Tuesday, January 28, 2014

மலேசியாவில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை

(22-12-2013 அன்றுமலேசியாவில் ப்சிலாங்கூர் கிளப்பில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

     மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வோரு அமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள பெருமக்கள் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். இந்நிகழ்வை பெரும் பொறுப்பேற்று நடத்தும்  மணிவிழா நாயகர் விக்டர் சுப்பையா அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பெருங்கொடை. நானும் என் தந்தையரும் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாட்டை நடத்தத் தத்தளித்தபோது எம்மோடு இருந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருமகன். இப்பெருமகனை அறிமுகப் படுத்தி எங்களின் மன்றப் பணிகளுக்கு முதுகெலும்பாக செயல்படும் அண்ணன் டாக்டர் தருமலிங்கம் கொள்கிறேன்.

        மணிவிழாக் கண் ட நம் தலைவர் விக்டர் சுப்பையா அவர்கட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் உங்கள் கரவொலிகளுக்கிடையில் மாலையணிவித்து போர்த்தி மகிழ்ச்சியை தெருவித்துக் கொள்கிறேன்

இந்த நிகழ்வை  நடைபெற அரும்பாடுபட்ட அண்ணன் தருமலிங்கம் அவர்களின் பேருழைப்பை நேரில் கண்டவன். இந்நிகழ்வை பெரும் பொருளீந்து இந்த வெற்றிகரமாக நடத்தும் டாக்டர் சுப்பையா அவர்களும் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர்கள். அருமைப் பெருமக்கள இராசாரத்தினம் ஐயா பெருமாள் மற்றும்  அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

தேர்தலை மிகச் சிறப்பாக நடத்திய தேர்தல் குழுத்தலைவர் இராமநாயகம் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கம்.  பொறுப்பேற்றுள்ள பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைப்புப் பேரவையை வழுப்படுத்தி தமிழ்மக்களின் வறுமையை நீக்கி தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் உருவாக்குங்கள் என்ற வேட்கையை தங்களிடம் பதிவு செய்கிறேன். பல்வேறு சங்கங்களைச் சார்ந்த உணர்வாளர்களைக் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன் இதுவல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை.

இந்நிகழ்வில் என்னுடைய யாதும் ஊரே நூலை அறிமுகம் செய்த ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.. மிகச் சிறப்பாக உலகமெங்கும் நான் கண்ட பெருமக்களையும் அவர்களின் அரிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டார்கள். ஒருங்கிணைந்த தமிழ் இயக்கங்களின் பேரவை சார்பில்  இந்நூல் வெளியிடுவது யாம் பெற்ற பேறு. வள்ளுவப் பெருமானின் ஒருகுறளை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.


பகச்சொல்லி கேளிர் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

நம்மில் உள்ள நன்மைகளைக் கூறி அனைவரையும் ஒன்றுபடுத்துங்கள். தீமைகளைக் கூறி பிளவுபடாதீர்கள். நட்பைப் பெருக்கி தமிழர் சக்தியை ஒன்று படுத்தி காலத்தை வெல்வோம். நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment