Wednesday, February 29, 2012

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் சொற்பொழிவு



[4-2-2012 அன்று சிங்கப்பூர் பெக்கியோ சமூக மன்றத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் ”எனது வெளிநாட்டுப் பயணங்கள் ”எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்தும் இந் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்சி யடைகின்றேன். சென்ற முறை நான் சிங்கை தமிழ் எழுத்தாளார் கழக உலக மாநாட்டிற்கு வருகை தந்திருந்தேன். மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திய தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்களை சிறப்பிப்பதில் பேருவகை கொள்கின்றான். வருகை தந்திருக்கும் அருமைக் கவிஞர் கவிஞரேறு அமலதாசன் அவர்களை பொன்னாடை போர்த்தவும் எழுத்தாளர் கழகப் புரவலர் நாகை தங்கராசு அவர்களை மாலையணியவும் அன்போடு அழைக்கின்றேன். அருமைப்பெருமக்களே உலகத் தமிழ் எழுத்தாளர்களை சிங்கையில் கூட்டிய பெருமகனுக்கு உங்கள் கர ஒலிகளுக்கிடையே பாராட்டி மகிழ்கிறேன்.

கவிச்சோலையில் யான் சில ஆண்டுகளுக்கு முன் இதே மன்றத்தில் பங்கேற்று உரையாற்றி கவிஞர்களின் கவிதைப் பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்து அக்கவிதைகளை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன். அப்போது மிகச் சிறப்பாக கவிபாடியா கவிஞர் மாதங்கி மாநாட்டில் மிகச் சிறந்த பங்கேற்பாளராக இருந்தார். கவிஞர்களை உருவாக்கும் பணியில் கவிச்சோலையின் பங்கு மகத்தான பங்காகும்
.
இன்றும் கவிஞர் பெருமக்கள் மிகச் சிறப்பாகாக் கவிதை பாடினீர்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைஃகு சிறுவர் பாடல் என அனைத்துத் துறையிலும் பாடினீரகள். அதில் மூவருக்கு பரிசுத் தொகையை என்னை வழங்கப் பணித்தீர்கள். பெறாத பெருமக்களும் அடுத்த நிகழ்வில் பரிசு பெறும் கவிதை வழங்கிய பெருமக்களே என வாழ்த்தி மகிழ்கிறேன். தங்களின் கவிதைகளையும் தமிழ்ப்பணியில் வெளியிடுவேன்.

ஐயா ஆண்டியப்பன் அவர்களின் நூலினைப் படித்து மகிழ்ந்தேன். நூலைப் படித்தால் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் மூன்று நாட்டு வரலாற்றை தம் வாழ்க்கையோடு இணைத்து நமக்குத் தந்துள்ளார் . வளரும் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.

அருமைத்தலைவர் ஆண்டியப்பன் அவர்கள் எனது வெளிநாட்டுப் பயணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றப் பணித்துள்ளார்கள். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது சிங்கைதான். தமிழுக்கு அனைத்து வகையிலும் தமிழுக்கு முதண்மை தந்துள்ள சிங்கைக்கு 1998 ஆம் ஆண்டு வருகை தந்தேன்.வானூர்தி நிலையமானாலும், தொடர்வண்டி நிலையமானாலும், பெருந்து நிலையமானாலும், மக்கள் கூடும் பகுதிகளிலும் அழகு தமிழ் எழுத்தும் ஒலிப்பும் என்னைக் கவர்ந்தவை. மற்ற நாடுகளுக்கு முன்னோடி அதற்கு வித்திட்ட தமிழவேள் கோ.சா அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். அதனைக் காத்துவரும் உங்களையும் வணங்குகிறேன்.

மலேசியா, தமிழர்கள் பரவி வாழும் தமிழ் உணர்வாளர்களின் களம்.உலகத்தமிழ் மாநாட்டிற்கே வித்திட்ட இடம். இன்றுவரை பல்வேறு மாநாடுகளை நடத்தி சாதனை படைத்தநாடு மலேசியாவிற்கு .தற்போது கூட பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு கோலாலம்பூரிலும், பெரியார் சிலை திறப்பு பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியிலும் நடைபெற்றது.மலேசியாவின் அனைத்து அமைச்சர்களும் பெருமக்களும் பங்கேற்றனர். மாநாட்டின் தமிழக ஒருங்கிணைப்பாளரகப் பொறுப்பேற்று பங்கு பெற்று தற்போது தங்கள் முன் நிற்கிறேன்.

இராசேந்திர சோழன் வென்ற கடாரம் கெடாவாக மலேசியாவில் உள்ளது. அங்கு 11 ஆம் நூற்றாண்டுக் கோயில் உள்ளது அதில் இந்து கோயில் என் பொறித்துள்ளார்கள் சோழன் வந்ததற்கான பதிவு அங்கில்லை. நாமெல்லாம் வரலாற்றை வரலாறாகப் பதிவு செய்யவேண்டும். நம் தலைமுறைக்காவது பதிய செய்ய வேண்டிய பொறுப்பு எழுத்தளார்களாகிய நமக்கு உண்டு. மலேசியாவில் பயணிப்பது தமிழகத்தில் பயணிப்பது போன்றே தோன்றும். மலேசியாவின் 3 தினஇதழ்களும் தமிழகச் செய்திகளையும் தமிழக எழுத்தாளர்களின் செய்திகளையும் வெளியிடுவதில் முதன்மை அவர்களுக்கே. 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழி நம் மாணவர்கள் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பங்கேற்று மகிழ்ந்திருக்கின்றேன்.மலேசியத் திருநாடு அன்று பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் தமிழர்கள் மலேசியாவில் வாழ்கிறார்கள் என்பது இன்றும் உண்மை.

எங்களது பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாடு 6 நடத்தியுள்ளோம் அதில் மூன்று வெளிநாடுகளில் நடத்தியுள்ளோம். 3ஆம் மாநாடு செருமணி பெர்லினில் நடத்தினோம் அதில் முத்தமிழ்க்காவலர், கி.ஆ.பே.வி, நீதியரசர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன்,பெரியார் பெருரையாளர் இறையன் போன்ற 50 பெருமக்கள்பங்கேற்றனர். குறிப்பிட்ட்டுள்ள நால்வரும் தற்போது இல்லை. 50 பெருமக்களும் 50 ஈழக் குடும்பங்களில் தங்கி மாநாட்டில்பங்கேற்றனர் இன்றும் பங்கேற்ற பெருமக்களோடு தமிழ்கத் தொடர்பு தொடர்கிறது.

1999 ஆன் ஆண்டு தாய்லாந்தில் பாங்க்காக் நகரில் மூன்றாம் மாநாடு நடத்தினோம் இலங்கை அமைச்சர் பெரியவர் தொண்டைமாண் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தமிழகத்திலிருந்து 100 பெருமக்களும் மலேசியவிலிருந்து 40 பெருமக்களும் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்றனர். உலகத்தமிழர்களை ஒரு குடைக்கீழ் அமர்த்திய மாநாடு. அதற்கு அருமைத் தந்தையார் அவருகளும் யானும் ஏற்ற சோதனைகள் ஏராளம்.விரிக்கின் பெருகும்.

2006ஆம் ஆண்ட்டு மலேசியா கோலாலம்பூர் நகரில் மலேயாப் பல்கலைக் கழகத்தில் 6 ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். மலேசியா அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மலேசிய தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு அவர்கள் பிரதமர் துறையின் அமைச்சர் பங்கேற்றது நினைவில் நிழலாடுகிறது. தமிழகத்திலிருந்து 70 பெருமக்கள் பங்கேற்றனர். சிங்கையிலிருந்தும் உலக நாடுகளில்ருந்தும் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர் அதுபோதுதான் அனைத்துப் பெருமக்களையும் சோழன் வென்ற கடாரம் பகுதிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தோம்.

ஐரோப்பாவில் இலண்டன், ப்ரான்சு,செருமணி, சுவிட்சர்லாந்து நாடுளில் தமிழர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன் நேரம் கருதி விரிக்க இயலாது. ஒமன், கத்தார், அபுதாபி,சப்பான், அமெரிக்கா,கனடாபோன்ற நாடுகளில் பயணித்திருகிறேன்.

ஐரோப்பிய நாடுகளிலும் கண்டாவிலும் ஈழத்தமிழர்கள் வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை நாட்டியம் நடனம் என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். விடுதலை வேட்கையில் எள்ளளவும் குறையா வண்ணம் ஈழமே குறிக்கோளாய்க் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் நம்மவர்கள் செல்வச்செழிப்பில் உள்ளனர். அமெரிக்காவின் அனைத்து சங்கங்களும் இணைந்து பெட்னா என்ற அமைப்பை நிறுவி மாநாடுகள் நடத்துகின்றனர். பெரும்பாலான சங்கங்கள் பத்த்ரிக்ககைகள் நடத்தி தமிழை நாட்டியத்தை வளர்க்கின்றனர்.

மியான்மரில் தமிழர்கள் எல்லா நிலையிலும் மேலோங்கி உள்ளனர். அங்கு உள்ள கோயில்களெல்லாம் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் போல் புதுப்பித்துள்ளனர். தமிழ் படிப்பதற்கு எந்த வாய்ப்பும் வசதியும் இன்றி உள்ளனர். அறிஞர் மு.வ. பிறகு எழுத்தாளர்களே அங்கு உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.தமிழ்த் தொலைக்காட்சிகள் தெரிந்தாலும் இருக்கும் தமிழையே கெடுகின்றது என் வறுந்தினர்.

உலகெங்கும் வாழும் நம்மவர்கள் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றனர். திரைப்படம் பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. மாநாடு நடத்துபவர்கள்கூட திரைப்பட சார்ந்தவர்களுக்க்கே முத்ன்மை வழங்குகின்றனர். மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடுபட்டவர்களை இனம் காண்பதில்லை.குறைந்த அளவு இலக்கிய அமைப்பு நடத்தும் எம்மைப் போன்றவர்களிடம் கருத்தும் கேட்பதில்லை. தமிழ்கத்தில் தமிழுக்காகப் போராடும் பெருமக்களை அழைத்து அறிந்தால்தான் நம் மொழி நம் மேன்மையுறும்.
மிகக் குறுகிய காலத்தில் எனது வருகையைக் கூறியவுடன் நிகழ்வை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் அவர்கட்கும்,செயாலாளர் அருணாச்சலம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கள் கவிஞரேறு அமலதாசன், தமிழாசிரியர் சிவசாமி, புரவலர் நாகை தங்கராசு கவிதைபாடிய கவிஞர் பெருமக்கள் மற்றும் அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

மலேசியா கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை



[7-2-2012 அன்று கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில்கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு நடந்ததமிழ் தமிழர் சிந்தனை கலந்துரையாடலின்போது கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரின் உரை]


கிள்ளானில் உலக்த் தமிழ்ப்பண்பாடு இயட்க்கத்தின் சார்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை சந்திப்பு. நடைபெற்றது..தலைவர் ப.கு.சண்முகம் அவர்களும் அறிஞர் முரசு நெடுமாறன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.கிள்ளான் நகர தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்றனர்.

முரசு நெடுமாறன் அவர்கள் தமிழகத்தில் தமிழ் ஆண்டு எடுத்துள்ளார்கள். தமிழகமே கொதித்து எழுந்திருக்க வேண்டாமா அங்கு தமிழ் அறிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற மன் வேதனையைத் தெருவித்தார்.

தமிழக மக்கள் மாற்றம் எனக் கூறி மக்கள் வழங்கிய தீர்ப்பே இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்றேன்,எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத்தந்தையார் அவர்கள் தலைமையில் பிப்ரவர் 12 முதல் 23 வரை தமிழாண்டை மீண்டும் கொணர்ந்திட ஊர்திப் பயணமாக ஊர்தோறும் தெருமுனைக்கூட்டங்கள் தமிழ் ஆர்வலர்கள் எழுச்சியை ஏற்படும் வண்ணம் அமைத்துள்ளோம். தமிழ்ப்பணியில் வெளியிட்ட அடவணையையும் காண்பித்தேன்.

கலைஞர் தொலைக்காட்சியில் சிற்ப்புச் செய்தியாளர் தம்பி ராசா அவர்கள் என்னைப் பேட்டி கண்டார்கள். தமிழ் ஆண்டை இந்த அரசு எடுத்ததற்கு உலகத் தமிழினமே வெட்கித் தலைகுனிகிறது எனக் கூறினேன். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் மலேசியத் தமிழர்களாகிய தாங்கள் கடுமையாகச் சாடியுள்ளீர்கள். இதை தமிழ்கம் முழுமையும் பப்புவோம்

மலேசியாவைச் சார்ந்தவர்களுக்கு எந்தப் பரிசும் வழங்குவதில்லை இதை தமிழகம் நடைமுறைப் படுத்தவேண்டும் என தலைவர் ப கு சண்முகம் வினவினார்.

அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கே தமிழக அரசு பரிசு வழங்கியுள்ளதை நினைவில் கொள்ளவேண்டுகிறேன் . செம்மொழி மாநாட்டின்போது உலகம் முழுமையும் உள்ள தமிழ் அறிஞர்களை கலைஞர் அரசு அழத்ததையும் வெளிநாட்டு அறிஞர்களுக்கே செம்மொழி விருது வழங்கியதையும் குற்ப்பிட்டேன். தமிழுக்கு ஆற்றிய ஒப்பற்ற செயல்களைப் போற்ற வேண்டும் அவ்வாறு நாம் போற்றாத்த போது செய்திகள் திரிக்கப்படுகின்றன. செய்திகள் திரிக்கப்படும்போது நாம் தமிழ் ஆட்சியை இழக்கிறொம் என்பதை நினைவிகொள்ள வேண்டும்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். திரளாகப் பங்கேற்று. மலேசிய மக்கள் மிகச் சிறப்பாக நடத்தினீரகள். இந்தத் தருணத்தில் மலேசிய மக்களுக்கும் அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இலண்டனிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சுடான்லி செயராசு குடும்பதினருக்கு என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். பெருமகன் ஈழ மக்கள் இலண்டனில் பணியாற்றும் வேகத்தைக் கூறினார். அவர்களோடு இணைந்து உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழ விடுத்லைக்குப் பாடுபடுவோம்.

இறுதியாக செயராசு அவர்கள் சிறந்த பாடகர் என நிருபித்துள்ளார். ஐயா சண்முகம் அவர்கள் சந்திரபாபு பாடலை வேண்டியவுடன் பம்பரக் கண்ணாலே பாடலைப் மிகச் சிறப்பாகப் பாடி இலண்டனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பெருமனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

அரும்பாடுபட்டு இந் நிகழ்வை அமைத்த தலைவர் ப.கு. சண்முகம் அவர்கட்கும், அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கும். இங்கு என்னை அழைத்து வந்த கவிஞர். கோ.வி. பெருமாள் அவர்கட்கும் கலந்து கொண்ட பெருமக்கட்கும் எனது நன்றி கூறி விடைபெறுகிறேன்.

மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரைப் பொழிவு




[2-2-2012 அன்று மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் தைப்பிங் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின்உரை]

தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் கவிஞர் பொன் சமுகம் நடத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்கு பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் நேற்று சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் உத்தம்மஞ்சோங் பகுதியில் உரையாற்றினேன். அங்கிருந்து செயல் வீரர் விசயன் அவர்கள் தாப்பாவில் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கிருந்து பெரியார் நெறியாளர் முனியரசன் அவர்கள் ஒரே தொடர் ஓட்டமாக தைப்பிங் நகருக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிகழ்வில் யான் பங்கேற்பதற்கு உருதுணையாக இருந்த பெருமக்களுக்கு உங்களின் சார்பில் நன்றியை தெருவித்துக் கொள்கிறேன்.

நான் வாயிலில் நுழைந்த உடன் பெரியவர் முத்துசாமி அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் நலத்தை வினவி நூற்றாண்டு கண்ட தோட்டப்புறப் பள்ளியீன் மலரை வழங்கினார்கள். பெருமக்களே எங்களின் மலேசியத் தொடர்பு 1977ஆம் ஆண்டுமுதல் இன்றும் தொடர்கிறது. இங்கு வாழ்ந்து தமிழகத்தில் மறைந்த சுவாமி இராமதாசர் அவர்கள் தம்முடைய மணிவிழாவிற்கு தம் மாணவனான அருமைத் தந்தையாரை பயணச்சீட்டு வழங்கி அழைத்தார்கள். அது போது மலேசியாவின் பட்டிதொட்டியெல்லாம் தந்தையரை அழைத்துச் சென்றார்கள். ஆய கலைகள் 64 யையும் அறிந்த அந்தத் தமிழ் முனிவரின் வற்றாத பேரன்பே இந்த மலேசியச் சொந்தங்கள்.

இந்த இந்து வாலிப சங்க மண்டபத்தில் பெருந்திரளாக பெருமக்கள் கூடியுள்ளீர்கள். மலேசியாவில் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் கட்டிக்காக்கும் உங்களை வணங்கி மகிழ்கிறேன். என்னோடு வருகைதந்துள்ள குடியாத்தம் குமணன்,செந்தமிழ்முரசு செந்தமிழ்விரும்பி அ.நாகேசுவரராவ் அவர்களுக்கும் வணக்கங்கள்.

பன்னாட்டுத் பகுத்தறிவு மாநாட்டின் தமிழகத்தின் ஒருங்கிணைப் பாளராகப் பொறுப்பேற்று 40 பேராளர் பெருமக்கள் கோலாலம்பூரில் உரையாற்றி மலேசியாவே பெரியார் கருத்துக் கள்மாக இருந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன்.

இன்று நாம் பெரியாரின் சிந்தனைகளால் எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறோம் தந்தை பெரியார் நம்மிடம் புரையாடிப் போயிருந்த சீர்கேடுகளை நீக்கி மனிதனை மனிதானாக வலம் வரவைத்தவர். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடுகளை நீக்க தம் வாழ்நாளையே தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிய தீரர்.பெண் அடிமைத் தனத்தை வேரறுத்து பெண்சமுதாயம் தழைத்து ஓங்க புரட்சித் திட்டம் வழங்கியவர். பெண்கள் சொத்துரிமைக்கு முழக்கமிட்ட மாமேதை. அன்று குலக் கல்வித் திட்டத்திற்கு சாவுமணி அடித்ததால்தான் இன்று நம்மக்கள் மேல் நிலையில் உள்ளார்கள். மேல்நிலையில் உள்ளவர்களெல்லம் நன்றியோடு பெரியார் கொள்கைகளை நம் தலைமுறியிடம் பரப்பியியிருந்தால் மீண்டும் பல இழிவுகளுக்கு ஆளாயிர்க்க மாட்டோம்.

பெரியாரின் திராவிடர் கழகம் மிகச் சிறப்பாக தமிழகத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் வெற்றிநடைபோடுகிறது. இந்தியாவெங்கும் உலகம்மெங்கும் பெரியார் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தில்லியிலேயே பெரியார் மையத்தை நிறுவி பெரியாரின் கருத்துக்கு உரம் சேர்த்துள்ளார்கள். நம் தன்மான இயக்கத்தின் தலைவரும் மாநாட்டின் தலைவருமான எழுத்தாண்மை ஏந்தல் முனைவர் பெரு.அ தமிழ்மணி அவர்கள் மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலையை நிறுவியுள்ளார்கள். மலேசிய மக்கள் பெரியார் இருமுறை வந்தபோது காட்டிய அன்பு மகத்தானது அதனது தொடர்ச்சிதான் மாநாடும் சிலை திறப்பும்.பெரியார் கொள்கைகளை இன்று நாம் மறந்து நம்மை மாற்றான் ஆளும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளாம். இந்நிலையைத் தகர்க்க பட்டிதொட்டியெல்லாம் அவர் வழியில் நின்று தமிழன் தன்மானத்தை நிலைநாட்டுவோம்.

அன்புப் பெருமக்களே தமிழர்கள் தலைகுனியச் செய்யும் செயல்கள் தமிழ் நாட்டில் நடைபெற்றுவருகின்றன. தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள் தலைமையில் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட்டு அறிவித்தார்கள். முந்தைய கலைஞர் அரசு தமிழாண்டாக் அறிவித்தது. இப்போது உள்ள தமிழக அரசு தமிழாண்டை நீக்கி உத்தரவு போட்டுள்ளது.தமிழனின் இளித்தவாய்த் தனத்தால் வந்த இழப்பு.

தமிழ் ஆண்டை நான் அனைவரும் நடைமுறையில் கொண்டு வரவேண்டும். தாங்கள் அடித்துள்ள அழைப்பிதழ் அழகு தமிழில் அழகாக உள்ளது, இன்மேல் தாங்கள் அச்டிக்கும் அழைப்பிதழ்களில் தமிழ் ஆண்டை நடைமுறைப்படுத்த வேண்டும்..

பெரியார் வழிவந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை இராசதானி என்ற்றிருந்ததை சட்டமன்றத்தில் தமிழ்நாடு என அனைவரது ஒப்புதலோடும் மாற்றிய பெருமைக்குரியவர்.அறிஞர் வழி வந்த கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஒருமன்தாகக் கொண்டுவந்த தமிழாண்டு தீர்மாணத்தை புறந்தள்ளுவது திருவள்ளுவரைப் புறந்தள்ளுவதாகும். ஆகையால் பெருமக்களே நம் ஆண்டு தை தமிழாண்டு திருவள்ளுவர் ஆண்டுதான் என்ற சிந்தையில் கொண்டு நடைமுறைப் படுத்துவோம்.எங்களது தமிழ்ப் பணி இதழ் தமிழாண்டு திருவள்ளுவராண்டு 2043 மலராகவே வெளியீட்டு வருகிறோம். தாங்களும் திருவள்ளுவராண்டை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள்.

ஐயன் திருவள்ளுவர் சிந்தனையையும், திருவள்ளுவர் ஆண்டையும் இரு கண்களாகக் காப்போம் காப்ப்போம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

Sunday, February 26, 2012

மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் பகுதியில் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை




(1-2-2012 அன்று மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் பகுதியில் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை)

மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடபெறும் தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன். மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூரில் எழுத்தாண்மைஏந்தல் முனைவர் பெரு.அ. தமிழ்மணி நடத்திய பகுத்தறிவு மாநாட்டிற்கும் பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலை திறப்பு நிகழ்விலும் பங்கேற்றும் தமிழகப் பேராளர்களின் ஒருங்கிணப்பாளராகவும் பொறுப்பேற்று 40 பெருமக்களை தமிழகத்திலிருந்து அழைத்துவந்தும் இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பதில் பேருவகையடைகின்றேன்.

மாநாட்டின் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களும் மாநாட்டின் இளைஞர் அணித்தலைவர் அன்புவாணன் அவர்களும் கப்பளா பத்தாசிலிருந்து எங்களை தாப்பா நகருக்கு அழைத்துச் சென்று அருகில் உள்ள பகுதிகளுக்கும் குறிப்பாக தாப்பா தமிழ்ப்பள்ளிக்கும் அழைத்துச் சென்று இன்று இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்து எங்களை விசயன் அரவணைப்பில் உலா வரச் செய்துள்ளார்கள் அப் பெருமக்களுக்கு உங்களின் சார்பாக நன்றியைத் தெருவித்துக்கொள்கிறேன். உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பொறுபேற்று மலேசியாவில் வெற்றிகரமான் மாநாடு நடத்திய் ப.கு.சண்முகம் அவர்கள், இந்நிகழ்வு சிறப்புடன் நடக்க பெரும்பங்காற்றிய ம.இ.க.பெருமக்கள் எதிர்க்கட்சிப் பெருமக்கள் இங்கே வருகை தந்துள்ளனர். இங்கே வருகை தந்திருக்கும் ஒளவை, கண்ணகி, திருவள்ளுவர்,பாரதியார் உருவில் உள்ள சிறுவர்கள் திருக்குறள் பாடி இங்கே அமர்ந்துள்ள மாணவச் செல்வங்கள், மாணவச் செல்வங்களை வளர்த்துள்ள பெற்றோர்கள் எம்மோடு வருகை தந்து உரையாற்றியுள்ள புரட்சி இயக்குநர் வேலு பிராபாகன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இளம் சேக்குவரா, செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி அனைவர்க்கும் என் கரம் குவிந்த வணகத்தைத் தெருவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் பாடிய நம் செல்வங்கள் மிகச்சிறப்பாகப் பாடினார்கள். அவர்களை வழி நடத்தும் விசயன் அர்களின் சகோதரி திருக்குறள் வகுப்புக்கு பெற்றோர்கள் அனைவரும் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்தார். பெருமக்களே தமிழர்கள் திருக்குறளை மறந்த காரணத்தினாலேயே நம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளானோம். திருக்குறள் வழி அருமைச் சகோதரி நம் குழந்தைகளை சான்றோராக தன்மானத் தலைவர்களாக உருவாக்குகிறார் என்பதறிந்து இறும்பூதெய்துகின்றேன்.

தன்மானத் தந்தை பெரியார் அவர்களின் திரூஉருவச்சிலையை அவர்கள் கால்பதித்த பினாங்கு மாநிலத்தில் நிறுவியுள்ளீர்கள். அந்தப் பெருமகன் இல்லையென்றால் தமிழகத்தில் நாம் புறம் தள்ளப்பட்டு கைக்கூலிகளாக இன்னும் இடுப்பில் துண்டையும் செருப்பைக் கையிலும் தூக்கிக் கொண்டு அடிமைகளாகவே இருந்திருப்போம். செலவந்தக் குடும்பத்தில் பிறந்த பெரியார் அவர்கள் அனைத்தையும் துறந்து ஆட்சி அதிகாரத்திற்கு அப்பால் மக்களுக்காவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக மறவர். அப்பெருமகனுக்கு மலேசிய மக்கள் காட்டிய நன்றியே கோலாலம்பூர் மாநாடும் பினாங்கு சிலைதிறப்பும்.

நான் பன் முறை மலேசியா வந்திருந்தாலும் இப் பகுதிக்கு தற்போதுதான் வந்துள்ளேன். தங்களின் ஆர்வமும் அன்புப் பெருக்கும் எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது. தமிழ்ச் சான்றோர்களின் வேடத்தில் வந்த பிள்ளைகளெல்லாம் அப் பெருமக்கள் வழங்கிய சிந்தனைகளை நினைவில் கொள்ளுங்கள். அதன் படி வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

விசயன் அவர்கள் தம்முடைய நண்பர் இலக்குமணன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். இலக்குமணன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தாம் வங்கிக்கு காசோலை தமிழில் எழுதி இருந்ததால் அதை திருப்விட்டதாகவும், இச் செய்தியை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பெரும் பரபரப்பை உண்டாக்கி பின் வங்கித் தலைமையே அவரிடம் பேசி தற்போதுவரை தமிழிலேயே காசோலை வழங்கிய வருகிறார். இந்தப் போராட்ட குணம் தமிழர்களுக்கு வர வேண்டும். இந்த சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் இலக்கிய உணர்வும் தமிழ் வேட்கையும் உள்ள பகுதியாக உணர்கிறேன்.

விசயன் அவர்கள் பாரதியார் தமிழ்ப் பள்ளிக்கும் தோட்டப் புறம் உள்ள தமிழ்ப் பள்ளிக்கும் அழைத்துச் சென்றார். உண்மையிலேயே பள்ளி மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப் பட்டு நம் தமிழ்ச் செல்வங்கள் அருமையாக தமிழ் பயில் கின்றனர். வெல்லத் தமிழ் என்றும் வாழும் என்பதை இப் பள்ளிகளைக் காணும்போது உணர்க்கிறேன்.

இங்கிருந்து 20 கல் தொலைவில் உள்ள பேராறு தாப்பா ஆறும் கடலில் முக்கோணமாக சங்கமிக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார் விசயன். புரட்சி இயக்குநர் வேலு பிராபாகரன் தமது படத்திற்கு காட்சி எடுக்கும் அளவிற்கு எழில் கொஞ்சும் அழகு.

திருமிகு இரஞ்சன் அவர்கள தமிழ் குழுவோடு எம்மோடு பேசும்போது ஈழத்தில் நடந்த கொடுரத்தையும் கையாலாகாத நிலையில் நாம் இருந்ததையும் உணர்சிபொங்கக் குறிப்பிட்டார்.

இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் தமிழர்களிடம் அத்துணை உணர்வுகளும் இப்பகுதியில் மேலோங்கி உள்ளது.

அருமைசான்ற பெருமக்களே ஐயன் திருவள்ளுவர் வாய் மொழி நெறியையும், தந்தை பெரியாரின் சம்த்துவக் கோட்பாட்டையும் நாம் ஒழுகி நடந்தோமானால் நம்மை யாரும் வீழ்த்தமுடியாது என்று கூறி விடைபெறுகிறேன்.