Sunday, November 13, 2022

 அன்னைசேது 17ஆம் ஆண்டு


 விருதளிப்பு விழா

அன்னை சேது 17ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு. இன்று பெரியார்திடல் மணியம்மை அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் பங்கேற்று அறிஞர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி விருது வழங்க தமிழர் தலைவர் உடல் நலம் சோர்ந்த நிலையிலும் இங்கே வருகை தந்துள்ளார்கள். இன்று தந்தை பெரியாரின் தொண்டறத்தை தமிழகத்தில் ஏன் உலகெங்கும் நிலைநாட்டி வரும் அருமைத் தமிழர்தலைவர் வருகை யாம் பெற்ற பேறு. யான் தமிழ்ப்பணியின் பொன்விழாவிற்கே அழைத்தேன் கனடா செல்ல உள்ளதால் வர இயலாமையை தெருவித்து இன்று அன்னையின் நினைவேந்தலுக்கு வருகை தந்துள்ள தலைவர் பெருமகனை நெஞ்சாரப் போற்றி தங்கள் கர ஒலிகளுக்கிடையில் வருக வருக என வரவேற்கிறேன். 

இன்று சமூக நீதிக் கொள்கையை  தி.க., தி.முக மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளையும் இந்தக் கொள்கைக்காக ஒருங்கிணைக்கும் பேராற்றல் மிக்க தலைவர் நம் தமிழர் தலைவர். எங்கள் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களை உலகறிய மொழிந்த பெருமை மூன்று தலைவர்களுக்கு உண்டு. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இனமானப் பேராசிரியர் நம் அருமைத் தலைவர் தமிழர் தலைவர். தலைவர்களைத் தொடர்ந்து நம் முத்துவேலர் கருணாநிதி  ஸ்டாலின் அவர்கள் தந்தையின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெருவித்து அதை அனைத்து ஊடகத்திலும் இணைய தளங்களிலும் பதிவு செய்து உலகறியச் செய்தார்கள். தந்தையார் அவர்களின் சேதுகாப்பிய்ம் 12 காண்டங்களையும் தமிழர் தலைவர் சிங்கப்பூரில் வெளியிட்டு தொகையையும் திரட்டித் தந்த பெருமைக்குரிய தமிழர் தலைவர் அவர்கள். பேராயக் கட்சியின் துணைத்தலைவர் ஊடகங்களில் திண்மையான கருத்துக்களை வலிமையாக பதிவிடும் பெருமகன் எங்கள் பார்திபனூர் பெருமகன் இதயதுல்லா அவர்களை வரவேற்று மகிழ்கிறேன். பெருமக்களே இங்கு விருதுபெறும் அறிஞர் பெருமக்கள் யாரையும் நானோ தம்பி கவியரசரோ ஆண்டவரோ தேர்ந்தெடுத்தது அல்ல அனைவையும் எண்ணிப்பார்த்து தந்தையின்  சிந்தையில் தோன்றிய பெருமக்களே என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் 1. தொண்ணூறு வயது அண்மையில் கண்ட பெரும்புலவர் இராமலிங்கம் விருது பெறுகிறார். தமிழ்ப்பணியின்பால் பற்று கொண்டவர். யான் அமெரிக்காவில் இருக்கும்போது கூட தொடர்பு கொண்டு பாராட்டும் பெரும் பண்பினர். நீதியரசர் அரிபரந்தாமன் போன்ற அறிவுச் சுரங்கங்களை உருவாக்கிய பெருமகன்.2. பேராசிரியர் சோதிவாணன் திராவிட இயக்க கருத்துக்களை நெஞ்சில் தாங்கி தொடர்ந்து திராவிடத் தீர்ராக வாழ்ந்து வருகிறார். தினமணியில் வெளியான கட்டுரைகளுக்கு தமிழ்ப்பணியில் பல மறுப்புக் கட்டுரை எழுதி அளப்பரிய தொண்டாற்றி வருபவர். சிறந்த திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் பெருமகன் இன்று விருது பெறுகிறார். 3. அமரிக்காவில் வாழும் பெருங்கவிஞர் இராமசாமி அமெரிக்கா பெட்னா மாநாடுகளில் கவியரங்கங்களில் தலைமையேற்று பாடிய பெருமகன் யான் பங்கேற்ற சிக்காக்கொ 10ஆம் உலக மாநாட்டிலும் பாடிய பெருமகன் தமிழகத்தில் பாரதி கலைக் கழகத்தில் பெருந்தொண்டாற்றிய பெருமகன் விருது பெறுகிறார்.4.மியான்மாரில் வாழ்ந்து தமிழகத்தில் பர்மாவின் அடையாளமாக வாழும் பெரும் மரபுப் பாவலர் வேணுகொபால்.ரெப்ப்கோ வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர். பர்மாவைப் பற்றி மிகச் சிறந்த நூலை தமிழ் உலகிற்குத் தந்துள்ள பெருமகன் விருது பெறுகிறார். 5, ஏர்வாடி இராதாகிருட்டிணன் கவிதைஉறவுக் காவலர் கவிஞர்களின் வேடந்தாங்கள் கவிதை உறவு 

இதழை தொடர்ந்து நடத்திவரும் சிறந்த எழுத்தாளர் கவிஞர். தந்தையாரைப் போன்றே ஆண்டுதோறும் நூல்கள் எழுதி வெளியிடும் பெருமகன்.கொரானா காலத்தில் கருணைக்கூடை எனும் அமைப்பு மூலம் நிதியை திரட்டி  நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிய பெருமகன் விருது பெறுகிறார்.6.அரசியலிலும் திரைப்படத்திலும் சிறந்து விளங்கிய முனைவர் இரவிபாரதி. நாங்கள் நட்த்திய பன்னாட்டுத் தமிழுறவு ம்ன்ற மாநாட்டிற்கு அரும்பணியாற்றியவர். செருமணி மாநாட்டில் பங்கேற்ற பெருமகன். அரசியலில் பெருந்தலைவர்களோடு நெருங்கிப் பழகி அளப்பரிய பணிகள் செய்தவர் சென்னை மாநாகராட்சி உறுப்பிணராக இருந்து தொண்டாற்றிய பெருமகன் விருது பெறுகிறார். 7.பெருங்கவிஞர் கடவூர் மணிமாறன். சிறந்த தனித்தமிழ்ப் பற்றாளர் பாவலரேறு பெருஞ்சித்திரானார் வழி பெருந்தொண்டாற்றிய பெருமகன். மிகச் சிறந்த கவிதைநூல்களின் ஆசிரியர் மொழிப்போர் ஈகி வீரப்பனாருக்கு சிலை எழுப்பி மலர் வெளியிட்ட தீர்ர்.. இதுவரை அரசு விருது பெறாமை வியப்புக்குரியதே. திராவிட முன்னேற்றக் கழக வெற்றிக்கு அரும் பாடுபட்ட பெருமகன் விருது பெறுகிறார். 8. பாவலர் ம. கணபதி மிகச்சிறந்த பண்பாளர். தலைநகர் தமிழ்ச்ங்கத்திற்கு ஒருகட்டிடம் இருக்கிறது என்றால் அதற்கு கணபதியின் பங்களிப்பு மகத்தானது. இப்படி துணை நிற்கும் ஒருவர் சுந்தரராசன் அவர்கட்குத் துணை நின்றதாலேயே இன்று சங்கத்திற்குக் கட்டிடம் இயல்பானது. இன்றும் அதை பாரமரிக்கும் பெரும் பொறுப்பை ஏற்று வழிநட்த்திவரும் பெருமகன் விருது பெறுகிறார். இவர் தம் துணைவியார் சரோசா இளையராசா குழுவில் தில்ருபா கலைஞர் 9. மாணவர் மன்றத் தலைவர் ப.கி.பொன்னுசாமி மாணவர் மன்றத்தை திறம்பட இன்று வரை நட்த்திவரும் தொண்ணூற்றைந்து வயதுப் பெருமகன். நான் செருமணி சென்றபோது தமிழ்மணி பட்டப் படிப்பு செருமணி தமிழர்கள் பட்டம் பெற்றதை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கப் பொதுச்செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இல்லத்தில் கண்டேன். மகத்தான் பணிகளைச் செய்யும் பெருமகன் விருது பெறுகிறார்.10. பொறிஞர் பீட்டர் ராசன் மேட்டூரில் பணியாற்றியபோது பன்னாட்டுத் தம்ழுறவு மன்ற அமைப்பை நிறுவி அரும்பணியாற்றியவர். இன்று சான்றோர் தளம் என்ற அமைப்பை நிறுவி அளப்பரிய சாதனைபுரியும் பெருமக்ன் விருது பெறுகிறார். 11. குறளோன் வேலரசு சிறந்த கவிஞர். தந்தைபெரியார் அண்ணா கலைஞருக்கு முப்பா வழி தொடர் நிகழ்வுகள் நடத்திய பெருமகன். குறள்வழி நூல்கள் யாத்துள்ள பெருமகன் விருது பெறுகிறார். 12. முகவை மண்ணைச் சேர்ந்த தந்தையின் மாணவர் பாதுசா. மாணவராக இருந்து ஆசிரியராக அரும் தொண்டாற்றி இன்று விருது பெறுகிறார். 13. தந்தையாருக்கு உற்றுழி உதவும் பொறிஞர் கோபாலகிருட்டிணன். ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி ஆங்கிலத்தில் திறன் பெற்றவர். இவ்வாண்டு விருது பெறுகிறார். 14. சந்தப் பாவலர் நந்தா. தொடர் இலக்கியப் பணிகள் ஆற்ற்பவர். இதழின் ஆசிரியர்.. மக்கள் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றும் செயல் மறவர் விருது பெறுகிறார். பெருமக்களே அனவரும் தமிழர் தலைவர் கரத்தால் விருது பெறுகின்றனர். நானும் எனது சிற்றந்தையார் வா.மு. முத்துராமலிங்கம் ஐ ஆர் எஸ் இந்திய வருமான வரித் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றவர் அவர்களும் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்துள்ளோம். தமிழர் தலைவர்பால் பேரன்பு கொண்டவர் பெருமனாரையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். விருது பெறும் பெருமக்கள் வருகை தந்துள்ள பெருமக்க்கள் அனைவரையும் எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாகவும் வர்வேற்று விடைபெறுகிறேன்.  . (12-11-2022 அன்றுஅன்னை சேது விருதளிப்பு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

 6-11-2022 அன்று அன்னையின் அருள்மங்களம் ஆண்டநாயபுரம் அன்னை சமாதியில் சிறப்புடன் நடைபெற்றது. புலவர் நெடுஞ்சேரலாதன், கோடையிடி குற்றாளம், ஆசிரியர் பாதுசா. குமணன் ஆசிரியர் மூக்கன் வழக்கறிஞர் முத்துக்கண்ணன், சேவியர் விசயகுமார் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்று உரையாற்றினர்.


Sunday, August 28, 2022

 பவளவிழாக் காணும் சுதந்திரம் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 


விடுதலை இந்தியத் திருநாள் 

வியத்தகு வெற்றிப் பெருநாள் 

கொடுமை சிறையைக் கண்டோர் 

கடமையின் கருணை நிறைநாள் 

உடைகள் அகற்றி மண்ணில்

 உரிமையாய் சம்மாய் வாழ்ந்து 

விடையென சுதந்திர ஒளியாம்

 வித்தக காந்திக் கனவு!

 

பவள விழாவாம் இன்று 

பண்புள சனநாயகம் உளதா

 தவமாம் கர்நாடகா ஆட்சி  

கயமை மாற்றல் முறையா 

உவக்கப் பணத்தை விதைத்து 

உரிமை பெறலோ விடுதலை

 தவிக்கும் வறுமை எண்ணா 

தற்குறித் தலைமை வீழ்கவே! 


விடுதலை ஆசான் நேரு 

வித்தக வழியினர் கண்டு 

கெடுதலாய் வீழ்த்தும் மமதை 

கேளியாய் பாராளு மன்றம் 

திடுமென செருப்பு வீசும் 

திமிரெனப் பேசும் அவலம் 

கடுமைச் செயலால் நாடு 

கலங்கி நிற்றல் முறையோ! 


ஆக்கமாம் உத்தம் தாக்ரே 

அரசாம் மராடியம் கலைத்தல் 

ஊக்கமாய் பணத்தைக் கொட்டி 

உரிமை அழித்தல் நெறியா 

திக்கெலாம் பவள விழாவாம் 

திகழ்புகழ் பாரத அன்னை 

விக்கியே அழுதிடும் சோகம் 

விடுதலை எந்நாள்? எந்நாள்?

Friday, August 26, 2022

 




கொடுமைப் பாதகன் வீழ்கவே

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

மக்களை நலமாய்க் காக்கா மூடன் 

மனித நேயம் இல்லாப் போக்கால் 

திக்கெலாம் மக்கள் திரண்டே விரட்ட 

திண்ணாமாய் நடக்கும் புரட்சி வெல்க 

உக்கிர வறட்சி தீர்க்கா மோசம்

 உலுத்தர் வாழ்வு ஊதாரிச் செயலால்

 திக்கெலாம் தப்ப முயன்றே முனைந்தும்

 திகைக்க மக்கள் புரட்சி அடக்குதே!

 

முற்பகல் செய்யின் பிற்பகல் வருமே 

முன்னோன் குறளோன் முகிழ்த்த சொல்லின்

 நற்றவ நல்லோர் தமிழர் மாய்த்த

 நாசம் மோசம் தொடராய் மாய்க்குமே 

முற்றும் துறந்தே அகதி வாழ்வாய் 

மூத்த குடியே அலைந்த அவலம்

சற்றும் முற்றும் தப்ப இயலா 

சூழல் பக்சே குடும்பம் மாய்க்கும்

 

அதிபர் மாளிகை ஆடிடும் களமாய் 

அழிவைக் கண்முன் காணும் தளமாய்

 விதியென வாழ்ந்த மக்கள் புரட்சி 

வர்த்தக ஒற்றுமை இணைந்து நின்றே

 கதியெனத் துரத்தும் கய்மைகள அனைத்தும் 

குற்றக் கூண்டில் நிறுத்தும் நாளிதே

 மதிமிகு மக்கள் நடத்தும் புரட்சி 

மண்ணில் ஆணவம் ஒழிக்கும் அன்றோ! 


முள்ளி வாய்க்கால் கண்ட போதே 

முழுமைக் கண்கள் நீராய் வீழ்ந்ததே 

சொல்லில் அடங்கா வீரத் தலைவன் 

சரித்திரச் செம்மல் பிராபா கரனின்

கல்லும் மண்ணும் நினைவாய் எடுத்தோம்

 கரும வீர்ர் வீட்டின் சிதைவில்

 கொல்லும் மமதை அடங்காத் தனத்தோர்

    கொடுமை நெஞ்சர் வீழ்க வீழ்கவே

Monday, August 15, 2022

 அற்புதம் அன்னை ஈகம் அரும்மகன் விடுதலை கண்டார்

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்  


அற்புதம் அன்னை ஈகம்  

அரும்மகன் விடுதலை கண்டார் 

பொற்கனி காணும் வயதில் 

பொல்லாங்காய் சிறையில் வெந்தார்

 நற்களம் எல்லாம் பெற்றே 

நயத்தகு பட்டம் பெற்றார் 

விற்பணர் பேரறி வாளர் 

விந்தையின் வியப்பே வாழ்க!  


சட்டமாய் மன்றம் கூட்டி 

சரிநிகர் தீர்மானம் கண்டும் 

கிட்டா ஆளுநர் வேடம் 

கிடைக்கா விடுதலை முறையா 

மட்டிலா நீதி மன்றம் 

மாண்புற விடுதலை தந்தே 

கொட்டிய கருணைத் தாயாய் 

கொண்டாடிடும் அறமே வாழ்க!! 


இளமையை சிறையில் கழித்தே 

இணையிலா வாழ்வை இழந்தார் 

பலமிகு சமூகச் சீற்றம்

 பண்பென செங்கதிர் சாவு

 உளமுள உரிமைச் சுற்றம் 

உவந்தே நாடிச் சென்றே 

திலகமாம் அற்புதம் அன்னை 

தீத்திறம் விடுதலை கண்டார்!!


கட்டியே பிடித்து முதல்வர்  

கவலையைப் போக்கும் மாண்பு 

கிட்டிய வாழ்வைத் தொடங்க 

கிள்ளையை வாழ்த்தும் பாங்கு 

மட்டிலா ஸ்டாலின் கோமான் 

மகத்துவ ஆளுமைச் செயலே 

தட்டிய கதவாய் நீதி 

தாங்கிய விடுதலை வாழ்க!!!

 விடுதலைத் திருநாள் பவள விழா அமுதப் பெருவிழா                                                                   தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                                                                              

     மாநகர் மத்திய அரிமா சங்கத்தின் அரிமாத் தலைவர் இசைமாமணி பழனி அவர்களே செயலராகப் பொறுப்பேற்றிருக்கும் செயல் வல்லார் வின்சன்ட் அவர்களே பொருளராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு நெஞ்சர் செல்வம் அவர்களே இந்த நிகழ்வை பொறுப்பேற்று நட்த்தும் அரிமா சிவராஜ் அவர்களே. திருவல்லிக்கேணி மாநாகராட்சிப் பள்ளியை சிறப்பாக நிர்வாகித்து இன்றைய சுதந்திரதின பவள விழாவை ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுதந்திரதினப் பவள விழாவை சிறப்புடன் நடத்தும் தலைமையாசிரியர் அவர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தையும் சுதந்திர ட்தின வாழ்த்துகளையும் தெருவித்துக் கொள்கிறேன். நமது நூற்றாண்டு ஆளுநர் பெருமகன் அரிமா குணராசா அவர்கள் தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு விடுதலைத் திருநாளுக்கு தம் பல்வேறு பணிகளுக்கிடையிலும் வருகைதந்து சென்றுள்ளார். தொண்டர் செம்மலை  நெஞ்சாரப் போற்ருகிறேன் தலைமையாரியப் பெருமாட்டிக்கு நான் ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன்.     

      தமிழக முதல்வர் நம் மாண்புமிகு முத்துவேலர் ஸ்டாலின் அவர்கள் எல்லா நிலையிலும் தமிழை முன்னிறுத்தி நடத்தி வருகிறார். தாங்கள் மாணவர்களுக்கு நிகழ்வுகளில் தமிழ் வழி நடத்த வேண்டும். உலக நாடுகள் எல்லம் சென்று வந்திருக்கிறேன் மலேசியாவில் 530 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன். தமிழை முன்னிலைப் படுத்துகிறார்கள். தாங்கள் வகுப்பில் ஆங்கில வகுப்பு எடுக்கிறீர்கள் அது தங்கள் பணி.  ஆனால் நிகழ்வில் தமிழில் நட்த்தி தமிழ்ழொழிக்க்க்கு முதண்மை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகள் போன்று ஆங்கில வெறி வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போதுகூட இசைத்தட்டில் இசைத்தீர்கள். மாணவர்களை பயிற்சி கொடுத்து பாடவைக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் மனதில் பதியும். அரசு விழாக்களில் பாடகர்களே பாடுகிறார்கள்.

         சமத்துவமான மதமாச்சரியரியற்ற நாம் எல்லாம் ஒருவர் என்ற எண்ணம் நம்மில் எழவேண்டும் சாதி மதம் நம்மை பிரிக்கக் கூடாது. நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் நம்முள் எழவேண்டும். இங்கே இருக்கும் பெருமக்களை காணும்போது சமத்துவத்தைக் காண்கிறேன்.பேரறிஞர் அண்ணா அவர்கள் அனைவரும் நாம் ஒரே தாய் வயிற்றில் பிறக்க இயலாது. ஆதாலால் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் என்றார். இங்கே மாணவர்கள் காந்தியாகவும் நேருவாகவும் பாரதியாகவும் நம் சுதந்திரத்திற்குப் போராட்ட்த்திற்குப் பாடுபட்டவர்களையெல்லாம்  நம் கண்முன் மாணவர்கள் நிறுத்தினீர்ர்கள். தலைவர் பெருமக்களையெல்லாம் எண்ணி எண்ணி வணங்குகிறேன். நம் தமிழ் நாட்டில் மதுரை மாநகருக்கு  வருகை தந்த காந்தி மகான் நம் விவசாயிகளின் உடைகளைக் கண்டு தன் கோட்சூட்டை மாற்றி அரை ஆடையை தம் ஆடையாக மாற்றி மக்களோடு மக்களாக வாழ்ந்து நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். அந்த சுதந்திரத் திருருநாளன்று வறிய மக்களை எண்ணி சமத்த்துவமாக வாழ வேண்டும் நம் கண்ணியமிக்க  தலைவர் காயிதே மில்லத் அவர்கள் நாடாளுமன்றதில் இந்தியாவின் இணைப்பு மொழி இந்தியா ஆங்கிலமா என்று வாதம் வந்துபோது நமக்கு ஆதரவாக முழங்கினார். அவர் தாடி தொப்பி எல்லாம் அணிந்திருந்த்தைக் கண்டு வட நாட்டார் இந்திக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று எண்ணியபோது இசுலாம் எங்கள் வழி அன்னைத்தமிழ் எங்கள் மொழி என முழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். 

        நான் இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் பயின்றேன். நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி முதன் முதலில் மேடையில் பேசினேன். இன்று உலகம் முழுமையும் பேசிவருகிறேன். இதே போன்று சிறப்பாகப் பேசிய மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் புகழ் பெறுவீர்கள். நம்மை பதப்படுத்தும் பட்டைதீட்டு இடம்தான் பள்ளிகள். அதன் கர்த்தாக்கள்தான் ஆசிரியப் பெருமக்க்கள். அருமை நண்பர் பசீர் அரகள் முகநூலில் தாம் கன்னியகுமரி ஆளூர் பகுதியில் இருப்பதைப் பதிவிட்டிருந்தார். நான் இன்று வரமாட்டார் என்று எண்ணினேன். மிகக் கடினப்பட்டு இரவோடு இரவாக சுதந்திர தின நிகழ்வுக்காக வந்துள்ளார். இந்தக் குழந்தைகள் மேல் உள்ள பற்றை உணரலாம். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த தொண்டாற்றும் பசிரை வாழ்த்துகிறேன். அருமை அண்ணன் அரிமா சேவியர் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் தொடர்ந்து இந்தச் சங்கப் பணிகளையும் தொண்டறப் பணிகளையும்சிறப்பாகச் செய்து வருகிறார். 

துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க 

இன்பம் பயக்கும் வினை. 

   என்ற குறளுக்கு ஒப்பாக தொண்டாற்றுகிறார் அருமை அண்ணன் சேவியர். 

தொடர்ந்து இந்தப் பள்ளிக்கு நாங்கள் தொண்டறச் சேவை தொடர்ந்து செய்த வருகிறோம்.  அருமை ஆசிரியப் பெருமக்களே மாணவர்களை சிறப்பாக உருவாக்குங்கள். தமிழ்ச் சிந்தனைகளை வழங்குங்கள் . வருங்காலத் தலைவர்களை உருவாக்குங்கள் என் இந்த் சுதந்திரத் திருநாளில் வேண்டுகொள் விடுத்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.                   

  (15 – 8-2022 அன்று சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சிப் பள்ளியில் விடுதலைத் திருநாளில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

  


Sunday, August 14, 2022

 ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள தென் ஆப்ப்ரிக்கா லெஸ் கவுண்டர் 

தமிழ்மாமணி வா.மு..சே.திருவள்ளுவர்

தென் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து தமிழகம் வருகை தந்த லெஸ்கவுண்டர் அவர்களை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நுல்கள் வழங்கி உரையாடினேன். அவருடைய முன்னோர் சேலம் மாவட்டத்திலிருந்து சென்ற பெருமக்கள். அவருடைய தந்தை சடையப்பகவுண்டர் தாயார் மாரியம்மாள். பெற்றோர்கள் நன்கு தமிழ் பேசுவார்கள். ஆனால் லெஸ் தமிழ் கொஞ்சம் பேசுகிறார். பட்டப் படிப்புவரை படித்து ஆசிரியராக தொடக்கத்தில் பணியாற்றி தம் வாழ்வைத் தொடங்குகிறார். இவருடைய பெற்றோர் பொது வாழ்வில் ஈடுபடுத்தி பல மக்கள் பணிகளைச் செய்யும் மாமனிதராக உள்ளார்.. இவர் வாழும் பகுதியில் மூன்று இலட்சம் இந்தியர்களும் அதில் தமிழர்கள் இரண்டுலட்சம் தமிழர்கள் என்றார். திருமதி சாவித்திரி அம்மையாரை மணந்து இரு மக்களைப்  பெற்றுள்ளார்.அணிதா படித்து இயன்முறை சிகிச்சை செய்கிறார். நிக்கி இசை வல்லுநராக உள்ளார். கவுண்டர் மிகச் சிறந்த பொதுநலத் தொண்டர். தமிழ்ப்பாடசாலையில் தமிழ் மக்கள் தமிழ் பயில்வாதற்கு ஆக்கப்பூர்வமான் பணி செய்கிறார்.மய்செரிஅன் பரெஅச்க) வைனவ ஆலயம் அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம் போன்ற திருக்கோயில் தொடர்ந்து திருப்பணி செய்து வருகிறார்.கவுண்டர் 

அவர்கள் கர்த்தா சுதந்திரக் கட்சியில் 19 ஆண்டுகாளக பங்கு பெற்று பல்வேறு பொறுப்புகளைப் பெற்று சிறப்பாகப் தொண்டறப் பணியாற்றியுள்ளார். தற்போது இந்தக் கட்சி பிரின்சு புத்தலெசி அரசர் பரம்பரையைச் சேர்ந்தவர் கட்சியின் தலைவராக உள்ளார். தற்போது எதிர்க் கட்சியாக செயல்படுகிறது. இந்தக் கட்சியி  சட்டமன்ற உறுப்பினராக 2002 முதல் இன்று வரை ஐந்து முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் எதிர்க் கட்சி என்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளதையும் குறிப்பிட்டார். 

அங்கு ஆளும் கட்சியாக ஆப்ரிக்கன் தேசிய காங்கிரஸ்  உள்ளது . பிரதமராக சிறி இராமா பொரெக் உள்ளதாக குறிப்பிட்டார். இருவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். இரவி பிள்ளை மாகிகவுண்டர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இரவி சென்னைக்கு பொருளாதார மாநாட்டிற்கு நிதி மந்திரியாக இருந்தார். தற்போது பொறுப்பில் இல்லை மாக்கி கவுண்டர் அமைச்சராக உள்ளார் என்று குறிப்பிட்டார். சீவரத்தினம் என்ற தமிழர் ரிச்சர்ட்ஸ் பேகுதியின் துணைமேயராக உள்ளார் என்று குறிப்பிட்டார். 

அவரோடு பிரேமிபா என்ற பெருமாட்டியும் வருகை தந்துள்ளார். அவர் தந்தையார் பெயர் வேல் ஆதிமூலம் மாணிக்கம் பிள்ளை எனக் குறிப்பிட்டார்.. அவர் தாயார் இலக்குமி. அவர் தந்தை சோகன்ஸ்பர்க் பகுதியில் அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது மக்கள் சாத்தின் சியோலியா. அம்மையார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதாக்க் குறிப்பிட்டார். 

செயல் திறன் மிக்க பெருமகன் பல தலைறைக்கு முன் தென் ஆப்ரிக்கா சென்று இன்று ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அவருடைய பேருழைப்பு வியப்பைத் தருகிறது. நான் தங்கள் நாட்டில் பெற்றோருக்குப் பின் ஏன் தமிழ் பேச இயலவில்லை எனக் குறிப்பிட்டேன். ஏன் நான் பேசுகிறேனே என ஒருசில வார்த்தைகள் பேசினார். தமிழ் பேச இயலாத்தற்கு நிறவெறிதான் எனக் குறிப்பிட்டார். அப்போது தமிழ் பள்ளிகளில் தமிழ் படிக்க இயலவில்லை என்றார். தற்போது மேல்நிலை வகுப்புவரை தமிழ் படிக்க வாய்ப்பு உள்ளது என்றார். 312 மாணவர்கள் தம் பகுதியில் தமிழ் படிப்பதாக பெருமையாகக் குறிப்பிட்டார்.


பாதகன் பொந்தில் மறைகிறான் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


சூழ்ந்து தொடர்ந்து தாக்குதல்

     சூழ்ச்சி துரோக எழுச்சியே 

ஆளுமை அறியா பாதாகன்

     அடாவடி கோடுமைத் தீயவன் 

ஊரின் உன்னத மக்களை 

     உரிமையாய்க் காக்காப் பேயவன் 

போரில் கொன்றான் தமிழரை 

     பொந்தில் மறைகிறான் அவலமாய்


மக்களைத் தூசியாய் எண்ணினான்  

     மமதைக் கொழுப்பால் தள்ளினான்

 திக்கெலாம் சொத்துகள் சேர்த்துளான்

     திருட்டு வழியில் ஏய்த்தனன் 

வக்கிலாக் குடும்பம் உயர்த்தினான் 

     வறுமை மக்களை எண்ணிலன் 

மீக்கெழும் புரட்சி இலங்கையில் 

      மின்னலாய் அவலம் அழித்ததே


அலறித் துடிக்கும் பாதகன் 

    அலைந்தே ஓடியே ஒளியுரான் 

தலைமுறை தாண்டியும் தன்னலம்

 தகர்த்து எரியும் மக்களே  

     மலைநிகர் சனநாயக மாண்புகள்

 மடையன் செயலால் மாயுதே 

     கொலைகள் கண்ட கயவனின் 

கொடுமை மாய்க்கும் நாளிதே


மேதகு த்லைவனை மாய்த்தனன் 

     மேன்மைப் புலிகள் சாய்த்தனன் 

தீதீலா பால்கன் கொன்றனன் 

     திண்ணிய தமிழரை அழித்தனன்  

வீதியில் தமிழர் பிணங்களை 

     வீசிய கயமையே மாய்ந்திடு 

ஓய்விலா தமிழரின் ஓலமே 

     ஒழிக்குதே இராச பக்க்சே(வினை)

Thursday, May 5, 2022

 


காலம் வெல்க ஞாலம் ஆள்க

தமிழ்மாமணி வா. மு. சே திருவள்ளுவர்


மிகுதியாய் மிக்கவை செய் யும் நலமே 

மீண்டெழ வழிசொல் மதிஅறி மாண்பே 

தகுதியாய் தக்கவை தந்திடும் அறமே 

தவித்திடும் உடல்நலம் விரைந்தே காப்பாய்

 விகுதியாய் விளைந்த அனைத்தும் வீனே 

விந்தையின் வீச்சாம் வித்தகன் விவேகம் 

பகுதியாய் வந்தவள் பழகிடும் அன்பில்

 பரிதியாய் அன்பை ஏற்றிடு துணையே 



உறுதியாய் உழைத்த உண்மைகள் எல்லாம்

   உளம்கொள் வஞ்சக உளரல் வினையோ 

கருவியாய் வாழ்க்கை காத்த ஈகம் 

கயமைச் சூழ்ச்சி சூழ்ந்த மோசம் 

உருவிலா இயற்கை மாட்சி எல்லாம் 

உன்னதத் தாங்கல் வியப்பின் வியப்பே 

பெருமழை போன்றே துன்பம் துடைக்க 

பொழிக பொழிக இன்பம் பொழிக  


கருணைக் காவலன் கள்ளமில் நேயம் 

கருதும் ஊழை வென்றே வாழ்க 

உரிமைக் காப்போர் உணர்ந்தே நோக்கும்

 உத்தம அறிஞன் உலகம் வெல்க 

அறிவும் செறிவும் ஆண்மைச் செறுக்கும் 

அகிலம் போற்ற உயர்வாய்த் தருக 

தெரியும் வழியில் தெளிந்த வாய்ப்பை 

 தேனின் மழையெனத் தருக தருக 


வழிவழிப் பரம்பரை காக்கும் மறவன்

  வல்லமை ஆற்றல் முனைந்து பெற்றான்

ஊழ்வினை சோகம் வந்த போதும் 

உணர்வுக் கோமகன் வாழ்க வாழ்க 

பேழைக் குருவின் பேற்றால் வந்தோன் 

பேணும் முறைமை முழுதும் உணர்ந்தோன் 

காலக் கதிரவன் எழுச்சி போன்றே

     காலம் வெல்க ஞாலம் ஆள்க

Tuesday, April 26, 2022

 வீறுகவியரசர் முடியரசனார் பாக்களில் தமிழ் உணர்வு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

பாரதி பாவேந்தர் வழி நமக்குக் கிடைத்த பெருங்கவிஞர் வீறு கவியரசர் முடியரசனார்.. வீறுகவியரசரின் நூற்றாண்டு மிகச் சிறப்பாக உலகெங்கும் கொண்டாடப் பட்டுவருகிறது. அவ்வேளையில் வீறுவகவியசரின் கவிதை குறித்த தொடர்நிகழ்வுகள் அறிஞர்களைக் கொண்டு நட்த்தப் பெறுவது சாலச் சிறந்தது. அதற்குத் துணைநிற்கும்வீறு கவியரசர் அவைக்களப் பெருமக்கள்  அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.குறிப்பாக அண்ணன் பாரிமுடியரசன் அவர்கள் தந்தையின் கவிதைகளை முழுமையாகத் தொகுத்து தமிழ்க்குடிக்கு தந்துள்ளார். பெருமகனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன். இன்று வீறுகவியரசரின் பாக்களில் தமிழ் உணர்வு எனும் தலைப்பில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்

 அன்னை மொழி பேசுதற்கு நாணு கின்ற 

தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் 

தென்படுமோ மொழியுணர்ச்சி ஆட்சி மன்றில்  

பாங்குடன் வீற்றிருக்குமொழி தமிழே என்று  

பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும் 

ஈங்கதற்கா என்செய்யப் போகின்றீர் நீர் 

இளைஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன்றும் (மு.க.ப.2) 


அன்று பாடிய பாடல் இன்றும் தமிழர்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. வீறுகவியரச்ரின் பாடலகளை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுசெல்வோமானால் இளைஞர்கள் மொழியுணர்ச்சி பெறுவர். தமிழ் உணர்ச்சி பெற வேண்டுமானால் தமிழை பயிற்றுமொழியாகப் படிக்கவேண்டும் என்ற கருத்தை தம் உணர்ச்சிப் பாவால் உணர்த்தியுள்ளார் வீறு கவியரசர்.அதற்கான விடையும் அவரே தருகிறார். 

தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும் 

தமிழ்கொன்று வாழ்கின்ற கயமை வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும் 

தடுமாறி ஓடிவிடும் எலிகள் வேண்டாம் 

தமிழ்காக்கப் போர்செய்ய சிங்கம் வேண்டும்

 தாளமிடும் ஓலமிடும் நரிகள் வேண்டாம் 

தமிழ் காக்கப் போர்செய்ய மானம் வேண்டும் 

தாளமுத்து நடராசன் துணிவு வேண்டும் (மு.க.ப.5)

 தமிழ் மொழி காக்க யார் யார் வேண்டும் யார் யார் வேண்டாம் என்று பட்டிய்லிடுகிறார். இறுதியில் தம் இன்னுயிறை தமிழுக்காக நீத்த ஈகவான் தாள்முத்து நடராசன் போன்ற துணிவாளர்கள் வேண்டும் வேண்டும் என முழக்கமிடுகிறார் வீறுகவியரசர். 

அரசியல் மன்றம் ஏற 

ஆண்டவன் திருமுன் நிற்க 

உரிமையோ சற்று மில்லேன் 

உணர்வொரு சிறிது மின்றி  

வருபவன் தனக்கே வாழ்வு 

வழங்கினர் என்றன் மக்கள் 

எரிஎனக் குமுற நெஞ்சம்  

ஏங்கினேன் என்றாள் அன்னை (மு.க.ப.12)

 தமிழ் அன்னையின் வடிவில் அன்னையின் ஏக்கத்தைப் பாடியுள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழர் தம் மொழியை எல்லா நிலைகளிலும் முன்னிறுத்த அவர் ஏக்கம் இக் கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது.

 தமிழை அரியணை ஏற்ற தி.மு.க அரசைப் பாராட்டி தமிழில் கலைச்சொற்களை உருவாக்கவேண்டும் துறைதுறைதோறும் துறைதோறும் தமிழ் செழிக்க தம் வாழ்நாளை ஒப்படைத்துள்ளார் வீறுகவியரசர். அரியணை ஏற்றி வைத்த

  அரசுக்கு நன்றி சொல்லித்

 திருமண நிகழ்ச்சி யாவும்

  தெளிதமிழ் கேட்கச் செய்வீர் 

இறைமுனும் தமிழே கேட்க 

இணைந்துநீர் தொண்டு செய்வீர்

 துறைதோறும் தமிழே காணின் 

தூய்தமிழ் ஆட்சி என்போம் (மு.க.ப.14)


 துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால் 

துடிக்கிறீர் கண்ணீர் வடிக்கிறீர் மேலும் 

மறைவாக சூழ்சிகள் செய்கிறீர் இந்நாள் 

மாதமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள் (மு.க.ப.19) 


வீறுகவியரசரின உடல் பொருள் ஆவி அனைத்தும் தமிழ் தமிழ் என்றே உள்ளதை கவிஞரின் கவிதையை படிப்போர் உணரலாம். நீ பாடுதெல்லாம் தமிழே பாடு எக் கூறுவது நம் உள்ளத்தை உருக வைக்கிறது.  

பாடுவ தென்றால் தமிழினில் பாடு 

பாவையே உளமகிழ் வோடு

வாடிடும் எம்மன வேதனை தீர்ந்திட 

வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப்  (மு.க.ப.20) 

கவிஞரின் இசைச் பாடல் தம் உணர்வை தமிழின் அழகை வேட்கையை உணர்த்துகிறது.


