Friday, February 16, 2024

 புண்ணியர் ஸ்டாலின் வாழி

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்.


உயர்தனிச் செம்மொழி மாந்தர்   

    உன்னத நாட்டில் வாழும் 

வியத்தகு தமிழர் கூட்டி 

    வித்தக் வருகைத் தந்து 

நயத்தகு நானிலத் தமிழர்

    நன்குள பெருமை பேசி 

அயர்விலாப் பயனை நல்கும் 

      அணிபுகழ் ஸ்டாலின் வாழ்க


தமிழரின் தொண்மை கண்டு 

    தரணியில் வென்ற தமிழர் 

அமிழ்தான சேவை எண்ணி 

    அன்பு நெஞ்சத்   தோடே 

பொழியும் மழையப் போன்றே

    பொன்மாலை விருதைத் தந்தார்

 விழியெலாம் இன்பம் பொங்க 

            வித்தகத் தலைவர் ஸ்டாலின்       


வேர்களைத் தேடியே எங்கும் 

    வெல்தமிழ் மக்கள் அழைத்து 

பலகனித் தோட்டம் போன்றே 

    பல்நாடு மக்கள் கண்டோம்

களம்பல கண்ட மாந்தர்

    கலைஞர் கவிஞர் சான்றோர் 

புலம்பெயர் மாந்தர் வந்தார்

    புண்ணியர் ஸ்டாலின் வாழ்க                                                                                                      

No comments:

Post a Comment