Sunday, December 8, 2013

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் தமிழ்மாமணி வா.மு.சே. .திருவள்ளுவர் தலைமையில் மலேசியாவில் ஈப்போ நகரில் மகாகவி பாரதியார் விழாவில் பங்கேற்கும் தமிழ்ச் சான்றோர்கள்.



1. தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

42 காலமாக வெளிவரும் தமிழ்ப்பணி இதழின் ஆசிரியர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர். உலகளாவிய நிலையில் செருமணி, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆறு மாநாடுகள் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்.உலகத் தமிழர்களின் சிந்தனைப்பெட்டகமாக மாநாட்டு மலர்களை தமிழுலகுக்கு வழங்கியவர். மிகச் சிறந்த கவிஞர் எழுத்தாளர் உரையாளர் பதிப்பாளர் இதழாளர். பயணம் கவிதை கட்டுரை ஆய்வு என 12 நூல்களின் நூலாசிரியர். தமிழ் தமிழர்  சிந்தனையில் தந்தையின் வழித்தடத்தில் உலகெங்கும் பயணித்த பண்பாளர். உலகெங்கும் இவர் பெற்ற விருதுகள் ஏராளம் இருப்பினும் தமிழ்த் தொண்டராக வாழ்வதையே பெரும் பேறாக எண்ணுபவர்.

2. புலவர் ஆ..நெடுஞ்சேரலாதன்.

தமிழாசிரியர் நெடுஞ்சேரலாதன் பாவாணர் கோட்டம் அமைத்தவர்.பாவாணருக்கு முழு உருவச்சிலை நுலகம் இதழ்ப்பணியகம் நூற்றாண்டுவளைவு அமைத்து ஆண்டுக்கு 23 கூட்டங்கள் நடத்தி வருபவர். தந்தைபெரியார்  பாவேந்தர் பாரதிதாசன் திருவள்ளுவர்  புகழ்பரப்ப அமைப்புகளை உள்ளடக்கி விழாக்களை நடத்தி வருபவர். பாவாணர் கண்ட உலகத்தமிழ்க் கழகத்தில் மாநிலப் பொருளாளார்.முதன்மொழி இதழ் ஆசிரியக்குழு உறுப்பினர். பாவாணரியல் எனும் முத்திங்களிதழின் ஆசிரியர். பாவலர் நூலாசிரியர் சொற்பொழிவாளர் கட்டுரையாளார் என பன்முக சிந்தனையாளர்.

3. கவிஞர் செம்பை சேவியர்

திராவிட இயக்கத்தின் தீரர். இலக்குவனார் இலகியப் பேரவை நிறுவி மாதம் தோறும் இலக்கியாவிழா நடத்தி ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் பொன்மனத்தர். மிகச் சிறந்த நூலாசிரியர் கவிதை கட்டுரை என 14 நூலகளை வெளியிட்டுள்ளார். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர். பெருந்தலைவர் காமராசரிடம் கவிதைக்கான முதற்பரிசு பெற்ற பெருமைக்குரியவர்.

4 புலவர். உ. தேவதாசு.

தமிழ் இலக்கியங்களைக் கற்று பெரும்புலவராக தமிழகத்தில் வலம் வருபவர். இலக்குவனார் இலக்கியப்பேரவையின் செயலர். மிகச் சிறந்த கவிஞர். கம்பராமயண தொடர் சொற்பொழிவு ஆற்றியவர். அம்பத்தூர் கம்பன்கழக ஆட்சிமன்ற உறுப்பினர். காரைக்குடி கம்பன் கழக பவள விழாவில் கட்டுரைப்போட்டியில் முதற்பரிசு பெற்றவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர்.

5. முனைவர் க. பன்னீர்செல்வம்

மாநில மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பெருமைக்குரியவர். பொம்மலாட்டக் கலைஞர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொறுப்பாளர். அறி.வியல் இயக்கப் பொறுப்பாளர். 9 நூல்களின் நூலாசிரியர். . பன்னாட்டுத் தமிழுறவு மன்ற   மலேசியா 6 ஆம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்கியவர்.பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்றவர். தாய்லாந்து பாரதியார் விழாவில் பங்கேற்று கவி பாடியவர். தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றும் தூய தொண்டர்.

6. கவிஞர் சுந்தரமூர்த்தி

பள்ளித்தலைமையாசிரியராகப் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கியர். தமிழ்கத்தின் பல்வேறு அமைப்ப்புகளில் சிறப்பு விருது பெற்ற வர். மிகச்சிறந்த கவிஞர் தமிழகத்தின் பல்வேறும் இதழ்களில் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சமூகப் பணிகளில் பணியாற்றி மனித நேயராகத் திகழ்பவர்
.
7. தலைமையாசிரியர் அ .செல்லதுரை

பாவாணர் கோட்ட அறக்கட்டளையின் அறங்காவலர். அறிவொளி இயக்கக்கருத்தாளர். கலைக்குழு தலைமையாளர்.கிராமிய கலைஞர்கள் சங்கச்செயலாளர். அறிவியல் இயக்கத் துணைத்தலைவர். நாட்டுப்புறப் பாடல்களை  இயற்றிப் பாடுபவர். நடிப்பு  பேச்சு வில்லிசைப் பாடும் திறன்மிக்கவர்.

8. புலவர் கு. துரைராசு

தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர் எழுத்தாளர்.. வானொலி உரை, பட்டிமன்றம் நாடகம் சொற்பொழிவு தொலைக்காட்சி நிகழ்வுகளில்  பங்கேற்றவர்.மும்மதமும் சம்மதம் எனும் தலைப்பில் 5 பாகங்கள் எழுதிய நூலாசிரியர். திருக்குறள்சீர்பரவுவார் பட்டம் பெற்றவர். தன் மகளை திருக்குறள் கவனகராக்கி திருக்குறள்மணி விருதுபெற பயிற்சி கொடுத்தவர். திருக்குறள் பேரவையின் திருக்குறள் பட்டம் பெற்றவர்.

9.  மனிதநேயமாமணி அ. சேதுராமன்.

இந்திய தொடர்வண்டித் துறையில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றி விருதுகள் பலபெற்றவர். தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகள் ஏற்று தொழிலாளர் நலம் பெணுபவர். மதுரையில் நடைபெற்ற பன்னாட்டுத் தழிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டில் பெரும்பங்காற்றியவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் எனும் குறளுக்கு சான்றாக வாழ்பவர்.

10. இலக்கியத்தேனீ கவிஞர் சு. வாசு

இந்திய பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாங்காக்கில் உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்றவர். இந்திய சமாசுவாடி கட்சியின் தமிழ்நாட்டின் மாநில பொதுச்செயலாளர்.தலைவர் முலாயாம் சிங் யாதவின் வாழ்கைவரலாற்று நூலை எழுதி உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேசு யாதவ் திருக்கரத்தால் வெளியிட்ட  பெருமைக்குரியவர். மலேசியாவில் 10 ஆம் உலகப் பண்பாட்டு மாநாட்டில் பங்கேற்று உலகப் பொருளாதாரம் பற்றி உரையாற்றியவர்.

11. நடிகர் வா. இராசு

  முன்பேர வர்த்தகத்தில் முன்னணி ஆலோசகராக பணியாற்றுபவர் செல்லமே, வால்மீகி போன்ற படங்களில் நடித்தவர். குறும்பட ஆலோசனைக் குழுவில் பொறுப்பு வகிப்பவர்.இவர் நடித்த ஸ்டேட்டஸ் என்ற குறும் படம் இந்திய சிறப்பு விறுது பெற்றுள்ளது.

12.  ஆசிரியை. து. அங்காள ஈசுவரி

நடுநிலைப்பள்ளி ஆசிரியர். முதுகலைப் பட்டம் பெற்றவர். வழக்காடு மன்றங்களில் தம் கணவருடன் சென்”று பேசுபவர். தன் கணவர் துரைராசுவின்  எழுத்துக்கும் பேச்சுக்கும் இலக்கியப் பணிகளுக்கும் துணைபுரிபவர். திருக்குறள் பேரவையின் உறுப்பினர்.

No comments:

Post a Comment