Friday, November 11, 2011
அன்னை சேது 5ஆம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்களம் அனனை சேது அறக்கட்டளையின் பொற்கிழி வழங்கு விழா
5-11-2010 அன்று காலை 10 மணிக்கு அன்னை நினைவு பொற்கிழி வழங்கு விழா மதுரையில் கல்லூரி விடுதியில் நடைபெற்றது.
சங்க கால இலக்கியங்களையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களையும் இந்தியில் மொழிபெயர்த்த பேராசிரியர் முனைவர் பி.கே பாலசுப்பிரமணியம் அவர்கட்கும், சிற்ப அம்பலம் தமிழ்க்கல்வி எனற் ஈராயிரம் பக்கங்கள் கொண்ட நூலை படைத்து, பதிப்பித்த சாதனையாளர் இறுதியில் இன்பத்தான் (சதானந்தம்)அவர்கடகும் ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
திருக்குறள்செம்மல் மணிமொழியன் தலைமை தாங்கி அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து இரண்டு அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார்.
யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இ.கி.இராமசாமி கேடயம் வழங்கினார். கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார்.மதுரை தமிழ்ச் சங்க பேராசிரியர் சின்னப்பா, முனைவர் இரா.மோகன் ஆய்வுரை வழங்கினார்.சேவைச்செம்மல் நவமணியன் அருட்தந்தை ஞான ஆனந்தராசு கவிஞர் இரவி பாராட்டுரை வழங்கினர். கவிஞர் அசோக்ராசு தொகுப்புரை வழங்கினார்.ஆவின் பொன்.மீனாட்சிசுந்தரம் நன்றி நவின்றார்
அன்னை சேதுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2011 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முதுகுளத்தூர் மாகாதேவன் அவர்களின் மகன் குமரன், கமுதி கோடையிடி குத்தாலம் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புலவர் வேணு செயராமன், கவிஞர் முனியாண்டி, , மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் சானகிசக்திவேல் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார்.
ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.
அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.
வாழ்க அன்னையின் புகழ்
வளர்க அறக்கட்டளையின் தொண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment