Thursday, August 19, 2010

நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி

நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்


புத்தனைக் கண்ட தில்லை
புரியுமன ஞானத் தேடல்
சித்தமுடன் உலகை ஆளும்
சீராளன் வழியில் இகேதா
வித்தகன் விரிஉலக மன்றம்
விரிவாக்க கவிச் சித்தன்
நித்தமும் அமைதி வேண்டி
நிதம்பாடும் வானம் பாடி

கவிதையாம் களத்தில் கண்டார்
கவிஞானி சீனீ வாசன்
புவித்தலத் தொடர்பை நாட்டி
புத்தெழுச்சி இகேதா தந்தார்
தவித்தாரைத் தாங்கி நிற்கும்
தலம்வெல் பத்ம நாபர்
குவித்தபுகழ் பெருங்க விக்கோ
குவலயம் கண்ட இகேதா

கொத்துக் கொத்தாய் மாய்ந்த
கொடுமை நாகசாகி கிரோசிமா
செத்ததுவும் பவனி வரும்
செழுமைவளர் சப்பான் மண்ணில்
புத்தமுதாய் வந்த அண்ணல்
புரிஞான வள்ளல் கோவாம்
எத்திக்கும் புகழ் ஓங்கும்
ஏந்தலாம் இகேதா வாழி

போங்சாய் வளர் நுட்பம்
பொதியும் தனிச் சான்றாய்
எங்குமே பரவி நிற்கும்
எழுச்சியாம் சோகா கக்காய்
தங்குதடை துன்பம் எல்லாம்
தகர்த்துஎழும் இன்பம் இகேதா
பொங்கும்நற் கல்வி ஞானம்
போதிக்கும் ஞானி இகேதா

Monday, August 16, 2010

உலகத் திருமறை திருக்குறள்


உலகத் திருமறை திருக்குறள்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர், தமிழ்ப்பணி

[சென்னையில் குட்செப்பர்டு பள்ளியில் 15-8-2010 அன்று நடந்த விடுதலை நாள் விழாவில் திருக்குறள் அரங்கிற்கு தலைமையேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வழங்கிய உரை]

திருக்குறள் உலகின் ஒப்பற்ற மறை நூல். 2041 ஆண்டுகட்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் உலக மானிடத்திற்கு திருக்குறளை அர்ப்பணித்துள்ளார். அறம் பொருள் இன்பம் என முப்பாலில் திருக்குறள் உள்ளது,.அறத்துப்பாலில் 39 குறள்களும் பொருட்பாலில் 56 குறள்களும் இன்பத்துப்பாலில் 38 குறள்களுமாக மொத்தம் 133 அதிர்காரங்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என 1330 திருக்குறளில் உள்ளது.

திருக்குறள் குறள் வெண்பா என்ற பாவடிவில் உள்ளது.இண்டு அடிகளில் குறளை இயற்றியுள்ளார். முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் மொத்தம் ஏழு சீர்களில் ஒரு குறள் உள்ளது. வடிவில் சிறிதாய் இருந்தாலும் பொருள் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைப்பது.

திருக்குறளுக்கு 20 நூற்றாண்டுகளாய் அறிஞர் பெருமக்கள் 500 உரை நூல்களுக்கு மேல் எழுதியுள்ளனர். காளிங்கர், மனக்குடவர், இறையனார், பரிமேழழகர், குறிப்பிடத்தக்கவர்கள். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் உரை எழுதியுள்ளார்.அறிஞர் மு.வ, கப்பலோட்டிய தமிழன் வ..உ.சி .பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போன்ற பெருமக்களும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர்.

