Thursday, September 4, 2014

மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு


           சிறப்புமிக்க மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீடு பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.  எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்களுக்காக வாங்கப்பட்ட கட்டிடம்  என அறியும்போது பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

யான் யாதும் ஊரே நுலை வெலியிட வேண்டும் எனறு அருளாளர் அசுவின் முத்து அவர்களிடம் கூறிவுடன் முதுபெரும்கவிஞர் தமிழ் நெஞ்சர் காரைக் கிழார் அவர்களைத் தொடர்பு கொண்டார். மனம்  மகிழ்வோடு ஐயா அவர்கள்  இடத்தைத தந்து வாழ்த்தையும் தெருவித்துள்ளார்.

இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் ஆசிரியமணி மாணிக்கம்  அவர்கள் மிகச் சிறந்த தமிழ்த் தொண்டர்.  மாணிக்கம் அவர்களின் அழைப்பின் பேரிலேயே மகாகவி பாரதி  விழாவில் ஈப்போ நகரில் பங்கேற்று தற்போது இங்கே இந்நிகழ்வில் அரிய உரை ஆற்றியுள்ளார்கள்

ஆய்வறிஞர் சந்திரகாந்தன் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவாளார். தமிழ் உலகுக்கு தம் ஆய்வுக் கட்டுரை வழியாக பூசாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திர்சோழனின் பதிவை வழங்கிய பெருமகனார். நான் தமிழ்ப்பணியிலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளேன். தற்போது ஆவணப் படங்கள் எடுப்பதில் காம்ரேன் மலைப்பகுதியில் படப்பிடிப்புக் குழுவினருடன் பர்பரப்பாக உள்ள நேரத்த்லும் என் அழைப்பை ஏற்று இந்நூலிற்கு மிகச் சிறந்த ஆய்வுரை வழங்கியுள்ளார்.

           இந்நூலை வெளியிட்டுள்ள பேருரை ஆற்றிய மூத்த தலைவர் டத்தோ வி.க.செல்லப்பன் வரவேற்புரையாற்றிய  ஆசிரியர் திலகம் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கிய அருள்நெஞ்சர் இரெங்கய்யா நன்றியுரையாற்றிய இந் நிகழ்வுக்கு முதுகெழும்பாகச் செயல்பட்ட அருமை அண்ணன் டாக்டர் தருமலிங்கம். இந்த அழைப்பை வடிவமைத்த அருமை கணினி  வல்லுனர் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.  

          மலேசிய  மண் தமிழைத்  தமிழகாப் படிக்கும்  பயிற்றுவிக்க்கும் மண். இந்த மண்ணில்தான் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6 ஆம் மாநாடான தமிழர் ஒற்றுமை மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினீர்கள். இன்றும் தமிழ் தமிழர் இன்னல்களுக்கு குரல் கொடுக்கும் வல்லமைமிக்க தமிழர்கள் இங்கே வாழ்கிறார்கள்.  அப்பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
யாதும் ஊரே நூல் உலகெங்கும் வாழும்  தமிழர்ளைப் பற்றிய பதிவுப்  பயணநூல். அமெரிக்கா கனாட ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளைப் பதிவு செய்துள்ளேன் உலகம்   முழுமையும் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பதிவு செய்துள்ளேன். ஒரு நிகழ்ச்சியை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

          கனடாவில் டொரண்டோ நகரில் சீவரட்ணம்  அம்மையா வாழ்ந்து வருகிறார்.  யான் அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அம்மையார் எம் தமிழ்ப்பணியிலும் எழுதி வருகிறார். அம்மையார் அவர்கள் அங்குள்ள தொலைக்காட்சிகளில் அடிக்கடி பேட்டி கொடுப்பார். அம்மையார் இல்லத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கனடாவில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மண்ணின் பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஈழத்தில் தம் வீடு பெரிய வீடு என்றும் மிகப் பெரும் தோட்டம் உள்ளதையும் குறிப்பிட்டு இன்று தரை மட்டமாகியுள்ளது கன்கலங்கிக்  கூறினார். கனடா வீட்டில் உள்ள தோட்டத்தில் இது ஈழத்திலிருந்து கொண்டுவந்த கத்திரிச் செடி அனைத்துச் செடிகளீலும் என் மண்ணைக் காண்கிறேன் என்று கூறியது இன்றும் என் கண்களில் நீர் பெருக  வைக்கும்.

           ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த முறையிலும் தீர்வைக் காணாத்து தமிழினத்திற்குச் செய்த கொடுமை. ஈழத்திற்குச் சென்ற பெஇண்டன் பிரதமர் டேவிகாம்ரான் யாழ்ப்பாணம் சென்று தமிழர்க்ளின் இன்னல்களை உலகறியச் செய்தர்ர். ஐநா அதிகாரி வீரப் பெண்மணி நவனிதம்பிள்ளை ஈழத்துக் கொடுமைகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். ஐநா மன்ற விசாரனையில் போர்க்குற்றவாளி இராசபக்சே தண்டிக்கப்பட்டு ஈழம் கிடைத்தால்தான் சீவரத்தினம்  போன்ற ஈழ் மக்களின் நெஞ்சக் குமுறல் நீங்கும். அதற்கான பணிகளைச் செய்வதே ந்ம்முடைய முதற்பணி..

         மலேசிய மண்ணில் கவிஞர்கள் எழுத்தாளர்கள்  தமீழுக்கு மிகப்பெரிய ஆக்கங்களைத் தந்துவருகின்றனர். டான்சிறீ சோமசுந்தரம் அறவாரியம் உலகின் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து மிகப் பெரிய பரிசுத் தோகை அமெரிக்க டாலர் 10000 வழங்குகிறது. ஆண்டுதோறும் எண்ணற்ற மாநாடுகள் நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்க்கும் மலேசியத் தமிழர்களை வணங்கி விடை பெறுகிறேன்..

(28-12-2013 அன்று மலேசியா முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச் சங்க பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

ஒன்றுபட்டுத் தாழ்வுகளை நீக்குவோம்


        ஈப்போ நகரில் காவல்  துறையில் அதிகாரியாகப் பணியாற்றும்  ஐயா அருண் ஆறுமுகம் அவர்களின் அப்பழுக்கில்லாத் தமிழ்ப்பணியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.  அம்மா காமலாட்சி ஆறுமுகம் அவர்களைத் தொடர்பு கொண்டபோது தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வழி எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் ஆறுமுகம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதறிந்து மிக்க மகிழ்ச்சியடைநதேன். மிகக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த ஆறுமுகம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். .

ஆசிரியமணி மாணிக்கம் ஏற்பாடு செய்த மகாகவி பாரதியின் பிறதநாள் விழாவிற்கு என்னுடைய  தலைமையில் 12 அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் அருண் ஆறுமுகம் ஐயா அவர்களின் பேருழைப்பைக் கண்டோம். யாங்கள் கெடா பினாங்கு சென்று ஈப்போ வழி வரும்போது அறநெறிக் கழகத்தின் சார்பில் அனைவருக்கும் பாராட்டு வழங்கி விருந்து வழங்கி  சிறபபித்தார். அன்று நெல்சன் மண்டேலா அவர்கட்கு இரங்கல்  தெருவித்து அவரைப் பற்றிய கட்டுரையும் வழங்கினர்.

அருமை நண்பர் அருணாஆறுமுகம் அவர்கள் தம் காவல் துறை அனுபவங்களை நூலாக தமிழகத்தில் வெளியிட உள்ளார். பெருமகனை தமிழகத் தமிழர்களின் சார்பாக வரவேற்கிறேன்.

தமிழர்களின் தடங்களை எல்லாம் அழிக்க தமிழ் விரோதிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அண்மையில் பூசாங் பள்ளத்த்தாக்கில் உள்ள இராசேந்திர சோழன் பதித்த தடங்களெல்லாம் உடைக்கப்படுவதை
பத்திரிக்கைகளில் கண்டு அதிர்ந்தேன். யான் பன்முறை பூசாங்க் பள்ளத்தாகிற்கு சென்றுள்ளேன் தற்போதும்  அறிஞர் பெருமக்களோடு சென்று வந்தோம்.

          கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

         பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.

          பூசாங்க் பள்ளத்தாக்கில் சோழர் காலத்தில் கட்டிய கோயில்  வடிவம் இன்றும் உள்ளது அதில் 10 ஆம் நூற்றாண்டு கோயில்  என்று குறிப்பிட்டுள்ளார்களேயொழிய அதில்  சோழர்கள் பற்றிய பதிவு இல்லாதது வருந்தத்தக்கது
.
         இருப்பினும் பள்ளத்தாக்கில் ஒரு சீனக் கட்டுமான நிறுவனம் உடைத்தெடுபதை மலேசியத் தமிழர்களின் எழுச்சியால் தடை செய்யப் பட்டுள்ளது கண்டு பெருமகிழ்ச்சி யடைகிறேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்ற்மை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு

என்ற மகாகவி பாரதியின் பாடலைக் கூறி அனைவரும் ஒன்றுபட்டு தாழ்வுகளை  நீக்குவோம் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(25-12-2013 அன்று மலேசியா ஈப்போ தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை)

தமிழர் திருநாள்


           உலகத்தமிழ்  எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் போன்றே நம்மையெல்லாம் மேடையில் ஏற்றி தாம் கீழே இருந்து இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டும்  பெரியார் பெருந்தொண்டர் எழுத்துச் செம்மல் மூத்த வழக்கறிஞர் சமரசம் ஐயா அவர்களே  நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வெங்கடேசன் அவர்களே, முன்னிலைவகிக்கும் சிவசுப்பிரமணியம் அவர்களே மிகச் சிறப்பாக உரையாற்றிய பெருமக்கள் பேராசிரியர் சம்பத் குமார் புலவர் சதாசிவம் கவிஞர் சொக்கர் மணாளன் கவிஞர் மதி சி.குப்பன் மகளிர் மாமணியாக இங்கு உரையாற்றிய செந்தமிழ்செல்வி குணசேகரன் அவர்களே, அவையிலே அமர்ந்திருக்கும் எங்களது தமிழ்ப்பணியின் நீண்ட காலப் படைப்பாளர் படைக்களப்பாவலர் மூர்த்தி அவர்களே, மலேசியா புகுத்தறிவு மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு  நடந்த மாநாட்டு நிகழ்வுகளை 16 பககம் மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்ட  ஆற்காட்டிலிருந்து இங்கு வருகை தந்துள்ள ஆசிரியப் பெருமகன் புலவர் பன்னீர்செல்வம் அவர்களே திரளாக வருகை தந்திருக்கும் வேலூர் தமிழ்ப்பெருங்குடிமக்களே உங்கள் அனைவருக்கும்  எம் பணிவான வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

          தமிழர் திருநாளை நாம்  கொண்டாடக் நாமெல்லாம் இங்கு கூடியுள்ளாம். தமிழ் தமிழர்  சிந்தனைகளெல்லம் தமிழ்நாட்டில் பின் பற்றப்படுகிறதா என்றால் வெட்கப்பட வேண்டியுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு என தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பாவேந்தர்                பாரதிதாசன்,முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் மற்றும் அறிஞர் பெருமக்களெல்லாம் கூடி எடுத்த முடிவை  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழகஅரசின் ஆண்டாக முத்ன்முதல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது நடைமுறைப்படுத்தி வழக்கத்தின் இருந்து வந்தது.. தற்போது சென்ற முறை  அவர் ஆட்சி செய்தபோது தை மாதம் தமிழாண்டின் தொடக்கமாக  திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமே  தமிழாண்டாக அறிவித்து அதை உலகமே  கொண்டாடுகிறது.ஆனால் இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழாண்டை சித்திரையாகக் கூறுகிறார்கள். மிகுந்த வெட்கக்கேடாக உள்ளது.

           சித்திரை தமிழாண்டு  தொடக்கமெனில் 60 ஆண்டுளில் ஒரு தமிழ்ப் பெயர்களாவது உள்ளதா. ஆண்டுப் பிறப்புக்கு அவர்க்ள கூறும்  பகுத்தறிவுக்கு உகந்ததாக உள்ளதா பகுத்தறிவுக்கு ஒத்ததா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மைப் பொறுத்துவரை திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு. பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்.

           நான் பர்மா சென்றிருந்தபோது தட்டோன் நகர்ப் பகுதிக்கு சென்றிருந்தோம்.அங்கு திருக்குறள் பெரியார் அமரர் மாரிமுத்து அவர்கள் எழுப்பிய வள்ளுவர் கோட்டம் கண்டு  மெய்மறந்தேன். அங்கு திருவள்ளுவர் சிலை முன்பு ஓதுவார் குருசாமி அவர்கள் திருக்குறளை  ஓதி வழிபாடு செய்தது இந்த மறைமொழி உலகமெங்கும் வாழும தமிழர்கள் பகுதிகளில் என்று ஒலிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. தட்டோனிலிருந்து யங்கூன் திரும்பியபோது ஒரு சுமையுந்தில் வண்ணவிளக்குகள் சூழ் திருவள்ளுவர் படத்தி ஏந்தி தமிழ்மக்கள் உலா வந்தனர்.

          சுவிட்சர்லாந்தில் முருகவேள் நந்தினி இணையர் வள்ளுவன் பாடசாலை வைத்து ஆண்டுதோறும் திருவள்ளுவர் ஆண்டான தமிழ் ஆண்டை  மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

          மலேசியாவில் திருவள்ளுவர் ஆண்டே தமிழ் ஆண்டுஎன பல விழாக்கள் பல  தமிழ் அமைப்புகள்  மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் தமிழர் சிந்தனைகளெல்லாம் புதைக்கப் படுவது கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாட்டில் தமிழ் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆலயங்களில் தமிழ் இல்லை. ஆட்சியில் தமிழ் என்று சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் போராடினாலும் தமிழுக்கு இடமில்லை. கொடுமையிலும் கொடுமை பள்ளிகளில் தமிழ் இல்லாத அலங்கோலம் இன்று உள்ளது. கொடுமையின் உச்சமாக இந்த அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை புகுத்துகிறது. தமிழர் திருநாளை கொண்டாடும் நாம் எண்ணி எண்ணி வேதனைப்படும் கொரடூரம் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர்கள் அவலம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இட்லரைவிடக் கொடிய இராசபக்சே இலட்சக்கணக்காண தமிழர்களைக் கொன்று குவித்து முள்வேலிகளில் மண்ணின் மைந்தர்களை அடைத்து வைத்துள்ள கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. தமிழினத்தையே அழிக்கும் கொடூரத்திற்கு இந்தியஅரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உலகமெங்கும் 10 கோடித் தமிழர்கள்  வாழ்ந்தும் பயணின்றி ஒப்பாரியாகவே உள்ளது. இந்த பயங்கரவாதத்தைப் புரிந்த இராசாபக்சே ஐநா மன்ற நீதிமன்றத்தில் தண்டிக்கப்படு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப் படவேண்டும். ஈழத் தமிழர்களின் குமுறல் கட்டாயம்  நிறுத்தும்.

உலகமெங்கும் பரவிச் சென்ற ஈழத் தமிழர்கள் தமிழ் தமிழர் பண்பாட்டை கட்டிக்காத்து வருகிறார்கள். தமிழ்மொழி  உலக மொழியாக வலம் வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மொழியின் சிறப்பை பேணிப் பாதுக்காகின்றனர். கனடா பாராளுமன்றத்தில் ஒரு இராதிகா எனற தமிழ்ப்பெண்மணி  பாராளுமன்ற உறுப்பினராகி பாராளுமன்ற முழக்கமே தமிழில் முழங்கி அனைத்தும் பெருமக்களும் கரஒலி எழுப்பி மகிழ்ந்தனர். கெராலிசு சிம் என்ற பாரளு மன்ற உறுப்பினர் தம்முடைய தொகுதி மக்களுக்கு தமிழில் அரசு சட்ட்திட்டங்களை அச்சடித்து வழங்கியுள்ளார்.

ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்க்ளின் குடும்ப்ப பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன.இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்ச்கத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்த்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் தமிழை பல நூற்றாண்ண்டு காலமாக பல்வேறு ஆதிக்க சக்திகள் அடக்கிஒழிக்க எண்ணின.  ஆனால் தமிழும் தமிழரும் பீனிக்சு பறவையாக ஒளிர்ந்துகொண்டிருகிறார்கள்.

  ஐயா சமரசம் அவர்களின் சகோதரி மலேசியா டத்தின் தாமரைச்செல்வி அவர்கள் அன்னைக்கு எனும் நூலை  எழுதியுள்ளார்கள்,அந்நூலில் தம் வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களையெல்லாம் நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். அதில் தம் அண்ணன் சமரசம் அவர்களின் குடும்பப் பொறுப்பை பட்டியலிடும்போது கண்கள் குளமாகின்றன. இன்று மூத்த வழக்கறிஞராக இருக்கும் பவள விழா நாயகர் ஐயா அவர்கள் ஒரு அச்சகத்தில் பணியாற்றி குடும்பத்தைக் காத்தார். அப்போது அச்சு இயந்திரத்தில் விரல்கள் நசுங்கின என்று குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயப் பொறுப்பும் திராவிட இயக்கப் பெருந்தொண்டரும் எழுத்துச்செம்மல் சமரசம் ஐயா அவர்க்ள் அழைத்தமைக்கு நெஞசார்ந்த நன்றியைக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

(உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் கிளையின் சார்பில் 27-11-2013 அன்று நடந்த தமிழர் திருநாள் விழாவில் ஆற்றிய உரை)
   

Saturday, March 29, 2014

சிலம்பு மேகலை – ஓர் ஆய்வு


சென்னை புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் 16-3-2014 அன்று சிலம்பு மேகலை – ஓர் ஆய்வு எனும் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


           தமிழ்நாடு தேர்வாணையத்தில் அதிர்காரியாகப் பணியாற்றி ஒய்வுக்குப் பின் தமிழ் இலக்கியமன்றம் அமைத்து செம்மையான கூட்டங்களை நடத்தும் ஐயா மகாராசன் அவர்களே ஐயாவோடு  இணைந்து தொண்டாற்றும்  கவிஞர் அ.வே.செல்லப்பனார் அவர்களே ஆய்ந்தறிந்த சான்றோர் பெருமககள் புலவர் கோ. பார்த்தசாரதி புலவர் தட்சனாமூர்த்தி பேராசிரியர் தங்கவேல் அண்மையில் அங்கொவாட் சென்று இப்பகுதிவாழும் அருமைச் சகோதரர் இலக்குவனார் திருவள்ளூவன்  நிகழ்வுக்குட் தலைமைதாங்கும் திருவை பாபு சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பெருமக்களே மதிய வெலையில் இலக்கிய உரை கேட்க அமர்ந்திருக்கும் அன்பர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண்வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.மகாராசன் அவர்கள் என்னிடம்  தலைப்புக் கேட்டார் நான் உலகளாவிய தமிழர்கள் பற்றிப் பேசுகிறேன் என்றேன். அடுத்த நாள் சிலம்பு மணிமேகலை பற்றிப் பேசுங்கள் சரி என்று கூறி தங்கள் முன் உள்ளேன். நம் இலக்கியங்களை நாம் மீண்டும் மீண்டும் படிப்பதும் கேட்பதும் இன்பம்தானே.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்

       ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

        காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் ப்கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன.

         நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.ம கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

         காலத்தால் முற்பட்டதும் மிகவும் உலக இலக்கியங்களில் உயர்தரமான இலக்கியம் சிலப்பதிகாரம். அரண்மனைக் காப்பியங்களுக்கு மாறாக துன்பம் நிறைந்த சூழலில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களின் காப்பியமாக மக்கள் காப்பியமாக மிளிர்கிறது சிலப்பதிகாரம்.
பண்டைய தொல்காப்பிய காலஒழுக்கமும் சங்ககால ஒழுக்கமும் நீக்கம்ற நிறைந்த காப்பியம் சிலப்பதிகாரம்..

         சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

        அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

         செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

          இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

         பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

     மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்

”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

         என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.
கோவலனின் இசை ஆடற்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்பதை அழகொளிரப் பாடுகிறார்

கோவலன் கையாழ் நீட்ட அவனும                                                                    
காவிரியை  நோக்கினவுங் கடற்காணல் வரிப்பாணியும்
மாவிதன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்
பாணரோடு பாணராகக் கலந்து பாடும் பண்பு  கோவல்னுடைய பரந்த உள்ளத்திற்கும் வேற்றுமை காணா கலைஉள்ளத்தையும்  தெரிவிக்கிறது.
மாதவியின் ஆடற்பண்பை மிகச்சிறப்பாகப் பாடுகிறார்.

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழ்கும் என்றிக்
கூறிய முன்றின் ஒன்று குறை படாமல்
ஏழாண்டு இயற்றியோர் ஈராண்டில் சூழ்கழன் மன்னற்கு காட்டல் வேண்டி
 எனும் அடிகள் மாதவியின் ஆடல் பாடல் அழகு மூன்றிலும்  குறைபடாத அன்னமென் சாயல் மடந்தையை அனைவரும் அறிவர். இவ்வளவு சிறந்த மயிலின் ஆடலை காணாத காளையர் கலையுள்ளம் பெறாத ஏழையர். அரங்கேற்ற நாளில் கோவலன் காணச் சென்றதற்கு இதை விட் என்ன சிறப்பு வேண்டும்.

மாதவி எங்ஙனம் இன்பம் அளித்தால் என்பதை அடிகள் கூறுகிறார்.

இல்லார் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ்சேக்கைப் பள்ளியுட் பொலிந்து
செந்துகிர்க் கோவை வென்றேந்து அல்கூல்
அந்துகில் மேகலை அசைந்தன் வருந்த
நிலவுப் பயன்கொள்ளும் நெடு நிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி

        முல்லையோடு மல்லிகையும் ஒழிந்த தாழிக் குவளை முதலிய பல பூவும் அவிழ்ந்த பள்ளியிடத்தே பொலிவு பெற்று அழகு ஏந்திய அல்குல் தன்னிடத்தில் துகில் செல்லப்பட்டுச் செந்துகிர்க் கோவையாகிய மேகலை அசைந்தனவாய் இரங்கா நிற்க நிலாவினது பயனைக் கொள்ளுதற்கு காரணாமாகிய உயர்ந்த நிலா முற்றத்தி கண்ணே தன் காதலனுக்கு ஒருகால் கலவியையும் மறுகால் புலவியையும் மாறி மாறி அளித்து எதிரேற்று முயங்கி அம் முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும்  வேட்கை விளைக்கும் கோலமாகத் திருத்திய மாதவி என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும்.

வேந்துறு சிறப்பின் விழுச் சீரெய்திய
மாந்தளிர்மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலாமை நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம் நல்லுரை நாட்டுதும்

கோவலனுக்கும் மாதவிக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்ததைக் கூறுகிறார்.
கோவலன் மாதவியை விட்டு பிரிந்த பின்னர் கண்ணகியை அவள் எவ்வாறு உயர்வாகக்  கருதினாள் தன் மகள் மணிமேகலையை மாபெரும்  பத்தினியின் மகள் கண்ண்கியின் மகள் என்று கூறுவதையும் கேட்கிறோம்.

     கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல்
நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் அகாணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண்மாகச்
சிலப்திகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்
என்று இளங்கோவடிகள் கூற சாத்தனார்

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிய
அடிகள் நீரே அருளுக

என ஊக்கமளிக்க காப்பியம் ஒப்பற்ற காப்பியமாக சிலப்பதிகாரம்  வாழ்கிறது.

சாத்தனாரின் மணிமேகலை

ஐம்பெரும்காப்பியங்களில் சிலப்பதிகாரம் சிந்தாமணி வளையாபதி இம்மூன்றும் சமணக் கொள்கையை வலியுறுத்தும் காப்பியங்கள். மணிமேகலை குண்டலகேசி புத்த சமய்அக் கொள்கைகளை வலியுறுத்தும் காப்பியங்களாகும். இன்று நமக்குக் கிடைத்திருப்பவை சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலையாகும். சிலப்பதிகாரம் பிறசமய வெறுப்பின்றி சமண சமய கொள்கையைக் கூறுகின்றது. மணிமேகலை பிறசமயங்களைச் சாடி புத்த சமயமே உயர்ந்ததெனக் கூறுகிறது.

மணிமேகலையில் உ:ள்ள கருத்துக்கள் கொள்கைகள் புத்தசமய தத்துவங்கள் தமிழ்கத்தின் நிலை தமிழரின் வாழ்க்கைமுறைகள் அரசியல் போன்றவற்றை காப்பியம் படிப்போர் உணரலாம்.

மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் அன்றே சாதிவேற்றுமையைக் கண்டிக்கிறார். அக்காலத்திலிருந்த வருண பேதத்தையும் காலக் கண்ணாடியாக காட்டுகிறார்.  மணிமேலையை 30 காதைகளாகத் தந்துள்ளார் சாத்தனார்.

அங்கைப் பாத்திறம் ஆபுத்திரன் பாற்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
மற்றப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
பிச்சைக் க்வ்வூர்ப்  பெருந்தொரு அடைந்த்தும்
பிச்சையேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிற் பார்த்துனர் ஈத்த்ததும்
காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே
கொங்கலர் நறுந்தார்க் கோமகள் சென்றதும்

அகங்கையிலிருந்து பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரன் கலைமகள் அளித்தவாறும் மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தை கையிலேந்தி பிச்சையேற்றர்க்கு அந்நகரின் பெருந்தெருவினை அடைந்ததும் பிச்சையேற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாள் பலருக்கும் பகுத்துண்ணும் உணவை இட்டதும் அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சைமகளின் வயிற்றிலுள்ள அனைத்தீ என்னும் தீராப் பசியை அழித்து உலகவறவி எனெனும் ஊரம் பலத்தையடைந்ததும் தேன் பொறுந்திய நறிய மலர் மாலையுடைய அரச குமரன் மணிமேகலை உஅல்கவறவியை அடைந்தாள் என்று அங்கு சென்ற்தும் கூறுகிறார்.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றியதும், அந்நாளைய தனிதனி சுடுகாட்டு சாமாதிகள் பற்றியும் காலக் கண்ணாடியாக விளக்குகிறார்.. காப்பியத்தில் அக்கால சுடுகாட்டை விளக்கும் சில வரிகள்

சுடுவோர் இடுவோர் தொடு-குழிப்படுவோர்
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கழிப்போர்
இரவும் பகலும் இழிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சுமையும்
எஞியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி
நெஞ்சு நருக் குறூஉம் நெய்தல் ஓசையும்

பிணங்களைச் சுடுவோரும் வாளையிடுப் போவோரும் தோண்டப்பட்ட குழியில் இடுவோரும் தாழ்ந்த இடங்களி அடைத்து வைப்போரும் என  சக்கரவாட்டக் கோட்டத்தைப்பற்றிப் பாடுகிறார் .
முற்பிறப்பு நம்பிக்கை இருந்ததையும் மணிமேகலை படிப்போர் உணரலாம் சில வரிகள்

இன்னும் கேளாய் இலக்குமி  நீ நிம்
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்கநாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டணன்

என மணி மேகலா தெய்வம் தோன்றி இரகுலனே உதய குமாரனென்றும் தாரையும் வீரையுமே மாதவியும் சுதமதியும் என்று கூறி  மூன்று மந்திரங்களை கூறி மற்ந்தனள்.

அமுத சுரபி வரும் நாள் நட்சத்திர நம்பிக்கையும் அந்நாளில் உள்ளது அறியலாம்.

ஈங்கு இப்பெரும் பெயர்ப்பீடைகை முன்னது
மாலருக் குவளையும் நெய்த்லு மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதி இடபத்து
ஒருபதி மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போத்தித்த்லை வனோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுத சுரபி எனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

இருபத்தி மீன்களுள் கார்த்திகை முத்லாகாக் தொடங்கும் பதின்மூன்றும் கழிந்தபின் பதிநான்காவது இருபத்தேழு நடுமீனுமாகிய விசாகையன்று அமுதசுரபி வெளிவரும் எனக் கூறுகிறார்

பொய்யாமொழியார் வள்ளுவர் குறளை சாத்தனார் தம் காப்பியத்தில் கையாளுகிறார். மருதி என்ற பெண்ணின் குரலாக வரும் வரிகள்

மாபெரும் பூதம்  தோன்றி மடக்கொடி
நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழா அவள் கொழுநன் தொழுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும்  பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

மணிமேகலை அட்சயபாத்திரம் மூலம்உணவு வழங்குவதையே மையமாக வைத்து வைத்து உன்னதக் காப்பியம். ஆபுத்திரன் பிறப்பும் வறுமையும் வறுமையிலும் தாம் பெற்ற உணவை எழைஎளியோருக்கு வழங்கிய தன்மையும் பின் அட்சய பாதிரம் பெற்று பசித்தோர்க்கு  உணவு வழங்கி பின் மணிமேகலா தெய்வம் க்கூற்றுப்படி அட்சயபாத்திரம் மணிமேகலை பெற்று உலகப் பசியை நீக்கிய ஒப்பற்ற காப்பியம். சிறைக் கோட்டத்தையும் அறக்கோட்டமாக ஆக்கிய மாண்பை மணிமேகலையின் மாண்பை செப்புகிறது மணீமேகலை காப்பியம்.

அருமைப் பெருமக்களே காப்பியம் முழுமையும் உரை நிகழ்த்துவோர் முன்னிலையில் யான் கற்றவற்றை தங்கட்கு கூறியுள்ளேன் தமிழ் இலக்கியங்களைப் பயிலுங்கள் நம் தலைமுறை செழித்து வாழும் என்று கூறி விடை பெறுகிறேன்.

திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்கட்கு முத்துவிழா


(1-3-2014 அன்று சென்னையில் திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்களின் முத்துவிழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

           திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்கட்கு முத்துவிழா என்பது மகிழத்தக்க வாழ்க்கையாகும். கல்லூரித்துறை இணை இயக்குநராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய பெருமகன். தம் மகன் பொறிஞர் கருணாகரன் மறைவுக்குப் பின் தம் இல்லத்தையே திருக்குறள் நூலகமாக மாற்றி உலகத்திருக்குறள் தொண்டை திறம்பட ஆற்றுகிறார். இந்த நிகழ்வுக்கு நீதியரசர் அவர்கள் பங்கேற்று அவரை வாழ்த்தி வணங்கி பெருமைப் படுத்தியுள்ளார். தலைமைதாங்கும் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க இராமலிங்கம் அவர்கள் திருக்குறள் கருத்துக்களைக் கூறி நெகிழ வைத்துள்ளார். அழைப்பிதழ் யாருக்கும் கிடைக்கா நிலையிலும் பெருமக்கள் திரளாக கூடியுள்ளீர்கள் இதுவே அவரின் திருக்குறள் தொண்டிற்குக் கிடைத்த சிறப்பாகவே கருதுகிறேன்.

         இன்று நாம் நிற்கும் இந்த அண்ணாநகரில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு பல கோடியைத்தாண்டும் இருப்பினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் திருக்குறளுக்காக ஒப்புவித்த பெருமகனை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

         துன்பம் உறவரினும் துணிவாற்றி செய்க
        இன்பம் பயக்கும் வினை (669)

என்ற குறளுக்கு சான்றாக வாழ்பவர் திருக்குறள் சான்றோன் பாட்கரன் அவர்கள்.. யான் மலேசியா சென்றிருந்த பொழுது திருக்குறள் கருணாகரன் நூலகத்தை அறிந்த அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் சென்னை வந்து தம் துணைவியரோடு இந் நூலகத்தைக் கண்டு தம்மை மனமுவந்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். ஐயா பாட்கரனின் பேருழைப்பு உலப் புகழ் பெற்றுவருவதை குறிப்பிடுவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் தமிழ்த்தொண்டுகளுக்கு ஊக்கமளிப்பதிலும் திருக்குறள் பாட்கரனார் முன்னணியில் உள்ளார். அருமைத் தொண்டர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் தந்தை பெரியாரைப் பற்றி ஐயா அவர்கள் உரையாற்ற முரம்புக்கு அழைத்தமையையும் அரிய பொழிவையும் போற்றி மகிழ்ந்தார். அவர் சென்னைவந்தபொழுது முரம்பு பாவாணர் கோட்டத்திற்கு பல பெருமக்களிடம் அழைத்துச் சென்று நிதிபெற்றுத் தந்தமையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

ஐயா அவர்ளிடம் யார் வந்தாலும் திறம்பட உதவுவதில் தீரர். அண்மையில் யானும் பேராசிரியர் அவர்க்ளும் ஆற்காடு திருக்குறள் மண்டல மாநாட்டில் பங்கேற்றோம். திரும்பி வரும்போது இரவு நேரமாகையால் பேருந்து கிடைக்காமல் கடினப்பட்டு வந்தோம். தம் முதிய வயதிலும் பல்வேறு இன்னல்களுக்கிடையில் சொற்பொழிவாற்றி திருக்குறள் நெறிபரப்பும் சான்றோன் பேராசிரியர் பாட்கரன் அவர்கள்.

என் இளவல் முனைவர் ஆண்டவர் அவர்கட்கு சப்பானில் பங்கேற்க ஒரு அழைப்பு வந்தது. அந்த மாநாட்டில் ஆண்டவர் பங்கேற்க உற்றுழி உதவி இளைஞர்களை ஊக்குவிக்கும் பெருமகன் பேராசிரியர் பாட்கரன்.

சிங்கையிலே திருகுறள் சான்றோன் முனைவர் இ.வி, சிங்கன் அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றிய பெருமகன். உலகம் முழுமையும் திருக்குறள் உரை கதை மொழிபெயர்ப்பு என சாதனை புரிந்த பெருமகன். சிங்கை செராங்குன் பகுதியில் உள்ள அவர்து நிறுவனத்திற்கு சிங்கை செல்லும்போதெல்லாம் செல்வேன். அங்கு திருக்குறள் மொழியாக்க நூல்கள் பலவற்றைக் கண்டேன். சீனத்து மொழிபெயர்ப்பை கருணாகரன் நூலகத்தைக்கூறி கேட்டிருந்தேன். ஒரு படி உள்ளதாகவும் அடுத்து தமிழகம் வரும்போது தருவதாகக் கூறினார். அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

நான் தமிழாகரர் ஆறு அழகப்பனாரோடு பர்மா சென்றிருந்தபோது அவர் திருக்குறள் பர்மீய மொழிபெயர்ப்பை வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் திரட்டி இந்நூலகத்தில் வைக்க ஒத்துழைப்பை நல்குவேன்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
        இடும்பை படாஅ தவர்    (623)

       என்ற குறளுக்கு சான்றாக இடும்பையை வென்று வாழும் பேராசரியர் பாட்கரனார் நூற்றாண்டைக் கடந்து வாழ நெஞ்சாரப் போற்றுகிறேன்.

Monday, February 3, 2014

சிங்கப்பூர் சூரோங்க் கிழக்கு நூலகத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


 சிங்கை  சூரோங்க் கிழக்கு நூலகத்தில் 15-12-2013 அன்று கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை

   மலெசியாவில் பாரதியார் விழாவிற்காக எனது  தலைமையில்  12 பெருமக்களை பெருமக்கள் பங்கேற்றனர். அதில் நாங்கள் இங்கு சிங்கப்பூரில் வந்து இந்நிகழ்வில்  பங்கேற்பது மகிழ்வைத் தருவதாகும். ஐயா அறிஞர செவ்வியன் அவர்களின் மருகர் பெருவை இளங்கோவன் அவர்களின் பேரன்பு பூரிப்பைத் தருகிறது. சென்னையில் செவ்வியன் ஐயா அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவை அண்ணாமலை பல்கலைக் கழக பழைய மாணவர் சஙகத்தில் மிகச்சிறப்பாக நடத்தினார்கள். அந்நிகழ்விலேயே மாமா அவர்களின் தமிழ்த் தொண்டிற்கு மருகர் இளங்கோ ஆற்றிய பணிகள் எம்மை வியப்பில் ஆழ்த்தின. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் சென்னையில் பல காலம் இருந்து தற்போது சிங்கை வந்துள்ளார்கள் எந்த இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் சென்னையில் காண்பது வழக்கம். தற்போது சிங்கையில் பெரு இளங்கோ அவர்களோடு இணைந்து இந்கழ்வை நடத்துகிறார். பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அண்மையில் அவரது வலத்தளத்தில் ஒரு கவிதையை இரசித்து அக்கவிதையை தமிழ்ப்பணியில் வெளியிட கொடுத்து வந்துள்ளேன். அதில் ஒரு பகுதி

