Friday, December 28, 2012

மலேசியா கோலாலம்பூரில் மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய கற்றனைத்து ஊறும் நூல் அறிமுக விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


(1-8-2012 அன்றுமலேசியா கோலாலம்பூரில் செந்தூல் கறி உணவகத்தில் மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய கற்றனைத்து ஊறும் நூல் அறிமுக விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியம் அவர்களே எங்களின் அன்புச் சகோதரர் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டை சிறப்புடன் நடத்திய மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியச் செயலாளர் டாக்டர் சி. தருமலிங்கம் அவர்களே. பொருளாலர் திருக்குறள் பெருமாள் அவர்களே கெடா மாநிலத்தில் சோழன் கால் பதித்த வரலாற்றை உலகெங்கும்  உணர்த்திய அருமை எழுத்தாளார் பெருந்தகை சந்திரகாந்தன் அவர்களே, கற்றனைத்து ஊறும் நூலை மிகச் சிறப்பாக ஆய்வு செய்த புலவர் பெருந்தகை தொல்காப்பியத்திற்கு அகராதி வழங்கிய ஐயா புலவர் முருகையன் அவர்களே, அருமை நண்பர் பாரதிதான் அவர்களே இளங்கோ அவர்களே எங்களின் தமிழ்த் தொண்டிற்கு என்றும் எம்மைத் தாங்கும் மலேசியத் தமிழ் நெஞசங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

    மலேசிய இந்திய ஒருங்கிணைப்புப் பேரவையின் சார்பில் இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளீர்கள். மலேசியாவிலுள்ள அமைப்புகளெல்லம் இணைந்த ஒருங்கிணைப்பு அவசியமான ஒன்றாகும். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் வேட்கையும் இதுவே

    என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்
    இறுது எமக்கு வாராது
    என்றன் மொழி உலகாள வைக்காமல்
    என்றன் உயிரோ போகாது
    என்று பாடிய பாடிய பாடலே

எங்களது வாழ்க்கையாக உள்ளது.
    பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டை அருமை அண்ணன் தருமலிங்கம் அவர்கள் போறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்கள். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரையும் கெடா மாநிலத்திலுள்ள பூசாங்க் பள்ளத்தாகிற்கு அழைத்துச் சென்றோம். சோழன் காலடி பதித்த லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதசச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

    நான் இப்போது குறிப்பிட்ட செய்திகளையெல்லாம் இந்த உலகுக்கு உணர்த்திய பெருமை இதோ நம் எதிரில் அடக்கத்தின் உருவமாக அமர்ந்துள்ளாரே எழுர்தாளர் சந்திரகாந்தம் அவர்களையே சாரும்
.
    இந்தப் பெருமைக்குரிய தமிழினம், ஒருன்கிணைவு இல்லாத காரணத்தாலேயே மிகப் பெரும் வீழ்ச்சிகளைக் கண்டோம். இதைஎல்லாம் போக்கும் வண்ணம் இந்திய ஒருங்கிணைப்புப் பேரவை செயல்படுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    மலேசிய நாடு செழிப்பான நாடு. மலேசியத் தமிழர்கள் உள்ளத்தால் உயர்ந்த பெருமக்கள். அறிஞர் அண்ணா அவர்கள் மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறி மலேசியத் தமிழர்களின் பெருமையை அன்றே நிலைநாட்டியுள்ளார்.

    மலேசியா இயக்கங்கள் மட்டுமல்ல உலகத் தமிழ் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று கூடி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வெற்றிபெறுவோம்

    பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் வருகைதந்துள்ள மகளிர் மாமணி பொன். இலட்சுமி அவர்கட்கும் மற்றும் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment