Tuesday, May 25, 2010

போற்றிடும் தமிழே வாழ்க

போற்றிடும் தமிழே வாழ்க
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்,


திராவிடச் சொல்லில் வாழும்
திண்ணிய நெஞ்சர் எம்கோ
தீரராம் தமிழர் வாழ்வின்
திக்கெட்டும் வாழும் எம்கோ
பரவிடும் சாதிப் பேயை
பொசுக்கிடும் கொள்கைத் தங்கம்
துறவியாய் என்றும் வாழும்
துன்பத்தை துரத்தும் சிங்கம்

அருவிகள் தோற்கும் இன்ப
அமுதமாய்ப் பொழியும், சொற்கள்
தருவதில் பேகன் பாரி
தாண்டிய இல்லோர் செம்மல்
உறுதியில் எக்கும் தோற்கும்
உன்னத உழைப்புத் தேனீ
கருதிடும் செயலின் வாழ்வாய்
கழகத்தைக் காக்கும் எம்கோ

விம்மிய வாழும் ஏழ்மை
விரட்டிட அண்ணா சொன்ன
நம்மனக் கலைஞர் ரூபாய்
நயத்தகு அரிசி தந்தார்
எம்மினம் உயர்ந்து வாழ
ஏற்றமாய் நிலமும் தந்தார்
தெம்புடன் வாழஎரி வாயு
தக்கவர் தந்த எம்கோ

செம்மொழிச் சிறப்பை நன்றாய்
செழுமையாய் பெற்ற எம்கோ
நம்மொழி உலகோர் கூட
நயத்தகு மாநாடு கண்டார்
மும்மொழி வையச் சான்றோர்
முழுமையாய் கோவை கூட்டி
செம்மொழித் திறனை ஏற்றும்
செம்மொழிக் கலைஞர் வாழி

முதுமையும் மிரண்டு ஓடும்
முத்தமிழ் அறிஞர் எம்கோ
எதுஎது நமது சொந்தம்
ஏற்றமாய் வழங்கும் எம்கோ
பதுமையாய் பகட்டாய் வாழும்
பாதகி துரத்தும் எம்கோ
விதிஎன வாழும் நம்மோர்
வீரத்தை எழுப்பும் எம்கோ

சதிவலை கண்டு நீக்கி
சாதனை படைக்கும் எம்கோ
கதியிலா ஏழ்மை மக்கள்
காத்திடும் வறியார் தோழன்
புதியன படைக்கும் சிற்பி
புத்தமுது தொல்காப்பியம் தந்தோன்
விதிகளை சமைக்கும் எங்கள்
வித்தகத் தலைவா வாழ்க

நூற்றாண்டு கடந்து எந்தன்
நுண்ணறி குடியைக் காக்க
காற்றினைப் போன்று எங்கள்
கடைமைசெய் பேறே வாழ்க.
தூற்றிய பகையோர் எல்லாம்
தூயஉன் அடிகள் பற்றி
போற்றிடும் தமிழே எம்கோ
புண்ணிய நீடு வாழ்க