Tuesday, February 1, 2011

சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா



சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா
{16-1-’11 அன்று சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பங்கேற்று ஆற்றிய உரை}

திருவள்ளுவர் ஆண்டு 2042 ஆம் ஆண்டின் தமிழாண்டுவிழாவை இன்று நாம் நடத்தக் குழுமியுள்ளோம். யோகத் திருமகன் ஆசான ஆண்டியப்பனின் குழந்தைகள் மிகச் சிறப்பாக இசையால் பாடினர். திருகுறளின் கடவுள் வாழ்த்தைப் பாடிய மாணவிகளுக்குக்கு வாழ்த்துக்கள்.

திருக்குறள் செல்லம்மாள் அவர்களின் திருக்குறட்பணி போற்றி மகிழத்தக்கதாகும். அழைப்பிதழில் அச்சிட்டுள்ள திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.

துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் மனம் கலங்காதவனை வந்தடைந்த துண்பமே துன்பப்படும். என்ற பொருளுக்கிணங்க யாங்கள் பன்னாடுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் செல்லம்மாள் பங்கேற்ற பெருமைக்குரியவர்.

யாங்கள் மாநாடு நடத்தியபோது அவருடைய மகளின் மகப்பேறுகாலம். யான் வேண்டாம் மகளைப் பாருங்கள் என்று கூறியபோதும் தமிழ் தமிழரின்பால் உள்ள பற்றால் திருக்குறள் கூற்றுப்படி துன்பங்களைக்கண்டு மனம் கலங்காமல் இலட்சிய நோக்கோடு மாநாட்டில் பங்கேற்று நடனமாடி உலத் தமிழர்களை மகிழ்வித்தவர். இதோ இங்கே உள்ள மழலை குறளமுதுதான் அன்று பிறந்த மழலை.

செல்லம்மாளின் மகன் கிரிதர் - யோகலட்சுமியின் செல்வன் குறளரசு அருமையாக பாட்டியைப் போன்றே திருக்குறளை ஒப்புவித்தான் செல்லம்மாள் உலகுக்கு மட்டுமில்லாமல் தன் இல்லத்திலேயும் திருக்குறளை நிலைநிறுத்துகிறார.

சென்ற ஆண்டு தன் இல்லத்தின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி எழுச்சித் தமிழர் திருமாவளவன் திருக்கரத்தால் திறந்து வைத்தார். அதுபோது யானும் பங்கேற்று உரையாற்றினேன்.

திருவள்ளுவரின் 2042 ஆம் ஆண்டு தொடக்க நாளான இன்று சிலைக்கு மாலை அணவித்து வணங்கி அறிஞர்களை அழைத்து திருவள்ளுவர் தினத்தை மிகச் சிறபாக கொண்டாடி வருகிறோம்.

திருவள்ளுவர் உலக மாந்தர் அனைவரையும் ஒன்றாகவே கூறுகிறார். கடவுளின் பெயரால் மனிதர்களை வேதங்கள் வேறுபடுத்துகிறது. திருக்குறள் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்ற குறள் மூலம் பிறபினால் அனைவரும் ஒரே சமம் என அருதியிட்டுக் கூறியுள்ளார்.

ஆணுக்கு நிகராக ஏன் ஆண்களுக்கு மேலாக தொண்டு செய்வதில் மேலோங்கியுள்ளனர். செல்லம்மாள் அவர்களின் தொண்டும் பெண்களின் பெருமையை பரைசாற்றும் தொண்டாகும். அவருக்கு துணையாக தூணாக இருக்கும் இராசமாணிக்கம் அவர்களையும் குடும்பத்தாரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நமது முதல்வர் கலைஞர் பெருமான் திருவள்ளுவராண்டை தமிழாண்டின் தொடக்கமாக அறிவித்து உலகம் முழுமையும் திருவள்ளுவர் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து நகரின் தலைநகர் பெர்ன் நகரின் வள்ளுவன் பாட சாலை என்ற அமைப்பை ஈழத்து முருகவேள் – நந்தினி இணையர் நடத்தி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் திருவள்ளுவர் ஆண்டை கொண்டாடி வருகின்றனர். யான் சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது அவர்க்ளின் தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

இவ்வாண்டும் திருவள்ளுவர் 2042 ஆம் ஆண்டுத் திருநாளைப் பெர்ன் நகரத் தந்தையைக் கொண்டு தமிழர்கள் கூடி ஒரு பேரரங்கில் நடத்துகின்றனர். தமிழ மக்களின் சார்பாக அவர்களுக்கு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயன் திருவள்ளுவருகு குமரி முனையில் வானளாவ சிலை எழுப்பிய முதல்வர் கலைஞருக்கு தமிழாண்டாக அறிவித்து நடைமுறைப் படுத்தியமைக்காக அனைவரும் நன்றி செலுத்துவோம்.

உலகமெலாம் பர்வியுள்ள நம் இனத்தை வள்ளுவ நெறியால் வாழ்விப்போம். உலக மறையாம் திருக்குறளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்வோம் என உறுதி ஏற்போம்.

எனக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஆசான ஆண்டியப்பனுக்கு நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment