

தமிழ்ப்போராளி அறிஞர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை அண்ணாநகர் தமிழ்ச்சங்கமும் இலக்கிய்வ வீதி அமைப்பும் சென்னையில் வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது.
இலக்கியவீதி இன்யவன் அனைவரையும் வரவேற்று உரயாற்றினார்.அண்ணாநகர் தமிழ்ச்சங்க புலவர் இராமலிங்கம் முன்னுரை வழங்கினார்.பேராசிரியர் க.திருமாறன் சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்கட்கு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன்,தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி,முன்னாள் ஆட்சியர் இலட்சுமிகாந்தன் பாரதி, சிலம்பொலி செல்லப்பனார்,பெருங்கவிக்கோ.வா.மு.சேதுராமன், கவிமுரசு வா.சே.திருவள்ளுவர் உள்ளிட்ட பெருமக்கட்கு வழங்கப்பட்டது.
இலக்குவனாரின் திருமக்கள் பொறிஞர் திருவேலன்,முனைவர் மறைமலை,தமிழ்க்காப்பு திருவள்ளுவன் உள்ளிட்ட பெருமக்கள் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருது வழங்கி், விருந்து படைத்து மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment