Thursday, November 17, 2011

பரமக்குடி சோகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

சாதிப்பேயை தொடராய் நாட்டும்
சாத்தான் மாய்வது எந்நாள் ?
ஊதிஊதி மனிதம் சாய்த்து
மாண்பை வீழ்த்துதல் ஏனோ ?
நாதியற்ற தமிழன் இங்கும்
நசுக்குதல் வீழ்ச்சி அன்றோ
மாதிமிர் துப்பாக்கிச் சூடு
மமதை சாய்வது எந்நாள்?

கூடிய உணர்வின் மாட்சி
குதறித் தள்ளுதல் ஏனோ?
தேடியே துரத்தி மண்ணில்
தேகம் சாய்த்தல் நன்றோ?
நாடிடும் தலைவர் வேட்கை
நாடுள அனைவர்க்கும் ஒன்றே
சாடியே ஒருதலை வேசம்
சாமான்யரை நசுக்கும் மோசம்

கொன்றே சாய்த்த பின்பும்
குலை நடுங்காதது ஏன்/ஏன்
நன்றே பரிவுக் காசும்
நயம்பட வழங்காமை ஏன்?ஏன்?
கொன்ற உயிர்கள் காண
கொலைக்களம் சொல்லமை ஏன்?ஏன்?
மன்றம் தமிழன் ஆட்சி
மறந்த சோகம் அன்றோ!

பரமக்குடியின் தென்னகச் சோகம்
பரவாது காக்க வேண்டும்
வீறுள தமிழர் செர்ந்தே
வியத்தகு எழுச்சி வேண்டும்
சோரமாம் சாதி சாய்த்து
சமத்துவம் பேண வேண்டும்
வீரம்வீவேகம் நமக்குள் வேண்டாம்
வீணரை சாய்போம் சேர்ந்தே!

No comments:

Post a Comment