Tuesday, February 22, 2011

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டு விழா



சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 76ஆம் அகவையில் 9-2-2011 அன்று சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டுவிழா சந்திரசேகர் திருமணமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். பத்மசிறீ ஒளவை நடராசன் வெளியிட காவியக்கவிஞர் வாலி பெற்றுக்கொண்டார். இருவரும் பெருங்கவிக்கோவின் காவியச் சிறப்பைக் கூறி வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிலம்பொலி செல்லப்பனார், முன்னாள் மேயர் சா.கணேசன் கவிவேந்தர் மேத்தா, பேராயக் கட்சியின் தலைவர் இதயதுல்லா, பேராசிரியர் ச.முத்துக்குமரன், முனைவர் அ.இராமசாமி, மாம்பலம்.ஆ.சந்திரசேகர், புலவர் செந்தமிழ்ச்செழியன், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் மறைமலை, தலைமையில் சேதுகாப்பியம் ஆய்வரங்கம் நடைபெற்றது. முனைவர் இராசகோபாலன், முனைவர் பேராசிரியர் குமாரவேலு, உலகநாயகி பழநி, கவிஞர்.நவநித கிருட்டிணன் ஆய்வுரை வழங்கினர்.

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் தொகுப்புரை வழங்கினார்.மன்றச் செயலர் கவிச்சிங்கம் கண்மதியன் நன்றியுரை வழங்கினார்

No comments:

Post a Comment