  வானொலியில்  இசையர்ங்கில் தமிழ்தான் உண்டா 

  வளங்கொழிக்கு நிழற்பட்ட்தின் பேச்சில் பாட்டில் 

தேனமிழத்த் தமிழுண்டா பழிக்க்க் கண்டோம்

  தெளிவின்றி ஒன்றிரண்டு தம்ழைச் சொல்லும் 

ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா 

எடுத்துரைப்பார்க்கு அத்துறையில் இடமே இல்லை 

கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக் 

காண்கின்றோம் ஒன்றிரண்டு தமிழ்ப் படங்கள்  (மு.க.ப.48)


  அன்றே தமிழ் நாட்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார் வீறு கவியரசர்.. ஈழத்தில் தமிழர்க்கு நடந்த கொடுமை கவிஞரின் மனதை கொதித்தெழச் செய்ததை  வீறுகவியரசரின் பாடல்களில் காணலாம். விடுதலைப் புலிகளை உச்சி மோந்து பாராட்டுகிறார். காக்க தமக்கு ஒரு படை இல்லையே என கொதித்தெழுகிறார். 


விடுதலைப் புலிக ளாகி 

வெந்துயர் குரிய ராகிக் 

கெடுதலை எதிர்த்து நின்றீர்

 கிளெர்ந்தெழும் நும்மைக் காக்க 

உடலினால் உதவி செய்ய 

ஒருபடை எமக்க்கிங் கில்லை 

தொடுமன வுணர்ச்சி யொன்றால் 

துணைவர் களாகி நிற்போம்  (மு.க.ப.77)


தென்னாட்டுக் கலைகள் எனௌம் கவியில் நம் கலை வண்ணங்களை கவிஓவியமாக்கியிருகிறார். சிற்பக்கலை, கட்டிடக் கலை, இசைக்கலை, நடனக்கலை, ஓவியக்கலை, நெய்தற்கலை, இலக்கியக்கலை, என தமிழர்தம் அனைத்துக் கலைகளையும் பட்டியலிடுகிறார். 

ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம் 

தோயும்படி வாழ்வை துய்ந்திருந்தான் அவ்வாழ்வு

 மீண்டும் தழைக்க வியனுலகம்  பாராட்ட 

வேண்டுமீ தென்றன் விழைவு  (மு.க.ப.83) 

 தந்தை பெரியாரின் கண்ணயராப் பணியை தம் கவியால் போற்றிப் புகழ்கிறார். 

பெரியாரை நினையாத தமிழன் இல்லை 

பேசாத புகழாத நாவும் இல்லை 

மரியாதை தமிழனுக்கு வாய்த்த தென்றால்

 மாமேதை பெரியாரின் தொண்டே  யன்றோ 

சரியதா அப்பெரியார் வாழ்நாள் எல்லாம் 

சலியாது தளராது முயலா விட்டால்

நரியாரின் சூழ்ச்சிக்குள் தமிழினத்தார்

 நசுக்குண்டு விழிபிதுங்கி அழிந்து தீர்வர்  (மு.க.ப.125) பேரறிஞர் அண்ணாபற்றி சென்னையி ல் பாடிய கவிதைகள் அண்ணா நம் கண்முன் நிற்பதுபோல் உணர்சிக் கவிதைகள்


 பெரியாரே எனக்கென்றும் தலைவ ராவார் 

பிறிதொருவர் தலைவரெனக் கொள்ளேன் என்றே 

அறிவாளன் நம்அண்ணன் உறுதி பூண்டான்  

அத்தலைவர் தமிழ்மொழியைப் பழித்த போதும் 

சரியான மறுப்புரைக்கத் தவற வில்லை 

தாய்மொழிக்குக் காவலந்தான் ஐயம் இல்லை 

விரிவான் உலகெங்கும் தமிழ் மணக்க

 விழைகின்றான் அதற்குரிய செயலும் செய்தான்  (மு.க.ப.133) இன்றும் மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் புகுத்துவற்கு வெளிப்படையாகவே மத்திய அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அப்போதே கவிஞர் பெருமகன் எழுதிய பாடல்கள் பதிலாக அமைகின்றன

 

இந்திமொழி பொதுமொழியா தகுதி என்ன 

இருக்கின்ற தம்மொழிக்கு குயில்கள் கூவும்

கொந்தவிழும் மல்ர்ச்சோலை தமிழர் நாடு  

 கோட்டானுக் கங்கென்ன வேலை என்று

 செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர் 

சீர்தூக்கி ந்ன்குண்ர்ந்து மறுத்து ரைத்தார் 

எந்தவழி இந்திமொழி வந்த போதும் 

ஏற்பதில்லை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்(மு.க.ப.163)

வீறு கவியரசரி பாக்கள் தமிழர் உணர்வுகளை தட்டி எழுப்பி தமிழுணர்வு பெறவைத்த பாக்கள். இன்றைய தலைமுறைக்கும் தேவைப்படுவதை உணராலாம். வாழ்க முடியரசனார் கவிதைகள் ஓங்குக அவர்தம் புகழ்.

(25-4-2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் நடத்திய  காணொளி விழாவில் வீறுகவியரசர் முடியரசனார் பாக்களில்

 தமிழ் உணர்வு எனும் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

Tuesday, April 19, 2022

 கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் பேராசிரியர் கு. மோகன்ராசு அவர்களுக்குப் பாராட்டுவிழா                         

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                        

 கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிவிருது பெற்ற குறள் ஞானி மோகன் ராசு அவர்களை அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் பாராட்டுவது சாலப்போறுத்தம் கடந்த 50 ஆண்டுகளாக அவரை வாழ்த்தி வழிகாட்டிய பெருமகன். தந்தையார் அவர்களும் மோகன் ராசு அவர்களும் பேராசியர் ந. சஞ்சீவியை பேராசானாகப் பெற்ற பெருமைக்குரியவர்கள். நான் பேராசான் சஞ்சீவி அவர்களைக் பலமுறை பல்கலைக் கழகத்தில் கண்டு வியந்திருக்கிறேன். ஐயா சஞ்சீவி அவர்களுக்கு முகம் முழுமையும் தாடி சடை பிண்ணிக் கொண்டிருக்கும் இப்போது மோகன் ராசு அவர்கள் அதைத் தொடர்கிறார்கள். ஐயா பெருங்கவிக்கோவின் தாய்மண் நூலிற்கு நான் அணிந்துரை வாங்கச் சென்றபோது காவியக் கதையை கூறக் கூறினார. பல்கலைக்கழகத்தின் முன் உள்ள கடற்கரையில் நடந்துகொண்டே கதையைக் கேட்டார். அணிந்துரையிலும் மகன் சொல்ல தந்தையின் காப்பியக் கதையைக் கேட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அறிஞர்களை கவிஞர்களை உருவாக்கிய பெருமகன் பேராசான் ந. சஞ்சீவி. அவரின் வழித் தோன்றல்கள்தான் உலகை ஆளும் பெருங்கவிக்கோவும் திருக்குறள் ஞானி விருதாளர் மோகன் ராசுவும். வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் செவாலியர் டாக்டர் சந்தோசம், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத் தலைவர் சேயோன் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை கால்டுவெல் வேள்நம்பி போன்றோரின் உலகளாவிய வாழ்த்து சிறந்த வாழ்த்து. இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணித்த அமெரிக்க சாக்கரமெண்டோவில் வாழும் எங்கள்து நெடு நாளைய நண்பர் மருத்துவமாமணி செல்வி முருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த அவையில் பாராட்ட குழுமியிருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.  

குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் திருக்குறளை வாழ்வியல் முறையாக மாற்றிய பெருமைக்குரியவர் மார்கழித்திருநாளில் திருவள்ளுவர் சிலையை ஏந்தி திருகுறள் பாடி தொண்டர்களை தெருவெல்லாம் வலம் வர வைத்துக் கொண்டிருப்பவர்.

 திருவள்ளுவப் பெருமானை உலகப் பெரும் அறிஞர்களோடு ஒப்பிட்டு வள்ளுவர் கோட்ட்த்தில்  நிகழ்வுகளிலும் பல மாநாடுகளிலும் அறிஞர்கள்  உரையாற்றவைத்து வள்ளுவம் ஓங்கி நிற்பதை உலகிற்கு உணர்த்தியவர்.

 திருகுறளுக்கு தொண்டு செய்த சான்றோர்களை காலங்களாகப் பிரித்து அவர்களின் தொண்டுகளை மனமாச்சரியமின்றி திருக்குறள் தூதர்களை ஆய்வு செய்யப் பணித்து பேசவைத்து நூலாக ஆக்கியுள்ளார் சாதனைச் சிகரம் 

நமது குறள்ஞானி அவர்கள். தன் மனைவியை காதல் மணமுடித்து அதனால் ஏற்பட்ட துன்பத்தையெல்லாம் ஏற்று தம் மனைவியையும் திருக்குறள் சாதனையாளராக உருவாக்கிய பெருமகன் ஐயா மோகன் ராசு அவர்கள்..  

காணக் கிடைக்கா மாபெரும் தலைவர் யாரும் சிந்திக்க முடியாத கலைஞர் விருதை உருவாக்கிச் சென்றுள்ளார், அந்த விருது மோகன் ராசு அவர்களுக்கு தகுதியான விருது. வாழ்க விருதாளர் ஓங்குக கலைஞரின் புகழ். 

(17-4 2022 அன்றுகலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் பேராசிரியர் கு. மோகன்ராசு அவர்களுக்கு நடந்த காணொளிப் பாராட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)



 பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் நூல்கள் வெளியீட்டு விழா

ழாபேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் 25-3-2022 அன்று பாம்குரோவ் உணவகத்தின் சிறப்புடன் நடைபெற்றது. தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்றினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை ஏற்றார். மொழிப்போர் புரட்சியும் தமிழ்க்கவிதையும் , செங்கல்வராய முதலியாரின் செய்யுளும் வசனமும் நூல்களை தமிழக அரசின் தலைமைக் கொரடா முனைவர் கோவி. செழியன் வெளியிட மருத்துவர் இராச்குமார் சங்கரன் தொழிலதிபர் நவநிதகிருட்டிணன் முதல் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். பேராசியப் பெருமக்கள் இராம குருநாதன் ப. மகாலிங்கம், முகிலை இராசபாண்டியன் மற்றும் சான்றோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் விமலா ஆண்டவர் நன்றியுரை வழங்கினார். 


Wednesday, April 13, 2022

 

 

போரினை விடுத்து நன்றாய்   பொழிவுடன் மகிழ்வே வருக!

 

 

கூடியே வாழ்ந்த மக்கள்

குழுவாய் நாடாய்ப் பிரிந்தார்

நாடிய நாடுகள் நாடி

நலமிலா கொள்கை கொண்டார் 

தேடிய வளமை செல்வம்

தெறித்ததே குண்டு மழையால் வாடிடும் அவலம் இன்றோ

 வளமிகு உக்ரேன் மண்ணில்!

 

நெட்டோ படைகள் ஊட்டம்

 நேரெதிர் காக்கா வேடம்

கொட்டும் பிரங்கி சண்டை

கொடுமையாய் மாய்வது முறையா மொட்டும் மலராம் குழந்தை

மடிந்திடும் உறவின் உறவால்

கிட்டும்   நலமேநைந்து                       கிடந்திடும் குவலயம் எங்கும்!

 

இரசியா புட்டின் தாமும்

இரக்க உணர்வே இன்றி

உரக்க உலகே மொழிந்தும்                                               உன்னத மக்கள் வெறுத்தும்

அரக்க மனமாய் போரில்

அடக்க அறியா மடமை

வெறுக்கும் மனித மாண்பை

வெடித்ததே உலகம் எங்கும்!

 

கூட்டாய் வாழ்ந்த செலன்சுகி                                  கூட்டில் பிரிந்தே சென்றார்

    நாட்டிய பழமை மறந்தே

நயத்தகு நுட்பம் இன்றி

ஓட்டிய மக்கள் எல்லாம்

   உலகெலாம் அகதி வாழ்வு

போட்டியை விடுத்து நன்றாய்                                   பொழிவுடன் மகிழ்வே வருக!

Tuesday, April 12, 2022

அரிமா இயக்கத்தில்    விஞ்சி நிறபது தொண்டா  தோழைமையா பட்டிமன்றம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

அரிமா மாவட்டத்தின் தமிழ் ஆளுமை மிக்க ஆளுநர் பெருமகன் இன்பத் தமிழை செல்லும் இடமெல்லாம் அன்று முதல் இன்று வரை தடம் மாறாமல் ஒலிக்கும் மாசிலா மாணிக்கம் அவர்களே துணை நிலை ஆளுநர்களே ஒரு தமிழ் விழாவை அரிமா நண்பர்களைக் கொண்டே நடத்த ஆளுமையான செயல்திறன் படைத்த அரிமா சுரேசு பாபு அவர்களே பட்டிமன்ற நடுவர் அடக்கத்தின் சிகரம் நம் அரிமா சட்டக் கையேட்டை செந்தம்ழில் வழங்கிய மூத்த வழக்கறிஞர் அரிமா சம்பத் அவர்களே  தொண்டே எனும் தலைப்பிலும் தோழமையே எனும் தலைப்பிலும்  வாதிட வரும் என் அருமை அரிமா நண்பர்களே  வாழ்நாளில் கிடைத்டற்கரிய செல்வமாக நான் என் எண்ணும் அரிமா தோழமைகளே அவர்தம் வாழ்க்கைத்துணைநலங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா இயக்கத்தில் தொண்டும் தோழமையும் இணைந்து செல்லும் ஆளுமைகள். இதில் விஞ்சி நிறபது எது என்றால் தோழைமையே.                                                    

நான் பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியுள்ளேன் இதைக் கண்ட என் நண்பர் அரிமா பசீர் அகமது அனைத்துத் தோழமைகளும் தாங்கள் காணவேண்டும் என்னை இந்த இயக்கத்தில் அறிமுகப் படுத்தினார்  இயக்கத்தில் வெள்ளிவிழாக் காண உள்ளேன். இதில் மதம் மொழி சாதி அனைத்தையும் தோழமையின் ஒருருவாக இந்த அரிமா இயக்கத்தைக் காண்கிறேன்.

 நம் மாவட்ட்த்தில் தேர்தல் எந்த அளவுக்கு உச்சமாகவும் வேகமாகவும் நடக்கும் என்பது நமக்குத் தெரியும். அதில் வென்றவர் உடனே தோற்றவருக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறுகிறார் என்றார் இங்கே எது விஞ்சி நிற்கிறது தோழமைதானே தோழர்களே..

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்          பண்புடை யாளர் தொடர்பு  (783)  

படிக்கப் படிக்கப் இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.. 

தொழமையின் சிறந்த விழா நம் சித்திரைத் திருவிழா. மதுரை மாநாகரில் எழுச்சிக்கோலமாக அனைத்து மக்களும் வேறு[பாடின்றி சித்திரைத் திருவிழாவை கொண்டாடுவர் மதுரை மாநகரில் நடைபெறும் திருவிழாவை இன்று நாம் சென்னையில் தியாக ராயர்  அரங்கில் நடத்துகிறோம்.மதுரை அருகில் உள்ள  கிராம மக்களெல்லாம நடத்தும் அருமை தோழமைகளின் திருவிழாதன் சித்திரைத் திருவிழா.                                            இன்று அறிஞர் வாசிக்கலாநிதி கி.வ.சா. அவர்களின் பிறந்தாநாள் அவர் பிறந்த நன்நாளில் அரிமா தமிழ்த் திருவிழா நடப்பது மகிழ்சிக்குரிய ஒன்றாகும். ஒருமுறை கி. வ. ச. அவர்களை பலசரக்குக் கடைக்காரர் சந்தித்தார். தாம் ஒரு கடை திறப்பதாகவும் அந்தக் கடையில் கடவுள் படம் வைக்கப் போவதாகவும் விநாய்கர் முருகன் இலக்குமி எந்தப் படம் வைக்கலாம் எனக் கேட்டார். உடனே கிவசா அவர்கள் எந்தப்படம் வேண்டுமானலும் வைக்கலாம் ஆனால் கலப்படம் மட்டும் வைக்காதீர்கள் என சிலேடை நயத்தோடு  கூறும் ஆற்றல் பெற்ற அறிஞர் பெருமகன் திருநாள்.                                         அரிமா நண்பர்களின் தோழமைக்கு ஒரு சான்று கூறுகிறேன் நான் நேற்று ஆதம்பாக்கம் அமரர் இராமலிங்கனார் நிகழ்வுக்கு பார்வையாளராகச் சென்றேன். அங்கு நம் அரிமா மகாலிங்கம் நெறியாளராக நிகழ்ச்சி நட்த்தினார். அமர்ந்திருந்த என்னை உரையாற்றுவார் என அழைத்தார் நான் வருவதும் அவருக்குத் தெரியாது ஆனால் அந்த்த் தோழமை உணர்வு பேரறிஞர்கள்  மத்தியில் அழைத்தார் என்றால் தோழமையின் சிறப்பு அல்லவா.               .                                                  ஒரு மருத்துவமனையில் என் ம்கன் மருத்துப் பணிக்காக நான் மருத்துவ மனையில் இருந்தேன். அதுபோது திருவள்ளுவர் என்ற குரல் என்னை அழைத்த்து சென்று பார்த்தேன் நான் பெரிதும் போற்றக்கூடிய அரிமாப் பெருமாட்டி. தைரியமாக செல்லுங்கள் நீங்கள் நலமோடு திரும்புவீர்கள் என வாழ்த்தி அனுப்பினேன், நல்மோடு திரும்பினார் இன்னும் நுறாண்டுகள் நலமாக வாழ்வார். இந்த உணர்வுதோழமையின் உணர்வல்லவா.

 இங்கே அமர்ந்திருக்கும் அரிமா இலக்குமி சங்கர் சங்கர் அவர்களின் தோழமை உணர்வு இல்லாமல் நம்மோடு பயணிக்க முடியுமா. சிறந்த பணியாற்றும் அரிமா பத்மாவின் கணவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் அவர்து தோழாமைதான் தொண்டுக்கு ஆதாரம். நம் அரிமா நங்கையர்களெல்லம் சிறப்பாக ஆடினார்கள் அவர்கள் ஆட்டம் எலோரையும் மகிழ்வித்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதன வழிப்படுத்திய அரிமா பாவனா கூறினார்கள் தோழ்மையால்தான் இச் செயல் முடிந்த்து என்று. உண்மை நண்பர்களே தோழமையால்தான் எதையும் சாதிக்க முடியும்.

  எந்தத் தொண்டும் தோழமையின் வலிமையில்லாமல் தொண்டு சிறக்காது. அரிமா நண்பர்கள் பலரது நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திவிட்டுக் கூறுவார்கள் இது என்னால் அல்ல என் குழுவைச் சேர்ந்த நண்பர்களால்தான் என்று. உண்மை நண்பர்களே தோழமைதான் எந்த்த் தொண்டுக்கும் அச்சானி. 

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு    அரும்பொருள் யாதொன்றும் இல் (462)  

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றவேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்து செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. 

நேற்று நம் இப்தார் நோண்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் மத வேறுபாடின்றி அரிமா நண்பர்கள் அனைவும் தோப்பி போட்டுக்கொண்டு வணங்கிய நிகழ்வு தோழமையின் சிகரமல்லவா.  அருமைத் தோழர்களே . அரிமா இயக்கத்தில் விஞ்சி நிற்பது தோழமையே தோழமையே எனக்கூறி நிறைவு செய்கிறேன்.

(11 – 4- 2022 அன்று அரிமா இயக்கத்தில்    விஞ்சி நிறபது தொண்டா  தோழைமையா பட்டிமன்றத்தின்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை))


Sunday, April 10, 2022

 பார் போற்றும் பாலா 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி



 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்


பேராசிரியர் பாலசுப்பிரமணியம் மிகச் சிறந்த பண்பாளர். உன்னத மனித நேயர், ஆய்ந்தறிந்த கல்வியாளர் சுற்றம் தாங்குவதில் அருட்தந்தை உலகம் சுற்றிய தமிழ்ப் பறவை

பாலா அவர்களை எம் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவை  அண்ணே என்று அழைப்பதும் அவர் மீண்டும் தந்தையை மறுஒலியாக அண்ணே என்று அழைப்பதும் 45 வருடகால ஒலி இன்று அடங்கி ஒராண்டாவதை எண்ணி கண் கலங்குகிறேன். அறிஞர் பாலா அவர்களை நான் தந்தை என்றும் அவர்தம் அன்புத் துணைவியார் சரசுவதி அம்மையாரை அம்மா என்று அழைப்பதும் எங்கள் உறவு முறை.

தந்தை பாலா அவர்கள் நான் மலேசியா சென்றுவிட்டால் ஈப்போ பேருந்து நிலையத்திலிருந்து அவரது பென்சு ஊர்தியில் அழைத்துச் சென்று இல்லத்தில் தங்கவைத்து இன்னமுது தந்து உலகளாவிய பயணங்கள் தமிழக நிலைகள் தம் இளமைக்கால தமிழக அனுபவங்கள் பற்றி எல்லாம் நயம்படப் பேசிப் மகிழ்விப்பார். பாலா அவர்கள் ஒர் நகைச்சுவை நாவலர்.

மலேசிய அரசியல் தலைவர்கள்,பெரும் பேராசிரியர்கள், தொழிலதிபர்கள் இன வேற்றுபாடின்றி மலாய் சீனப் பெருமக்களிடம் பேரன்பைப் பெற்றவர். அவரோடு பல நிகழ்வுகள் மலேசிய மண்ணில் சென்று மகிழ்ந்துள்ளேன். பொன்விழாக் காணும் தமிழ்ப்பணி இதழுக்கு மலேசியாவில் ஒரு உறுப்பிணர் குழாத்தையே உருவாக்கிய பெருமகன் நம் பேராசிரியர் பாலா.


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தபோது தலைவராகப் பொறுபேற்று தமிழக உலகப் பெருமக்களை சிறப்பாக வரவேற்று மாநட்டை சிறப்பாக நடத்தி எனக்கு செந்தமிழ்த் தொண்டின் சிகரம் எனப் பட்டம் வழங்கிய பெருமகன்.

ஈப்போ கிளப்பில் உள்ள கொல்ஃப் திடலுக்கு அழைத்துச் சென்று எனக்கு கொல்ஃப் விளையாடக் கற்றுக் கொடுப்பார். பலமுறை அவரோடு சென்று விளையாடி இருக்கிறேன். அதே கிளப்பில் அவர் மாண்டார் என்ற செய்தி எம் நெஞ்சை விட்டு அகலவில்லை.

மறைந்து ஓராண்டு ஆனாலும் அறிஞர் பாலா அவர்கள் உலகத் தமிழர்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்துள்ளார். தன்னமற்ற தூய நெஞ்சர் பாலாவின் புகழ் ஓங்குக


Thursday, March 24, 2022


கனடா உதயனின் பகிர்வோம் பாராட்டுவோம் வெள்ளிவிழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                       

  இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்  


                                          

 உதயன் ஆசிரியர் நட்பின் நாயகர் லோகேந்திரலிங்கம் அவர்கள் கோரனா தீநுண்மி காலத்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கு வருகை தந்துள்ளார்கள். நானும் தம்பி உதயன் இந்தியப் பிரதிதி பிரகாசு அவர்களும் வானூர்தி நிலையம் சென்று அவரை வரவேற்று மகிழ்ந்தோம். தமிழகத்திலிருந்து செல்லும் அறிஞர் பெருமக்களை வரவேற்று தம் இதழில் வெளியிட்டு சிறப்பிக்கும் பேருள்ளத்திற்கு சொந்தக்காரர். உலகில் எத்தனையோ தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன. கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் வார இதழிற்கு என்றும் சிறப்புண்டு. உலகளாவிய தமிழர்களுக்கு விருது வழங்கும் பெருமை உடைய இதழ். கனடிய அரசிடம் சான்றிதழ்கள் பெற்று அந்த நிகழ்வில் வழங்குவது உதயனின் தனிச்சிறப்பு. நானே கனடாவில் அவர் சான்றிதழ் பெற படும் பாட்டை நேரில் கண்டிருக்கிறேன்.

  உதயன் இதழின் வெள்ளிவிழா ஆண்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டு கனடாவில் மிகச் சிறப்பாக நடத்தினார். சென்னையிலும் பங்களித்த பெருமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறபித்து நம்மோடு மகிழவே இந்த நிகழ்வை பகிர்வோர் பாராட்டுவோம் என இந்த ஐந்து நட்சத்திர விடுதியில்நடத்துகிறார். மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த பிரகாசு அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். 

ஒரு சிறந்த பெண்மணியாகவும் குடும்பத்தலைவியாகவும், ஆண்மீக ஒருங்கிணைப்பாளராகவும், சமுகச் சிந்தனையுடையவராகவும் விளங்கும் லோகன் அவர்களின் துணைவியார் பத்மா லோசினி அவர்கள் வருகை தந்துள்ளார்கள். மகளிர் தினத்தன்று அருமை அம்மையார் அவர்களுக்கு நந்தவனம் இதழின் சார்பாக விருது வழங்கினார்கள். மிகத் தகுதியான் பெருமாட்டிக்கு விருது வழங்கியுள்ளீரகள். தம் குடும்பம் தன் கணவர் குடும்பம் தமிழ் உறவுக் குடும்பம் என அனைவருக்கும் அன்னையாக விளங்கும் பத்ம லோசினி அம்மையாருக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உதயன் லோகன் அவர்கள் நன்றியின் இலக்கணம் இன்று சென்னையில் தனக்கு தன் இதழிற்கு உதவியாக இருக்கும் பெருமக்களை நன்றியுணர்ச்சியோடு பாராட்டியுள்ளார்கள். பாராட்டும் போது அனைவருக்கும் பரிசுப் பொதி ஒன்றை வழங்கியுள்ளார்கள். அந்தப் பரிசைப் பொதி தானே தயார் செய்து இங்கு வழங்கியுள்ளார்கள். அவர் வழங்கியுள்ள கோப்பையில் உதயன் நண்பன் ரூபம் என்ற மூன்று பெயர்களும் பொறிக்கப்பட்டு அழகு ஒளிர மிளிர்கிறது.. இந்த நிகழ்விற்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் உலகமெலாம் தமிழர்கள் தம் மதுரா பயண ஏற்பாட்டகம் சார்பில் ஒருங்கிணைக்கும் வி.கே.டி பாலன் அவர்களும் வருகை தந்துள்ளாது இந் நிகழ்வுக்குப் பெருஞ்சிறப்பு.. நட்பின் நாயகரின் அரும்பணிதொடரவும் உதயன் இதழ் நூற்றாண்டு காணவும் வாழ்த்தி இந்தக்  கவிதையை வழங்கி மகிழ்கிறேன். 

