Thursday, June 30, 2011

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்தியமணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(28-6-2011 அன்று தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல், தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

தலைநகர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பனார் 7ஆம் ஆண்டு நினைவேந்தலும் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கமும் இன்று தலைநகர்த்ததமிழ்ச் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் நடைபெறுவதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்குத் தலைமை தாங்கும் வெள்ளைச்சாமி அவர்களே பேராசிரியர் அவர்களின் திருமகன் அவரது பணியை தொடர்ந்து செய்து வரும் மெ.மீனாட்சிசுந்தரம் அவர்களே, புலவர் என்றால் பெருமை சேர்ப்பவர் என் அருமைத் தந்தையார் வரிசையில் புலவர் சுந்தரராசனும் ஆவார்கள். தன் அயராத முயற்சியால் தலைநகரில் இந்தக் கட்டிடத்த்தைக் கட்டி இங்கு தமிழ் நிகழ்வுகளை நடத்திவரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்த ஆட்சியானாலும் ஆய 64 தமிழ்க்கவலைகளை எழுதும் அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் ஆறு. அழகப்பனார் அவர்களே, தமிழன் தொலைக்காட்சி இயகுநர் கலைக்கோட்டுதயம் அவர்களே,சமச்சீர் கல்விக்காகா அன்றும் இன்றும்போராடி வரும் கசேந்திரன் அவர்களே, மணிவாசகர் பதிப்பக பொறுப்பாளர் குருமூர்த்தி அவர்களே சங்கத்தை மிகச் சிறப்பாக இயக்கி வரும் செயலாளர் பாவலர் கணபதி, புலவர் புஞ்ஞையரசன், அழகியநம்பி கவிஞர் இளங்கண்ணன் உள்ளிட்ட பெருமக்களே உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்கள் சிறந்த பேராசிரியர், நுண்ணிய ஆய்வறிஞர், தலைசிறந்த்த பதிப்பாளர், தமிழுக்காகப் போராடியவர், மனிதநேய மாமணி.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி மிகச் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கியவர். தாம் பேராசிரியராக இருந்தபோது பல்வேறு தமிழ் நூல்களை எழுதியும் எழுத்தாளர்களையும் மாணவர்களையும் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். தலைசிறந்த பதிப்பாளர். வெற்றி என்ற உரை நூலை வெளியிட்டுத் தமிழகம் முழுமையும் புகழ் பெற்றவர். மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக தலைசிறந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். அனைத்துத் துறைகளிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் நூலை வெளியிட்டவர். அவரது வழியில் அவரது திருமகன் பல்வேறு பதிப்புகளை வெளியிட்டு வருகிறார். அண்மையில் தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த நூல் ஆசிரியர்களுக்கும் பதிப்பாளருக்கும் விருது வழங்கி தந்தையின் புகழை மங்காமல் காத்துவருகிறார்
.
பேராசிரியர் மெய்யப்பனார் ஒரு தமிழ்ப் போராளி. மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார் அவர்கள் எங்கும் தமிழ் எதிலும் என்ற கொள்கைக்கு சென்னையில் பேரணி நடத்தியபோது தன்னுடைய கனத்த உடலோடு வியர்க்க வியர்க்க முழக்கத்தோடு நடந்த நடை என் மனக்கண் முன் தோன்றுகிறது.

பேராசிரியர் அவர்கள் சிறந்த மனித நேயமாமணி. 30 வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள எங்களது புத்தகக் கடை வழியாகச் மெய்யப்பனார் சென்றபோது கடைக்குள் வந்து கண்டு தனது பத்தாயிரம் ரூபாய் உரைகளை அளித்தது தொழிலைப் பெருக்குங்கள் எனக் கூறிய பெருமனத்தர்.

செருமணியிலிருந்து நண்பர் கணேசலிங்கம் வந்திருந்தபோது ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம் அப்போது செருமனி வாழ் தமிழர்களுக்கு தன் பதிப்பக நூல்களைக் கொண்டுவந்து வழங்கிய அவரது வள்ளல் தன்மை எண்ணி போற்றத்தக்கதாகும்.
ஒருமுறை என் தங்கை எம்.எசி தேர்வுக்குச் சிதம்பரம் சென்றபோது தங்குவதற்கு தன் இல்லத்தை வழங்கீயதும் அவர்தம் துணைவியார் ஆச்சி காட்டிய பரிவும் நெஞ்சை விட்டு நீங்காதது.

இதையெல்லாம் குறிப்பிடுவதற்குக் காரணம் யாம் மட்டும் அல்ல அவரோடு பழகிய தமிழ் அறிஞர்கள் அணைவரும் அறிந்த ஒன்றாகும்.

தமிழைப் பயிற்று மொழியாக்க, அனைத்து நிலைகளில் தமிழ் அரியணையில் அமர 1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப் பயணமாக வந்தோம். பின் தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வந்து மக்களை தெளிவித்தும் அரசையும் வலியுறுத்தியும் வருகிறோம்.
மேலும் தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழை பயிற்றுமொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழியாகவும் ஆக்கப் போராடுவோம்.

கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தசரதனைக் குறிப்பிடும்போது

‘ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்இல் நூல்நூல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான் பகைவேலை கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம்”

எனக் குறிப்பிடுகிறார். அதைப் போன்றே மெய்யப்பனார் அறிவுக்கடலை ஆய்ந்து கடந்தார். தம் வாழ்வில் பகைக் கடலை காய்ந்து கடந்தார். இரப்போர்கடலை ஈந்து கடந்தார்.

வாழ்க மெய்யப்பனார் புகழ். சாகோதரர் மீனாட்சி சுந்த்ரம் வழி அவரது தொண்டு தொடர்க எனக் கூறி விடைபெறுகிறேன்.

Saturday, June 18, 2011

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழா


(சென்னை கன்னிமாரா நூலகத்தில் 8-6-2011 அன்று நடைபெற்ற கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் விழாவும் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவும் அறிஞர்களுக்கு விருதளிப்பு விழாவுமாக முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விழாவிற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பெரியார் சிந்தனையாளர் பரஞ்சோதி அவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைகள் தாங்கி பழுத்த பழமாக வாழும் செங்ட்டுவனார் உணர்வுக்கு ஏற்ற தலமையாகும். வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் பேராசிரியர் இராசகோபாலன், கவிவேந்தர் வேழவேந்தன்,பெரியார் பேருரையாளர் தென்மொழி ஞானபண்டிதன்,கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், தமிழ்வள்ளல் சந்திரசேகர் பொன்ற பெருமக்களெல்லாம் நெஞ்சாரப் போற்றியுள்ளனர்

பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது சென்னையில் அண்ணாசாலையில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் என்னைத் தோள் மீது இருத்தியவாறு அண்ணாவின் திரூஉடலைக் கண்டேன். தமிழகமே திறண்டுவந்து அஞ்சலி செலுத்திய,தமிழகத்தையே தமிழர்கள் கையில் வழங்கிய பேரறிஞருடன் இருந்து அண்ணாவின் எழுத்துக்களை எழுதி அண்ணாவின் உணர்வுகளை இன்றும் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் பாதுகாத்து வரும் கவிக்கொண்டல் விழாவில் பன்கேற்பது யான் பெற்ற பேறு.

யான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஐயா அவர்க்ளின் மீது அன்பும் ஈடுபாடும் உண்டு. என் அருமைத் தந்தையாரும் ஐயா அவர்களும் இணைந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு வித்தூன்றியவர்கள். அக்காலகட்டங்களில் புரட்சிக்கவிஞர் பாவெந்தரை இருட்டடிப்பு செய்ய ஒரு கூட்டமே இருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்றங்கள் ஒன்றியப்பேரவை என்ற அமைப்பின் மூலம் தமிழ் மன்றங்களை ஒன்றிணைத்து மாதம் முழுமையும் பாவேந்தருக்கு விழா நடத்திய பெருமைகுரியவர்கள்.

பாவேந்தரின் சிலையை பிறந்தநாளின்பொது ஏணி போட்டு ஏறி கழுவி மாலை சூட்டி விழாநடத்திய பெருமைக்குரியவர்கள். பாவேந்தரின் சிலை அருகே கவிஞர் குழாத்தே கூடி யிருந்தது இன்றும் நிழலாடுகிறது. பாவெந்தரின் புகழ்பாடும் இதழாகவே இன்றும் கவிக்கொண்டலை நடத்தி பாவேந்தர் பாசறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவே உள்ளார்.

நெஞசம் மறவா நிகழ்ச்சிகள் தம் கவிக்கொண்டலில் தொடர்ச்சியாக வெளியிட்டு நூலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளார்.அவரது நூலைப் படிக்கும் போது திராவிட இயக்க வரலாற்றை அறியக் கூடிய பேழையாக உள்ளது. தொடர்ந்து ஐயா அவர்கள் தன் அனுபவங்களைப் பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிமையும் மக்கள் நேயப் பண்பையும் ஐயாவின் எழுத்தில் படிக்கும்போது கண்கள் பணீக்கின்றது. ஐயாவின் எழுத்துக்கள் திராவிட இயக்கத்தின் ஆவணமாகவே உள்ளது.

கவிக்கொண்டல் மா.செ தலைசிறந்த இதழாளர் பதிப்பாளர். தலைசிறந்த தமிழகத்து மலர்களை தொகுத்து வழங்கிய பெருமைகுரியவர். தந்தைபெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமானப் பேராசிரியர் போன்ற பெருந்தலைவர்களுடன் இதழ்ப் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர். இதழியல் கல்வி படிப்போரெல்லாம் மா.செ. அவர்களுடன் பயிற்சி மேற்கொண்டால் இதழாலர்களுக்கு பகுத்தறிவு உணர்வு செழிக்கும். தமிழினம் தழைக்கும்.

கவிகொண்டல் இதழில் வெண்பா விருந்து மூலம் எண்ணற்ற எழுத்தாளர்களை இலக்கண வரம்புக்கு உட்பட்ட கவிஞர்களை உருவாக்கியவர். ஒரு கவிஞர் கவிக்கொண்டலில் எழுதினால் மரபுவழிப் பாவலர் என்ற பெருமையைப் பெறும் பல்கலைக் கழகமாக கவிகொண்டல் இதழ் உள்ளது

கவிகொண்டல் மாசெ அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து தமிழ் தமிழரின் அடையளங்களையும் நெஞ்சம் மறவா நிகழ்சிகளின் மூலம் பெரியார் அண்ணா கலைஞரோடு உள்ள திராவிட போராட்ட உணர்வுகளையும் பதிவு செய்ய வேண்டி விழைகிறேன்.

மருத்துவமணையில் உள்ள அம்மையார் தாமரைச்செல்வி அம்மையார் நலம் பெற்று ஐயா அவர்களின் பணி சிறக்க எனது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.