பாவாணர் மண்ஆற்றல் பெற்றவர்கள். நம் வழிவழிச் சிறப்பபுகளை காககும் பேறுபெற்றவர்கள்.. தமிழ் அன்னை உங்கள் புண்ணகையில் மகிழ்கிறாள்.

       ஆசிரியப் பெருமக்களே நாம் பெற்றால்தான் பிள்ளைகளலல. படிக்கும் தாய் வயிற்றில் அனைவரும் பிறக்க இயாலாமையால் தனித்தனியாகப் பிறந்தொள்ளோம் எனக் கூறி தம்பி அண்ணன் என்ற தமிழ் உறவை ஏற்படுத்தியவர்கள். அந்த உணர்வுகள் எல்லாம் நம் சமுகத்திற்கு பயன்பட வேண்டும். அன்புச் செல்வங்களே உங்களுக்கு ஆசிரியர் திருக்குறள் நடத்தியிருப்பார்கள். தாங்கள் அனைவருக் இன்றையிலிருந்தே நாளும் ஒரு குறள் படித்து வாருணில் புலவர் நெடுஞ்சேரலாதன் அவர்கள் என்னை முரம்புக்கு அழைத்தமையால் உங்களையெல்லாம் சந்திக்கும் பேறு பெற்றேன். தமிழ் வழி பயிலும் அன்புச் செல்வங்களே நீங்கள் அனைவரும் சுயமாக சிந்திக்கும் ங்கள். திருக்குறள் உங்களுக்கு தன்னம்பிக்கை முயற்சி கற்றலின் மேன்மை என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும். நான் கேட்ட திருக்குறளையெல்லம் மிகச் சி”றப்பாக பொருளோடு கூறினீர்கள் உங்கள் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்

        .உங்களைப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களையும் போற்றி மகிழ்கிறேன் வாழ்வில் உன்னத இடத்தைப் பெற்ற பெருமக்களெல்லாம் திருக்குறளின் வழி நின்றவர்களே. இரசியா நாட்டுப் பேரறிஞர் டால்ச்டாய் அண்ணல் காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளைப் பற்றி எழுதியுள்ளார். அண்ணல் அவர்கள் தென் ஆப்ரிக்காவில் திருக்குறளை தமிழ் மொழியில் படிப்பதற்காகவே நம் தமிழ் மொழியைப் படித்தர்ர்கள் என்பது வரலாறு. பாவாணர் பணியாற்றிய பள்ளியில் பயிலும் நீங்க்கள் திருக்குறளைப் பயின்று வாழ்க்கையில் பின்பற்றி இந்த உலகை ஆள .வேண்டும் என் வாழ்த்தி விடைபெறிகிறேன்

Monday, November 18, 2013

கன்பூசியசும் திரு வள்ளுவரும்


(வள்ளுவர் கோட்டத்தில் குறள்ஞானி மோகன்ராசு அவர்களின் கன்பூசியசும் திருவள்ளுவரும் ஒப்பாய்வு குறித்து கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

          கன்பூசியசும் திருவள்ளுவரும் நூலை ஆய்வுசெய்ய குறள்ஞானி அவர்கள் எம்மைப் ஆய்வுரை வழங்கப் பணித்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தம் வாழ்நாளையே திருக்குறளுக்காக் ஒப்புவித்த பெருமகன் திருக்குறள் நெறியாளர்களை தமிழுலகுக்கு உருவாக்கும் சான்றோன் மோகன்ராசு. இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

        சீனாவின் மறை நூலாகிய லூன்யூ உரைநடைநூல். இருபது இயல்களில் 499 முதுமொழிகள் உள்ளன.அவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை. 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை 43முதுமொழிகள் பிறர் உரைத்தவை திருக்குறள் குறள் வெண்பாவால் அறம் பொருள் இன்பம் என்று மூன்று பால்களால் 133 அதிகாரங்ளில் மொத்தம் 1330 குறட்பாக்களைக் கொண்டது என புள்ளி விபரம் தருகிறார்

         ஆசிரியர் கன்பூசியசின் காலம் கி.மு.551 என்றும் கி.மு.552 என்றும் ஆய்வுகளைக் கொண்டு கனித்துள்ளனர்.காலவேறுபாடு ஒரு ஆண்டு.திருவவள்ளுவர் காலத்டின் மேல் எல்லை கி.மு6027 கீழ் எலலை கி.பி 1000 காலவேறுபாடு 7027 எனக்கூறி கால ஆய்வில் நம் அவலநிலையைச் சாடுகிறார் பேராசான்.

        கல்வியின் மீது இருவரும் குறிக்கோள் எனும் எல்லையில் பெரிதும் ஒன்றுபடிகின்றனர்..மென்மேலும் அறிவினைப் பெறும் மனிதரையே பெருமைக்குரியவராகக் கருதியுள்ளனர்.

      கன்பூசியசு பழ்மையிலும் சடங்குக்ளிலும் ஈடுபாடு கொண்டவர்களாக விளங்க வேண்டும் என லூன்யூ வழி வலியுறுத்துவதை விளக்குகிறார். திருவள்ளுவர் கன்பூசியசின் நோக்கிலிருந்து பெரிதும் வேறுபடிகின்றார்.பழமையில் ஒரளவுபற்றாளராக இருப்ப்பினும் பழமையாயினும் புதுமையாயினும் பயனுடையாதாயின் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற வள்ளுவ நெறியை பதிவு செய்கிறார்


        குறள்ஞானி. பெண்கள் கல்வியில் கன்பூசியசு ஆர்வம் காட்டவில்லை என்றும் வள்ளுவரோ எல்லோருக்கும் கல்வி என புரட்சி செய்த புரட்சிப் பேரறிஞர் எனப் புகழாரம் சூட்டுகிறார் குறள் தூதர். குற்கிய மனப்பான்மை இன்மை , அழுக்காறு இன்மை அவாஎன்மை வெறுப்புண்ர்ச்சிக்கு இடம் கொடாமை பிறர்பொருள் கவர நினையாமை முதலிய அறச்சிந்தனைகள் மாந்தர்களிடம் மிளிர வேண்டும் என விரும்புகின்றனர். இக்கருத்துக்கள் கன்பூசியசின் லூன்யூவை விட திருக்குரளிலேயே விரிவாக இடம் பெற்றுள்ளதை ஆசிரியர் பதிவு செய்கிறார்.

        பிறன்மனை நோக்காமையை பேராண்மை என திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். கன்பூசியசின் கருத்துக்களி. இடம் பெறவிலலை. இதற்கு ச்முதாயச் சூழல் காரணமாக இருக்கலாம் என் ஆசிரியர் குறிப்பிடுகிறார் இருவரும் சொல்வழித்தான அறம் திறம் இரண்டையும் கருதுகின்றனர். இருப்பினும் திருவள்ளுவர் தரும் அழுத்தம் சிறப்பு கன்பூசியசில் காணப் பெறவிலலை என மொழிகிறார்

         ஆசிரியர் கன்பூசியசு இயற்கையில் மனிதர்கள் ஒருவரே செயாலால் வேறுபடுகின்றனர் இக்கருத்து திருவள்ளுவருக்கும் உடன் பாடானதே. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்புநிலையை விளக்குவதில் இருவரும் உடன்படுவதை பதிவுசெய்கிறார். பகையைக் நட்பாகக் கொண்டொலுகும் பண்பு, பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நாகரீகம், பிறன்மனை நாட்டமின்மை, உய்ர்ந்தோர்களுக்கு வேண்டும் என்ற வள்ளுவத்தின் எதிர்பார்ப்புகள் கன்பூசியசு சிந்த்னைகளில் இடம் பெறவில்லை எனப் பகர்கிறார் ஆசிரியர்.

          உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும், நண்பெணும் நாடாச் சிறப்பு என நட்பைப் பற்றி திருவள்ளுவர் சிந்தித்த அள்விற்கு கன்பூசியசு சிந்திக்கவில்லை எனவும் காரணம் சீனாவில் உறவிற்கு இருந்த முதன்மை நட்பிற்கு இல்லாத்ததே எனவும் பதிவு செய்கிறார் பேராசான். கன்பூசியசு உள்ளம் பழமைப் பற்றால் உலகம் என்ற சிந்தனை வெளிபட தடையாக அமைவதாகவும் திருவள்ளுவர் அனைத்துப் பற்றுக்களையும் துறந்ததால் உலகம் அவரைப் பற்றிக் கொண்ட்தாக நயம்படக் கூறுகிறார்.

         வள்ளுவர் கோட்டத்தில் தொடர்ந்து பல்வேறு திருக்குறள் சிந்த்னைகளை திருக்குறள் மையம் நிகழ்த்தி வருகிறது. திருக்குறள் குறித்த முனைவர் பட்டாஆய்வுக்கள் பேராசிரியர் வழிகாட்டுதலில் நடைபெறுகின்றன. கனபூசியசோடு திருவள்ளுவாரை ஒப்ப்பாய்வு செய்த பெருமகனை நெஞ்சாரப் போற்றிகிறேன். உலக மறை நூல்களைப் படிக்க இந்த ஒப்பாய்வு வழிகாட்டுகிறது என்றால் மிகையில்லை. ஆய்ந்தறிந்த சான்றோர் பெருமக்கள் அமர்ந்துள்ளீர்கள். அம்மையார் சிவகாமி நடராசன் இங்கே வருகை தந்திருக்கிறார். எங்களது குடும்பத்தின் நெடுநாளைய நண்பர் அமரர் நடராசன் அவர்களின் துணைவியார் பெருமக்களையெல்லாம் திருக்குறபால் ஈர்த்த குறள்ஞானி அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி விடை பெறுகிறேன்.

Sunday, November 17, 2013

Sri Lanka: Cameron in 'robust' talks over human rights


COMMENTS (1058) The BBC's Nick Robinson was with the prime minister as his convoy was mobbed Continue reading the main story Related Stories • Rights row dogs Commonwealth summit • UK pledges Sri Lanka 'tough message' • S Lanka leader hits out at critics David Cameron has clashed with the president of Sri Lanka as he pushed for action to protect the rights of its minority Tamil community. Downing Street said the PM "pressed his points very directly and robustly" in an hour-long meeting with Mahinda Rajapaksa at a Commonwealth summit. Mr Cameron's convoy was earlier mobbed by demonstrators on a visit to the north of the country. Mr Rajapaksa says he has brought peace and stability to Sri Lanka. The Tamils' treatment at the end of the country's civil war in 2009 has dominated the run-up to the the Commonwealth Heads of Government Meeting (Chogm), taking place in the capital Colombo. Mr Cameron has insisted there should be a proper investigation into alleged Sri Lankan war crimes in the final months of the conflict, saying a process of "truth-telling" was essential for reconciliation. In a historic move, Mr Cameron travelled to the Tamil-dominated north of the country - the first international leader to do so since Sri Lankan independence in 1948 - before holding face-to-face talks with the country's president. At one point, the PM's convoy was surrounded by more than 200 protesters holding pictures of loved ones who they claim were killed by the Sri Lankan armed forces or have disappeared. Mr Cameron said the visit - in which he also toured a temporary refugee camp and newspaper office whose printing presses have been burnt - had "drawn attention to the plight" of the Tamil minority in the country. Continue reading the main story AnalysisNick RobinsonPolitical editor, with the prime minister in Sri Lanka As Mr Cameron's entourage was leaving the public library, a group of screaming women - desperate to make their representations directly to the first world leader to come here - pressed photographs and petitions into our hands • Read more from Nick He said the first-hand accounts he had heard of journalists who have been attacked and of a young woman who had grown up in a refugee camp would "stay with him" for a long time. Mr Cameron said staging the summit in Sri Lanka had already resulted in positive changes, but the authorities needed to do much more to show they respected human and political rights. "The fact is about this country that there is a chance of success because the war is over, the terrorism has finished, the fighting is done," he said. "Now what's needed is generosity and magnanimity from the Sri Lankan government to bring the country together. "And I think coming here, listening to these people, hearing these arguments, helps to draw attention to their plight. I think the spotlight has been shone on Sri Lanka and people can see the good and the bad." 'Desperate' The BBC's political editor Nick Robinson, who is travelling with Mr Cameron, said several protestors had been thrown to the floor by police as they tried to approach the prime minister's vehicle with photographs of relatives "disappeared" in the civil war and petitions. He stressed that the demonstration had not been violent, but the prime minister had been made "fully aware of their grievances and their grief". David Cameron has said the accounts of loss and hardship he heard on his visit to the north of the country will stay with him for a long time Tamil women approach the media bus travelling with David Cameron in Jaffna The UK prime minister has defied calls for him to boycott the Commonwealth summit in protest against alleged human rights abuses. Continue reading the main story Ponniah Manikavasagam, BBC Tamil, Jaffna There was heavy security around the Palaly air base near Jaffna when the aircraft carrying the British delegation landed. David Cameron first went to the famous Jaffna library to meet the main Tamil political party leaders. Hundreds of relatives of those who went missing in the government's war against the Tamil Tiger rebels held a protest rally to attract his attention. Some of them had tied black ribbons over their mouths and some were holding photos of their missing relatives. They were all shouting slogans demanding international investigation into alleged war crimes. When the British delegation was leaving the building, protesters surged forward to get their attention pushing photographs of their missing loved ones and petitions towards the convoy. Police pushed them back; some of the protesting women fell to the ground. Pro-government supporters also held a protest rally outside the library. Mr Cameron has also visited the leading Tamil Daily Uthayan's office, which was torched and several of its reporters killed during the war. Many Tamils in Jaffna have broadly welcomed the visit of Mr Cameron saying it has helped to highlight their issues to the outside world. President Rajapaksa rejects accusations of rape, executions and indiscriminate shelling, saying the end of the war had brought peace, stability and the chance of greater prosperity to the country. But campaigners have said an international investigation is needed into the bloody conclusion to the civil war, in which UN estimates some 40,000 people were killed. "The Sri Lankans have got their own domestic process, but frankly it's fatally flawed and it's not going to deliver any real justice to the people who were killed," David Mepham, UK director of campaign group Human Rights Watch, said. "The other thing, which is equally important, is that there needs to be real pressure on the ongoing human rights issues. This isn't just a problem of the past." The prime ministers of Canada, India and Mauritius are staying away from the summit in protest over the allegations. Gordon Campbell, the Canadian High Commissioner to the UK, told the BBC that Sri Lanka had "turned its back on the very principles that the Commonwealth espouses". The PM met chief minister of Northern province, C. V. Vigneswaran (right) and Sri Lankan Tamil National Alliance leader R. Sampanthan The Labour Party said Mr Cameron's presence was a "reward" for the Sri Lanka president. "There was a naivety about the British government's approach to this

Saturday, November 16, 2013

அன்னை சேதுமதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்


(அன்னை சேதுமதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2013அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.)

       அன்னையின் நினைவிடத்தில் அருள்திரு மோகனசுந்தரம் அடிகளார் குழுவினர்மலர்க்கோலம் அமைத்து தமிழ் நெறிப்படி அஞ்சலி செலுத்தினார். அருள்திரு சாய்இரவிச்சந்திரசாமிக\ள் புலவர் நெடுஞ்சேரலாதன் புலவர் தமிழாளன்,கவிஞர் அந்தமான் கணேசன்,கவிஞர் காந்தி கவிஞர் பாப்பாங்குளம் பாண்டியன் கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்


.          தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது.

          திரு பால் செந்தில் அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.

         10-11-2013 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் பேராசிரியர் முத்துக்குமரன்தலைமையேற்றார் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.

         பாராட்டு விருதாக கவிஞர் மாசிலாம\ணி, ஓவியக்கவிஞர் வண்ணப்பூங்கா வாசன் புலவர் செகநாதன், கவிச்சுடர் அழகுதாசன், கவிஞர் இளம்விழியன், கவிஞர் சேலம்பாலன், கவிஞர் இரா.சொ. இராமசாமி, ஒயெம்சிஎ பக்தவ்த்சலம் திருகுறள் இலலிதாசுந்தரம், திருக்குறள் செல்லம்மாள் ஆகிய பத்துப் பெருமக்களுக்கு தலா ரூ1000 மும் பட்டயமும் வழங்கப் பட்டது.

         இதழாளர் லேனா தமிழ்வாணன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி     வாழ்துரைத்தார்.முன்னாள் மேயர் சா.கணெசன் பட்டயம் வழங்கினார். தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார்.

Thursday, November 14, 2013

காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக


கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்
பூத்திடும் மழலையர் ப\ள்ளிகள் எல்லாம்
புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம்
புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில்
புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை
நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர்
நயத்தகு மேடையில் நர்த்தன ஆட்டம்
தீத்திறம் இல்லா நம்மோர் செயலால்
திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள்
தலைமை தலைமை என்றே நம்மோர்
தலைவர் என்றே அனைவரும் உள்ளார்
தலைமை காக்கும் தலைமை இல்லை
தவநெறி போற்றும் தொ\ண்டர் இல்லை
அவனிவன் எனறே குறையாய் மொழிவான்
அவனியே போற்றும் நிறையை எள்ளுவான்
தவநிறை நம்மின் தடத்தை மறக்க
தடையாய் கல்வி முறையாய்க் கொ\ண்டான்
ஆசையாய் பெற்ற அருந்தமிழ்ச் சேயை
ஆங்கில வழியே அறியச் செய்வான்
மாசிலாக் குறளைக் கற்பது எப்படி
நாநிலம் போற்றும் இலக்கியம் துறந்து
காசினைப் போற்றும் கல்வியாய் உள்ளது
நயத்தகு கல்விக் கூடம் தன்னில்
நாசச் செயலாய் கொலையும் செய்தான்
அன்பாய் வளர்த்த பெற்றோர் தாமும்
அறநெறி காணாக் கல்வி நெறியால்
நேயம் மறந்து கொலைவெறி கொண்ட
நெடிய துன்பம் ஏனோ? எனோ?
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா
தந்த கொள்கை எங்கே? எங்கே?
விந்தை பாவேந்தன் சிந்தை பாரதி
விரிந்த எண்ணம் எங்கே? எங்கே?
சொந்தம் மறுத்து சுடரொளி கண்ட
சமத்துவ வள்ளலார் பாதை எங்கே?
நொந்தே பெற்ற விடுதலை வேள்வி
நோயாய் வந்தது ஏனோ? ஏனொ?
பந்தம் போற்றி வாழ்ந்த நம்மோர்
பாசம் மறந்து வாழ்வது ஏன்?ஏன்?
சந்தைப் பொருளாய் கல்விச் சாலை
சந்ததி  மாய்க்கும் ஈனம் அன்றோ?
தொந்தி குளிர  உணவு வேண்டா
மந்தை காட்டும் நீரும் வேண்டா
சிந்தை சாய்க்கும் மதுவும் வேண்டா
முந்து கல்வி அனைத்தும் தமிழில்
முழுதாய் ஏற்கும் முறைமை கொள்வோம்
எந்தை காத்த அரசுக் கல்வி
சிராய்த் தமிழகம் முழுமை தருக
காத்த எம்மோர் வழிவழி  மொழியே
காக்கும் காக்கும் ஆள்வோர் அறிக

Saturday, January 5, 2013

உலகத் தமிழர்களுக்கு 2044 திருவள்ளுவராண்டு நல் வாழ்த்துக்கள்


தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், ஆசிரியர், தமிழ்ப்பணி

    ஈழத் தமிழர்கள் உணர்ச்சிக்கு வித்தானவரகள். ஈழத்தில் நடந்த அவலத்தால் புலம் பெயர்ந்த மக்கள் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் உலக நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள். உலகெங்கும் பயணித்துள்ள நான் உணர்வுப்பூர்வமாக  உணர்ந்துள்ளேன்.

    சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் பேர்ன் வள்ளுவன் பாடசாலையின் முதல்வர் பொ.முருகவேள் – நந்தினியின் தொண்டை உளம் நெகிழ நேரில் கண்டு மகிழ்ந்தவன். ஆண்டுதோரும் திருவள்ளுவர் ஆண்டைமிகச் சிறப்பாக தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள் திருவள்ளுவர் உலக மாந்தருக்கு வழங்கிய அறநூல் திருக்குறள். திருக்குறள் மனித இனத்திற்கு வழிகாட்டும் பெட்டகம். உலகப் பொதுமறை என்பதற்கு ஒப்ப இன்று சுவிற்சர்லாந்திலும் ஏன் உலகெங்கும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப் படுகிறது. மலேசியா சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, மியான்மர், இந்தியா போன்ற நாடுகளில் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

    தமிழ் உணர்வின் தணலாக வாழும் முருகவேள் அவர்களும் தமிழ் உணர்வாளர்களும் ஒன்று கூடி  திருவள்ளுவர் ஆண்டு 2044 சிறப்பான முறையில் திட்டமிட்டுக் கொண்டாடுகின்றனர். யான் உலகெங்கும் உரையாற்றும் சொற்பொழிவுகளெல்லாம் சுவிற்சார்லாந்தில் கொண்டாடும் விழாவைக் கூறுவது வழக்கம்.. குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் தம்பிராசா பேட்டியின்போது வள்ளுவன் பாடசாலையின் பெருந்தொண்டைப் பதிவு செய்துள்ளேன்.

    2044 திருவள்ளுவர் ஆண்டின் சிறப்புமலருக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வாழ்த்து உள்ளது அறிந்து மகிழ்கிறேன். சுவிற்சற்லாந்து தமிழ் மக்கள் பெற்ற பெரும் பேறு. திருவள்ளுவர் ஆண்டை உலகுக்கு உணர்த்தி, திருவள்ளுவர் ஆண்டை ஆட்சி அதிகாரங்களில் நடைமுறைப்படுத்தி, சென்னையில் வள்ளுவர் கோட்டமும் குமரியில் 133 அதிகாரத்தின் அடையாளமாக சிலையையும் நிறுவிய பெருமைக்குரிய தலைவர் கலைஞர்.
    இன்றோ தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தமிழாண்டை புறக்கணிப்பதும்,
உலகமே வியந்து நோக்கும் திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் சிதைப்பதும் வேதனைக்குரிய ஒன்று.

    இந்தச் சூழ்நிலையில் உலகத்தமிழர்கள் திருவளுவர் ஆண்டைக் கொண்டாடுவது போற்றி மகிழத் தக்கதாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம். திருக்குறள் நெறியைப் பரப்புவோம்.

சுவிற்சர்லாந்து தலைநகரான பேர்ண்மாநிலத்தில்  பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் சார்பில்   2044 ஆம்   திருவள்ளுவராண்டை     சுவிற்சர்லாந்தின் தலைநகரில் கொண்டாடுவதும், தமிழப்புத்தாண்டுவிழா மலர் வெளியிடுவதும் இராவணன் அரங்கென்று பெயரிட்டுள்ளதும் தமிழனை அடையளப்படுத்தும் நிகழ்வாக உள்ளது.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுது தான்முந் துறும்

   என்ற பொய்யாமொழியாரின் வாய்மொழிக்கேற்ப சுவிட்சர்லாந்திலும் வெற்றிபெறுவதைக் கண்டு பேருவகை கொள்கின்றோம்.

          26.01.2013   தமிழாண்டு 2044  காரிக்கிழமை (சனி)  அன்றுநடை பெறவுள்ள தமிழ்ப் புத்தாண்டு விழவிற்கு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற அமைப்பாளர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் தமிழகத் தமிழ் நெஞசங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெருவித்து மகிழ்கிறேன்.