Tuesday, May 26, 2015

சிங்கப்பூரின் தந்தை நாடு கட்டுவித்த நாயகன் லீக்குவான்யூ


(4-5-2015 அன்று புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் நடைபெற்ற விழாவில் அமரர் லீக்குவான்யூ பற்றி தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய தொடக்க உரை)

நிகழ்வுக்கு தலைமை தாங்கும் பெரியார் கொள்கைகளின் அரனாக வாழும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களே, வருகைதந்திருக்கும் கழகத்தின் முன்னோடிகள் கூத்தரசன் கயல் தினகரன்,தமிழ் வள்ளல் மாம்பலம் சந்திரசேகர் நண்மாறன் சாமிநாகப்பன் ஐயா இளம்வழுதியின் திருமகன் சூர்யா ஒய்.எம்.சி.எ. பட்டிமன்றச் செயலர் பக்தவதசலம் மற்றும் சான்றோர் பெருமக்களே.. நாடுகட்டுவித்த நாயகர் பற்றி தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தஞ்சை கூத்தரசன் உரையாற்ற உள்ளார்கள். இலககிய அறிவும் இயக்க அறிவும் தொண்டாற்றும் அஞசா நெஞ்சமும் கொண்ட அவர்களே அனைவர்க்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். என்னை தொடக்க உரையாற்றப் பணித்துள்ளார்கள் யான் லீகுவான்யூ இறந்த உடன் தமிழ்ப்பணியில் எழுத வேண்டும் என என் உள்ளம் அவாவியபோது அழைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன

சிங்கப்பூர் என்றாலே உலகமே உற்று நோக்கும் நாடாக ஆக்கிய பெருமை சிங்கப்பூரின் தந்தை லீக்குவான்யு அவர்கட்கு உண்டு. சிங்கப்பூர் அனைத்துத் துறைகளிலும் செழித்தோங்க வித்திட்டவர் லீக்குவான்யு. லீக்குவான்யு சீனாவிலிருந்து வருகை தந்தோரில் நான்காவது தலைமுறை. லீக்குவான்யு 16-9-1923 அன்று பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிறக்கிறார். இலண்டனில் படிப்புமுடித்து வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.

சிங்கப்பூர் விடுதலைக்குப் பின் 1955 ஆம் ஆண்டு தஞ்சோங் பாகார் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் லீக்குவான்யு சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியின் நிறுவுனரானார். சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் என்று பெருஞ்சிறப்பும் லீக்குவான்யு  அவர்கட்கு உண்டு.   1959 முதல் 1990 வரை ஏழு முறை பிரதமராக பொறுப்பேற்று பெருந்தொண்டாற்றிய பெருமை லீக்குவான்யு அவர்கட்கு உண்டு.

லீக்குவான்யு ஐந்தாண்டுத் திட்டத்தை சிங்கப்பூரில் திட்டமிட்டு மிகப்பெரும் வளர்ச்சியை உருவாக்கினார். இத் திட்டத்தில் நகர் வளர்ச்சி பெருநகர் வீடுகள் பெண்களுக்கு சமஉரிமை கல்வி வளர்ச்சி  தொழிற்புரட்சி எனத் திட்டமிட்டு சிங்கப்பூரை வளர்ச்சிப் பாதைக்கு வழி வகுத்தார்.

1980 ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூரின் தனி நபர் வருமானம் சப்பானிற்கு அடுத்தநிலையில் இருந்தது. ஆசியாவில் முதன்மையானதாக சிங்கப்பூர் உள்ளது

லீக்குவான்யு கோசோதுங்க் அமைச்சரவையில் முதுநிலை அமைச்சராக பொறுப்பேற்று நல்வழிப்படுத்தினார். 2004 முதல் 2011 வரை லீக்குவான்யு அவர்கள் மதியுரை அமைச்சராக அமைசரவையில் இருந்து நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்தினார்.

  லீக்குவான்யுவின் மகன் லீசீன் லுங் சிங்கப்பூரின் பிரதமாராகப் பொறுப்பேற்று தந்தையின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்.

சிங்கப்பூர் நான் பலமுறை சென்றீருக்கிறேன். நான் முதன் முதல் சென்னையிலிருந்து சென்றபோது விமானநிலையத்திலேயே நல்வரவு எனப்பதாகை தமிழில் இருந்தது. பின்தொடர்வண்டி வழியாகவும் பேருந்துவழியாகவும் நகர்க்குல் சென்றேன் எங்குநோக்கினும் தமிழ் .சீனம் மலாய் தமிழ் ஆங்கிலம் எனநான்கும் ஆட்சிமொழியாக உள்ளது.
லீகுவான்யூ அவர்கள் எப்போதும் வலியுறுத்துவது ஒன்று`

”நாம்மலேசியாவில் சிறூபான்மையாக இருந்தபோது நாம்நடத்தப்பட்டதுபோல் சிங்கப்பூரில் நாம் நடத்தக்கூடாது என்பதுதான் அது. மலாய்காரர்களூக்கும் இந்தியர்களூக்கும் அவர்களூக்குரிய இடத்தையும் வாழ்க்கைவாழ்வதையும் அவர்கள் சமமானவாய்ப்புகள் பெறுவதையும் அவர்கள் பாராபட்சம் காட்டாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்`
 “
சமத்துவமான் கொள்கையை உருவாக்கி மிகப் பெரும்மாற்றத்தை உருவாக்கிய  சிங்கப்பூர் சிற்பி லீஅவர்கள்
.
சிங்கப்பூரின் 6ஆம் அதிபராக இருந்தஎசு.ஆர்.நாதன் அவர்கள் லீ அவர்களைப் பற்றி

 “அழிவுச்சக்தியை நம்மை அழித்து சிங்கப்பூரை ஒருகம்யூனிசுட்டு நாடாக்க முயன்றபோது அவர்நமக்குக் கொடுத்த வலிமைதான் அவரின்மிகச் சிறந்தபங்களீப்பு அந்தத்தீய சக்திகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அவர்தந்தார்`. ”

சிங்கப்பூரில் எப்போது சென்றாலும் அடுத்தடுத்துச் செல்லும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய மாற்றாங்களைக் காணாமுடியும். சாலைகள் பேருந்துகள் கட்டிடங்கள் மெட்ரோ தொடர்வண்டிகள் பாலங்கள் பொழுதுபோக்குசாதனைகள் என அனைத்தும் உலகத்தரத்தில் உள்ளன. எப்போது தொடர்வண்டியில் சென்றாலும் மக்கள் எழுச்சியுடனும் உழைக்கும் மனப்போக்குடனும் மகிழ்ச்சியாகச் செல்வர். ஒவ்வொருவர்கையிலும் நவீனத் தொலைபேசிகள் உலகில் வெளீயான கைக்கணீனிகள் அனைவர்கையிலும் இருக்கும் அதைக் காணூம்போதே அந்தநாட்டின் வளர்ச்சியும்மக்கள் வளார்சிசியும்தெரியும்.

சிங்கப்பூரின் தந்தை லீ காட்டியவழியை மக்களூம் தலைவர்களூம் பின்பற்றூவதே வளர்ச்சியின் காரணாமாகும்.

சிங்கப்பூரின் துணைப்பிர்தமாராக இருந்த செயக்குமார் அவர்கள் லீ அவர்கள் சிங்கப்பூர் வானூரிதியில் நான்கு இந்தியர்கள் யூரேசியர்களின்  பங்களிப்பு இருக்கவேண்டும் எனபதில் கண்டிப்பாக இருப்பார் என பதிவு செய்துள்ளார். ஒருமுறை வெளிநாட்டுகுச் செல்லும் பட்டியலை கொண்டு சென்றபோது ஏன் இந்தியர்கள் மற்ற இனம் யாரும் கிடைக்கவில்லையா எனக் கூறி அடுத்த கூட்டத்தில் அவர்களின் பங்களிப்போடு பட்டியலை வெளியிட்டார் என அவரது இன நல்லிணக்கத்தைப் பதிவு செய்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாய் இருக்கும்போது மலேசியா பயணமானார். முதன் முதலில் சிங்கப்பூரில் லீகுவான்யூ தலைமையில் பேருரையாற்றினார். அண்ணாவின் பேச்சு என்றும் நிலைத்துநிற்கும் உரையாகும்.

சிங்கை விடுதலைப் பொன்விழாவை முடிக்கும் முன்னமே லீக்குவான்யு அவர்கள் 23-3-2015 அன்று காலமானர்.

சிங்கை எழுத்தாளர்கள் சங்கம் சாரிபில் லீ அவர்களின் 90 ஆம் அகவை விழாவில் 90 உலகத் தமிழ்க் கவிஞர்கள் வாழ்த்தை தமிழுலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டம்னர். எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன் அவர்களின் பெருமுயற்சியாகும்.

சிங்கையின் தந்தை லீக்குவான்யு அவர்களின் இறப்பிற்கு இந்தியப் பிரதமர் மோடி அவர்ளும் உலகப் பெருந்தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் அரியதொரு இரங்கல் அறிக்கை வழங்கி உகத்தமிழர்களின் ஆற்றோணாத் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை நகரிலும் தமிழகத்தின் தென் பகுதியிலும் லீக்குவான்யு அவர்களின் உருவத்தோடு இரங்கல் தட்டிகள் தமிழர்களின் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தின.

தன்னிகரற்ற தமிழர் மேல் பற்றுள்ள தலைவர் லீக்குவான்யு ஈழத் தமிழர் படும் துயரத்தை கண்டு இலங்கை அரசை கண்டித்துள்ளது  தமிழர் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்தும்.

சிங்கையில் தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிய சிங்கையின் தந்தை லீக்குவான்யு தலைவர்கள் பின் பற்றி வேண்டிய தலைவர் அவர் புகழ் ஒங்குக. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை இம் மன்றத்தில் பதிவு செய்கிறேன்

No comments:

Post a Comment