Thursday, September 4, 2014

மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு


           சிறப்புமிக்க மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.  எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்களுக்காக வாங்கப்பட்ட கட்டிடம்  என அறியும்போது பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

யான் யாதும் ஊரே நுலை வெலியிட வேண்டும் எனறு அருளாளர் அசுவின் முத்து அவர்களிடம் கூறிவுடன் முதுபெரும்கவிஞர் தமிழ் நெஞ்சர் காரைக் கிழார் அவர்களைத் தொடர்பு கொண்டார். மனம்  மகிழ்வோடு ஐயா அவர்கள்  இடத்தைத தந்து வாழ்த்தையும் தெருவித்துள்ளார்.

இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் ஆசிரியமணி மாணிக்கம்  அவர்கள் மிகச் சிறந்த தமிழ்த் தொண்டர்.  மாணிக்கம் அவர்களின் அழைப்பின் பேரிலேயே மகாகவி பாரதி  விழாவில் ஈப்போ நகரில் பங்கேற்று தற்போது இங்கே இந்நிகழ்வில் அரிய உரை ஆற்றியுள்ளார்கள்

ஆய்வறிஞர் சந்திரகாந்தன் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவாளார். தமிழ் உலகுக்கு தம் ஆய்வுக் கட்டுரை வழியாக பூசாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திர்சோழனின் பதிவை வழங்கிய பெருமகனார். நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளேன். தற்போது ஆவணப் படங்கள் எடுப்பதில் காம்ரேன் மலைப்பகுதியில் படப்பிடிப்புக் குழுவினருடன் பர்பரப்பாக உள்ள நேரத்த்லும் என் அழைப்பை ஏற்று இந்நூலிற்கு மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

           இந்நூலை வெளியிட்டுள்ள பேருரை ஆற்றிய மூத்த தலைவர் டத்தோ வி.க.செல்லப்பன் வரவேற்புரையாற்றிய  ஆசிரியர் திலகம் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கிய அருள்நெஞ்சர் இரெங்கய்யா நன்றியுரையாற்றிய இந் நிகழ்வுக்கு முதுகெழும்பாகச் செயல்பட்ட அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம். இந்த அழைப்பை வடிவமைத்த அருமை கணினி  வல்லுனர் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.  

          மலேசிய  மண் தமிழைத்  தமிழகாப் படிக்கும்  பயிற்றுவிக்க்கும் மண். இந்த மண்ணில்தான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6 ஆம் மாநாடான தமிழர் ஒற்றுமை மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினீர்கள். இன்றும் தமிழ் தமிழர் இன்னல்களுக்கு குரல் கொடுக்கும் வல்லமைமிக்க தமிழர்கள் இங்கே வாழ்கிறார்கள்.  அப்பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
யாதும் ஊரே நூல் உலகெங்கும் வாழும்  தமிழர்ளைப் பற்றிய பதிவுப்  பயணநூல். அமெரிக்கா கனாட ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளைப் பதிவு செய்துள்ளேன் உலகம்   முழுமையும் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பதிவு செய்துள்ளேன். ஒரு நிகழ்ச்சியை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

          கனடாவில் டொரண்டோ நகரில் சீவரட்ணம்  அம்மையா வாழ்ந்து வருகிறார்.  யான் அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அம்மையார் எம் தமிழ்ப்பணியிலும் எழுதி வருகிறார். அம்மையார் அவர்கள் அங்குள்ள தொலைக்காட்சிகளில் அடிக்கடி பேட்டி கொடுப்பார். அம்மையார் இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கனடாவில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மண்ணின் பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஈழத்தில் தம் வீடு பெரிய வீடு என்றும் மிகப் பெரும் தோட்டம் உள்ளதையும் குறிப்பிட்டு இன்று தரை மட்டமாகியுள்ளது கன்கலங்கிக்  கூறினார். கனடா வீட்டில் உள்ள தோட்டத்தில் இது ஈழத்திலிருந்து கொண்டுவந்த கத்திரிச் செடி அனைத்துச் செடிகளீலும் என் மண்ணைக் காண்கிறேன் என்று கூறியது இன்றும் என் கண்களில் நீர் பெருக  வைக்கும்.

           ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த முறையிலும் தீர்வைக் காணாத்து தமிழினத்திற்குச் செய்த கொடுமை. ஈழத்திற்குச் சென்ற பெஇண்டன் பிரதமர் டேவிகாம்ரான் யாழ்ப்பாணம் சென்று தமிழர்க்ளின் இன்னல்களை உலகறியச் செய்தர்ர். ஐநா அதிகாரி வீரப் பெண்மணி நவனிதம்பிள்ளை ஈழத்துக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். ஐநா மன்ற விசாரனையில் போர்க்குற்றவாளி இராசபக்சே தண்டிக்கப்பட்டு ஈழம் கிடைத்தால்தான் சீவரத்தினம்  போன்ற ஈழ் மக்களின் நெஞ்சக் குமுறல் நீங்கும். அதற்கான பணிகளைச் செய்வதே ந்ம்முடைய முதற்பணி..

         மலேசிய மண்ணில் கவிஞர்கள் எழுத்தாளர்கள்  தமீழுக்கு மிகப்பெரிய ஆக்கங்களைத் தந்துவருகின்றனர். டான்சிறீ சோமசுந்தரம் அறவாரியம் உலகின் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரிய பரிசுத் தோகை அமெரிக்க டாலர் 10000 வழங்குகிறது. ஆண்டுதோறும் எண்ணற்ற மாநாடுகள் நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்க்கும் மலேசியத் தமிழர்களை வணங்கி விடை பெறுகிறேன்..

(28-12-2013 அன்று மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

ஒன்றுபட்டுத் தாழ்வுகளை நீக்குவோம்


        ஈப்போ நகரில் காவல்  துறையில் அதிகாரியாகப் பணியாற்றும்  ஐயா அருண் ஆறுமுகம் அவர்களின் அப்பழுக்கில்லாத் தமிழ்ப்பணியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.  அம்மா காமலாட்சி ஆறுமுகம் அவர்களைத் தொடர்பு கொண்டபோது தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வழி எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் ஆறுமுகம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதறிந்து மிக்க மகிழ்ச்சியடைநதேன். மிகக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த ஆறுமுகம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். .

ஆசிரியமணி மாணிக்கம் ஏற்பாடு செய்த மகாகவி பாரதியின் பிறதநாள் விழாவிற்கு என்னுடைய  தலைமையில் 12 அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் அருண் ஆறுமுகம் ஐயா அவர்களின் பேருழைப்பைக் கண்டோம். யாங்கள் கெடா பினாங்கு சென்று ஈப்போ வழி வரும்போது அறநெறிக் கழகத்தின் சார்பில் அனைவருக்கும் பாராட்டு வழங்கி விருந்து வழங்கி  சிறபபித்தார். அன்று நெல்சன் மண்டேலா அவர்கட்கு இரங்கல்  தெருவித்து அவரைப் பற்றிய கட்டுரையும் வழங்கினர்.

அருமை நண்பர் அருணாஆறுமுகம் அவர்கள் தம் காவல் துறை அனுபவங்களை நூலாக தமிழகத்தில் வெளியிட உள்ளார். பெருமகனை தமிழகத் தமிழர்களின் சார்பாக வரவேற்கிறேன்.

தமிழர்களின் தடங்களை எல்லாம் அழிக்க தமிழ் விரோதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அண்மையில் பூசாங் பள்ளத்த்தாக்கில் உள்ள இராசேந்திர சோழன் பதித்த தடங்களெல்லாம் உடைக்கப்படுவதை
பத்திரிக்கைகளில் கண்டு அதிர்ந்தேன். யான் பன்முறை பூசாங்க் பள்ளத்தாகிற்கு சென்றுள்ளேன் தற்போதும்  அறிஞர் பெருமக்களோடு சென்று வந்தோம்.

          கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

         பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.

          பூசாங்க் பள்ளத்தாக்கில் சோழர் காலத்தில் கட்டிய கோயில்  வடிவம் இன்றும் உள்ளது அதில் 10 ஆம் நூற்றாண்டு கோயில்  என்று குறிப்பிட்டுள்ளார்களேயொழிய அதில்  சோழர்கள் பற்றிய பதிவு இல்லாதது வருந்தத்தக்கது
.
         இருப்பினும் பள்ளத்தாக்கில் ஒரு சீனக் கட்டுமான நிறுவனம் உடைத்தெடுபதை மலேசியத் தமிழர்களின் எழுச்சியால் தடை செய்யப் பட்டுள்ளது கண்டு பெருமகிழ்ச்சி யடைகிறேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்ற்மை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு

என்ற மகாகவி பாரதியின் பாடலைக் கூறி அனைவரும் ஒன்றுபட்டு தாழ்வுகளை  நீக்குவோம் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(25-12-2013 அன்று மலேசியா ஈப்போ தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை)

தமிழர் திருநாள்


           உலகத்தமிழ்  எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் போன்றே நம்மையெல்லாம் மேடையில் ஏற்றி தாம் கீழே இருந்து இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டும்  பெரியார் பெருந்தொண்டர் எழுத்துச் செம்மல் மூத்த வழக்கறிஞர் சமரசம் ஐயா அவர்களே  நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வெங்கடேசன் அவர்களே, முன்னிலைவகிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களே மிகச் சிறப்பாக உரையாற்றிய பெருமக்கள் பேராசிரியர் சம்பத் குமார் புலவர் சதாசிவம் கவிஞர் சொக்கர் மணாளன் கவிஞர் மதி சி.குப்பன் மகளிர் மாமணியாக இங்கு உரையாற்றிய செந்தமிழ்செல்வி குணசேகரன் அவர்களே, அவையிலே அமர்ந்திருக்கும் எங்களது தமிழ்ப்பணியின் நீண்ட காலப் படைப்பாளர் படைக்களப்பாவலர் மூர்த்தி அவர்களே, மலேசியா புகுத்தறிவு மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு  நடந்த மாநாட்டு நிகழ்வுகளை 16 பககம் மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்ட  ஆற்காட்டிலிருந்து இங்கு வருகை தந்துள்ள ஆசிரியப் பெருமகன் புலவர் பன்னீர்செல்வம் அவர்களே திரளாக வருகை தந்திருக்கும் வேலூர் தமிழ்ப்பெருங்குடிமக்களே உங்கள் அனைவருக்கும்  எம் பணிவான வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

          தமிழர் திருநாளை நாம்  கொண்டாடக் நாமெல்லாம் இங்கு கூடியுள்ளாம். தமிழ் தமிழர்  சிந்தனைகளெல்லம் தமிழ்நாட்டில் பின் பற்றப்படுகிறதா என்றால் வெட்கப்பட வேண்டியுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு என தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பாவேந்தர்                பாரதிதாசன்,முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் மற்றும் அறிஞர் பெருமக்களெல்லாம் கூடி எடுத்த முடிவை  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழகஅரசின் ஆண்டாக முத்ன்முதல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது நடைமுறைப்படுத்தி வழக்கத்தின் இருந்து வந்தது.. தற்போது சென்ற முறை  அவர் ஆட்சி செய்தபோது தை மாதம் தமிழாண்டின் தொடக்கமாக  திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமே  தமிழாண்டாக அறிவித்து அதை உலகமே  கொண்டாடுகிறது.ஆனால் இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழாண்டை சித்திரையாகக் கூறுகிறார்கள். மிகுந்த வெட்கக்கேடாக உள்ளது.

           சித்திரை தமிழாண்டு  தொடக்கமெனில் 60 ஆண்டுளில் ஒரு தமிழ்ப் பெயர்களாவது உள்ளதா. ஆண்டுப் பிறப்புக்கு அவர்க்ள கூறும்  பகுத்தறிவுக்கு உகந்ததாக உள்ளதா பகுத்தறிவுக்கு ஒத்ததா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்துவரை திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு. பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்.

           நான் பர்மா சென்றிருந்தபோது தட்டோன் நகர்ப் பகுதிக்கு சென்றிருந்தோம்.அங்கு திருக்குறள் பெரியார் அமரர் மாரிமுத்து அவர்கள் எழுப்பிய வள்ளுவர் கோட்டம் கண்டு  மெய்மறந்தேன். அங்கு திருவள்ளுவர் சிலை முன்பு ஓதுவார் குருசாமி அவர்கள் திருக்குறளை  ஓதி வழிபாடு செய்தது இந்த மறைமொழி உலகமெங்கும் வாழும தமிழர்கள் பகுதிகளில் என்று ஒலிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. தட்டோனிலிருந்து யங்கூன் திரும்பியபோது ஒரு சுமையுந்தில் வண்ணவிளக்குகள் சூழ் திருவள்ளுவர் படத்தி ஏந்தி தமிழ்மக்கள் உலா வந்தனர்.

