Saturday, September 5, 2015

அமெரிக்க மண்ணில் தேமதுரத் தமிழோசை


தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்
(அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் சூலை 25,26 – 2015 நாட்களில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாட்டு மலருக்கு மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவரின் முகவுரை )
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் தமிழர் ஒற்றுமை மாநாடு அமெரிக்க நாட்டில் வாசிங்டன் நகரில் நடைபெறுவதென்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் ஐந்தாம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு சான்பிரான்சிசுக்கோ செல்லதிட்டமிட்டபோது உலக்கவிஞர் சங்கத் தலைவர் பத்மபூசன் கிருட்டிணா சீனிவசன் வழி உலகக் கவிஞர் உரோசுமேரி வில்கின்சன் சான்று அனுப்பி அமெரிக்க நுழைவைப் 35 ஆண்டுகட்கு முன்பே பெற்று  அருமை சிற்றந்தையார் வா.மு.முத்துராமலிங்கம் பயணச்சீட்டு வழ்ங்க மாநாடு முடித்து உலகை வலம் வந்தார். பின் மருத்துவாமாணி பஞ்சாட்சரம் அவர்கள் தமிழ் ஈழ மாநாடு நீயூயார்க்கில் தந்தையார் தலைமையிலேயே உலகத் தமிழ்த் தலைவரக்ள் பங்கேற்றனர்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து                               மன்னுயிர்க் கெல்லாம்  இனிது.
என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதின் மெய்மையை வாழ்வில. உணர்கிறோம். என் அன்புச் சகோதரர் பொறிஞர் கவியரசன் அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாடு நடந்தபோது பெரும் இன்னலுக் உட்பட்டோம் பெருந்தொகை அனுப்பி மாநாடு வெற்றிகரமாக நடத்த பேருழைப்பும் பொருளும் வங்கினார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உத்தமம் போறுப்பேற்று செம்மையான முறையில் மாநாட்டை நடத்தினார். அமெரிக்காவிலும் பல்க்லைகழக வாசு அரங்கநாதன் அவர்களோடு இணைந்து கணினி மாநாட்டை தமிழ்ப் பெருமக்களுக்கு சான்று வழங்கி அழைத்து சிறப்பாக நடத்தி தமிழுக்கும் தமிழர்க்கு பெருமைசேர்த்தார்.
    தம்பி தமிழ்மணிகண்டன் வாஞ்சையின் வடிவம். பிறருக்கு உதவுவதில் பேருள்ளம் கொண்டவர்.  எங்களது பணிகளில் இரண்டறக் கலந்தவர். 1993 ஆம் ஆண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக சென்னை கன்னியாகுமரி நடைப்பயணம் வந்தபோது எங்களோடு உர்க்க  முழக்கமிட்டு நடந்த நற்றமிழ் நாயகர். சென்ற ஆண்டு நான் அமெரிக்கா சென்றபோது அவருடைய இல்லத்தில் தமிழ் நூல்கள் பலவற்றையும் வாங்கி ஆழ்ந்த சிந்தனையில் பல்வேறு பாடல்களைப் பாடினார். நான் இரசித்தேன் தந்தை எங்களுக்கெல்லாம் ஊட்டிய உணர்வு குன்றாமல் பெருக்கெடுத்து ஒடியது கண்டு மகிழ்ந்தேன்.
