Sunday, October 28, 2012

குறள்வழி தன்னம்பிக்கைப் பாதை


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(மதுரையில் 21-10-12 அன்று தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெபெற்ற நிகழ்வில் தமிழ்மாமணி, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெபெறும் நிகழ்விற்கு தலைமை தாங்கும் கணிஞர், கவிஞர் இரவி மற்றும் வாசகர் வட்டத்தின் இராசராசன் அவர்களே மற்றும் பெருமக்களே வருகைதந்துள்ள பீட்டர் இணையர், தன் சிறு நீரகத்தையே சகோதரருக்கு வழங்கிய இங்கு அமர்ந்திருக்கும் சம்பத் போன்ற தன்னம்பிக்கைச் செம்மல்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். தன்னம்பிக்கை எனும் இதழை நடத்தி அந்த இதழ் வழி மக்களுக்கு தன்னம்பிக்கை எழுச்சியூட்டும் இதழையும் அதன் ஆசிரியரையும் வாசகர் வட்டம் அமைத்து நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை நட்சத்திரங்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    இன்று தன்னம்பிக்கை பயிற்சி என்றால் ஏதோ மேல் நாட்டில் பரவலாகப் பேசப்படும் பெருமக்களே இங்கு அரைகுறி ஆங்கிலத்தில் பேசுபவர்க்கும் புரியாமல் அதைகேட்பவர்ளுக்கும் புரியாமல் ஏதோசந்திரமண்டலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வுகளை ஏற்படுத்திகின்றனர். நம்மவர்களும் தன்னையும் தன் மொழியையும் அறியாததால் பணத்தைச் செழுத்தி புரியாத்தனத்திலேயே உழல்கின்றனர். வாழ்வின் பெரும்பகுதி சோதிடம் வாசுத்து சகுனம் அனைத்திற்கும் செலவழித்து பின் தன்னம்பிக்கை பயிற்சி என ஆங்காங்கே அல்லலுருகின்றனர்,
    மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் இத்தகவல்களை அறிந்ததால்தான் முற்சி திருவிணையாக்கும் என்ற் தலைப்பை வழங்கியுள்ளனர். ஐயன் திருவள்ளுவரின் குறட்பாவிலிருந்து தலைப்பை வழங்கியுள்ளதிலிருந்து தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் பொய்யாமொழியார் வழங்கிய கருத்துக்களை நாம் வாழ்க்கையில் அறிந்துகொண்டாலே வாழ்வில் வெல்லலாம்.

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை                                                                    இன்மை புகுத்தி விடும்.                    (குறள்:616)
 
 உங்களுடைய அனைத்து முயற்சிகளும் மேன்மையைத் தரும். எறும்பிலிருந்து அனைத்து உயிர்களும் முயல்வதைக் காண்கிறோம்.ஆறறிவுள்ள மனிதர்கள் முயன்றால் உலகத்தையே நம் கைக்குள் கொண்டுவரலாம். முயற்சி இல்லையெனில். வறுமையும் வெறுமையும் நம்மைப் பற்றிக் கொள்ளும்.

    வள்ளுவப் பெருந்தகை எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பாருங்கள்.

    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது                                                  தள்ளினும் தள்ளாமை நீத்து                (குறள்:596)

    தாங்கள் சிந்த்னை அனைத்தும் உயர்வாகவே சிந்தியுங்கள். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு சிந்தியுங்கள். அந்த சிந்தனையின் உள் உணர்வுதான் வெற்றி வெற்றி என்பதை உணருங்கள். தன்னம்பிக்கையின் நட்சத்திரமாக இக் குறளைக் கொள்ளலாம். பல துறைகளில் நட்சத்திரங்களை உருவாக்கிய குறள் இக் குறள்.
    சிந்தனைக்குப் பின் செயலிற்கு வள்ளுவர் கூறுகிறார். உள்ளுணர்வோடு கேளுங்கள்.
    எண்ணித் துணீக கருமம் துணிந்தபின்                            எண்ணுவம் என்பது இழுக்கு                (குறள்:467)
    சிந்த்தித்த சிந்தனையை செயலாக்கும் முன் பலநூறு முறை எண்ணித் தொடங்குங்கள். அதன் சிகரத்தை தொடும்வரை மாற்று சிந்தனைக்கு இடம் கொடாதீர்கள் என் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
    எண்ணித் தொடங்கும் செயலை சரியான காலத்தில் தொடங்குங்கள். என்பதை வள்ளுவர் பெருமான் சொல்லும் குறளைப் பாருங்கள்

    அருவினை என்ப உள்வோ கருவியின்                                                                   காலம் அறிந்து செயின்                    (குறள்:483)

    காலம் என்பதை இராகு காலம் எமகண்டம் என்று எண்ணாதீர்கள், நாம் செய்யும் செயலுக்கேற்ற காலம், விவாசாயி என்றால் உழ, விதைக்க, நாற்றுநட, அறுவடை என அனைத்திற்கும் காலம் உண்டல்லவா. தொழிலகம் எனில் பொருள்கள் தேவைக்கேற்ப உற்பத்தி எனப்தைக் கொள்ளவேண்டும். கல்வி எனில் கல்விக்கான ஆண்டு என்பதைக் கருத்தில் கொள்க. சரியான காலமும் அதற்குத் தேவையான் கருவிகளும் கொண்டு செயலைச் செய்தால்  வெற்றிச் செயலாக முடியும்.

    காலம் மட்டுமல்ல பாதுகாப்பான இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்       என பொய்யாமொழியார் பகர்கிறார்.

    ஆற்றாரும் ஆற்றி ஆடுப கடனறிந்து                                                     போற்றார்கண் போற்றிச் செயின்                 (குறள்:493)

    சிந்தனை செயல் காலம் கருவி இதனோடு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நாம் எத் தொழில் செய்கிறோம் அதற்கு வலிமை சேர்க்கும் வண்ணம் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது பெருந்தொழில் புரிவோர் கூட வாசுத்து என்று பொருளையும் நேரத்தையும் வீணடிக்கின்றனர்.

    அனைத்தையும் கூறிய பேராசான் வள்ளுவர் நம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நோக்குங்கள்.

    முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்                                 இன்சொல் லினேதே அறம்                    (குறள்:93)

    உவகையோடு முகமன் கூறுதலும், இனிய பார்வை நோக்கலும், மனத்தூய்மையான செயலாக்கமும், இனிய சொற்களைப் பேசும் அறங்கள் வேண்டும் எனக் கூறுகிறார். தன்னம்பிக்கைச் சின்னங்களே யாம் மேற்குறிப்பிட்ட செயலோடு இக் குறளின் குறளின் அறச் சாரங்களையும் நடைமுறைப் படுத்தினால் வெற்றி நிச்சயம் இல்லையா.

    அனைத்தையும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினாலும் யார் எவர் நம் சிநதனைக்கு ஏற்றவாறுசெல்கிறார்களா நிறுவனம் செல்கிறதா என்பதை அறிய ஒருவரை நியமிப்போம்.அவரும் சரியானவரா என அறிய வள்ளுவனார் கூறும் நெறியைக் காணுங்கள்.

    ஒற்(று)ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்                                               ஒற்றினால் ஒற்றிக் கொளல்                     (குறள்:588)

        ஒருவர் நம் நிறுவனம் கூறித்துக் கூறினாலும் அவரும் சரியாகக் கூறுகிறாரா என ஒற்று அறிந்து உண்மைமையைத் தெளிவுற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    எச்செய்தாலும் இடர்பாடுகள் வருவது இயல்பு. அதை எப்படிக் கடக்கவேண்டும் என ஆசான் வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள்

    மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற                                                              இடுக்கண் இடர்பாடு உடைத்து                    (குறள்:624)

    பாரத்தைச் சுமக்கும் எருது மேட்டுப் பகுதி வரும்போது தடைகளை மீறி முயன்று முயன்று இழுக்கும் அதைப்போன்று நாம் எடுக்கும் முயற்சியில் சிக்கல் வரும் அதை முயன்று முயன்று வெற்றிகொள்ளவேண்டும்.
    வாழ்வில் வெற்றி பெற்று இந்த வையமும் மகிழ்ச்சியில் திளைக்க குறளாசான் வழங்கும் வழியைப் பாருங்கள்.

    பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு                                                             அகம்நட்பு ஒரீஇ விடல்                            (குறள்:830)

    உலகில் உள்ள அனைத்து மனித குணவேறுபாடுகளையும் குறள்வழி உணர்த்திய பெருமான். நமக்கு நம் குடும்பத்திற்கும் பணிக்கும் கொள்கைகளுக்கும், நிறுவனதிற்கும் உடன்படாத மாந்தரிடத்தும் காணும் வாய்ப்பு வருமானால் முகத்தால் சிரித்து அகத்தில் தெளிவோடு இருங்கள் என உணர்த்துகிறார்.

    இத்தனையும் கூறிய அறிவாசான் வள்ளுவர் ஏற்காத பேதைகளை கண்டிக்கும் கண்டிப்பை கூர்ந்து நோக்குங்கள்

    ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்                                                                      தான்புக்கு அழுந்தும் அளறு.

    செய்யவேண்டிய கடமைகள் விடுத்து, விலக வேண்டிய கயமைகள் விடுத்து தற்பெருமைக்காக ஒருவன் ஒரு செயலைச் செய்வானானால் ஒவ்வொறு காலக் கட்டத்திலுல் சோதனைத் துன்பத்தில் மூழ்குவான் என எச்சரிக்கிறார்.
    வாழ்க்கையின் செழுமைக்குக் வழிகூரிய வள்ளுவர். வாழ்வி எல்லா நிலைகளிலும் தாங்கள் உய்ர்ந்த போது எளிய்வர்களிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என மனிதநேயக் குல விளக்கு குறளார் கருத்தி ஊன்றிக் கவனியுங்கள்.

    சாதலின் இன்னாதது இல்லை இனி(து) அஃது                                                                        ஈதல் இயையக் கடை                            (குறள்:230)

    நாம் எல்லாவகையீலும் மேம்பட்டு இருக்கும்போது உலகில் நம்மோடு வாழும் எளிவர்க்கு கொடுத்து உதவும் ஈகைக் குணம் இல்லையென்றால் சாதலே மேல் எனக் கூறுகிறார்
.
    பெருமக்களே, தன்னம்பிக்கைச் சிங்கங்களே வாழ்வில் வெற்றிபெருவது எளிது வள்ளுவர் கூறிய தடத்தில் பயணித்தால் வெற்றி நிச்சயம்,. என்னுடைய வெற்றியின் பாதை குறள்வழிப் பாதை. இபபாதைதான் தன்னம்பிக்கைப் பாதை. மாறுவோமானால் நம்முடைய தோல்விக்கு நாமே பொறுப்பாகிறோம்.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    என்ற கனியன் பூங்குன்றனார் வரியினை நினைவுறுத்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.               
     
   
 

Tuesday, October 16, 2012

இந்தியத் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்த தில்லித் தமிழ்ச் சங்கம்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பேற்றுள்ள தலைவர் கிருட்டிண மணியும் பொதுச்செயலாளர் முகுந்தனும் பொருளாளர் அறிவழகனும் மற்றும் இராமமூர்த்தி, நாயுடு, போன்ற பெருமக்களும் நடத்திய மாநாடு மகத்தானது. இந்த மாநாட்டிற்கு அரியதொரு தொண்டாற்றிய தினமணியையும் ஆசிரியர் வைத்தியனாதனையும் தமிழுலகம் என்றும் பாராட்டும்.

முகுந்தனின் செயற்பாடு நாடறிந்த ஒன்று. தில்லியில் தமிழ் அமைப்புகளெல்லாம் இணைந்து செம்மொழிக்காக உண்ணாநோண்புப் போராட்டம் நடத்திய போது அவரது பங்களிப்பு எண்ணி எண்ணி போற்றத்தக்கதாகும்.

சென்ற ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்து மன்றங்களின் கூட்டமைப்பையும் இணைத்து தில்லியில் சந்தர் மந்தரில் ஈழத்தமிழர் வாழ்வுரி,மைக்கு அருமைத்த தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் நடத்திய உண்ணாநொண்புப் போராட்டத்திற்கு முகுந்தனின் ஈடுபாட்டை எண்ணி வியந்தேன். அப்பொது அவர் தமிழ்ச்சங்கப் பொறுப்பில் இல்லை. இருப்பினும் தோழர் கிருட்டிணமூர்த்தி ,இராமமூர்த்தியோடு இணைந்து அவர் தில்லித் தலைவர்கள் அனைவரையும் சந்தர்மந்தரில் கூட்டிய பாங்கு போற்றி மகிழத்தக்கது.

மீண்டும் செயலராகப் பொறுபேற்றவுடன் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்துவரப் பணித்தார், யான் சுந்தரராசன் கணபதி அவர்க்ளைத் தொடர்பு கொண்டு யானும் மற்ற நண்பர்களும் ஒரே குழுவாகவே செல்லலாம் என்ற கருத்தைக் கூறி தொடர்பு கொண்ட பெருமக்கள் அனைவரையும் 13 8 2012 ஆம்நாள் தமிழ்நாடு தொடர் வண்டியில் பயணச்சீட்டு எடுக்கப் பணீத்தேன். அனைவரும் ஒரு குழுவாக தில்லி நோக்கிப் பயணீத்தோம்.

தொடர்வண்டியில் ஏறும்போதே முகுந்தன் அவர்கள் செயற்குழு உறுப்பினர் குமார் அவர்களீன் எண்ணைக் கொடுத்து தங்களை அழைத்துச் செல்ல வருவார் எனக் கூறியிருந்தார். எங்களோடு அறிஞர் பெருமக்கள் கி.த. பச்சையப்பன், புலவர் அன்புமணி, புலவர் பன்னீர்செலவம், வள்ளாலார் பாமணி குப்புசாமி, சோழன் நம்பியார், சேலம் பாலன், புலவர் பிராபாகரன்,
மாங்காட்டார், திருவள்ளூர் பச்சையப்பன், கவிஞர் வனப்பிரியன், கவிஞர் கருமலைத் தமிழாளன், செந்தமிழ்விரும்பி, திருகுறள் வேம்பையன், ஞானமன்ற பன்னீர்செல்வம். மூத்தகவிஞர் புஞ்சையரசன் உடையார்கோயில் குணா,பெரியண்ணன், இரத்தினசபாபதி, இராமசந்திரன், பழனி,கிரிசந்திரன் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களோடு சென்றோம்.

    15-8-2012 அன்று காலை புதுதில்லி தொடர்வண்டி நிலையம் அடைந்தோம். தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் குமார், வெங்கடேசன் அன்பொழுக வரவேற்று இரு குளிர்பதன பேருந்துகளில் விக்டர் மந்திர் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். என்னை நன்பர்கள் விருந்தினர் மாளிகைக்கும் இல்லத்திற்கும் அழைத்தனர். யான் மறுத்து எம் இயக்க மக்களோடு இணைந்து படுத்து உறங்கி மாநாட்டில் பங்கேற்றதை பெரும் பேறாகக் கருதினேன். அனைவரும் முதல் நாள் தொடக்க நாள் விழாவிற்கு தமிழ் சங்கத்திற்குச் சென்று அவரவர் மன்றங்களை பதிவு செய்து அரங்கில் அமர்ந்தோம்,

    முன்னாள் குடியரசுத்த்லைவர் ஆபெசே அப்துல் கலாமின் உரை மாநாட்டிற்கு முத்தாய்ப்பாக இருந்தது. கவிப்பேரரசு வைரமுத்துவின்  உரை மாநாட்டிற்கு மகுடமாக இருந்த்து. மேதகு காலம் அவர்களின் செயலர் பொன்ராசு அவர்கள் சீனத்தில் திருக்குறளை மொழிபெயர்க்க பெருமகன் எடுத்த முயற்சியை பதிவு செய்தபோது அரங்கின் மகிழ்விற்கு எல்லையில்லை. கருத்தரங்கம் தில்லிவாழ் தமிழர்களும் அமுதமாக இருந்தது.
    தமிழ் இலக்கியச் சிந்தனைகள் முனைவர் தமிழண்ணல் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் பெருமக்கள் இரா.செல்வகணபதி இராம.குருநாதன், தெ.ஞானசுந்தரம், சொ.சொ.மீ.சுந்தரம், திருப்பூர் கிருட்டிணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் செயலர் முகுந்தனும் வந்திருந்து அமைப்புகளின் பெருமக்களை கருத்துரை வழங்க அழைத்தனர். இந்தியாவின் பெரும்பாண்மையான மாநிலங்களிலிருந்து பொறுப்பாளார்கள் வருகை தந்திருந்தனர். ஒவ்வோரு மாநிலத்திலிருந்தும் வந்து கருத்துரை வழங்கிய பெருமக்களைக் கண்டபோது இந்த மாநாட்டின் வெற்றியை உணரமுடிந்தது.. யானும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாக மன்றத்தின் சாதனைகளைப் பதிவு செய்தேன்.இந்த ஒருங்கிணைப்பு காலத்தின் கட்டாயம். ஆங்காங்கே வாழும் இன்ப துன்பங்களில் பங்கேற்க இந்த ஒருங்கிணைவு மிகப் பெரும் தளமாக இருக்கும்.நித்தியசிறி மகாதேவன் இன்னிசையோடு முதல்நாள் நிகழ்வு முடிந்தது. இரவு விக்டர் மண்டபத்தில் ஒன்றாக உண்டு உறங்கினோம்.

இரண்டாம் நாள் 16-8-2012 அன்று மாநாடு தொடங்கியது. விக்டர் மந்திரிலிருந்து தமிழ் மன்றத்திற்கு வரும் வழியில் வண்டலூரிலிரிந்து வருகை தந்த பெருமாட்டியின் சங்கிலியை பறித்து ஓடிவிட்டான் ஒருவன். யான் பொறுப்பாளர்களீடம் ஒரு ஊர்தி மகளிருக்கும் மூதியோருக்கும் ஏற்பாடு செய்யக் கூறியிருந்தேன். இயலாத காரணத்தால் பறிபோனது. உலக நாடுகள் அனைத்தும் பயணித்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தமிழ்ச் சங்கம் அருகில் இயல்பாக நடக்கும் ஒன்று என்று கூறினர், மலேசியாவிலும் நம் மக்களைத்தான் குறிவைப்பார்கள். ஏனெனில் நம்மிடம் உள்ள பொன்னாசையே.

இரண்டாம் நாள் நிகழ்வில் வந்திருந்த அமைப்புகளின் பெருமக்கள் கருத்துரை  வழங்கினர். கருத்தரங்கில் குன்றக்குடி ஆதினத்தின் தவத்திரு பொன்ன்னம்பள அடிகளாரின் பேச்சை எம்மை  நெகிழச்செய்தது. பாராளுமன்றத்தில் மூன்று நிமிடம் வாய்ப்புப் பெற்று ஒன்றரை மணி நேரம் பேச்சை முழங்கி, உலகமே உற்று நோக்கிய  பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்ந்தார். அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கிய மாநாட்டில் அண்ணாவை நினைவு கூறாமலே உள்ளனரே என்ற எம்போன்றோர்க்கு அடிகளார் உரை மன நிறைவைத் தந்தது. முன்னாள் துணைவேந்தர் உரை ஆழ்ந்த உரையாக இருந்தது. ஆசான் கோபாலயையர் போன்றோரை நினைபடுத்தின்னார்.
பேராசிரியர் அப்துல் காதரின் தலைமையில் கவியரங்கம். சிறப்பாக நடைபெற்றது. கவிஞர பெருமக்கள் இளங்கோ, ஆண்டாள் பிரியதர்சினி. முத்துக்குமார், முகில்வண்ணன், நெல்லை செயந்தா, உயிரோட்டக் கவிகளை வழங்கினர்.
மூத்த எழுத்தாளர் இராசநாராயணர் 90 ஆம் அகவைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.நாஞ்சில் நாடன், நடிகர் இராசேசு வாழ்த்துரை வழங்கினர்.

 புட்பவனம் குப்புசாமி அவர்களின் இன்னிசையோடு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்களும் பம்பரமாய் சுழன்ற தமிழ்ச் சங்கப் பெருமக்களும், மாநாட்டிற்கு உலகப் பெருமை தேடித் தந்த தினமணியையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

மாநாட்டில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கிய நம் நண்பர்கள் வந்திருந்த மிகப் பெரிய அமைப்புகளைக் கூட கலக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலர் பொங்கி எழுந்தனர். தமிழர் கூடும் மாநாட்டில் சுயநல சக்திகளின் செயற்பாட்டை கண்டித்து தமிழ் தமிழருக்காக பாடுபடும் தகுதியான் அமைப்புகளை கூட்டமைப்பில் ஒருங்கிணைத்தால் இந்தியத் தமிழர்களை ஒருகுடைகிழ் கொண்டு வரலாம்.இந்தப் பெருமை தில்லித் தமிழ்ச்ச்ங்கத்திற்கும் தினமணிக்கும் என்றென்றும் உண்டு.

சென்னையில் புறப்பட்ட நாளிலிருந்து சோழன் நம்பியார் அவர்கள் ஈழத்தமிழருக்காக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அமைப்புகள் அனைவரிடமும் பேசி சந்தர் மந்தரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உள்ளீட்ட  அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத் தமிழரின் வாழ்வுரிமைக்காகவும், போர்க் குற்றவாளி இராசபக்சேவிற்கு இந்தியாவில் நுழையக் கூடாது என்றும்  சந்தர் மந்தரில் 19-9-2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழகம் திரும்பினோம்