Saturday, June 18, 2011

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழா


(சென்னை கன்னிமாரா நூலகத்தில் 8-6-2011 அன்று நடைபெற்ற கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களின் 84ஆம் அகவை பிறந்தநாள் விழாவும் கவிக்கொண்டல் இதழின் 20ஆம் ஆண்டு விழாவும் அறிஞர்களுக்கு விருதளிப்பு விழாவுமாக முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விழாவிற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பெரியார் சிந்தனையாளர் பரஞ்சோதி அவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைகள் தாங்கி பழுத்த பழமாக வாழும் செங்ட்டுவனார் உணர்வுக்கு ஏற்ற தலமையாகும். வாழ்த்துரை வழங்கிய பெருமக்கள் பேராசிரியர் இராசகோபாலன், கவிவேந்தர் வேழவேந்தன்,பெரியார் பேருரையாளர் தென்மொழி ஞானபண்டிதன்,கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், தமிழ்வள்ளல் சந்திரசேகர் பொன்ற பெருமக்களெல்லாம் நெஞ்சாரப் போற்றியுள்ளனர்

பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது சென்னையில் அண்ணாசாலையில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் என்னைத் தோள் மீது இருத்தியவாறு அண்ணாவின் திரூஉடலைக் கண்டேன். தமிழகமே திறண்டுவந்து அஞ்சலி செலுத்திய,தமிழகத்தையே தமிழர்கள் கையில் வழங்கிய பேரறிஞருடன் இருந்து அண்ணாவின் எழுத்துக்களை எழுதி அண்ணாவின் உணர்வுகளை இன்றும் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் பாதுகாத்து வரும் கவிக்கொண்டல் விழாவில் பன்கேற்பது யான் பெற்ற பேறு.

யான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை ஐயா அவர்க்ளின் மீது அன்பும் ஈடுபாடும் உண்டு. என் அருமைத் தந்தையாரும் ஐயா அவர்களும் இணைந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு வித்தூன்றியவர்கள். அக்காலகட்டங்களில் புரட்சிக்கவிஞர் பாவெந்தரை இருட்டடிப்பு செய்ய ஒரு கூட்டமே இருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்றங்கள் ஒன்றியப்பேரவை என்ற அமைப்பின் மூலம் தமிழ் மன்றங்களை ஒன்றிணைத்து மாதம் முழுமையும் பாவேந்தருக்கு விழா நடத்திய பெருமைகுரியவர்கள்.

பாவேந்தரின் சிலையை பிறந்தநாளின்பொது ஏணி போட்டு ஏறி கழுவி மாலை சூட்டி விழாநடத்திய பெருமைக்குரியவர்கள். பாவேந்தரின் சிலை அருகே கவிஞர் குழாத்தே கூடி யிருந்தது இன்றும் நிழலாடுகிறது. பாவெந்தரின் புகழ்பாடும் இதழாகவே இன்றும் கவிக்கொண்டலை நடத்தி பாவேந்தர் பாசறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவே உள்ளார்.

நெஞசம் மறவா நிகழ்ச்சிகள் தம் கவிக்கொண்டலில் தொடர்ச்சியாக வெளியிட்டு நூலாகவும் வெளிக் கொணர்ந்துள்ளார்.அவரது நூலைப் படிக்கும் போது திராவிட இயக்க வரலாற்றை அறியக் கூடிய பேழையாக உள்ளது. தொடர்ந்து ஐயா அவர்கள் தன் அனுபவங்களைப் பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிமையும் மக்கள் நேயப் பண்பையும் ஐயாவின் எழுத்தில் படிக்கும்போது கண்கள் பணீக்கின்றது. ஐயாவின் எழுத்துக்கள் திராவிட இயக்கத்தின் ஆவணமாகவே உள்ளது.

கவிக்கொண்டல் மா.செ தலைசிறந்த இதழாளர் பதிப்பாளர். தலைசிறந்த தமிழகத்து மலர்களை தொகுத்து வழங்கிய பெருமைகுரியவர். தந்தைபெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமானப் பேராசிரியர் போன்ற பெருந்தலைவர்களுடன் இதழ்ப் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மூத்த பத்திரிக்கையாளர். இதழியல் கல்வி படிப்போரெல்லாம் மா.செ. அவர்களுடன் பயிற்சி மேற்கொண்டால் இதழாலர்களுக்கு பகுத்தறிவு உணர்வு செழிக்கும். தமிழினம் தழைக்கும்.

கவிகொண்டல் இதழில் வெண்பா விருந்து மூலம் எண்ணற்ற எழுத்தாளர்களை இலக்கண வரம்புக்கு உட்பட்ட கவிஞர்களை உருவாக்கியவர். ஒரு கவிஞர் கவிக்கொண்டலில் எழுதினால் மரபுவழிப் பாவலர் என்ற பெருமையைப் பெறும் பல்கலைக் கழகமாக கவிகொண்டல் இதழ் உள்ளது

கவிகொண்டல் மாசெ அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து தமிழ் தமிழரின் அடையளங்களையும் நெஞ்சம் மறவா நிகழ்சிகளின் மூலம் பெரியார் அண்ணா கலைஞரோடு உள்ள திராவிட போராட்ட உணர்வுகளையும் பதிவு செய்ய வேண்டி விழைகிறேன்.

மருத்துவமணையில் உள்ள அம்மையார் தாமரைச்செல்வி அம்மையார் நலம் பெற்று ஐயா அவர்களின் பணி சிறக்க எனது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment