Wednesday, November 15, 2023

 


நேசமிலா இசுரேல் எங்குமே  

நெடுக பிணமாய் எண்ணுதே

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

குண்டு மழைகள் பொழிவதா

குவலயம் அமைதி காப்பதா

கண்டும் காணா மனிதமே

 கடமை உடைமை இழப்பதா 

 உண்டு உறங்கும் வாழ்விதா 

உரிமை பறித்தல் நியாயமா 

மண்டும் உலக மாண்பினை

 மண்ணில் புதைக்தல் அடுக்குமா 


அமாசு தொடுத்த அழிவுமே 

அடுத்த இசுரேல் வேகமும் 

எமனாய் மக்கள் உயிரையே

 எங்கும் ஒழிக்கும் போரிதே 

விமானம் குண்டுகள் போடுதே 

விரிவான் போர்க்களம் ஆனதே

 சமரசம் காணாஅ மெரிக்கா 

சதிவலை பிண்ணி அழிக்குதே 


மதத்தின் பெயரால் மக்களை

 மண்ணில் பிரித்தல் அவலமே

 குதர்க்க பிரிட்டன் ஆளுமை 

குழப்பிப் பிரித்த சூழ்ச்சியே

 எதற்கும் அஞ்சா வேகமாய்

 எதிரெதிர் துருவம் ஆனதே

  பதறியே மக்கள் அகதியாய் 

பரவியே எங்கும் மாய்வதோ


காசா மருத்துவ மனையிலே

 கொடுமைக் குண்டு விழுந்ததே 

 நேசமிலா இசுரேல் எங்குமே  

நெடுக பிணமாய் எண்ணுதே

 யாசர் அரபாத் ஈகமும்

 இந்திய கனிவுப் போக்குமே

 இணைந்தே செல்லும் வழியிலே 

இனிமைத் தீர்வு காண்கவே


Sunday, November 12, 2023

 தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேது 18ஆம் ஆண்டு நினைவு பொற்கிழி வழங்கு விழா

தமிழ்மாமணி வா,மு,சே,திருவள்ளுவர்


(11-11-2023அன்று அன்னை சேதுவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பாக 19 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கி  பொற்கிழி வழங்கிபோது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை. )

இன்று எங்கள்  அன்னை சேதுவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பாக 19 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கி  பொற்கிழி வழங்கி மகிழ்கிறோம்.6-11-2023 அன்று  ஆண்ட நாயகபுரம்  உள்ள எங்கள் அன்னையின் நினைவிட த்தில் உரையாற்றிய அபிராம ம் மேனாள ஊராட்சி மன்றத் தலைவர் மருத்துவர் குமணன் பேசும்போது  கடந்த 18 ஆண்டுகளாக அன்னையின் நினைவிட த்திற்கு வருகை த்ந்து கொண்டிருக்கிறேன் பெருங்கவிக்கோ நூற்றாண்டு காணவேண்டும் அம்மா நினவேந்தலுக்கு நாமெல்லாம் வருவோமென்று  நெகிழ்ச்சியுடன் கூறினார். உலமெல்ளாம் அளந்த தந்தையார் பெருங்கவிக்கோ தம் சிந்தையில் தோன்றிய  பெருமக்களுக்கு திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் திருக்கரத்தால் வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கும்    பேராசிரியர் மகாலிங்கம் காஞ்சி மணிமொழியார் குடித் தோன்றல் தொடக்க உரை ஆற்றும் எனது ஆசான் பேராசிரியர் இ.செ.சுந்தர் வாழ்த்துக் கவிதை வழங்கும் கவிச்சிங்கம் கண்மதியன் வருகைதந்துள்ள பெருமக்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன். விருது பெருமக்களை அறிமுகப் படுத்துவதில் பேருவகை கொள்கிறேன்.

முதுபெரும் புலவர் வே.பதுமனார் 

புலவர் பதுமானார் 2-41936ஆம் ஆண்டு வேலூர் குடியேற்றம் பகுதியில் பிறந்து அரும்பணியாற்றி வருபவர். 33ஆண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றியவர். பல்வேறு குழுக்களில் பங்கேற்று மிகச்சிறந்த மலர்களை உருவாக்கியவர். வானொலி  தொலைக் காட்சிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர். மலேசியா சிங்கப்பூர் இலங்கை தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். தமிழியக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்று அளப்பரிய தொண்டாற்றும் புலவர் பெருமகன். தமிழ்ப்பணியில் சிறந்த ஆய்வியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

கவிஞர் சுரதா கல்லாடன்

உவமைக் கவிஞர் சுராதாவின் திருமகன் கல்லாடன். தந்தையைப் போன்று சிறந்த கவிஞர். தந்தை வழி தொண்டாற்றும் தமிழ்ப்பணித் தொண்டர். பாவேந்தர் பாரதிதாசன் கவிதைக்கள் முழுமையும் தொகுத்து வெளியீடு செய்த  சாதனையாளர். தந்தை தொடங்கிய உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையை சிறப்பாக நட த்தி வருபவர். அண்மையில் பேரவையின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்புடன நட த்தி அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். தந்தை சிலையை சென்னையில் கலைஞர் திருக்கரத்தால் திறந்துவைத்து அழியாப் புகழை உருவாக்க்கிய திருமகன் கவிஞர் சுரதா கல்லாடன்.

தமிழ்த்திரு சாய் இரவிச்சந்திரன்

உலகெங்கும் ஆன்மீகம் பரப்பும் அருளாளர். சாய் திருக்கோயில்கள் வழி உணவு வழங்கும் அறப் பணியை திறம்பட செய்து வருபவர். மலேசியாவில் ஆசிரியமணி மாணிக்கம் நட த்தும் பாரதியார் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் சென்று அரும்பணியாற்றுபவர். உலக்த் தமிழ் மாநாடுகளில் பங்கேற்ற பெருமைகுரியவர். உணவை வீணாக்க கூடாது என முழங்கி ஏழைகளுக்கு வழங்கும் பசிப்பிணி மருத்துவர் சாய் இரவிசந்திரன். தமிழ்வழியே வழிபாடுகளை நட த்தும் தமிழ் நெறித்த்தொண்டர்.

பெருங்கவிஞர் இளமாறன் 

புரட்சி கவிஞர் புகழ் பரப்பும் அருந்தமிழ்க்கவிஞர். பாவேந்தர் பாசறை அமைப்பை  நிறுவி தொடர்ந்து பாவேந்தர் நிகழ்வு நட த்தி வரும் சாதனையாளர். முகம் இதழ் வழி அருந்தமிழ்த் தொண்டாற்றும் இதழாளர். தம் இல்லத் திருமணவிழாவில் சிற்றிதழ் நட த்தும் இதழாளர்களுக்கு 75 பெருமக்களுக்கு தொகை வழங்கிய புரவலர் பெருமகன். மிகச் சிறந்த மரபுப் பாவலர். பன்னூல்களைப் படைத்த பெருமைக்குரியவர். 

 வழக்கறிஞர் தி.ச.சிவகுமார்

திராவிட இயக்கத்தைச் சார்ந்த பெருமகன் . தம் தந்தை திராவிட முன்னேற்றக் கழத்தின் பொறுப்பாளராக பணியாற்றதை பெருமைபட கூறும் சிந்தனையாளர். வறியோருக்கு வழங்கும் புரவலர் பெரும்கன். உயர் நீதி மன்ற வழக்கறிஞராக அரும்பணியாற்றி வருகிறார். 

கவிஞர் முருகையன் 

திருவாரூர் மாவட்ட த்தில் 1-7- 1941 ஆம் ஆண்டு பிறந்தவர் சென்னைத் துறைமுகத்தில் நிருவாக அலுவலராகப் பணியாற்றிவர். சட்டமன்ற  உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம் அவர்களால் ஈர்க்கப்பட்டு ஏற்றம் பெற்றவர். தி.மு.க இலக்கிய அணியின் உறுப்பினர். கலைஞர் விருது பெற்றவர். பாவேந்தர் பாசறை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கவிக்கொண்டல்  போன்ற அமைப்புகளில் பங்கேற்று அரும்பணி ஆற்றி வருபவர். மிகச் சிறந்த மரப்புப் பாவலர் அந்த நினைவுகள் யாழிசை போன்ற நூல்களைப் படைத்துள்ளார். நான் மலேசியா ப்ன்னாட்டுப் பகுத்தறிவும் மநாட்டின் அயலக் குழுத் தலைவராக  இருந்தபோது மலேசியா பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்று பகுத்தறிவுச் சிந்தைனையை உலகெங்கும் பரப்பியவர்.  மலேசிய சிங்கப்பூர நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். 

புலவர் குடியாத்தம் குமணன்

புலவர் குடியாத்தம் குமணன் நாடறிந்த பட்டிமன்றப் பேச்சாளர். கோவையில் தமிழாசிரியாகப் பணியாற்றிய இலக்கணப் புலவர். மரபுக் கவிதை நூல் வெளியிட்டு தமிழுக்கு அணி சேர்த்தவர். நான் மலேசியா ப்ன்னாட்டுப் பகுத்தறிவும் மநாட்டின் அயலக் குழுத் தலைவராக  இருந்தபோது பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்று பகுத்தறிவுச் சிந்தைனையை உலகெங்கும் பரப்பியவர்.  மலேசிய சிங்கப்பூர நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். மிகச் சிறந்த திராவிட இயக்கச் சிந்த்னையாளர் சூம் இணைய வழி நாள்தோறும் உரையாற்றும் நாவுக்கரசர்.

திருக்குறள்தொண்டர் வை.மா.குமார்

திருவள்ளுவர் கழகம் அமைத்து சென்னையில் பெரும்விழாக்கள் நட த்தும் சாதனையாளர். கவியரங்கம் பட்டிமன்றம் விருது வழங்கல் என தொடர்ந்து சலிப்பின்றி நட த்தும் சாதனை சிகரம்.

கவிஞர் எழில்வேந்தன் 

மிகச் சிறந்த பன்மொழிக் கவிஞர் பல்வேறு கவிதை அமைப்புகளில் பங்கேற்று கவிதை வழங்கியவர். இந்திய மொழிகள் பலவற்றில் இவர் கவிதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.1995 ஆம் ஆண்டு தில்லியில்  குடியரசு தினக் கவியரங்கில் பங்கேற்றார். இந்திய மொழிகள் உலக மொழிகளிலும்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

மகளிர் மாமணி பாலமீரா 

பேராயாக் கட்சியில் தொண்டாற்றி தற்போது வாசன் அவர்களின் வழியில் தொண்டாற்றும் பெருமாட்டி. தம் வாழ்க்கையை பொது வாழ்க்கைக்கௌ அர்ப்பணித்த மகளிர் மாமணி.

தமிழ்நடைச்செம்மல் சிவசாமி

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தி தாராபுரம் கிளையின் பொறுப்பாளார். தந்தையார் தலைமியில் தமிழூர்த்திப் பயணத்தில் அருந்தமிழ்த் தொண்டராக வந்தவர்.  

 பாவாணர் கோட்டம் இளங்கண்ணன்

முறம்பு பாவாணர் கோட்ட த்தின் பொறுப்பாளர். மிகச் சிறந்த பேச்சாளார். பாவாணர் கொள்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அளப்பரிய தொண்டாற்றும் தனித்தமிழ் அன்பர். அன்னை சேது அருள்மங்கல் விழாவில் சிறந்த உரையாற்றிய செந்தமிழ்ச்செல்வர்.

ஈரோடு கவிஞர் இளையகோபால் 

திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு தெற்கு மாவட்ட  தி.மு.க. அமைப்பாளர்.  தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டில் தமிழ்ப்பணிச்செம்மல் என்ற விருதினைப் பெற்ற உலகளாவிய பெருமக்களில் இவரும் ஒருவர். முகநூலில் சிறந்த கவிதைகளைப் படைக்கும் படைப்பாளர்.  பல்வேறு அமைப்புகளில் அமைப்புகளில் பட்டங்கள் பெற்ற பெருமைக்குரியவர். மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர். ஈரோட்டில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கலைஞர் நூற்றாண்டுவிழாக் கவியரங்கின் அமைப்பாளர். ஈரோடு திராவிடர் கழகத்தின் பொறுப்பாளரிகளில் ஒருவர்.

நற்றமிழ்த்தொண்டர் அ.சி.சின்னப்பாத்தமிழர்  

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நற்றமிழைப் பரப்பிவரும் தொண்டர் செம்மல். எண்னிலடங்கா தமிழ் வளர்க்கும் நூல்களை வெளியிட்டு மக்களைச் சென்றடைய அயராது பாடுபடும் படைப்பாளார். மானம் கருதாது தமிழுக்காக உழைத்துவரும் ஒப்பற்ற மாவீர ர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் தில்லியில்  நட த்திய செம்மொழிப் போராட்ட த்தில் பக்கேற்ற தமிழ்ப்போராளி.

முனைவர் சபீராபீவி அல்மீன்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அளப்பரிய தொண்டாற்றும் தொண்டறச் செல்வி முனைவர் சபிரா பேகம் அல் அமீன். சமூக அவலங்களை துடைத்தெறிய எளிய மக்களின் காவலரக செயல்படும் பெருமாட்டி. தமிழ்ப்பணி  பொன்விழா ஆண்டில் தமிழ்ப்பணிச்செம்மல் என்ற விருதினைப் பெற்ற உலகளாவிய பெருமக்களில் இவரும் ஒருவர். மதுரையில் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று சிறந்த தமிழ்த்தொண்டாற்றும் மகளிர் திலகம். மூன்று முறை தலாக் செய்யப்பட்ட பெண்ணை வாழவைத்து மக்களை அவர்களோடு இணைத்த மனிதநேயச் செம்மல். 

 பட த்துறைப்பாவலர் நல்ல அறிவழகன்

முனைவர் பட்டம் வரை பயின்று பட்டம் பெற்ற கல்வியாளர்.  தொடக்கப் பள்ளி  மேல்நிலைப்பள்ளி கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர் செம்மல். திரைப்பட த் துறையில் பல படங்களில் திரைப்படப் பாடல்களை யாத்து இன்றும் முயற்சித் திலகமாக இருப்பவர். மெய்யழகி திரைப்பட த்தில் இவரது பாடலை எசு.பி. பாலசுப்பிரமணிய்ம் பாடியுள்ளார் என்பது தனிச்சிறப்பு. மலேசியா சென்று தம் நூல்களையும் குறுந்தகடையும் வெளியிட்ட பெருமைக்குரியவர். பல்வேறு பட்டங்களைப் பெற்ற சாதனைச் செம்மல்.

 மாட்சியர் இரா.மோகன சுந்தரம் 

மிகச் சிறந்த பேச்சாளர். ஆற்றல் மிகுந்த ஆய்வுக் கட்டுரைகளை  வழ்ங்கும் ஆய்வுச் செம்மல். தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தில் பணியாற்றிய ஆய்வறிஞர்

இதழாளர் வேலன் தளபதி.

முற்றம் இதழின் ஆசிரியர். ஊடகத் துறையில் அயராது பாடுபட்டு வரும் ஊடகச் செம்மல். பல்வேறு அறிஞர் பெருமக்களை தம் ஊடகம் மூலம் பதிவெடுத்து உலகெங்கும் பரப்பும் தொண்டறச் செம்மல் . 

தமிழ்த் தொண்டர் பூபாளன்

பூபாளன் சென்னையில் எந்த நிகழ்விலும் கலந்து கொண்டு பெருந்தொண்டாற்றும் பெருமகன். நலிந்த குழந்தைகுளுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து அறப்பணியாற்றும் தொண்டறச் செம்மல். எளியோர் நலம் பேணும் சமூகப் புரட்சியாளாரக வலம் வருகிறார்.