Sunday, February 26, 2012

மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் பகுதியில் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை




(1-2-2012 அன்று மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் பகுதியில் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை)

மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடபெறும் தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன். மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூரில் எழுத்தாண்மைஏந்தல் முனைவர் பெரு.அ. தமிழ்மணி நடத்திய பகுத்தறிவு மாநாட்டிற்கும் பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலை திறப்பு நிகழ்விலும் பங்கேற்றும் தமிழகப் பேராளர்களின் ஒருங்கிணப்பாளராகவும் பொறுப்பேற்று 40 பெருமக்களை தமிழகத்திலிருந்து அழைத்துவந்தும் இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பதில் பேருவகையடைகின்றேன்.

மாநாட்டின் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களும் மாநாட்டின் இளைஞர் அணித்தலைவர் அன்புவாணன் அவர்களும் கப்பளா பத்தாசிலிருந்து எங்களை தாப்பா நகருக்கு அழைத்துச் சென்று அருகில் உள்ள பகுதிகளுக்கும் குறிப்பாக தாப்பா தமிழ்ப்பள்ளிக்கும் அழைத்துச் சென்று இன்று இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்து எங்களை விசயன் அரவணைப்பில் உலா வரச் செய்துள்ளார்கள் அப் பெருமக்களுக்கு உங்களின் சார்பாக நன்றியைத் தெருவித்துக்கொள்கிறேன். உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பொறுபேற்று மலேசியாவில் வெற்றிகரமான் மாநாடு நடத்திய் ப.கு.சண்முகம் அவர்கள், இந்நிகழ்வு சிறப்புடன் நடக்க பெரும்பங்காற்றிய ம.இ.க.பெருமக்கள் எதிர்க்கட்சிப் பெருமக்கள் இங்கே வருகை தந்துள்ளனர். இங்கே வருகை தந்திருக்கும் ஒளவை, கண்ணகி, திருவள்ளுவர்,பாரதியார் உருவில் உள்ள சிறுவர்கள் திருக்குறள் பாடி இங்கே அமர்ந்துள்ள மாணவச் செல்வங்கள், மாணவச் செல்வங்களை வளர்த்துள்ள பெற்றோர்கள் எம்மோடு வருகை தந்து உரையாற்றியுள்ள புரட்சி இயக்குநர் வேலு பிராபாகன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இளம் சேக்குவரா, செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி அனைவர்க்கும் என் கரம் குவிந்த வணகத்தைத் தெருவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் பாடிய நம் செல்வங்கள் மிகச்சிறப்பாகப் பாடினார்கள். அவர்களை வழி நடத்தும் விசயன் அர்களின் சகோதரி திருக்குறள் வகுப்புக்கு பெற்றோர்கள் அனைவரும் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்தார். பெருமக்களே தமிழர்கள் திருக்குறளை மறந்த காரணத்தினாலேயே நம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளானோம். திருக்குறள் வழி அருமைச் சகோதரி நம் குழந்தைகளை சான்றோராக தன்மானத் தலைவர்களாக உருவாக்குகிறார் என்பதறிந்து இறும்பூதெய்துகின்றேன்.

தன்மானத் தந்தை பெரியார் அவர்களின் திரூஉருவச்சிலையை அவர்கள் கால்பதித்த பினாங்கு மாநிலத்தில் நிறுவியுள்ளீர்கள். அந்தப் பெருமகன் இல்லையென்றால் தமிழகத்தில் நாம் புறம் தள்ளப்பட்டு கைக்கூலிகளாக இன்னும் இடுப்பில் துண்டையும் செருப்பைக் கையிலும் தூக்கிக் கொண்டு அடிமைகளாகவே இருந்திருப்போம். செலவந்தக் குடும்பத்தில் பிறந்த பெரியார் அவர்கள் அனைத்தையும் துறந்து ஆட்சி அதிகாரத்திற்கு அப்பால் மக்களுக்காவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக மறவர். அப்பெருமகனுக்கு மலேசிய மக்கள் காட்டிய நன்றியே கோலாலம்பூர் மாநாடும் பினாங்கு சிலைதிறப்பும்.

நான் பன் முறை மலேசியா வந்திருந்தாலும் இப் பகுதிக்கு தற்போதுதான் வந்துள்ளேன். தங்களின் ஆர்வமும் அன்புப் பெருக்கும் எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது. தமிழ்ச் சான்றோர்களின் வேடத்தில் வந்த பிள்ளைகளெல்லாம் அப் பெருமக்கள் வழங்கிய சிந்தனைகளை நினைவில் கொள்ளுங்கள். அதன் படி வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

விசயன் அவர்கள் தம்முடைய நண்பர் இலக்குமணன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். இலக்குமணன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தாம் வங்கிக்கு காசோலை தமிழில் எழுதி இருந்ததால் அதை திருப்விட்டதாகவும், இச் செய்தியை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பெரும் பரபரப்பை உண்டாக்கி பின் வங்கித் தலைமையே அவரிடம் பேசி தற்போதுவரை தமிழிலேயே காசோலை வழங்கிய வருகிறார். இந்தப் போராட்ட குணம் தமிழர்களுக்கு வர வேண்டும். இந்த சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் இலக்கிய உணர்வும் தமிழ் வேட்கையும் உள்ள பகுதியாக உணர்கிறேன்.

விசயன் அவர்கள் பாரதியார் தமிழ்ப் பள்ளிக்கும் தோட்டப் புறம் உள்ள தமிழ்ப் பள்ளிக்கும் அழைத்துச் சென்றார். உண்மையிலேயே பள்ளி மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப் பட்டு நம் தமிழ்ச் செல்வங்கள் அருமையாக தமிழ் பயில் கின்றனர். வெல்லத் தமிழ் என்றும் வாழும் என்பதை இப் பள்ளிகளைக் காணும்போது உணர்க்கிறேன்.

இங்கிருந்து 20 கல் தொலைவில் உள்ள பேராறு தாப்பா ஆறும் கடலில் முக்கோணமாக சங்கமிக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார் விசயன். புரட்சி இயக்குநர் வேலு பிராபாகரன் தமது படத்திற்கு காட்சி எடுக்கும் அளவிற்கு எழில் கொஞ்சும் அழகு.

திருமிகு இரஞ்சன் அவர்கள தமிழ் குழுவோடு எம்மோடு பேசும்போது ஈழத்தில் நடந்த கொடுரத்தையும் கையாலாகாத நிலையில் நாம் இருந்ததையும் உணர்சிபொங்கக் குறிப்பிட்டார்.

இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் தமிழர்களிடம் அத்துணை உணர்வுகளும் இப்பகுதியில் மேலோங்கி உள்ளது.

அருமைசான்ற பெருமக்களே ஐயன் திருவள்ளுவர் வாய் மொழி நெறியையும், தந்தை பெரியாரின் சம்த்துவக் கோட்பாட்டையும் நாம் ஒழுகி நடந்தோமானால் நம்மை யாரும் வீழ்த்தமுடியாது என்று கூறி விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment