Thursday, April 11, 2024

 

 

திசையெலாம்  இண்டியாக்  கூட்டணி

 தீர்க்கமாய் வெல்க ஆள்க

  தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


சனநா யகம் மீளவே

 சரித்திரம் மீட்டெ டுக்க

இனமா மானமே காக்க

 இசுடாலின் தலைமை வெல்க

 கனப்பொ ழுதுமே சோரா

 கனையென தேர்தல் வீயூகம்

 தினம்தினம் கொள்மை முழக்கம்

 திண்ணிய் இண்டியா கூட்டணி

 திறமாய் வெல்க ஆள்க

 

 மதத்தை கொள்கை என்றே

 மனிதமே வன்முறைக் களமாய்

 சிதைக்கும் பாசக ஆட்சி

 சிதறிய மணிப்பூர் மக்கள்

 விதைக்கும் இந்தியக் கூட்டணி

விழிப்பு இராகுல்  யாத்திரை

திசையெலாம்  தேர்தல் வென்று

 தீர்க்கமாய் வெல்க ஆள்க

 

 தேர்தல் நன்கொடை என்றே

 திக்கெலாம் பணத்தைத் திரட்டி

 வாரிய சனநாயக கொலையால்

 வதங்கிய இந்தியக் கட்சிகள்

ஊரிலே உத்தமர் வேடம்

உரிமையைப் பறித்த அவலம்

 பாரினில் இந்தியக் கூட்டணி

பரிசாய் வெல்க ஆள்க  

 

சிறையிலே எதிர்க்கட் சியினரே

சிதைத்திடும் சனநாயைக் கொலையே

வருமான அமலாக் கத்துறை  

வஞ்சித்தே பாயும் மோசம்

அறமான இந்தியக் கூட்டணி

 அயராமல் உழைக்கும் தலைவர்

 கரத்திலே வெற்றிக் கனியாய்

 கருணையர் வெல்க ஆள்க

Friday, March 29, 2024

 

விண்ணுயர் கலைகள் காக்கும்

பத்மா லோகன் இணையர் வாழ்க

 

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்

 

கடமையின் வீரன் எங்கள்

       கவலைகள் போக்கும் தீரர்

உடைமைகள் இல்லா ஈழம்

      உரிமைகள் முழங்கும் நெஞ்சர்

 தடைகளை உடைக்கும் இதழாம்  

      தகுதியின் உதயன் ஆசான்

 உடலின் பாதி என்ற

       உத்தமி பத்மா கணவர்

 

இணையரின் தொண்டு எங்கும்

      இணையிலாப் பெருமை சொல்லும்

 கனையென எதிர்க்கும் ஆற்றல்

      கருணையின் வடிவம் பத்மா

 பணிகளைப் பறந்தே  செய்யும்

       பண்புயர் மகளிர் மாமணி

 பிணியிலா உறவைப் போற்றும்

பதமா இணையர் வாழ்க

 

பேரன் பேத்திகள் என்றே

     பெற்றிமைக் குடும்பம்  காப்பார்

அறமென சுற்றம் சூழ்ந்தே

      அற்புத அன்பின் வடிவம்  

திறமான பங்காரு அம்மா

     திகழ்புகழ் வாழிபாடு கண்டே

உறவென உலகம் போற்றும்

       உன்னத இணையர் வாழ்க

 

பண்புயர் கனடா  நாட்டில்

பரிதியின் ஒளியாய் ஒளிரும்

 விண்ணுயர் கலைகள் காக்கும்

          வித்தக பத்மா லோகன்

 தன்மொழி உலக அறிஞர்

         தலமெலாம் தேடிச் சென்றே

 கண்ணென விருதை வழங்கும்

         கருணையே வாழ்க வாழ்க

Wednesday, March 27, 2024

 v

கவினார் வெண்மை மலையில்

கவிஞன் சுவிசில் நடந்தேன்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

 சுவிசின் குளுமை ஆட்சி

     சுகமாய் எங்கும் காணும்

கவிஞன் உடலைப் போர்த்தி

      கருணைக் கிருபா தந்தார்

 புவியில் பனியின் வெண்மை

      புதுமை இயற்கை அன்றோ

அவியும் நம்மூர் வெட்கை

      அழகு சுவிசில் இல்லை

 

வெளியில் நடந்தே சென்றால்

       வெண்மைத் துகல்கள் பொழியும்

 புலியாய் சுதந்திர வேட்கை

      புரிந்தோர் இங்கே உள்ளர்

விழிகள் மட்டும் தெரிய

       வினைகள் ஆற்றும் மக்கள்

களிப்பாய் நாடாளு மன்றம்

      கண்டோம்  பூந்துவல் ஊடே 

 

சுடர்சுபர்க் நகரை விட்டே

     சுகமாய் கிருபா ஓட்ட  

தட த்தில் எழிலின் ஆட்சி 

      தக்க மலைகள் சாட்சி

 இடமும் வலமும் இன்பம்

       இனிதாய் மின்னொளிர்க் காட்சி

 திடமாய் மலையைக் குடைந்தே

       தகுதி குகைவழிப் பாதை

 

தவழும் வெண்மை எங்கும்

      தளிரே தெரியா மலைமேல் 

தவமாய் சந்திர தாசும்

      தக்க இண்டர் லாக்கில்

 கவினார் வெண்மை மலையில்  

      கவிஞன் யானும் நடந்தேன்  

செவியை அடைக்கும் குளிரில்

       செழுமைப் பயணம் அன்றோ

Tuesday, March 19, 2024

 

பாட்டினில் பாடும் பாவாய்

பார்புகழ் நீரில் பயணம்.

தமிழ்மாமணி   வா.மு.சே.திருவள்ளுவர்

எழுச்சியின் வளர்ச்சி எங்கும்

      எழுந்திடும் துபாய் நாட்டில்

பழுத்திடும் பேரிச்சம் பழமே

       பற்றிடும்  உலக ஈர்ப்பே

தொழுதிடும் மெக்கா மதினா

       தொடர்ந்திடும் மக்கள் வெள்ளம்

 அழகுயர்  பரந்த மசுதீ

         அருகுள அபுதாபி விந்தை  

 

 துபாயின் கேளிக்கைக் கூத்து

        தரணியின் மாந்தர் வருவர்

அபாரமாய் நீரின் ஆட்சி

        ஆற்றினில்  வளமாய்ப் பொங்கும்

 திறமான நாவாய்  ஆற்றில்

         திகழொளி உமிழ்ந்தே செல்லும்

 உறவென நண்பர் சேர்ந்தே

         உலகுயர் நீரில் பயணம்

 

  ஆற்றினில் எழிலாய் செல்லு,ம்

        அணியென கப்பல் காட்சி 

பேற்றினை உலக மக்கள்

        பெற்றிமை ஆடல் பாடல்

வேற்றுமை  இல்லா இசையில்

     வேண்டியே  சூழ்ந்தே மகிழ்வர்

 ஆற்றினில் கவிஞன் யானும்

        ஆனந்த நடனம் கொண்டேன் 

 

 ஊட்டிடும் உணவு எல்லாம்

       உலகுயர் மக்கள் உண்பர்

 நாட்டிடும் மதுவின் போதை

       நாளெலாம் குடித்தே களிப்பர்

 ஓட்டிடும் கப்பல் உள்ளே

      ஒன்றியே உவந்தே ஆட்டம்

 பாட்டினில் பாடும் பாவாய்

         பார்புகழ் நீரில் பயணம்.

Sunday, March 17, 2024

 

 

 கவித்துவ அமெரிக்காவில் கருணையர் விவேகா நந்தர்

தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர்

 

இந்திய அருளின் ஆட்சி

     இதயமாய் சிக்காக் காக்கோவில்

செந்தமிழ்ப்  பாட்கர் மன்னர்

       செம்மையாய் அழைப்பைத் தந்தார்

 முந்திடும் இந்திய மக்கள்

       முனைப்புடன் அனுப்பி வைத்தர்

விந்தியம் ஐரோப்பா கனடா

       வியப்புடை  ஆறுத் திங்கள்

 

 கனடாவில் தொடரி மூலம்

       களிப்புடன் சிக்காக்கோ வந்தார்

 அன்பினில் இணைந்த நங்கை

      அணிபுகழ் அரங்கம் கண்டார்

 பண்பினில் உயர்ந்த சொல்லாம்

      பாரொளி சகோதரச் சிந்தை

எண்பினில் அருளாள் இணைந்த

       எழிலகம் இன்றும் உண்டே

 

உள்ளியது எளிது என்ற

    உத்தமர் வள்ளுவர் சொல்லின்

 உள்ளொளி அரங்க மேடை

      உவந்துமே நின்றேன் மொழிந்தேன்

 கள்ளமில் வாழ்க்கை வாழ்ந்தால்

      கவின் புகழ் பெருமை எல்லாம்

 கருணையர் விவேகா நந்தர்

      கவித்துவ ஆட்சி அன்றோ

 

 பள்ளியில் நரேந்திர எம்மான்

     பக்தி இராம கிருட்டிணர்

 வெல்புகழ் அடியைப் பற்றி

       வெற்றி விவேகா நந்தர் 

நல்மொழி கட உள்  நாதம்

     நயத்தகு மனித நேயம்

 வெல்அமெ ரிக்க  மண்ணில்

      வித்தகச் சான்று மாதோ!

 

Saturday, March 16, 2024

 

இந்தியக் குடியாட்சியையே

 இதயமாய் இந்தியா காக்கும்

 

அரசு ஊழியர் கையூட்டு

     அதிரடி சிறையில் அடைப்பர்

விரசத் தேர்தல் நிதியாய்

     விதவித வழியில் சேர்த்து  

அறமே அழிக்கும் போக்காய்

     ஆட்சியை பணத்தால் அமைத்து

 உரமிலா பாசக செய்கை

      உரிமை சனநா யகமா

 

நீதியே மிரட்டி மொழிந்தும்

      நீட்டிடும் அநீதி முறையா

ஓதியே வங்கியைத் தமக்காய்

      ஒடுக்கிடும் ஆணவப் போக்கு

மீதியாய் கடைசிப் பகுதி

       மிரட்டிடும்  நீதிப் பாதை

உதித்திடும் தேர்தல் நாளில்

      உரிமையாய் துரத்தி வெல்வேம்

 

நடிகர்கள் தோற்பர் நன்றாய்

       நாளெலாம் கோமாளிக் கோளம்

 விடியாத மக்கள் வாழ்வில்

      வித்தகக் குடும்பம் என்றே

அரசியல் நேர்மை இன்றி

       அலையுதே மோடி தேகம்

அடாவடி ஆணவப் பேச்சு

        அடக்கிடும் நாள்தான் தேர்தல்

 

 இந்தியக் கட்சி எல்லாம்

      இணைந்து ஒன்றாய் நின்றே

நொந்திடும்    அவலம் போக்க

      நுட்பமாய் களத்தில் வெல்வோம்

  மந்தியின் கையில் ஆட்சி  

      மக்களின் ஒற்றுமை குலைக்கும்

இந்தியக் குடியா ட்சியையே

     இதயமாய் இந்தியா காக்கும்

      

 

Wednesday, March 13, 2024

 

தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் 89ஆம் அகவைத்திருநாள் நோபல் தவம் நூல் வெளியீட்டு விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 தந்தையார் பெருங்கவிகோ அவர்களின் 89ஆம் அகவைத்திருநாளும் நோபல் தவம் நூல் வெளியீட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு சமூக நலக் காவலர் எங்கள் மண்ணின் மைந்தர் பிற்படுத்தப்பட்டோர்  உயர் கல்வித் துறை அமைச்சர் இராச கண்ப்பன அவர்களை தங்களி பலத்த கரவொளிக்கிடையில் வருக வருக என்று வரவேற்கிறேன். வீரம் செறிந்த மண்ணின் வெற்றி நாயகனாக நம் அமைச்சர் வலம் வருகிறார் அவர் வருகை யாம் பெற்ற பெரும் பேறு. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும்பயணித்து  பேருரையாலும் எழுத்தாலும் இணையவழியிலும் புலன வழியிலும் பரப்பிவரும் திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உலகில் எங்கு நோக்கினோம் திருவள்ளுவர் பெருமான் சிலைய நிறுவும் வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் இதுவரை 165 சிலைகளை நிறுவியுள்ள செவாலியர் வி.ஜி.சந்தோசம் அவர்களை வரவேற்று மகிழ்கிறேன். மூன்று தலைமுறாகளாக தமிழ் வளர்க்கும் ஒள்வை நடராசனார் திருமகன் தமிழ்வளர்ச்சித் துறை இயக்கநர்  ஒள ந, அருள் நம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் வழித் தோன்றல் ச. ஆனந்த் மற்றும் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவரை வருக வருக வரவேற்கிறேன்.

                     இன்று வெளியிடப்படும் நோபல் தவம் ஒரு மிகச் சிறந்த நூல் .தமிழகத்தில் நோபல் பரிசு பெறும் பெருமக்கள் பலர் உள்ளனர். அவர்களின் ஆற்றலை எந்த வித த்த்லும் குறைகூற முடியாது. இந்த நோபல் தவம் நூலை எழுத்தியுள்ள தந்தையார்  பெருங்கவிக்கோ அவர்கள் தம் வாழ்நாளை கவிதைக்காகவே அர்ப்பணித்தவர்.1981ஆம் ஆண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிசுக்க்கோ நகரில் நடந்த 5ஆம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெர்க்கா கவிஞர் ரோசு மேரி வில்கின்சன் அவர்கள் பொறுப்புச்சான்று வழங்கி அழைத்தார்கள். இன்று அன்று எளிதாகச் செல்ல முடியாது அந்த காலத்திலேயே அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றார். நாவுக்கரசர் ஒளவை நடராசன் அவர்களும் பங்கேற்றார்கள். அந்த  உலக க் கவிஞர்கள் மாநாட்டின் நாயகர் நம் கிருட்டிணா சீனிவாசன் மொழிபெயர்த்த தந்தையாரின் Flames of Thoughts  நூலையும்  மூன்னூறு தமிழ்க் கவிஞர்கள் கவிதைகளை மொழி பெய்ர்த்த Tamil Poets Today அந்த மாநாட்டில் வெளியிட்டார்கள் அங்கு மொழிபெயர்த்த பெருமை அறிஞர் ஒளவை நடராசன் ஆவார்.. 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாடு முதல் இன்று வரை தொடர்ந்து உலக க் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேறு உலகப் பார்வையை அன்றே பெற்ற உலகக கவிஞர் பெருங்கவிக்கோ. இங்கும் கவிஞர்கள் மாநாடு நட த்தி ரோசுமேரி வில்கின்சன் பெருநாட்டு க் கவிஞர் பேதூரு பொன்ன்ற பல்வேற் நாட்டுக் கவிஞர்களை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளோம்

       நோபல் தவம் நூல் சூவிடன் நாட்டு சுடாக்கோம்  ந்கர் சென்று அங்குநோபல் பரிசு வழங்கும் அலுவலகம் சென்று நோபல் சிலையை வருடிய வண்ணம் காட்சி தருகிறார் பெருங்கவிக்கோ. சூவீடன் நாட்டிற்கு செருமணி நாட்டில் ஈழத் தமிழரளின் அன்பில் திளைத்து பின் நண்பர்கள் உதவியோடு சூவிடன் சென்ற் பயண அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளா.ர்

         கணினி உலகில் மாபெரும் புரட்சிசெய்த கணினி அறிஞர் யாழான் சண்முகலிங்கம் ஒப்பற்ற பேரறிஞர். தமிழுக்கு எழுத்துரு கண்டவர். பன்னாட்டுத் தம்மிழுறவு மன்றம் மூலம் தமிழகமெங்கும் அவர்க் எழுத்துருவை அறிமுகம் செய்தோம். அவருடை உற்ற நண்பர்தான் பேராசிரியர் பீட்டர் சல்க் அவரின் வழிதான் சுவீடம் செல்ல திட்டமிட்டு பிரான்சு பாரிசுலிருந்து எங்கள் நீண்ட கால நண்பர் பூபாள சோமசுந்தரம் அனுப்பிவைத்த தை நூலில் பதிவிட்டுள்ளார். சுடாக்கோம் விமான நிலையத்தில் வரவேற்று தம் பல்கலைக்கழகம் நோபல் அலுவலகம் என அனைத்துப் பகுதிக்கும் அழைத்துச் சென்றுள்ளதை அவரது மனிதநேயப் பண்பை சிறப்பாகப் பதிவிட்டுள்ளார். பேராசிரியர்  பீட்டர் சல்க் தமிழ் ஈழ ஆதரவாளர்.

          உள்ளியது எய்தல்  எளிதுமண் மற்றுந்தன்

          உள்ளத்தாள் உள்ளப் பெறின்   

       என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி  தமிழ்க்கவிஞர்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என்பது பேரவா. அந்தக் குறிக்கோளோடு தம் பயணத்தையும் கவிதை ஆக்கத்தையும் உலகளாவிய தொண்டையும் தம் குறிக்கோளாக க் கொண்டு உள்ளியது எய்தும் உலக் மாக்கவியாக வலம் வருகிறார் பெருங்கவிக்கோ. மீண்டும் வருகை தந்த பெருமக்களை வரவேற்று மகிழ்கிறேன்.

Monday, March 11, 2024

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் குமரியில் 32ஆம் ஆண்டு ஊர்திப் பயணத் தொடக்கவிழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

(பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் இன்று 32ஆம் ஆண்டு ஊர்திப் பயணத் தொடக்கவிழாவில் இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் சார்பில் இன்று 32ஆம் ஆண்டு ஊர்திப் பயணத் தொடக்கவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போல் இவ்வாண்டும்  திருக்குரளை படிப்பதற்க்காகவே தென்னாப்ப்ரிக்காவில் வாழும் தமிழைப் பயின்ற அண்ணல் காந்தியடிகள் நினைவு மண்டபம் முன் தொடங்குகிறோம்.

       தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் 1993ஆம் ஆண்டு நடந்த நடைப்பயண என் கண்முன் நிழலாடுகிறது. வயதில் முதிர்ந்த பெருமக்கள் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பே.விசுவநாதம் நீதியரசர் வேணுகோபால் இம்மண்ணின் மைந்தர் சங்கரலிங்கனார் போன்ற பெருமக்கள் இந்த இந்த இடத்தில் நடைப்பயணத்தைத் தொடஙி வைத்தனர். அந்த நடைப்பயணத்தின் தொடரச்சிதான் தமிழூர்திப் பயணமாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கை முழக்கத்தோடு இந்த தமிழூர்த்திப் பயணம் நடைபெறுகிறது, ஒவ்வொரு ஆண்டும் கண்ணியாகுமரி பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம் சார்பில் இந்த தொடக்கவிழாவை நட த்தும் கிளைத் தலைவர் தியாகி முத்துக்கருப்பன் அவர்களின் பணி மகத்தானது. தன்னுடைய மகனை இழந்து தன் மனைவியை தொடர்ந்து இழந்து தானும் உடல் குன்றி மீண்டு ந்டக்க இயலாமல் இருந்தபோது நடைப் பயண் தொடக்கவிழாவை இங்கு நட துகிறாரென்றால் அவர் மன் உறுதி எண்ணி அவரை வணங்கி ம்கிழ்கிறேன். இங்கு மட்டுமல்ல தமிழ்ப்பணியில் வெளியானவுடன் அந்த  ந்தப் பகுதிகளில் எழுச்சியோடு பெரும்பணியாற்ற்றும் தொண்டறச் செல்வர்களை  தமிழ் உணர்வாளகளை நெஞ்சாரப் போற்றுகிறேன். நிகாழ்விற்கு தலைமை தாங்கும் தொழிற்சங்கத் த்லைவர் இளங்கோ திராவிடர் கழக  சுப்பிரமணியம் தி,மு.க சரவணன் மகளிர் மாமணி கீதா சிவதானு தொண்டறச்செல்வர்  தாமசு அனைவரையும் வணங்குகிறேன்

     சென்னையில் புலியூர் மாநகராட்சி பள்ளியில் அரிமா இயக்கத்தினர் குழ்ந்தைகள் தின் விழாவிற்கு அழைதிருந்தனர். பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நட த்தி பரிசுகள் வழங்கினோம். அந்தப் பள்ளித் தலைமையாசிரியரிடம் இங்கு எத்தனை தமிழ் வழி வகுப்புகள் உள்ளன என வினவினேன் அவர் ஒன்றும் இல்லை அனைத்தும் ஆங்கில வழி என பூரிப்பாக க் கூறினார். எனக்கு மிகவும் வேதனையாக இருந்த து. இந்தப் பள்ளியிந்தான் நம் தமிழ்வழிக் கல்வி போராட்ட நாயகரகள் சுந்தராசன் கணப்தி  போன்றோர் பணியாற்றிய பள்ளி . பெற்றோர்களின் மூட த் தனமான ஆர்வத்தால் இந்த அவல நிலை உள்ளது.

          ஊர்திப் பயணங்கள் ஒவ்வொரு ஆண்டும்   எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைப் பயணமாக நடைபெறுகிற்து. கல்விநிலையங்களில் முழுமையாகத் தமிழ் என்ற கொள்கை முழக்கங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். தமிழ் வழி படித்தவரக்ளுக்கு வேலைகளில் முன்னுரிமை போன்ற திட்டங்களில் மூலமே தமிழைப் ப்யில மக்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.

     ஆலயங்கங்களில் கருவறையில் தமிழ் வாராமை பெரியார் நெஞ்சில் குத்திய முள். அந்த முள்ளை அகற்ற தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து சட்ட்டப் போராட்டங்கள் நட த்தி அதன் தொடர்ச்சியாக முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழை திருக்கோயில்களில்  வழிபாட்டு மொழியாக மட்டுமல்லாமல் அனைவரும் அர்சகராக ஆகலாம் என்ற புரட்சியை இந்த திராவிட ஆட்சி வழிப் படுத்தியுள்ளது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் பணி மகத்தானது.. தலைவர் கலைஞர் ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த முனைவர் தமிழ்க்குடிமகன் ஒத்துழைப்போடு ஓர் ஆண்டு ஊர்திப் பயணத்தில் ஒவ்வொரு கொவொகளிலும் பெருங்கவிக்கோ தலைமையில் கருவறையில் சென்று அர்ச்சகர்களை தெளிவுபடுத்து தமிழில் வழிபாடு செய்த து மகத்தான் சாதனையாகும்.

                     திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க க் கோரி குமரி முதல் இமயமலை தில்லி வரை பெருங்கவிக்கோ தலைமையில் ஊர்திப் பயணமாக இந்தியா முழுமையும் பயணித்து தில்லி சென்று தலைமையமிச்சர் அலுவலகத்தில் ந்ம விண்ணப்பத்தை வழங்கியது வரலாற்று சாதனையாகும். அந்தப் பயணத்தில் இந்தியாவில் உள்ள அனைத்த்துத் தமிழ்சங்கங்களும் தமிழ் அமைப்புகளும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தினர் இதியா முழுமையும் திருக்குறள் தேசிய நூலாக்க ப் பட வேண்டும் என்ற முழக்கம் பெருமுழக்கமாக இருந்த து. அண்மையில் நம் மாண்பமை முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உலக க க்ணினி மாநாட்டில் பேசும்போது தமிழர்களை கைபேசிகளி குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழில் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் கூறியது போல் அனைவரும் அனைத்து நிலைகளிகும் தமிழைப் பயண்படுத்துங்கள். தமிழே நம் அடையாளம். வங்கிகளில் பணம் எடுக்கும் பணப்பொறி இயந்திரத்தில் தமிழை எப்போதும் பயண்படுத்துங்கள். தற்போது அனைத்தும் கணினி வழி நடைபெறுவதால் எத்தனைபேர் பேர் தமிழை ப்யண்படுத்திகிறார்கள் என்பது தெரியும். தமிழே பயண்படுத்தவில்லை என்றால் தமிழையே எடுத்துவிடுவார்கள். தமிழர்கள் தமிழை வாழ்வியல் மொழியாக உருவாக்க வேண்டும்.


Sunday, March 10, 2024

 புண்ணியர் காந்தி  வணங்கி பிரான்சினில் பெருமை பெற்றோம்

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


காந்தியின் நினைவுநாள் இன்றே 

   கடும்பணி சுடார்சுபர்க் நகரில்

ஏந்திடும்  பிரான்சு நாட்டின் 

   எழிலினைக் கண்டே வியந்தேன் 

மாந்திடும் மனித நேயம் 

  மக்களின் உறவாய்க் கண்டேன் 

பூந்திடும் பனியின் துகல்கள்

     பொழிவுடன் பொழியும் உடலில் 


 கடமையின் சிகரம் கிருபா 

    கலைகளின் காக்கும் நேயர் 

உடைமையாய் ஊர்தி ஏறி

    உலவியே நகரில் சென்றோம்

 தடையெலாம் உடைத்தே காந்தி

    தன்னிகர் அகிம்சை ஏற்றே

  விடையென  விடுதலை பெற்ற

     வித்தகர் சிலையைக் கண்டேன் 


 ஊர்தியை நிறுத்தி நடந்தே

   உத்தமர் காந்தி காண

 பார்புகழ் தொண்டின் சின்னம் 

    பணிவுடன் அருகில் சென்றோம்

 வேரென இந்திய மக்கள்

    ஈழத்தார்  இணைந்து இங்கெ 

 தேரெனெ இந்தியா போற்றும்  

   தெளிந்த நல்உறவைச் செப்பும்

அண்ணலின் பெருமை தன்னை   

   அணிபுகழ் நினைவு நாளில் 

கண்ணென இந்தியா காத்த

 கருணையர் திருக்குறள் அறிய 

தன்நிகர் தமிழைக் கற்ற  

   தலம் போற்றும் எம்மான்

 புண்ணியர் சிலையை வணங்கி 

   பிரான்சினில் பெருமை பெற்றோம்


 


Thursday, February 29, 2024

 



சிவகிரி தமிழ்ச்சங்கம்  திறப்புவிழா மருத்துவர் சாந்தி சரவணபாய், ஆசிரியர் தங்கமுத்து பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.திருவள்ளுவர்

      சிவகிரி தமிழ்ச்சங்கத்தின் திறப்புவிழாவிற்கு இராயகிரி தமிழ்ச்சங்கு விழா முட்டித்து இங்கு வந்துள்ளேன். அருமை மருத்துவர் செண்பக விநாயகம்  தம் மனைவி மருத்துவர் சாந்தி சரவணபாய் இறந்த நிலையிலும் அவர்கள் பட த்தைத் திறந்து கண்ணீர் மல்க நினைவேந்தல் நிகழ்வாகவும் சிவகிரி தமிழ்ச்சங்க தொடக்க விழாவாகவும் நட த்துகிறார். அவர்தம் துணைவி பட்த்தை நான் திறந்து வைப்பதிலும் சிவகிரி தமிழ்ச் சங்கத்தை திறந்து வைப்பதிலும் நான் பங்கேற்பது கடமையாகக் கருதுகிறேன். கழகப் பொறுப்பாளராகவும் இருந்து இப்பகுதியில் அரும்பணியாற்றுகிறார். தி.மு.க இந்த தொண்டுணர்வையும் தமிழுணர்வையும் ஊட்டியுள்ளது வியப்பில்லை.

தம் மனைவி மட்டுமன்றி இப் பகுதியில் தோன்றி கோவையில் ஆசிரியப் பணியாற்றி மறைந்த தங்கமுத்து அவர்களின் பட த்தை ஆசிரியர் வைரவன் அவர்கள் திறந்து வைத்து அவருடை  சிறப்புக் குணங்களை எடுத்துரைத்தார். தங்கமுத்து அவர்களின் மனைவி இங்கு வந்து பாடிய கவிதை நெஞ்சை நெகிழச் செய்தது. அம்மையாரும் ஆசிரியராகப் பணியாற்றி அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார், இதைவிட தங்கமுத்து அவர்களின் பெருமைக்கு சான்று வேறு தேவையில்லை. மேழும் இப்பகுதி அறப் பணிகளுக்கு உரூபா 10000  வைப்பு நிதியாக வங்கியில்  செலுத்தி இங்கு தமிழ்சங்கத் தலைவர் செண்பக விநாயகம் கரத்தில் வழங்கியுள்ளார். மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்ற ஆசிரியர் தங்கமுத்து குடும்பத்தாரின்  அற உணவர்வை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

       மருத்துவர் அம்மையார் பட த்தை திற்கும்போது நான் நெகிழ்ந்தேன். ஒருமருத்துவமனை நிறுவி அதை கணவர் பராமரிக்க அரசு மருத்துவராக கணவரின் வேண்டுகோளை ஏற்று பணியாற்றி ஏழை எளியவரின் ஏந்தலாக வாழ்ந்துள்ளார் தம் மகளையும் மருத்துவராக உருவாக்கியுள்ளார். 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற          சொற்காத்து சோர்விலாள் பெண்

        என்ற வள்ளுவப் பேராசானின் குளுக்கு இலக்காக வாழ்ந்த மருத்துவப் பெருமாட்டியை நெஞ்சாரப் போற்ருகிறேன். அம்மையார் அவர்களின் மருத்துவப் பணியை பெருமக்கள் பலரும் நெஞ்சுருகப் போற்றினர். குறிப்பாக கொராணா தீநுண்மி காலத்தில் ஆற்றிய மகத்தான மக்கள்பணி உலகமே போற்றும்பணி. அரசின் விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். மருதுவ குடும்ப பணிகளின் ஊடே இந்த பள்ளியையும் நிர்வாகித்து மருதுவர் செண்பக விநாயகத்தின் கரத்தை வலுப்படுத்தியுள்ளார். 

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சதாற் காணப் படும்

     என்ற வள்ளுவப் பேராசான் குறளுக்கொப்ப அவருடைய வழியினரும்  நிறுவனங்களும் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். ஒங்குக அவர்தம் புகழ். 

       என்னை இங்கு அழைத்துவந்த முறம்பு பாவாணர் கோட்ட நிறுவனர் புலவர் நெடுஞ்சேரலாதன் சிவகிரி தமிழ்ச்ச்ங்கத்தை திறந்து வைத்து  உலகில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பற்றி உரையாற்றப் பணித்தார். காலையில்தான் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள இராயகிரி தமிழ்ச்சங்க 8ஆம ஆண்டு விழாவில் பங்கேற்று இங்கு சிவகிரி தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்துள்ளேன்

      தமிழ்ச் சங்கங்கள் உருவானால் தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒரு குடைக்கீழ் வளர்வர். சாதி மத த்தை மறந்தாலே நாம் எல்லாம ஒரே தமிழ் என்ற சிந்தனையில் ஒன்று பட சிறந்த வழி. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் என்ற அமைப்பின் வழி உலகத்தையே இணைத்துள்ளோம். உலகம் முழுமையும் 7 மாநாடுகளை நட த்தியுள்ளோம். வெளிநாடுகளில் செருமணி தாய்லாந்து ம்லேசியே அமெரிக்கா போன்ற வெளி நாடுளில் மாநாடுகளை நட த்தி பெருஞ் சாதனை புரிந்துள்ளோம். அமெர்க்காவில் உள்ள 50 மாநிலங்களில் தமிழர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும்  தமிழ்ச்சங்கங்கள் நிறுவியுள்ளனர். இதழ்களும் நட த்தி வருகின்றனர். வளரும் தலைமுறைக்கு தமிழைப் பயிற்றுவித்து வருகின்றனர. ஒவ்வொரு ஆண்டும்  ஃ பெட்னா என ஒருங்கிணைந்து  மாநாடு ஒவ்வொரு மாந்லத்திலும் மாநாடு நட த்தி வருகின்றனர். சிக்காக்கோ நகரில் நடைபெற்ற 10ஆம் உலகத் தமிழ் மாநாட்டை  நட த்திய பெருமையும் இந்த தமிழ்ச்சங்கங்களுக்கு உண்டு. கனடாவில் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் சிறப்புடன் நட த்தி வருகின்றனர். கனடா தமிழ்ச்சங்கம் என்ற பெயரிலேயா வள்ளிக்கண்ணன் மருதப்பன் மிகச் சிறப்பாக நட த்துகிறார். ஒரு முறை நான் அமெரிக்காவிலிருந்து கனடா சென்றபோது நம் மேனால் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் இறந்தபோது நினைவேந்தல் கூட்டம் நட த்தினர் அதில் பங்கேற்று இரங்கலுரை நிகழ்த்தினேன். கனடா முழுமையும் ஈழத்தமிழர்களின் அர்ப்பணிப்பாண தமிழ்ப்பணியும் ஆலயப்பணியும் நட த்தி வருகின்றனர். இலண்டன் தமிழ்ச் சங்கம் மிகச்சிறப்பாக நடைபெறுகிரது. சென்னை தோசை நிறுவன அசோகன் சங்கத்தின் சங்கத்தில் என்னை வரவேற்று  தொலைக்காட்சி செவ்வி எடுத்தார். 

    ஐரோப்பிய நாடுகள் முழுமையும் தமிழ் அமைப்புகள் மிகச் சிறப்பாக நட த்தி வருகின்றனர். உலகத் தமிழோசை அமைப்பு வளரும் தலைமுறைக்கு தமிழ் பயிற்றுவித்து திருகுறள் போட்டி நட த்துகின்றனர். சென்ற ஆண்டு பிரான்சு சுடார்பக்சு நகரில் நட ந்த பொங்கல் விழாவில் பங்கேற்க என்னை  அழைத்தனர். அவர்கள் தமிழுணர்வையும் பண்பாட்டையும் காக்கும் பாங்கைக் கண்டு மெய்சிலிர்த்தேன். பின் சுவிட்சர்லாந்தில்  நட ந்த திருவள்ளுவர் திருநாளில் பங்கேற்றேன். திருவள்ளுவரை பல்லக்கில் ஏற்றி திருகுறள் ஒதி  மேடைக்கு அழைத்துச் சென்றனர். தமிழர்களில் தமிழுண்ர்வை தாங்கள் நன்கு அறியலாம். 

ஆசுத்திரேலியாவில் தமிழர்கள் பங்களிப்பு மக்த்தானது, தமிழ் அமைப்புகள் வழி எல்லா நிலைகளிலும் உய்ர்த்தி வருகின்றனர். தென்னாப்ரிக்கா மொரிசியசு ரீயூனியன் மடகாசுகர்  பலதலைமுறைகளுக்கு சென்ற தமிழர்களுகு தமிழே மற்ந்துவிட்ட து. இறைவணக்கப் பாடலை ஆங்கிலத்தில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.  அங்கு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இராமசாமை பல்கைக் கழகமும் இணைந்து தமிழாசியரை பயிற்றுவித்து அங்குள்ள மக்களுக்கு தமிழ் பயில வழிசெய்துள்ளனர். டர்பன்  நகரில்  நடந்த பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்றுள்ளேன். அருகிலுள்ள மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளுக்கு பலர் சென்றுள்ளீர்கள் அங்கு தமிழின் வளர்ச்சி நம்மிடம் போட்டி போட்டுக்கொண்டு வளர்கிறது. துபாய் பக்ரீன் அபுதாமி கத்தார் ஓமன் போன்ற இசுலாமிய நாடுகளில் தமிழ் மாநாடுகள் விழாக்கள் என மிகச் சிறப்பாக தமிழை வளர்க்கின்றனர் 

       இந்தியா முழுமையும் தமிழ்சங்கள் நீகமற நிறைந்துள்ளது. தில்லித் தமிழ்சங்கம் மும்பை தமிழ்ச்சங்கம் பெங்களூர் தமிழ்ச்சங்கம் திருவன்ந்தபுரம் தமிழ்ச்சங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழை வளர்த்து வருகின்றனர்.

       தமிழ்ப்பணி என்ற இந்த் மாத இதழ் 1971ஆம் ஆண்டு தந்தையாரால் நிறுவப்படு தொடர்ந்து 52 ஆண்டுகளாக நட த்தி வருகிறோம். தொடங்கும்போது 12 தற்போது வரை உலகத்தமிழர்களுக்கு அர்ப்பணித்த இதழாக வெளிவருகிறது. இந்த இதழில் தங்கள் உணர்வுகளையும் உலகத்தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். 

      சிவகிரி தமிழ்ச்சங்கப் பெருமக்களே  தமிழர்களை ஒன்றுபடுத்தி தமிழை எல்லா நிலைகளும் மேம்படுத்துங்கள் தமிழர்களாக ஒன்று படுங்கள் . அரும்பாடுபட்டு தமிச்சங்கத்தை நிறுவியுள்ள அனைவரையும் போற்றி விடைபெறுகிறேன்.

Sunday, February 25, 2024

நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 

(பன்னாட்டுத் தமிழுறவு மன்றம  25 - 2 - 2024 அன்று சென்னையில் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழாக கவியரங்கில் பெருங்கவிக்கோ தலைமையில் தமிழ்மாமணி வா.மு.சே திருவள்ளுவர் பாடிய கவிதை)

நடையாய் நடக்கும் நற்றமிழ் நாயகர் 

    நாநிலப் புகழை தமக்கே கொண்டவர்                                                  தடைகளை உடைக்கும் போர்ப்படை அரிமா                     தகுதியர் காக்கும் செந்தாமிழ்ச் செம்மல்             உடைமையாய் கலைஞர் உள்ளம் காப்பவர்                                                           உரிமைக் குரலாய் உலகில் உரைப்பவர்             திடமாய் கலைஞர் நூற்றாண் டுகாண்          தீந்தமிழ்ப் பெருங்க விக்கோ போற்றி


 திராவிட இயக்கம் தழைக்க உதித்த                                                                             தீந்தமிழ் மொழியின் ஆற்றல் மறவர்                              கருவிலே திருவாய் மலர்ந்த நேயர்                          கற்பனைக் கெட்டா முயற்சித் தீரர்                                      பெரியார கரத்தைப் பற்றியே பாங்காய்                                    பகுத்தறி வுகாத்த பகலவன் ஆனார்                      திரைப்படம் புகுந்தே தமிழால் ஆண்ட                  தீந்தமிழ்க் கலைஞர் திண்மையும் உச்சம்

                                                                                                         கலையின் ஆற்றல் வாழ்வின் தொடக்கம்                                                                   கதிராய் உலகில் ஒளிர்ந்தே வென்றார்                              தலைவர் அண்ணா தலைமை கொண்டார்                                                             தகுதியின் ஆற்றலாய்த் துணிந்தே நின்றார்                                  பகுதி எல்லாம் திமுக கிளைகள்                                                           பாதை வகுத்தே பாரினில் வென்றார்                     தகுதித் தலைமைகள் அண்ணா வழியில்                                       தக்கார் கலைஞர்  தலைமை ஏற்றார்

அண்ணா முதல்வராய் மறைந்த போதே                           அரசியல் போக்கில் அணியாய் நின்றனர்                               தன்னிலை உணர்ந்த தலைவர் கலைஞர்                    தக்கதை உணர்ந்து கழகம் காத்தார்                                                சென்நீர் விட்டே கழகம் மீட்டே                                          சேனைத் தலைவர்  முதல்வர் ஆனார்                                 கண்ணீர் மல்க அண்ணா போற்றி                                           கழகம் காப்பதில் பொன்விழாக் கண்டார்

 அரசியல்  அணிமலர்ப் பாதை  அன்று                                                     அடர்ந்த ஆணவம் கரடு முரடாய்த்                          துரத்திய மூடரைத் துணிந்தே என்றும்                                      துண்பக் கடலில் நீந்தியே வென்றார்                                           மாறிய அரசியல் மனிதரை எல்லாம்                                       மண்ணின் பொறுமையாய் ஏற்ற குணத்தர்                                                    தூரிகை என்றும் துணையாய் ஏற்றே                                 தொடரும் முரசொலி தந்தை கலைஞர்

 அன்னை இந்திரா அவசர நிலையை                                  ஆணவப் போக்கால் பிரகடனம் செய்தார்                          விந்திய இந்தியத் தலைவர் எல்லாம்                                     வியப்பாய்க் காத்த சனநா யகக்கோ                               வின்னே அதிர எதிர்த்த செம்மல்`                                          வித்தக ஸ்டாலின் மணக் கோலத்தில்                                 வீணர்கள் சிறையில் அடித்தே மகிழ்ந்தனர்                                          விரிவான் தலைவர் முதல்வர் இன்றே

 கத்தும் கடலின் ஒசையைப் போன்றே                              கதிரவன் உமிழும் ஒளியைப் போன்றே                      சித்தம் குளிரும் தென்றலைப் போன்றே                      சிவந்த வான வண்ணம் போன்றே                                   நித்தம் நித்தம் கலைஞர் நம்முன்                                            நீள்புகழ் ஆற்றல் மரமாய் உள்ளார்                                                             கண்மணித் தலைவர் முதல்வர்  ஸ்டாலின்                                                      கரத்தை உயர்த்துவோம் மாதோ


Friday, February 23, 2024




 தென்காசி இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் பட த் திறப்பு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழாவும் மேனாள் தலைவர் கால்நடை மருத்துவர்  சிவசுப்பிரமணியம் அவர்களின் பட த் திறப்பும் இங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு என்னை அழைத்துள்ளீர்கள். உங்கள் பேரன்பிற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

 சென்ற ஆண்டு இதே நாள் சென்னையிலிருந்து துபாய் வழியாக சூரிச் நகருக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு  பயணமானேன் .  சூரிச் விமான் நிலையத்தில் சுவிட்சர்லாந்து  வள்ளுவன் பள்ளி நிருவனர் முருகவேல் தம் நண்பருடனும்பிரான்சு உலகத் தமிழோசை கிருபானந்தன் அவர்களும் சூரிச் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுது வரவேற்றனர். பின் பிரான்சு சுடார்சுபர்க்  நகருக்கு கிருபானந்தன் தம் மருமகன் ஊர்தி ஓட்ட அழைத்துச் சென்றார். சுடார்சு பர்க் நகரில் பொங்கல் விழாவும் பெர்ன் ந்கரில் திருவள்ளுவர் திருநாளும் கொண்டாடி பாரிசு வழியாக சென்னை திரும்பினேன்.

இவ்வாண்டு நண்பர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் என்னை இவ் விழாவிற்கு வரவேண்டும் என இரு மாதங்களுக்கு முன்னரே இசைவு பெற்று இங்கு அழைத்துள்ளார். நான் சென்னையிலிருந்து பொதிகை தொடரி மூலம் இராசபாளையம் காலை வந்திறங்கி தொடர் வண்டி நிலையத்திலிருந்து நெடுஞ்சேரலாதனிற்கு தொடர்புகொண்டேன் அவர் தானி வந்து கொண்டிருக்கிறது என்றார் அரைமணிநேரம் கழித்து நான் தானியைப் பிடித்து முறம்பு வரத் தொடங்கினேன். பாவாணர் கோட்டம் பன்னெடுங்காலம் தொண்டாற்றிவருகிறது தாணிஓட்டுநருக்கு கோட்டம் தெரியவில்லை சோழபுரத்தில் இறக்கிவிட்டார். பின் ஒரு பேருந்தில் அங்கிருந்து ஏற்றிவிட்டனர் நெடுஞ்சேரலாதனுக்கு தொடர்பு கொண்டேன் அவர் முறம்பு வந்துவிட்டேன் என்றேன் அவர் ஐயா நான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார் முறம்பில் ஒரு தேனீர் கடையில் காலை 6-30 மணியளவில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தேன். அதுபோது தம் நண்பரோடு நெடுஞ்சேரலாதன் வருகை தந்தார். இது தன் மாணவர் கடை என்று பெருமிதமாக்க கூறினார் அங்கிருந்த மாணவர் மகனுக்கு அவரது அருமை தெரியவில்லை. 

பின் அங்கிருந்து கோட்ட த்திற்கு அழைத்துசென்றார். பெரிய அரங்கம் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளார். தன்னை என்றும் முன்னெடுத்துச் செல்லாமல் கொள்கைக்காகவே வாழும் திருமகன் ஐயா நெடுஞ்சேரலாதனின்  பணியை எண்ணி இறும்பூதெய்தினேன். தம் பாவாணர் கோட்ட படைப்புகளையும் என்னிடம் வழங்கினார். 

 திராவிடக் கொள்கையின் ஆணிவேர் நம் நெடுஞ்சேரலாதான்  நான் இரு ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கவியரசன் மகள் திருமணத்திற்கு அமெரிக்கா சென்றபோது அய்யாவின் வளர்த்த கிடா மார்பில் குத்துவது வளர்ந்த கிடாவும்தான் குத்துகிறது தம் பாவாணர்கோட்ட  பதிவுகள் நுல்கள் என 5கிலோ இருக்கும் அமஎரிக்காவிற்கு கொண்டு செல்ல அனுப்பிவைத்தார். எம் பொருளையெல்லம் இங்கு வைத்துவிட்டு அந்தப் பொதியை கொண்டு சென்று சிக்காக்கோ பாபுவிடம் வழங்கி நெடுஞ்சேரலாத  அரும்பணியைப் பற்றிக் கூறினேன். இயல்பாக உணர்வோடு உந்துதலோடு வளர்பவர்களை சிதைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க க் கூடாது. மலேசியாவிற்கு பாரதியார் விழாவிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு தனித்தமிழ அன்பர் திருவளவனோடு இணைந்து ஆற்றிய பணி அளப்பரியது.

பின் அவரது இல்லம்  சென்றோம் அன்பே உருவான் ஐயாவின் துணைவியாரை வணங்கினேன்.அவரது வழியினர் வாழ்வு பல்வேறு சிக்கலில் உள்ளதால்  அவர்துணைவியார் நெடுஞ்சேராலாதன் மேல் மிக க் கோபாமாகா இருந்தார். தம் பெண்டு பிள்ளை பதவி பணம் என்று வாழும் பண்டாரப் பரதேசிகள் உள்ள நாட்டில் கொள்கை மாறாச் சிங்கமாக தனித்தமிழ் காக்கும் மறவராக பகுத்தறிவுக் கோமானாக வலம் வருகிறார் நம் நெடுஞ்சேரலாதன். 

அவர் இல்லத்திலிருந்து இராயாகிரிக்கு அழைத்து வந்தார். தாம் பிறந்த மண் இராயகிரி என பெருமை பொங்க கூறினார். வரும் வழியெங்கும் மலைகளும் ஏரிகளும் பசுமைக் கம்பளம் விரிதாற் போன்று செழிப்பாக இருந்த து. அருவிகள் பல இங்கு உள்ளன ஓய்வாக வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றார். தம் இளமை கால நண்பர் ஒருவரை அன்போடு அனைத்து சிறு கடையில் உணவு வழங்கினார். நம் நெடுஞ்சேரலாதன். இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்கு காரணம் நான் அரும்பாடுபட்டு இந்த இராயகிரிக்கு வந்துள்ளது இராயகிரியில் பிறந்து அருந்தொண்டாற்றும் நெடுஞ்ச்சேரலாதனின் தமிழ்தொண்டு ஒன்றே.இந்த மண்ணில் பிறந்து தமிழிற்கு அரும் பணியாற்றிய அருணாச்சலனார் முத்துசாமிப் பெருமகன் கந்தசாமிப் புலவர் போன்றோர் படங்களெல்லாம் இங்கே வைத்துள்ளீர்க்ள். இன்றும் தமிழ் வாழ்கிறது என்றால் இங்கு பிறந்த பேரறிஞர்கள்தான்.  

மேனாள் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் பட த்தை தென்காசி மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இராச ஈசுசரன் மிகப் பொறுப்புணச்ச்சியோடு பட த்தை திறந்து வைத்து சென்றிஉக்கிறார். தி.மு.க. ஒன்றுதான் மக்களோடும் தமிழோடும் பயணிக்கிறது என்பதற்கு சிறந்த் சான்று. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியார் அண்ண கலைஞர் வழியில் இயக்கத்தை வழிட த்துகிறார். தமிழ் உணர்வையும் பகுத்தறிவு இய்க்கத்தையும் கட்டிக் காக்கும் இயக்கம் தி.மு.க.

அமர ர் சிவசுப்பிரமணியம் அவர்களின் சகோதர ர்  மக்கள் அனைவரும் அவரின் புகழ் பாடுவதோடு மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியத்தில் சான்றுகளை அடுக்கி வந்தனர் . எனக்கு பெருமகிழ்வாக இருந்த து. தம்பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறார் குற்ப்பாக அவர் மகள் பாடகர் பாடும்போது என் தந்தை இந்தப் பாடலை உணர்ந்து மகிழ்வார் இந்தப் பாட்லைப் பாடுங்கள் எனக் கூறியபோது எந்த அளவுக்கு இணைந்து வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. 

சிவசுப்பிரமணியம் துணைவியார் இங்கே அமைதியின் வடிவாக அமர்ந்துள்ளனர். கால்நடை மருத்துவராகவும் தமிழ்ச்சங்கத் தலைவராஅகவும் பொதுநலத் தொண்டராகவும் வாழ்ல்ந்திருகிறார் என்றால் முழுமையும் அம்மா அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கையே ஆகும்.  

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்                  ஏறுபோல் பீடு நடை

என்ற குறளுக்கு இலக்காக வாழ்ந்த பெருமாட்டி. இறப்பு என்பது தூங்கி எழுவது போன்றது என்கிறார் நம் வள்ளுவப் பேராசான். அம்மையார் ஐயா அவர்களின் பசுமையான் நினைவோகளோடு வாழுங்கள் என வேண்டுகிறேன்.

          தில்லியில் பணிபுரியும் அவரது மகன் ஞனசம்பந்தன் உரையைக் கண்டு மகிழ்ந்தேன். வெளியூர் சென்றால்தான் நம் மொழியின் அருமை தமிழர்களின் பெருமை புரியும். மிகச் சிறப்பாக ஒரு தமிழியக்கவாதி போன்று உரையாற்றினார். மிகச்சிறப்பு தங்களின் பங்களிப்பு இராயகிரி தமிழ்சங்கத்திற்கு இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      நினைவு மலர் ஒன்று வெளியிட்டுள்ளீர்கள்.  மறைந்த மருத்துவரின் பெருமைக்கள் அனைத்தும் அடங்கிய மலராக உள்ளது. அதில் நெடுஞ்சேரலாதனின் கவிதை இராயகிரி மலைகள் மேல விளக்காக நம் ம்ருத்துவரின் பெருமையைப் பேசுகிறது. தலைவர் குருசாமி தம் கட்டுரையில் தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம் என்று எழுதியுள்ளார். கட்டாயம்  இதைச் செய்யவேண்டு. சாதி மத அடையாளங்களை துறந்து தமிழர்களாக இணைந்து கட்டிடம் கட்டுங்கள்.

 உலக நாடுகளிஎல்லாம் தமிழர்கள் தமிழியக்கங்கள் கட்டிடங்கள் கட்டி சிறந்த தமிழ்த்த் தொண்டாற்றுகின்றனர். மலெசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் சிறு கிராமங்களில்கூட கட்டிங்கள் கட்டி தமிழ்த் தொண்டு புரிகின்றனர். அருமை இராயகிரி தமிழ் உள்ளங்களே ஐயா சிவசுப்பிரமணியம் காட்டிய வழியில் பணியாற்றி தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் உருவாக்கி தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என வேண்டி விழைகிறேன். இனமானக் காவலர் பேராசியர் க.அன்பழ்கனார், நாவலர் நெடுஞ்செழியன் தமிழர் தலைவர் வீரமணி போன்றோருக்கு தமிழ்ப்பாலூட்டிய தமிழ்ப் பேராசிரியர்கள் பிறந்த மண்ணில் உரையாற்றியதை பெரும் பேராகக் கருதுகிறேன். வாழ்க இராயகிரி தமிழ்ச்சங்கம் சிவசுப்பிரமணியனார் புகழ் ஓங்குக. 

Sunday, February 18, 2024

 




உலக க் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம்


     எண்ணற்ற நூல்க ளைப் படைத்து இலக்கிய உலகில் தளராது தொண்டாற்றும் மெய்ஞானி பிரபாகர்பாபு அவர்கள் உலகச் செம்மொழி தம்ழிச் சங்கம்  சென்னையில் தூய தாமசுகலை ம்ற்றும் அறிவியல் கல்லூரியை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உல்கத் தமிழர்களை ஒருங்கிணைந்து மாநாடு நட த்துவது பெருமைக்குரிய ஒன்றாகும். சென்னையில் அறிஞர் சான் சாமுவேல் நட த்திய உலகத் தம்ழ் ஆராய்ச்ச்சி மாநாட்டில் பிராபாகர் பாபு அவர்கள் வெளிநாட்டுப் பேராளர்களிடம் அவர் காட்டிய பரிவும் வரவேற்பும் நெஞ்சில் நிலையாக உள்ளன. தூஉய தாமச்சு கல்லூரிப் பெரும்க்களையும் பாராட்டி மகிழ்கிறேன்

    உலகளாவிய நிலையில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளால் தமிழர்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். மலேசிய சிங்கப்பூர் இலங்கை மியான்மர் அமெரிக்கா கனடா ஆசுத்திரேலியா ஐரோப்பிய நாடுகள் தென்ஆப்ரிக்கா  இந்தோனேசியா கென்யா பிரிட்டன் சப்பான் சுவிட்சர்லாந்து என அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் கல்வி மேம்பாட்டினாலும் போராட்டச் சுழ்நிலைகளாலும் போர் பதட்டங்களாலும் அந்தியர் ஆதிக்கங்களாலும் ஆங்காங்கே புலம் பெயர்ந்துள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்கள் தம் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் கலைகளையும் ஆண்மீக எண்ணங்களையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் பாதுகாத்து வருகின்றானர். 

     நான் இலண்டன் மாநகர் சென்றிருந்த போது ஈழத்து கவிஞர் கருணான்ந்த ராசா திருக்குறளில் காமத்துப் பாலை மட்டும் பிரித்து வள்ளுவன் காதல் என்ற நூலை எழுதி பதிப்பித்து என்னிடம் தந்தார். புலம்பெயர்ந்து தம் வாழ்க்கைநிலைகளில் போராடி குடும்பம் காத்து மரபுக் கவிதையில் நூல எழுதி அதைப் பதிப்பித்துள்ளார் என்றால் திருவள்ளுவரின் திருக்குறள் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியலாம். இலண்டனில் பேராசிரியர் கோபன் மகாதேவா திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட்டுள பாங்கு என்னை வியக்கவைத்தது. அணமையில்தான் பேராசியர் ,கோபன் மகாதேவா காலமானார். சுடரொளி வெளியீட்டுக் கழகம் சார்பில் இதழாளர் சம்பந்தம் பொன் பாலசுந்தரம்  உலகம் முழுவதும் கவிதைப் போட்டி நிகழ்வை தமிழ்ப்பணியில் வெளியிட்டு  வந்த கவிதைகளை பரிசீலித்து முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் ஆறுதல் 25 பெருமக்களுக்கு பரிசுகள் அறிவித்து சென்னையில் பன்னாட்ட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் சென்னையில் விழா நட த்தி தந்தையார் பெருங்கவிக்கோ திருக்கரத்தால் அனைவருக்கும் வழங்கினோம். மரபுக் கவிதைகளின் தாக்கம் அயலகத்தமிழர்களிடம் உள்ள உணர்வை அறியலாம்.

    பிரான்சில் அருளாளர் சிவதாசன் அவர்கள் யான் சென்றிருந்த போது அங்குள்ள கோவிலுக்கு சிலைகள் வேண்டும் என்றார் நான் தமிழகம் வரும்போது ஆவண செய்கிறேன் என்றேன். முத்துக்குமாரசாமி குருக்களும் சிவதாசன் அவர்களும் தமிழகம் வருகை தந்தனர். அண்மையில் காலமான் அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் வழி கும்பகோணம் சாமிநாதன் நிறுவனம் வழியாக சிலை செய்து அனுப்பி வைத்தோம். அந்த சிலை இன்றும் தமிழர்கள் வழிபடு சிலைகளாக உள்ளது. நான் மீண்டும் பாரிசு சென்றபோது கண்டும் மகிழ்ந்தேன். அண்மையில் நான் பாரிசு சென்றபோது நண்பர் செயராமன் கோவிந்தசாமி பிர்தவுசு நட த்தும் சங்கீதா உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை அனைவரும் காணும் வண்ணம் வைத்துள்ளார்.  செயராமன் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை பிர்தவுசு அவர்களே  வெளியிட்டுள்ளார். தமிழ் இலைக்கியங்களின் தாக்கம் உலகத் தமிழர்களிடம் நீக்கற நிறைந்துள்ளதை அறியலாம் 

     இந்த ஆண்டு பிரான்சு சுடார்சு பர்க் நகருக்கு தலைவர்கிருபானந்தன் அழைத்திருந்தார்கள். அங்குள்ள தமிழர்கள் எல்லம் கூடி நட த்திய பொங்கல் விழா என் வாழ்நாளில் மறக்க இயலா விழாவாகும். தமிழ்ச்சோலை என்ற அமைப்பின் மூலம் தமிழ்ப்பள்ளி நட த்துகின்றனர். அனைத்து பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறல் போட்டி நட த்தி பரிசு வழங்குகின்றனர். வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகளை வழங்கினேன். தமிழ் பேச்சுப் போட்டி சிறுகதைப் போட்டி நடனப் போட்டி எனதமிழ்க் கலைகளைப்  சிறப்பாகப் பாதுகாக்கின்றனர்.

    இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நகருக்கு வள்ளுவன் பாடசாலை நிறுவனத்தார் என்னை திருவள்ளுவர் ஆண்டு விழாவிற்கு அழைத்திருந்தனர். நிறுவனர் முர்கவேள் ந ந்தினி இணையர் திருவள்ளுவரை பள்ளக்கில் ஏற்றிவைத்து திருக்குறள் பாடி மேடைக்கு கொண்டுசென்றது வரலாற்றுப் பதிவாகும்  நானும் பெர்ன் நகர் மேயரும் சிறப்பு விருந்தினராக இருந்தோம். கவியரங்கம் பட்டிமன்றம் உரையரங்கம்   நாட்டியம் நாடகம் பாடல் என அனைத்தும் கொஞ்சு தமிழில் சிறப்பாக நடைபெற்றது வியப்பைத் தந்த து. அழகு தமிழை தம் வழித்தோன்றல்களுக்கு ஊட்டியுள்ளதை அறிய முடிந்த து.

    பேர்ன் ந்கரில் உள்ள திருகோயிலுக்கு அருளாளர் சசி அழைத்திருந்தார். அங்கு முழுமையும் தமிழிலேயே வழிபாடு, ஆன்மீகத் தமிழை போற்றி பாதுகாக்கின்றனர். தேவாரம் திருவாசகம் அனைத்தும் பெர்ன் ந்கரில் ஒலிக்கின்றது.

    யான் மியான்மர் சென்றிருந்தபோது அக்கு இராணுவ ஆட்சி நடைபெறுகிற்துஇருப்பினும் வள்ளுவர் கோட்டம் அமைத்து திருக்குறளை ஓதுகின்றன. தமிழ்க்கல்விக்கு பள்ளி நட த்துகின்றானர். இரங்கூன் நகரில் கோவில்களில் தமிழ் பயிற்றுவிக்கின்றனர். பெருங்கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்களின் உறவினரிடமிருந்து பர்மீய மொழியில் திருக்குளை மொழிபெயர்த்த நூலை பேராசியர் ஆறு அழகப்ப்ன் பெற்று தமிழக அரசிடம் வழங்கினார்.

செருமனி ரெய்னே ந்கர் சென்றிருந்தபோது ரெய்னே நதியின் பாலத்தில் பல்வேறு நாட்டின் அறக் கருத்துகள் அவரவர்கள் மொழியில் உள்ளன. நம் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் வரிகள் உள்ளதை உலகப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் கணேசலிங்கம் கமலநாதன் காண்பித்தனர். 

    தென்னாப்பிர்க்கா ந்கரில் டர்பன் நகரில் நம  அன்மீக க் கோயில்கள் பல உள்ளன. அங்கு தமிழ் பயில வாய்ப்பில்லை மிக்கி செட்டி என்ற தமிழர் சென்னை இரமசாமி பல்கலைகழகத்தோடு இணைந்து 50 பெருமக்களுக்கு ஆசிரியப் பயிற்சி அளித்து அங்கு உலப் பண்பாட்டி அறிஞர்கள் டர்ப்ன் சென்று

     பட்டம் வழங்கினோம், இன்று தென்னாப்பிரிக்கா தமிழர்கள் தமிழ் பயில்கின்றனர்.

மலேசிய சிங்கப்பூர் அமெரிக்க கனடா என அனைத்து நாடுகளைப் பற்றியும் பதிவிட்டுள்ளேன். தாய்மொழி வழி பயின்றால்தான் கல்வித் திறன் அதிகரிக்கும் தமிழை அறிந்து உலகை அறிவோம்