திருக்குறள் அனைத்து மக்களுக்கும் பொதுவானது திருக்குறளை 130க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். திருக்குறளை சி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சி.யூ.போப் அவர்கள் தம் கல்லறையில் ”தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்” எனப் பொறிக்கப் பணித்தார். இன்றும் இலண்டனில் உள்ள கல்லறையில் இந்த வரிகள் உள்ளன. யான் இலண்டன் சென்றபோது அந்தத் திருவாசகத்தைக் கண்டேன் திருக்குறளும் திருவாசகமும் எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்பதை அறியாலாம்,

சீ.யூ.போப் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பை படித்த இரசிய நாட்டு மாமேதை லியோ டாட்ல்சுடாய் காந்தியடிகளுக்கு திருக்குறளின் உலக மகத்துவத்தைப் பற்றி எழுதிஉள்ளார். அண்ணல் காந்தி திருக்குறளை மூல நூலைப் படிப்பதற்காகவே தமிழ்மொழியைப் பயின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிற்ப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

உயிர்கள் அனைத்தும் பிறப்பால் சமமே அவரவர் செய்யும் தொழில் திறமைகளிலே வேறுபடலாம் என மானிட சமூகத்தை சமமாக நோக்குகிறார். இந்தத் திருக்குறள் சொற்றோடரே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சின்னத்தில் திருவள்ளுவர் திருஉருவம் தாங்கி இடம் பெற்றது.

மாணவச் செல்வங்களாகிய தங்கட்கு திருவள்ளுவர்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்கவேண்டிய நூல்களைக் குற்றமில்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு அந்நூல்கள் காட்டிய வாழ்வு நெறியில் நிற்க வேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

மணற்கேணியை தோண்ட தோண்ட நீர் ஊற்று பெருகுவதுபொல நூல்களைப் படிக்க படிக்க அறிவு ஊற்று பெருகும்.

வாய்மையைப் பற்றி திருக்குறளில் ஒரு குறள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளதுள் எல்லாம் உளன்

நம் திருவள்ளுவரே உண்மை வாழ்க்கை வாழ்ந்தமையால்தான் அவர் உலக மக்கள் உள்ளங்களெல்லாம் வாழ்கிறார். நம் அண்ணல் காந்தியடிகள் தன் வாழ்வையே பொய்மையின்றி நம் மக்களின் வறுமை எண்ணி அரை வேட்டி கட்டிக்கொண்டு நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.ஆதலால்தான் நம் உள்ளங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார்.

அறன் வலியுறுத்தலில் திருவள்ளுவர்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

அறம் என்பது குற்றமில்லாத தூய்மைக் காப்பே. மனத் தூய்மையற்ற அனைத்தும் வெற்று ஆரவார ஆர்ப்பாட்டமே எனக் கூறுகிறார். மனத்தால் தூய்மை இன்றி பொய் சூதுகளோடு வாழ்வோர் என்ன அறம் செய்யினும் ஆரவாரமே.

ஈகையின் சிறப்பைப் பற்றி திருவள்ளுவர்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

பயன் கருதிச் செய்வது ஈகையாகாது. எவ்வித வாய்ப்புமற்ற ஏழை மக்களுக்க்குக் கொடுக்கும் ஈகையே சிறந்ததாகும் கல்வியறிவில்லாத ஏழை மாணவனுக்கு கல்வி கற்ற்பிப்பதும் ஈகையே. இந்த ஈகையே கிறித்துவப் பள்ளிகள் பல் நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றன. அச்சிறுப் பாக்கத்தில் அருட் தந்தை ரெசிசு என்பவர் தன் மறை மாவட்டத்தில் உள்ள நரிகுறவர் பிள்ளைகளைத் தத்தெடுத்து கல்வி, உடை உறையுள் கொடுத்து ஆதரித்தார் இதுவல்லவோ ஈகை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

உணவின்றி பட்டினியால் வாடுவோரின் பசியைத் தீர்க்க பொருள் பயன்பட வேண்டும்.அவ் வயிறே பொருளுடையவன் சேர்த்துவைக்கும் வங்கியாகும்.

வான்புகழ் தந்த வள்ளுவனின் சிலையை மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கட்சென் நதியில் உள்ள சுதந்திரதேவி சிலையைக் கண்டுள்ளேன்.அதே போன்று திருவள்ளுவர் சிலையை முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடலில் நிறுவிய முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞரை தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றிபாராட்டும். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்து அங்கு 1330 திருக்குறளும் சலவைக் கற்களில் பதியச் செய்துள்ளார்.

பர்மாவில் வள்ளுவர் கோட்டம் உள்ளது. பர்மீயத் தமிழர்கள் யான் அங்கு சென்றபோது திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி என்னை வரவேற்றனர்.

இசுலாமிய நாடான மலேசியாவில் திருக்குறள் மாநாடு கண்டு தோட்டப்புற மாளிகையில் நிற்கும் நிலையில் திருவள்ளுவர் செம்மாந்து உள்ளார். பத்துமலையில் மலேசியப் பெருமக்கள் திருக்குறளை பதிய வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் வாசிங்க்டனில் அமெரிக்கத் தமிழர்கள் மாநாடு கண்டு திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளனர்.

கனடா,ஐரோப்பிய நாடுகள், தென்னாப்ரிக்கா,உலகின் அனைத்துப் பகுதியிலும் நாள்தோரும் திருக்குறள் சிந்தனைகள் வலம் வருகின்றன.

இந்தியாவின் பலப்குதியிலும் திருவள்ளுவர் சிலை நிறுவி திருக்குறள் சிந்தனைகள் போற்றப்படுகின்றன.

உலகிற்கே வழிகாட்டியாக திருவள்ளுவர் படைத்த திருக்குறள் வழி வாழ்வதே உலகம் உய்த்துணர்ந்து வாழும் நெறியாகும்.

Sunday, August 8, 2010

Woman


Woman
Kavimurasu. Va.mu.se.Thiruvalluvar
Editor: Tamilpani

{சென்னையில் 7-8-2010அன்று உலகக் கவிஞர்கள் சங்கம் நடதிய விழாவில் முன்னாள் ஆளுனர் ஆ.பத்மநாபன்,சப்பானிய அறிஞர் அவுச்சி ஆகியோர் முன்னிலையில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் பாடிய ஆங்கிலக் கவிதை}

Woman is epitome of sacrifice
Woman is rays of hopes
Woman is embodiment of renunciation
Woman is like mother earth who revolves everyday

Woman is wedlock makes mercy
Woman is candle for her better half

By birth she is daughter
By living becomes daughter in-law

She is symphony of beauty
Her beauty is universe
She is an Idol
Who is worshiped as Goddess
She is nucleus in marriage

But she fire walks from epidemic veteran of dowry
She weaves her own modesty
She be a village belly or
Heroine of celluloid

Death cruelty does not spare her
She who learnt the burnt
Of her counterparts hang over

She surrenders to be male during instinct
Same man makes her trading flesh
She who hands on knees with societies mud slimming
She who treated as intoxicant by her fellow man

But she is Holy mother of Andal Mary Fathima Seetha
She who lives in dark with white robe as widows
She who lives as warrior irrespective of her Mr. Non-caliber
She who can rule the country but tires in to domesticity
Victories in societies
Victories in leading nation

All praise to Woman
Woman Woman woman

வாழும் வள்ளுவம் இதழ் திறனாய்வு


வாழும் வள்ளுவம் இதழ் திறனாய்வு
கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 7-8-2010 அன்று அருள்மாமுனிவர் கு.மோகன்ராசு அவர்கள் நடத்திய மநாட்டில் வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை

திருக்குறள் திருத்தொண்டர்கள் வரலாற்று மூன்றாவது மாநாடு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுவது பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். திருக்குறள் பணிக்காகவே தன்னை ஒப்புவித்துள்ள அருள்மாமுனிவர் மோகன்ராசு அவர்களின் பணி இந் நூற்றாண்டின் செம்மாந்த பணியாகும். அவரின் பணிபற்றி தொண்டாற்றும் அனைத்து உள்ளங்களையும் நெஞ்சார[ப் பொற்றுகிறேன்.

அருள்மாமுனிவர் அவர்கள் ஆன்மீகத்தைப் பர்ப்பும் அருட்தொண்டர்கள் போன்றே அனைவரையும் இணைத்து திருக்குறள் அருட் தொண்டர்ளை உருவாக்கி செயலாற்றும் திருக்குறள் தொண்டு தமிழர்களை தலை நிமிரச் செய்யும் பணியாகும்.

திருக்குறள் அறக்கட்டளைகள் 8 தொடங்கியுள்ளார்கள்.திருக்குறள் முனைவர் பட்ட படிப்பைத் தொடங்கியுள்ளார்கள்.திருக்குறள் 6 அமர்வுகளை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள். இறுதியாக திருக்குறள் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.இம்மாநாடு திருக்குறளை தேசிய நூலாக நாம் வேண்டுவதற்கு அரும்பெரும் செயலாக இம்மாநாடு அமைகிறது.

உலகளாவிய பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறேன். மலேசியாவில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிற்கு இந்தியச் செயலாளராகப் பணியாற்றி திருவள்ளுவரின் திருஉருவச்சிலையை வி.சி.சந்தோசப் பெருமகனார் வழங்க இசுலாமிய நாட்டில் மலேசியத் தலைவர் டத்தோசிறி சாமிவேலு அவர்கள் திறந்துவைத்தார்கள்.தமிழ் மறவர் பெ.அ. தமிழ்மணி அம் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். ஆயிரம் பக்க அளவில் உலகத் தரத்தில் மலர் வெளியிடப்பட்டது 160 பெருமக்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்றோம்.

மியான்மாரில் தட்டோன் நகரில் உள்ள வள்ளூவள்ளுவர் கோட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன்.தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையில் துரத்தப் பட்டாலும் திருக்குறள் உணர்வு மங்காத் தமிழர்கள் திருககுறள் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். கோட்டம் உருவாக்கிய மாரிமுத்து காலமாகிவிட்டார். ஆனால் திருக்குறள் ஓதுவார் குருசாமி,சேகர் போன்ற உணர்வாளர்கள் இன்றும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்

சுவிட்ச்ர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஈழத் தமிழர் முருகவேள் வள்ளுவன் பாடசாலை என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி நடத்திவருகிறார். திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.பாடசாலையில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன்.
கனடா நாட்டில் அறிஞர் செல்லையா போன்றோர் டொரண்டோ நகரில் திருக்குறள் மாடாட்டை மிகச் சிறப்பாக நடத்தி அருமைத் தந்தயார் பெருங்கவிக்கோவை சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளனர்.

யான் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநராகப் பொறுப்பேற்று நடத்தியுள்ள 6 மாநாடுகளிலும் திருக்குறள் அமர்வுகளும் மலரில் கட்டுரைகளும் முதன்மையாக இடம் பெறும்.உலகளாவிய பெருமக்கள் பங்கேற்று கருத்துரை வழ்ங்கியுள்ளனர்.அருமைத் தந்தையார் பெருங்கவிகோ அவ்ர்களின் திருக்குறள் செம்மொழிஉரையை வெளியிட்டு உலகம் முழுமையும் வழங்கி வருகிறோம்.

திருக்குறள் தொண்டின் தொடர் பணியில் இம் மாநாட்டில் பங்கேற்பதையும் பெரும்பேறாகக் கருதுகிறேன், வாழும் வள்ளுவம் இதழை திறனாய்வு செய்வதில் பேருவகை கொள்கின்றேன்.
ஒரு இயக்கமாயின் ஓர் இதழ் அவசியமான ஒன்றாகும்.அவசியத்தின் தேவையை உணர்ந்த ஐயா மோகன்ராசு அவர்கள் வாழும் வள்ளுவம் என்ற இதழைத் தொடங்கி இரண்டாம் ஆண்டாக மிகப் பொழிவோடும் தெளிவோடும் நடத்திவருவது அவரது செயற்பாட்டின் மகுடமாகும்.

அட்டைப்படத்துடன் நூறு பக்கங்களைக் கொண்ட அறிவுச் சுரங்கம் இவ்விதழ்.அட்டையின் முன் திருவள்ளுவர் திருக்கோயிலில் உள்ள திருச்சிலையின் வடிவம் பல்வண்ண வடிவில் அச்சாகியுள்ளது. இரண்டாம் பக்கம் நீண்ட காலம் மூடிவைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர்சிலையை வாழும் வள்ளுவ வாழ்வறிஞர் தமிழினத் தலைவர் மாண்பமை முதல்வர் அவர்களின் பெருமுயற்சியால் திறக்கப்பட்ட பெங்களூரு சிலையும், மயிலை சிலையும் அச்சிடப்பட்டுள்ளது. முறையே மூன்று நான்கு பக்கங்களில் திருக்குறள் நெறிபரப்பும் அறிஞர் பெருமக்கள் இரா.இராதாகிருட்டிணன், அ.ம.வேணுகோபாலனார் படங்கள் எழில்பொங்க அச்சிடப் பட்டுள்ளது.

பக்கம்1,2:
தலையங்கப் பகுதியில் ஆசிரியரின் கருத்து சைவ, சமன, பெளத்த, இசுலாமிய, கிருத்தவப் பெருமக்களாகிய தமிழர்கள் அனைவரும் திருவள்ளுவரை வணங்காமல் திருக்குறளை வாழ்வியலாக்க முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறார்.


பக்கம் 3-12:
வள்ளுவர் கோட்டத்தை வாழ்வியல் கோட்டமாக்க எனும் தலைப்பில் 1.திருக்குறள் ஆய்வகம், திருக்குறள் ஆய்வரங்கம்,3.திருக்குறள் நூலகம் 4.திருக்குறல் வாழ்வியலாக்க அரங்குகள் என தலைப்பிட்டு செறிவான திட்டங்களை பதிவு செய்துள்ளார்.

பக்கம்13-17:
திருவள்ளுவர் யார் எவர் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவரவர் போக்கிற்கு கூறியுள்ளதை மறுத்து திருக்குறளில் உள்ள கருத்துக்களை வாழ்வியலாக்காமையை குறிபிடப்பட்டுள்ளது.

பக்கம் 18-24:
திருக்குறள் பேரொளி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் திருக்குறள்பணிகளை நெஞ்சாரப் போற்றுகிறார். இன்னும் செய்யவேண்டிய திட்டங்களை நடுநிலையுடன் கூறுகிறார்.

பக்கம் 25-30:
பெங்களூர் திருக்குறள் தொண்டர் அ.ம.வேணுகோபாலன் பற்றி திருக்குறள் வே அரசு அவர்கள் திருக்குறள் வாழ்க்கைப்பயணத்தை மிகச் சிறப்பாக தொகுத்துத் தந்துள்ளார்,பெங்களூருவில் திருக்குறள் பரப்புரை மாநாடு,இதழ், ஆசிரியப் பணி நிலையப் பணி என அமரர் வேணுகோபலனாரின் பணிகளை படம்பிடித்துள்ளார்.

பக்கம் 31-38:
வரலாறுபடைத்த திருக்குறள் ஆய்வாளர் எனும் தலைப்பில் திருக்குறள் சாந்தி மோகன்ராசு அவர்கள் உலகத்திருக்குறள் மையத்தின் தோற்றம் வளர்ச்சியை பட்டியலிட்டுள்ளார். திருக்குறள் மக்கள் உரை வெளியான வரலாற்றையும் பேராசிரியர் முனைவர் மோகன்ராசு அவரிகளின் ஈகத்தையும் பதிவு செய்துள்ளார்.`தற்போது மக்கள் உரை 20 பதிப்புகள் கண்டு 1 இலக்கத்தைத் தாண்டி வெற்றிகொடி நாட்டியுள் சாதனையை குறிப்பிட்டுள்ளார்.

பக்கம் 39-44:
திருக்குறள் மூதறிஞர் இரா.இராதாகிருட்டிணனின் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கவிஞராகவும், பேச்சாளராகவும், கிராமம்தோரும் திருக்குறள் பரப்புனராகவும் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்த செயல்வீர்ராககவும் வாழும் வள்ளுவம் பதிவு செய்துள்ளது.

பக்கம் 45-47:
திருக்குறள் வினா விடைப் போட்டி வெளியிட்டு திருக்குறள் குறித்த பல செய்திளை வாழும் வள்ளுவம் வழங்குகிறது.தந்தை பெரியாருக்கு திருக்குறள் மீது பற்று வர துணைநின்றவர் பா.வே.மாணிக்கனார் என்றும்.வள்ளுவர் கோட்டம் உருவாக்கம் பெற முத்தமிழறிஞர் கலைஞர் நெஞ்சில் தோன்றிய நாள்1974 ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் சிலை திறப்புவிழாவில் என பல் நுட்பமான செய்திகளைக் காண முடிகிறது.

பக்கம் 49-57:
வள்ளுவர் கோட்டத்தில் பங்கேற்ற உயர்வாய்வரங்குகள் 5-3-2005 முதல் 10-2-2007 நூறு அரங்குகளில் உரையாற்றியோர் தலைப்பு விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பக்கம் 58-79:
திருக்குறள் அனுக்கக் கட்டுரையில் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் என்ற தலைபில் பார்ப்பான் என்ற சொல் வந்திருக்கும் குறளும் பல்வேறு உரையாசிரியர்களின் விளக்கமும் சங்க இலக்கியங்களில் காணப்பபெறும் பதிவுகளும் ஆழ்ந்த ஆய்வின் திறத்தைப் .புலப்படுத்துகிறது.

பக்கம் 80:
பன்னெடுங்காலம் ஐயாவுடன் இணந்து தொண்டாற்றும் திருக்குறள் தூதர் கவிஞர் சோ.பத்மநாபனின் வள்ளுவத்தை வாழ்விக்க வா எனும் இசைப்பாடல் தேனாக இனிக்கிறது.”உள்ளத்தூய்மை இல்லாத உரைஒன்றும் உதவாது” என்ற வரி சாட்டை அடியாக உள்ளது.

பக்கம் 80-89:
பேராசிரியரின் உலக ஒருமைப்பாட்டுச் சிந்தனையில் தற்கால சமுகத்திற்குத் தேவையான் சிந்தனைப் பிழிவுகள் உள்ளன.
”மக்களைப் பிரிப்பவன் கட்வுளேயானாலும் கயவந்தான்”
“சாதியைத் தொட்டுப்பார்த்தால் நீதி பட்டுப்போகும்”
“மண்ணில் மதிக்கவேண்டியது மத தர்மங்களல்ல மனிததர்மங்கள்”
“எல்லைக்கோடுகள் எழுத்துப் படிவுகள் ஆகலாம் எண்ணப்பதிவுகள் ஆகக்கூடாது”
அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் உல்கச் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கில்
”எல்லைக்கோடுகள் இல்லாத – உலகம்
இனியதோர் உலகம் செய்வோம்” என்ற வரிகளை சிந்திக்கவைக்கிறது.

பக்கம் 90-96:
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற 2010 ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பக்கம் 95-9:
அருள் மாமுனிவர் பங்கேற்ற நிகழ்ச்சி விபரங்கள் தரப்பட்டுள்ளன.

கருத்துகள்:
தமிழகத்துப் பெருமக்களைமட்டும் குறிப்பிடாமால் மாதம் ஒரு வெளிநாட்டில் திருக்குறள் தொண்டு செய்வோரை பற்றி எழுதுதல்.
திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட அந்தந்த பதிவுகளை இதழில் பதிவு செய்தல்.
தாளின் தரத்தைக் குறைத்து மலிவுப் பதிப்பாக அனைவும் வாங்கிப் படிக்கும் வண்ணம் விலையை குறைத்து வெளீயிடல்

வாழும் வள்ளுவம் தமிழர்க்கு வழிகாட்டி

வாழும் வள்ளுவம் திருக்குறள் தேனூற்று

வாழும் வள்ளுவம் திருக்குறள் தொண்டர், அறிஞர், தூதர்களின் பாசறை.