Tuesday, October 16, 2012

இந்தியத் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்த தில்லித் தமிழ்ச் சங்கம்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பேற்றுள்ள தலைவர் கிருட்டிண மணியும் பொதுச்செயலாளர் முகுந்தனும் பொருளாளர் அறிவழகனும் மற்றும் இராமமூர்த்தி, நாயுடு, போன்ற பெருமக்களும் நடத்திய மாநாடு மகத்தானது. இந்த மாநாட்டிற்கு அரியதொரு தொண்டாற்றிய தினமணியையும் ஆசிரியர் வைத்தியனாதனையும் தமிழுலகம் என்றும் பாராட்டும்.

முகுந்தனின் செயற்பாடு நாடறிந்த ஒன்று. தில்லியில் தமிழ் அமைப்புகளெல்லாம் இணைந்து செம்மொழிக்காக உண்ணாநோண்புப் போராட்டம் நடத்திய போது அவரது பங்களிப்பு எண்ணி எண்ணி போற்றத்தக்கதாகும்.

சென்ற ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்து மன்றங்களின் கூட்டமைப்பையும் இணைத்து தில்லியில் சந்தர் மந்தரில் ஈழத்தமிழர் வாழ்வுரி,மைக்கு அருமைத்த தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் நடத்திய உண்ணாநொண்புப் போராட்டத்திற்கு முகுந்தனின் ஈடுபாட்டை எண்ணி வியந்தேன். அப்பொது அவர் தமிழ்ச்சங்கப் பொறுப்பில் இல்லை. இருப்பினும் தோழர் கிருட்டிணமூர்த்தி ,இராமமூர்த்தியோடு இணைந்து அவர் தில்லித் தலைவர்கள் அனைவரையும் சந்தர்மந்தரில் கூட்டிய பாங்கு போற்றி மகிழத்தக்கது.

மீண்டும் செயலராகப் பொறுபேற்றவுடன் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்துவரப் பணித்தார், யான் சுந்தரராசன் கணபதி அவர்க்ளைத் தொடர்பு கொண்டு யானும் மற்ற நண்பர்களும் ஒரே குழுவாகவே செல்லலாம் என்ற கருத்தைக் கூறி தொடர்பு கொண்ட பெருமக்கள் அனைவரையும் 13 8 2012 ஆம்நாள் தமிழ்நாடு தொடர் வண்டியில் பயணச்சீட்டு எடுக்கப் பணீத்தேன். அனைவரும் ஒரு குழுவாக தில்லி நோக்கிப் பயணீத்தோம்.

தொடர்வண்டியில் ஏறும்போதே முகுந்தன் அவர்கள் செயற்குழு உறுப்பினர் குமார் அவர்களீன் எண்ணைக் கொடுத்து தங்களை அழைத்துச் செல்ல வருவார் எனக் கூறியிருந்தார். எங்களோடு அறிஞர் பெருமக்கள் கி.த. பச்சையப்பன், புலவர் அன்புமணி, புலவர் பன்னீர்செலவம், வள்ளாலார் பாமணி குப்புசாமி, சோழன் நம்பியார், சேலம் பாலன், புலவர் பிராபாகரன்,
மாங்காட்டார், திருவள்ளூர் பச்சையப்பன், கவிஞர் வனப்பிரியன், கவிஞர் கருமலைத் தமிழாளன், செந்தமிழ்விரும்பி, திருகுறள் வேம்பையன், ஞானமன்ற பன்னீர்செல்வம். மூத்தகவிஞர் புஞ்சையரசன் உடையார்கோயில் குணா,பெரியண்ணன், இரத்தினசபாபதி, இராமசந்திரன், பழனி,கிரிசந்திரன் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களோடு சென்றோம்.

    15-8-2012 அன்று காலை புதுதில்லி தொடர்வண்டி நிலையம் அடைந்தோம். தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் குமார், வெங்கடேசன் அன்பொழுக வரவேற்று இரு குளிர்பதன பேருந்துகளில் விக்டர் மந்திர் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். என்னை நன்பர்கள் விருந்தினர் மாளிகைக்கும் இல்லத்திற்கும் அழைத்தனர். யான் மறுத்து எம் இயக்க மக்களோடு இணைந்து படுத்து உறங்கி மாநாட்டில் பங்கேற்றதை பெரும் பேறாகக் கருதினேன். அனைவரும் முதல் நாள் தொடக்க நாள் விழாவிற்கு தமிழ் சங்கத்திற்குச் சென்று அவரவர் மன்றங்களை பதிவு செய்து அரங்கில் அமர்ந்தோம்,

    முன்னாள் குடியரசுத்த்லைவர் ஆபெசே அப்துல் கலாமின் உரை மாநாட்டிற்கு முத்தாய்ப்பாக இருந்தது. கவிப்பேரரசு வைரமுத்துவின்  உரை மாநாட்டிற்கு மகுடமாக இருந்த்து. மேதகு காலம் அவர்களின் செயலர் பொன்ராசு அவர்கள் சீனத்தில் திருக்குறளை மொழிபெயர்க்க பெருமகன் எடுத்த முயற்சியை பதிவு செய்தபோது அரங்கின் மகிழ்விற்கு எல்லையில்லை. கருத்தரங்கம் தில்லிவாழ் தமிழர்களும் அமுதமாக இருந்தது.
    தமிழ் இலக்கியச் சிந்தனைகள் முனைவர் தமிழண்ணல் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் பெருமக்கள் இரா.செல்வகணபதி இராம.குருநாதன், தெ.ஞானசுந்தரம், சொ.சொ.மீ.சுந்தரம், திருப்பூர் கிருட்டிணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் செயலர் முகுந்தனும் வந்திருந்து அமைப்புகளின் பெருமக்களை கருத்துரை வழங்க அழைத்தனர். இந்தியாவின் பெரும்பாண்மையான மாநிலங்களிலிருந்து பொறுப்பாளார்கள் வருகை தந்திருந்தனர். ஒவ்வோரு மாநிலத்திலிருந்தும் வந்து கருத்துரை வழங்கிய பெருமக்களைக் கண்டபோது இந்த மாநாட்டின் வெற்றியை உணரமுடிந்தது.. யானும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாக மன்றத்தின் சாதனைகளைப் பதிவு செய்தேன்.இந்த ஒருங்கிணைப்பு காலத்தின் கட்டாயம். ஆங்காங்கே வாழும் இன்ப துன்பங்களில் பங்கேற்க இந்த ஒருங்கிணைவு மிகப் பெரும் தளமாக இருக்கும்.நித்தியசிறி மகாதேவன் இன்னிசையோடு முதல்நாள் நிகழ்வு முடிந்தது. இரவு விக்டர் மண்டபத்தில் ஒன்றாக உண்டு உறங்கினோம்.

இரண்டாம் நாள் 16-8-2012 அன்று மாநாடு தொடங்கியது. விக்டர் மந்திரிலிருந்து தமிழ் மன்றத்திற்கு வரும் வழியில் வண்டலூரிலிரிந்து வருகை தந்த பெருமாட்டியின் சங்கிலியை பறித்து ஓடிவிட்டான் ஒருவன். யான் பொறுப்பாளர்களீடம் ஒரு ஊர்தி மகளிருக்கும் மூதியோருக்கும் ஏற்பாடு செய்யக் கூறியிருந்தேன். இயலாத காரணத்தால் பறிபோனது. உலக நாடுகள் அனைத்தும் பயணித்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தமிழ்ச் சங்கம் அருகில் இயல்பாக நடக்கும் ஒன்று என்று கூறினர், மலேசியாவிலும் நம் மக்களைத்தான் குறிவைப்பார்கள். ஏனெனில் நம்மிடம் உள்ள பொன்னாசையே.

இரண்டாம் நாள் நிகழ்வில் வந்திருந்த அமைப்புகளின் பெருமக்கள் கருத்துரை  வழங்கினர். கருத்தரங்கில் குன்றக்குடி ஆதினத்தின் தவத்திரு பொன்ன்னம்பள அடிகளாரின் பேச்சை எம்மை  நெகிழச்செய்தது. பாராளுமன்றத்தில் மூன்று நிமிடம் வாய்ப்புப் பெற்று ஒன்றரை மணி நேரம் பேச்சை முழங்கி, உலகமே உற்று நோக்கிய  பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்ந்தார். அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கிய மாநாட்டில் அண்ணாவை நினைவு கூறாமலே உள்ளனரே என்ற எம்போன்றோர்க்கு அடிகளார் உரை மன நிறைவைத் தந்தது. முன்னாள் துணைவேந்தர் உரை ஆழ்ந்த உரையாக இருந்தது. ஆசான் கோபாலயையர் போன்றோரை நினைபடுத்தின்னார்.
பேராசிரியர் அப்துல் காதரின் தலைமையில் கவியரங்கம். சிறப்பாக நடைபெற்றது. கவிஞர பெருமக்கள் இளங்கோ, ஆண்டாள் பிரியதர்சினி. முத்துக்குமார், முகில்வண்ணன், நெல்லை செயந்தா, உயிரோட்டக் கவிகளை வழங்கினர்.
மூத்த எழுத்தாளர் இராசநாராயணர் 90 ஆம் அகவைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.நாஞ்சில் நாடன், நடிகர் இராசேசு வாழ்த்துரை வழங்கினர்.

 புட்பவனம் குப்புசாமி அவர்களின் இன்னிசையோடு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்களும் பம்பரமாய் சுழன்ற தமிழ்ச் சங்கப் பெருமக்களும், மாநாட்டிற்கு உலகப் பெருமை தேடித் தந்த தினமணியையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

மாநாட்டில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கிய நம் நண்பர்கள் வந்திருந்த மிகப் பெரிய அமைப்புகளைக் கூட கலக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலர் பொங்கி எழுந்தனர். தமிழர் கூடும் மாநாட்டில் சுயநல சக்திகளின் செயற்பாட்டை கண்டித்து தமிழ் தமிழருக்காக பாடுபடும் தகுதியான் அமைப்புகளை கூட்டமைப்பில் ஒருங்கிணைத்தால் இந்தியத் தமிழர்களை ஒருகுடைகிழ் கொண்டு வரலாம்.இந்தப் பெருமை தில்லித் தமிழ்ச்ச்ங்கத்திற்கும் தினமணிக்கும் என்றென்றும் உண்டு.

சென்னையில் புறப்பட்ட நாளிலிருந்து சோழன் நம்பியார் அவர்கள் ஈழத்தமிழருக்காக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அமைப்புகள் அனைவரிடமும் பேசி சந்தர் மந்தரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உள்ளீட்ட  அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத் தமிழரின் வாழ்வுரிமைக்காகவும், போர்க் குற்றவாளி இராசபக்சேவிற்கு இந்தியாவில் நுழையக் கூடாது என்றும்  சந்தர் மந்தரில் 19-9-2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழகம் திரும்பினோம்






No comments:

Post a Comment