Tuesday, April 26, 2022

 வீறுகவியரசர் முடியரசனார் பாக்களில் தமிழ் உணர்வு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

பாரதி பாவேந்தர் வழி நமக்குக் கிடைத்த பெருங்கவிஞர் வீறு கவியரசர் முடியரசனார்.. வீறுகவியரசரின் நூற்றாண்டு மிகச் சிறப்பாக உலகெங்கும் கொண்டாடப் பட்டுவருகிறது. அவ்வேளையில் வீறுவகவியசரின் கவிதை குறித்த தொடர்நிகழ்வுகள் அறிஞர்களைக் கொண்டு நட்த்தப் பெறுவது சாலச் சிறந்தது. அதற்குத் துணைநிற்கும்வீறு கவியரசர் அவைக்களப் பெருமக்கள்  அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.குறிப்பாக அண்ணன் பாரிமுடியரசன் அவர்கள் தந்தையின் கவிதைகளை முழுமையாகத் தொகுத்து தமிழ்க்குடிக்கு தந்துள்ளார். பெருமகனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன். இன்று வீறுகவியரசரின் பாக்களில் தமிழ் உணர்வு எனும் தலைப்பில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்

 அன்னை மொழி பேசுதற்கு நாணு கின்ற 

தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் 

தென்படுமோ மொழியுணர்ச்சி ஆட்சி மன்றில்  

பாங்குடன் வீற்றிருக்குமொழி தமிழே என்று  

பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும் 

ஈங்கதற்கா என்செய்யப் போகின்றீர் நீர் 

இளைஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன்றும் (மு.க.ப.2) 


அன்று பாடிய பாடல் இன்றும் தமிழர்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. வீறுகவியரச்ரின் பாடலகளை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுசெல்வோமானால் இளைஞர்கள் மொழியுணர்ச்சி பெறுவர். தமிழ் உணர்ச்சி பெற வேண்டுமானால் தமிழை பயிற்றுமொழியாகப் படிக்கவேண்டும் என்ற கருத்தை தம் உணர்ச்சிப் பாவால் உணர்த்தியுள்ளார் வீறு கவியரசர்.அதற்கான விடையும் அவரே தருகிறார். 

தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும் 

தமிழ்கொன்று வாழ்கின்ற கயமை வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும் 

தடுமாறி ஓடிவிடும் எலிகள் வேண்டாம் 

தமிழ்காக்கப் போர்செய்ய சிங்கம் வேண்டும்

 தாளமிடும் ஓலமிடும் நரிகள் வேண்டாம் 

தமிழ் காக்கப் போர்செய்ய மானம் வேண்டும் 

தாளமுத்து நடராசன் துணிவு வேண்டும் (மு.க.ப.5)

 தமிழ் மொழி காக்க யார் யார் வேண்டும் யார் யார் வேண்டாம் என்று பட்டிய்லிடுகிறார். இறுதியில் தம் இன்னுயிறை தமிழுக்காக நீத்த ஈகவான் தாள்முத்து நடராசன் போன்ற துணிவாளர்கள் வேண்டும் வேண்டும் என முழக்கமிடுகிறார் வீறுகவியரசர். 

அரசியல் மன்றம் ஏற 

ஆண்டவன் திருமுன் நிற்க 

உரிமையோ சற்று மில்லேன் 

உணர்வொரு சிறிது மின்றி  

வருபவன் தனக்கே வாழ்வு 

வழங்கினர் என்றன் மக்கள் 

எரிஎனக் குமுற நெஞ்சம்  

ஏங்கினேன் என்றாள் அன்னை (மு.க.ப.12)

 தமிழ் அன்னையின் வடிவில் அன்னையின் ஏக்கத்தைப் பாடியுள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழர் தம் மொழியை எல்லா நிலைகளிலும் முன்னிறுத்த அவர் ஏக்கம் இக் கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது.

 தமிழை அரியணை ஏற்ற தி.மு.க அரசைப் பாராட்டி தமிழில் கலைச்சொற்களை உருவாக்கவேண்டும் துறைதுறைதோறும் துறைதோறும் தமிழ் செழிக்க தம் வாழ்நாளை ஒப்படைத்துள்ளார் வீறுகவியரசர். அரியணை ஏற்றி வைத்த

  அரசுக்கு நன்றி சொல்லித்

 திருமண நிகழ்ச்சி யாவும்

  தெளிதமிழ் கேட்கச் செய்வீர் 

இறைமுனும் தமிழே கேட்க 

இணைந்துநீர் தொண்டு செய்வீர்

 துறைதோறும் தமிழே காணின் 

தூய்தமிழ் ஆட்சி என்போம் (மு.க.ப.14)


 துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால் 

துடிக்கிறீர் கண்ணீர் வடிக்கிறீர் மேலும் 

மறைவாக சூழ்சிகள் செய்கிறீர் இந்நாள் 

மாதமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள் (மு.க.ப.19) 


வீறுகவியரசரின உடல் பொருள் ஆவி அனைத்தும் தமிழ் தமிழ் என்றே உள்ளதை கவிஞரின் கவிதையை படிப்போர் உணரலாம். நீ பாடுதெல்லாம் தமிழே பாடு எக் கூறுவது நம் உள்ளத்தை உருக வைக்கிறது.  

பாடுவ தென்றால் தமிழினில் பாடு 

பாவையே உளமகிழ் வோடு

வாடிடும் எம்மன வேதனை தீர்ந்திட 

வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப்  (மு.க.ப.20) 

கவிஞரின் இசைச் பாடல் தம் உணர்வை தமிழின் அழகை வேட்கையை உணர்த்துகிறது.


  வானொலியில்  இசையர்ங்கில் தமிழ்தான் உண்டா 

  வளங்கொழிக்கு நிழற்பட்ட்தின் பேச்சில் பாட்டில் 

தேனமிழத்த் தமிழுண்டா பழிக்க்க் கண்டோம்

  தெளிவின்றி ஒன்றிரண்டு தம்ழைச் சொல்லும் 

ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா 

எடுத்துரைப்பார்க்கு அத்துறையில் இடமே இல்லை 

கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக் 

காண்கின்றோம் ஒன்றிரண்டு தமிழ்ப் படங்கள்  (மு.க.ப.48)


  அன்றே தமிழ் நாட்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார் வீறு கவியரசர்.. ஈழத்தில் தமிழர்க்கு நடந்த கொடுமை கவிஞரின் மனதை கொதித்தெழச் செய்ததை  வீறுகவியரசரின் பாடல்களில் காணலாம். விடுதலைப் புலிகளை உச்சி மோந்து பாராட்டுகிறார். காக்க தமக்கு ஒரு படை இல்லையே என கொதித்தெழுகிறார். 


விடுதலைப் புலிக ளாகி 

வெந்துயர் குரிய ராகிக் 

கெடுதலை எதிர்த்து நின்றீர்

 கிளெர்ந்தெழும் நும்மைக் காக்க 

உடலினால் உதவி செய்ய 

ஒருபடை எமக்க்கிங் கில்லை 

தொடுமன வுணர்ச்சி யொன்றால் 

துணைவர் களாகி நிற்போம்  (மு.க.ப.77)


தென்னாட்டுக் கலைகள் எனௌம் கவியில் நம் கலை வண்ணங்களை கவிஓவியமாக்கியிருகிறார். சிற்பக்கலை, கட்டிடக் கலை, இசைக்கலை, நடனக்கலை, ஓவியக்கலை, நெய்தற்கலை, இலக்கியக்கலை, என தமிழர்தம் அனைத்துக் கலைகளையும் பட்டியலிடுகிறார். 

ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம் 

தோயும்படி வாழ்வை துய்ந்திருந்தான் அவ்வாழ்வு

 மீண்டும் தழைக்க வியனுலகம்  பாராட்ட 

வேண்டுமீ தென்றன் விழைவு  (மு.க.ப.83) 

 தந்தை பெரியாரின் கண்ணயராப் பணியை தம் கவியால் போற்றிப் புகழ்கிறார். 

பெரியாரை நினையாத தமிழன் இல்லை 

பேசாத புகழாத நாவும் இல்லை 

மரியாதை தமிழனுக்கு வாய்த்த தென்றால்

 மாமேதை பெரியாரின் தொண்டே  யன்றோ 

சரியதா அப்பெரியார் வாழ்நாள் எல்லாம் 

சலியாது தளராது முயலா விட்டால்

நரியாரின் சூழ்ச்சிக்குள் தமிழினத்தார்

 நசுக்குண்டு விழிபிதுங்கி அழிந்து தீர்வர்  (மு.க.ப.125) பேரறிஞர் அண்ணாபற்றி சென்னையி ல் பாடிய கவிதைகள் அண்ணா நம் கண்முன் நிற்பதுபோல் உணர்சிக் கவிதைகள்


 பெரியாரே எனக்கென்றும் தலைவ ராவார் 

பிறிதொருவர் தலைவரெனக் கொள்ளேன் என்றே 

அறிவாளன் நம்அண்ணன் உறுதி பூண்டான்  

அத்தலைவர் தமிழ்மொழியைப் பழித்த போதும் 

சரியான மறுப்புரைக்கத் தவற வில்லை 

தாய்மொழிக்குக் காவலந்தான் ஐயம் இல்லை 

விரிவான் உலகெங்கும் தமிழ் மணக்க

 விழைகின்றான் அதற்குரிய செயலும் செய்தான்  (மு.க.ப.133) இன்றும் மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் புகுத்துவற்கு வெளிப்படையாகவே மத்திய அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அப்போதே கவிஞர் பெருமகன் எழுதிய பாடல்கள் பதிலாக அமைகின்றன

 

இந்திமொழி பொதுமொழியா தகுதி என்ன 

இருக்கின்ற தம்மொழிக்கு குயில்கள் கூவும்

கொந்தவிழும் மல்ர்ச்சோலை தமிழர் நாடு  

 கோட்டானுக் கங்கென்ன வேலை என்று

 செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர் 

சீர்தூக்கி ந்ன்குண்ர்ந்து மறுத்து ரைத்தார் 

எந்தவழி இந்திமொழி வந்த போதும் 

ஏற்பதில்லை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்(மு.க.ப.163)

வீறு கவியரசரி பாக்கள் தமிழர் உணர்வுகளை தட்டி எழுப்பி தமிழுணர்வு பெறவைத்த பாக்கள். இன்றைய தலைமுறைக்கும் தேவைப்படுவதை உணராலாம். வாழ்க முடியரசனார் கவிதைகள் ஓங்குக அவர்தம் புகழ்.

(25-4-2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் நடத்திய  காணொளி விழாவில் வீறுகவியரசர் முடியரசனார் பாக்களில்

 தமிழ் உணர்வு எனும் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

Tuesday, April 19, 2022

 கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் பேராசிரியர் கு. மோகன்ராசு அவர்களுக்குப் பாராட்டுவிழா                         

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்                        

 கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிவிருது பெற்ற குறள் ஞானி மோகன் ராசு அவர்களை அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் பாராட்டுவது சாலப்போறுத்தம் கடந்த 50 ஆண்டுகளாக அவரை வாழ்த்தி வழிகாட்டிய பெருமகன். தந்தையார் அவர்களும் மோகன் ராசு அவர்களும் பேராசியர் ந. சஞ்சீவியை பேராசானாகப் பெற்ற பெருமைக்குரியவர்கள். நான் பேராசான் சஞ்சீவி அவர்களைக் பலமுறை பல்கலைக் கழகத்தில் கண்டு வியந்திருக்கிறேன். ஐயா சஞ்சீவி அவர்களுக்கு முகம் முழுமையும் தாடி சடை பிண்ணிக் கொண்டிருக்கும் இப்போது மோகன் ராசு அவர்கள் அதைத் தொடர்கிறார்கள். ஐயா பெருங்கவிக்கோவின் தாய்மண் நூலிற்கு நான் அணிந்துரை வாங்கச் சென்றபோது காவியக் கதையை கூறக் கூறினார. பல்கலைக்கழகத்தின் முன் உள்ள கடற்கரையில் நடந்துகொண்டே கதையைக் கேட்டார். அணிந்துரையிலும் மகன் சொல்ல தந்தையின் காப்பியக் கதையைக் கேட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அறிஞர்களை கவிஞர்களை உருவாக்கிய பெருமகன் பேராசான் ந. சஞ்சீவி. அவரின் வழித் தோன்றல்கள்தான் உலகை ஆளும் பெருங்கவிக்கோவும் திருக்குறள் ஞானி விருதாளர் மோகன் ராசுவும். வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் செவாலியர் டாக்டர் சந்தோசம், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத் தலைவர் சேயோன் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை கால்டுவெல் வேள்நம்பி போன்றோரின் உலகளாவிய வாழ்த்து சிறந்த வாழ்த்து. இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணித்த அமெரிக்க சாக்கரமெண்டோவில் வாழும் எங்கள்து நெடு நாளைய நண்பர் மருத்துவமாமணி செல்வி முருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த அவையில் பாராட்ட குழுமியிருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.  

குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் திருக்குறளை வாழ்வியல் முறையாக மாற்றிய பெருமைக்குரியவர் மார்கழித்திருநாளில் திருவள்ளுவர் சிலையை ஏந்தி திருகுறள் பாடி தொண்டர்களை தெருவெல்லாம் வலம் வர வைத்துக் கொண்டிருப்பவர்.

 திருவள்ளுவப் பெருமானை உலகப் பெரும் அறிஞர்களோடு ஒப்பிட்டு வள்ளுவர் கோட்ட்த்தில்  நிகழ்வுகளிலும் பல மாநாடுகளிலும் அறிஞர்கள்  உரையாற்றவைத்து வள்ளுவம் ஓங்கி நிற்பதை உலகிற்கு உணர்த்தியவர்.

 திருகுறளுக்கு தொண்டு செய்த சான்றோர்களை காலங்களாகப் பிரித்து அவர்களின் தொண்டுகளை மனமாச்சரியமின்றி திருக்குறள் தூதர்களை ஆய்வு செய்யப் பணித்து பேசவைத்து நூலாக ஆக்கியுள்ளார் சாதனைச் சிகரம் 

நமது குறள்ஞானி அவர்கள். தன் மனைவியை காதல் மணமுடித்து அதனால் ஏற்பட்ட துன்பத்தையெல்லாம் ஏற்று தம் மனைவியையும் திருக்குறள் சாதனையாளராக உருவாக்கிய பெருமகன் ஐயா மோகன் ராசு அவர்கள்..  

காணக் கிடைக்கா மாபெரும் தலைவர் யாரும் சிந்திக்க முடியாத கலைஞர் விருதை உருவாக்கிச் சென்றுள்ளார், அந்த விருது மோகன் ராசு அவர்களுக்கு தகுதியான விருது. வாழ்க விருதாளர் ஓங்குக கலைஞரின் புகழ். 

(17-4 2022 அன்றுகலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் பேராசிரியர் கு. மோகன்ராசு அவர்களுக்கு நடந்த காணொளிப் பாராட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)



 பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் நூல்கள் வெளியீட்டு விழா

ழாபேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் 25-3-2022 அன்று பாம்குரோவ் உணவகத்தின் சிறப்புடன் நடைபெற்றது. தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்றினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை ஏற்றார். மொழிப்போர் புரட்சியும் தமிழ்க்கவிதையும் , செங்கல்வராய முதலியாரின் செய்யுளும் வசனமும் நூல்களை தமிழக அரசின் தலைமைக் கொரடா முனைவர் கோவி. செழியன் வெளியிட மருத்துவர் இராச்குமார் சங்கரன் தொழிலதிபர் நவநிதகிருட்டிணன் முதல் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். பேராசியப் பெருமக்கள் இராம குருநாதன் ப. மகாலிங்கம், முகிலை இராசபாண்டியன் மற்றும் சான்றோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் விமலா ஆண்டவர் நன்றியுரை வழங்கினார். 


Wednesday, April 13, 2022

 

 

போரினை விடுத்து நன்றாய்   பொழிவுடன் மகிழ்வே வருக!

 

 

கூடியே வாழ்ந்த மக்கள்

குழுவாய் நாடாய்ப் பிரிந்தார்

நாடிய நாடுகள் நாடி

நலமிலா கொள்கை கொண்டார் 

தேடிய வளமை செல்வம்

தெறித்ததே குண்டு மழையால் வாடிடும் அவலம் இன்றோ

 வளமிகு உக்ரேன் மண்ணில்!

 

நெட்டோ படைகள் ஊட்டம்

 நேரெதிர் காக்கா வேடம்

கொட்டும் பிரங்கி சண்டை

கொடுமையாய் மாய்வது முறையா மொட்டும் மலராம் குழந்தை

மடிந்திடும் உறவின் உறவால்

கிட்டும்   நலமேநைந்து                       கிடந்திடும் குவலயம் எங்கும்!

 

இரசியா புட்டின் தாமும்

இரக்க உணர்வே இன்றி

உரக்க உலகே மொழிந்தும்                                               உன்னத மக்கள் வெறுத்தும்

அரக்க மனமாய் போரில்

அடக்க அறியா மடமை

வெறுக்கும் மனித மாண்பை

வெடித்ததே உலகம் எங்கும்!

 

கூட்டாய் வாழ்ந்த செலன்சுகி                                  கூட்டில் பிரிந்தே சென்றார்

    நாட்டிய பழமை மறந்தே

நயத்தகு நுட்பம் இன்றி

ஓட்டிய மக்கள் எல்லாம்

   உலகெலாம் அகதி வாழ்வு

போட்டியை விடுத்து நன்றாய்                                   பொழிவுடன் மகிழ்வே வருக!

Tuesday, April 12, 2022

அரிமா இயக்கத்தில்    விஞ்சி நிறபது தொண்டா  தோழைமையா பட்டிமன்றம்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

அரிமா மாவட்டத்தின் தமிழ் ஆளுமை மிக்க ஆளுநர் பெருமகன் இன்பத் தமிழை செல்லும் இடமெல்லாம் அன்று முதல் இன்று வரை தடம் மாறாமல் ஒலிக்கும் மாசிலா மாணிக்கம் அவர்களே துணை நிலை ஆளுநர்களே ஒரு தமிழ் விழாவை அரிமா நண்பர்களைக் கொண்டே நடத்த ஆளுமையான செயல்திறன் படைத்த அரிமா சுரேசு பாபு அவர்களே பட்டிமன்ற நடுவர் அடக்கத்தின் சிகரம் நம் அரிமா சட்டக் கையேட்டை செந்தம்ழில் வழங்கிய மூத்த வழக்கறிஞர் அரிமா சம்பத் அவர்களே  தொண்டே எனும் தலைப்பிலும் தோழமையே எனும் தலைப்பிலும்  வாதிட வரும் என் அருமை அரிமா நண்பர்களே  வாழ்நாளில் கிடைத்டற்கரிய செல்வமாக நான் என் எண்ணும் அரிமா தோழமைகளே அவர்தம் வாழ்க்கைத்துணைநலங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா இயக்கத்தில் தொண்டும் தோழமையும் இணைந்து செல்லும் ஆளுமைகள். இதில் விஞ்சி நிறபது எது என்றால் தோழைமையே.                                                    

நான் பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியுள்ளேன் இதைக் கண்ட என் நண்பர் அரிமா பசீர் அகமது அனைத்துத் தோழமைகளும் தாங்கள் காணவேண்டும் என்னை இந்த இயக்கத்தில் அறிமுகப் படுத்தினார்  இயக்கத்தில் வெள்ளிவிழாக் காண உள்ளேன். இதில் மதம் மொழி சாதி அனைத்தையும் தோழமையின் ஒருருவாக இந்த அரிமா இயக்கத்தைக் காண்கிறேன்.

 நம் மாவட்ட்த்தில் தேர்தல் எந்த அளவுக்கு உச்சமாகவும் வேகமாகவும் நடக்கும் என்பது நமக்குத் தெரியும். அதில் வென்றவர் உடனே தோற்றவருக்கு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறுகிறார் என்றார் இங்கே எது விஞ்சி நிற்கிறது தோழமைதானே தோழர்களே..

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்          பண்புடை யாளர் தொடர்பு  (783)  

படிக்கப் படிக்கப் இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.. 

தொழமையின் சிறந்த விழா நம் சித்திரைத் திருவிழா. மதுரை மாநாகரில் எழுச்சிக்கோலமாக அனைத்து மக்களும் வேறு[பாடின்றி சித்திரைத் திருவிழாவை கொண்டாடுவர் மதுரை மாநகரில் நடைபெறும் திருவிழாவை இன்று நாம் சென்னையில் தியாக ராயர்  அரங்கில் நடத்துகிறோம்.மதுரை அருகில் உள்ள  கிராம மக்களெல்லாம நடத்தும் அருமை தோழமைகளின் திருவிழாதன் சித்திரைத் திருவிழா.                                            இன்று அறிஞர் வாசிக்கலாநிதி கி.வ.சா. அவர்களின் பிறந்தாநாள் அவர் பிறந்த நன்நாளில் அரிமா தமிழ்த் திருவிழா நடப்பது மகிழ்சிக்குரிய ஒன்றாகும். ஒருமுறை கி. வ. ச. அவர்களை பலசரக்குக் கடைக்காரர் சந்தித்தார். தாம் ஒரு கடை திறப்பதாகவும் அந்தக் கடையில் கடவுள் படம் வைக்கப் போவதாகவும் விநாய்கர் முருகன் இலக்குமி எந்தப் படம் வைக்கலாம் எனக் கேட்டார். உடனே கிவசா அவர்கள் எந்தப்படம் வேண்டுமானலும் வைக்கலாம் ஆனால் கலப்படம் மட்டும் வைக்காதீர்கள் என சிலேடை நயத்தோடு  கூறும் ஆற்றல் பெற்ற அறிஞர் பெருமகன் திருநாள்.                                         அரிமா நண்பர்களின் தோழமைக்கு ஒரு சான்று கூறுகிறேன் நான் நேற்று ஆதம்பாக்கம் அமரர் இராமலிங்கனார் நிகழ்வுக்கு பார்வையாளராகச் சென்றேன். அங்கு நம் அரிமா மகாலிங்கம் நெறியாளராக நிகழ்ச்சி நட்த்தினார். அமர்ந்திருந்த என்னை உரையாற்றுவார் என அழைத்தார் நான் வருவதும் அவருக்குத் தெரியாது ஆனால் அந்த்த் தோழமை உணர்வு பேரறிஞர்கள்  மத்தியில் அழைத்தார் என்றால் தோழமையின் சிறப்பு அல்லவா.               .                                                  ஒரு மருத்துவமனையில் என் ம்கன் மருத்துப் பணிக்காக நான் மருத்துவ மனையில் இருந்தேன். அதுபோது திருவள்ளுவர் என்ற குரல் என்னை அழைத்த்து சென்று பார்த்தேன் நான் பெரிதும் போற்றக்கூடிய அரிமாப் பெருமாட்டி. தைரியமாக செல்லுங்கள் நீங்கள் நலமோடு திரும்புவீர்கள் என வாழ்த்தி அனுப்பினேன், நல்மோடு திரும்பினார் இன்னும் நுறாண்டுகள் நலமாக வாழ்வார். இந்த உணர்வுதோழமையின் உணர்வல்லவா.

 இங்கே அமர்ந்திருக்கும் அரிமா இலக்குமி சங்கர் சங்கர் அவர்களின் தோழமை உணர்வு இல்லாமல் நம்மோடு பயணிக்க முடியுமா. சிறந்த பணியாற்றும் அரிமா பத்மாவின் கணவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் அவர்து தோழாமைதான் தொண்டுக்கு ஆதாரம். நம் அரிமா நங்கையர்களெல்லம் சிறப்பாக ஆடினார்கள் அவர்கள் ஆட்டம் எலோரையும் மகிழ்வித்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதன வழிப்படுத்திய அரிமா பாவனா கூறினார்கள் தோழ்மையால்தான் இச் செயல் முடிந்த்து என்று. உண்மை நண்பர்களே தோழமையால்தான் எதையும் சாதிக்க முடியும்.

  எந்தத் தொண்டும் தோழமையின் வலிமையில்லாமல் தொண்டு சிறக்காது. அரிமா நண்பர்கள் பலரது நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்திவிட்டுக் கூறுவார்கள் இது என்னால் அல்ல என் குழுவைச் சேர்ந்த நண்பர்களால்தான் என்று. உண்மை நண்பர்களே தோழமைதான் எந்த்த் தொண்டுக்கும் அச்சானி. 

