Thursday, December 5, 2013

விழிமின் எழுமின் விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள்

(4-12-2013 அன்று பாரதிய வித்யாபவனில் விழிமின் எழுமின் விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள் எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


       மனத்துக்கண்  மாசிலன் ஆதல் அனைத்தறன்  
ஆகுல நீர பிற.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.   

   
தமிழகப் புலவர் குழுவும் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் இணைந்து ஒராண்டு காலமாக  நடத்தும் விழிமின் எழுமின் விவேகாநந்தரின் சிந்தனைகள் தலைப்பில் 11 சிந்தனையாளர்கள் பேசியுள்ளனர். இதுநாள்வரை 11 சான்றோர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். விவேகானந்தரின் 150 அகவைத் திருவிழாவை அறிவுப்பூர்வமாக பெருமகனின் சிந்தனையை எண்ணி உணர்ந்து மகிழும் சூழலை உருவாக்கிய சகோதரி கி.ஆ.பெ.வி யின் திருமகள் மணிமேகலைக் கண்ணன் அவர்களையும் நினைத்தாலே இனிக்கும் கிருட்டிணா இனிப்பக உரிமையாளர் முரளி அவர்களையும் துணை நிற்கும் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெருவித்துக் கொள்கிறேன்.

            நிறைவு மாதத்திற்கு விவேகாநந்தரின் உலகச் சிந்தனைகள் எனும் தலைப்பில் என்னைப் பேச அழைத்துள்ளீர்கள். விருது வழங்க பாவேந்தர் பரம்பரையை உருவாக்கி வரும் பெருங்கவிஞர் பொன்னடியார் அவர்களை அழைத்துள்ளீர்கள். நூற்றாண்டு விழாக்கண்ட பேரறிஞர் மு. வரதராசனாரின் பெயரில் வழங்குவது சாலப் பொருத்தமாகும்.

நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்கிய மூத்த வழக்கறிஞர் காந்தி மிகச் சிறந்த புரவலர். அவர் தம்முடைய வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். தம் இளமைக்காலத்தில் மிகச்சாதரண மாணவனாக  இருந்து உயர்ந்துள்ளதை பதிவு செய்துள்ளார்.இளைஞர்கள் அனைவரும்  படிக்கவேண்டிய நூல். முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் இன்றைய சமச்சீர் கல்விக்கு மூல காரணமானவர். பெருமக்களின் வருகையெல்லாம் மன மகிழ்வைத் தருகிறது. வருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

நரேந்திரர்
                அருள்ஞானி நரேந்திர தத்தா 12-1-1863 அன்று விசுவனாத தத்தா புவனேசுவரி இணையருக்கு மேற்கு வங்கத்தில் கல்கத்தாநகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில்  பிறந்தார். கொல்கத்தா மாநிலக்  கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றார்.  1884 ஆம் ஆண்டில் சுகாட்டிசு சர்ச் கலலூரி  உயர் கல்வி பயின்று தத்துவத்தில் இளங்கலை  பட்டம் பெற்றார்.. தந்தையாரின் தொழில் நலிவால் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த நாரேந்திரர் கல்லூரியின் ஏழைமாணவர்களில் ஒருவராகப் பயின்றார்.

குருநாதர்
1881 பிற்பகுதி 1882 முற்பகுதி  காலங்களில் தம் குருநாதர் இராமகிருட்டிண பரமகம்சர் அவர்களை தக்சனேசுவரத்தில் சந்தித்தார். இந்த அருட் சந்திப்பே நாரேந்திரரின் வாழ்கையின் திருப்பும்னையானது. குருநாதரிடம் தொடக்கத்தில் சாதாரணமாகச் சென்றவர் இராமகிருட்டிண பரமகம்சரின் தலைசிறந்த சீடரானார். நான்கு ஆண்டுகள் இராமகி ருட்டிணரின் தொடர்ந்து சென்று அருட்பணிஆற்றினார். 1895 இல் குருநாதருக்கு புற்றுநோய் தொண்டையில் தாக்க மருதுத்வதிற்கு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அந்தக் காலக கட்டங்களில் இராமகிருட்டிணரின் சீடர்கள் அருளுரைகள் வழங்கினர். நரேந்திரர் குருநாதரின் தொண்டினை சிறப்புறச் செய்தார். 1886ஆம் ஆண்டு இராமகிருட்டிணர் காலமானார்.

இந்தியப் பயணம்
      குருநாதரின் மறைவுக்குப் பின் நான்கு ஆண்டுகள்  இந்தியா முழுமையும் பயணம் செய்து அருளுரை ஆற்றி ஆண்மீகத் தொண்டாற்றினார். .1892 1893 ஆம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மதுரை கும்பகோணம் சென்னை தமிழகத்தின் பகுதிகட்கு வந்தார். மதுரையில் இராமனாதபுரம் அரசர் பாற்கர சேதுபதி அவர்களைச் சந்தித்தார். இராமநாதபுரம் அரசர் தனக்கு வந்த அமெரிக்கா அழைப்பை நரேந்திரரை செல்லுமாறு வேண்டினார். தென்னகத்துப் பெருமக்களும் தமிழக ஆன்மீக சிந்தனையாளர்களும், சென்னையைச் சேர்ந்த பெருமாள் என்ற பெருமகன் வீடு வீடாகச் சென்று நரேந்திரரின் பயணத்திற்கு பொருள்சேர்த்தனர்

விவேகாநந்தர் உலகப் பயணம்
உலகச் சமய  மாநாட்டிற்கு 31 – 5 - 1893  மும்பையிலிருந்து அமெரிக்கா செல்லும்போது சுவாமி.  விவேகாநந்தராக செல்கிறார். சப்பானின் (நாகசாகி, கோபே, யோக்கோமா, ஒசாகா,) சினா கனடா வழியாக   30 – 7 -1893 அன்று சிகாக்கோ அடைந்தார். சுவாமி விவேகாநந்தர்  கார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்றி ரைட் அவர்களைத் தொடர்பு கொண்டு  பலகலைக்கழகத்தில்  உரையாற்றினார். சிக்காக்கோ பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முறையான அனுமதி இன்மையறிந்து தங்களிடம் அனுமதி கேட்பது என்பது சூரியனிடம் தன் அருளொளியை வழங்க அனுமதி கேட்பதைப் போன்றது என்கிறார். பேராசிரியர் ரைட்.("To ask for your credentials is like asking the sun to state its right to shine in the heavens" )

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் 11 – 09 – 1893 அன்று உலகச் சமய மாநாட்டில் அரியதொரு உரையாற்றினார் தொடக்கத்திலேயே அமெரிக்கா சகோதர சகோதரிகளே என முங்கிய முழக்கம் அரங்கமே எழுந்துநின்று கரவொலி எழுப்பியது. சுவாமி விவேகாநந்தரின் 150  அகவை நிறைவின்பொதும் உலகமே போற்றும் முழ்க்கமாக உள்ளது

இங்கிலாந்தில் நவம்பர் 1895ல் மார்க்கெட் எலிச்பத் என்ற புனித் ஐரிசு மங்கையை சந்தித்தார். இவர்தான் அருட்சகோதரி நிவேதிதா. 1896ல் இந்தியவரலாற்று அறிஞர்  அக்ச்போர்டு பல்கலைக்கழக மாக்சுமுல்லரை சந்தித்தார். தம் குருநாதர் இராமகிருட்டிணர் வரலாற்றை பதிவு செய்தார். செருமணியில் இந்திய வரலாற்று அறிஞர் பவுல் டூயுசன் அவர்களைச் சந்தித்தார்.

தமிழக வரவேற்பு
சுவாமி  விவேகாநந்தர் 15-1-1897 அன்’று கொலம்போ வழியாக பாம்பன் குந்துக்கால் பகுதிக்கு வந்தடைந்தார். பாம்பனில் மிகச்சிறப்பான வரவேற்பளித்தார் இராமநாதபுரம் அரசர் பாட்கர சேதுபதி. பின் இராமேசுவரம் இராமநாதபுரம் மதுரை கும்பகோணம் சென்னை வழியாக சென்னை வந்தடைந்தார். 1 – 5- 1897 அன்று கல்கத்தாவில் இராமகிருட்டிண மடத்தைத் தொடங்கினார்.

சுவாமி விவேகாநந்தர் மீண்டும் 1899 – 1892 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வேதாந்த கருத்துக்களை உலகம் முழுமையும் பரப்பினார்.

