Wednesday, May 27, 2015

தென் ஆப்ரிக்காவில் தமிழ்


(4-4-2015 அன்றுதென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவின்போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதிய கவிதை)

பொருளறிய மண்விட்டே கடல்வழியைக் கொண்டே
புகழ்சுற்றம் புறக்கணித்தே ஆப்ரிக்கா சென்றார்
அருளறியா ஆங்கிலேயர் அடக்குமுறை ஏற்றே
அகதிகளாய் மொழியிழந்து உறவிழந்து உள்ளார்
கருவிழிபோல் பெயரங்கு தமிழிலேயே உண்டு
கற்பதெல்லாம் ஆங்கிலமே கருதுமொழி இல்லை
உருவினிலே தமிழர்களாய் உ;லகிடையே உள்ளார்
உன்னதமாம் தமிழ்மொழியே அவர்வாழ்வில் இல்லை

நூற்றாண்டின் மேலாய்நம் முன்னோர்கள் விட்ட
நுண்தமிழர் நலிவைத்தான் போக்கினோம் இன்றே!
கற்றபதற்கே இராமசாமி பல்கலையின் வேந்தர்
கருணைமிகு மிக்கிசெட்டி பெருவள்ளல் சேர்ந்தே
பொற்பதத்தால் தமிழன்னை காப்பதற்கு அங்கே
பூவுலகபண் பாட்டுடைய மாந்தரெலாம் கூட்டி
நற்றவத்தால் நாம்கண்டோம் பட்டமேற்பு விழாவும்
நாநிலத்தை வலம்வந்த பெருங்கவிக்கோ முன்னே!

நாற்பதின்மேல் தமிழ்ப்பட்டம் மண்மக்கள் பெற்றார்
நல்மோங்க தமிழ்த்தாயும் நாமகளாய் எழுவாள்
பொற்புடைய ஆப்ரிக்கா காந்திமகான் ஈகம்
புகழ்வானின் நினைவிடமும் நற்பெருமை செப்பும்
தற்பெருமை இல்லாநம் ஆப்ரிக்காத் தமிழர்
தவவலுவாம் தேவாரம் பாடிவளம் உள்ளார்
கற்பதுவும் தமிழதனை ஆங்கிலத்தின் வழியே
கலைக்கோயில் நம்பண்பை நாயகமாய்க் கொண்டார்!

எழுச்சிமிகு கலைகள்வழி பாட்டுவழிக் கூத்தும்
ஏற்றமிகு நம்டர்பன் நகர்த்தந்தை பேச்சும்
விழுதுகளாய் வாழுமுயிர் மிக்கிசெட்டி மக்கள்
விருந்தோம்பல் வியனாற்றல் அரவணைப்புப் பாங்கும்
தழுதழுத்து நெஞ்சம்விம்மி மிக்கிதந்த உரையும்
தவவலிமை பெற்றநம் வீறுபுகழ் தமிழர்
பழுதில்லா தமிழ்ப்பணியை பார்போற்ற நின்றோம்
பாசமுடன் உலகமெல்லாம் ஒன்றாகிக் காப்போம்!

Tuesday, May 26, 2015

சிங்கப்பூரின் தந்தை நாடு கட்டுவித்த நாயகன் லீக்குவான்யூ


(4-5-2015 அன்று புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் நடைபெற்ற விழாவில் அமரர் லீக்குவான்யூ பற்றி தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய தொடக்க உரை)

நிகழ்வுக்கு தலைமை தாங்கும் பெரியார் கொள்கைகளின் அரனாக வாழும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களே, வருகைதந்திருக்கும் கழகத்தின் முன்னோடிகள் கூத்தரசன் கயல் தினகரன்,தமிழ் வள்ளல் மாம்பலம் சந்திரசேகர் நண்மாறன் சாமிநாகப்பன் ஐயா இளம்வழுதியின் திருமகன் சூர்யா ஒய்.எம்.சி.எ. பட்டிமன்றச் செயலர் பக்தவதசலம் மற்றும் சான்றோர் பெருமக்களே.. நாடுகட்டுவித்த நாயகர் பற்றி தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தஞ்சை கூத்தரசன் உரையாற்ற உள்ளார்கள். இலககிய அறிவும் இயக்க அறிவும் தொண்டாற்றும் அஞசா நெஞ்சமும் கொண்ட அவர்களே அனைவர்க்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். என்னை தொடக்க உரையாற்றப் பணித்துள்ளார்கள் யான் லீகுவான்யூ இறந்த உடன் தமிழ்ப்பணியில் எழுத வேண்டும் என என் உள்ளம் அவாவியபோது அழைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன

சிங்கப்பூர் என்றாலே உலகமே உற்று நோக்கும் நாடாக ஆக்கிய பெருமை சிங்கப்பூரின் தந்தை லீக்குவான்யு அவர்கட்கு உண்டு. சிங்கப்பூர் அனைத்துத் துறைகளிலும் செழித்தோங்க வித்திட்டவர் லீக்குவான்யு. லீக்குவான்யு சீனாவிலிருந்து வருகை தந்தோரில் நான்காவது தலைமுறை. லீக்குவான்யு 16-9-1923 அன்று பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிறக்கிறார். இலண்டனில் படிப்புமுடித்து வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.

சிங்கப்பூர் விடுதலைக்குப் பின் 1955 ஆம் ஆண்டு தஞ்சோங் பாகார் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் லீக்குவான்யு சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியின் நிறுவுனரானார். சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் என்று பெருஞ்சிறப்பும் லீக்குவான்யு  அவர்கட்கு உண்டு.   1959 முதல் 1990 வரை ஏழு முறை பிரதமராக பொறுப்பேற்று பெருந்தொண்டாற்றிய பெருமை லீக்குவான்யு அவர்கட்கு உண்டு.

லீக்குவான்யு ஐந்தாண்டுத் திட்டத்தை சிங்கப்பூரில் திட்டமிட்டு மிகப்பெரும் வளர்ச்சியை உருவாக்கினார். இத் திட்டத்தில் நகர் வளர்ச்சி பெருநகர் வீடுகள் பெண்களுக்கு சமஉரிமை கல்வி வளர்ச்சி  தொழிற்புரட்சி எனத் திட்டமிட்டு சிங்கப்பூரை வளர்ச்சிப் பாதைக்கு வழி வகுத்தார்.

1980 ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூரின் தனி நபர் வருமானம் சப்பானிற்கு அடுத்தநிலையில் இருந்தது. ஆசியாவில் முதன்மையானதாக சிங்கப்பூர் உள்ளது

லீக்குவான்யு கோசோதுங்க் அமைச்சரவையில் முதுநிலை அமைச்சராக பொறுப்பேற்று நல்வழிப்படுத்தினார். 2004 முதல் 2011 வரை லீக்குவான்யு அவர்கள் மதியுரை அமைச்சராக அமைசரவையில் இருந்து நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்தினார்.

  லீக்குவான்யுவின் மகன் லீசீன் லுங் சிங்கப்பூரின் பிரதமாராகப் பொறுப்பேற்று தந்தையின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்.

சிங்கப்பூர் நான் பலமுறை சென்றீருக்கிறேன். நான் முதன் முதல் சென்னையிலிருந்து சென்றபோது விமானநிலையத்திலேயே நல்வரவு எனப்பதாகை தமிழில் இருந்தது. பின்தொடர்வண்டி வழியாகவும் பேருந்துவழியாகவும் நகர்க்குல் சென்றேன் எங்குநோக்கினும் தமிழ் .சீனம் மலாய் தமிழ் ஆங்கிலம் எனநான்கும் ஆட்சிமொழியாக உள்ளது.
லீகுவான்யூ அவர்கள் எப்போதும் வலியுறுத்துவது ஒன்று`

”நாம்மலேசியாவில் சிறூபான்மையாக இருந்தபோது நாம்நடத்தப்பட்டதுபோல் சிங்கப்பூரில் நாம் நடத்தக்கூடாது என்பதுதான் அது. மலாய்காரர்களூக்கும் இந்தியர்களூக்கும் அவர்களூக்குரிய இடத்தையும் வாழ்க்கைவாழ்வதையும் அவர்கள் சமமானவாய்ப்புகள் பெறுவதையும் அவர்கள் பாராபட்சம் காட்டாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்`
 “
சமத்துவமான் கொள்கையை உருவாக்கி மிகப் பெரும்மாற்றத்தை உருவாக்கிய  சிங்கப்பூர் சிற்பி லீஅவர்கள்
.
சிங்கப்பூரின் 6ஆம் அதிபராக இருந்தஎசு.ஆர்.நாதன் அவர்கள் லீ அவர்களைப் பற்றி

 “அழிவுச்சக்தியை நம்மை அழித்து சிங்கப்பூரை ஒருகம்யூனிசுட்டு நாடாக்க முயன்றபோது அவர்நமக்குக் கொடுத்த வலிமைதான் அவரின்மிகச் சிறந்தபங்களீப்பு அந்தத்தீய சக்திகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அவர்தந்தார்`. ”

சிங்கப்பூரில் எப்போது சென்றாலும் அடுத்தடுத்துச் செல்லும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய மாற்றாங்களைக் காணாமுடியும். சாலைகள் பேருந்துகள் கட்டிடங்கள் மெட்ரோ தொடர்வண்டிகள் பாலங்கள் பொழுதுபோக்குசாதனைகள் என அனைத்தும் உலகத்தரத்தில் உள்ளன. எப்போது தொடர்வண்டியில் சென்றாலும் மக்கள் எழுச்சியுடனும் உழைக்கும் மனப்போக்குடனும் மகிழ்ச்சியாகச் செல்வர். ஒவ்வொருவர்கையிலும் நவீனத் தொலைபேசிகள் உலகில் வெளீயான கைக்கணீனிகள் அனைவர்கையிலும் இருக்கும் அதைக் காணூம்போதே அந்தநாட்டின் வளர்ச்சியும்மக்கள் வளார்சிசியும்தெரியும்.

சிங்கப்பூரின் தந்தை லீ காட்டியவழியை மக்களூம் தலைவர்களூம் பின்பற்றூவதே வளர்ச்சியின் காரணாமாகும்.

சிங்கப்பூரின் துணைப்பிர்தமாராக இருந்த செயக்குமார் அவர்கள் லீ அவர்கள் சிங்கப்பூர் வானூரிதியில் நான்கு இந்தியர்கள் யூரேசியர்களின்  பங்களிப்பு இருக்கவேண்டும் எனபதில் கண்டிப்பாக இருப்பார் என பதிவு செய்துள்ளார். ஒருமுறை வெளிநாட்டுகுச் செல்லும் பட்டியலை கொண்டு சென்றபோது ஏன் இந்தியர்கள் மற்ற இனம் யாரும் கிடைக்கவில்லையா எனக் கூறி அடுத்த கூட்டத்தில் அவர்களின் பங்களிப்போடு பட்டியலை வெளியிட்டார் என அவரது இன நல்லிணக்கத்தைப் பதிவு செய்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாய் இருக்கும்போது மலேசியா பயணமானார். முதன் முதலில் சிங்கப்பூரில் லீகுவான்யூ தலைமையில் பேருரையாற்றினார். அண்ணாவின் பேச்சு என்றும் நிலைத்துநிற்கும் உரையாகும்.

சிங்கை விடுதலைப் பொன்விழாவை முடிக்கும் முன்னமே லீக்குவான்யு அவர்கள் 23-3-2015 அன்று காலமானர்.

சிங்கை எழுத்தாளர்கள் சங்கம் சாரிபில் லீ அவர்களின் 90 ஆம் அகவை விழாவில் 90 உலகத் தமிழ்க் கவிஞர்கள் வாழ்த்தை தமிழுலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டம்னர். எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன் அவர்களின் பெருமுயற்சியாகும்.

சிங்கையின் தந்தை லீக்குவான்யு அவர்களின் இறப்பிற்கு இந்தியப் பிரதமர் மோடி அவர்ளும் உலகப் பெருந்தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் அரியதொரு இரங்கல் அறிக்கை வழங்கி உகத்தமிழர்களின் ஆற்றோணாத் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை நகரிலும் தமிழகத்தின் தென் பகுதியிலும் லீக்குவான்யு அவர்களின் உருவத்தோடு இரங்கல் தட்டிகள் தமிழர்களின் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தின.

தன்னிகரற்ற தமிழர் மேல் பற்றுள்ள தலைவர் லீக்குவான்யு ஈழத் தமிழர் படும் துயரத்தை கண்டு இலங்கை அரசை கண்டித்துள்ளது  தமிழர் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்தும்.

சிங்கையில் தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிய சிங்கையின் தந்தை லீக்குவான்யு தலைவர்கள் பின் பற்றி வேண்டிய தலைவர் அவர் புகழ் ஒங்குக. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை இம் மன்றத்தில் பதிவு செய்கிறேன்

கவிஞர் நிலவு முதுக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை

சென்னையில்2-5-2015 அன்றூ கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் வெளீயீட்டு விழாவில்    தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய      நூல் ஆய்வுரை

நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர்.சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும் செயல் மறவர். எங்களது நிகழ்வுகளில் எங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழர். முத்துக்கிருட்டிணன் அவர்கள்  தம் நண்பர் கவிஞர் நவநீதம் அவர்களை நமது பன்னாடுத் தமிழுறவு மன்றத்தில் இணைத்தார். அவர் மிகச் சிறந்த கவிஞர் அவரை ஒரு நூல் வெளியிடுங்கள் என பலமுறை வலியுறுத்தினேன். அவர் தற்போது காலமாகி விட்டார். அவர் கவிதைகள் பொன் பொருள் என அலைவோர் மத்தியில் இனிமேல் வெளிவருவது ஐயமே. இதை பலமுறை முத்துகிருட்டிணன் அவர்களிடம் பகிர்ந்துள்ளேன்.

தன் நண்பரைப்போல் இல்லாமல் நெடு நாட்களுக்குப் பிறகு ஒரு நூல் வெளியிடுகிறார் என அறிந்தவுடன் பாராட்டி மகிழ்ந்தேன். உறுதுணையாக இருந்த பொருளுடையார் அருளுடையார் அறமுடையார் நெறியுடையார் தலைவர் பாண்டுரங்க உடையாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

அருமைச் சகோதரரிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது நான் தங்கள் தந்தை எப்படி இருப்பார் தந்தையின் படத்தைக் காண்முடியவில்லையே என்றேன். அவரது கண்கள் குளமாயின நான் தந்தையைப் பார்த்ததே இலலை இது நாள் வரை தேடியும் என் தந்தையின் படத்தைக் கூட நான் எவ்வளவோ அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கப் பெறவில்லை. என்றார்.

ஒரு தாய்க்கு நூற்றாண்டு விழா காணும் மகனை இன்றுதான் காண்கிறேன்., அன்னை இல்லம் எனப் பெயர் வைத்துக்கொண்டு அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலம் இன்றும் உள்ளது. வாழும்போது ஒருவேளை சோறு போடாமல் செத்தவுடன் திதி என்று கூறி வடை பாயசத்தோடு காக்கைக்குக் கொடுத்து தான் நிம்மதியாக உண்ணும் வழக்கம் தொடர் கதையாக உள்ளது..

இந்தக் காலகட்டத்தில் தம் தாயின் பிறந்த நாளை எண்ணி நிணைவில் கொண்டு இன்று  தம் உறவினர்கள் நன்பர்கள் அனைவரையும் அழைத்து நூற்றாண்டு விழாக் கொண்டாடும் நேரத்தில் தம் தாயைப் பற்றியும் அந்தத் தாய் ஈன்ற மக்கள் பற்றியும் தன்னைப் பற்றியும் ”தந்தையுமான தாய்” என்ற நூலை வெளியிட்டு பெரும்பதிவு செய்துள்ள அன்பு மகனை இன்று நாமெல்லாம் கண்டு பெருமிதமும் பேருவகையும் கொள்கின்றோம்.
தந்தையுமான தாய் நூலில் தன்னை அவன் என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளார். அவன் எனக் கூறும்போது தான் கவியரசர் கண்ணதாசன் வழியைப் பின் பற்றுகிறேன் என படிப்போருக்கு தெளிவு படுத்துகிறார்.

அவரது எழுத்து நடை மிகச் சிறந்த நடையாக உள்ளதை படிப்போர் உணரலாம்.

’சாலையின் இருபுறமும் பச்சைப் பட்டுக்கம்பளம் விரித்தாற்போல பரந்து விரிந்து அடிவானைத் தொடும் அழகிய நஞ்செய் நிழகழனிகள்” (பக்.1)
”அறுவடைக் காலங்களில் செந்நெல் வயல் வெளிகளில்  உழைக்கும் மக்களால் உயிர் பெற்ற ஓவியமாய் அழகு மிளிரும் வயல் வெளிகளின் வரப்பு வரிசையாய் நெற்கட்டுகளை சுமந்துசெல்லும் காளையர்கள் நடவு செய்ய நடைபோடும் நங்கையர்கள் கதிர் அறுக்க பரம்படிக்க களையெடுக்க அண்டைவெட்ட என உழைப்பவர்கள் இடையே நெற்குவியல்களை சுமந்து நிற்கும் களங்கள்”. (பக்.5)

சரித்திரச் சான்றுகள் இந்நூலில் நிலையாக இடம் பெற்றுள்ளன.
‘மாமன்னன் இராசராச சோழன் தான் கட்டிய கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளான். மன்னன் கோயிலுக்கு அளித்த நிலத்திற்கு பெயர் தேவதானம் என்றும் சமனத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு சமனப் பள்ளி என்றும் பவுத்த விகார்களுக்கு அளிக்கப் பட்ட நிலங்களுக்கு பள்ளிச் சதகம் என்றும் அறநிலையங்களுக்கு விடப்பட்ட நிலம் மடப்புரம் அல்லது சாலபோகம் என்றும் புலவர்களுக்கு விடப்பட்ட நிலம் புலவர் முற்றூட்டு  என்றும் பெயர் பெற்றன”. (பக்.2)

அவன் பிறந்த மடப்புரம் ஊரைப் பதிவு செயவதற்கு மேற்கண்ட வரலாற்று ஆய்வுகள் இந்நூலின் சிறப்பைப் பகர்கின்றன. தாய்க்கு மட்டுமல்ல தாய் மண்ணுக்கும் பெருமை சேர்க்கிறார்.

தாய் குழந்தையம்மாள் அதே ஊரில் எதிர்வீட்டு சுப்பையாவை மணப்பதை சுவை படக் கூறுகிறார். இணையருக்கு எழுவர் பிறந்ததையும் அவன் நான்காமவன் என்பதையும் பதிவுசெய்கிறார். இந்தியா விடுதலை பெற்ற அடுத்தமாதம் அவனின் தந்தை காலமாகிறார்.

அதற்குபின் அவனின்  தாய் தந்தையுமானவனாகிறார். தாயாரின் கண்ணீர் அவனை மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக நமக்குத் தந்துள்ளது.
“அம்மா நீ அழவேண்டும் என்று உன் தலையில் எழுதிய கடவுளை நாம் ஏன் கும்பிடனும்” (பக்.11)

அவனது படிப்பு நான்காவது நாஞ்சலூரிலும் பின் இராமகிருட்டினா வித்யாசாலையிலும்  தான் சூரப்புலி அல்ல கடைசி இருக்கை மாணவர் என தாயின் விருப்புக்கு மாறாக குஸ்தி பயின்ற உண்மையும் உயர்நிலைப் பள்ளியிலேயே நையாண்டியாகப் குற்றாலக் குறவஞ்சி போன்று கவிதை எழுதும் ஆற்றல் அவனுக்கு வந்துள்ளதும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னையின் ஆசைப்படி பள்ளி இறுதிவகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புதுமுக வகுப்பு சேர்ந்து இலக்கியக்கடலில் சங்கமிக்கிறான்.

”அவன் பல்கலைக்கழக மாணவரிடையே பிரபலமானான் புகழ் குவிந்தது படிப்பு கவிழ்ந்தது” (பக்.22)

பின் ஊரில் அவனின் போக்கு திசை மாறியது. அவனது உறவினர் தமிழ்ச் சமுதாயாத்தையே மாற்றிய பெரியாரின்  பெருந்தொண்டர் கிருட்டிணசாமி  சென்னைக்கு அனுப்பிவைத்தார். அங்கு தொழிற்கல்லூரி படிப்பை முடிக்கிறான்.அங்கும் என்.சி.சி. மற்றும் கூட்டுறவு அமைப்பில் தன் முத்திரையை பதிக்கிறான்.

உளுந்தூர்பேட்டைக்கு பெண் பார்க்கச் சென்று பின் பெண் வீட்டார் மறுத்துவிட்டதையும் அவன் பதிவு செய்கிறான்.

“அவன் அன்னை செய்த தவப்பயன் பெண்வீட்டார் ஓட்டு வீட்டை ஓட்டைவீடு என்று கூறி பெண் தர மறுத்ததாக மாமா சொன்னார் மகிழ்ந்தான்”. (பக்.29)
பணியாற்றும்போது தம் அனுபவத்தைக் கூறுவது சிறப்பாக உள்ளது.

“அவ்வழியே சென்ற செயற்பொறியாளர் அருகில் வந்து பார்த்துவிட்டு ஓ கவிதையா எனக் கேட்டு வாங்கிப் படித்தார். பரவாயில்லையே நன்றாகத்தான் உள்ளது நீங்கள் கவிஞரா என்றார்  நண்பர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றான்” (பக்.30)
தன் எழுபது வயதைக் கண்ட நிலைய்யிலும் அதே சொற்கள் இன்றும் கூறக் கேட்டுள்ளேன்.

எந்நிலையிலும் அவனின் தமிழ்ப் பற்று இந்நூலில் தெளிவாக உள்ளது. அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் வழிகாட்டலை அவன் நன்றியோடு பதிவு செய்கிறான்

”தமிழை வெளியிலிருந்து படி” (பக்.31)
சேலத்தில் அவன் ஆற்றிய தொண்டும் பத்திரிக்கைப் பணியும் பெரியார் மாநாட்டுப் புரட்சியும் அவனை யார் என்று அடையாளம் காட்டுகிறது.
அவன் தன் மனைவி கற்கண்டு அம்மையாரைக் கரம் பிடிக்க எடுத்த முய்ற்சி கற்கண்டு அம்மையாரின் மேல் அவன் கொண்ட அன்பை நாம் அறியமுடிகிறது. சோதிடத்தை புறம் தள்ளி, தந்தை பெரியாரை அழைக்கச் சென்று அவர் ஐயா கிருட்டிணசாமியை வைத்து நடத்தக் கோரி திருமணத்தில் தன் தாய் ஓரத்தில் கைம்பெண் என நிற்க அன்னையின் கரத்தில் தாலி வழங்க திருமணம் முடித்த பெருமை அன்று முதல் இன்றுவரை , திராவிடக் கழகத்தின் பெருமையை பரைசாற்றும்.தாலி அறுப்பு என இன்று எக்காளமிடும் பரதேசிகளுக்கு ஒரு சவுக்கடி இந்நூல்.

தந்தை பெரியார் அவர்கட்கு உணவு வாங்கிச்சென்று தயங்கி நின்று தன் கிருட்டிணசாமி வழி பெரியாரிடம் சொல்ல பகுத்தறிவும் பகலவன் பதில் இன்று நிலையாக உள்ள திராவிட இயக்கத்தை உணர்த்துகிறது. இப பேறு அவனின் அளப்பரிய பேறு அல்லவா.

“பெரியார் தனக்கேயுரிய புன்னகையோடு அவனை தன்னருகே அழைத்து அமரவைத்துக்கொண்டு சொன்னார் நான் ஏன் கையெழுத்து போட நாலணா சாப்பிடக் கூப்பிட்டால் அய்ந்து அணா ரூபாய் தர வேண்டும் என்று கூறுகிறேன் யோசித்துப் பார் எல்லோரும் என்னைக் கூப்பிட்டால் என்னால் முடியுமா பணம் கொடுத்தால் சாப்பிடுவேன் என்றால் சிலர் மட்டுமே கூப்பிடுவார்கள் பணம் கிடைக்கும் அந்தப் பணத்தை நானா கொண்டு போகப் போகிறேன் எல்லாமே இந்த நாட்டு மக்களுக்குத்தானே தருகிறேன் (பக்.42)

அச்சமுடையார்க்கு அறனில்லை என்ற திருக்குறளைக் கூறி அஞ்சாமையின் சிறப்பை பல இடத்தில் அவன் செயல்பாட்டை இந்நூல் செப்புகிறது.

தன் மகனுக்கு பகுத்தறிவு நிலைக்க பெரியார் என பெயரிட எண்ணி பின் மாறுபட்ட கொள்கை கொண்டால் பெரியார் கொள்கைக்கு இழுக்கு என தமிழ் நிலவு எனப் பெயரிட்டது அவனது பகுத்தறிவுக் கொள்கையின் உச்சமாக உள்ளது

தலைவர் கலைஞரின்பால் பேரன்பு கொண்ட அவனுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் பேருந்து நிலையத் திறப்புவிழா அறிவிப்பாளராக அலுவலகத்தால் நியமிக்கப்பட்டு ஆற்றிய பங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது

”அப்படி அழைக்கும்போது அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தாற்போல ஒரு சக்தி உருவானது கலைஞர் என்றே சொல்லக் கூடாது என சொன்னவர் முகத்தில் கரியைப்  பூசினாற்போல் பெருமித உணர்வோடு பேசினான் அப்படி அவன் கலைஞரை புகழ்ந்து அழைக்கவே சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். (பக்.51)

அலுவலகப் பணிக்காக தான் சென்றபோது கண்ட துன்பங்களும் நட்பின் ஆளுமையாள் தப்பியதும் பணி ஓயவுக்குப் பின்னும்  பணியாற்றிய சிறப்பும் நயமாக நூலில் அவனால் கூறப்பட்டுள்ளது.