சிந்தனைத்தேன் ஊறுவதை
சிந்தித்தே  மாறுவதை
சந்தனம்போல் கமலவைத்துக் காட்டு – அதுவே
சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

என மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். அப்பெருமகனை இயல்பாகாவே இந்நிகழ்வில் காண்பது இரட்டிப்பு நிகழ்வு. பெருங்கவிஞர் கவிஞரேறு சிங்கையில் எழுத்தாளர் சங்கத்தை நிலைநாட்டிய அமலதாசனார்,, கவிஞர் இக்பால் யான் சில ஆண்டுகளுக்கு முன்புஎழுத்தாளர் சங்க நிகழ்வில் கவி பாடி என்னிடம்  கவிதைக்கு பரிசுபெற்ற சீர்காழி செல்வராசு போன்ற பெருமக்களை காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நிகழ்ச்சி நடைபெறும் சூரோங் கிழக்கு நூலகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் நிகழ்வு தகுதியான அரங்கில் ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களையும் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் திருமதி  நாயுடு அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
நெடுஞ்சேரலாதன் அவர்கள் என்னை மறைமலையடிகள் விழாவிற்கு முரம்பு  அழைத்திருந்தார்கள் அதுபோது தாங்கள் அவசியம் மலேசியா வரவேண்டும் அங்கு வாழ் தமிழ் மக்களை சந்திக்க வேண்டும் என  வலியுறுத்தினேன். பாரதிவிழாவிற்கா  முடியாது அதானாலென்ன பாரதியின் சீடர்தானே பாவெந்தர் அவரைப்பற்றிப் பேசுங்கள் எனக் கூறி அவர்து துணைவியாரிடமும்  கூறி அவரை அழைத்துவந்துள்ளேன்.மலேசியாவில் மகாகவியைப் பற்றி அரியதொரு உரையாற்றினார். அதனுடைய பயண்தான் இன்று நாம் சிங்கையில் சந்திக்கும் சந்திப்பு.. சிங்கையில் அவரது அண்ணன மகன் மாரிமுத்து தன் சிற்றந்தையிடம் காட்டிய அன்பும் அர்வணைப்பும் இப்பயணத்தில் அவர் கண்ட சிறப்பாகும். உறவு வீழவில்லை என்பது மாரிமுத்து போன்ற பெருமக்களைக் காணும்போது பெருமைகொள்கிறோம். வில்லுப்பாட்டுக் கலைவித்தகர் அ. செல்லதுரை அவர்களும்  வருகைத்ந்துள்ளார். அவர் பாடல்களை கேட்டு மகிழ்ந்தீர்கள்.

பெருமக்களே உலகளவிய தமிழ் தமிழர் பற்றி பேச் பணித்துள்ளீர்கள். பிச்சினிக்காடு நேரம் மிகச் குறைவாக உள்ள காரணத்தால் விரைந்து முடிக்கக்கூறியுள்ளார். சிங்கையில் நேரத்தின் அருமையை அறிந்தவன் என்பதால் விரைந்து முடித்துவிடுகிறேன், இதோ என் கையில் உள்ள இந்நூல் யாதும் ஊரே உலகத்தமிழ் தமிழர் பற்றிய தொகுப்பாகும்ம். கற்றனைத்து ஊறும்  என்ற நூல் எழுதியுள்ளேன்  அதில் சிங்கையின் அருமை பெருமைகளெல்லாம் விவரித்துள்ளேன்.

மலேசியா தமிழ் தமிழர்களின் கொள்கலனாக உள்ளது, சிங்கை தமிழின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. கணினித் தமிழின் கோவிந்தசாமி  அவர்கள் தோன்றிய மண் சிங்கை மண்ணாகும். தமிழ் ஆட்சிமொழியாக எல்லா நிலைகளிலு,ம் உள்ளது மட்டற்ற மகிழ்சிக்குரிய ஒன்றாகும்.

மியான்மரில் தமிழர்களின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. தொழில் துறையிலும் ஆன்மீக கோவிலகளும் வளர்ச்சிபெற்றுவருகின்றன. பர்மா மண்ணிலே எனும் நூலில் விபரமாகத் தந்துள்ளேன்.

ஐரோபிய நாடுகளில்  ஈழத் தமிழர்களின் பேராற்றலால்  தமிழ் உலக மொழியாக வலம் வருகிறது, தொலைக்காட்சிகள் வானொலிகள் இதழ்கள் என தமிழிற்கு அணி  சேர்ப்பவை ஏராளம்.

அமெரிக்காவில் தமிழர்கள் செல்வச் செழிப்பாக உள்ளனர் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து ஆண்டுதோரும் கூட்டுத் தமிழ்ச் சங்க மாநாடு நடத்திவருகின்றனர். சில ச்ங்கங்கள் மாத இதழ்கள் நடத்தி போட்டிகள் நடத்தி சிறப்பான பணிசெய்கின்றனர்.

கனடா தமிழர்களி பண்பட்டுக் களமாக உள்ளது. அண்மையில் சென்னைக்கு  வருகை தந்த துரைராசா அவர்கள் தமிழக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தோடு இணைந்து தமிழ் பட்ட வகுப்புகள் டொரோண்டோவில் பயில்கின்ற செய்தியைக் கூறினார். தமிழ் இதழ்கள் வானொலிகள் ஆலயங்கள் தொலைக்காட்சிகள் என தமிழ் சார்ந்த நிறுவனங்கள் கணக்கில.

நண்பர்களே காலம் கருதி  சுருக்கமாக முடிக்கிறேன். சிங்கையில் தங்களைக் கண்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். வணக்கம் 

Tuesday, January 28, 2014

மலேசியாவில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை

(22-12-2013 அன்றுமலேசியாவில் ப்சிலாங்கூர் கிளப்பில் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்மாமணி வா.மு. சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

     மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வோரு அமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள பெருமக்கள் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். இந்நிகழ்வை பெரும் பொறுப்பேற்று நடத்தும்  மணிவிழா நாயகர் விக்டர் சுப்பையா அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பெருங்கொடை. நானும் என் தந்தையரும் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாட்டை நடத்தத் தத்தளித்தபோது எம்மோடு இருந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருமகன். இப்பெருமகனை அறிமுகப் படுத்தி எங்களின் மன்றப் பணிகளுக்கு முதுகெலும்பாக செயல்படும் அண்ணன் டாக்டர் தருமலிங்கம் கொள்கிறேன்.