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு    அரும்பொருள் யாதொன்றும் இல் (462)  

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றவேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்து செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. 

நேற்று நம் இப்தார் நோண்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் மத வேறுபாடின்றி அரிமா நண்பர்கள் அனைவும் தோப்பி போட்டுக்கொண்டு வணங்கிய நிகழ்வு தோழமையின் சிகரமல்லவா.  அருமைத் தோழர்களே . அரிமா இயக்கத்தில் விஞ்சி நிற்பது தோழமையே தோழமையே எனக்கூறி நிறைவு செய்கிறேன்.

(11 – 4- 2022 அன்று அரிமா இயக்கத்தில்    விஞ்சி நிறபது தொண்டா  தோழைமையா பட்டிமன்றத்தின்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை))


Sunday, April 10, 2022

 பார் போற்றும் பாலா 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி



 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்


பேராசிரியர் பாலசுப்பிரமணியம் மிகச் சிறந்த பண்பாளர். உன்னத மனித நேயர், ஆய்ந்தறிந்த கல்வியாளர் சுற்றம் தாங்குவதில் அருட்தந்தை உலகம் சுற்றிய தமிழ்ப் பறவை

பாலா அவர்களை எம் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவை  அண்ணே என்று அழைப்பதும் அவர் மீண்டும் தந்தையை மறுஒலியாக அண்ணே என்று அழைப்பதும் 45 வருடகால ஒலி இன்று அடங்கி ஒராண்டாவதை எண்ணி கண் கலங்குகிறேன். அறிஞர் பாலா அவர்களை நான் தந்தை என்றும் அவர்தம் அன்புத் துணைவியார் சரசுவதி அம்மையாரை அம்மா என்று அழைப்பதும் எங்கள் உறவு முறை.

தந்தை பாலா அவர்கள் நான் மலேசியா சென்றுவிட்டால் ஈப்போ பேருந்து நிலையத்திலிருந்து அவரது பென்சு ஊர்தியில் அழைத்துச் சென்று இல்லத்தில் தங்கவைத்து இன்னமுது தந்து உலகளாவிய பயணங்கள் தமிழக நிலைகள் தம் இளமைக்கால தமிழக அனுபவங்கள் பற்றி எல்லாம் நயம்படப் பேசிப் மகிழ்விப்பார். பாலா அவர்கள் ஒர் நகைச்சுவை நாவலர்.

மலேசிய அரசியல் தலைவர்கள்,பெரும் பேராசிரியர்கள், தொழிலதிபர்கள் இன வேற்றுபாடின்றி மலாய் சீனப் பெருமக்களிடம் பேரன்பைப் பெற்றவர். அவரோடு பல நிகழ்வுகள் மலேசிய மண்ணில் சென்று மகிழ்ந்துள்ளேன். பொன்விழாக் காணும் தமிழ்ப்பணி இதழுக்கு மலேசியாவில் ஒரு உறுப்பிணர் குழாத்தையே உருவாக்கிய பெருமகன் நம் பேராசிரியர் பாலா.


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தபோது தலைவராகப் பொறுபேற்று தமிழக உலகப் பெருமக்களை சிறப்பாக வரவேற்று மாநட்டை சிறப்பாக நடத்தி எனக்கு செந்தமிழ்த் தொண்டின் சிகரம் எனப் பட்டம் வழங்கிய பெருமகன்.

ஈப்போ கிளப்பில் உள்ள கொல்ஃப் திடலுக்கு அழைத்துச் சென்று எனக்கு கொல்ஃப் விளையாடக் கற்றுக் கொடுப்பார். பலமுறை அவரோடு சென்று விளையாடி இருக்கிறேன். அதே கிளப்பில் அவர் மாண்டார் என்ற செய்தி எம் நெஞ்சை விட்டு அகலவில்லை.

மறைந்து ஓராண்டு ஆனாலும் அறிஞர் பாலா அவர்கள் உலகத் தமிழர்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்துள்ளார். தன்னமற்ற தூய நெஞ்சர் பாலாவின் புகழ் ஓங்குக