Monday, November 29, 2021



சென்னையில் செம்மொழி நாள் பன்னாட்டுமாநாடு
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி , சென்னை சீர்ஞானபாலய சுவாமிஅள் தமிழ் கலை அறிவியல்  கல்லூரி  , மயிலம். குவைத் தமிழ் இசுலாமிய சங்கம் குவைத்,மெல்பர்ன் தமிழ்ச்சங்கம் ஆஸ்திரேலியா, , கம்பன் அறக்கட்டளை திண்டிவனம், தமிழ்த்தாய் அறக்கட்டளை தஞ்சாவூர், இணைந்து நடத்தும் செம்மொழி நாள் பன்னாட்டு மாநாடு இங்கு நடைபெறுவது சிறப்ப்புக்குரிய  ஒன்றாகும்/ அதை ஒருங்கிணைத்து நடத்தும் உடையார் கோயில் குணா வைப் பாராட்டி மகிழ்கிறேன். காலையிலிந்து   நடைபெறும் விழாவில்  சிற்பி பாலகிருட்டிணன் உருவாக்கிய சிலையை  இங்கு வைத்து உலகம்  முழுமையும்  திருவள்ளுவர் வழங்கிய  அண்ணாச்சி வி.சி.சந்தோசம் வாழ்த்துரைத்து இங்கே சிறப்பாக  நிமிர்ந்து எழில் பொங்க இருக்கிறார்.
 இந்தச்  திருச்சிலையை திராவிட்த் திருமகன் நம் கலைஞரின் தவ மகன் தமிழகத்தின் விடிவெள்ளி தமிழக முதல்வர் இஸ்டாலின் அவர்களின் திருக்கரத்தில்  வழங்க உள்ளதை அறிந்தே இந்நிகழ்வில் பங்கேற்ற்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன்  தமிழகம் முழுஐயும் உள்ள பேருந்துகளில் திருவள்ளுவர் படமும்  திருக்குறளும் அதன் எளிய தெளிவுரையும் வைத்துள்ளார் நம் முதல்வர் இஸ்டாலின் அவர்கள். தலைவர் கலைஞ் பொதுப்பணித்துறை  அமைச்சராக இருந்தபோது தொடங்கிய திட்ட,ம் இன்றும் முழுமையாக சிறப்பாக நம் போக்குவரத்துத் துறை அமைச்சர் இராசகண்ணபன் அவர்களால்  அனைத்துப் பேருந்துகளிலும் நடைமுறைப்பட்த்தப்பட்டுள்ளது. குமரியில் தலைவர் கலைஞர்  நிறுவிய சிலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணக் கண் கொள்ளாக் காட்சியாக முதல்வர் இஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் செம்மாந்து நிற்கிறார் வள்ளூவப் பேராசான். முதல்வர் இஸ்டாலின் ; பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை மக்கள் தொண்டனாகவே  செயல்படுகிறார். கொரணா தீநுண்மி தம்ழ்கத்தை ஆட்டிப்படைத்தது முத்ல்வர் அவர்களின் பெரும் முயற்சியால் முற்றிலும் நீக்கப்பட்டு  இன்று தமிழகம் மேலோங்கி வருகிறது. தற்போது மழை  வெள்ளம் தமிழகத்தைக் சீரழிக்கும்போது  அனைத்டுப் பகுஹ்டிகளுக்கும் சென்று நடந்தே மக்கள் பணிகள் ஆறாறுகிறார்.  இந்த  மாபெரும் மக்கள் தொண்டனுக்கு திருவள்ளுவர் சிலை வழஙுவது நம்பேறாகும். இந்த நிகழ்வுக்கு சிற்ப்பு விருந்தின்ராக வந்துள்ள பிற்பட்ட்டோர் நலத்துறையின் இயக்குநர் சுரேசு குமார் அவர்கள் மிகச் சி/றந்த உரையாற்றினார்கள். தஞ்சை மண்  தந்த ஆட்சியர் பெருமகன் மிக எளிமையோடு தன் பல்வேறு பணிகளுக்கிடையில்  பங்கேற்று எங்களுக்கெல்லாம் விருது வழங்கிய பெருமகனை நெச்ஞாரப் போற்றுகிறேன். அவர் மேடையை விட்டு இறங்கிச் செல்லும்ப்பொது கவனித்தேன் அமர்ந்திருந்த பேராசிரியர்  கமலா முருகன் கவிஞர் சிந்தைவாசன்  கவிஞர் தாமரைப் பூவண்ணன்  ஆய்வாளர்  பிரான்சிஸ் ஆகியோரோடு பேசிச் சென்ற பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது எளிமையின் சிகரமாக உள்ள ஆட்சியர் அவர்களை வாழ்த்துகிறேன்.
 இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்களைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் பேத்தி மணிமேகலை குப்புசாமி எழுதிய நூலான  புகழ் மாலையை  இந் நிகழ்வில் வெளியிடுவது சாலச் சிறந்த்து. பிற்பட்டோர் நலத்துறையின் இயக்குநர் பெருமகன் வெளியிட நான் பெற்றுக்கொள்வதில்  பேருவகை கொள்கின்றேன்.. ஐயா முத்து அவர்கள் அரியதொரு உரை நிகழ்த்தினார்கள். செம்மொழி வரலாற்றை உலகமொழிகளைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவுசெய்தார்கள். புரவலர் பெருமகன் புத்வையில்ருந்து இந்த மழை வெள்ளத்திலும் பங்கேற்பது  அவரது ஆழ்ந்த பற்றை நாம் உணர முடிகிறது. புகழுக்குரிய பெருமகன் பல்லாண்டு வாழ்க.


