Friday, November 18, 2011

கொலைக்குக் கொலையா

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

மரணம் என்பது தீர்வா
மனங்கள் எண்ணுதல் முன்னே
சரணம் பாடும் கூட்டம்
சட்டம் போடுதல் நன்றா!
புராணம் பாடும் நாட்டில்
புண்ணியம் எனபது பொய்யா
தருணம் உயிரைக் காக்க
தக்கவர் இருந்து சாய்ப்போம்!

தண்டனை இருபத்தும் மேலே
தக்கோர் துன்பம் கண்டும்
கொண்டிடும் அவலம் சாய்க்கா
கொடுமை மரணம் ஏனோ?
எண்டிசை உள்ள நாட்டுள்
ஏற்கா மரண ஓலம்
அன்புள காந்தி மண்ணில்
அகிம்சை தவிர்த்தல் ஏனோ?

தாயின் கதறலைப் பாரீர்!
தந்தையார் பிள்ளை எங்கோ
சேயின் உறவைக் காணா
சோதனை மரணத்தின் மேலே
பாயிரம் பாடும் நாட்டில்
பண்புதான் கொலைக்குத் தூக்கா?
தாயினும் கார்த்தி கேயர்
தண்டனை நெறியைச் சொன்னார்!

இராசிவ் உன்னதத் தலைவர்
இறப்பில் துன்பியல் கண்டோம்
இறவாப் புகழைப் பெற்ற
இராசிவ் காந்தி பேரால்
துறவிக் கோலம் பூண்ட
தூய்மை அனனை சோனியா
கரையும் தமிழர் உள்ளம்
கனிந்தே தண்டனை போக்கும்!

No comments:

Post a Comment