    தற்போது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை உலகத்தமிழ் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்று பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 7ஆம் உலகத்தமிழர் மாநாட்டை சிறப்பாக அரும்பாடுபட்டு நடத்திகிறார். உலகம் முழுமையும் வரும் பேராளர்களுக்கு சான்றுருதி வழங்கி அழைத்துள்ளார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற பொன் மொழிக்கொப்ப எங்களுடைய இன்பங்களை பொதுமையாக்கி தமிழிற்கும் தமிழர்க்கு ஏற்றம் தரு பணிகளில் மகிழ்கிறோம்.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநட்டை அழைப்பை 44 ஆண்டுகளாக தமிழர்களின் படைக்கலனாக இருக்கும் தமிழ்ப்பணியில் வெளியானவுடன் ஆர்வத்தோடு பேராளர்களாகப் பதிவு செய்தனர். அமெரிக்கா என்பது அனைவராலும் வர இயாலாத பொருட்செலவு உள்ள பணியாக இருந்தது. இருப்பினும் தமிழ் மீதும் அருமைத் தந்தையார் அவர்களின் கண்ணயராப் பணீமீதும் எண்பது வயதில் தடம் மாறாமல் கொள்கைச் சிகரமாக வாழும் தொண்டறக் கோமான் மீது கொண்ட பேரன்பால் பதிவு செய்து வருகை தருகின்றனர். அப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    இணைப்பு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாடு எனது பொன்விழா ஆண்டில் மலேசியாவில் 2009ஆம் ஆண்டில் 4 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் டாக்டர் தருமலிங்கம், அருளாளர் விக்டர் அவர்க்ளின் பேருழைப்பை மறக்க இயாலாது.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டு மலர்கள் தமிழினத்தின் வரலாற்றுப்பதிவுகள். அறிவியல் முன்னேற்றத்தின் முழு சக்தியையும் பயண்படுத்தி மலர் தயாராகிறது. உல்கம் முழுமையும் கட்டுரை வாழத்துரை வழங்கிய பெருமக்களுக்கும் நென்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
    என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்                                 இறுதி இறுதி எமக்கு வாராது                                        என்றன் மொழி உககாள வைக்காமல்                                 என்றன் உயிரோ போகாது
என்ற என் தந்தையாரின் கவிதைக்கொப்ப தமிழர்கள் ஒற்றுமை மாநாடு அமரிக்கா வாசிங்டன் நகரில் நடைபெறுகிறது. தேமத்ரது தமிழோசை அமெரிக்க மண்ணில் ஒலிக்கிறது.                

தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி

   
{2015 மே 1- 4 வரை தென் ஆப்ரிக்கா பயணத்தின் போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதியது)
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உலகின் மிகச்சிறந்த இயக்கம். தலைவர் இர. ந. வீரப்பனாரின் அரிய முயற்சியால் உலகம் முழுமையும் தழைத்து ஓங்கி உள்ளது. பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் அவர்களின்  அளப்பரிய தொண்டு போற்றத்தக்கது. இயக்கத்தின் முதல் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்ளோடும் முனைவர் அருகோ அவர்களோடும் இணைந்து நடதிய முதல் மாநாடாகும். தமிழ்ப்பணியில் சார்பில் அரியதொரு மலர் ஒன்று வெளியிட்டோம. தொடர்சியாக பலவேறு நாடுகளில் உலகத்தமிழ்ப் பண்பாடு மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தந்தையும் நானும் பல்வேறு நாடுகளில் பங்கேற்று அளப்பரிய பங்காற்றி வருகிறோம்.
    தலைவர் மிக்கி செட்டி அவர்கள் உதப இயக்கத்தின் தென் ஆப்ப்ரிக்கா கிளையின் தலைவரும். உலகத் துணைத்தலைவரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் பன்னாட்டுக் குழு உறுபினரும் ஆவார். பல்வேறு மாநாடுகளில் பெருமகனின் அளப்பரிய தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவருக்கு சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தந்தையாரின் முத்துவிழாவிற்கு வருகை தந்து பெருமைப்படுத்தினார்.
    மிக்கிசெட்டி அவர்கள் இந்நூற்றாண்டின் சிகரமான் சாதனையை தென் ஆப்ரிக்கா தமிழர்களுக்கு வழங்கியுள்ளார். தென் ஆப்ரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் தமிழக எசு.ஆர். எம். பல்கலைக் கழகமும் இணைந்து தென் ஆப்ரிக்கா மக்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கி உள்ளனர். அந்த பட்டமளிப்பு விழவிற்கு உலகின் பல்வேறுபகுதியிலிருந்து உதப இயக்கப் பொறுப்பாளர்கள் 30 பெருமக்கள் கலந்து கொண்டனர். அதில் நானும் தந்தையும் கலந்து கொண்டோம். இராமசாமி பல்கலைக் கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் அவர்களும் பல்கலைகழத்தின் பொறுப்பாளர்களும் தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர்.
    வந்திருந்த அனைவருக்கும் கோஃச்ட் லாண்ட் உணவகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரையும் டர்பன் இந்தியப் பெருங்கடலின் கடற்கரை அழகை காண அழைத்துச் சென்றனர். காந்திவாழ்ந்த இல்லத்திற்கும் சென்றோம். 20 ஆண்டுகள் காந்தி அங்கிருந்து ஆற்றிய தொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அன்னை தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளுக்கு ஆற்றி தொண்டு இந்த இடத்தில்தான். அண்ணல் காந்தி நடத்திய இந்தியன் போஸ்ட் இதழ் அச்சகம் அனைத்தும் கண்டோம். அறிஞர் திரு.வி. க. எழுதி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட காந்தியடிகள் பற்றிய நூலை பயணம் முழுமையும் படித்து மகிழ்ந்தேன. அவர் தென் ஆப்ரிக்காவில் காந்திடிகள் கண்ட சோதனைகளை பதிவு செய்துள்ளார், அந்த மண்ணில் அவர் வாழ்ந்து விடுதலைக்கு வித்திட்ட உணர்வைப் பெற்ற இடத்தில் நாங்கள் அனைவரும் வலம் வந்து எங்களின் பதிவுகளை குறிப்பேட்டில் பதிவு செய்தோம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த வந்த பெருமக்களை டர்பன் வலம் வரச் செய்த பெருமை தலைவர் மிக்கிசெட்டி அவர்களைச் சாறும்.
    டர்பனில் உள்ள இந்தியப் பெருங்கடல் வழியாகவே நம் தமிழர்கள் அந்நாட்களில் கப்பல் வழியாக ஆங்கிலேயர்கள் தோட்டப் புற வேலைகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.அன்று வந்த தமிழர்கள் இன்று மொழி இழந்து உருவில் தமிழர்களாக உள்ளனர்.ஆங்கிலமே பேசுகின்றனர் வழிபடும்போதுகூட ஆங்கிலத்தில் எழுதி வைத்தே படிக்கின்றனர்
        இராமசாமி பல்கலைக் கழக வேந்தர் பாரிவேந்தர் அவர்கள் ஒருநாள் அனைவருக்கும் விருந்து வழங்கினார். தென் ஆப்ரிக்கா பெருமக்கள் அரியதொரு கலைநிகழ்ச்சி வழங்கினர். தென ஆப்ரிக்கா வாழ் தமிழர்கள்  சங்கீதமும் இசையும் பாட்டும் தமிழ்கத்தில் உள்ளதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.திரு சின்னப்பன் அவர்களின் மகள் சிவானி அவர்களின் பாட்டும் நடனமும் மெய்சிலிர்க்க வைத்தது. என் கால்களும் உடலுமே ஆடத் தொடங்கின. நாங்கள் தங்கிய நான்கு நாட்களூம் அசைவம் சைவம் என ஆப்ரிக்கத் தமிழர்களின் விருந்தோம்பல் திருவள்ளுவர் கூறிய விருந்தோம்பலின் சான்றாக இருந்தது.
    தென ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றனர். காட்டில் திறந்தவெளி உந்துவில் சென்றோம். தந்தையும் நானும் வேந்தர் பாரிவேந்தர்  செருமனி நயினை விசயன் கனடா உதயன் லோகெந்திர லிங்கம் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோரோடு பயணித்தோம். வரிக்குதிரைகளும் ஒட்டகச் சிவிங்கங்களும் காட்டு எருமைகளும் எங்கள் கண்கள் முன் உலா சென்றுகொண்டிருந்தன. அருமைத் தந்தையார் அவர்கள் திருவள்ளுவர் சிவிகை என்று குறிப்பிட்டிருக்கீறாரெ இங்குள்ளோர் கூறமுடியமா என்றார். உந்து அமைதியாகவே சென்றுகொண்டிருந்தது. இராமசாமி பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் அந்தக் குறளைக் கூறினார்.
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை                         பொறுத்தானோடு ஊர்ந்தா விடை (37)                                                                                                                  
வேந்தர் அவர்களின் அவர்களின் இமாலயா உயர்வின் உண்மையை புரிய முடிந்தது.
    டர்பன் நகரில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இராமசாமி பலகலைக்கழகமும் இணைந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிக்கிசெட்டி பேசும்போது என் வாழ்நாள் பணியாக இந்த மண்ணில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இன்று என் கனவு நிறைவேறுகிறது என நெஞ்சம் நெகிழ கண் கலங்கக் கூறினார். உலகத் தமிழர்கள் அனைவரும் கண்கலங்கினர். ஐம்பதுக்கு மேற்பட்ட பெருமக்கள் ஆப்ரிக்காவில் தமிழ் பயிற்றுவிக்கப் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற பெருமக்கள் இளமையும் முதுமையும் கலந்த பெருமக்களாக இருந்தனர். எழுபத்தைந்து வயது பெருமாட்டி பட்டம் பெற்றது அவர்களின் ஆர்வத்தை உணரலாம்.
    மிக்கிசெட்டி அவர்கள் அனைத்துப் பெருமக்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்தி ஆப்ரிக்கத் தமிழர்களுக்கு உணர்வு ஊட்டியதை காணும்போது பாரதியின் ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செயதல் வேண்டும்” கனவு இன்று தென் ஆப்ரிக்காவில் மெய்யாகியுள்ளது.
    யான் மிக்கி அவர்களின் துணைவியார் திருமதி கசுத்தூரி மிக்கி அவர்களிடம் பேசி கொண்டிருந்தபோது கண் கலங்கினார். ஏனம்மா என்று வினவியபோது தன் மருமகன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவரசரப் பிரிவில் உள்ளார் என்றார். அண்மையில் அவர் காலமாகிவிட்டார் என்ற சோகமும் கேட்டு மனம் நொந்தோம்.
    தன் மருமகன் மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் மிக்கி அவர்கள் தமிழைக் காக்க அவர் கொண்ட முயற்சியை எண்ணும்போது இவரல்லவா உலகத் தமிழர் என் எண்ணம் பெருமிதம் அடைந்தது
    தற்போது ஆப்ரிக்காவில் இருந்து 50 பெருமக்களை ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்ய வேந்தர் சகத்ரட்சகன் அவர்களின் பாரத் பல்கலைகழகம் வழி தன் செலவில் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து அருட்சுணைஞர் பட்டம் பெற வழிவகுத்துள்ளார். துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்ளின் வழிகாடுதலின்படி அறிஞர் சக்திவேல் முருகனார் பயிற்றுவிக்கிறார்.
    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                 மண்ணுயிர் எல்லாம் தொழும்.
என்ற வள்ளுவர் வாய்மொழி வழி காந்தி வாழ்ந்த மண்ணில் தமிழுக்காக ஒரு உலகத் தமிழர் மிக்கி செட்டி.
   

நிறம்மாறா நிறவெறி


(தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சூன் 2014ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொலம்பசு-நீயூயார்க்  பேருந்துப்  பயணத்தில் கண்ட அனுபவம் பற்றி எழுதியது)
அருமைச் சகோதரர் கவியரசனோடு தம்பி தமிழ்மணிகண்டர் இல்லத்தலிருந்து புறப்பட்டு மேரிலாண்ட் ஓசியன் சிட்டி, பாசுடன் கனக்டிகட் நீயூயார்க் நீயூசெர்சி வழியாக கொலம்பசு சென்றடைந்தோம். தம்பி கவியும் மகள் தமிழ் நடைப்பாவையும் மகிழ்வுந்தை  ஓட்டி வந்தனர். மகன் கவின் மருமகள் முத்துமாரி பல்வெறு செய்திகளை உரையாடிய வண்ணம் வந்தோம். வரும்போது திருக்குறள் பாடி ஒவ்வோரு குறள் பற்றியும் அமெரிக்க சாலைகளில் பயணிக்கும்போது யாங்கள் உரையாடி வந்தது பிள்ளைகளுக்கு ஒரு ஊக்கம் நம்பிக்கை முன்னேற்றத்திற்கு மாமருந்தாக எண்ணினேன். நீயூயார்க்கிலிருந்து. கொலம்பசு பத்துமணிநேரப் பயணம், சாலைகளின் எழிலும் ஆங்காங்கே உள்ள பயண ஒய்விடங்களும் உணவகங்களும் பயணக் களைப்பில்லாமல் மகிழ்வுலாவாக இருந்தது.
    தம்பி கவியரசனும் தமிழ்மணிகண்டனும் வீடு வாங்கி இது நாள் வரை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. தற்போதே செல்லமுடிந்தது. நகர் அமைப்பும் இல்ல வடிவமைப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. கால் ஏக்கர் உள்ளமனையில் நடுவில் இல்லம். கீழ்ப்பகுதியில் முன் கார் நிறுத்தம் உள்ளுக்குள்ளேயே முதல் மாடி செல்லும் படி வசதி. புதுமையான படுக்கையறைகள் குளியலறைகள் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டைச்சுற்றி பசுமையான புல்வெளிகள். ஆங்காங்கே மரங்கள் எழில் சூழ்ந்து உள்ளன. டப்ளின் பகுதியில்  நகர் அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தன. தம்பி தமிழ்மணிகண்டன் வீடு மூன்று அடுக்கு உள்ளது. வீட்டைச்சுற்றி உள்ள புல்வெளிகளை பராமாரிக்கவேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை யென்றால் டப்ளின் நகராட்சி சீர்செய்து அதற்குறிய கட்டணத்தைப் பெறுவர் எனக் கூறினர். இரு நாட்கள் தம்பி இல்லத்த்லிர்ந்து விட்டு நீயார்க் புறப்பட திட்டமிட்டேன். கொலம்பசுலிருந்து பேருந்தில் செல்ல பயணச்சீடை இணையத்தில் தம்பி பதிவு செய்தார்.
    இரவு பதினோறு மணிக்கு பேருந்து. தம்பியும் முத்துமாரியும் கொலம்பசு டவுண்டவுன் பகுதியில் உள்ள பேருந்துநிறுத்தத்திற்கு ஊர்தியில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் நல்ல மழை. பேருந்து நிறுத்தம் வந்து அலுவலகம் சென்றால் அங்கு யாறும் இல்லை. விசாரித்ததில் 11 மணி பேருந்திற்கு இனிமேல்தான் வருவார்கள் என்று கூறினர். ஒருவழியாக ஒரு அலுவலர் வந்தார் மணி11 ஆகி விட்டதே என்றோம் அமருங்கள் வரும் என்றார். தம்பியும் முத்துமாரியும் காரிலேயே இருந்தனர், ஒருவழியாக பேருந்து 11-30 மணியளவில் வந்தது. ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். தம்பி விடைபெற்றுச் சென்றார். உடைமைகளைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். நான் அமர்ந்தும் கால்  மணி நேரம் கழித்துத்தான் பேருந்து புறப்பட்டது. நான் பேருந்தின் நடுப் பகுதியின் ஒரத்தில் அமர்ந்திருந்தேன். கருப்பர்கள் வெள்ளையர்ளும் அமர்ந்திருந்தனர். இசுலாமிய கருப்பர்களும் தலையில் தொப்பி அணிந்துகொண்டு பயணம் செய்தனர்.
    சிறிது நேரம் கழித்து பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஒரு கருப்புநிற மத்திம வயதுப் பெண்மணி 35 பேருந்தில் ஏறினார். தன் உடைமைகளை வைத்துவிட்டு என் இருக்கைக்கு ஓர் இருக்கை முன் அமர்ந்தார். தீடிரென ஒரே சப்தம். இருக்கையை விட்டு எழுந்து பார்த்தேன். 20 வய்து மதிக்கத்தக்க ஒரு வெள்ளை இளைஞர். ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அந்த அமையாரும் வேகமாக கையை நீட்டிக் கொண்டும் வெகுண்டு கத்தினார். இருவருடைய வாக்குவாதமும் முற்றிக் கொண்டு இருந்த்தது. தீடிரென அந்தப் பேருந்தின் இருந்த அனைத்து கருப்பர்களும் ஆவேசமாக இருக்கையை விட்டு எழுந்து அந்த இளைஞனை எதிர்த்து கொதித்தெழுந்தனர். ஆனால் அந்த இளைஞர் முகத்தில் எந்த விதமினா அச்சம்  இன்றி தன் கைப்பேசியை இயக்கிக் கொண்டு அமர்ந்துகொண்டு விவாதித்தான். பின் அந்த அம்மையாரைச் எழும்பும்படி சாடினான்
    பெருத்த சப்தம் வந்தவுடன் பேருந்து நின்றது. எனக்கு ஒரே கவலை ஏற்கனவே பேருந்து தாமதமாக வந்து தாமதமாகவே எடுத்தனர் நான் காலை சென்றால்தான் மருமகன் புவியரசன் வெலைக்குப் போகுமுன் என்னை அழைத்துக் கொண்டு செல்லமுடியும் இதற்குள் இந்த இந்த நிற வேற்றுமைப்போர். ஒரு கருப்பராக உள்ள ஒபமா ஆட்சி செய்யும் அளவிற்கு நாடே மாறியுள்ள நிலையிலும் அந்த இளைஞருடைய செயல் அருவருப்பைத் தந்தது.
    பேருந்தை நிறுத்திய ஒட்டுநர் இருவரின் இருக்கை அருகே வந்தார். அந்த பேருந்து சீனர் நடத்தும் நிறுவணம். அந்த ஓட்டுநரும் சீனர். நான் அந்த இளைஞரை கண்டித்து இருவரையும் இருக்கையில் இருக்க வைப்பார் என எண்ணினேன். ஆனால் இருவரின் வாக்குவதமும் ஓய்வதாக இல்லை. பேருந்தில் இருந்த கருப்பர்கள் கண்டித்த வண்ணம் இருந்தனர். பேருந்தில் இருந்த வெள்ளையர்கள் அமைதியாக இருந்தனர், அந்த இளைஞனை கண்டிக்கத் தயாரக இல்லை.
    கடைசியாக ஒட்டுனருடன் அந்த அம்மையாரை அழைத்து முன் இருக்கையில் அமரவைத்தார். முதலில் மறுத்துப் பின் அம்மையார் முன் இருக்கையில் அமர்ந்தார். அந்த வெள்ளை இளைஞர் இரு இருக்கையிலும் அமர்ந்துகொண்டு தன் கைப்பேசியை பயண்படுத்திய வண்ணம் வந்தார்.
    ஒருவழியாக பேருந்து காலை 8 30 மணியளவில் நியூசெர்சியிலிருந்து நியுயார்க்கை அடைய ஃகட்சன் நதிப் பாலத்தைக் கடந்துகொண்டிருந்தது. மருமகன் புவியரசனுக்கு தொட்ர்பு கொண்டேன். மாமா நீயூயார்க் 34ஆவ்து தெருவில் அங்கேயே நில்லுங்கள் என்று கூறினார். நான் இறங்கி நின்றேன் மருமகன் வந்து அழைத்துச் சென்றார்.

அமெரிக்காவின் உயர்ந்த பல்கலைக்கழகங்கள்


(தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் சூன் 2014ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைகழகங்களுக்குச் சென்றபோது எழுதியது)
அமெரிக்காவின் உயர்ந்த பல்கலைக்கழகங்கள் மூன்றிர்க்குச்  சென்றேன். ஒன்று அறிவுச் சுரங்கமாகத் திகழும்,ஃகார்டுவார்டு பல்கலைக்கழகம்,  மசாசுசட்சு இன்சுடிடுயூட் ஒஃப் டெக்னாலாசி, மற்றொன்று அறிஞர் அண்ணாவிற்கு டாக்டர் பட்ட, வழங்கிய யேல் பல்கலைக்கழகம்.
    கணினி அறிஞர் தம்பி கவியரசன் ஒகியோ மாநிலத்தில் கொலம்பசு நகரிலிருந்து எங்களின் கடைசித் தம்பி தமிழ்மணிகண்டன் வாழும் மேரிலேண்டு பகுதிக்கு குடும்பத்தோடு வந்தார். நாங்கள் அங்கிருந்து மேரிலாண்டில் உள்ள ஒசியானிக் சிட்டி கடற்கரைக்குச் சென்று அங்கு ஒரு நாள் தங்கினோம். கடற்கரையை மிகச் சிறப்பான சுற்றுலாத் தலமாக வைத்துள்ளனர். அருமை மக்கள் தமிழ்நடைப்பாவை கவின் சாதுகுருவோடு நாஙகள் கடல் அழகையும் மணல் வெளியையும் கண்டு மகிழ்ந்தோம்.
    கடற்கரையின் சாலைப் பகுதியில் விஞ்ச் மூலம் கடல் அழகையும் நகர் அழகையும் காணமுடியும். அழகு அழகான மிதிவண்டிகல் வாடகைக்கு விடுகின்றனர். உல்லாசமாக மிதி வண்டியில் பயணித்து உடல் பயிற்சியும் உள்ளக் களிப்பும் பெறுகின்றனர். மணல் வெளியை  ஒட்டினாற்போல் மரத்தால் தரைச்சாலை அமைத்துள்ளனர். நடைப் பயிற்சி செல்வோர் மரச் சாலை உள்ள அளவு நடந்து செல்கின்றனர். மறுபுறம் மரச்சாலை ஒட்டி தொடர் கடைகளும் உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் சூழ்ந்து பரபரப்பான எழிலான சுற்றுலாத் தலமாக உள்ளது. நானும் தம்பியும் நடந்து சென்றோம். உலக மக்கள் கூடும் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது.

    அங்கிருந்து பாசுடன் நகரில் வசிக்கும் மருமகன் கோபிநாதன் இல்லத்திற்குச் சென்றோம். புதிய இல்லம் வாங்கி குடியேறியுள்ளார். மூன்று அடுக்குள்ள கட்டிடம். மரம்தான் வீடுகட்டப் பயண்படுத்தியுள்ளனர்.பாசுடனில் உள்ள ஃகார்டுவேர்டு பல்கலைக் கழகத்திற்கு மருமகள் முத்துமாரி மக்கள் தமிழ்நடைப்பாவை ஆகியோருடன் கோபி ஊர்தியில் அழைத்துச் சென்றார். ஃகார்டுவார்டு பல்கலைக்கழகம் முதன்மைச்சலையில் இருபுறமும் பரந்த வெளியில் பல்கலைகழகம் உள்ளது. மகன் கவின் சாதுகுருவை இப் பல்கலைகழகங்களில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆவல் எங்கட்கு உண்டு. கவினை புத்துணர்ச்சியூட்ட அப் பல்கலைக்கழத்தைப் பற்றி மருமகள் விவரித்துக் கொண்டே வந்தார். பல்கலைகழகத்திற்கென வரவேற்பு அரைக்கு அழைத்துச் சென்றார் மருமகன் கோபிநாதன்.பின் நாங்கள் அனைவரும் பதிவு செய்தோம். குட்டிப் பேருந்துகள் ஒவ்வொரு குழுவாக அழைத்துச் சென்றனர். எங்களது நேரம் வந்தது மற்றவர்களோடு நாங்களும் குழுவாக ஏறிச் சென்றோம். வரவேற்பு அரையிலேயே பல்ககலைக் கழகம் பற்றிய அச்சடித்த படிவங்கள் இருந்தன நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
    பல்கலைக் கழக்த்தில் உள்ள அரங்கில் அனைவரையும் அமர வைத்தனர். சிறிது நேரத்திற்கும் பிற்கு ஒரு பேராசிரியர் மேடையில் தோன்றி அறிமுகப் படுத்திக் கொண்டார். இந்தப் பல்கலைக் கழகத்தின் சிறப்புகள் பற்றியும். தேர்ச்சி விகிதம் பற்றியும். அங்குள்ள படிப்புகள் பற்றியும் நாற்பது நிமிடம் உரையாற்றினார். புன்சிரிப்போடும் மாணவர்கட்கும் பெற்றோர்கட்கும் புரியும் வண்ணம்  பவர் பாயின்ட் மூலம் திரையில் தெளிவுபடுத்தினார் எம்.ஐ.டி. பேராசிரியர். 35 வயது மதிக்கத்தக்க பேராசிரியராகத் தோன்றினார். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பெற்றோர்களும் மாணவர்களும் அரங்கில் இருந்தனர். அனைவரும் குறிப்பேட்டிலும் கைக் கணீனியிலும் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
    பேராசிரியரின் உரை முடிந்தவுடன் குழுக்களாக பிரித்து பலகலைக் கழகத்தில் பயிலும், மாணவ மாணவிகள் எங்களை அழைத்துச் சென்றனர். எங்கள் குழுவிற்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம் மாணவி அழைத்து சென்றார். தன்னை புன்சிரிப்போடு அறிமுகப் படுத்திக்கொண்டார். பின் அவர் எங்களை வழிகாட்டி உரையாற்றி அழைத்துசென்ற பாங்கு மிகச் சிற்ப்பாக இருந்தது. அவர் எங்களை நோக்கி பேசிக்கொண்டே பின்புறமாக நடந்து கொண்டே பல்கலைக் கழகத்தின் சிறப்பையும் அங்குள்ள படிப்பின் உயர்வையும், கூறிக் கொண்டே சென்றார்..
    பல்கலைக் கழ்கத்தின் ஒவ்வொறு துறைக்கும் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு துறையையும் காணும்போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் பல்கலைக்கழகம்தான். ஒருபுறம் முடித்து சாலையின் மறுபுறம் உள்ள பகுதிக்கும் அழைத்துச் சென்றார். வகுப்பு அறைகள், அரங்கங்கள், அனைத்து விளையாட்டு திடல்கள் கூடங்கள்,   நூலகங்கள், நீச்சல் குளங்கள், உணவு விடுதிகள் பூங்காக்கள் என பிரமீப்பூட்டும் வகையில் பல்கலைகழகம் இருந்தது, இங்கு பிள்ளைகளைப் படிக்க வைக்க பெரும் செலவாகும் என்று மாரி கூறினார்.
  மாசாசுசடச் இண்டிடீயூட் ஒஃப் டெக்னாலசி (எம்.ஐ.டி). மட்டுமல்ல தகுதியும் இருந்தால்தான் இங்கே படிக்கும் பேறு கிட்டும். இதுவும் பாசுட்டனில் மாசாசுசட்சு பகுதியிலேயே உள்ளது. நம் சென்னையில் எம்.ஐ.டி உண்டு. மெட்ராசு இன்சுடுயூட் ஒஃப் டெக்னாலசி இங்கும் தலைசிறந்த மாணவர்களே பயில்வர்.
    நாம் காணும் முகநூல் கண்டுபிடித்த் பெருமகன் இந்தப் பல்கலைக் கழக்த்தில்தான் படித்தவர் என்ற தகவலும் அறியமுடிந்தது. பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நிறிவணர்களின் சிலை இருந்த்து. அவரது காலில் கைவைத்து வணங்கினர். அவர் கால்மட்டும் அனைவரின்கைபட்டுக்கொண்டே இருப்பதால் கால் பலபலவென்று இருந்தது. சிலையுடன் நின்று படமெடுத்தனர் நாங்களும் படமெடுத்துக் கொண்டோம்.பின் இல்லம் திரும்பினோம்.
    பாசுட்டனிலிருந்து கனக்டிகெட் சென்றோம். அங்கு தம்பி கவியின் நண்பர் சுரேசு கவுரி இல்லத்தில் தங்கினோம். மக்கள் பாவை, கவின் சுரேசுகவுரியின் மக்கள் இருவர் மருமகள் முத்துமாரியுடன் தம்பி கவியரசன் யேல் பல்கலைக் கழக்த்திற்கு அழைத்துச் சென்றார். இப் பல்கலைக் கழகமும் அமெரிக்காவின் உய்ர்ந்த பல்கலைக்கழ்கங்களில் ஒன்று. அந்தப் பகுதி முழுமையுமே பல்கலைக் கழகமாகவே உள்ளது. நமது நம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சென்னிற அமைப்பு போன்றே உள்ளது.  வரவேற்பு அறையில் நாங்கள் பதிவு செய்துகொண்டோம்.அங்கு ஒரு அரங்கில் இரண்டு நேரங்களில் உரை வழங்குகின்றனர். நாங்கள் எங்கள் நேரத்திற்கு சென்று அமர்ந்தோம். அந்தப் பல்கலைக்கழகத்தில்  படித்த கறுப்பு நிற மாணவிதான் எங்களுக்கு  பல்கலைக்கழத்தைப் பற்றியும் அந்தப் பல்கலைகழக்த்தின் சிறப்புகள் பற்றியும் நீண்ட உரையாற்றினார். பல்கலை கழகத்தைப் பற்றி ஒரு திரைப்படம் ஒன்று காண்பித்தன்ர். மிகச் சிறப்பாக இருந்தது. கடைசியில் அதில் திரைக் கதை வசனம் நடிப்பு இசை அனைத்தும் அப் பல்கலை கழகத்தில் படித்தவர்கள் என குறிப்பிட்டனர். உண்மையிலேயே மாணவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகச் சிறப்பாக எடுத்திருந்தனர். உரை முடிந்தவுடன் பல்கலைக் கழக குறிப்பேட்டை வழங்கினர். மிகப் பெரிதாக் இருந்தது  கிட்டத்தட்ட 800 பக்கம் அச்சடிக்கப்பட்டதாக இருந்த்து. நான் கவினுக்கும் சென்னையில் படிக்கும் தம்பி ஆண்டவர் மகள் சேதுச்செல்விக்கும் வாங்கினேன்.
    பின் குழுவாக மாணவ மாணவிகள் அழைத்துச் சென்றனர். பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டே சென்றனர். ஒவ்வொரு துறையும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களை இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளது. பலகலை கழகத்தின் அரங்கம் மிகப் பெரிய அரங்கமாக இருந்த்து.இங்குதான் உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் உரையாற்றியுள்ளனர் என்று கூறினார், அங்கு அழைத்துச்சென்ற் போது என் இருகண்களும் கலங்கின. சாதாரணக் குடியில் பிறந்து வறுமையில் படித்து பெரியாரால் ஈர்ர்க்கப்பட்டு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கூறி அதன் படி வாழ்ந்து தமிழக மக்களின் அண்ணனாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா உரையாற்றிய அரங்கம். யேல் பல்கலைகழத்தில் சுற்றியபோதெல்லாம் பேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் என்னை ஆழ்த்தின. அண்மையில்தான் மியான்மர் நாட்டில் பல்லாண்டுகள் சிறையில் வாடி சன்நாகம் தழைக்கப் பாடுபட்ட ஆங்சான்கியூ அரங்கில் பங்கேற்று பேருரை வழங்கியதாகக் கூறினர்.
    நம் ஊரில் கல்வி நன்கு வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் தமி பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் அவர்களைப்பற்றிய தன் அறிவுப்பும் பல்கலைக் கழ்கத்தில் சிறப்பும் அங்கு பயின்ற மாணவர்களின் வெற்றிகளும் பட்டியலிடப் படவேண்டும்.
பெற்றோரகளும் மாணவர்களும் முறையாக் கண்டு மனத்தெளிவு பெறும் வண்ணம் செயல்பட வேண்டும். நம்நாட்டில் காசு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டுள்ள கல்விமுறையைக் கண்டு வறுந்தினேன்