Wednesday, February 29, 2012

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் சொற்பொழிவு



[4-2-2012 அன்று சிங்கப்பூர் பெக்கியோ சமூக மன்றத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் ”எனது வெளிநாட்டுப் பயணங்கள் ”எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்தும் இந் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்சி யடைகின்றேன். சென்ற முறை நான் சிங்கை தமிழ் எழுத்தாளார் கழக உலக மாநாட்டிற்கு வருகை தந்திருந்தேன். மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திய தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்களை சிறப்பிப்பதில் பேருவகை கொள்கின்றான். வருகை தந்திருக்கும் அருமைக் கவிஞர் கவிஞரேறு அமலதாசன் அவர்களை பொன்னாடை போர்த்தவும் எழுத்தாளர் கழகப் புரவலர் நாகை தங்கராசு அவர்களை மாலையணியவும் அன்போடு அழைக்கின்றேன். அருமைப்பெருமக்களே உலகத் தமிழ் எழுத்தாளர்களை சிங்கையில் கூட்டிய பெருமகனுக்கு உங்கள் கர ஒலிகளுக்கிடையே பாராட்டி மகிழ்கிறேன்.

கவிச்சோலையில் யான் சில ஆண்டுகளுக்கு முன் இதே மன்றத்தில் பங்கேற்று உரையாற்றி கவிஞர்களின் கவிதைப் பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்து அக்கவிதைகளை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன். அப்போது மிகச் சிறப்பாக கவிபாடியா கவிஞர் மாதங்கி மாநாட்டில் மிகச் சிறந்த பங்கேற்பாளராக இருந்தார். கவிஞர்களை உருவாக்கும் பணியில் கவிச்சோலையின் பங்கு மகத்தான பங்காகும்
.
இன்றும் கவிஞர் பெருமக்கள் மிகச் சிறப்பாகாக் கவிதை பாடினீர்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைஃகு சிறுவர் பாடல் என அனைத்துத் துறையிலும் பாடினீரகள். அதில் மூவருக்கு பரிசுத் தொகையை என்னை வழங்கப் பணித்தீர்கள். பெறாத பெருமக்களும் அடுத்த நிகழ்வில் பரிசு பெறும் கவிதை வழங்கிய பெருமக்களே என வாழ்த்தி மகிழ்கிறேன். தங்களின் கவிதைகளையும் தமிழ்ப்பணியில் வெளியிடுவேன்.

ஐயா ஆண்டியப்பன் அவர்களின் நூலினைப் படித்து மகிழ்ந்தேன். நூலைப் படித்தால் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் மூன்று நாட்டு வரலாற்றை தம் வாழ்க்கையோடு இணைத்து நமக்குத் தந்துள்ளார் . வளரும் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.

அருமைத்தலைவர் ஆண்டியப்பன் அவர்கள் எனது வெளிநாட்டுப் பயணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றப் பணித்துள்ளார்கள். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது சிங்கைதான். தமிழுக்கு அனைத்து வகையிலும் தமிழுக்கு முதண்மை தந்துள்ள சிங்கைக்கு 1998 ஆம் ஆண்டு வருகை தந்தேன்.வானூர்தி நிலையமானாலும், தொடர்வண்டி நிலையமானாலும், பெருந்து நிலையமானாலும், மக்கள் கூடும் பகுதிகளிலும் அழகு தமிழ் எழுத்தும் ஒலிப்பும் என்னைக் கவர்ந்தவை. மற்ற நாடுகளுக்கு முன்னோடி அதற்கு வித்திட்ட தமிழவேள் கோ.சா அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். அதனைக் காத்துவரும் உங்களையும் வணங்குகிறேன்.

மலேசியா, தமிழர்கள் பரவி வாழும் தமிழ் உணர்வாளர்களின் களம்.உலகத்தமிழ் மாநாட்டிற்கே வித்திட்ட இடம். இன்றுவரை பல்வேறு மாநாடுகளை நடத்தி சாதனை படைத்தநாடு மலேசியாவிற்கு .தற்போது கூட பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு கோலாலம்பூரிலும், பெரியார் சிலை திறப்பு பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியிலும் நடைபெற்றது.மலேசியாவின் அனைத்து அமைச்சர்களும் பெருமக்களும் பங்கேற்றனர். மாநாட்டின் தமிழக ஒருங்கிணைப்பாளரகப் பொறுப்பேற்று பங்கு பெற்று தற்போது தங்கள் முன் நிற்கிறேன்.

இராசேந்திர சோழன் வென்ற கடாரம் கெடாவாக மலேசியாவில் உள்ளது. அங்கு 11 ஆம் நூற்றாண்டுக் கோயில் உள்ளது அதில் இந்து கோயில் என் பொறித்துள்ளார்கள் சோழன் வந்ததற்கான பதிவு அங்கில்லை. நாமெல்லாம் வரலாற்றை வரலாறாகப் பதிவு செய்யவேண்டும். நம் தலைமுறைக்காவது பதிய செய்ய வேண்டிய பொறுப்பு எழுத்தளார்களாகிய நமக்கு உண்டு. மலேசியாவில் பயணிப்பது தமிழகத்தில் பயணிப்பது போன்றே தோன்றும். மலேசியாவின் 3 தினஇதழ்களும் தமிழகச் செய்திகளையும் தமிழக எழுத்தாளர்களின் செய்திகளையும் வெளியிடுவதில் முதன்மை அவர்களுக்கே. 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழி நம் மாணவர்கள் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பங்கேற்று மகிழ்ந்திருக்கின்றேன்.மலேசியத் திருநாடு அன்று பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் தமிழர்கள் மலேசியாவில் வாழ்கிறார்கள் என்பது இன்றும் உண்மை.

எங்களது பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாடு 6 நடத்தியுள்ளோம் அதில் மூன்று வெளிநாடுகளில் நடத்தியுள்ளோம். 3ஆம் மாநாடு செருமணி பெர்லினில் நடத்தினோம் அதில் முத்தமிழ்க்காவலர், கி.ஆ.பே.வி, நீதியரசர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன்,பெரியார் பெருரையாளர் இறையன் போன்ற 50 பெருமக்கள்பங்கேற்றனர். குறிப்பிட்ட்டுள்ள நால்வரும் தற்போது இல்லை. 50 பெருமக்களும் 50 ஈழக் குடும்பங்களில் தங்கி மாநாட்டில்பங்கேற்றனர் இன்றும் பங்கேற்ற பெருமக்களோடு தமிழ்கத் தொடர்பு தொடர்கிறது.

1999 ஆன் ஆண்டு தாய்லாந்தில் பாங்க்காக் நகரில் மூன்றாம் மாநாடு நடத்தினோம் இலங்கை அமைச்சர் பெரியவர் தொண்டைமாண் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தமிழகத்திலிருந்து 100 பெருமக்களும் மலேசியவிலிருந்து 40 பெருமக்களும் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்றனர். உலகத்தமிழர்களை ஒரு குடைக்கீழ் அமர்த்திய மாநாடு. அதற்கு அருமைத் தந்தையார் அவருகளும் யானும் ஏற்ற சோதனைகள் ஏராளம்.விரிக்கின் பெருகும்.

2006ஆம் ஆண்ட்டு மலேசியா கோலாலம்பூர் நகரில் மலேயாப் பல்கலைக் கழகத்தில் 6 ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். மலேசியா அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மலேசிய தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு அவர்கள் பிரதமர் துறையின் அமைச்சர் பங்கேற்றது நினைவில் நிழலாடுகிறது. தமிழகத்திலிருந்து 70 பெருமக்கள் பங்கேற்றனர். சிங்கையிலிருந்தும் உலக நாடுகளில்ருந்தும் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர் அதுபோதுதான் அனைத்துப் பெருமக்களையும் சோழன் வென்ற கடாரம் பகுதிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தோம்.

ஐரோப்பாவில் இலண்டன், ப்ரான்சு,செருமணி, சுவிட்சர்லாந்து நாடுளில் தமிழர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன் நேரம் கருதி விரிக்க இயலாது. ஒமன், கத்தார், அபுதாபி,சப்பான், அமெரிக்கா,கனடாபோன்ற நாடுகளில் பயணித்திருகிறேன்.

ஐரோப்பிய நாடுகளிலும் கண்டாவிலும் ஈழத்தமிழர்கள் வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை நாட்டியம் நடனம் என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். விடுதலை வேட்கையில் எள்ளளவும் குறையா வண்ணம் ஈழமே குறிக்கோளாய்க் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் நம்மவர்கள் செல்வச்செழிப்பில் உள்ளனர். அமெரிக்காவின் அனைத்து சங்கங்களும் இணைந்து பெட்னா என்ற அமைப்பை நிறுவி மாநாடுகள் நடத்துகின்றனர். பெரும்பாலான சங்கங்கள் பத்த்ரிக்ககைகள் நடத்தி தமிழை நாட்டியத்தை வளர்க்கின்றனர்.

மியான்மரில் தமிழர்கள் எல்லா நிலையிலும் மேலோங்கி உள்ளனர். அங்கு உள்ள கோயில்களெல்லாம் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் போல் புதுப்பித்துள்ளனர். தமிழ் படிப்பதற்கு எந்த வாய்ப்பும் வசதியும் இன்றி உள்ளனர். அறிஞர் மு.வ. பிறகு எழுத்தாளர்களே அங்கு உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.தமிழ்த் தொலைக்காட்சிகள் தெரிந்தாலும் இருக்கும் தமிழையே கெடுகின்றது என் வறுந்தினர்.

உலகெங்கும் வாழும் நம்மவர்கள் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றனர். திரைப்படம் பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. மாநாடு நடத்துபவர்கள்கூட திரைப்பட சார்ந்தவர்களுக்க்கே முத்ன்மை வழங்குகின்றனர். மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடுபட்டவர்களை இனம் காண்பதில்லை.குறைந்த அளவு இலக்கிய அமைப்பு நடத்தும் எம்மைப் போன்றவர்களிடம் கருத்தும் கேட்பதில்லை. தமிழ்கத்தில் தமிழுக்காகப் போராடும் பெருமக்களை அழைத்து அறிந்தால்தான் நம் மொழி நம் மேன்மையுறும்.
மிகக் குறுகிய காலத்தில் எனது வருகையைக் கூறியவுடன் நிகழ்வை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் அவர்கட்கும்,செயாலாளர் அருணாச்சலம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கள் கவிஞரேறு அமலதாசன், தமிழாசிரியர் சிவசாமி, புரவலர் நாகை தங்கராசு கவிதைபாடிய கவிஞர் பெருமக்கள் மற்றும் அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment