Monday, October 16, 2023

  இருநூறு ஆண்டு காணும் அருட்பேரொளி வள்ளலார் 


அருட்பெருஞ் சோதி வள்ளல்

           அன்பினால் உலகை ஈர்த்தார் 

நெறியிலா  வஞ்ச நெஞ்சர் 

            நிந்தனை செய்தே மாய்த்தார் 

வறுமையின் பிடியில் மக்கள்  

           வெந்திடும் துயரை சாய்க்க  

     கருவறை காக்கும் தாயாய் 

                      கருணையாய் உணவை ஈந்தார்

   

          

         உருவமே இல்லா ஒளியை

                   உன்னத இறையாய்த் தந்தார் 

          மறுவிடும் சாதி மதத்தை 

                    மண்ணிலே புதைத்த நேயர் 

          தெருவெலாம் அருட்பா பாடி 

                      திக்கெலாம் நிலையாய் உள்ளார் 

      அருளொளி அண்ணல் எம்மான்  

               அணிபுகழ் பேறே வாழ்க        


 தமையன்  வாரா நிலையால்

         தளிராக உரையைத் தந்தார்  

எமைஆளும் பேறு பெற்ற    

             எண்ணிலாப் பாக்கள் யாத்தார் 

 சமற்கிரு தம்தாய் மொழி                       

         சங்கரர்    சொன்ன போது

இமைபோல தமிழைக் காக்க 

        இனியதந் தைமொழி என்றார்


இருநூறு ஆண்டு காணும்

         இன்னலைப் போக்கும் வள்ளல்

 தருமம்  காக்கும் சென்னை 

           தகுதியாய் மொழிந்தார் அன்றே 

பெருமையாம்  முதல்வர் ஸ்டாலின்

             பெற்றிமை விழாவைக் கண்டார் 

 அருள்நெறி காக்கும் பாதை

            அருட்சன் மார்க்கம் வாழ்க