வெள்ளிவிழாக் காணும் எங்கள் 

வித்தான உதயன் மாட்சி

கிள்ளைமுதல் முதியோர் காணும் 

கிளர்ந்தெழும் எழுத்தின் ஆட்சி  

வல்லமையார் உழைப்புச் செம்மல் 

வழங்கிடும் தமிழின் காட்சி  

எல்லையிலா சோதனை மீண்டே 

ஏற்றநம் உதயன் வாழ்க !


நட்பிற்கே நாயகன் இவரே 

நலமோங்கும் காவலர் லோகன் 

திட்டமிடும் தெளிந்த நோக்கால் 

திகழ்புகழ் உதயன் வென்றார் 

மட்டிலா எழுச்சி பொங்க 

மனம்மகிழ் கனடா காண்பார் 

விட்டிலாய் ஊர்தி பறந்தே 

வினைத்திட்ப லோகன் வாழ்க!! 


கற்றமேல் சான்றோர் சூழ்ந்தே 

கவிவானம் போன்றே செல்வார்

நற்றவம்சேர் தொண்டர் தம்மை 

நனிபுகழும் உதயன் காட்சி 

பெற்றிநல் கூட்டம் சேவை 

பெருமைசேர் நாயகன் லோகன் 

சுற்றமென உலகம் காணும் 

சூழ்புகழ் உதயன் வாழ்க!!!  


உலகெலாம் தமிழர் கண்டு 

உன்னதமாம் உதயன் விழாவில் 

வளம்காணும் விருதைத் தந்தே 

வண்டமிழைக் காக்கும் லோகன்  

களம்பல கண்டோர் தம்மை 

கவினார்ந்த உதயன் காட்டும் 

நலமெலாம் உருவாய் பத்மா 

நயத்தகு இணையர் வாழ்க !!!!

Wednesday, March 23, 2022

 குமரி சென்னை ஊர்திப் பயண நிறைவுவிழா                                                                                  தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்,                                                                ஆசிரியர் தமிழ்ப்பணி                                                                                                          இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்      




                                     

     எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தோடு உலகத் தாய்மொழிநாள் தமிழ் இந்திய ஆட்சிமொழி திருக்குறள் தேசிய நூல் ஆகிய நோக்கங்களுக்கு குமரி முதல் சென்னை வரை 1993 ஆம் ஆண்டு நடைப்பயணமாகத் தொடங்கி தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஊர்திப்பயணமாக வரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கொ அவர்களை இவ்வாண்டு வரவேற்று நிறைவு விழாவைக் நடத்தும் பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.                                          

          தலைநகர்த் தமிழ்சங்கத்தின் கட்டிடத்தில் நடை பெறுவது சாலச் சிறந்தது. அரங்கில் தமிழ் அறிஞர்களின் திரு உருவங்களாக உள்ளன. அரும்பாடுபட்டு உருவாக்கிய சுந்தரராசன் அவர்களையும் அவரோடு துணைநின்ற பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். கன்னியாகுமரியில் அண்ணல் காந்தி மண்டபம் முன் ஐயன் திருவள்ளுவர் அருட்பார்வையோடு 12\2 ல் தொடங்கிய பயணம் தமிழகம் முழுமையும் முழக்கமிட்டு கூட்டங்கள் நடத்தி உலகத் தாய்மொழி நாளான இன்று 21\2ல் தலைநகர்த் தமிழ்சங்கத்தில் உள்ள ஐயன் திருவளுவர் சிலைமுன் நிறைவுற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டம நகரம் பேரூர் சிற்றூர் அனைத்து இடங்களிலும் நிகழ்வுகள் நடத்தி ஆதரவு நல்கிய தமிழ் அமைப்புகளுக்கும் அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.               எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ இங்கே வருகை தந்துள்ளார்கள் அவருடைய அளப்பரிய தொண்டு உரை தமிழர்களை நெஞ்சு நிமிரச் செய்யும். அவர் இன்று ஒரு கோட்டம் அமைத்து அங்கு அவரை நாடி தமிழர்கள் தமிழர் வரலாறு அறிய வேண்டும். போலிச் சாமியார்கள்தான் நாட்டில் பெரும் சாதனையளர்களாக உள்ளது தமிழகத்தின் சாபக்கேடு.                              

         மண்பாண்ட தொழிலாளர்களின் தலைவர் மேனாள் மாநகராட்சி உறுப்பினர் ஐயா சேம நாராயணன் அவர்கள் ஐயாவை வாழ்த்த வருகை தந்துள்ளார்கள். ஐயா  அவர்களின்  வீட்டின் முன் மண்பாண்டங்கள் குவிந்து இருக்கும் தனக்கும் மண்பாண்டங்கள் செய்யத் தெரியும் நான் செய்துள்ளேன என்பதை வரவேற்கிறேன்..  இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் அண்மையில் கடைசிவிவசாயி என்ற படம் பார்த்தேன் அந்தப் படத்தில்  நடிகர் விசய் சேதுபதி எடுத்துள்ளார் அவர் சிறிய வேடத்தில் வந்து விவசாயியை முன்னிறுத்துகிறார். பறை இசைக் கலைஞர்கள் மண்பாண்ட குயவர்கள் எந்திலையில் உள்ளனர். அவர்கள் ஒற்றுமையாய் இருந்தால்தான் நாடு செழிக்கும் தழைக்கும். இல்லையேனறால் அனைவரும் கடைசித்  தலைமுறைதான் என்பதை உணர்த்துகிறார்..                    

               தமிழ் தமிழர் சிந்தனைகளுக்காக தம் வாழ்நாளையே ஒப்புவித்த தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு நடைப்பயணமாக தமிழ் அறிஞர்களோடு வந்து இன்று 30 ஆண்டுளாக ஊர்திப்பயணமாக வந்துள்ளோம்  இந்த உணர்வுகளுக்கும் கடைசி மாமனிதராக உள்ளார். தமிழர்களாகிய நாம் நம்மில் உள்ள வேறு[பாடுகளைக் களைந்து ஒற்றுமையோடு நாம் நம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திருக்குறள் தேசிய நூல் சாதனையை நிகழ்த்துவோம்.. அறிஞர் பெருமக்கள் பலர் தங்கள் அமைப்புகளின் சார்பில் பங்கேற்றுள்ளீரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்                     

  .( 21-2-2022 அன்று குமரி சென்னை ஊர்திப்பயண நிறைவு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

 திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அந்தாதி 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர் தமிழ்ப்பணி 

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் 

     

      மதரை மாநகரின் அடையாளமாக விளங்கிய திருக்குறட்செம்மல் மணிமொழியனாரின் அந்தாதி அவர் வாழும் காலத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ பாடி தமிழ்ப்பணியில் வெளியாக்கி இன்று நூலாக வெளிவருவது காலத்தின் கொடையாகும் 


      உலகம் முழுமையும் தமிழால்அளந்த பெருங்கவிக்கோ இந்த தமிழ்க்குடிக்கு அடையாளப்படுத்திய  சான்றோர்கள் ஏராளம் அவருள் நம் திருக்குறட்செம்மல் மணிமொழியானார் தலையானவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி எண்ணற்ற பெருமக்களை அவரது கல்லூரி விடுதியில் பாராட்டி சிறப்பித்த புரவலர் பெருமகன். முத்தாய்ப்பாக பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டை 4 நாட்கள் தந்தையார் பெருங்கவிக்கோவின் வேண்டுகோளுக்கிணங்க தலைமையேற்று உலகமே வியக்கும் வண்ணம் வெள்ளிவிழா மாநாட்டை நடத்திய தமிழ்செம்மல்.மாநாடு நடத்தியதோடு மட்டுமல்லாமல்  நிலையான கல்வெட்டாகத் தம் விடுதியின் திருவள்ளுவர் அரங்க வாயிலில் பொறித்து வைத்த பெருமகன் நம் அந்தாதி நாயகன். 

 நம் அந்தாதி நாயகரை அறிமுகப் படுத்தும் நம் உலக மாக்கவி 

ஓங்குவகை வாழ்வில் ஒளிமல்கும் செய்வினைகள் 

தாங்கு தமிழ்குடி தான்பிறந்தே – வீங்குவளம் 

செல்வம்நல் செல்வாக்கு சீரார் மனிதநேயம்              

   நல்ல மணிமொழி யன். (1)

இந்த நான்கு வரிகளுக்குள்ளேயே மணிமொழியானாரின் பிறப்பு வாழ்வு சிறபைப் பதிவு செய்துள்ளார். விடுதிகள் பலர் வைத்துள்ளனர் ஆனால் நம் மணிமொழியானாரின் விடுதியில் தங்காத சான்றோர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் காக்கும் கொடை நெஞ்சராகத் திகழ்ந்தவர் நம் அந்தாதி நாயகர். 

ஐயா அவர்களின் துணைவியார் அன்னை கமலா அம்மா அவர்கள் பற்றி எழுதிய அந்த்தாதி அவர்தம் பெருமையை செப்புகிறது. 

வீணையின் நாதமோ மெல்லிசை கீதமோ 

பூணும் அணிஅழகோ பொன்னோ - மாணும்நல்       

 ஓவியமோ காவியமோ உள்ளொளிக் காந்தமோ 

தேவிக மலாவின் திரு  (54) 


திருமகளோ கொஞ்சும் அருமகளோ பாசக் 

கருமகளோ காமகளோ காதல்  - தருமகளோ 

தேவி கமலா செம்மை மணிமொழியன் 

ஆவி கலந்த அகம் (55)  


தம் துணைவரையே எண்ணி வாழும் அருமைப் பெருமாட்டி செல்வச் சீமாட்டி அன்னை கமலா அம்மையாரின் சிறப்பு இந்தப் பாக்கள் மெய்ப்பிக்கிறது. கமலா அம்மையாரும் ஐயாவும் இணைந்து  தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எம் மதுரை பொற்பரி இல்லத்தைத் திறந்த்து என் கண்முன் நிற்கிறது.

அய்யாவின் மருகர் கல்விக்கோ கணேசன் அவர்களின் தந்தையார் சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றிய பாடல் கல்விக் குடிச் சிறப்பைப் பறைசாற்றுகிறது

 பண்பாடு மிக்கார் பலகல்வி யாளர்க்கோ 

சண்முகம் சுந்தரம் தக்கமுறை – புண்ணியர் 

போற்று கண்பதியர் பொந்தேவி தந்த மாமா  

ஏற்று சம்பந்தத்தின் இயல்  ( 23 )

தமிகத்தில் கல்விக்கொடை நெஞ்சராக வாழும் குடும்பத்தைப் பற்றிய பதிவு நம் நெஞ்சைத் தொடுகிறது.

திருக்குறட் செம்மல் மணிமொழியார் அவர்களின் உரையாடும் போது வள்ளுவப் பேராசானின் குறள்கள் மடை திறந்த வெள்ளம்போல் வெளிவரும். நாம் எந்தப் பொருள்பற்றிப் பேசுகிறோம் அந்தப் பொருளிற்கான் குறளைத் தருவார். திருகுறட்செம்மல் ஒரு கவகனகராகவே வலம் வந்தார். 

தெளிவாய்த் திருக்குறள் நூற்றுமுப் பத்தின் 

அளிமூன்றோ டேதான் அகத்தில் – ஒளிபதித்த 

சான்றோர் மயக்கும்  தடைநீக்கும் வேளாளன்  

வான்போல் வளந்த வகுப்பு   (75)

வகுத்தான் வகுத்த வகையல்லால்  கோடி 

தொகுத்தார்க்கும் துய்ப்பது அரிதாம் – பகுத்துச்சொல் 

வள்ளுவன் தேர்ந்த வழிகற்றே அவ்வழியின்

 வெள்ளம்போல் சொல்லும் விடை  ( 76 )

மதுரை மாநகரின் குறளாசானாக மணிமொழியார் திகழ்ந்த்தை இப்பாடல் படிப்போர் உணரலாம்.