        மணிவிழாக் கண் ட நம் தலைவர் விக்டர் சுப்பையா அவர்கட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் உங்கள் கரவொலிகளுக்கிடையில் மாலையணிவித்து போர்த்தி மகிழ்ச்சியை தெருவித்துக் கொள்கிறேன்

இந்த நிகழ்வை  நடைபெற அரும்பாடுபட்ட அண்ணன் தருமலிங்கம் அவர்களின் பேருழைப்பை நேரில் கண்டவன். இந்நிகழ்வை பெரும் பொருளீந்து இந்த வெற்றிகரமாக நடத்தும் டாக்டர் சுப்பையா அவர்களும் மலேசிய இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர்கள். அருமைப் பெருமக்கள இராசாரத்தினம் ஐயா பெருமாள் மற்றும்  அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

தேர்தலை மிகச் சிறப்பாக நடத்திய தேர்தல் குழுத்தலைவர் இராமநாயகம் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கம்.  பொறுப்பேற்றுள்ள பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைப்புப் பேரவையை வழுப்படுத்தி தமிழ்மக்களின் வறுமையை நீக்கி தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் உருவாக்குங்கள் என்ற வேட்கையை தங்களிடம் பதிவு செய்கிறேன். பல்வேறு சங்கங்களைச் சார்ந்த உணர்வாளர்களைக் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன் இதுவல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை.

இந்நிகழ்வில் என்னுடைய யாதும் ஊரே நூலை அறிமுகம் செய்த ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.. மிகச் சிறப்பாக உலகமெங்கும் நான் கண்ட பெருமக்களையும் அவர்களின் அரிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டார்கள். ஒருங்கிணைந்த தமிழ் இயக்கங்களின் பேரவை சார்பில்  இந்நூல் வெளியிடுவது யாம் பெற்ற பேறு. வள்ளுவப் பெருமானின் ஒருகுறளை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.


பகச்சொல்லி கேளிர் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

நம்மில் உள்ள நன்மைகளைக் கூறி அனைவரையும் ஒன்றுபடுத்துங்கள். தீமைகளைக் கூறி பிளவுபடாதீர்கள். நட்பைப் பெருக்கி தமிழர் சக்தியை ஒன்று படுத்தி காலத்தை வெல்வோம். நன்றி வணக்கம்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றமும் நவரத்தினா குழுமமும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா


பன்னாட்டுத் தமிழுறவு  மன்றமும் நவரத்தினா குழுமமும் இணைந்து நடதும் மகாகவி பாரதி விழா தமிழர்கள் தமிழ் உணர்வை நிலைநாட்டும் விழா. இவ் விழாவிற்கு அரும் பாடுபட்டு பெருங்கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆசிரியமணி மாணிக்கம் அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். ஒராண்டு காலத் திட்டம்.  தமிழ்கத்திலிருந்து யாரை அழைத்து வருவது என சிந்தித்து 11 பெருமக்களை அழைத்து வந்துள்ளேன். அனைவரும் தமிழ் தமிழருக்காக பாடுபடும் இயக்கவாதிகள்.தமிழ் தமிழர் மேம்பாட்டுக்காக பாடுபடும் அருந்தமிழ்ச் சான்றோர்கள்.

மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீரெட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கு ஏற்ப தொண்டாற்றும் சிந்தனையாளர்கள்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்திற்கும் மலேசியாவிற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. 1977 ஆம் ஆண்டு  தமிழகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஆசிரியமணி மாணிக்கம் தலைமையில் இங்கே அமர்ந்திருக்கும் கமலாட்சி ஆறுமுகம் இணையர் இராமநாயகம், மற்றும் பெருமக்கள் பலர் 36 ஆண்டுகளுக்கு முன்பு இளமைப்[ பொலிவோடு வந்திருந்த்தனர். நான் அப்போது 18 வயது வாலிபன். இப்பெருமக்களையெல்லாம் வரவேற்று உறவாடிய சிந்தனைகளெல்லாம் நெஞ்சில் நிழாலாடுகின்றன.

தற்போது தமிழ்கத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து நம் உறவுகள் பெருகி பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பணி தழைத்தோங்குகிறது. சென்ற மாதம் இதே நட்சத்திர உணவகத்தில் தந்தையார் பெருங் கவிக்கோ அவர்கட்கு பேராக் மாநில தலைமையமைச்சர் 33ஆம் உலகக கவிஞர்கள் மாநாட்டில் உலகமாக் கவி வழங்கப்பட்டது. அதே மண்டபத்தில் மகாகவி பாரதி விழாவை நடத்தும் மாணிக்கம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மாண்பமை சாமிவேலு அவர்கள் உலகத்தமிழ்த் தலைவர்களில் தலைவர்களில் தலையானவர். இம் மாலேசியத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு வராலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளது. அவருடைய தொண்டறத்தையும் கொடையறத்தையும் போற்றி மகிழ்கிறேன். சாமிவேலரின் சார்பில் பங்கேற்றுள்ள முன்னாள் துணையமைச்சர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

மகாகவி பாரதி மனிதர்களை மட்டுமல்ல காக்கை குருவியையும் மற்ற அனைத்த உயிர்களையும் பாடிய பெருமான்.

காக்கை குருவி எங்கள் சாதி – நீள
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

இயற்கையையும்  சுதந்திர வேட்கையையும் பாடி களிப்புற்ற மகாகவி தமிழையும் தமிழர்களையும் வியந்து பாடியுள்ளார்.

 யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

தமிழுக்கு அணி சேர்த்த இலக்கியங்களையும் வள்ளுவர் கம்பர் இளங்கோ போற்றி தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார் மகாகவி
..
பன்னாட்டுத் தமிழுறவு மன்றமோ நாங்கள் நடத்தும் இதழோ தொய்வின்றி நடைபெறுவதோ தங்களைப் போன்ற பெருமக்களே அரவணைப்பே என்று கூறி பங்கேற்ற பெருமக்கட்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி காலம் கருதி விடைபெறுகிறேன்.