          சுவிட்சர்லாந்தில் முருகவேள் நந்தினி இணையர் வள்ளுவன் பாடசாலை வைத்து ஆண்டுதோறும் திருவள்ளுவர் ஆண்டான தமிழ் ஆண்டை  மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

          மலேசியாவில் திருவள்ளுவர் ஆண்டே தமிழ் ஆண்டுஎன பல விழாக்கள் பல  தமிழ் அமைப்புகள்  மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் சிந்தனைகளெல்லாம் புதைக்கப் படுவது கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாட்டில் தமிழ் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆலயங்களில் தமிழ் இல்லை. ஆட்சியில் தமிழ் என்று சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் போராடினாலும் தமிழுக்கு இடமில்லை. கொடுமையிலும் கொடுமை பள்ளிகளில் தமிழ் இல்லாத அலங்கோலம் இன்று உள்ளது. கொடுமையின் உச்சமாக இந்த அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை புகுத்துகிறது. தமிழர் திருநாளை கொண்டாடும் நாம் எண்ணி எண்ணி வேதனைப்படும் கொரடூரம் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர்கள் அவலம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இட்லரைவிடக் கொடிய இராசபக்சே இலட்சக்கணக்காண தமிழர்களைக் கொன்று குவித்து முள்வேலிகளில் மண்ணின் மைந்தர்களை அடைத்து வைத்துள்ள கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. தமிழினத்தையே அழிக்கும் கொடூரத்திற்கு இந்தியஅரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உலகமெங்கும் 10 கோடித் தமிழர்கள்  வாழ்ந்தும் பயணின்றி ஒப்பாரியாகவே உள்ளது. இந்த பயங்கரவாதத்தைப் புரிந்த இராசாபக்சே ஐநா மன்ற நீதிமன்றத்தில் தண்டிக்கப்படு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப் படவேண்டும். ஈழத் தமிழர்களின் குமுறல் கட்டாயம்  நிறுத்தும்.

உலகமெங்கும் பரவிச் சென்ற ஈழத் தமிழர்கள் தமிழ் தமிழர் பண்பாட்டை கட்டிக்காத்து வருகிறார்கள். தமிழ்மொழி  உலக மொழியாக வலம் வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மொழியின் சிறப்பை பேணிப் பாதுக்காகின்றனர். கனடா பாராளுமன்றத்தில் ஒரு இராதிகா எனற தமிழ்ப்பெண்மணி  பாராளுமன்ற உறுப்பினராகி பாராளுமன்ற முழக்கமே தமிழில் முழங்கி அனைத்தும் பெருமக்களும் கரஒலி எழுப்பி மகிழ்ந்தனர். கெராலிசு சிம் என்ற பாரளு மன்ற உறுப்பினர் தம்முடைய தொகுதி மக்களுக்கு தமிழில் அரசு சட்ட்திட்டங்களை அச்சடித்து வழங்கியுள்ளார்.

ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்க்ளின் குடும்ப்ப பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன.இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்ச்கத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்த்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் தமிழை பல நூற்றாண்ண்டு காலமாக பல்வேறு ஆதிக்க சக்திகள் அடக்கிஒழிக்க எண்ணின.  ஆனால் தமிழும் தமிழரும் பீனிக்சு பறவையாக ஒளிர்ந்துகொண்டிருகிறார்கள்.

  ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்களின் குடும்பப் பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன. இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்சகத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயப் பொறுப்பும் திராவிட இயக்கப் பெருந்தொண்டரும் எழுத்துச்செம்மல் சமரசம் ஐயா அவர்க்ள் அழைத்தமைக்கு நெஞசார்ந்த நன்றியைக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் சார்பில் 27-11-2013 அன்று நடந்த தமிழர் திருநாள் விழாவில் ஆற்றிய உரை)