அன்பே உருவான் ஐயா அவர்களின் சிரிப்பு . காட்சிக்கு எளியாராக எல்லோரையும் அரவணைக்கும் பேருள்ளம் நம் மணிமொழியாரின் உள்ளம். 

காண்பார் களுக்கெல்லா காட்சி மலர்முகமே

பூண்பார் தமக்கெல்லாம் புன்னகையே – மாண்புடைய      

  உச்சத் தமைச்சர் உறவுமுதல் சாமான்யர்                  

 மெச்சும் நடுநிலை வீறு  ( 47 ) 

       மாசற்ற மாமனிதரின் அந்தாதி அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய நூல். ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும். அறச் சிந்தனைகள் இல்லறத்தின் வழி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மணிமொழியானாரின் அந்தாதி நூல் சிறந்த பதிவு. நூறு பாடல்களும் மணிமொழியனாரின் புகழ்பாடும் பாடல்கள். தம் பல்வேறு அயராத்  தமிழ்த் தொண்டுகளுக்கிடையே அந்தாதி வழங்கிய தந்தையாரைப் போற்றி பதிப்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். திருக்குறட்செம்மல் மணிமொழியனார் புகழ் ஒங்குக உயர்க.


Wednesday, March 16, 2022

 நேர்படப் பேசு அமுதசுரபி அறக்கட்டளையின் விருது வழங்கு விழா




தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர்   

                          நேர்படப்பேசு இதழின் ஆசிரியர் அமுதசுரபி அறக்கட்டளையின் தலைவர் அரிமா ஞானி அவர்களின் அழைப்பின் பேரில் வந்துள்ளேன்.சாதனைப் பெண்கள் பலருக்கும் விருது வழங்கியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விருது பெற்ற கலைஞர்கள் கவிஞர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் சமூக சேவகர்கள் அனைவருக்கும் வாழ்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.                                                 சென்ற ஆண்டு அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் ஊர்திப் பயணமாக வந்தபோது  சென்னையில் மிகச் சிறந்த வரவேற்பு வழங்கினார் ஞானி அம்மையார். சென்னையில் பல தமிழ் அமைப்புகள் இருப்பினும் ஞானி அவர்களின் அமுதசுரபி அறக்கட்டளைதான் நடத்தியது அந்த நன்றியுணர்ச்சியின் காரண்மாகவே இங்கு நின்றுள்ளேன். விருது பெற்ற பெருமக்கள் பலர் பல மாவட்டங்களிலிருந்து பல ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார்கள். அவருக்கும் துணைநின்ற பெருமக்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். விருது பெற்ற பெருமக்கள் சிலர் காலில் விழுந்தனர். அருள்கூர்ந்து காலில் விழுவது தவறு இரு கரம் கூப்பி வணங்குங்கள். நான் ஒருமுறை இனமானக் காவலர் பேராசியர் பிறந்த நாளில் அவர் காலைத் தொட்டு வணங்கினேன். பேராசியர் என்னைத் தட்டி கைகொடு காலில் விழாதே என்று கூறினார் அன்றிலிருந்து  நான் காலில் விழுவதை விட்டுவிட்டேன். சுய மாரியாதை உணர்வு தேவை. ஒரு அம்மையாரை கணவர் காலில் கூட விழக் கூடாது தோழமையோடு இருங்கள் என்றேன். இது என் கொள்கை என்று கூறினார். அவரது மொழியையும் ஏற்கிறேன். இருப்பினும் நம்மவர்கள் காலில் விழுந்து அடிமைகளாக இருந்ததை நாம்மறக்கக் கூடாது. அருமை நண்பர் அரிமா தகுதி திவாகரன் அவர்கள் என்னை இந்த மேடைக்கு மிகச்சிறப்பாக அறிமுகப் படுத்தினாரகள் பெருமகனாருக்கு நென்சார்ந்த நன்றி. தமிழ் அறிஞர்களுக்கு தொண்டு செய்வதில் மிகச்சிறந்த் பெருமகன். ஆளுயர மாலை அணிவித்து அவரிடம் சிறப்புப் பெறாத பெருமக்கள் இல்லை எனும் அளவிற்கு பெருந்தொண்டுச் சிகரம். அரிமா மாவ்ட்ட்த்தில் ஆசிரியர் தின விழா மாவட்ட்த் தலைவராக இருந்தபோது 1000 ஆசிரியப் பெருமக்களை சிறப்பித்த பெருமகன். 

ஞானியன் கணவர் அரிமா அசய் மிகச்சிறந்த பண்பாளராக உள்ளார். ஞானியின் பணிகளுக்கு பின் புலமாக உள்ளார். ஒவ்வொரு ஆணிற்குப் பிண்ணும் பெண் உள்ளார் இங்கு மாற்றாக ஆண் உள்ளார். அசய் பெருமகனை நெஞ்சாரப் போற்றுமிறேன். 

நான் அரிமா சங்கத்தின் தலைவராக இருந்த போது ருபேலா என்ற பருவப் பெண்களுக்கு போடப் படும் ஊசி அரிமா இயக்கம் அறிமுகப் படுத்தியது. பல் பெண்களுக்கு அப்பொது விழிப்புணர்வூட்டி போடவைத்தோம். இரத்த வங்கி கண்வங்கி என மக்கள் தொண்டறப் பணியில் தலைசிறந்து நிற்பது அரிமா இயக்கம். எங்கல் சங்கத்தின் அறக்கட்டளை மருத்துவமனை வைசுனாவ கல்லூரியில் வாயிலில் உள்ளது அங்கு கண் பல் பொது மருத்துவம் பெண்கள் சிறப்பு மருத்துவம் எளிய மக்களுக்குப் பார்க்கிறோம் என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறேன் 

மகளிர் பெருமக்கள் திரளாக கூடியுள்ளீர்கள். ஆற்றல் பெருமக்களாக இங்கே அனைவருக்கும் விருது வழங்கியுள்ளது அமுத சுரபி அறக்கட்டளை. 

ஒரு குடும்பத்தின் ஆணி வேர் பெண் தான். ஒரு பெண் இல்லையென்றால் வாழ்க்கை முழுமை பெறாது. எந்தக் குடும்பமாக இருந்தாலும் பெண் சிறப்பாக இருந்தால்தான் அக் குடும்பம் சிறக்கும். 

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை  

ஒரு ஆண் செம்மாந்து உள்ளான் என்றால் அதற்குத் பெண்தான்  காரணம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.. அதற்கு அச்சானியாக விளங்கும் இங்கு வருகை தந்துள்ள பெருமாட்டிகளே உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.      நம் ஊரில் உள்ள குடும்ப அமைப்புதான் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம். வெளிநாடுகளில் குடும்ப உறவு சிறப்பாக இல்லை . 

 ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாண்பாடு அங்கில்லை. இன்று ஒருவர் மனைவி மற்றொரு நாள் மற்றவரின் மனைவியாக உள்ளார். அதை அந்நாடு ஏற்றுக் கொள்கிறது. ஆதலால் குடும்ப உறவுகள் மீக்கெழுவதில்லை. 

தற்காத்த்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண் 

தன்னையும் காத்து தம் கணவரையும் காத்து தம் புகழையும் காத்து உறுதி கலையாமல் நிற்பவள் பெண் என்று வள்ளுவப் பேராசான் கூறுகிறார். வளுவப் பேராசான் வாக்கிற்கிணங்க வாழும் மகளிர் பெருமக்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

இசுலாமியப் பெருமக்கள் கிறித்துவப் பெருமக்களும் இவ்விழாவில் பங்கேற்பது கண்டு மகிழ்கிறேன். ஒரு மதச் சார்பற்ற விழாவாக நடத்தும் பாங்கைப் போற்றுகிறேன். பெண்களை போற்றும் குடும்பம் உச்சம் பெறும். பெண்களைப் போற்றும் அமைப்பு பொலிவுறும். பெண்களைப் போற்றும் நாடு முன்னணி நாடாக விளங்கும் என்பது கண்கூடு.           விருதுகள் பெற்றுள்ள விருதாளர்களே மகளிர் பெருமக்களே உங்களை மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்

.( நேர்படப் பேசு அமுதசுரபி அறக்கட்டளையின் விருது வழங்கு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

Sunday, March 13, 2022


 மகத்தான வெற்றி தந்த முதல்வரே வாழ்க! வாழ்க!!


தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர  

  ஆர்த்தே எழுந்து நன்றாய்                               

 மாட்சியர் மேயர் தேர்தல்                           

மகத்துவ தி.மு.க வெற்றி                                

 காட்சியர் மற்றோர் எல்லாம்                                                                                     கவிழ்ந்தே  தோற்றார் என்னே                                               

  மாட்சியாம் தமிழர் வேட்கை                                             

  முதல்வர் ஸ்டாலின் வாழ்க!


நகராட் சியெல்லம் எங்கும்          

 நயத்தகு தி.மு.க வெற்றி             

பகைவர்  எங்கே மறைந்தார்                         

  பகலவன் எழுச்சி கண்டே                              

 தகத்தக உதய சூரியன்                                    

 தக்கநல் மக்கள் காத்தே  

மகத்துவ வெற்றி தந்த                

முத்துகரு ஸ்டாலின் வாழ்க! 


ஊராட்சி பேரூ ராட்சி             

  உவந்தே தி.மு.க வெற்றி       

   திறமான தொண்டர் எல்லாம்       

 தீத்திற தலைமை கண்டார்         

 வரமென வளமார் பெண்கள்    

 வலம்வரும் மாட்சி என்னே       

 உரமான வெற்றி தந்த             

உத்தமர் ஸ்டாலின் வாழ்க


களத்தினில் வென்றோர் எல்லாம்

 கலைஞரின் அறத்தைக் கொள்க

 உளத்தினில் திராவிடம் எண்ணி

 உண்மையாய் மக்கள் காக்க!   

  தலமெலாம் திராவிடத் தீரம்     

 தகுதியாய் வெல்க வெல்க        

 உளமுயர் உன்னத முதல்வர்      

 உளப்படி உணர்வாய் நிற்க!







