Friday, December 7, 2012

மருத்துவ மாமேதை, எளியோர் ஏந்தல் இனப் பாதுகாவலர் செ.நெ.தெய்வநாயகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மனிதருள் மாணிக்கமாகவும், மருத்துவ உலகில் மாமேதையாகவும் தமிழர்தம் தன்மானத்திற்குச் சான்றாகவும், விளங்கிய மருத்துவமாமணி செ.நெ. தெய்வநாயகத்தின்(70) இழப்பு தமிழர்களுக்கும், மருதுவ உலகிற்கும் பேரிழப்பாகும்.

    புகழ் வாய்ந்த தந்தை பெரியாரோடு நெறுங்கிய தொடர்புகொண்ட தமிழ்க்குடியாம் செ. நெ . நாயகம் அவர்களின் குடியில் நவம்பர் 15ஆம் நாள் தோன்றிய பெருமகன் மருத்துவ மாமணி தெய்வநாயகம் அவர்கள்.

         தம் மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கலலூரியில் படித்தவர்.வடகு அயர்லாண்டில் உள்ள சுகாட்லாந்த்தில் 18 மாதங்கள் தம் உயர் படிப்பை முடித்தவர்.எடின்பர்க் இராயல் கல்லூரியில் ஆய்வு அறிஞராகப் பணியாற்றியவர்.

    மருத்துவம் படிப்பு முடித்த தமிழர்கள் யாரையும் தமிழர்களின் வேட்டி சட்டை அடையாளத்துடன் காண முடியாது. ஆனால் மருத்துவ மாமணி அவர்கள் தமிழர் அடையாளத்துடன் புன் சிரிபோடு காட்சி தருவார்கள். மருத்துவ மாமேதையுடன் எனது சகோதரூக்காக தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காணச் சென்றோம். அருமைப் பெருந்தகை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் பணிபுரிந்தார்கள். எங்களை அங்கு வரப் பணித்தார்கள். யாங்கள் மருத்துவம் காணச் சென்றபோது வரிசையில் வரப்பணித்து அவர்கள் ஆற்றிய சேவையை எண்ணும்போது கண்கள் குளமாகின்றன. மருத்துவ மனையிலேயே சேர்த்து அவர் வழங்கிய சிகிச்சையை எண்ணும்போது சேவையின் உருவமாகத் திகழ்கிறார். பெரிய மருத்துவ மனைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பெருமகன் தன் மருத்துவத் துறையில் பெற்றுள்ள பேரறிவால்  எம்மை மட்டுமல்ல ஏழை எளிய மக்களை நெஞ்சக நோயிலிருந்து காப்பாற்றிய மாவீரர் இன்று நம்மிடம் இல்லை.
      உயிர்க்கொல்லி நோய்க்கு சித்த மருத்துவம் மூலம் திர்வு கண்டவர். சித்த மருத்துவத்திலும் மிகச் சிறந்த நிபுணர்.

  என்னுடைய நண்பர்கள் பலரை பெருமகனாரிடம் அனுப்பியுள்ளேன். அனைவரும் நலம் பெற்று அவரை நெஞ்சார வாழ்த்திகின்றனர்  நோய் தீர்க்கும்  மாமேதை தெய்வநாயகனார். நேர்கொண்ட பார்வை யாருக்கும், அஞ்சா மன உறம் கொண்டவர்கள். இது அவரை அறிந்தோர் அறிவர். பணியிலிருந்து விடுபட்ட பின் தியாகராயநகர் தம் இல்லத்திலும், எழும்பூர் செஞ்சிலுவைச் சங்க மையத்திலும் தன் மருத்துவப் பணியைத் தொடர்ந்தாரகள். இறுதிக் காலத்தில் எழும்பூர் மையத்தினர் அவரை புறக்கணித்தபோது வாயிலிலேயே இருக்கையைப்போட்டு ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவம் செய்த மாவீரர் தெய்வநாயாகனார்.

    தம் குடும்ப அறநிலையமான தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகப் பொறுப்பேற்று ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த கல்வித் தந்தை.

    தமிழர் தமிழர் சிந்தனைகளுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவர், ஈழத்தில் பெருங்கொடுமை நடந்தபோது கண்டனக் கூட்டங்களுக்கு தம் பள்ளியின் திடலையே வழங்கிய இனப் பாதுகாவலர்.

    மருத்துவத் துறையாக இருந்தாலும் , கல்வித்துறையாக இருந்தாலும், இனப் பாதுகாப்பாக இருந்தாலும் செ.நா. தெய்வநாயகம் தமிழர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்துள்ளார். அவருடைய வாழ்வு சேவை வாழ்வு.

 இந்திய அரசின் பத்மபூசன் போன்ற விருதுகளெல்லாம் எளிய மக்களுக்காக வாழ்ந்த இப் பெருமக்களுக்கு வழங்க வேண்டும் எனபது நம் வேடகை.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                        மண்ணுயிர் எல்லாம் தொழும். (குறள் 268)

    என்ற வாக்கிற்கிணங்க மருத்துவ மாமணியின் பணியைத் தொழுது தமிழர்கள் அவர்தம் வாழ்வைப் பின்பற்றி வாழ்வோமாக

No comments:

Post a Comment