Monday, December 10, 2012

மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை



 (30-7-2912 அன்று மலேசியா கெடா சுங்கைப்பட்டாணி தமிழர் சங்கத்தில் டத்தின் தாமரைச்செல்வி தலைமையில் முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியம் முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

மலேசியாவின் கெடா மாநில சுங்கை பட்டானியில் தமிழர் சங்கத்தில் பங்கேற்று உரையாற்றுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். மிகக் கூறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த டத்தோ சுப்பிரமணியம் அவர்களையும் டத்தின் தாமரைச்செல்வி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். டத்தின் அவர்களின் அன்னைக்கு நூலை டத்தின் அவர்களின் அண்ணன் எழுத்தாளர் மூத்த வழக்கறிஞர் சமரசம் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள். நூல் முழுமையும் படித்து வியந்தேன். டத்தின் அவர்களின் பெற்றோர் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றி திராவிட உணர்வை வளர்த்ததையும் அவர்கள் சிறை சென்று தமிழுணர்வு நிலை நாட்டியதையும் படித்தபோது கண்கள் குளமாகின. தன் அண்ணன் சமரசம் அச்கத்தில் பணியாற்றியபோது விரல்கள் பாதிக்கப் பட்டதையும் குடும்பப் பொறுப்பைச் சுமந்து  அனைவரையும் உருவாக்கியதையும் நன்றியுணர்ச்சியோடு பதிவு செய்துள்ளார்கள்.

    திருவள்ளுவர் இல்லத்திற்கு திருவள்ளுவர் வருகிறார் என டத்தின் எழுதி வைத்துள்ளார்கள். வள்ளுவப் பெருமான் கூறிய அறக் கருத்துகளையும் தந்தை பெரியாரின் வழி தொடர்ந்து டத்தின்  அவர்கள் மலேசியாவில் ஆற்றும் பணி அரும் பணியாகும். முன்னாள் அமைச்சர் என்ற செருக்கே இல்லாமல் மக்களோடு மக்களாக தொண்டாற்றும் டத்தோ அவர்களயும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    மலேசியாவின்  அருகிலுள்ள பினாங்கு மாநிலம் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலா மாநிலமாகும்.சுங்கைப் பட்டாணிக்கு அருகில் உள்ள  பினாங்கில் சுவாமி இராமதாசர் என்ற பேரறிவாளி வாழ்ந்த பகுதியாகும். ஆய கலைகள் அறுபத்தி நான்களிலும் பயிற்சி பெற்ற பேரறிஞர். மலேசியா முழுமையும் மாணாக்கர்ளை உருவாக்கி மருத்துவம் கவிதை என அனைதுத் துறையிலும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழிற்கு இன்றும் பெரும் அரணாக உள்ளனர்.

    சுவாமி இராமதாசர் அவர்கள் தம் மணிவிழாவிற்கு தமிழகத்தில் தம் மாணவரான என் தந்தை பெருங்கவிக்கோவை 1977ஆம் ஆண்டு அழைத்திருந்தார்கள் ஒரு குரு தம் மாணவரை சிறப்பு விருந்தினராக அழைத்து மணிவிழா நடத்தியதென்பது வரலாற்றுப் பதிவாகும். என்றும் இலக்கிய உல்கில் மலேசியாவிற்கு நிலையான பெருமையாகும்.

    இன்று உலகம் முழுமையும் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிறோமே அதற்கும் வித்திட்டது மலேசிய மண்ணே. மலேயாப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறையிலிருந்த தனிநாயக அடிகளாரே அந்தப் பெருமைக்குரிய பெருமகன். இவ்வாண்டு அப் பெருமகனாருக்கு நூற்றாண்டு விழா உலக்த் தமிழர்கள் அனைவரும் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டிய பேராசியப் பெருமகன். இன்றைக்கு நாம் உலகம் முழுமையும் மாநாடு நடத்திகிறோமென்றால் தனிநாயக அடிகளின் அப்பலுக்கற்ற் தூய தமிழ்ப்பணிதான் அந்தப் பெருமகனை பணியாற்றிய மலேயா பல்க்லைகழம்தான். அந்தப் பல்கலைக் கழத்தில்தான் எங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம்.டத்தோ டத்தின் அவர்க்ளையும் கேட்டுக்கொள்கிறேன்
தனிநாயக அடிகளாருக்கு நூற்றாண்டு விழா நடத்துங்கள்.

    மலேசியா மண்ணை தமிழர்களுக்கும் முழு உரிமைகளையும் பெற்றுத் தந்த துன் சமந்தன் அவர்கள். மாணிக்கவாசகம் அவர்கள் ஈகங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்வேண்டியவை.

    அவர்கள் வழியிலே மாலேசியத் திருநாட்டில் பெரும்பணியாற்றி தமிழர்களின் ஆளுமைக்கு சான்றாக வாழும் டத்தோசிறி சாமிவேலு அவர்கள்.. அவர்கள் வழி ம.இ.கா. வை வழிநட்த்தும் நம் டத்தோ டத்தின் உள்ளிட்ட அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

    டத்தின் அவர்கள் என்னை இங்கு ஒரு பொது நிகழ்சிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ம.இ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பெருமக்களும் வருகைதந்து வாழ்த்தினர். எனக்கு மகிழ்ச்சியாக் இருந்தது சனநாயகத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் தமிழர்கள் என்ற உணர்வு எந்த சக்தியாலும்  பிரிக்கா வண்ணம் நிலைநாட்ட வேண்டும்.

       இலக்கிய உலகில்  மலேசியாவில் மணிமன்றம் அருந்தமிழ்த் தொண்டாற்றிய ஐயா அன்பானந்தம் அவர்களை எண்ணிப் போற்றவேண்டும் .அவர்வழி இன்றும் தமிழ்த் தொண்டு செழித்தோங்குகிறது.

    இன்றும் தோட்ப்புறத் தொழிலாளர்களுக்கு மிகப் பெரும் கொடையாக இருப்பது தேசிய நல கூட்டுறவுச் சங்கம். கோலாலம்பூரில் விசுமா துன்சம்பந்தன் மாளிகை தமிழர்களின் பெருமையை செப்பும். அதைத் தலைமைதாங்கி நடத்தும் டான்சிறி சோமசுந்தரம் அவர்களை தமிழ் உலகம் என்றும் மறக்காது. அவர் வழியில் அரும்பணியாற்றும் டத்தோ  சகாதேவன் மற்றும் கூட்டுறவுச் சங்கப் பெருமக்கள் மலேசியத் தமிழர்களின் வளர்ச்சித் தூண்கள்.

    உலகத் தமிழர் இயக்கம் நடத்திய அமரர் டேவிட் அவர்கள். அவரது இறப்பின் போது நான் இங்கிருந்தேன். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அவரி பணி மகத்தானது.

    மலேசியாவில் மிகச்சிறந்த கவிஞர் பெருமக்கள் அளப்பரிய பணியாற்றியுள்ளார்கள். அமரர் பெருமக்கள் செந்தமிழ்க் கவிமணி வி.கே.சுப்பிரமணியம், செந்தமிழ்க் கவிமணி இரா.பாண்டியன், கவிஞர் முத்துவேல்,  தமிழ்க்குயில் கலியபெருமாள் போன்ற பெருமக்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

    இன்றும் கவிதைத் தொண்டாற்றும் தீப்பொறி பொன்னுசாமி, கவிஞர் காரைக் கிழார், கவிஞர் தமிழ்மணி வடிவேலு போன்ற எண்ணற்ற பெருமக்கள் அரிய இலக்கியத் தொண்டாற்றுகின்றனர். மலேசியக் கவிஞர்களின் ஆய்வுக் களஞ்சியம் பெருந்தொகுப்பு ஒன்றை முனைவர் முரசு நெடுமாறன் தொகுத்துள்ளார். திருக்குறள் பாடல்கள் என் மிகப் பெரிய சிறந்த தொகுப்பை தந்துள்ளார். அனைத்தும் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பதிவுகளாகும்.

    தமிழ் இணையத் துறைக்கு மலேசிய முரசு முத்தெழிலன் பங்களிப்பு அளப்பரிய பங்களிப்பாகும்.

    யாங்கள் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு நடத்தும்போது மாநாட்டை முன்னின்று நடத்திய விக்டர் சுப்பைய, டாக்டர் தர்மலிங்கம், முனைவர் குமரன், ஆசீயமணி மாணிக்கம், பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

    பெருமக்களே மலேசியாவின் அருமைப் பெருமக்களை உங்கள் முன் நினைவு கூறுவதற்கு காரணம். எங்களின் மலேசியத் தொடர்பு 77ஆம் ஆண்டு முதல் இன்று வரை பூத்துக் குலுங்குகிறது. அவர்களை நினை வு படுத்த வாய்ப்பளித்த டத்தோ அவர்களுக்கும் டத்தின் அவர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment