Sunday, January 23, 2022

 உலகை ஆளும் திருக்குறள் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



 
  

                                                                     விசிபி உலகத் தழிழ்சங்கத்தின் சார்பில்    உலகமெலாம். வாழும் தமிழர்களோடு உரையாட இந்நிகழ்வில் பங்கேற்பது பெருமகிழ்ச்சியடைகிறேன் தமிழர்கள் மேன்மையுறுவதில் விசிபி குடும்பத்திற்கு பெரும் பங்களிப்பு உண்டு. அன்னையைப் போற்றுவதிலும் சகோதரத்துவத்தை பேணிக் காப்பதிலும் விசிபிக் கு நிகர் அக்குடும்பமே. உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர்பெருமகன் உலகமெங்கும் 133 ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவிய தொண்டறச் செம்மல் செவாலியர் வி.சி.சந்தோசம் அவர்கட்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணிவிழாக் காணும் இராசாதாசு அவர்கட்கும் இந்தக் காணொளியைக் காணும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு என் திருவள்ளுவர் ஆண்டு 2053 தமிழாண்டு புத்தாண்டு வாழ்த்துகளையும் வணக்கத்தைத் தெரிவிததுக்கொள்கிறேன்                         

   மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்                                                                      ஆகுல நீற பிற                                                                                                                                    வள்ளுவப் பெருமான் கூற்றைப் பார்த்தீர்களா பெருமக்களே. எந்த அறத்தையும் விட மனத்தில் மாசிலாமால் வாழ்வதுதான் சிறந்த அறம் என்கிறார். மனத்தில் மாசில்லாமல் இருந்தால்தான் உலகில் உயர்ந்த அறத்தை செய்யமுடியும். உலகில் வாழும் மாந்தர்கள் அனைவருக்கும் கூறியுள்ளார். மதம் மொழி இனம் நாடு அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாம் திருக்குறள் உலகிற்கு உணர்த்துகிறது நம் அண்ணாச்சி சந்தோசம் அவர்களின் தொண்டே இதற்குச் சான்று மதத்தை எல்லாம் கடந்து உலகெங்கும் 133 திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். யார் திருவள்ளுவர் சிலை வேண்டினாலும் அவரே தாயார் செய்து அந்த நாடுகளுக்கு அனுப்பி தாமே திறந்துவைக்கிறார். பல்வேறு நிகழ்வுகளில் நான் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் .

         முத்தமிழறிஞர தலைவர் கலைஞர் பெருமகன் திருவள்ளுவர் சிலையை குமரியில் 133 அடியில் நிறுத்தி உலகை உற்று நோக்கவைத்தார். சென்னையில் வள்ளுவர் கோட்ட்த்தை நிறுவி 1330 குறள்களையும் சலவைக் கல்லில் செதுக்கி மக்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார். அனைதுப் பேருந்துகளிலும் திருக்குறள் எழுதப்பட்டு வலம் வருகிறது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்  அனைத்துப் பெருந்திலும் தெளிவுரையுடன் வண்ணமாயமாக உள்ளது.

     திருக்குறள் உலகை ஆள வித்துட்டுள்ளார். அண்ணல் காந்தியடிகள் தெனாப்ரிக்காவில் இருக்கும்போது டால்ஸ்டாயின் படைப்புகளைப் பாராட்டியபோது அவை தங்கள் நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவர் சிந்தனைகள்தான் என டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார்.                                                                 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண                                                                              நன்னயம் செய்து  விடல்                                                                                       நமக்கு தீமை செய்தவருக்கும் அவர் வெட்கி நாணும் அளவிற்கு நண்மை செய்தல் . ஏசு பெருமானும் ஒருகண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்பதை ஒத்தது..    உடனே அண்ணல் அவர்கள் அங்கு வாழ்ந்த தில்லையாடி அம்மையாருடான் தமிழ் பயின்று திருக்குறளைத் தமிழில் பயின்றார். செம்மொழி அறிஞர்  சார்ச்காட் ஆங்கிலம் சான்சுகிரிட் இருமொழியிலும்திருக்குறளைப்  படித்துள்ளேன் தமிழில் படிக்கும்போதுதான் திருக்குறளை உணரமுடிகிறது என்கிறார். 

    மலேசியாவில் எழுத்தாண்மை ஏந்தல் பெரு அ.தமிழ்மணி நடத்திய மாநாட்டில் உலகத் தமிழ்மறை மாநாட்டில் அண்ணாச்சி சந்தோசம் அவர்களும் சகோதர் இராசாதாசு அவர்களும் அமரர் மூவேந்தர் முத்து அவர்களும் நானும் இணைந்து ஒருங்கிணைத்து நட்த்தியது பசுமையாக நினைவில் உள்ளது. அண்ணாச்சி அவர்கள் மலேசியாவில் நிறுவ திருவள்ளுவர் சிலையை உருவாக்கி மலேசியா தோட்டப்புற மாளிகையில் டத்தோ சாமிவேலு டான்சிறி சோமசுந்தரம் மற்றும் உலகளாவிய பெருமக்கள் பங்கேற்று திறந்துவைத்துச் சிறப்பித்தனர். நான் ஒவ்வொறு முறை மலேசியா செல்லும்போதும்  தோட்டப்புற மாளிகையில் உள்ள திருவள்ளுவரை வணங்கி வருவது வழக்கம் மலேசியத்தமிழர்கள். திருக்குறளைப் பரப்புவதில் தலைசிறந்தவர்கள். பத்துமலையில் திருக்குறள் அனைத்தையும் பதித்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். மலேசியப் பல்கலைக் கழகத்தில் எண்ணற்ற திருக்குறள் மாநாடு நட்த்திய பெருமை மலேசியத் தமிழர்களுக்கு உண்டு. இலங்கையிலிருந்து நெல்லைக்கு  மதம் பரப்ப வருகை வந்த  தனிநாயம் அடிகள் தமிழ் பயின்று பட்டம் பெற்று மலேசியப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். திருகுறள் குறித்த ஆழாமன சிந்தனைகளை வழங்கிய பெருமை அடிகளாருக்கு உண்டு. உலகத் தமிழ்மாநாடு நடத்துவதற்கு வித்திட்டபெருமை அடிகளாரையே சாரும். 

    சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் திருக்குறளை முன்னிறுத்துவதில்     தலைசிறந்த தமிழர்கள். எண்ணற்ற திருக்குறள் மாநாடுகள் கூட்டங்கள் நடத்தி சிங்கைத் தமிழர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். சிங்கை அரசு சிங்கப்பூரின் மையப் பகுதியில் சாக்ரட்டிசு அரிசுடாட்டில் போன்ற உலக அறிஞர்களோடு திருவள்ளுவரை நிறுவி உலகின் பார்வையை ஈர்த்துள்ளனர்  

                .மியான்மார் நானும் தமிழாகரர் ஆறு அழகப்பனாரும் சென்றிருந்தபோது தட்டோன் நகருக்கு சென்றிருந்தோம். தட்டோன் நகரில்  மியான்மார் வாழ் தமிழர்கள் வள்ளுவர் கோட்டம் நிறுவியுள்ளனர். திருவள்ளுவர் சிலை கலைஞர் திருக்கரத்தால் தொட்டு உருவாக்கிய சிலை. அந்தக்கோட்டத்தில் வள்ளுவரை சிலையை வணங்கும்போது அருளாளர் குருசாமி திருக்குறள் ஓதி எங்களை வரவேற்றார். யங்கூன் சாலையில் திருவள்ளுவர் படத்தை வைத்து வணங்கி ஊர்வலாமக தமிழர்கள் வலம் வந்து வணங்குகின்றனர்.                         

    சிக்காக்கோ நகரில் நடைபெற்ற 10ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணாச்சி அவர்கள் நிறுவிய 50ஆவது சிலையை நிறுவும் நிகழ்வில் பங்கேற்கும் பேறு பெற்றேன். அந்த மாநாட்டை நடத்திய  பெருமக்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் தொழில் வல்லுனர்கள் ஆய்வாளர்கள் என பல்தரப் பட்ட தமிழர்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டு என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அம்மாநாட்டில் திருக்குறள் சிந்தனைகள் தமிழர்கள் சிந்தையெல்லாம் நிறைந்தன. சிக்காக்கோ நகரில் வாழ்ந்து அண்மையில் மறைந்த அறிஞர் இராம் மோகன் திருக்குறள் பைபில் பதிப்புகு மேலாக பதிப்பித்து உலகம் முழுமையும் பரப்பியுள்ளார். திருக்குறள் மூலம் உரை ஆங்கில மொழியாக்க ஆங்கில உரை கதைகள் ஒவியம் என அனைத்து நிலையிலும் பதிப்பித்துள்ளார். அமெரிக்கா வாசிங்டன் நகரில் அறிஞர் பிரபாகரன் ஏச்லேஸ் விஸ்டம் நூலை துணைவேந்தர் சுந்தரமூர்த்தி வெளியிட நான் பெற்றுகொண்டேன். புத்தர் கன்பூசியஸ் போன்ற உலகளாவிய அறிஞர் பெருமக்களை ஒப்பிட்டு வள்ளுவத்தின் உயர்வை எழுதியுள்ளார். அண்ணாச்சி அவர்கள் நிறுவிய சிலை வாசிங்க்டன் முருகன் கோவிலில் தமிழ்ச்சங்கத் தலைவர் சான்பீட்டர் தலைமையில் திறக்கப்பட்டது. 

தந்தை பெரியார் அவர்கள் 1949ஆம் ஆண்டு நட்த்திய மாநாடுதான் திருக்குறள் பாமரர்களுக்கும் செல்லும் சூழல் ஏற்பட்டது. அந்த  மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் திருவி.க கி.ஆ.பெ.வி. போன்ற பெருமக்கள் கலந்து கொண்ட மாநாடு. அப்போது தந்தை பெரியார் அவர்கள் திருக்குறளுக்கு அவரவர் போக்குக்கு உரை எழுதுகின்றனர். நடுநிலையோடு எழுத வேண்டும் என்று கூறினார். புலவர் குழந்தை நாவலர் நெடுஞ்செழியன் தலைவர் கலைஞர் அறிஞர் மு.வ.போன்றோரின் உரைகள் வெளிவந்தன. 

        திருக்குறளை .வீரமாமுனிவர் இலத்தீனிலும் எச் டபில்யூ எல்லீசு,டபில்யூ எச் ட்ரூ, சி.யூ கோவர், ஈ.ஜே.இராபின்சன்,, ஜே.லாசரஸ், ஜீ.யூ.போப்,  போன்றோர் ஆங்கிலத்திலும் எம்,ஏரியல், தூமா, எம் லாமரஸ், பிரஞ்சிலும்  டாக்டர் கிரால் இலத்தினிலும் செர்மனிலும் மொழிபெயர்த்து மேலை நாட்டவர்க்கு வழங்கினர்.                               

        அறிஞர்   ஏரியல் திருக்குறள் மனித இனத்தின் மிக உயர்ந்த மிகத் தூய்மையான வெளிப்பாடுகளில் ஒன்று எனக் குறிபிடுகிறார்.

              இறுதியாக ஒரு பதிவை இங்கு முன்மொழிய விழைகிறேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிவிக்கக் கோரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து தில்லி வரை ஊர்திப்பயணமாக தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் சென்று பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கி வந்தோம், அந்த விண்ணப்பம் நடைமுறைப் படுத்த வி.சி.பி உலகத் தமிழ்சங்கம் உள்ளிட்ட அனத்து அமைப்புகளும் வலியுறுத்த வேண்டுகிறேன்.

         பேரறிஞர் ஆல்பர்ட் சுவைசர் திருக்குறள் குறித்துக் கூறிய சிந்தனையைக் கேளுங்கள் “ திருக்குறள் எனும் நூலே அன்பாகிய வாழும் அறம் ஆகும். அது எளிய அறவுணர்வு கொண்ட மாந்தரின் குறிகோளைத் தவறில்லாமல் எடுத்துச் சொல்வது.மனிதன் தன்னிடமும் உலகத்தாரிடமும் நடந்துகொள்ள வேண்டிய பண்பாட்டின் பலதரப்பட்ட சிக்கல்கள் பற்றிய அதன் கூற்றுகள் நல்லறிவுக்கேற்றவர்.உயர்ந்தவை. பேரறிவின் விளைவாகிய இத்தகைய அறக்கோட்பாடுகளின் தொகுதியை உலக இலக்கியத்தில் வேறெங்கும் காண்டல் அரிது.குறள்கூறும் வாழ்வால் பெறும் இன்பம் பற்றிய கருத்துகள். வாழ்க்கை ஏற்பிற்கும் உலகின் உறுதிப்பாட்டிற்கும் சாட்சியம் அளிப்பவை. இவற்றை இந்தியரிடமிருந்து யாரும் எதிர்பார்க்க முடியாது.”                                                       எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்                                                                       திண்ணியர் ஆகப் பெறின்                                                                                                       என வள்ளுவர் வழியில் கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்

 (10-1-2022 அன்று வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கம் நட்த்திய கணொளியில் உலகை ஆளும் திருக்குறள் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

Monday, January 17, 2022

 சோலை தமிழினியன் இலக்கியச்சோலை 12ஆம் ஆண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் கவிக்கொண்டல் விருதைப் பெற்று ஆற்றிய உரை





              சோலை தமிழினியன் இலக்கியச் சோலையின் 12ஆம் ஆண்டுவிழாவையும் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு மிகச் சிறந்த நிகழ்வை நட்த்துகிறார். ஒரு இதழ் நட்த்துவது என்பது ஈகமான செயல், அந்த ஈகத்தை தம் இல்லாளோடு இணைந்து சிறப்பாக நடத்துகிறார் தமிழினியன் கொரனா காலத்திலும் வருகை தந்துள்ள பெருமக்கள் அவருக்கு ஒரு சிறந்த கைதட்டு வழங்க வேண்டுகிறேன். இதழ் நட்த்துவது என்பதே அரிய செயல் அவரே ஒரு சிறந்த கவிஞர் எழுத்தாளர் தம் நூல்களை வெளியிடாமல் தம் பதிப்பக வழி 12 எழுத்தாளர்களின்  நுல்களை வெளியிடுகிறார் அதற்கு ஒரு கை தட்டை வழங்க வேண்டுகிறேன்.. எல்லாவற்றிர்க்கும் மேலாக 9 பெருமக்களின் பெயரில் விருதை நிறுவி ஆண்டுதோறும் விருதை வழங்கி வருகிறார். இவ்வாண்டு எனக்கு கவிக்கொண்டல் மா செங்குட்டுவன் விருதை வழங்கியுள்ளார். விருதை இயக்குநர் திலகம் சுப முத்துராமன் திருக்கரத்தால் வழங்குகிறார். இயக்குநர் திலகம் ஆரம்பம் முதல் இறுதிவரை எளிமையாக அமர்ந்து இந்த நிகழ்வை சிறபிக்கிறார்

.கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களைப்ப்ற்றி இங்கு எத்துணை பெருமக்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. மூத்த பெருமக்களுக்குத் தெரியும் வருகை தந்துள்ள இளைஞர் பெருமக்களுக்கு தெரிவிப்பது என் கடமையாகக் கருதுகிறேன். மா.செ. அவர்கள் தொடக்கம்முதல் இறுதி வரை திராவிட முன்னேற்றக் கழக இதழாளர்களில் ஒருவர். விடுதலை நம்நாடு கழகக் குரல் தமிழின ஓசை கவிக்கொண்டல் என பல இதழ்களில்  இறுதி நாள் வரை தொண்டாற்றிய திராவிடத் திருமகன் நம் ஐயா மா.செங்குட்டுவன் அவர்கள். மா.செ அவர்கள் திராவிட இயக்கப் பதிவுகளை கவிக்கொண்டல் இதழில் வெளியிட்டு  இரு நூல் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் அதைப் படித்தால் திராவிட இயக்க வரலாற்றையும் அவர் பங்களிப்பையும் நாம் அறியலாம், 

திராவிட முன்னேற்றக் கழகம்  தொடங்கிய காலத்தில் குரல் பதிவுக்கு அறிவியல் சாதனங்கள் இல்லை அந்தக் காலத்தில் அண்ணா அவர்கள் பேசிய பேச்சை பதிவு செய்ய வருபவர் வரவில்லை அன்று இளைஞராக இருந்த மாசெ அவர்கள்தான் அண்ணா அவர்களின் பேச்சை பதிவுசெய்தார். திராவிட நாடு இதழில் வெளியானபோது அண்ணா அவர்களே அழைத்து பாராட்டிய பெருமகன். அண்ணா மலேசியா சென்றிருந்தபோது  அண்ணாவின் நிகழ்சிகள் உரைகள் அனைத்தையும் மலேசியாவில் அண்ணா என்ற நூலாக வெளியிட்டார். மகாகவி பாரதிக்கு தொடர் நிகழ்வுகள் நட்த்துவார்கள் ஆனால் பாவேந்தர் பாரதிதாசனுக்கு விழா நடத்தமாட்டார்கள். 1971ஆம் ஆண்டுகளில் தமிழ்மன்றங்கள் ஒன்றியப் பேரவை என்ற அமைப்பை நிறுவி அந்த அமைப்பின் வழி தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் கவிக்கொண்டல் மாசெ அவர்களும் நடத்திய விழாக்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. நெருக்கடி நிலை காலத்தில் பாவேந்தர் சிலையை கலுவி கொண்டாடிய நிலைகள் எல்லாம் இளைஞர்கள் அறிய்வேண்டிய செய்திகளாகும்.

 தன்னலமற்ற அவரது அவரது தொண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் நம் தமிழ் வள்ளல் மாம்பலம் சந்திரசேகர் சோலை தமிழினியனின் இலகியச்சோலையில் விருதை நிறுவியுள்ளார். தமிழ்வள்ளல் சந்திரசேகர் மா. செங்குட்டுவன் செங்குட்டுவன் பேரன்பு கொண்டவர் அவரின் பிறந்தநாளின்போது இறுதி வரை கண்டு பொன்னாடை போர்த்தி முகநூலில் பகிர்வார். அவர்பால் பேரன்புகொண்ட அவர் நிறுவிய விருதை உளம் மகிழ்வோடு பெற்று கவிக்கொண்டல் மாசெ புகழ் ஓங்குக எனக் கூறி விடைபெறுகிறேன். 

(8-1- 2022 அன்று சோலை தமிழினியன் இலக்கியச்சோலை 12ஆம் ஆண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் கவிக்கொண்டல் விருதைப் பெற்று ஆற்றிய உரை)


 சென்னையில் ஆனந்த இல்லம் திங்களிதழை வெளியிட்டு 

தமிழ்மாமணி வா.மு.சேதிருவள்ளுவர் ஆற்றிய உரை





நண்பர் மனோகரன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து ஆனந்த இல்லம் இதழை வெளியிடவேண்டும் எனக் கூறினார். வருகிறேன் என்று கூறி இன்று இங்கு தங்கள் முன் நிற்கிறேன். அண்மையில்தான் கத்திப்பாரா சாலைப் பூங்காவை நம் சாதனைத்தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார் அந்தப் பூங்காவில் நாம் இந்த இதழை வெளியிடுகிறோம்.மிக்க மகிழ்ச்சி


, நிருபர்கள் அறிமுகம், வளர்ச்சி ஆலோசனைகள் கூட்ட வரவேற்புரையாற்றிய கிருட்டிணமூர்த்தி  மனோரகனும்  சென்னை முசிலிம் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள் எனக் கூறினார். எனக்குப் பின் அப் பள்ளியில் படித்த பெருமக்கள். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ எங்கட்கு தமிழாசிரியர் அவர் ஊட்டிய உணர்வுதான் இன்று மனோகரன் போன்றவர்கள் தமிழ் ஆர்வத்தோடு இதழ் நடத்துகின்றனர். 

வருகை தந்துள்ள இதழாளர்கள் இணை ஆசிரியர் திரு சி.கே. பெருமாள், உதவி ஆசிரியர்,திருமதி தீபா மதுரவாயல்,திருமதி. முத்துலட்சுமி ஜான்சி ராணி அறக்கட்டளை, நிருபர்கள் உதயகுமார், கோட்டீஸ்வரன், சரண்ராஜ்,ஜெயசித்ரா அச்சரப்பாக்கம், தமிழரசி செங்கல்பட்டு,பாத்திமா,விஜயாமணி எண்ணூர்,கண்ணன் பட்டயக்கணக்கர் சந்திரசேகரன்,பேராசிரியர் மகேந்திரன் ஆகியோர் வருகை தந்துள்ளனர் அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்தப் பூங்காவிற்கு நான் மனோகரன் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டேன் யாரும் இன்மையால் நான் திரும்பிவிட்டேன் இருப்பினும் ஒரு இதழ் நட்த்துவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். மனோகரனிடம் கைப்பேசியில் பேசியபோது நான் அச்சகத்தில் உள்ளேன் என்றார். அவசியம் நான் வரவேண்டும் என வலியுறுத்தினார். அவர் நிலையறிந்து அவரை ஊக்குவிக்கும் முகத்தான் இங்கு வருகை தந்துள்ளேன். மீண்டும் வருகை தந்தபோது அருமைச்சகோதரர் கலைமாமணி தி.க.ச. புகழேந்தி  அவர்களைக் கண்டேன்.தமிழகத்தின் கலைக்காகவே வாழ்ந்த தி.க.சண்முகம் அவர்களின் திருமகனார். நான் வெளியிட் தி. க. ச. புகழேந்தி பெற்றுக்கொள்வது சாலச் சிறந்த்து. எம் தந்தையார் பெருங்கவிக்கோ தொடங்கிய தமிழ்ப்பணி இதழை கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கிடையில் நடத்தி வருகிறேன். இதழ் நடத்துவுது எளிதான செயலன்று. மனோகரன் அவர்கள் திட்டமிட்டு சிறப்பாக நடத்தவேண்டும் என விழைகிறேன். இதழ் நட்த்துவோர்க்கு கொள்கை உரம் இருக்க வேண்டும் நம் கருத்தை தெளிவாகப் பதிவு செய்யவேண்டும்.. எங்கள் .தமிப்பணி இதழ் கொள்கை இதழாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைக்கு தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. எங்கள் பன்னாட்டுத் தம்ழுறவு மன்றத்தின் ஏழு மாநாடுகளையும் நடத்துவற்கு இந்த இதழின் பங்களிப்பு மகத்தானது. இதனை நான் கூறுவதற்குக் காரணம் ஒரு இதழ் உலகத்தை நம்மோடு ஒருங்கிணைக்கிறது. தமிழ்ப்பணி இதழ் நாங்கள் செருமணி, தாய்லாந்து, மலேசியா, அமெரிக்கா, போன்ற வெளிநாடுகளில் நடத்திய மாநாட்டின் தூதுவனாக செயல்பட்ட்து. இதழ்ப் பணிக்காக நான் உலகம் முழுமையும் பயணித்து ஒரு உறுப்பிணர் குழாத்தையே உருவாக்கியுள்ளேன். அந்தக் காலகட்ட்த்தில் இதழ்களை அஞ்சலில்தான் அனுப்பவேண்டும். உலகம் முழுமையும் ஒரு உறுப்பிணர் குழாத்தையே பெற்றிருந்த பெருமைக்குரிய இதழ் தமிழ்ப்பணி இன்று இணையதளத்தில் வலம் வருகிறது.

நண்பர் மனோகரன் அவர்களின் ஆனந்த இல்லம் முதல் இதழைக் கண்டேன் மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அண்ணாச்சி வி.சி. சந்தோசம்  அவர்க்ளின் வாழ்த்தைப் பெற்றுள்ளார். இலக்கியம் ஆண்மிகம் அரசியல் மருத்துவம் அறிவியல் வணிகம் என அனைத்து துறை சார்ந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தம் துணைவியார் மகாலட்சுமி கால்மானாலும் அம்மையாரின் நினைவைப் போற்றியும் பின் அமரர் அரசு, நண்பர் தமிழ்ச்செல்வன் இதழ்களின் காவலராக வாழ்ந்த அமரர் வி.சி.பன்னீர்தாசு ஆகியோர்க்கு இந்த இதழை காணிக்கையாக்கியுள்ளார் ஆசிரியர். அவரது நன்றியுணர்ச்சி போற்றத்தக்கது.  

இதழாளர் மனோகரன் சிறந்த கவிஞராகவும் உள்ளார் நமது முப்படை தளபதி பிபின் இராவத் அவர்கட்கு எழுதியுள்ள கவிதை நம் நெஞ்சைப் பிழிகிறது.

”முப்பிறவி இருப்பது உண்மையெனில்                                      மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே                              காதிருக்கிருக்கிறது  முப்படைகளும் உங்களுக்காக                                      எப்போது வருவீரோ என்றே”

இதழாளர் மனோகரன் அவர்கள் பழுத்த அனுபவம் உள்ளவர். சிறந்த நண்பர்களைப் பெற்றவர். அவருடைய அனுபவமும் நட்பும் இந்த இதழை நன்கு கொண்டுசெல்வார் என்பதில் ஐயமில்லை.. ஆனந்த இல்லம் சிறந்து விளங்க வாழ்த்தி விடைபெறுகிறேன்

(. 03-01-2022 திங்கட்கிழமை மாலை 3-30 மணி அளவில் சென்னை கிண்டி கத்திப்பாரா பூங்காவில் ஆனந்த இல்லம், 2-ம் மாதம் டிசம்பர் இதழை தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வெளியிட்டு ஆற்றிய உரை )

Friday, January 14, 2022

 சூழுக வெற்றிப் பொங்கல் 

தமிழ்மாமணி வா. மு. சே திருவள்ளுவர்




ஐயன் தோன்றிய ஆண்டே

 அகிலத் தமிழர் ஆண்டாம் 

வையப் பெரியார் கூட்டிய 

வளமார் தமிழாண் டாமே 

 தையையே தமிழர் மரபாய் 

தக்கநல் கனடா காணும்

 உய்யும் நிலையை மீண்டும்  

உயர்வாய் ஸ்டாலின் கண்டார்!


மெய்யின் உணர்வை அறியா 

மேட்டுக் குடியோர் சிலரே 

பொய்யாம் அறுபது குட்டி 

பொதுமை ஆண்டாய்ப் பரப்பும் 

செய்யும் இழிமைச் செயலை 

சேர்ந்தே மாய்ப்போம் வாரீர் 

கையுடன் கவசம் போன்றே 

கழக ஆட்சி வாழ்க!! 


புத்தொளிர் வீசும் பொங்கல் 

புனித வள்ளுவர் ஆண்டில் 

இத்தரை வியக்கும் வண்ணம் 

இணைந்தே வெல்வோம் வாரீர்! 

வித்தகப் புரட்சி உழவர் 

வீதியில் நின்றே வென்றார் 

எத்திசை உழவர் வாழ்வே

 ஏற்றமாய் வாழ்க வாழ்க!!


 நாடுள நட்பு நன்றாய் 

நாட்டிடும் இன்பப் பொங்கல்

 மட்டிலா முதல்வர் ஸ்டாலின் 

மாண்புடைத் தழிழர் பொங்கல்  

கட்டியம் கூறும் பெண்கள் 

காத்திடும் குடும்ப்ப் பொங்கல் 

சுட்டிடும் வள்ளுவ ஆசான்

 சூழ்ந்திடும் வெற்றிப் பொங்கல்!!

Thursday, January 6, 2022

 மணிவிழாக் காணும் 

கவிமாரி வாழ்க!!

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



பத்தரை மாற்றுத் தங்கம்

 பண்பினில் நிற்கும் சிங்கம் 

 இத்தரை வியக்கும் வண்ணம் 

இணையத்தில் வாழும் அங்கம் 

முத்திரை பதிக்கும் எங்கும் 

 முத்தமிழ்ச் சேது உள்ளம் 

பத்தினி தோற்பாள் அன்பில்

 பாசத்தின் கவியே வாழ்க! 


அறிவினில் அவையை ஆள்வான் 

ஆற்றலில் உயர்வாய் நிற்பான் 

தெரிதலில் தேர்ந்த நல்லோன்

 தென்றலாய் குடும்பம் உள்ளான்

 புரிதலில்  புவியே போற்றும் 

  புகழ்மிகு மாநாடு கண்டோன் 

அறிவியல் இணைந்து நன்றே  

ஆக்கிடும் கவியே வாழ்க! 


மாசிலா மனைவி மாரி 

மட்டிலா பாவை தந்தை 

வீசிடும் மணமாய் நெஞ்சில் 

வீற்றிடும் கவினின் அப்பன்

 பேசிடும் உலகத் தந்தை 

பெருங்கவிக்(கோ) தாங்கும் தம்பி

 காசினை எண்ணா என்றன் 

கற்கண்டுக் கவியே வாழ்க!


 சிந்தனை தந்த மேலோன்

 சிலிர்த்திடும் மானச் சிங்கம்  

நந்தமிழ் அணியில் நின்றே 

நயத்தகு மணிவிழாக் காண்போன் 

விந்தியம் உலகம் எல்லாம்

 வித்தகப் பணிகள் போற்றும்  

எந்தமிழ் இளவல் கவியே

 ஏற்றமாய் ஓங்கி வாழ்க!