ஆசை
”ஆசைகள் இருந்து அவற்றை நிறைவேற்றும் வழி  கிடைக்காமல் போகும்போதுதான் துன்பம் எனற வினோதமான் பிரதிச்செயல் உண்டாகிறது. ஆசைக்குக் காரணம் யார்? நான்,  நானே எனவே இப்போது நான் படும் துன்பங்களுக்கெல்லாம் நானே காரணம்.” 11 12 1895

வண்ணத்துப்புழு தன் உடலிலிருந்து சுரக்கின்றபொருளால் தன்னைச் சுற்றி தானே கூடமைத்துக் கொண்டு அதில் தானே சிறைப்படுகிறது அங்கே அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் இறுதில் அதுவே ஞானம் பெறுகிறதது அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது

மனிதனே கடவுள்
 மனிதன் இயல்பிலேயே கொடியவன் அல்ல அவன் தூயவன் முற்றிலும் புனிதமானவன்  தெய்வீகமாணவன் நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் கடவுள்தான். 11 12 1895
 சோலனும் குரோசனும் பற்றியகதை  ஆசியாமைனர் மகிழ்ச்சி நிறைந்த இடம் என்று அரசன் குரோசசு முனிவர் சொலனிடம் கூறுகிறான்.உங்கள் வாழ்வின் இறுதிவரை  பொறுங்கள் என கூறிகிறார். என்ன உளறிகிறீர்கள்  என கோபமுறுகிறான். நாளடைவில் பாரசீகர்கள் குரோசனை வென்று அவனை உயிருடன் எரிக்குமாறு கட்டளையிட்டனர் சிதை அடுக்கப்பட்டவுடன் சோலன் சோலன் என்று கத்தினான். யாரை நினைத்துக் கத்துகிறாய் என பாரசீகமன்னன் கேட்டபோது தனக்கும் சோலனுக்கும் நடந்த உரையாடலைக் கூறியவுடன் மன்னன் இரக்கம் கொண்டு விடுவித்தான். 18 – 12-  1895.
      இன்பம் எங்கிருக்கிறதோ ஆனந்தம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் இறைவனாகிய சக்தி இருக்கிறது. 8 – 1 – 1896
மாயை
மாயையை இன்னொறு மாயையால் முறியடிக்கலாம். அதுதான சாதனைப் பயிற்சி என்கிறார் சுவாமி நெருப்பு நெருப்பையே தின்றுவிடும். ஒருமேகம் பழைய மேகத்தைத் துரத்தும் பிறகு இரண்டுமே மறைந்து விடும். முகமதியர்கள் இந்துக்கள் நரி நாயை அமங்களமான மிருகங்களாகவே காண்கிறார்கள் நாய் முகர்ந்துவிட்டாலே உண்ணத் தகுதியற்றதாகிவிடுகிறது. ஒரு ஏழை முகமதியன் வீட்டில்  உணவில்  ஒரு நரி சிறுபகுதியை தின்று விடுகிறதுன. தனக்காக சிரமப்பட்டு செய்த உணவை திண்ண முடியவில்லையே என்ற கவலையில்  முல்லாவிடம் நரி என் ஆசையில்  மண்ணைப் போட்டுவிட்டது என முறையிட்டான்.முல்லா ஒரு பரிகாரம் கூறினார் ஒரு நாயைப் பிடித்து சிறிது உணவை சாப்பிடச் செய்துவிடு. நாயும் நரியும் பிறவிப் பகைவர்கள் ஒன்றின் அசுத்தத்தை மற்றொன்று மாற்றிவிடும். முள்ளை  முள்ளால்  எடுத்துவிட்டு எறிந்துவிடுவது போன்றது. 22 – 1 – 1896

இருப்பது ஒன்றே
 பிரபஞ்சத்தில் மூன்றும் இல்லை இரண்டும் இல்லை இருப்பது ஒன்றே. மாயையால் பலவாகத் தெரிகிறது. நெடுந்தூரத்தில் உங்கள் நண்பன் வருவதாக வைத்துக் கொள்வோம் இருவருக்கும் இடையே உள்ள இருள் மூடுபணி புகை காரணமாக யாரோ என நினைக்கிறீர்ககள். நண்பனை வேறு ஒருவராக நிணைக்கும்போது அவன் வேறொருவனாகத் தெரிகிறான். நண்பனைக் காணும்போது அ அவன் மறைகிறான். இரண்டு நிலையிலும் நீங்கள் பார்ப்பது ஒருவரைத்தான்.
சுவாமி அவர்கள் விந்தை உலகில் ஆலிசி(Alice in woderland) சிறுவர் கதைகளில் தாம் படித்தவற்றை கூறுகிறார்கள். ஒன்றிற்கும் மன்றொன்றிற்கும்  தொடர்பு இல்லாத நிகழ்ச்சி வரும் ஒரு சம்பந்தமும் இல்லாத அடுத்த சம்பவத்தில் அது முடியும் சிறுவர்களாக இருக்கும்போது அதில் பெரியதொடர்பு இருப்பது போல் தோன்றியது. கனவு காணும்போது தொடர்பு உடையதாகத்தான் தோன்றும் விழித்தபின்பு அதன் தொடர்பிண்மை புரிகிறது.
“ மாயை வான்வெளியில்  ஓடும் மேகக் கூட்டங்களைப்போல் தோன்றி மறைபவை. மா/றாத அந்தக் கதிரவன் நீங்களே இரண்டும் ஒன்றே. அதனை வெளியில் நின்று பார்க்கும்போது கடவுள் என்கிறீர்கள் உள்ளிருந்து பார்க்கும்போது அது நீங்களே.இரண்டும் ஒன்றே உங்களிருந்து வேறான இறைவன் இல்லை. உங்களைவிட  உயர்ந்த உண்மையான இறைவனும் இல்லை.” 29 – 1 - 1896 

மதத்தின் தோற்றம்
      மதங்கள் தோன்றியதைப் பற்றி சுவாமிகள் கூறுகிறார். தற்கால அறிஞர்கள் இரண்டு கொள்கைகளை ஒப்புகின்றனர். ஒன்று இறந்தமுன்னோர்களை வழிபடுதல் மற்றொன்று எலலையற்ற பரம்பொருள் கருத்தின் பரிணாம வளர்ச்சி இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்தி  வழிபடத் தொடங்கியதிலிருந்துதான் மதம் தோன்றியது. எகிப்தியர் , பாபிலோனியர்,சீனர்கள் அமெரிக்கர்கள் மற்று பல இடங்களில் முன்னோர் வழிபாடே மதங்களாக தோன்றியுள்ளன. பண்டைய இந்துக்களும்  முன்னோர் வழிபாடே மதத்திற்கு அடிப்படையாக இருந்தது (7 – 6 – 1896)
      புலன்களின் மூலம் எல்லையற்ற சக்தியையும் ஆனந்தத்தையும்  அடைய முயலும்போது  அவன் விடாது பிடித்துக்கொண்டிருக்கும் தனித்துவத்தைப் பற்றிய கருத்துக்களைத் துறந்துவிடவேண்டும். நான்தான் முதலில் என்று புலன்கள் கூற்கின்றன அறநெறியோ நான்தான் கடைசி என்று கூறுகிறது.
      பழைய ஏற்பாட்டில்  உள்ள பிரளயக் கதையையும் பழங்கால எகிப்தியர் , பாபிலோனியர்,சீனர்கள் இந்துக்கள் இவர்களிடையேயும் இக் கதை நிலவுவதை சுவாமி  கூறுகிறார்.  மனு என்ற பண்டைய முனிவர் கங்கைக் கரையில்  தவம் செய்யும்போது ஒரு சிறிய  மீன் தன்னை பெரியமீன் துரத்துவதாகவும்  அடைக்களம் புகுந்தது. அதைத் தம்மின் கமண்டலத்தில் விட்டார். பெரிதாக வளர்ந்ததால் கமண்டலத்தில் வாழமுடியாது  என்றது மனு குளத்தில் விட்டார். அது குளத்தளவு வளர்ந்த்தால் குளத்தில் வாழமுடியாது என்றது மனு அதை ஆற்றில் விட்டார். ஆறளவு வளர்ந்துவிட்டதால் மனு அதை கடலில் விட்டார். அப்போது அந்த மீன் ஓ மனௌ நான்தான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததவன் நான் இந்த உலகத்தை பெருவெள்ளத்தால் நிரப்பப் போகிறேன்.  நீ ஒரு பெரிய கப்பல் செய்து  ஒவ்வொரு மிருகத்திலும் ஒரு ஆண் ஒரு பெண் பாதுகாத்து வை. உன்  குடும்பத்தையும்  ஏற்றிக்கொள் என் கொம்பு தண்ணீரில்  நீட்டிக் கொண்டிருக்கும் கப்பலை அந்தக் கொம்பில் கட்டி விடுபிரளயம் நின்றவுடன் கப்பலை விட்டு வெளியே வந்து உலகில  மனித இனத்தைப் பெருக்கு என நீரில் மூழ்கியது. அது கூறியபடியே செய்தார். மனுவிலிருந்து தோன்றியதால் மனிதன் ஆனோம் என்று சுவாமி கூறுகிறார் (21-6-1896)

ஆன்மா
      ”தன்னைத் தேடும்படியும் உணரும்படியும் உங்களைத் தூண்டுவது உங்களுக்கு உள்ளே இருக்கும் கடவுள்தான்.கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலுக்  விண்ணிலும் மற்றெல்லா  இடங்களிலும் தேடிவிட்டு பலகாலமாக கட்வுளைத் தேடிவிட்டு ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே  வந்து சேறுகிறீர்கள்.” (21-6-1896)
இருள்
      சுவாமி அவர்கள் முதலில் இருளே எங்கும் இருந்த்து. மூன்று பெரிய கவிஞர்கள் கவிதையில் மில்டன் “வெளிச்சம் இல்லை கண்ணுக்கு புலனாகிற இருள் உண்டு. “ஊசியாள் துளைக்கக்கூடிய இருள் என்கிறார் காளிதசர்.ஆனால் வேதத்தில் இருளில் மறைந்து கிடக்கும் இருள்” சிறிது நேரத்தில் வானம் முழுதும் பரவுகின்றது  இருண்டமேகங்கள் ஒன்றன்மேல் ஒன்று வந்து குவிந்து வெள்ளமாய் பொழிகின்றன(13-10-1896).
      மிருகங்கள் தாவரத்தை அழித்து வாழ்கின்றன.மனிதர்கள் மிருகங்களை அழித்து வாழ்கிறார்கள்.மிக மோசமானது என்னவென்றால் வலியவர் எளியவரை அழித்து வாழ்வதுதான் இது உலகம் முழுதும் நடைபெறுகிறது. இதுதான் மாயை   (13-10-1896)


கற்புநெறி.
ஒருநாட்டின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி கற்புநெறி பிறழ்வதே. கற்புநெறி நிலைபிறழத் தொடங்கிவிட்டால் அந்த இனத்தின் அழிவு அழிவு ஆரம்பித்துவிட்டது.இந்த துன்பங்ளூக்கு எங்கே போய் தீர்வு காண்பது, (13-10-1896).

சண்டைக்கு காரணம்
பிறருடைய தெய்வங்களை நமது தெய்வங்களை வைத்தும் பிறருடைய இலட்சியங்களை நமது லட்சியங்களை வைத்தும் பிறருடைய நோக்கங்களை நமது நோக்கங்களை வைத்தும் எடைபோடுவதுதான் பெருமளவு சண்டைகளுக்கு காராணம் என்கிறார் சுவாமி. (20 – 10 – 1896)

கருணைகாட்டுங்கள்
கருணையே இல்லாமல் அறிவுமட்டும்  நிறைய இருப்பதைவிட அறிவே சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதையே விரும்புகிறேன் என்கிறார் சுவாமி. (27 – 10 – 1896)
இதயமும் அறிவும் இணைந்த ஒரு நிலையே நமக்குத்தேவை எல்லையற்ற பரந்த இதயமும்  உணர்ச்சியும் அதேவேளையில் எல்லையற்ற  அறிவும் நமக்கு இருக்க வேண்டும். (27 – 10 – 1896)

விடாமுயற்சி
      ஈசாப்பின் கதை ஒன்றை சுவாமிகள் கூறி ஆசை என்ற மாயை பற்றிக் கூறுகிறார்.ஒரு கலைமான் தன் குட்டியிடம் தன் அழகு வலிமை ஆற்றல் அனைத்தையும் கூறி பெருமைபட்டுக்கொண்டிருந்தது. அப்போது தொலைவில் வேட்டை நாயின் குரைக்கும்  சப்தம் கேட்டவுடன் அவ்வளவுதான் எடுத்தது ஓட்டம் பின் மூச்சுத்திணர வந்தது. குட்டி சக்திவாய்ந்தவன் என்று கூறினாயே நாய் குரைத்த்தும் இப்படி ஓடி விட்டாயே அது எப்படி. தைரியமானவந்தான் ஆனால் நாய் குறைக்கு சப்தம் கேட்டால் தைரியமெல்லாம் பறந்து விடுகிறது. நம் மனித குலம்   பலமும்  தைரியமும் வாய்ந்தவர்கள் என்று கருதுகிறோம். துன்பம் ஆசைகளாகிய நாய்கள் நம்மைப் குரைக்கும்போது மானைப் போலவே நடந்துகொள்கிறோம் நிலைமை இதுவானால் அறிவுரைகளால் என்ன பயன். விடாமுயற்சி முடிவில் வெற்றிதரும். ஒருநாளில் எதையும் சாதிக்க முடியாது. (27-10-1896)

குறிக்கோள்
      இலட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகளைச் செய்வானால் இலட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான். எனவே இலட்சியம் நமது இதயத்தில் மூளையில் நாடிநரம்புகளில் புகும் வரை நமது இரத்தத் துளிகளில் கலந்து துடிக்கும்வரை உடலில் அனுக்கள்தோறும் ஊடுறுவும் வரை நாம் அதைப் பற்றியே  பேச சிந்திக்க வேண்டும் உள்ளம் நிறையும்போது வாய் பேசுகிறது உள்ளத்தின் நிறைவுதான் கைகளை வேலைசெய்யத் தூண்டுகிறது என சுவாமி அருளுரை வழங்கியுள்ளார். (27-10-1896)

அறியாமை
      சுவாமிகள் ரோமாபுரி பணக்காரனைப் பற்றிக் கூறுகிறார். தன்சொத்தில் 10 இலட்சம் பவுண்ட்தான் எஞ்சியிருந்தன என்பதை ஒரு நாள் கண்டான். நாளைகு என்ன செய்வது என்று திகைத்துபோய் தற்கொலை செய்துகொண்டான்.10 இலட்சம் பவுண்ட்கூட அவனு ஏழ்மைதான். தன் இளமையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதுதான் இன்பத்தின் உச்சிக்கு கொண்டுசெல்லும் இப்போது அப்படி நினைக்கவில்லை இறுதியில்  அகன்று செல்லும் மூட நம்பிக்கையாகும். என சுவாமிகள் அறியாமையைக் கூறுகிறார். (29-10-1896)
      பழங்காலத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று தின்றார்கள். ஆனால் இன்று ஒருவரை ஒருவர் சாப்பிடுவதில்லை. ஆனால் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.இதனால் நாடுகளும்  நகரங்களுமே அழிந்து போகின்றன. (29-10-1896)
      நாம் எல்லோரு நாத்திகர்களே. ஆனாலும் நான் நாத்திகன் என்பவனோடு சண்டை போடுகிறோம் நாம் எல்லோரும்  அஞ்ஞான் இருளில் மூழ்கி இருக்கிறோம். நம்மைப் பொறுதுவரை ஆன்மீக என்பதெல்லாம்  வெறு சாத்திர அறிவு வாய் சம்பம் வெறும்  வெறுமை மட்டுமே. ஒருவனுக்கு நன்றாகப் பேசத்தெரிந்தால் போதும் அவனை ஆன்மீகவாதி  என்று கூறிவிடுகிறோம் இதுவெல்லாம் ஆன்மீகம் அல்ல என்று சுவாமி கூறுகிறார்.

இன்பமும் துன்பமும்

      தீமை நன்மை இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போவதாக உலக வரலாறு கூறுகிறது. காட்டில் வசிக்கும் மானிடனுக்கு இன்பமனுபவிக்கும்  சக்தி மிகக் குறைவு. வயிற்றுக்கு உணவு கிடைக்காவிட்டால் துன்பமடைகிறான். காட்டில் அவன் விருப்பம்போல் சுற்றி விருப்பம்போல் வேட்டையாடும் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவனைப் போல் இன்பம் அடைபவர்கள் யாரும் கிடையாது.அதே மனிதன் அறிவை வளர்த்துக் கொண்டால் அவனுக்கு இன்பனுபவம் அதிகரிக்கிறது. ஓர் அழகிய கவிதையை படிப்பதில் இன்பம் காண்கிறான்.கணிதப்பிரச்சனையில் அவன் தன்னை மறந்துவிடுகிறான் அதன் கூடவே நுட்பமடைந்த நரம்புகள் மனத்துன்பத்திற்கு அடிமைப் படுகின்றன். காட்டுமனிதனுகு மனத் துன்பம் என்பதே இல்லை. (3-11-1896)
      உலகின் பணக்காரநாடான உங்கள் நாட்டையே எடுத்துக்  கொள்வோம்.உங்கள் நாடு மற்ற நாடுகளைவிட போகம் மிகுந்தது. அதே நேரத்தில் இங்கே உள்ள துன்பத்தின் தீவிரத்தையும் நோக்குங்கள்.உங்கள் நாட்டில்தான் பைத்தியக்காரர்கள்   அதிகம். உங்களைவிட இன்பம் குறைவாக  அனுபவிப்பவர்களுக்கு துன்பமும் குறைவாகவே இருக்கிறது.

மூடநம்பிக்கை

      சுவாமிகள் இளைஞனாக இருந்த போது ஒரு நிகழ்ச்சியை நினைவுப்டுத்துகிறார்.ஒரு வாலிபனின் தந்தை சொத்தில்லாத நிலையில் பெரிய குடும்பத்தை அவன் தலையில் கட்டிவிட்டு .இறந்துவிடுகிறார்.தந்தையின் நன்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஒரு மதவாதியிடம் சென்று துன்பத்தைக் கூறியபோது அவர் எல்லாம் நண்மைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே என அறிவுரை வழங்கினார். பழுத்த புண்ணின் மீது தங்க இலையை வைத்து மறைப்பது போன்ற செயல் இதெல்லாம் மிகப் பழைமையான் பரிகாரம். ஆறு மாத்திற்குப் பின்னால் மதவாதிக்கு ஒரு குழந்தை பிறந்து ஒரு விருந்து வைத்தார். அந்த வாலிபரையும் அழைத்திருந்தார்.கடவுளின் கருனைக்கு நன்றி என வழிபட்டார். உடனே வாலிபன் எழுந்து நின்று நிறுத்துங்கள் இதெல்லாம் துன்பம் என்று கூறினார் .என் தந்தை வெளிப்படையாக் இறந்ததை நன்மை என்று கூறினீர்கள் அதன்படி உங்களுக்கு குழந்தை பிறந்திருப்பது தீமைதானே என்று கூறினான்.இதுதான் துன்பத்தைத் துடைக்கும் வழியா நல்லவர்களாக இருங்கள். அதிமூடி மறைக்க முயலாதீர்கள். துன்புறுவோருக்கு அன்பு காட்டுங்கள் என சுவாமி அருளுரை வழங்குகிறார். (3-11-1896)
கவிதைகளின் அருளுணர்வு
      கவிதைகள் வாயிலாக மக்களுக்கு அருளுணர்வு உண்டாகிறது என்கிறார் பிளாட்டோ.. உண்மையை உணர்ந்தவர்களாகிய பழங்கால கவிகள் சாதரன மனித் நிலையிலிருந்து உயர் நிலைக்குச் சென்று கவிதைவடிவமாக  எடுத்துக் காட்டினார்கள்.(11-12-1896) என்று சுவாமி கூறுகிறார்.
      சுவாமி கூறிய வண்ணம் அவர் வழங்கிய கவிதையை கேளுங்கள். சௌந்திர கைலாசம் அம்மையார் மொழிபெயர்த்தது.
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்தில் எல்லாம் உளன்

        என்ற குறளுக்கு சான்றாக இலக்கணமாக வாழ்ந்த பெருமகன். உலகமக்கள் உள்ளதில் எல்லாம் வாழ்கிறர். விழாவிற்கு வருகை தந்த பெருமக்கட்கும் நடதிய பெருமக்கட்கு நன்றி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.


No comments:

Post a Comment