Monday, July 1, 2019

https://www.facebook.com/ThenpulolyoorKrish/videos/491879694688267/
நன்றியன் கவித்தேன் நமக்காய்த் தந்தருளும்
நாயகன் திருவள்ளுவரை நன்றியொடு வாழ்த்தினேன் பணிந்து

கவித்தேன் சுவைத்தேன் கலைமா மணியே
குவித்தேன் கரங்களைக் கூப்பி – உவந்தேன்
உனது தமிழ்ப்பணி உன்போ லுயர்வே
கனவானே வாழ்க களித்து!

வள்ளுவனே வந்தானோ வண்தமிழை வாழவைக்க
தௌ;ளு தமிழமுதச் செய்யுளெலாம் - அள்ளுறுதே
பாரெலாம் வாழுகின்ற பன்னாட்டுச் செந்தமிழர்
வாரி அணைக்கின்றீர்! வாழ்த்து!

(அள்ளுறுதல் - வாயூறல் )

உள்ளம்போ லோங்கிய உத்தமன் சேதுராமன்
தௌ;ளு தமிழுக்காய்த் தந்தானோ- வள்ளுவனை
அள்ளித் தருகின்றா னன்னைத் தமிழமுதை
கொள்ளை அழகினிலே கோர்த்து!

கள்ளங் கபடமிலாக் கண்ணியனே வள்ளுவா
உள்ள நிறைவுடனே உன்பணிகள் - தௌ;ளத்
தெளிவாய்த்; தெரிகிறதே தேசமெலா மோங்கி
ஒளிமயமே உன்வாழ்வு ஓம்!

தௌ;ளு தமிழினைத் தேனில் கலந்துநீ
அள்ளித்  தருகின்றா யன்றாடம் - வள்ளலே
உன்னாசா னுன்தந்தை உன்னைப் படைத்தானே
என்னே யவன்சேவை ஏத்து!

செல்லும் சபையெலாம் சிரிப்பொலி சேர்த்திடும் சிற்பியே வள்ளுவா!
சொல்லின் உறுதியும் சோர்விலாச் செந்தமிழ் ஞானமும் கொண்டு
அல்லும் பகலும் அயராது அன்னைத் தமிழ்காக்கும் கலைமா மணியே!
வல்லவனே! வளத்தொடு வாழ்வாங்கு வாழி வானரும் போற்றவே!

கரும்பென இனித்து வாழ்க! கண்ணியா நீடு வாழ்க!
விருதுகள் பல்கிப் பெருகி வளமொடு வாழ்வை வாழ்க!
திரும்பிடும் திசைகள் தோறும் தேடிய நட்பு மலிந்து
விரும்பிய யாவும் பெற்று வள்ளுவா வாழ்க வாழ்க!

உள்ளமும் உடலும் என்றும் உறுதியாய் நிலைத்து வாழ்க!
தௌ;ளு தமிழ் ஞானம் தெவிட்டாது இனித்து வாழ்க!
பிள்ளைகள் பேரர் பூட்டர் பந்தம் சூழ்ந்துநீ வாழ்க!
வள்ளுவா வாழி வண்தமிழ் உலகம் வாழ்த்த நீடே!

அன்பொடு அருட்கவி ஞானகணேசன் குடும்பம்