”அப்பணியை முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றான். குழுமத் தலைவர் குழுத்தலைவர் (அமைச்சர்) மொழியாக்கத்தை இரசித்ததாகவும் செயலர் பின்னர் கூறினார்” (பக்.51)

ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன்
எனக் கேட்ட தாய்

என்ற வள்ளுவப்பெருமானின் குறள் இம் மகனை ஈன்ற மகனுக்கும் தாய்க்கும் தொடக்கம் முதல் இன்று வரை பொருந்தும்.

தாய்க்குப் புற்று நோய் என தெரிந்தவுடன் தாய்க்குத் தெரியாமலேயே சிகிச்சை செய்ததும் தாய்க்காகாவே மகிழ்வுந்து வாங்கி மகிழ்வித்ததும் தாயின் கரத்தாலெ தாலியும், தாயின் கரத்தாலெ புது வீட்டிற்கும் செங்களும் தாயின்பால் அவன் கொண்ட அன்பை உணர்ந்த நணபர் தாய்க்கு ஆளுயர மாலை சூட்டியதும் தாய்க்கு பவளவிழா சிறப்பாக நடத்தியதும் முத்துவிழா காண முடியுமோ என்ற அச்சத்தில் தொடக்கத்திலேயே முத்து விழாவும் நடத்திய அவனுக்கு தன் தாய் குழந்தையம்மளின் சார்பிலும் உலகத் தாய்களின் சார்பில் உச்சிமோந்து பாராட்டி மகிழ்கிறேன்   நன்றி வணக்கம்.




a

கனடாவில் டொரண்டோ நகரில் “யாதும் ஊரே” நூல் வெளியீட்டுவிழா



(6-7-2014 அன்று கனடாவில் டொரண்டோ நகரில் யாதும் ஊரே நூல்
வெளியீட்டுவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பெருமதிப்பிற்குரிய தலைவர் கவிவாணர் கந்தவணம் அவர்களே, நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நூலைப் படித்து அரியதொரு உரை ஆற்றிய கணபதி இரவிச்சந்திரன் அவர்களே நூலைப் மூன்று நூல்களாகப் பகுத்து உரையாற்றிய கவிஞர் புகாரி அவர்களே என்னை கனடா வரவேற்று  அன்பு பாராட்டி உங்களையெல்லாம் கூட்டி இந்த யாதும் ஊரே நுலை வெளியீட்டு நிகழ்வை நடத்தும், அருமை அண்ணன் நட்பின் நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்தம் துணைவியார் மகளிர்மாமணி பத்மலோசினி அவர்களே வாழ்த்துரை வழங்கிய உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க தமிழ்க் கல்விப் பொறுப்பாளர் துரைராசா அவர்கல்ளே, மூத்த பெருமகன் துரைசிங்கம் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

கனடா வருவதென்றால் எனக்குப் பேரின்பம். இங்கு உணர்ச்சியுள்ள பெருமக்கள் தமிழ் உணர்வோடு வாழ்கின்றீர்கள். சென்ற முறை நான் வருகை தந்தபோது தாங்கள் காட்டிய அன்பையும் தங்களின் தமிழ் ஈழ உணர்ச்சியையும் யாதும் ஊரே இந் நூலில் பதிவு செய்துள்ளேன். இந்நூலை தங்கள் முன்னிலையில் வேளியிடுவது என்பது யான் பெற்ற பேறு. யான் சென்ற பயணத்தில் கண்ட அன்பு உள்ளங்களை அன்பு குன்றாமல் மீண்டும் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு உள்ள கோயில்கள் ஈழத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் உள்ளட்டக்கி உள்ளன. நம்மவர்கள் எங்கு பார்த்தாலும் பக்திப் பரவசமாகவே உள்ளார்கள். ஆனால் ஈழத்து மக்களும் இந்துதான் என்ற உணர்ச்சி நம் இந்தியு மத்திய அரசுக்கு  இல்லையே. நம் மக்களை கொன்று குவித்தபோது வாளாயிருந்த்தனர் அதனால்தான் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப் பட்டனர்.இந்த்துவா பேசும் பாசக வினருக்கு ஈழத் தமிழர்கள் என்ற உணர்ச்சியும் இல்லையே. இனிமேலாவது ஈழப் பிரச்சினையில் நியாயமான தீர்வை எட்டவேண்டும்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வறுத்தக் கூலி தரும்

என்று நம் ஐயன் கூறியவண்ணம் தம் மெய்வருத்தி ஈழத்திற்காப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்வருத்தம் உலகம் முழுமையும் உள்ள தமிழர்களை அடையாளம் காட்டி இன்றும் நீரு பூத்த நெருப்பாக ஈழம் உள்ளது அவருடைய ஈகம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். உலகத் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் குடியிருப்பார் தமிழர் குல மாணிக்கம் தலைவர் பிரபாகரன்.

திரைப்படத் துறையினருக்கு நாம் காட்டும் ஆர்வத்தை முற்றிலுமாக போக்கவேண்டும் நம் இனத்திற்கு மொழிக்கும் ஈகம் செய்யும் பெருமக்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும். நம் மக்கள் ஈழத்திற்காக் செய்த ஈகங்கள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். திரைப்படக் கவர்ச்சி நம் உணர்ச்சிகளை மழுங்கச் செய்துவிடாமல் இருக்க வேண்டும்.

கணபதி இரவிச்சந்திரன் அவர்கள் பேசும்போது உண்மையிலேயே மெய்மறந்தேன். நேற்று என்னை கீதவாகிணி வானொலியில் பேட்டி கண்டார். பேட்டியின் போது பெருமக்கள் ஆவலோடு உரையாடினர். அப்போதுதான் நான் யாதும் ஊரே நூலைத் கணபதி இரவிச்சந்திரன் அவர்களிடம் தந்தேன். ஓர் இரவில் படித்து என் உள்ளம் நெகிழ்ந்த செய்திகளையெல்லாம் பட்டியலிட்டுள்ளார். ஈழத்து மக்களின் பதிவே இந்நூல் என பதிவு செய்தது எனக்குக் கிடைத்த சான்றிதழாகவே கருதுகிறேன்.

