Thursday, February 29, 2024

 



சிவகிரி தமிழ்ச்சங்கம்  திறப்புவிழா மருத்துவர் சாந்தி சரவணபாய், ஆசிரியர் தங்கமுத்து பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.திருவள்ளுவர்

      சிவகிரி தமிழ்ச்சங்கத்தின் திறப்புவிழாவிற்கு இராயகிரி தமிழ்ச்சங்கு விழா முட்டித்து இங்கு வந்துள்ளேன். அருமை மருத்துவர் செண்பக விநாயகம்  தம் மனைவி மருத்துவர் சாந்தி சரவணபாய் இறந்த நிலையிலும் அவர்கள் பட த்தைத் திறந்து கண்ணீர் மல்க நினைவேந்தல் நிகழ்வாகவும் சிவகிரி தமிழ்ச்சங்க தொடக்க விழாவாகவும் நட த்துகிறார். அவர்தம் துணைவி பட்த்தை நான் திறந்து வைப்பதிலும் சிவகிரி தமிழ்ச் சங்கத்தை திறந்து வைப்பதிலும் நான் பங்கேற்பது கடமையாகக் கருதுகிறேன். கழகப் பொறுப்பாளராகவும் இருந்து இப்பகுதியில் அரும்பணியாற்றுகிறார். தி.மு.க இந்த தொண்டுணர்வையும் தமிழுணர்வையும் ஊட்டியுள்ளது வியப்பில்லை.

தம் மனைவி மட்டுமன்றி இப் பகுதியில் தோன்றி கோவையில் ஆசிரியப் பணியாற்றி மறைந்த தங்கமுத்து அவர்களின் பட த்தை ஆசிரியர் வைரவன் அவர்கள் திறந்து வைத்து அவருடை  சிறப்புக் குணங்களை எடுத்துரைத்தார். தங்கமுத்து அவர்களின் மனைவி இங்கு வந்து பாடிய கவிதை நெஞ்சை நெகிழச் செய்தது. அம்மையாரும் ஆசிரியராகப் பணியாற்றி அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார், இதைவிட தங்கமுத்து அவர்களின் பெருமைக்கு சான்று வேறு தேவையில்லை. மேழும் இப்பகுதி அறப் பணிகளுக்கு உரூபா 10000  வைப்பு நிதியாக வங்கியில்  செலுத்தி இங்கு தமிழ்சங்கத் தலைவர் செண்பக விநாயகம் கரத்தில் வழங்கியுள்ளார். மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசிரியர் தங்கமுத்து குடும்பத்தாரின்  அற உணவர்வை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

       மருத்துவர் அம்மையார் பட த்தை திற்கும்போது நான் நெகிழ்ந்தேன். ஒருமருத்துவமனை நிறுவி அதை கணவர் பராமரிக்க அரசு மருத்துவராக கணவரின் வேண்டுகோளை ஏற்று பணியாற்றி ஏழை எளியவரின் ஏந்தலாக வாழ்ந்துள்ளார் தம் மகளையும் மருத்துவராக உருவாக்கியுள்ளார். 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற          சொற்காத்து சோர்விலாள் பெண்

        என்ற வள்ளுவப் பேராசானின் குளுக்கு இலக்காக வாழ்ந்த மருத்துவப் பெருமாட்டியை நெஞ்சாரப் போற்ருகிறேன். அம்மையார் அவர்களின் மருத்துவப் பணியை பெருமக்கள் பலரும் நெஞ்சுருகப் போற்றினர். குறிப்பாக கொராணா தீநுண்மி காலத்தில் ஆற்றிய மகத்தான மக்கள்பணி உலகமே போற்றும்பணி. அரசின் விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். மருதுவ குடும்ப பணிகளின் ஊடே இந்த பள்ளியையும் நிர்வாகித்து மருதுவர் செண்பக விநாயகத்தின் கரத்தை வலுப்படுத்தியுள்ளார். 

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சதாற் காணப் படும்

     என்ற வள்ளுவப் பேராசான் குறளுக்கொப்ப அவருடைய வழியினரும்  நிறுவனங்களும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். ஒங்குக அவர்தம் புகழ். 

       என்னை இங்கு அழைத்துவந்த முறம்பு பாவாணர் கோட்ட நிறுவனர் புலவர் நெடுஞ்சேரலாதன் சிவகிரி தமிழ்ச்ச்ங்கத்தை திறந்து வைத்து  உலகில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பற்றி உரையாற்றப் பணித்தார். காலையில்தான் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள இராயகிரி தமிழ்ச்சங்க 8ஆம ஆண்டு விழாவில் பங்கேற்று இங்கு சிவகிரி தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்துள்ளேன்

      தமிழ்ச் சங்கங்கள் உருவானால் தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒரு குடைக்கீழ் வளர்வர். சாதி மத த்தை மறந்தாலே நாம் எல்லாம ஒரே தமிழ் என்ற சிந்தனையில் ஒன்று பட சிறந்த வழி. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் என்ற அமைப்பின் வழி உலகத்தையே இணைத்துள்ளோம். உலகம் முழுமையும் 7 மாநாடுகளை நட த்தியுள்ளோம். வெளிநாடுகளில் செருமணி தாய்லாந்து ம்லேசியே அமெரிக்கா போன்ற வெளி நாடுளில் மாநாடுகளை நட த்தி பெருஞ் சாதனை புரிந்துள்ளோம். அமெர்க்காவில் உள்ள 50 மாநிலங்களில் தமிழர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும்  தமிழ்ச்சங்கங்கள் நிறுவியுள்ளனர். இதழ்களும் நட த்தி வருகின்றனர். வளரும் தலைமுறைக்கு தமிழைப் பயிற்றுவித்து வருகின்றனர. ஒவ்வொரு ஆண்டும்  ஃ பெட்னா என ஒருங்கிணைந்து  மாநாடு ஒவ்வொரு மாந்லத்திலும் மாநாடு நட த்தி வருகின்றனர். சிக்காக்கோ நகரில் நடைபெற்ற 10ஆம் உலகத் தமிழ் மாநாட்டை  நட த்திய பெருமையும் இந்த தமிழ்ச்சங்கங்களுக்கு உண்டு. கனடாவில் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் சிறப்புடன் நட த்தி வருகின்றனர். கனடா தமிழ்ச்சங்கம் என்ற பெயரிலேயா வள்ளிக்கண்ணன் மருதப்பன் மிகச் சிறப்பாக நட த்துகிறார். ஒரு முறை நான் அமெரிக்காவிலிருந்து கனடா சென்றபோது நம் மேனால் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் இறந்தபோது நினைவேந்தல் கூட்டம் நட த்தினர் அதில் பங்கேற்று இரங்கலுரை நிகழ்த்தினேன். கனடா முழுமையும் ஈழத்தமிழர்களின் அர்ப்பணிப்பாண தமிழ்ப்பணியும் ஆலயப்பணியும் நட த்தி வருகின்றனர். இலண்டன் தமிழ்ச் சங்கம் மிகச்சிறப்பாக நடைபெறுகிரது. சென்னை தோசை நிறுவன அசோகன் சங்கத்தின் சங்கத்தில் என்னை வரவேற்று  தொலைக்காட்சி செவ்வி எடுத்தார். 

    ஐரோப்பிய நாடுகள் முழுமையும் தமிழ் அமைப்புகள் மிகச் சிறப்பாக நட த்தி வருகின்றனர். உலகத் தமிழோசை அமைப்பு வளரும் தலைமுறைக்கு தமிழ் பயிற்றுவித்து திருகுறள் போட்டி நட த்துகின்றனர். சென்ற ஆண்டு பிரான்சு சுடார்பக்சு நகரில் நட ந்த பொங்கல் விழாவில் பங்கேற்க என்னை  அழைத்தனர். அவர்கள் தமிழுணர்வையும் பண்பாட்டையும் காக்கும் பாங்கைக் கண்டு மெய்சிலிர்த்தேன். பின் சுவிட்சர்லாந்தில்  நட ந்த திருவள்ளுவர் திருநாளில் பங்கேற்றேன். திருவள்ளுவரை பல்லக்கில் ஏற்றி திருகுறள் ஒதி  மேடைக்கு அழைத்துச் சென்றனர். தமிழர்களில் தமிழுண்ர்வை தாங்கள் நன்கு அறியலாம். 

ஆசுத்திரேலியாவில் தமிழர்கள் பங்களிப்பு மக்த்தானது, தமிழ் அமைப்புகள் வழி எல்லா நிலைகளிலும் உய்ர்த்தி வருகின்றனர். தென்னாப்ரிக்கா மொரிசியசு ரீயூனியன் மடகாசுகர்  பலதலைமுறைகளுக்கு சென்ற தமிழர்களுகு தமிழே மற்ந்துவிட்ட து. இறைவணக்கப் பாடலை ஆங்கிலத்தில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.  அங்கு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இராமசாமை பல்கைக் கழகமும் இணைந்து தமிழாசியரை பயிற்றுவித்து அங்குள்ள மக்களுக்கு தமிழ் பயில வழிசெய்துள்ளனர். டர்பன்  நகரில்  நடந்த பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்றுள்ளேன். அருகிலுள்ள மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளுக்கு பலர் சென்றுள்ளீர்கள் அங்கு தமிழின் வளர்ச்சி நம்மிடம் போட்டி போட்டுக்கொண்டு வளர்கிறது. துபாய் பக்ரீன் அபுதாமி கத்தார் ஓமன் போன்ற இசுலாமிய நாடுகளில் தமிழ் மாநாடுகள் விழாக்கள் என மிகச் சிறப்பாக தமிழை வளர்க்கின்றனர் 

       இந்தியா முழுமையும் தமிழ்சங்கள் நீகமற நிறைந்துள்ளது. தில்லித் தமிழ்சங்கம் மும்பை தமிழ்ச்சங்கம் பெங்களூர் தமிழ்ச்சங்கம் திருவன்ந்தபுரம் தமிழ்ச்சங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழை வளர்த்து வருகின்றனர்.

       தமிழ்ப்பணி என்ற இந்த் மாத இதழ் 1971ஆம் ஆண்டு தந்தையாரால் நிறுவப்படு தொடர்ந்து 52 ஆண்டுகளாக நட த்தி வருகிறோம். தொடங்கும்போது 12 தற்போது வரை உலகத்தமிழர்களுக்கு அர்ப்பணித்த இதழாக வெளிவருகிறது. இந்த இதழில் தங்கள் உணர்வுகளையும் உலகத்தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். 

      சிவகிரி தமிழ்ச்சங்கப் பெருமக்களே  தமிழர்களை ஒன்றுபடுத்தி தமிழை எல்லா நிலைகளும் மேம்படுத்துங்கள் தமிழர்களாக ஒன்று படுங்கள் . அரும்பாடுபட்டு தமிச்சங்கத்தை நிறுவியுள்ள அனைவரையும் போற்றி விடைபெறுகிறேன்.

Sunday, February 25, 2024

நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

(பன்னாட்டுத் தமிழுறவு மன்றம  25 - 2 - 2024 அன்று சென்னையில் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழாக கவியரங்கில் பெருங்கவிக்கோ தலைமையில் தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர் பாடிய கவிதை)

நடையாய் நடக்கும் நற்றமிழ் நாயகர் 

    நாநிலப் புகழை தமக்கே கொண்டவர்                                                  தடைகளை உடைக்கும் போர்ப்படை அரிமா                     தகுதியர் காக்கும் செந்தாமிழ்ச் செம்மல்             உடைமையாய் கலைஞர் உள்ளம் காப்பவர்                                                           உரிமைக் குரலாய் உலகில் உரைப்பவர்             திடமாய் கலைஞர் நூற்றாண் டுகாண்          தீந்தமிழ்ப் பெருங்க விக்கோ போற்றி


 திராவிட இயக்கம் தழைக்க உதித்த                                                                             தீந்தமிழ் மொழியின் ஆற்றல் மறவர்                              கருவிலே திருவாய் மலர்ந்த நேயர்                          கற்பனைக் கெட்டா முயற்சித் தீரர்                                      பெரியார கரத்தைப் பற்றியே பாங்காய்                                    பகுத்தறி வுகாத்த பகலவன் ஆனார்                      திரைப்படம் புகுந்தே தமிழால் ஆண்ட                  தீந்தமிழ்க் கலைஞர் திண்மையும் உச்சம்

                                                                                                         கலையின் ஆற்றல் வாழ்வின் தொடக்கம்                                                                   கதிராய் உலகில் ஒளிர்ந்தே வென்றார்                              தலைவர் அண்ணா தலைமை கொண்டார்                                                             தகுதியின் ஆற்றலாய்த் துணிந்தே நின்றார்                                  பகுதி எல்லாம் திமுக கிளைகள்                                                           பாதை வகுத்தே பாரினில் வென்றார்                     தகுதித் தலைமைகள் அண்ணா வழியில்                                       தக்கார் கலைஞர்  தலைமை ஏற்றார்

அண்ணா முதல்வராய் மறைந்த போதே                           அரசியல் போக்கில் அணியாய் நின்றனர்                               தன்னிலை உணர்ந்த தலைவர் கலைஞர்                    தக்கதை உணர்ந்து கழகம் காத்தார்                                                சென்நீர் விட்டே கழகம் மீட்டே                                          சேனைத் தலைவர்  முதல்வர் ஆனார்                                 கண்ணீர் மல்க அண்ணா போற்றி                                           கழகம் காப்பதில் பொன்விழாக் கண்டார்

 அரசியல்  அணிமலர்ப் பாதை  அன்று                                                     அடர்ந்த ஆணவம் கரடு முரடாய்த்                          துரத்திய மூடரைத் துணிந்தே என்றும்                                      துண்பக் கடலில் நீந்தியே வென்றார்                                           மாறிய அரசியல் மனிதரை எல்லாம்                                       மண்ணின் பொறுமையாய் ஏற்ற குணத்தர்                                                    தூரிகை என்றும் துணையாய் ஏற்றே                                 தொடரும் முரசொலி தந்தை கலைஞர்

 அன்னை இந்திரா அவசர நிலையை                                  ஆணவப் போக்கால் பிரகடனம் செய்தார்                          விந்திய இந்தியத் தலைவர் எல்லாம்                                     வியப்பாய்க் காத்த சனநா யகக்கோ                               வின்னே அதிர எதிர்த்த செம்மல்`                                          வித்தக ஸ்டாலின் மணக் கோலத்தில்                                 வீணர்கள் சிறையில் அடித்தே மகிழ்ந்தனர்                                          விரிவான் தலைவர் முதல்வர் இன்றே

 கத்தும் கடலின் ஒசையைப் போன்றே                              கதிரவன் உமிழும் ஒளியைப் போன்றே                      சித்தம் குளிரும் தென்றலைப் போன்றே                      சிவந்த வான வண்ணம் போன்றே                                   நித்தம் நித்தம் கலைஞர் நம்முன்                                            நீள்புகழ் ஆற்றல் மரமாய் உள்ளார்                                                             கண்மணித் தலைவர் முதல்வர்  ஸ்டாலின்                                                      கரத்தை உயர்த்துவோம் மாதோ


Friday, February 23, 2024




 தென்காசி இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழாவும் மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் அவர்களின் பட த் திறப்பும் இங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு என்னை அழைத்துள்ளீர்கள். உங்கள் பேரன்பிற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

 சென்ற ஆண்டு இதே நாள் சென்னையிலிருந்து துபாய் வழியாக சூரிச் நகருக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு  பயணமானேன் .  சூரிச் விமான் நிலையத்தில் சுவிட்சர்லாந்து  வள்ளுவன் பள்ளி நிருவனர் முருகவேல் தம் நண்பருடனும்பிரான்சு உலகத் தமிழோசை கிருபானந்தன் அவர்களும் சூரிச் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுது வரவேற்றனர். பின் பிரான்சு சுடார்சுபர்க்  நகருக்கு கிருபானந்தன் தம் மருமகன் ஊர்தி ஓட்ட அழைத்துச் சென்றார். சுடார்சு பர்க் நகரில் பொங்கல் விழாவும் பெர்ன் ந்கரில் திருவள்ளுவர் திருநாளும் கொண்டாடி பாரிசு வழியாக சென்னை திரும்பினேன்.

இவ்வாண்டு நண்பர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் என்னை இவ் விழாவிற்கு வரவேண்டும் என இரு மாதங்களுக்கு முன்னரே இசைவு பெற்று இங்கு அழைத்துள்ளார். நான் சென்னையிலிருந்து பொதிகை தொடரி மூலம் இராசபாளையம் காலை வந்திறங்கி தொடர் வண்டி நிலையத்திலிருந்து நெடுஞ்சேரலாதனிற்கு தொடர்புகொண்டேன் அவர் தானி வந்து கொண்டிருக்கிறது என்றார் அரைமணிநேரம் கழித்து நான் தானியைப் பிடித்து முறம்பு வரத் தொடங்கினேன். பாவாணர் கோட்டம் பன்னெடுங்காலம் தொண்டாற்றிவருகிறது தாணிஓட்டுநருக்கு கோட்டம் தெரியவில்லை சோழபுரத்தில் இறக்கிவிட்டார். பின் ஒரு பேருந்தில் அங்கிருந்து ஏற்றிவிட்டனர் நெடுஞ்சேரலாதனுக்கு தொடர்பு கொண்டேன் அவர் முறம்பு வந்துவிட்டேன் என்றேன் அவர் ஐயா நான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார் முறம்பில் ஒரு தேனீர் கடையில் காலை 6-30 மணியளவில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தேன். அதுபோது தம் நண்பரோடு நெடுஞ்சேரலாதன் வருகை தந்தார். இது தன் மாணவர் கடை என்று பெருமிதமாக்க கூறினார் அங்கிருந்த மாணவர் மகனுக்கு அவரது அருமை தெரியவில்லை. 

பின் அங்கிருந்து கோட்ட த்திற்கு அழைத்துசென்றார். பெரிய அரங்கம் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளார். தன்னை என்றும் முன்னெடுத்துச் செல்லாமல் கொள்கைக்காகவே வாழும் திருமகன் ஐயா நெடுஞ்சேரலாதனின்  பணியை எண்ணி இறும்பூதெய்தினேன். தம் பாவாணர் கோட்ட படைப்புகளையும் என்னிடம் வழங்கினார். 

 திராவிடக் கொள்கையின் ஆணிவேர் நம் நெடுஞ்சேரலாதான்  நான் இரு ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கவியரசன் மகள் திருமணத்திற்கு அமெரிக்கா சென்றபோது அய்யாவின் வளர்த்த கிடா மார்பில் குத்துவது வளர்ந்த கிடாவும்தான் குத்துகிறது தம் பாவாணர்கோட்ட  பதிவுகள் நுல்கள் என 5கிலோ இருக்கும் அமஎரிக்காவிற்கு கொண்டு செல்ல அனுப்பிவைத்தார். எம் பொருளையெல்லம் இங்கு வைத்துவிட்டு அந்தப் பொதியை கொண்டு சென்று சிக்காக்கோ பாபுவிடம் வழங்கி நெடுஞ்சேரலாத  அரும்பணியைப் பற்றிக் கூறினேன். இயல்பாக உணர்வோடு உந்துதலோடு வளர்பவர்களை சிதைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க க் கூடாது. மலேசியாவிற்கு பாரதியார் விழாவிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு தனித்தமிழ அன்பர் திருவளவனோடு இணைந்து ஆற்றிய பணி அளப்பரியது.

பின் அவரது இல்லம்  சென்றோம் அன்பே உருவான் ஐயாவின் துணைவியாரை வணங்கினேன்.அவரது வழியினர் வாழ்வு பல்வேறு சிக்கலில் உள்ளதால்  அவர்துணைவியார் நெடுஞ்சேராலாதன் மேல் மிக க் கோபாமாகா இருந்தார். தம் பெண்டு பிள்ளை பதவி பணம் என்று வாழும் பண்டாரப் பரதேசிகள் உள்ள நாட்டில் கொள்கை மாறாச் சிங்கமாக தனித்தமிழ் காக்கும் மறவராக பகுத்தறிவுக் கோமானாக வலம் வருகிறார் நம் நெடுஞ்சேரலாதன். 

அவர் இல்லத்திலிருந்து இராயாகிரிக்கு அழைத்து வந்தார். தாம் பிறந்த மண் இராயகிரி என பெருமை பொங்க கூறினார். வரும் வழியெங்கும் மலைகளும் ஏரிகளும் பசுமைக் கம்பளம் விரிதாற் போன்று செழிப்பாக இருந்த து. அருவிகள் பல இங்கு உள்ளன ஓய்வாக வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார். தம் இளமை கால நண்பர் ஒருவரை அன்போடு அனைத்து சிறு கடையில் உணவு வழங்கினார். நம் நெடுஞ்சேரலாதன். இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்கு காரணம் நான் அரும்பாடுபட்டு இந்த இராயகிரிக்கு வந்துள்ளது இராயகிரியில் பிறந்து அருந்தொண்டாற்றும் நெடுஞ்ச்சேரலாதனின் தமிழ்தொண்டு ஒன்றே.இந்த மண்ணில் பிறந்து தமிழிற்கு அரும் பணியாற்றிய அருணாச்சலனார் முத்துசாமிப் பெருமகன் கந்தசாமிப் புலவர் போன்றோர் படங்களெல்லாம் இங்கே வைத்துள்ளீர்க்ள். இன்றும் தமிழ் வாழ்கிறது என்றால் இங்கு பிறந்த பேரறிஞர்கள்தான்.  

மேனாள் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் பட த்தை தென்காசி மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இராச ஈசுசரன் மிகப் பொறுப்புணச்ச்சியோடு பட த்தை திறந்து வைத்து சென்றிஉக்கிறார். தி.மு.க. ஒன்றுதான் மக்களோடும் தமிழோடும் பயணிக்கிறது என்பதற்கு சிறந்த் சான்று. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியார் அண்ண கலைஞர் வழியில் இயக்கத்தை வழிட த்துகிறார். தமிழ் உணர்வையும் பகுத்தறிவு இய்க்கத்தையும் கட்டிக் காக்கும் இயக்கம் தி.மு.க.

அமர ர் சிவசுப்பிரமணியம் அவர்களின் சகோதர ர்  மக்கள் அனைவரும் அவரின் புகழ் பாடுவதோடு மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியத்தில் சான்றுகளை அடுக்கி வந்தனர் . எனக்கு பெருமகிழ்வாக இருந்த து. தம்பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறார் குற்ப்பாக அவர் மகள் பாடகர் பாடும்போது என் தந்தை இந்தப் பாடலை உணர்ந்து மகிழ்வார் இந்தப் பாட்லைப் பாடுங்கள் எனக் கூறியபோது எந்த அளவுக்கு இணைந்து வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. 

சிவசுப்பிரமணியம் துணைவியார் இங்கே அமைதியின் வடிவாக அமர்ந்துள்ளனர். கால்நடை மருத்துவராகவும் தமிழ்ச்சங்கத் தலைவராஅகவும் பொதுநலத் தொண்டராகவும் வாழ்ல்ந்திருகிறார் என்றால் முழுமையும் அம்மா அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கையே ஆகும்.  

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்                  ஏறுபோல் பீடு நடை

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த பெருமாட்டி. இறப்பு என்பது தூங்கி எழுவது போன்றது என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். அம்மையார் ஐயா அவர்களின் பசுமையான் நினைவோகளோடு வாழுங்கள் என வேண்டுகிறேன்.

          தில்லியில் பணிபுரியும் அவரது மகன் ஞனசம்பந்தன் உரையைக் கண்டு மகிழ்ந்தேன். வெளியூர் சென்றால்தான் நம் மொழியின் அருமை தமிழர்களின் பெருமை புரியும். மிகச் சிறப்பாக ஒரு தமிழியக்கவாதி போன்று உரையாற்றினார். மிகச்சிறப்பு தங்களின் பங்களிப்பு இராயகிரி தமிழ்சங்கத்திற்கு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      நினைவு மலர் ஒன்று வெளியிட்டுள்ளீர்கள்.  மறைந்த மருத்துவரின் பெருமைக்கள் அனைத்தும் அடங்கிய மலராக உள்ளது. அதில் நெடுஞ்சேரலாதனின் கவிதை இராயகிரி மலைகள் மேல விளக்காக நம் ம்ருத்துவரின் பெருமையைப் பேசுகிறது. தலைவர் குருசாமி தம் கட்டுரையில் தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம் என்று எழுதியுள்ளார். கட்டாயம்  இதைச் செய்யவேண்டு. சாதி மத அடையாளங்களை துறந்து தமிழர்களாக இணைந்து கட்டிடம் கட்டுங்கள்.

 உலக நாடுகளிஎல்லாம் தமிழர்கள் தமிழியக்கங்கள் கட்டிடங்கள் கட்டி சிறந்த தமிழ்த்த் தொண்டாற்றுகின்றனர். மலெசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் சிறு கிராமங்களில்கூட கட்டிங்கள் கட்டி தமிழ்த் தொண்டு புரிகின்றனர். அருமை இராயகிரி தமிழ் உள்ளங்களே ஐயா சிவசுப்பிரமணியம் காட்டிய வழியில் பணியாற்றி தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் உருவாக்கி தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என வேண்டி விழைகிறேன். இனமானக் காவலர் பேராசியர் க.அன்பழ்கனார், நாவலர் நெடுஞ்செழியன் தமிழர் தலைவர் வீரமணி போன்றோருக்கு தமிழ்ப்பாலூட்டிய தமிழ்ப் பேராசிரியர்கள் பிறந்த மண்ணில் உரையாற்றியதை பெரும் பேராகக் கருதுகிறேன். வாழ்க இராயகிரி தமிழ்ச்சங்கம் சிவசுப்பிரமணியனார் புகழ் ஓங்குக. 

Sunday, February 18, 2024

 




உலக க் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம்


     எண்ணற்ற நூல்க ளைப் படைத்து இலக்கிய உலகில் தளராது தொண்டாற்றும் மெய்ஞானி பிரபாகர்பாபு அவர்கள் உலகச் செம்மொழி தம்ழிச் சங்கம்  சென்னையில் தூய தாமசுகலை ம்ற்றும் அறிவியல் கல்லூரியை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உல்கத் தமிழர்களை ஒருங்கிணைந்து மாநாடு நட த்துவது பெருமைக்குரிய ஒன்றாகும். சென்னையில் அறிஞர் சான் சாமுவேல் நட த்திய உலகத் தம்ழ் ஆராய்ச்ச்சி மாநாட்டில் பிராபாகர் பாபு அவர்கள் வெளிநாட்டுப் பேராளர்களிடம் அவர் காட்டிய பரிவும் வரவேற்பும் நெஞ்சில் நிலையாக உள்ளன. தூஉய தாமச்சு கல்லூரிப் பெரும்க்களையும் பாராட்டி மகிழ்கிறேன்

    உலகளாவிய நிலையில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளால் தமிழர்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். மலேசிய சிங்கப்பூர் இலங்கை மியான்மர் அமெரிக்கா கனடா ஆசுத்திரேலியா ஐரோப்பிய நாடுகள் தென்ஆப்ரிக்கா  இந்தோனேசியா கென்யா பிரிட்டன் சப்பான் சுவிட்சர்லாந்து என அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் கல்வி மேம்பாட்டினாலும் போராட்டச் சுழ்நிலைகளாலும் போர் பதட்டங்களாலும் அந்தியர் ஆதிக்கங்களாலும் ஆங்காங்கே புலம் பெயர்ந்துள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் தம் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் கலைகளையும் ஆண்மீக எண்ணங்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் பாதுகாத்து வருகின்றானர். 

     நான் இலண்டன் மாநகர் சென்றிருந்த போது ஈழத்து கவிஞர் கருணான்ந்த ராசா திருக்குறளில் காமத்துப் பாலை மட்டும் பிரித்து வள்ளுவன் காதல் என்ற நூலை எழுதி பதிப்பித்து என்னிடம் தந்தார். புலம்பெயர்ந்து தம் வாழ்க்கைநிலைகளில் போராடி குடும்பம் காத்து மரபுக் கவிதையில் நூல எழுதி அதைப் பதிப்பித்துள்ளார் என்றால் திருவள்ளுவரின் திருக்குறள் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியலாம். இலண்டனில் பேராசிரியர் கோபன் மகாதேவா திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட்டுள பாங்கு என்னை வியக்கவைத்தது. அணமையில்தான் பேராசியர் ,கோபன் மகாதேவா காலமானார். சுடரொளி வெளியீட்டுக் கழகம் சார்பில் இதழாளர் சம்பந்தம் பொன் பாலசுந்தரம்  உலகம் முழுவதும் கவிதைப் போட்டி நிகழ்வை தமிழ்ப்பணியில் வெளியிட்டு  வந்த கவிதைகளை பரிசீலித்து முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் ஆறுதல் 25 பெருமக்களுக்கு பரிசுகள் அறிவித்து சென்னையில் பன்னாட்ட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சென்னையில் விழா நட த்தி தந்தையார் பெருங்கவிக்கோ திருக்கரத்தால் அனைவருக்கும் வழங்கினோம். மரபுக் கவிதைகளின் தாக்கம் அயலகத்தமிழர்களிடம் உள்ள உணர்வை அறியலாம்.

    பிரான்சில் அருளாளர் சிவதாசன் அவர்கள் யான் சென்றிருந்த போது அங்குள்ள கோவிலுக்கு சிலைகள் வேண்டும் என்றார் நான் தமிழகம் வரும்போது ஆவண செய்கிறேன் என்றேன். முத்துக்குமாரசாமி குருக்களும் சிவதாசன் அவர்களும் தமிழகம் வருகை தந்தனர். அண்மையில் காலமான் அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் வழி கும்பகோணம் சாமிநாதன் நிறுவனம் வழியாக சிலை செய்து அனுப்பி வைத்தோம். அந்த சிலை இன்றும் தமிழர்கள் வழிபடு சிலைகளாக உள்ளது. நான் மீண்டும் பாரிசு சென்றபோது கண்டும் மகிழ்ந்தேன். அண்மையில் நான் பாரிசு சென்றபோது நண்பர் செயராமன் கோவிந்தசாமி பிர்தவுசு நட த்தும் சங்கீதா உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை அனைவரும் காணும் வண்ணம் வைத்துள்ளார்.  செயராமன் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை பிர்தவுசு அவர்களே  வெளியிட்டுள்ளார். தமிழ் இலைக்கியங்களின் தாக்கம் உலகத் தமிழர்களிடம் நீக்கற நிறைந்துள்ளதை அறியலாம் 

     இந்த ஆண்டு பிரான்சு சுடார்சு பர்க் நகருக்கு தலைவர்கிருபானந்தன் அழைத்திருந்தார்கள். அங்குள்ள தமிழர்கள் எல்லம் கூடி நட த்திய பொங்கல் விழா என் வாழ்நாளில் மறக்க இயலா விழாவாகும். தமிழ்ச்சோலை என்ற அமைப்பின் மூலம் தமிழ்ப்பள்ளி நட த்துகின்றனர். அனைத்து பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறல் போட்டி நட த்தி பரிசு வழங்குகின்றனர். வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகளை வழங்கினேன். தமிழ் பேச்சுப் போட்டி சிறுகதைப் போட்டி நடனப் போட்டி எனதமிழ்க் கலைகளைப்  சிறப்பாகப் பாதுகாக்கின்றனர்.

    இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நகருக்கு வள்ளுவன் பாடசாலை நிறுவனத்தார் என்னை திருவள்ளுவர் ஆண்டு விழாவிற்கு அழைத்திருந்தனர். நிறுவனர் முர்கவேள் ந ந்தினி இணையர் திருவள்ளுவரை பள்ளக்கில் ஏற்றிவைத்து திருக்குறள் பாடி மேடைக்கு கொண்டுசென்றது வரலாற்றுப் பதிவாகும்  நானும் பெர்ன் நகர் மேயரும் சிறப்பு விருந்தினராக இருந்தோம். கவியரங்கம் பட்டிமன்றம் உரையரங்கம்   நாட்டியம் நாடகம் பாடல் என அனைத்தும் கொஞ்சு தமிழில் சிறப்பாக நடைபெற்றது வியப்பைத் தந்த து. அழகு தமிழை தம் வழித்தோன்றல்களுக்கு ஊட்டியுள்ளதை அறிய முடிந்த து.

    பேர்ன் ந்கரில் உள்ள திருகோயிலுக்கு அருளாளர் சசி அழைத்திருந்தார். அங்கு முழுமையும் தமிழிலேயே வழிபாடு, ஆன்மீகத் தமிழை போற்றி பாதுகாக்கின்றனர். தேவாரம் திருவாசகம் அனைத்தும் பெர்ன் ந்கரில் ஒலிக்கின்றது.

    யான் மியான்மர் சென்றிருந்தபோது அக்கு இராணுவ ஆட்சி நடைபெறுகிற்துஇருப்பினும் வள்ளுவர் கோட்டம் அமைத்து திருக்குறளை ஓதுகின்றன. தமிழ்க்கல்விக்கு பள்ளி நட த்துகின்றானர். இரங்கூன் நகரில் கோவில்களில் தமிழ் பயிற்றுவிக்கின்றனர். பெருங்கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்களின் உறவினரிடமிருந்து பர்மீய மொழியில் திருக்குளை மொழிபெயர்த்த நூலை பேராசியர் ஆறு அழகப்ப்ன் பெற்று தமிழக அரசிடம் வழங்கினார்.

செருமனி ரெய்னே ந்கர் சென்றிருந்தபோது ரெய்னே நதியின் பாலத்தில் பல்வேறு நாட்டின் அறக் கருத்துகள் அவரவர்கள் மொழியில் உள்ளன. நம் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் வரிகள் உள்ளதை உலகப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் கமலநாதன் காண்பித்தனர். 

    தென்னாப்பிர்க்கா ந்கரில் டர்பன் நகரில் நம  அன்மீக க் கோயில்கள் பல உள்ளன. அங்கு தமிழ் பயில வாய்ப்பில்லை மிக்கி செட்டி என்ற தமிழர் சென்னை இரமசாமி பல்கலைகழகத்தோடு இணைந்து 50 பெருமக்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்து அங்கு உலப் பண்பாட்டி அறிஞர்கள் டர்ப்ன் சென்று

     பட்டம் வழங்கினோம், இன்று தென்னாப்பிரிக்கா தமிழர்கள் தமிழ் பயில்கின்றனர்.

மலேசிய சிங்கப்பூர் அமெரிக்க கனடா என அனைத்து நாடுகளைப் பற்றியும் பதிவிட்டுள்ளேன். தாய்மொழி வழி பயின்றால்தான் கல்வித் திறன் அதிகரிக்கும் தமிழை அறிந்து உலகை அறிவோம்

 மத்தியில் வெற்றி காண்போம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


இந்திய சனநா யகமே

    இடரிடும் நிலையில் இன்றே 

உந்திடும் தலைமை அமைச்சர்

    உதிர்த்திடும் சொற்கள் எல்லாம் 

நொந்திடும் மாற்றுக் கட்சி 

    நசுக்கிடும் அவலம் அன்றோ! 

வெந்ததை தின்னும் மக்கள் 

     வேதனை தீர்க்காப் பேச்சு! 


தமிழக சட்ட மன்றம்

    தகுதியைக் குலைக்கும் இந்தாள்

அமிழ்தெனப் பேசிய மன்றில் 

    ஆளுநர் மமதைப் போக்கால்

 தமிழினம் அடக்கும் ஈனம்  

    தக்கதை உணர்த்தா ஒன்றியம் 

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட

      தடுத்திடத் துணியும் அவலம்!


வெள்ளத்தைக் கண்டும் ஏனோ 

    வெறுமனோ வெற்றுக் கூச்சல்

 கள்ளமில்  மக்கள் மீள 

    கருணையாய் பொருளை வழங்க 

ந்ல்லறம் இல்லா ஒன்றியம் 

     நாட்டினில் துரத்துவோம் இன்றே!

 வெல்தமிழ் ஸ்டாலின் ஆட்சி  

    வெற்றியைக் காண்போம் நன்றே!


உயிரையே கொடுத்து வென்ற 

    உன்னத தமிழ்ன் ஆட்சி

 வயிரையே நிறைக்கும் மாந்தர் 

    வஞ்சக சூழ்ச்சி  எல்லாம் 

பயிரிடை உள்ள களையாய்   

    பாரினில் அறுத்து எறிவோம்

உயிரெனத் திராவிட ஆட்சி 

    உரிமையாய் மத்தியில் காண்போம்!

Friday, February 16, 2024

 புண்ணியர் ஸ்டாலின் வாழி

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்.


உயர்தனிச் செம்மொழி மாந்தர்   

    உன்னத நாட்டில் வாழும் 

வியத்தகு தமிழர் கூட்டி 

    வித்தக் வருகைத் தந்து 

நயத்தகு நானிலத் தமிழர்

    நன்குள பெருமை பேசி 

அயர்விலாப் பயனை நல்கும் 

      அணிபுகழ் ஸ்டாலின் வாழ்க


தமிழரின் தொண்மை கண்டு 

    தரணியில் வென்ற தமிழர் 

அமிழ்தான சேவை எண்ணி 

    அன்பு நெஞ்சத்   தோடே 

பொழியும் மழையப் போன்றே

    பொன்மாலை விருதைத் தந்தார்

 விழியெலாம் இன்பம் பொங்க 

            வித்தகத் தலைவர் ஸ்டாலின்       


வேர்களைத் தேடியே எங்கும் 

    வெல்தமிழ் மக்கள் அழைத்து 

பலகனித் தோட்டம் போன்றே 

    பல்நாடு மக்கள் கண்டோம்

களம்பல கண்ட மாந்தர்

    கலைஞர் கவிஞர் சான்றோர் 

புலம்பெயர் மாந்தர் வந்தார்

    புண்ணியர் ஸ்டாலின் வாழ்க                                                                                                      

 என் தமிழாசான் மெலட்டூர்

 நாராயண பாரதி

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


மெலட்டூர் நாராயணபாரதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கும் பேராசிரிரியர் கவிஞர் மின்னூர் சீனிவாசன் அவர்களே நூலை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர்  கிருட்டிணன் அவர்களே தம் மனைவி கவிஞர் என பெருமையோடு கூறி ஊக்குவிக்கும் மூத்த வழக்கறிஞர் செல்லையா அவர்களே  அருமை நண்பர் அரிமா மணிவண்ணன் அவர்களே முகம் இளமாறன் அவர்களே  இயல்பாக தில்லியிலிருந்து வருகை தந்து உரையாற்றி  நிகழ்வைச் சிறப்பிக்கும் முனைவர் சங்கர் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெருங்கவிஞர் கு.ம.பா மகன் கபிலன்  உள்ளிட்ட அவையை வணங்குகிறேன். பலமுறை இந்த் அரங்கத்தை வழங்கி மெலட்டூர் நாராயண பாரதியை சிறப்பிக்கும் சத்சங்க தலைவர் கிருட்டிணமூர்த்தி அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். 

 சிறந்த செயல்பாடுகளைச செய்பவர்களை மனதாராப் பாராட்ட வேண்டும் அதில் எந்தக் குழு உணர்ச்சியும் இருக்க் கூடாது. இந்த அவையில் கவிஞர் சலாலுத்தின்  பகுத்தறிவுக்கவிஞர் வெற்றிப் பேரொளி எழுத்தாளர் முயற்சி முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.  மெலட்டூரார் அனைத்துத் தரப்பிலும் எவ்வளவு பேரன்போடு வாழ்ந்திருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும், 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

 எச்சத்தார் காணப் படும்

என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி உணரலாம்.

திருவல்லிக்கேணி முசுலீம் மேல்நிலைப்பள்ளியில் நான் பள்ளி இறுதி வகுப்பு (பதிணோராம் வகுப்பு) படித்தேன். எனக்கு தமிழாசிரியர் தந்தையார் பெருங்கவிக்கோ. இறுதி வகுப்பு முடிந்தவுடன் புகுமுக வகுப்பிற்கு சேர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தழிழாசிராகப் பணியாற்றிய இரங்காச்சாரியார் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துசென்று எனது புகுமுக வகுப்பிற்கு எங்கு சேர்க்கலாம் என்று வினவிய்போது அவர் காட்டிய வழிதான் தனராச் பெய்ட் செயின் கல்லூரி.. நெடிய உருவத்தோடு பஞ்சகசம் கட்டி நாம மிட்டு தமிழ்ப்பணியாற்றிய ஆசான் இரங்காச்சாரி அவர்கள்.அவர்களின்  திருத்தாள்களில் வணங்கப் பணிப்பார் தந்தையார் . அருமைத் தந்தையார பெருங்கவிக்கோ.அவர் காட்டிய வழியில் த.பெ.செயின் கல்லூரியில் சேரிந்தேன்.

சிந்தாதிரிப்பேட்டை எம் இல்லத்திலிருந்து துரைப்பாக்கம் தபெ செயின் கல்லூரிக்குச் செல்வேன். அன்று கல்லூரியைச்  சுற்றி கண்ணுக்கெட்ட்டியவரை வெட்ட வெளியும் எதிர்ப்புறம் சவுக்கு மரங்களும் இருக்கும். மழை வந்துவிட்டால் கல்லூரியைச் சுற்றி கடல் பெருக்கெடுத்த து போல் இருக்கும். அந்தக் கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் பணியாற்றினர. நான் படிக்கும்போது பேராசிரியர் நாகராசன் முதல்வராக இருந்தார். அருமையான் பேராசிரியப் பெருமக்கள் பணியாற்றினர். சில பேராசிரியர்கள் நெஞ்சை விட்டு நீங்கார். அதில் ஒருவர்தார் மெலட்டூர் நாராயணபாரதி. லாசிக் வகுப்பு எடுத்த பேராசிரியர் உதயசங்கர் பூகோள வகுப்பு பேராசிரியர் பார்த்த சாரதி  தம் வகுப்பரையில் உயிரைக் கொடுத்து பாடம் நட த்துவார். தமிழ்ப் பேராசிரியர்கள் இ.சே.சுந்தர்  கண்ணன் சந்திரமவ்லி குறிப்பிட த் தக்கவர்கள். சந்திரமவுளி சாரணர் இயக்கப் பொறுப்பாளாரக இருந்தார். நான் சாரண் இயக்கத்திலும் பங்கு பெற்றிருந்தேன். மாணவர்படைக்கு தலைவராக அருமை ந்ண்பர் பாட்கர் செயல்பட்டார். அருமை ந்ண்பர்கள் சவுந்திராசன் இராவீந்திரன் சிவக்குமார் இராமலிங்கம்  போன்ற பல நண்பர் சாரணர் இயக்கத்தில் இருந்தனர். இன்றும் அந்தத் தொடர்புகள் பசுமையாக உள்ளது.

கல்ல்லூரியில் தமிப் பேராசிரியருக்கே உரிய  உடையுடனும் செறுக்க்கான் நடையுடன் புன்சிரிப்பு தவழும் முகப்பொழிவுடனும் ஒரு பெட்டியோடு வரும் காட்சி என் கண்முன்  நிற்கிறது.

 அருமைப் சகோதரர்  கவித்தேனி வசந்தகுமார் அவர்கள் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச்  சிறப்பாகத் தொகுத்துள்ளார். உண்மையிலேயே தம் ஆசானின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கைத் தொகுப்பை எழுதி நிலைத்த புகழைத்த தந்துள்ளார். வசந்தகுமார் பணி மகத்தான் பணி  வாழ்த்துகள். பேராசிரியாரின் ஒவ்வொறு நிகழ்விலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சராசரியாக வெறும் பாட த்தை மட்டும்  சராசரி ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் திறன்களை அறிந்து அவர்களை ஊக்குவிப்பதில்  தலையான பேராசிரியர் நாராயணபாரதி.  இன்று பாரதிய சனதா கட்சியில் இருக்கு கவிஞர் சுபாசு என்னோடு படித்தவர். அன்றே வானதி எனப் பெயர் மாற்றி கவிதைகள் படைத்த சிறந்த மாண்வர். கல்லூரிக் காலங்களில் பேராசான் கவியரங்கங்கள் நட த்தி மாணவர்கள் கவிதை யாக்க ஊக்குவிப்பார். ஒரு முறை பாரதியார் பற்றி கவியரங்கம் நட த்தினார் நானும் சுபாசும் மற்ற மாணவர்களும் பங்கேற்றோம் . அன்று நான் எழுதிய மகாகவி பாரதியைப் பற்றி எழுதிய கவிதை என் கவியாற்றலைத் தூண்டியது நினைவில் உள்ள சில வரிகள்

 பாரதியை பைந்தமிழில் 

பாடச் சொன்னார்

பண்பரசர் எங்கள்திரு

 பாரதி ஆசான்

பா “ரதி “யைப் பாடுதற்கு

 யான் பாவலன் இல்லை

 பாரதியின் தாள் பணிந்து

 தொடங்கு கின்றேன்  

தொடர்ந்து எழுதிய வரிகள் நினைவில் இல்லை. தொடர்ந்து உலகெங்கும் கவிதையில் பயணித்து வருகிறேன். 

நண்பர் சுபாசும் மற்ற மாணவர்களும் சிறந்த் கவிதைகள்  வழங்கினர்.  இன்றும் கவிஞர் சுபாசின் கவிதைகள் முகநூலில் காண்பேன் நாராயண பாரதியி தாக்கம் இருக்கும்.

புகுமுகவகுப்பிற்குப் பின் வணிகவியல் பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். முதுகலை வ்ணிகவியல் மதுரை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தேன்.

சுட்டி மிகச் சிறந்த இதழ் அந்த இதழை பேராசிரியர் சுந்தர் பேராசிரிய நாராயண் பாரதியும் நட த்திவந்தனர். தமிழில் மிகச் சிறந்த்  இதழ் . தமிழில் செறிந்த செம்மையான் செய்திகளை வழங்கிய இதழ் . அதில் ஆசானின் பங்களிப்பு மகத்தானது என்று பேராசிரியர் இ.சே. சுந்தரே கூறியுள்ளார். சுட்டி போன்ற இதழ்களை நட த்துவது சாதாரனச் செயல ல்ல சாதனைச் செம்மலாக வாழ்ந்துள்ளார்.

அம்பத்தூரில் கம்பன் கழகத்தை உருவாக்க அவர் பட்ட பாட்டை அருமையாகப் பதிவிட்டுள்ளார் நண்பர் வசந்தகுமார். கம்பனின் புகழைப் பரப்பிய சான்றோரக வாழ்ந்த பெருமகன்.

பேராசானின் நினைவேந்தல்  கூட்டம் அம்பத்தூரில் நடப்பதறிந்து  ஓடோடிச் சென்று ஆசானுக்கு அஞ்சலி செலுத்தி  தமிழ்ப்பணியுலும் வெளியிட்டேன். நீதியரசர் வள்ளிநாயகம் பங்கேற்று சிறப்பித்தார்.

ஏழை எளியோர்க்கு வாரி வாரி வழங்கி 

ஈதல் இசைபாட வாழ்தல் அதுவல்ல

ஊதிய மில்லை உயிர்க்கு

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த தமிழ் அறிஞர் புகழ் ஓங்குக.