Sunday, August 14, 2022

 ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள தென் ஆப்ப்ரிக்கா லெஸ் கவுண்டர் 

தமிழ்மாமணி வா.மு..சே.திருவள்ளுவர்

தென் ஆப்ரிக்கா நாட்டிலிருந்து தமிழகம் வருகை தந்த லெஸ்கவுண்டர் அவர்களை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நுல்கள் வழங்கி உரையாடினேன். அவருடைய முன்னோர் சேலம் மாவட்டத்திலிருந்து சென்ற பெருமக்கள். அவருடைய தந்தை சடையப்பகவுண்டர் தாயார் மாரியம்மாள். பெற்றோர்கள் நன்கு தமிழ் பேசுவார்கள். ஆனால் லெஸ் தமிழ் கொஞ்சம் பேசுகிறார். பட்டப் படிப்புவரை படித்து ஆசிரியராக தொடக்கத்தில் பணியாற்றி தம் வாழ்வைத் தொடங்குகிறார். இவருடைய பெற்றோர் பொது வாழ்வில் ஈடுபடுத்தி பல மக்கள் பணிகளைச் செய்யும் மாமனிதராக உள்ளார்.. இவர் வாழும் பகுதியில் மூன்று இலட்சம் இந்தியர்களும் அதில் தமிழர்கள் இரண்டுலட்சம் தமிழர்கள் என்றார். திருமதி சாவித்திரி அம்மையாரை மணந்து இரு மக்களைப்  பெற்றுள்ளார்.அணிதா படித்து இயன்முறை சிகிச்சை செய்கிறார். நிக்கி இசை வல்லுநராக உள்ளார். கவுண்டர் மிகச் சிறந்த பொதுநலத் தொண்டர். தமிழ்ப்பாடசாலையில் தமிழ் மக்கள் தமிழ் பயில்வாதற்கு ஆக்கப்பூர்வமான் பணி செய்கிறார்.மய்செரிஅன் பரெஅச்க) வைனவ ஆலயம் அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம் போன்ற திருக்கோயில் தொடர்ந்து திருப்பணி செய்து வருகிறார்.கவுண்டர் 

அவர்கள் கர்த்தா சுதந்திரக் கட்சியில் 19 ஆண்டுகாளக பங்கு பெற்று பல்வேறு பொறுப்புகளைப் பெற்று சிறப்பாகப் தொண்டறப் பணியாற்றியுள்ளார். தற்போது இந்தக் கட்சி பிரின்சு புத்தலெசி அரசர் பரம்பரையைச் சேர்ந்தவர் கட்சியின் தலைவராக உள்ளார். தற்போது எதிர்க் கட்சியாக செயல்படுகிறது. இந்தக் கட்சியி  சட்டமன்ற உறுப்பினராக 2002 முதல் இன்று வரை ஐந்து முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் எதிர்க் கட்சி என்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளதையும் குறிப்பிட்டார். 

அங்கு ஆளும் கட்சியாக ஆப்ரிக்கன் தேசிய காங்கிரஸ்  உள்ளது . பிரதமராக சிறி இராமா பொரெக் உள்ளதாக குறிப்பிட்டார். இருவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். இரவி பிள்ளை மாகிகவுண்டர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இரவி சென்னைக்கு பொருளாதார மாநாட்டிற்கு நிதி மந்திரியாக இருந்தார். தற்போது பொறுப்பில் இல்லை மாக்கி கவுண்டர் அமைச்சராக உள்ளார் என்று குறிப்பிட்டார். சீவரத்தினம் என்ற தமிழர் ரிச்சர்ட்ஸ் பேகுதியின் துணைமேயராக உள்ளார் என்று குறிப்பிட்டார். 

அவரோடு பிரேமிபா என்ற பெருமாட்டியும் வருகை தந்துள்ளார். அவர் தந்தையார் பெயர் வேல் ஆதிமூலம் மாணிக்கம் பிள்ளை எனக் குறிப்பிட்டார்.. அவர் தாயார் இலக்குமி. அவர் தந்தை சோகன்ஸ்பர்க் பகுதியில் அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது மக்கள் சாத்தின் சியோலியா. அம்மையார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதாக்க் குறிப்பிட்டார். 

செயல் திறன் மிக்க பெருமகன் பல தலைறைக்கு முன் தென் ஆப்ரிக்கா சென்று இன்று ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் அவருடைய பேருழைப்பு வியப்பைத் தருகிறது. நான் தங்கள் நாட்டில் பெற்றோருக்குப் பின் ஏன் தமிழ் பேச இயலவில்லை எனக் குறிப்பிட்டேன். ஏன் நான் பேசுகிறேனே என ஒருசில வார்த்தைகள் பேசினார். தமிழ் பேச இயலாத்தற்கு நிறவெறிதான் எனக் குறிப்பிட்டார். அப்போது தமிழ் பள்ளிகளில் தமிழ் படிக்க இயலவில்லை என்றார். தற்போது மேல்நிலை வகுப்புவரை தமிழ் படிக்க வாய்ப்பு உள்ளது என்றார். 312 மாணவர்கள் தம் பகுதியில் தமிழ் படிப்பதாக பெருமையாகக் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment