Monday, February 3, 2014

சிங்கப்பூர் சூரோங்க் கிழக்கு நூலகத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


 சிங்கை  சூரோங்க் கிழக்கு நூலகத்தில் 15-12-2013 அன்று கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை

   மலெசியாவில் பாரதியார் விழாவிற்காக எனது  தலைமையில்  12 பெருமக்களை பெருமக்கள் பங்கேற்றனர். அதில் நாங்கள் இங்கு சிங்கப்பூரில் வந்து இந்நிகழ்வில்  பங்கேற்பது மகிழ்வைத் தருவதாகும். ஐயா அறிஞர செவ்வியன் அவர்களின் மருகர் பெருவை இளங்கோவன் அவர்களின் பேரன்பு பூரிப்பைத் தருகிறது. சென்னையில் செவ்வியன் ஐயா அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவை அண்ணாமலை பல்கலைக் கழக பழைய மாணவர் சஙகத்தில் மிகச்சிறப்பாக நடத்தினார்கள். அந்நிகழ்விலேயே மாமா அவர்களின் தமிழ்த் தொண்டிற்கு மருகர் இளங்கோ ஆற்றிய பணிகள் எம்மை வியப்பில் ஆழ்த்தின. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் சென்னையில் பல காலம் இருந்து தற்போது சிங்கை வந்துள்ளார்கள் எந்த இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் சென்னையில் காண்பது வழக்கம். தற்போது சிங்கையில் பெரு இளங்கோ அவர்களோடு இணைந்து இந்கழ்வை நடத்துகிறார். பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அண்மையில் அவரது வலத்தளத்தில் ஒரு கவிதையை இரசித்து அக்கவிதையை தமிழ்ப்பணியில் வெளியிட கொடுத்து வந்துள்ளேன். அதில் ஒரு பகுதி

சிந்தனைத்தேன் ஊறுவதை
சிந்தித்தே  மாறுவதை
சந்தனம்போல் கமலவைத்துக் காட்டு – அதுவே
சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

என மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். அப்பெருமகனை இயல்பாகாவே இந்நிகழ்வில் காண்பது இரட்டிப்பு நிகழ்வு. பெருங்கவிஞர் கவிஞரேறு சிங்கையில் எழுத்தாளர் சங்கத்தை நிலைநாட்டிய அமலதாசனார்,, கவிஞர் இக்பால் யான் சில ஆண்டுகளுக்கு முன்புஎழுத்தாளர் சங்க நிகழ்வில் கவி பாடி என்னிடம்  கவிதைக்கு பரிசுபெற்ற சீர்காழி செல்வராசு போன்ற பெருமக்களை காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நிகழ்ச்சி நடைபெறும் சூரோங் கிழக்கு நூலகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் நிகழ்வு தகுதியான அரங்கில் ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களையும் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் திருமதி  நாயுடு அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
நெடுஞ்சேரலாதன் அவர்கள் என்னை மறைமலையடிகள் விழாவிற்கு முரம்பு  அழைத்திருந்தார்கள் அதுபோது தாங்கள் அவசியம் மலேசியா வரவேண்டும் அங்கு வாழ் தமிழ் மக்களை சந்திக்க வேண்டும் என  வலியுறுத்தினேன். பாரதிவிழாவிற்கா  முடியாது அதானாலென்ன பாரதியின் சீடர்தானே பாவெந்தர் அவரைப்பற்றிப் பேசுங்கள் எனக் கூறி அவர்து துணைவியாரிடமும்  கூறி அவரை அழைத்துவந்துள்ளேன்.மலேசியாவில் மகாகவியைப் பற்றி அரியதொரு உரையாற்றினார். அதனுடைய பயண்தான் இன்று நாம் சிங்கையில் சந்திக்கும் சந்திப்பு.. சிங்கையில் அவரது அண்ணன மகன் மாரிமுத்து தன் சிற்றந்தையிடம் காட்டிய அன்பும் அர்வணைப்பும் இப்பயணத்தில் அவர் கண்ட சிறப்பாகும். உறவு வீழவில்லை என்பது மாரிமுத்து போன்ற பெருமக்களைக் காணும்போது பெருமைகொள்கிறோம். வில்லுப்பாட்டுக் கலைவித்தகர் அ. செல்லதுரை அவர்களும்  வருகைத்ந்துள்ளார். அவர் பாடல்களை கேட்டு மகிழ்ந்தீர்கள்.

பெருமக்களே உலகளவிய தமிழ் தமிழர் பற்றி பேச் பணித்துள்ளீர்கள். பிச்சினிக்காடு நேரம் மிகச் குறைவாக உள்ள காரணத்தால் விரைந்து முடிக்கக்கூறியுள்ளார். சிங்கையில் நேரத்தின் அருமையை அறிந்தவன் என்பதால் விரைந்து முடித்துவிடுகிறேன், இதோ என் கையில் உள்ள இந்நூல் யாதும் ஊரே உலகத்தமிழ் தமிழர் பற்றிய தொகுப்பாகும்ம். கற்றனைத்து ஊறும்  என்ற நூல் எழுதியுள்ளேன்  அதில் சிங்கையின் அருமை பெருமைகளெல்லாம் விவரித்துள்ளேன்.

மலேசியா தமிழ் தமிழர்களின் கொள்கலனாக உள்ளது, சிங்கை தமிழின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. கணினித் தமிழின் கோவிந்தசாமி  அவர்கள் தோன்றிய மண் சிங்கை மண்ணாகும். தமிழ் ஆட்சிமொழியாக எல்லா நிலைகளிலு,ம் உள்ளது மட்டற்ற மகிழ்சிக்குரிய ஒன்றாகும்.

மியான்மரில் தமிழர்களின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. தொழில் துறையிலும் ஆன்மீக கோவிலகளும் வளர்ச்சிபெற்றுவருகின்றன. பர்மா மண்ணிலே எனும் நூலில் விபரமாகத் தந்துள்ளேன்.

ஐரோபிய நாடுகளில்  ஈழத் தமிழர்களின் பேராற்றலால்  தமிழ் உலக மொழியாக வலம் வருகிறது, தொலைக்காட்சிகள் வானொலிகள் இதழ்கள் என தமிழிற்கு அணி  சேர்ப்பவை ஏராளம்.

அமெரிக்காவில் தமிழர்கள் செல்வச் செழிப்பாக உள்ளனர் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து ஆண்டுதோரும் கூட்டுத் தமிழ்ச் சங்க மாநாடு நடத்திவருகின்றனர். சில ச்ங்கங்கள் மாத இதழ்கள் நடத்தி போட்டிகள் நடத்தி சிறப்பான பணிசெய்கின்றனர்.

கனடா தமிழர்களி பண்பட்டுக் களமாக உள்ளது. அண்மையில் சென்னைக்கு  வருகை தந்த துரைராசா அவர்கள் தமிழக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தோடு இணைந்து தமிழ் பட்ட வகுப்புகள் டொரோண்டோவில் பயில்கின்ற செய்தியைக் கூறினார். தமிழ் இதழ்கள் வானொலிகள் ஆலயங்கள் தொலைக்காட்சிகள் என தமிழ் சார்ந்த நிறுவனங்கள் கணக்கில.

நண்பர்களே காலம் கருதி  சுருக்கமாக முடிக்கிறேன். சிங்கையில் தங்களைக் கண்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். வணக்கம்