Sunday, December 30, 2012

சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை


(சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெற்ற 381 ஆம் விழாவில் முகம் மாமணி தலைமையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்      ஆற்றிய உரை)

இலக்கிய வட்டத்தின் சார்பில் நடைபெறும் இவ் விழாவிற்கு தலைமை தாங்கும் மூத்த இதழ் ஆசிரியர்  தந்தை பெரியாரின் வழியில் பெரியாரின் சிந்தனைகளை தமிழ் உலகிற்கு அளித்தும், கிந்தனாராக முகம் இதழில் நடுநிலையான பதில்களை வழங்கிவரும் முகம் மாமணி அவர்களே, நிகழ்ச்சிகளை அரும்பாடுபட்டு தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திவரும் முனைவர் பிரபாகரன் அவர்களே, முகத்தின் சிறப்பாசிரியரும் நமக்கு மக்காவ் பயணம் மாதந்தோறும் அழைத்துச் செல்லும் பாரதிதாசனை என்றும் மறவாத பாவேந்தர் மரபு வழிப்பாவலர் இளமாறன் அவர்களே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய பாவேந்தர் இன்னிசைமணி சித்த்ராமணி அவர்களே குறுந்தொகைப் பாடலை விளக்கத்தோடு வழங்கிய நக்கீரன் அவர்களே வருகை தந்துள்ள ஆசிரியர் இராசசேகரன், திருக்குறள் வீராசாமி, திருக்குறள் கவிஞர் பத்மநாபன், வனத்துறையில் பணியாற்றி சிறந்த இலககிய ஒருங்கிணைப்பாளராக செயலாற்றும் கவிஞர் இராமச்சந்திரன் கவிச்சித்தர் பூவை அமுதன் போன்ற பெருமக்களே சான்றோர் பெருமக்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

    அருமை நண்பர் பிரபாகரன் அவர்கள் வெளிநாடுகளில் தமிழர்களின் வாழ்வும் வளமும் பற்றிப் பேசுங்கள் எனக் கூறினார். உண்மையிலேயே தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர். தமிழர்கள் வாழ்வை தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    மியான்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் நம் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர். அங்குள்ள கோயில்களெல்லாம் புதுப்பிக்கப்பட்டு எழிலார்ந்த நிலையில் உள்ளது.அங்குள்ள ஒரு கோவிந்தராசப் பெருமாள் கோயிலைப் புதுப்பிக்க ஒரு தமிழர் 5கோடி பர்மீயப் பணம் வழங்கியுள்ளார் என்றால் தமிழர்களின்வாழ்கை நிலையை எண்ணிப் பாருங்கள். தட்டோன் என்ற பகுதியில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருவள்ளுவருக்கு தினமும் திருக்குறள் ஓதி வழிபடுகின்றனர். பழைய இரும்பு விற்னை செயும் அங்காடி 60% விழுக்காடு தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய இரும்பு என்றால் ஃபொர்டு, பென்சு போன்ற கார்களின் இன்சின்களையே விற்பனை செய்யும் நிலையில் உள்ளனர்.

    தாய்லாந்தின் பாங்காக் நகர் சென்றோமானால் நம் இசுலாமியத் தமிழர்கள் கல் வணிகத்தில் மிகச் சிறந்து விளங்குகின்றனர், அயூப், குமாயூன். இலியாசு, போன்ற பெருமக்கள் உலகம் முழுதும் கல்வணீகம் சிறப்பாகச் செய்கின்றனர். அங்கு மாரியம்மன் கோயில் என்ற கோயில் பாங்காக்கின் முக்கிய வீதியில் உள்ளது. பாங்க்காக்கில்தான் நாங்கள் 1999ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டை நடத்தினோம். இந்த இசுலாமியப் பெருமக்களெல்லாம் பேருதவி புரிந்தனர். தாய்லாந்தில் அரசர் பதிவி ஏற்கும்போது நம் திருப்பாவை திர்வெம்பாவை பாடுகின்றனர்.

    சிங்கப்பூர் தமிழுக்கும் தமிழருக்கும் முறையான அங்கீகாரம் கொடுத்துள்ள நாடு. தமிழர்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். சாலைகள், தொடர் வண்டிகள் எங்கும் தமிழ் முழக்கம் உள்ளது, ஆட்சி அமைப்பிலும் முறையான பங்களிப்பு உண்டு. மூத்த அமைச்சர் லீகுவான்யூ அவர்கள் சிங்கப்பூர் முன்னேற்றத்தில் தமிழர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்த பெருமகன்.

    மலேசியத் தமிழர்கள் வளமாக உள்ள நாடு. பேரறிஞர்அண்ணா அவர்கள் மலேசியாவிலதான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றார். இன்றும் அது உண்மைஎன அறியலாம். தமிழ்ப் பள்ளிகள், தமிழ் இதழ்கள் உணவகங்கள் என அனைத்துதுறையிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். மலேசியாவில் ம.இ.கா. என்ற நம் அமைப்பு அம்னோவுடன் சேர்ந்து தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர் மலேசியாவின் நீண்டகால அமைசர்ராக இருந்த பெருமை டத்தோ சாமிவேலு. அவர்காலத்தில்தான் மலேசியா முழுமையும் 6 வழிச் சாலைகள் மிகப் பெரும்புரட்சியை உருவாக்கினார். உலகின் மிக உயர்ந்த இரட்டை கோபுரத்தை கட்டியவர் அனந்த கிருட்டிணன் என்ற தமிழர். இன்று மிகச் சிறப்பாக ஒடும் ஏர் ஆசியா வானூர்தியின் உரிமையாளாரும் தமிழரே. மலெசியாவில் 2009 ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தி 6ஆம் மாநாட்டை நடத்தினோம். ,மலேசியத் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பதிவாகும்

    அமெரிக்காவில் தமிழர்கள் மிகச் சிறப்பாக வாழ்கின்றனர், கணினித் துறையில் அமெரிக்கர்களை விட நம் இந்தியர்களே மிகச் சிறந்த ஊதியத்தைப் பெறுகின்றனர். தமிழகத்து நகரங்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அனைத்து மாகானங்களிலும் தமிழ் சங்கங்கள் உள்ளன. ஆண்டு தோரும் அமெரிக்கா கூட்டுத் தமிழ்ச் சங்கத்தினர் ஃபெட்னா என்ற அமைப்பின் மூலம் மாநாடுகள் நடத்துகின்றனர்.

    கனடா ஈழத்தில் நடைபெறும் கொடூரத்தால் புலம் பெயர்ந்த மக்கள். தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றி பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்கும் அளவிற்கு தமிழர்கள் முன்னேறிஉள்ளனர். மாநாடுகள், நாட்டிய, இசை, அரங்கேற்றங்கள் என தமிழ்ப் பண்பாட்டு மையமாக கனடா இன்றும் உள்ளது. ஈழத்தில் உள்ள கோயில்களேல்லாம் இன்று கனடாவில் கட்டப்பட்டு ஆன்மீகப் பணியிலும் தொய்வில்லாமல்.ஆனால் பேரியாரின் தாக்கங்களைக் காண இயலவில்லை.
    ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி வாழ்கின்றனர். அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றனர். தொலைக் காட்சிகள் வானொலிகள், உணவகங்கள், கடைகள், இதழ்கள் என அனைத்துத்துறையிலும் முன்னணியில் உள்ளனர். ஐரோப்பியன் நாடுகளிலும் நம் ஈழத் தமிழர்கள் கோயில்கள் கட்டி ஆன்மீகத் தொண்டை எங்கும் தொடர்கின்றனர். 1993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் மூன்றாம் மாநாட்டை நடத்தினோம்.

    ஈழத்துப் போராட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் உழைத்த செல்வங்களை எல்லாம் அளித்து போராட்டத் தளபதிகளாக வாழ்ந்துள்ளனர். காலம் கருதி ஒரே ஒரு அனுபவத்தை மட்டும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யான் இலண்டனை விட்டு புறப்படும்போது திருமதி தயாபரி கருணானந்த ராசா அவர்கள் பணிக்குச் செல்வதால்  டேவிட் என்ற வாடகை ஊர்தி ஓட்டுநர் எண்ணைக் கொடுத்து அவர் வழி வானூர்திநிலையம் செல்லப் பணித்தார்.டே விட்டுடன் தொடர்ப்பு கொண்டுஇலண்டனில் வானூர்தி நிலையம் செல்வதற்கு ஒரு வாடகை ஊர்தியில் பயணித்தேன். டேவிட் என்ற ஈழ ஒட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.யான் தமிழராய் உள்ளதால் பேச்சைத் தொடங்கினேன். அவர்கோபத்துடன் என்னுடன் பேசுவதற்கு விருப்பிமின்மையாக இருந்தார். மிகவும் முயன்று பேச்சுக் கொடுத்து வந்தேன். அவர் கூறினார் இந்தியத் தமிழர்களே மோசம் எனக் கூறினார். நான் அப்படிக் கூறக் கூடாது அங்கு தங்களுக்காக போராடுபவர்கள் பலர் உள்ளனர். ஈழத் தமிழர்க்காக நாம் நடத்திய போராட்டங்களைக் கூறினேன். அவர் தன்னுடைய ஈழ மண்ணில் இந்திய அமைதிப் படை சென்றபோது ஒருதமிழ்வீரர் தம்மை வேகமாக திட்டி அடித்ததில் மயக்கமடைந்ததாகவும் பின் அதே வீரர் இல்லம் வந்து நான் அடிக்காமல் இருந்தால் உன்னை சுட்டிருப்பார்கள் என்னை மண்ணித்துவிடு என்று கூறியதைக் கூறினார். அன்று தப்பித்து இன்று இங்கு உள்ளேன் என்றார். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு இராணுவ வீரருக்கு உள்ள தமிழ் உணர்வைப் பார்த்தீர்களா டேவிட் என்று கூறினேன்.எங்கிருந்தாலும் தமிழர்கள் உணர்வுகள் உங்களைச் சுற்றியே இருக்கும் எனக் கூறினேன்.வானூர்தி நிலையம் வந்தது கட்டணம் வாங்க மறுத்து என் பெட்டிகளை அவரே கொண்டு வந்து வழியணுப்பினார். ஆனால் இன்று ஏற்பட்ட கோடுரங்களையும்க ண்டு இந்திய அரசின் பாரா முகமும் அவரது கோபம் நியாயாமனதுதான் என்று எண்ணி இன்று நோகிறேன். ஈழ மக்களுக்கு நாம் ஒரு நிலையான தீர்வைக் காணவேண்டும்
.
    நிகழ்ச்சியை நடத்திய பெருமக்களுக்கும் வருகைதந்த பெருமக்களுக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்,


1 comment:

  1. தங்கள் பேச்சு நன்றாக இருக்கின்றது. பலவிடயங்களைத் தொட்டுப் பேசியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete