Tuesday, January 28, 2014

மலேசியாவில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை

(22-12-2013 அன்றுமலேசியாவில் ப்சிலாங்கூர் கிளப்பில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

     மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வோரு அமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள பெருமக்கள் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். இந்நிகழ்வை பெரும் பொறுப்பேற்று நடத்தும்  மணிவிழா நாயகர் விக்டர் சுப்பையா அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பெருங்கொடை. நானும் என் தந்தையரும் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாட்டை நடத்தத் தத்தளித்தபோது எம்மோடு இருந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருமகன். இப்பெருமகனை அறிமுகப் படுத்தி எங்களின் மன்றப் பணிகளுக்கு முதுகெலும்பாக செயல்படும் அண்ணன் டாக்டர் தருமலிங்கம் கொள்கிறேன்.

        மணிவிழாக் கண் ட நம் தலைவர் விக்டர் சுப்பையா அவர்கட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் உங்கள் கரவொலிகளுக்கிடையில் மாலையணிவித்து போர்த்தி மகிழ்ச்சியை தெருவித்துக் கொள்கிறேன்

இந்த நிகழ்வை  நடைபெற அரும்பாடுபட்ட அண்ணன் தருமலிங்கம் அவர்களின் பேருழைப்பை நேரில் கண்டவன். இந்நிகழ்வை பெரும் பொருளீந்து இந்த வெற்றிகரமாக நடத்தும் டாக்டர் சுப்பையா அவர்களும் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர்கள். அருமைப் பெருமக்கள இராசாரத்தினம் ஐயா பெருமாள் மற்றும்  அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

தேர்தலை மிகச் சிறப்பாக நடத்திய தேர்தல் குழுத்தலைவர் இராமநாயகம் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கம்.  பொறுப்பேற்றுள்ள பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைப்புப் பேரவையை வழுப்படுத்தி தமிழ்மக்களின் வறுமையை நீக்கி தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் உருவாக்குங்கள் என்ற வேட்கையை தங்களிடம் பதிவு செய்கிறேன். பல்வேறு சங்கங்களைச் சார்ந்த உணர்வாளர்களைக் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன் இதுவல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை.

இந்நிகழ்வில் என்னுடைய யாதும் ஊரே நூலை அறிமுகம் செய்த ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.. மிகச் சிறப்பாக உலகமெங்கும் நான் கண்ட பெருமக்களையும் அவர்களின் அரிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டார்கள். ஒருங்கிணைந்த தமிழ் இயக்கங்களின் பேரவை சார்பில்  இந்நூல் வெளியிடுவது யாம் பெற்ற பேறு. வள்ளுவப் பெருமானின் ஒருகுறளை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.


பகச்சொல்லி கேளிர் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

நம்மில் உள்ள நன்மைகளைக் கூறி அனைவரையும் ஒன்றுபடுத்துங்கள். தீமைகளைக் கூறி பிளவுபடாதீர்கள். நட்பைப் பெருக்கி தமிழர் சக்தியை ஒன்று படுத்தி காலத்தை வெல்வோம். நன்றி வணக்கம்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் நவரத்தினா குழுமமும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா


பன்னாட்டுத் தமிழுறவு  மன்றமும் நவரத்தினா குழுமமும் இணைந்து நடதும் மகாகவி பாரதி விழா தமிழர்கள் தமிழ் உணர்வை நிலைநாட்டும் விழா. இவ் விழாவிற்கு அரும் பாடுபட்டு பெருங்கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆசிரியமணி மாணிக்கம் அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். ஒராண்டு காலத் திட்டம்.  தமிழ்கத்திலிருந்து யாரை அழைத்து வருவது என சிந்தித்து 11 பெருமக்களை அழைத்து வந்துள்ளேன். அனைவரும் தமிழ் தமிழருக்காக பாடுபடும் இயக்கவாதிகள்.தமிழ் தமிழர் மேம்பாட்டுக்காக பாடுபடும் அருந்தமிழ்ச் சான்றோர்கள்.

மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீரெட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கு ஏற்ப தொண்டாற்றும் சிந்தனையாளர்கள்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்திற்கும் மலேசியாவிற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. 1977 ஆம் ஆண்டு  தமிழகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஆசிரியமணி மாணிக்கம் தலைமையில் இங்கே அமர்ந்திருக்கும் கமலாட்சி ஆறுமுகம் இணையர் இராமநாயகம், மற்றும் பெருமக்கள் பலர் 36 ஆண்டுகளுக்கு முன்பு இளமைப்[ பொலிவோடு வந்திருந்த்தனர். நான் அப்போது 18 வயது வாலிபன். இப்பெருமக்களையெல்லாம் வரவேற்று உறவாடிய சிந்தனைகளெல்லாம் நெஞ்சில் நிழாலாடுகின்றன.

தற்போது தமிழ்கத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து நம் உறவுகள் பெருகி பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பணி தழைத்தோங்குகிறது. சென்ற மாதம் இதே நட்சத்திர உணவகத்தில் தந்தையார் பெருங் கவிக்கோ அவர்கட்கு பேராக் மாநில தலைமையமைச்சர் 33ஆம் உலகக கவிஞர்கள் மாநாட்டில் உலகமாக் கவி வழங்கப்பட்டது. அதே மண்டபத்தில் மகாகவி பாரதி விழாவை நடத்தும் மாணிக்கம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மாண்பமை சாமிவேலு அவர்கள் உலகத்தமிழ்த் தலைவர்களில் தலைவர்களில் தலையானவர். இம் மாலேசியத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு வராலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளது. அவருடைய தொண்டறத்தையும் கொடையறத்தையும் போற்றி மகிழ்கிறேன். சாமிவேலரின் சார்பில் பங்கேற்றுள்ள முன்னாள் துணையமைச்சர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

மகாகவி பாரதி மனிதர்களை மட்டுமல்ல காக்கை குருவியையும் மற்ற அனைத்த உயிர்களையும் பாடிய பெருமான்.

காக்கை குருவி எங்கள் சாதி – நீள
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

இயற்கையையும்  சுதந்திர வேட்கையையும் பாடி களிப்புற்ற மகாகவி தமிழையும் தமிழர்களையும் வியந்து பாடியுள்ளார்.

 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியங்களையும் வள்ளுவர் கம்பர் இளங்கோ போற்றி தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார் மகாகவி
..
பன்னாட்டுத் தமிழுறவு மன்றமோ நாங்கள் நடத்தும் இதழோ தொய்வின்றி நடைபெறுவதோ தங்களைப் போன்ற பெருமக்களே அரவணைப்பே என்று கூறி பங்கேற்ற பெருமக்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி காலம் கருதி விடைபெறுகிறேன்.