Tuesday, October 12, 2010

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் நான்காம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்

வாழ்க பெருங்கவிக்கோ
கவிஞர் இரா.இரவி

சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்
வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார்

இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்
இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர்

சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்
சேது சமுத்திரத் திட்டத்தை மதியில் வைத்து உள்ளார்

தமிழுக்காக நடைப்பயணம் நடந்த வேங்கை
தமிழுக்காக உரக்க குரல் கொடுக்கும் சிங்கம்

இவர் மீசையின் நிறம் வெள்ளை அளவு பெரிது
இவர் உள்ளமோ வெள்ளை மனமோ பெரிது

மரபு க்கவி புனைவதில் மாபெரும் வல்லவர்
மரபு க்கவி மறையாமல் காத்து வருபவர்

பெருங்கவிக்கோ வெற்றிக்கு அவரது துணைவி
அன்னை சேதுமதி முன் நின்றார்கள்

மனைவி இறந்தவுடன் மறுமணம் புரியும் காலத்தில்
மனைவி இறந்தவுடன் ஆலயம் கட்டி வணங்கும்

பெருங்கவிக்கோ வாழ்க பல்லாண்டு

Wednesday, October 6, 2010

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் ‘ பாருலாப் பாக்கள்’ நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையத்தள வலைப்பூ அறிமுக விழா





பெருங்கவிக்கோமுன்னிலையில்,மேயர்மா.சுப்பிரமணியன் வலைப்பூவைத் திறக்க தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது


பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் பாருலாப் பாக்கள் நூல் வெளியீடு www.tamilpani.blogspot.com இணையதள வலைப்பூ அறிமுக விழா 4-10-10 சென்னையில் கன்னிமாரா நூலக அண்ணா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

சென்னைமாநகரத் தந்தை வணக்கத்திற்குரிய மா.சுப்பிரமணியன் தமிழ்ப்பணி பிளக்சுபாட் வலைப்பூவை திறந்து வைத்துப் பேசினார். வலைப்பூவில் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழிழ் உருவம் கவிமுரசு திருவள்ளுவரின் கவிதையுடன் காணொலித் திரையில் வந்தது கண்டோர் மகிழ்சிப் பெருக்கில் கரவொலி எழுப்பினர். விழாவிற்கு சா.கணேசன் தலைமை தாங்கினார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை உரையாற்றினார். கவிமுரசு திருவள்ளுவரின் பாருலாப்பாக்கள் நூலை இலண்டன் கவிஞர் கருணானந்த ராசா வெளீயிட தமிழ் வள்ளல் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் மறைமலை வலைப்பூ பயிற்சி பட்டறையை சிறப்புடன் நடத்தினார்.அவர் அவர் உருவாக்கிய 31 பாவேந்தர் பர்ம்பரைக் கவிஞர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்தி உரையாற்றி காணொலியில் காட்டினார்.

கணித்மிழ்ச் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர். இரா.கருணாநிதி,வாழ்த்துரை வழங்கினர். கவிச்சிங்கம் கண்மதியன் வரவேற்புரையாற்றினார். திருக்குறள் மு.வேங்கடேசன் நன்றி நவின்றார். கவிமுரசு வா..மு. சே. திருவள்ளுவர் ஏற்புரையாற்றினார்.

Sunday, October 3, 2010

காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்



காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மாமன்னர் இராச ராசன்
மதிநுட்ப தமிழர் வேந்தன்
தேமதுரத் தமிழின் மேன்மை
தேசமெலாம் வணங்கும் சோழன்
பூமணத்து நம்மின் மக்கள்
புத்தமுதக் கலையின் உச்சம்
காமணக்கும் கற்கோயில் கண்ட
காலத்தால் அழியா சோழன்

வீரத்தால் தம்மின் நாட்டை
விண்ணளவு ஏற்றி வைத்தார்
சோராத வேங்கை நாடு
சொந்தமாக கங்கை பாடி
வேராக தடிகைப் பாடி
வேந்தனது நுலம்ப பாடி
மாறாத குடமலை ஈழம்
மதிகொல்லம் கலிங்கம் கண்டான்

பெரியகோயில் லிங்கம் பாரில்
பேரெழுந்த வடிவம் என்னே
உரியநல் கோபுரத் தோற்றம்
உன்னத வானை முட்டும்
இருநூற்றுப் பத்தும் ஆறும்
இறுமாந்த எழிலைக் காட்டும்
கருங்கல்லில் அடுக்கின் ஏற்றம்
கவின் பதிமூன்று அன்றோ

ஆயிரத்து ஆண்டின் முன்னே
அகிலத்தை ஆண்ட வேந்தன்
மாயிரத்து ஐப்பசி திங்கள்
மாமண்ணில் உதித்த மன்னன்
பாயிரம் அற்றை நாளில்
பாடிய கரூர் தேவன்
மாஇனத்து வேந்தன் வாழ்வை
மாத்தமிழில் செதுக்கி உள்ளான்

தகதகக்கும் ஐம்பொன் மேனி
தவவேந்தன் இராச ராசன்
புகழ்காத்த உலகமா தேவி
புண்ணியச் சிலையின் தோற்றம்
அகமதாபாத் அருங்காட்சி மன்றம்
அடங்கியுள இணையர் தம்மை
மக்த்தான முயற்சி கண்டு
மாக்கோயில் உள்ளே காண்போம்

மெய்கீர்த்தி தம்மின் வாழ்வை
மேதினிக்கே தந்து சென்றோன்
பொய்யறியா நம்மின் மக்கள்
போற்றிடும் வரலாறு தந்தோன்
செய்வதை உணர்ந்து வெல்லும்
செயல்வல்லார் கலைஞர் வேந்தர்
மெய்வடிவாய் ஆயிரம் ஆண்டை
மேற்கொண்டார் நீடு வாழ்க