Friday, March 11, 2022

 முப்பதாம் ஆண்டு நிறைவு ஊர்திப்பயணம் தொடக்கவிழா                                                                 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                                              30 ஆம் ஆண்டு நிறைவு ஊர்திப்பயணம் நிகழ்வு இன்று காந்தி நினைவாலய்ம் முன் ஐயன் திருவள்ளுவர்  அருட்பார்வை முன் நடப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய எண்ணங்களெல்லாம் 1993ஆம் ஆண்டு முன்னோக்கிச் செல்கிறது. இந்த மண்னின் மைந்தர் தி.மு.க  மாநிலங்கவை உறுப்பினர் ஆரல்வாய்மொழி கல்லூரியின் தாளாளர் சங்கரலிஙகனார் புலவர் பெருமாள் பிள்ளை ஆயோரின் பெரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கிறேன். நடைப்பயந்த்தை தம் தள்ளாத வயதிலும் குமரி வந்து தொடங்கி வைத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் பெரியார் பேருரையாளர் இறையன், திராவிடன் நல நிதியின் தலைவர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பெருமகன் நீதியரசர் வேணுகோபால் உணர்வோடு நடைபயணத்தில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள் புலவர் பெருமக்கள் இளைஞர்கள் அனைவரையும் இன்று எண்ணிப்பார்க்கிறேன். இன்று பலர் காலமாகிவிட்ட்னர் ஆனால் அவர்கள் எந்தக் கொள்கைக்காக எங்களோடு நடந்தார்களோ அந்தக் கொள்கை இந்த ஊர்திப் பயணத்தின் வழி உயிரோட்டமாக உள்ளது.                                                                                             அந்த  நடைப்பயணத்தின் தொட்டர்ச்சிதான் இன்றைய 30ஆ,ம் ஆண்டு தமிழ் ஊர்திப் பயணம். ஒவ்வொரு ஆண்டும் தளர்ச்சியில்லாமல் குமரியில் எல்லாப் பணிகளையும் தம் மேல் கொண்டு செயலாற்றும் மூதிளைஞர் குமரிக் கிளைத் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் பணி மகத்தானது. ஐயா அவர்கள் கீழே விழுந்து புண் ஆறாத நிலையிலும் இப்பயணக் கூட்டத்தை நடத்தி தொடங்கி வைக்கும் அவர்கள் நெஞ்சுரத்தைப் போற்றுகிறேன். அவரோடு இணைந்து பணியாற்றும் இவ்வாண்டு எங்கள் சேது அறக்கட்டளை விருதாளர் தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் இளங்கோ என்ற வஞ்சிக்கோ அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன் . தலைநகரில் தமிழ்ச்சங்கத்திற்கன கட்டிடம் கண்டு அங்கு தமிழ்ச் சான்றோர்கள் படங்களையெல்லாம் திறந்து அழியாப் புகழை உருவாக்கியுள்ள சுந்தர்ராசன் அவர்கள் இங்கே வருகை தந்துள்ளார் மற்றும் வாழ்த்தி வரவேற்ற அனைத்துப் பெருமக்களையும் வணங்கி மகிழ்கிறேன். தமிழ் ஊர்திப்பயண 30ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு மாண்பமை முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் காணச் சென்றோம். கொரணா காலமாக உள்ளதால் கவனமாக சிறப்பாக செயல்படுங்கள் என வாழ்த்தி அனுப்பினார். தந்தையாரின் பிறந்த நாளன்று தந்தையை கைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெருவித்தார். இந்த வாழ்த்து ஐயா முத்துக் கருப்பன் வஞ்சிக்கோ சுந்தர்ராசன் அரிமா கீதாகுமாரி தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் தெருவிக்கப்பட்ட வாழ்த்து. ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கட்கு தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பல தமிழ் சார்ந்த திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளார். தந்தைபெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை தம் ஆற்றலால் முதல்வர் அவர்கள் நீக்கி ஆலயங்களில் தமிழ் வழிபாட்டிற்கு வித்திட்டுள்ளார். அனைவரையும் அர்ச்சகராக்கி அமைதிப் புரட்சியே நடத்தியுள்ளார். தமிழக அரசின் பணியாளர் தேர்வணையத்தில் தமிழ் தேர்வு மொழியாக அறிவித்துள்ளது. தமிழ் தேர்வில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசின் வேலை என் அறிவித்து சாதனைச் செம்மலாகத் திகழ்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த திருவள்ளுவர் ஆண்டை சென்ற ஆட்சி முடக்கி நாசகார வேலை செய்த்து. அதையெல்லாம் முறியடித்து மீண்டும் திருவள்ளுவராண்டு தமிழாண்டு நடைமுறைப்படுத்தியுள்ளார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நம் கொள்கை  முழக்கத்திற்கு நம் முதல்வர் அவர்கள் தம் ஆட்ட்சியை ஒப்படைத்து அளப்பரிய சாதனைச் சிகரமாக விளங்குகிறார். இந்த ஆட்சியைத் தக்கவைத்தால்தான் தமிழ் வாழும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஊர்திப்பயணத்தின் வெள்ளிவிழா ஆண்டின் போது குமரியிலிருந்து தில்லி நோக்கி பெருங்கவிக்கோ தலைமையில் பயணித்தோம். இந்தியா முழுமையும் திருக்குறளை தேசிய மொழியாக்குக என்ற முழக்கத்தை முன்வைத்தோம். தலைமையமைச்சர் அலுவகத்தில் எங்கள் கோரிக்கைமடலை சேர்ப்பித்தோர்ம் பெற்றுக்கொண்டமைக்கு மடல் வந்தது. ஆனால் இது நாள்வரை திருக்குறள் தேசிய நூலாக்கப் படவில்லை. அதற்குத் தொடர்ந்து போராடுவோம். குமரி முதல் சென்னை தில்லி வரை நம் கொள்கைக்கு இணைந்து போராடும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நடைப்பயணத்தின் நினைவாக இங்கே நினைவு கற்பலகை திறந்திருந்தொம். நம் கழக வேட்பாளர் மகேசு அவர்கள் நாகர்கோய்யில்  மாநாகராட்சியில் வெற்றிபெறுவார் என்பதுதிண்ணம். மீண்டும் இங்கே பலகை திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

     (குமரியில் 30 ஆம் ஆண்டு  ஊர்திப்பயணம் தொடக்க்க நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)



Monday, February 21, 2022

 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 87ஆம் அகவைத் திருவிழா மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில்  மன்ற இயக்குநர்தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை




அருமைத் தந்தையார் 87ஆம் அகவைத் திருவிழாவும் மூன்று நூல்கள் வெளியீட்டுவிழாவும் இன்று நடைபெறுகிறது. எங்களோடு நீண்டு நாட்களாக இணைந்து பணியாற்றும் அருமை மூத்தகவிஞர் அண்மையில் கவியரசன் கண்ணதாசன் அவர்களோடு தந்தையார் பதிவை மாலைமலர் இதழில் எழுதியிருந்தார் அதை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளோம். தொடக்கவுரையாற்றவுள்ள விழாவிற்கு தலைமை தாங்கும் முனைவர் இரவிபாரதி எழுத்தாளர் சங்கத்தலைவர் முனைவர் பெரியண்ணன். முன்னிலை வகிக்கும்.வழக்கறிஞர் சிவகுமார் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் இதயகீதம் இராமானுசம் பெருமக்களை வருக வருகவென்று வரவேற்கிறேன்.

அன்னை சேதுநினைவலைகள் நூலை அன்னை மணிமேகலையின் தமிழ்வாணன் திருமகன்  லேனாதமிழ்வாணன்  வெளியிட முதல் நூலை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் பெற உள்ளார். தமிழ் முழக்கம் நூலை நீதியரசர்  இரா.காந்தி வெளியிட முதல் நூலை வழக்கறிஞர் சாசகான் பெற உள்ளார் தமிழ் நடைப்பாவை நூலை தி.மு.க. இலக்கிய அணி செயலர் முனைவர் சந்திரபாபு வெளியிட முதல் நூலை வழக்கறிஞர் மோ.அ.சுப்பிரமணியம் , பாவலர் கணபதி பெற உள்ளார் அனைவரயும் வருக வருக என்று வரவேற்கிறேன். 

ஆய்வுரை வழங்கவுள்ள பெருமக்கள் முனைவர் சோ.கருப்பசாமி கவிஞர் தமிழியலன் கவிஞர் மார்சல் முருகன் பொறிஞர் பீட்டர்ராசன் சித்தமருத்துவர் பாக்கம் தமிழன் வாழ்த்துரை வழங்கவுள்ள பெருமக்கள் அனைவரையும் இந்த தீ நூண்மி காலத்திலும் பேருள்ளத்தோடு வருகை தந்துள்ள பெருமக்கள்  எழுத்தாளார்  உதையை வீரையன் புலவர் நமச்சிவாயம் உள்ளிட்ட அனைவரையும் வருக வருக வருகவென்று வரவேற்கிறேன்

கவிச்சிங்கம் கண்மதியன் தலைமையில் ;பெருங்கவிக்கோ வாழ்த்துக் கவியரங்கில் பங்கேற்கும்   கவிஞர் பெருமக்கள் குடியாத்தம் குமணன் பாவலர் இராமச்சந்திரன் கவிஞர் நல்ல அறிவழகன் கவிஞர் வீரமுத்து கவிஞர் நந்தா கவிஞர் சுமி, கவிஞர் சுப சந்திரசேகர். கவிஞர் ஆசுகவி இனியா ஆகியோரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

லேனா அவர்களின் தந்தை தமிழ்வாணன் அவர்கள் பெருங்கவிக்கோவின் கவிதைகள் தூங்கும் தமிழனை தொட்டு எழுப்பவனல்ல தட்டி எழுப்பவன் என்று அந்தக் காலத்திலேயே பாராட்டியுள்ளார். இன்று அவரது மைந்தர் லேனா அவர்கள் நூலிற்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கி இன்று நூல் வெளியீட்டுக்கும் வந்து சிறப்பித்துள்ளார், நாங்கள் இந்த ஆண்டு சேது அறக்கட்டளை விருது வழங்கியபோது எங்கள் கிராமத்திற்கே வந்து சிறப்பித்த பெருமகன்..

அன்னை சேது நிலைவலைகள் நூலில் எம் அன்னை காலமானபோது தமிழ்ப்பணியில் வெளியான கவிதைகள் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இங்கே வருகைதந்துள்ள பெருமக்கள் பலர் படைப்புகளும் இந்நூலில் வெளியாகியுள்ளது. 

தமிழ் முழக்கம் நூல் ஐயாவின் தொடக்க காலத்தில் வெளியான நூல் அந்த மீள் பதிப்பை இன்று வெளியிடுகிறோம். பாவேந்தரின்  தமிழியக்கம் வழி தொடர் நூல் இது. அன்று பாடிய பாட்டு இன்றும் தேவையாகவே உள்ளது.  

கால்விழுந்து உமையெல்லாம கெஞ்சிக் கேட்டேன்                                                        கதையெழுதி வீண்பொழுது போக்க வேண்டா                                               மேல்விழுந்தே உமை வேண்டுகின்றேன் இந்த                                                   மேன்மைமிகு தமிழ்க்குலத்தின் சார்பில் நின்று                                                                வால்பிடிக்க வேண்டாம் நீர் ஆங்கிலத்தை                                                               வரலாற்றை மாற்றுங்கள் தமிழில் பாடப்                                                            பால்குடிக்க அருளுங்கள் பட்டம் பெற்ற                                                                 பண்பாளர் இனில் தனைச் செய்தல் வேண்டும்

அன்றே ஆங்கிலத்தின் மோகத்தை  மோகத்தை வேரறுக்கப் பாடியது. இன்றும் தேவையாக உள்ளது.

காந்திமகான் தன்னைஒரு கோட்சே என்ற                                    காதகனும் கைதொழுது தானே சுட்டேன்                                                                 தீந்தமிழின் உரிமையையும் இப்படித்தான்                                                                    செய்திடவும் நினைக்கின்றார் கொடுமை அந்தோ                                         ஏந்துகிறார் வஞ்சகத்தைச் நடித்துப் பேசும்                                                            எத்தர்க்கு கொத்தான் மாலை சூட்டி                                                              வாந்திதானை  ஏமாந்தே உணவென் றெண்ணி                                                 வயிறுமுட்ட உண்ணாதீர்  எச்சரிக்கை

 என எச்சரிக்கையூட்டியுள்ளதை நாம் இன்றும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மூன்றாம் பதிப்பிற்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் வாழ்த்துப்பா அணி சேர்க்கிறது. 

தமிழ் நடைப்பாவை நூல் 1993ஆம் ஆண்டு குமரி முதல் சென்னைவரை 1330 கி.மீட்டர் பெருங்கவிக்கொ தலைமையிஒ 100 அறிஞர்களோடு நடைப்பயணம் நட்ந்த வரலாற்றைக் கூறும் நூல். நடந்த பெருமக்கள் உதவிய உள்ளங்கள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையின் மூச்சாக இந்நூல் உள்ளது. 

                                                                                                                                                     அன்னை மொழியொன்றே                                                                                                          ஆ!பெரிது என்கின்றீர்                                                                                                                         முன்னிவையத் தோர்தொடர்பு                                                        முக்காலும் ஆங்கிலமே


என்னடி பேதாய் ஆம்                                                                                                 வையமெலாம் சென்றோமே                                                அன்னைமொழி ஒன்றை                                                                                               அவரவர்நா டேமுதன்மை 


நன்றாய்த் தொடர்புமொழி                                                              நட்புமொழி வேற்றுமொழி                                                                     நன்று செர்மன்நாடு பிரான்சு                                                                           ஐந்துகண்டம் எல்லாமே


தன்தாய் மொழிபோற்றித்                                                    தாய்மொழிக்கே பீடு தந்தார்                                                                                   நன்றிதனை நாமுணர                                                                                                     நாட்டுநடை எம்பாவாய் 

 என உலகில் அவரவர் தம் தம் தாய்மொழியில் நாட்டம் கொள்வது நம்மோர் ஆங்கில மோகம் கொள்வதும் கண்டு குமுறுகிறார்.இந்த நூலைப் படிக்கும்போது நடைப்பயணக் காட்சிகள் நம் கண்முன் நிற்கிறது.  

மானமில்லார் நம்மறிஞர்                                      மாத்தமிழ் வாழ்வெண்ணார்                                  ஈனமில்லாப் பாவலர்கள்                                                       பாப்புனைதலோடு சரி 


ஞானமில்லா மக்களுக்கோ                                                         நாளெல்லாம்  கிழ்வழக்கு                                                         தானமில்லாச் செல்வரிங்கே                                                      தண்டமிழை யாரறிவார் 


 மோன்மில்லா யோகியர்க்கோ                                  மூச்சடக்கும் வாசிநிலை                                                            ஆனநிஅலை ஈதானால                                                    அன்னைமொழி காப்பார் யார்  


வானமுயர் வையமுயர்                                                         வண்டமிழ்குச் சக்தியுண்டு                                                                                                              போனதமிழ் ஆற்றல்பெற                                                                                           பூத்தநடை எம்பாவாய் 

 என நாட்டின் நிலையையும் மீண்டும் தமிழ் ஆளும் என்ற நம்பிக்கையும் தருகிறார். பெருமக்களே தொடர்ந்து நூல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். தாங்கள் அனைவரும் படியுங்கள் அல்லது இலவசமாகவாவது பெற்று படித்து தமிழ் உணர்வை மீட்டுங்கள் எனக் கூறி விடைபெறுகிறேன்