இலண்டனில் ஊர்தி ஓட்டுநர் டேவிட்டுடன் நடந்த நிகழ்வையும் கனாடாவில் டோரண்டோ நகரில் வாழும் ஈழத்து மூதாட்டி சீவரட்டிணம் அம்மையார் அவர்களைக் பற்றிக் கூறியுள்ள பதிவையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார். பெருமகானாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இன்னலின் சிகரத்திற்கு தாங்கள் சென்றாலும் தமிழையும் தமிழரையும் உலகில் என்றும் வலம் வரச் செய்த பெருமை ஈழத் தமிழ் தியாக உருக்களே தங்கட்கு என்றும் உண்டு. அந்தப் பதிவுகள்தான் இந்த யாதும் ஊரே எனப் பெருமிதம் கொள்கிறேன்.

அருமை அண்ணன் லோகன் அவர்கள் செல்லா சோதி அவர்களின் அச்சகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தமிழ் கணினி தட்டச்சும் அச்சகமும் மிகச் சிறப்பாக நடத்துகிறார். அவரது துணைவியார் உற்ற துணையாக உள்ளார். தற்போது சோதி செல்லா அவர்கள் மார்க்கம் தொகுதியில் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார். கோயம்பத்தூரில் வருகை தந்து இங்கு குடியுரிமை பெற்றுள்ள மாணிக்கம் அவர்களும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் வட இந்தியப் பெருமக்களும் வருகை தந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கிறேன். கனடாவில் சனநாயகம் கோலோச்சி உள்ள தங்களைக் காணும்போது அரிய முடிகிறது.

ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பை மனித உரிமை மீரலை கண்டித்து இலங்கைக்கு எதிராக வாக்களித்த பெருமை கனடா பிரதமருக்கு உண்டு. இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டை புறக்கணித்த பெருமையும் கனடாவிற்கு உண்டு. இந்த நாட்டிற்கும் ஆட்சியாளர்களுக்கும் என் நன்றியைத் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கவிவாணர் கந்தவணம் அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ பற்றியும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி நாங்கள் ஆற்றும் பணியையும் மனம் நெகிழக் கூறினார்.  பெருங்கவிக்கோ மகன் திருவள்ளுவர் ஒழுக்கத்தின் சிகரம் என்று கூறினார். மூத்த கவிஞர் பெருமகன் வாயால் யான் கிடைத்த பாராட்டை பெரும் விருதாகவே எண்ணுகிறேன்.

கவிவாணர் கந்தவணம் ஐயா அவர்கள்  வருகை தந்திருந்த போது தந்தையார் அவர்கள் ஊரில் இல்லை என்றும் நான் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாப் படத்தையும் வெளியான நெடு நாட்களுக்கு முன் வெளியான தமிழ்ப்பணி இதழையும் காண்பித்தார்.முன்னாள் மேயர் சா. கணேசன் அவர்கள் கவிவாணருக்கு பொன்னடை போர்துகிறார். கவிவாணர் போன்ற பெருமக்களெல்லாம் வருவது தமிழர்கள் பெற்ற கொடை அன்றோ. பவள விழாக் கண்ட பெருமகன் கவிவாணர் கந்தவனத்தை  வணங்கி மகிழ்கிறேன்

அரும்பாடுபட்டு இந்த விழாவை நடத்திய அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்கட்கும் துணை நின்ற அண்ணன் அவர்களின் நிழலாகத் தொடரும் சகோதரர் விமல்ரத்தினம் அவர்ககும் மற்றும் பெருமக்கட்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு



(சோகூர் மாநிலத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளியே என் தேர்வு நிகழ்ச்சியில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

சிங்கையிலிருந்து  மலேசியா வரும்போது நான் சோகூர் மாநிலத்தில் அருமை நண்பர்கள் கவிஞர் வடிவேலு, எழுத்தாளர் வேணுகோபால் அவர்களை சந்தித்து ஒரு நிகழ்வில் பங்கேற்றுச் செல்வது வழக்கம். இம் முறை முனைவர் சேதுபதி அவர்கள் என்னை பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக இந் நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களும் கல்வித் துறை அதிகாரிகளும் ம.இ.க தொகுதித் தலைவர்களும் வருகை  தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் துறையின் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்ட  வரைவு முழக்கமாம “ தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என அச்சிட்ட படிகளை என்னிடம் வழங்கினர்.

அதில் அண்மைக் கால் தமிழ்ப் பள்ளிகளின் வெற்றிகளையும் நடவடிக்கைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.

100% பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள்

45% இளங்கலை/முதுகலை கல்வி தகுதி பெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.

2013ல் யு.ப்.எசு.ஆர். மாணவர்களின் சிற்புத் தேர்ச்சி அடைவுநிலை 62% உயர்வு.

2014ஆம் ஆண்டு பிறபள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு பதிவு உயர்வு  கண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் பயின்ற மாண்வர்கள் உலக அளவில் பெற்ற் வெற்றிகளையும் பட்டியலிட்டுள்ளீர்கள்

உண்மையிலேயே தமிழ்வழிப் பள்ளி சிறப்புற அமைய தாங்கள் எடுத்து வரும் முயற்சியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

ஆனால் தற்போது பெற்றோர்களிடம் அந்த ஆவல் இல்லை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களி எண்ணிக்கை குறைகிறது என்ற செய்தியையும் குறிப்ப்பிட்டீர்கள். 20% சீன வழிப் பள்ளிகளில்  நம் தமிழ்ப் பிள்ளைகள் சேர்கிறார்கள் என்ற அதிர்ச்சியான்  செய்தியையும் வெளியிட்டீர்கள்.
தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து மக்கள் ஆங்கில மோகத்தில் திளைத்து தமிழையே புதை குழிக்குத் தள்ளும் அவலம் தொடர்கிறது.

1993 ஆன் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் 50 தமிழ் அறிஞர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை பட்டி தொட்டி எல்லாம் பரப்பினோம். அதைத் தொடந்து இவாண்டு வரை 22 ஆண்டுகளாக் ஊர்திப் பயணமாக வலம் வந்து தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை உயிர்க் கொள்கையாகக் கொண்டு பரப்பி வருகிறோம்.

தமிழகத்தில் ஆங்கிலம் பிடித்த இடத்தை மலேசியாவில் சீனம் தொடர  அனுமதிக்கக் கூடாது. அதற்காக அரசாங்கப் பணீயாற்றும் ஆசிரியாராகப் பணீயாற்றும் நீங்கள் அரசோடு இணைந்து எடுத்துவரும் முயற்சி கட்டாயம் பலனளிக்கும். தமிழ்ப் பெற்றோர்களை அழைத்து தாங்கள் கொடுத்துவரும் விழிப்புணர்ச்சி நம் மக்கள் நம் மொழியைப் பேணுவார்கள் என்ற நம்பிக்கையை வழங்குகிறது.

நான் மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன் கோலாலம்பூர், ஈப்போ, தாப்பா, பினாங்கு பட்டர்வொர்த் சிம்பாங் அம்பாட், சித்தியவான், கெடா, சிரம்பான், தெலுக்கிந்தான், போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள் பிள்ளைகளின் வளர்சிகளையும் ஆசிரியர்களின் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளேன்.

ஆயிரக்கணக்கில் இருந்து தமிழ்ப் பள்ளிகள் ஐநூறாக இக் காலக் கட்டங்களில் குறைந்துள்ளது வேதனைப்படத்தக்க ஒன்றாகும். அது மேலும் குறையாவண்ணம் தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு நாங்களும் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் என்றும் துணைநிற்கும் எனக்கூறி என்னை இங்கு அழைத்துவந்த அருமைச்சகோதரர் முனைவர் சேதுபதி அவர்கட்கு நன்றியை உரித்தாக்கி விடைபெறுகிறேன்.

தமிழில் பெயர் எழுதுவது எப்படி


[27 12-2014 அன்று மலேசியாவில் கோலலம்பூர் நகரில் தான்சிறீ சோமா மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் குழுவினர் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பெருமதிப்பிற்குரிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பொன்சண்முகம் அவர்களே மக்கள் ஓசை ஆசிரியர் இராசன் அவர்களே வருகை தந்திருக்கும் தமிழ் தமிழருக்காக தொண்டாற்றும் ”தமிழ் எங்கள் உயிர் குழுவின்” தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உல்கத் தமிழர் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திய அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம் அவர்கள் தமிழ்கத்திலிருந்து வருகை தந்திருக்கும் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அண்ணன் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழில் பெயரை முறைப்படி எழுதுவது எப்படி என சரியான தலைப்பை  கலந்துரையாடலின் தலைப்பாக தந்துள்ளீர்கள். தமிழ் வாழ நம் பெயரில் வாழ தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெருமுயற்சியாகும். இந்தக் கலந்துரையாடலுக்கும் நடுநாயகமாக மலேசியத் திருநாட்டி முன்னணி நாளிதழ் மக்கள் ஓசையின் ஆசிரியர் அமந்திருந்து அனைவருடைய கருத்துகளையும் உள் வாங்கி தன் கருத்தை வழங்கினார்கள். நீண்ட அனுபவமும் தமிழ் அறிவும் உள்ள ஐயா அவர்கள் தன் நேரத்தை தமிழ் மேம்பாட்டுக்கு ப்யண்படுத்துவதை அனைவரும் பின் பற்ற வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழ்வழிக் கல்விக்காகவும் தமிழ் மொழிக்காகவும் அரும்பாடுபட்ட ஐயா அமரர் மணிவெள்ளையன் அவர்களையும் அவரின் தொண்டைத் தொடரும் தமிழ் நெஞ்சங்களையும் போற்றுகிறேன்.
முதலில் தமிழைச் சிதைப்பது மூடநம்பிக்கையே. தமிழர்கள் தாம் பெற்ற செல்வத்திற்கு பெயர் வைப்பதற்கு சோதிடனிடம் கேட்கிறார்க:. அவர்கள் வடமொழிப் முதல் எழுத்தைக் கொடுத்து தமிழக் குழந்தைக்கு தமிழ் அல்லாத பெயரை முன்மொழிகிறார்கள். அவர்களைத் புறம் தள்ள நம்மவர்கள் தெளிவு பெறவேண்டும்.

தமிழகத்தில் தமிழ்ச்சுரங்கம் என்ற அமைப்பின் வழி பேராசிரியர் ஆறு. அழகப்பனார் அவர்கள் தமிழ்ர்கள் தலைபெழுத்துகளை தமிழில்தான் எழுத் வேண்டும் என வலிய்றுத்தி செயல் பட்டு வருகிறார்கள். தமிழ்ப்பணியிலும் ந்நான் வெளியிட்டுள்ளேன்,

பெருமக்களே நாம் முதலில் நம் பிள்ளைகளும் வழிமுறையினருக்கும் தமிழ்ப் பெயர்களை வைக்கவேண்டும், என் தந்தையார் பெருங்கவிக்கோ எனக்கு இட்ட பெயர் திருவள்ளுவர் என் தம்பிகள் கவியரசன் ஆண்டவர் தமிழ்மணிகண்டன். தங்கைக்கு பூங்கொடி எனவும் என் மக்கட்கு அறிவன் அன்பன் என என் குடும்பம் முழுமையும் தமிழ்ப்பெயர்களே.

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ 1993ஆம் ஆண்டு குமரியிலிருந்து சென்னை நடைப்பயணம் வந்தபோது மதுரையில் தம்பி கவியரசன் – முத்துமாரிக்கு பெண்குழந்தை பிற்ந்தது. விழா மேடையில் மகளுக்கு தமிழ் நடைப் பாவை என பெயர் வைத்தோம். அம்மகள் இன்று அமெரிக்காவில் தமிழ் நடைப்பாவை வலம் வருகிறார்.

நம் பெயரைக் கூறும் நம் மொழியும் இனமும் ஒளிரவேண்டும்.
இறுதியாக ஐயா பொன் சண்முகம் ஐயா அவர்கள் தலைபெழுத்தும் பெயரும் முழுமையாக இடம் பெறவேண்டும் என தீர்மாணம்
தந்தைபெயர்+தனதுபெயர் தனதுபெயர்+ துணைவர்பெயர் என இடம் பெறவேண்டும்

என இயற்றியுள்ளார்கள் இதை கோலலம்பூர் பிரகடணம் என மொழிந்துள்ளார்கள். இத் தீர்மாணத்தை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பாக வழிமொழிந்து உலகம் வாழ் தமிழர்கள் பின் பற்றவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோலாலம்பூர் கிளையின் சார்பில் மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்குப் பாராட்டு விழா


(பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கோலாலம்பூர் கிளையின் சார்பில் மன்ற இயக்குநர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்புரை)

பேருள்ளப் பெருந்தகை சமுதாயக் காவலர் இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் பண்டிட் ஐயா மதிராசன் அவர்களே நான் இங்கு வந்ததிலிருந்து என்னோடு பயணிக்கும் அருமை நண்பர் கவிஞர் சுதந்திரன் அவர்களே கற்றபின் நிற்க் நுலை ஆய்வுரை வழங்கிய அருமை நண்பர் அவர்களே மகளீர் மாமணியாக இங்கே வந்து அமர்ந்திருக்கும் அன்னையர் அவர்களே மற்றும் வருகை தந்திருக்குகு பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.
பெருமைமிகு நம் தலைவர் மதிராசன் நம் நீண்ட கால நண்பர். அவர் இங்கு ஆற்றிவரும் அளப்பரிய தொண்டை நான் அறிவேன். தாம் பொறுப்பேற்று நடத்திய மருத்துவர் சங்க அமைப்புக்கு கோலால்ம்பூரிலே ஒர் கட்டடம் கட்டி தமிழர் பெருமையை நிலை நாட்டியுள்ளார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னலம் இல்லாமல் இருந்தால்தான் இத்தகைய சாதனைகள் செய்யமுடியும். தன்னலமில்லாத் தகைமையை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
கவிஞர் சுதந்திரன் அவர்கள் மிகச் சிறந்த கவிஞராக மிளிர்கிறார். தமிழ் தந்தையைப் பற்றி தம் மகள் எழுதிய கவிதையை காண்பித்தார். உண்மையிலேயே மலேசியாவில் நம் பிள்ளைகள் தமிழ் உணர்வோடு வளர்வதை இந்நூல் படிப்போர் உணரலாம். சுதந்திரன் அவர்களும் பல் கவிதைப் படைப்புகளை எழுதியுள்ளார் அவற்றை ஐயா பெருங்கவிக்கோ கண்டு பாராட்டியுள்ளார். கூடியவிரைவில் அவரது கவிதைநூல் வெளியிடுவார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
பன்னாட்டுத் தம்ழுறவு மன்றம் உலகளாவிய அமைப்பு. இதற்கு வித்திட்டது மலேசியமண். இங்கு பினாங்கு நகரிலேயே வாழந்த சுவாமி இராமதாசர் தம் மணிவிழாவிற்கு தம் மாணவரான நம் பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்தார். அழைத்தபின் தமிழகத்திற்கு வரும் பெருமக்களை வரவேற்க அமைக்கப்பட்ட அமைப்புதான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். வாரம் ஒரு பெருமக்கள் என உலகம் முழுமையும் நம் தமிழ் நெஞச்ங்கள் தமிழகம் வருகின்றனர். அவர்களை வரவேற்று தமிழ் உலகிற்கு அறிமுகப் படுத்துவதே நம் கடமையாகப் கொண்டுள்ளோம். அண்மையில் அய்யா மதிராசன் தமிழகம் வந்திருந்தபோது திருச்சியில் அருமையானதொரு விழாநடத்தி அதை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளோம். இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருமக்களுக்கு வரவேற்பு வழங்கியுள்ளோம் என்பதைப் பதிவு செய்வதில் பெருமையும் உவகையும் கொள்கிறேன்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ஆறு மாநாடுகளை உலகம் முழுமையும் நடத்தியுள்ளது. முதல் மாநாடு திருச்சியிலும் இரண்டாம் மாநாடு சென்னையிலும் மூன்றாம் மாநாடு செர்மன் தலைநகர் பெர்லினிலும் நான்காம் மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் ஐந்தாம் மாநாடு மதுரையிலும் ஆறாம் மாநாடு இங்கும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இங்கு நடைபெற்ற மாநாட்டில் மாண்பமை அமைச்சர் டாண்சிறீ கோசூகூன் அவர்களும், நம் சாதனைத்தலைவர் உத்தாமா டத்தோ சாமிவேலு மற்ற நம் தமிழ் அமைச்சர்கள் உலகளாவிய அறிஞர்கள் மலேயா பல்கலைக்கழகத்தில் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஏழாம் மாநாடு அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். 2015ஆம் ஆண்டு சூலை திங்கள் 25, 26 நாட்களில் நடைபெறவுள்ளது. தமிழன்பர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தமிழ்ப்பணி திங்களிதழ் 44 ஆண்டுகளாக வெளிவருகிறது. உலகம் முழுமையும் வாழும் தமிழர்களின் கருத்துப் பெட்டகமாக உள்ளது, மலேசியா முழுமையும் இவ்விதழ் உறுப்பிணர்களைக் கொண்டது, அமைப்போ இதழோ நடத்துவது என்பது எளிதான செயல் அல்ல.
நண்பர்களே இவ்வளவு பெரும் சாதனைகளை செய்த இயக்கம் தமிழகத்திலோ இங்கோ நிலையாக நாம் சாதிக்க வேண்டும். தமிழகத்திலே உலகத்தமிழ்க்குடில் கட்டுவதற்கு திட்டமிட்டு அறக்கட்ட:ளை தொடங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதே நம் குறிக்கோள். 1993ஆம் ஆண்டு நம் நிறுவனர் பெருங்கவிக்கோ தலைமையில் குமரியிலிருந்து சென்னைவரை நடைப்பயணமாக 100 தமிழ் அறிஞர்களுடன் பட்டிதொட்டி எல்லாம் முழக்கமிட்டு வந்தோம். இன்றளவும் தமிழ் எல்லாநிலைகளிலும் வராத நிலை. இங்கு கூட நம் தமிழ்ப் பிள்:ளைகள் 20 விழுக்காடு சீனததைப் படிப்பதாக வறுத்தப்பட்டனர், தமிழ்கத்தில் நம் மொழியை நாம் எந்நிலையிலும் இழக்கக் கூடாது. அதைத் தொடர்ந்து ஊர்திப் பயணமாகா ஆண்டுதோரும் அருஞ்சாதனை நிகழ்த்தும் மன்றம் நம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம். இம் மன்றத்தில் இணைத்துக் கொண்ட பெருமக்கள் அனைவருக்கும் எனது வரவேற்பையும் மகிழ்சியையும் தெருவித்துக் கொள்கிறேன்.
மிகக குறுகிய காலத்தில் விழாவை அமைத்து சிறப்பித்த தலைவர் மதிராசன் அவர்களையும் கவிஞர் சுதந்திரன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாகி விடை பெறுகிறேன்.