Sunday, August 14, 2022

பாதகன் பொந்தில் மறைகிறான் 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


சூழ்ந்து தொடர்ந்து தாக்குதல்

     சூழ்ச்சி துரோக எழுச்சியே 

ஆளுமை அறியா பாதாகன்

     அடாவடி கோடுமைத் தீயவன் 

ஊரின் உன்னத மக்களை 

     உரிமையாய்க் காக்காப் பேயவன் 

போரில் கொன்றான் தமிழரை 

     பொந்தில் மறைகிறான் அவலமாய்


மக்களைத் தூசியாய் எண்ணினான்  

     மமதைக் கொழுப்பால் தள்ளினான்

 திக்கெலாம் சொத்துகள் சேர்த்துளான்

     திருட்டு வழியில் ஏய்த்தனன் 

வக்கிலாக் குடும்பம் உயர்த்தினான் 

     வறுமை மக்களை எண்ணிலன் 

மீக்கெழும் புரட்சி இலங்கையில் 

      மின்னலாய் அவலம் அழித்ததே


அலறித் துடிக்கும் பாதகன் 

    அலைந்தே ஓடியே ஒளியுரான் 

தலைமுறை தாண்டியும் தன்னலம்

 தகர்த்து எரியும் மக்களே  

     மலைநிகர் சனநாயக மாண்புகள்

 மடையன் செயலால் மாயுதே 

     கொலைகள் கண்ட கயவனின் 

கொடுமை மாய்க்கும் நாளிதே


மேதகு த்லைவனை மாய்த்தனன் 

     மேன்மைப் புலிகள் சாய்த்தனன் 

தீதீலா பால்கன் கொன்றனன் 

     திண்ணிய தமிழரை அழித்தனன்  

வீதியில் தமிழர் பிணங்களை 

     வீசிய கயமையே மாய்ந்திடு 

ஓய்விலா தமிழரின் ஓலமே 

     ஒழிக்குதே இராச பக்க்சே(வினை)

No comments:

Post a Comment