எம்மோடு விருது பெற்ற  அன்னை வேளாங்கண்ணி மகளின் கல்லூரியின் தாளாளர்  ச. தேவராசு அவர்கள் அமைதியாக இகே அமர்ந்த கொண்டிருக்கிறார். இரண்டாய்ரம் மக்ளிர் பெருமக்கள் பயின்று ற பெருமக்ன். திருக்குறள் நூலைப் பதிப்பித்து உலகம் முழுமையும் பரப்பிவருகிறார் வருவதாக்க் கூறினார். சிறந்த  கல்ல்விப் பணியாற்றும் பெருமகன் பணி ஓங்குக. எழுத்தாளர் சங்கத் தலைவர் பெரியண்ணன் இங்கே விருது பெற்றுள்ளார். திருக்குறள்  விருது பெற்றுள்ளார். திருக்குறக்குறளைப் பரப்பும் பெருந்தொண்டை ஆற்றி வருகிறார். 
செம்மொழிக்காக  தலைவர் கலைஞர் பெருமக்ன் எடுத்த் முயற்சியும் அவர் ஆட்ட்சிக் காலத்தில் 40\40 இடங்களைப் பெற்று அந்த ஆளுமையால் ந்ம மொழியை செம்மொழியாக நிலைநிறுத்திய பெரும்தலைவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் திரைப்பட வரலாற்றில் அரசியல் வரலாற்றில் தலைவர்கள் வரலாற்றில்  உலகச் சாதனை படைத்த பெருமகன் தல்லிவர் கலைஞர் பெருமகன். 
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தில்லியில் செம்மொழிக்காக நட்த்டிய் போராட்டத்தை எண்ணிப் பார்க்கிறேன்.இங்கிருக்கும் பெருமக்கள் பலர் எம்ம்மோடு தில்ல்லிக்கு வந்தவர்கள் பெருங்கவிக்கோ அவர்கள் கலைஞரின் வாழ்த்துக்களோடு வழிகாட்டுதலோடு. நடத்திய போராட்டம். அருமைத் தந்தையாரோடு நான்   . முத்தமிழறிஞர்  செம்மொழி நாயகர் தலைவர் கலைஞரை வரை பலமுறை சந்தித்த்துள்ளோம். தில்லியில் எங்க்க்ட்கு பெருதவி புரிந்த நாடாளுமன்றக் குழுத்தலைவர்  டி.ஆர்.பாலு. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர். நாடாளுமன்ற உறுப்பினர்ஆ. இராசா உண்ணாவிரத்த்தில் பங்கேற்ற இந்திய தழுவிய பெருமக்கள். அமைப்புகளின்  தலைவர்களான புலவர். சுந்தர்ராசன், தழிழாகரர் ஆறு அழகப்பன் புலவர் அறிவுடைநம்பி அறிஞர் முத்துச்செல்வன் ,இந்நிகழ்வுக்கு ஏற்பாட்டின்போதே விபத்த்டில் காலமான் சாலினி இளந்திரையன் போன்றோர் இந்தப் போராட்ட்த்தின் அச்சானி ஆவர். தில்லியில் எல்லா ஏர்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு நல்கிய தில்லித் தமிழ்ச்சங்கம் அதன் செயலர் முகுந்தர்ன் விவாசாயத் துறை செயலர் இராம்மூர்த்தி போன்ற தில்லி வாழ் தமிழர்களின் பெருழைப்பை மறக்க இயலாது.  இந்த்தப் பணிக்கு ஒப்படைத்த தந்தையார் பெருமகனுக்கு தாங்கள் அளித்துள்ள விருதுக்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறேன்.
நான் நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் முனைவர் பெருமக்கள் தமிழகம் முழுமையுமிருந்து பங்கேற்று அரிய ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளீர்கள். மிகச் சிறப்பான கட்டுரைகள். உங்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன். என் அருமையில் அமர்ந்திருந்ததமிழ் இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி காருண்யா எழுத்துஎன்னை வியக்க வைத்தது. அவர் எழுத்தைகேளுங்கள்.

பூத்தவளே முதல் விதையாய் பூமியில் விழுந்தவளே        
       மாத்தாவளே இயற்கையின் மவுணத்தில் எழுந்தவளே                           உயிரசைத்த வரலாற்றின் உள்ளிடாய் இருப்பவளே                       உச்சரிக்கும்போதே உள்நாக்கில் இனிப்பவளே                           
            நாவசைத்த் நளினத்தில் நடந்து சிரித்த்தவளே                                   பூவசைத்த காற்றைப்போல் போல் மிளிர்ந்தவளே                         
        நிலவுலகின் மேல்விரியும் நீலக் கு டைபோல                                     
      அலகின்றி விரிந்து அறிவால் நிமிர்ந்தவளே                                         
      வையத்து வாய்மொழியே வரலாற்றுச் செம்மொழியே                                   அய்யன் வள்ளுவனின் அறமான தமிழ் மொழியே

இந்தக் குறிப்பை ஒரு மாணவி எழுதி வைத்து பாடியதைக் கேட்டபோது செம்மொழியாகிய தமிழ் இந்த்த் தலைமுறையிலும் சிறப்பாக தலையெடுக்கிறது. ஒரு பிற்பட்ட பெரம்பலூர் மண்ணிலிருந்து வரும் தமிழோசை என் மெய்சிலிர்க்கச் செய்தது.. இங்கு தந்திருக்கும் அனைவரும் செம்மொழியின் தளகர்த்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறி. அடாது மழைபெய்யினும் விடாது செம்மொழி மாநாடு நட்த்திய உடையார் கோயில் குணா, கவிஞர் துரை முருகன் ஆகியோரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்,


Wednesday, November 24, 2021

 தமிழ்நாடு நாள் வாழ்க

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

                                         

தமிழ்நாடு என்ற நாதம்

தமிழினம் கண்ட வெற்றி

எமினினத்தின்  தலைவர் அண்ணா

ஏந்தலென மாற்றார் கூட்டி

தமிழ்நாடு வாழ்க என்றே

தலைவரெலாம் முழங்கச் செய்தே

உமியெனவே பகைவர் நாண

உதித்தஎழில் நாடே வாழ்க1


தமிழ்நாடே நாளே நம்மின்

தகுதியெனப் பெருமை நாளாம்

எமைஆளும் முதல்வர் ஸ்டாலின்

எத்திக்கும் இனிமை பொங்க

தமைஆளும் தகுதி வென்றே

தக்கனவே மொழிந்தார் வாழ்க!

இமைமூடாப் பணிகள் ஆற்றும் 

இஸ்டாலின்  வேந்தே வாழ்க!


நம்நாட்டைப் பிய்த்துப் பிய்த்தே

நாறியெமை நோக வைத்தே

தம்மனம்மே வருந்தும் வண்ணம்

தளர்ந்தநாள் நமது நாளோ

செம்பரிதி அண்ணா தந்த 

எம்செழுமை தமிழ் நாளே

நம்மினம் போற்றும் நாளாம்!

தமிழ்நாடே என்ற போதில் 

தமிழினத்தின் வீரம் செப்பும்

தமிழ்நாடே முழங்கும் போது

தமிழினத்தின் தனிமை ஆளும்

தமிழ்நாடே செப்பும்  போது

தமிழினத்தின் முதமை காணும்

தமிழ்நாடே எழுதும் போதே

தமிழினத்தின் பேறு அன்றோ!