Wednesday, February 29, 2012
மலேசியா கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை
[7-2-2012 அன்று கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில்கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு நடந்ததமிழ் தமிழர் சிந்தனை கலந்துரையாடலின்போது கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரின் உரை]
கிள்ளானில் உலக்த் தமிழ்ப்பண்பாடு இயட்க்கத்தின் சார்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை சந்திப்பு. நடைபெற்றது..தலைவர் ப.கு.சண்முகம் அவர்களும் அறிஞர் முரசு நெடுமாறன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.கிள்ளான் நகர தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்றனர்.
முரசு நெடுமாறன் அவர்கள் தமிழகத்தில் தமிழ் ஆண்டு எடுத்துள்ளார்கள். தமிழகமே கொதித்து எழுந்திருக்க வேண்டாமா அங்கு தமிழ் அறிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற மன் வேதனையைத் தெருவித்தார்.
தமிழக மக்கள் மாற்றம் எனக் கூறி மக்கள் வழங்கிய தீர்ப்பே இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்றேன்,எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத்தந்தையார் அவர்கள் தலைமையில் பிப்ரவர் 12 முதல் 23 வரை தமிழாண்டை மீண்டும் கொணர்ந்திட ஊர்திப் பயணமாக ஊர்தோறும் தெருமுனைக்கூட்டங்கள் தமிழ் ஆர்வலர்கள் எழுச்சியை ஏற்படும் வண்ணம் அமைத்துள்ளோம். தமிழ்ப்பணியில் வெளியிட்ட அடவணையையும் காண்பித்தேன்.
கலைஞர் தொலைக்காட்சியில் சிற்ப்புச் செய்தியாளர் தம்பி ராசா அவர்கள் என்னைப் பேட்டி கண்டார்கள். தமிழ் ஆண்டை இந்த அரசு எடுத்ததற்கு உலகத் தமிழினமே வெட்கித் தலைகுனிகிறது எனக் கூறினேன். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் மலேசியத் தமிழர்களாகிய தாங்கள் கடுமையாகச் சாடியுள்ளீர்கள். இதை தமிழ்கம் முழுமையும் பப்புவோம்
மலேசியாவைச் சார்ந்தவர்களுக்கு எந்தப் பரிசும் வழங்குவதில்லை இதை தமிழகம் நடைமுறைப் படுத்தவேண்டும் என தலைவர் ப கு சண்முகம் வினவினார்.
அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கே தமிழக அரசு பரிசு வழங்கியுள்ளதை நினைவில் கொள்ளவேண்டுகிறேன் . செம்மொழி மாநாட்டின்போது உலகம் முழுமையும் உள்ள தமிழ் அறிஞர்களை கலைஞர் அரசு அழத்ததையும் வெளிநாட்டு அறிஞர்களுக்கே செம்மொழி விருது வழங்கியதையும் குற்ப்பிட்டேன். தமிழுக்கு ஆற்றிய ஒப்பற்ற செயல்களைப் போற்ற வேண்டும் அவ்வாறு நாம் போற்றாத்த போது செய்திகள் திரிக்கப்படுகின்றன. செய்திகள் திரிக்கப்படும்போது நாம் தமிழ் ஆட்சியை இழக்கிறொம் என்பதை நினைவிகொள்ள வேண்டும்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். திரளாகப் பங்கேற்று. மலேசிய மக்கள் மிகச் சிறப்பாக நடத்தினீரகள். இந்தத் தருணத்தில் மலேசிய மக்களுக்கும் அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இலண்டனிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சுடான்லி செயராசு குடும்பதினருக்கு என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். பெருமகன் ஈழ மக்கள் இலண்டனில் பணியாற்றும் வேகத்தைக் கூறினார். அவர்களோடு இணைந்து உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழ விடுத்லைக்குப் பாடுபடுவோம்.
இறுதியாக செயராசு அவர்கள் சிறந்த பாடகர் என நிருபித்துள்ளார். ஐயா சண்முகம் அவர்கள் சந்திரபாபு பாடலை வேண்டியவுடன் பம்பரக் கண்ணாலே பாடலைப் மிகச் சிறப்பாகப் பாடி இலண்டனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பெருமனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
அரும்பாடுபட்டு இந் நிகழ்வை அமைத்த தலைவர் ப.கு. சண்முகம் அவர்கட்கும், அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கும். இங்கு என்னை அழைத்து வந்த கவிஞர். கோ.வி. பெருமாள் அவர்கட்கும் கலந்து கொண்ட பெருமக்கட்கும் எனது நன்றி கூறி விடைபெறுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment