Wednesday, May 28, 2025

 

 

பிரபாகரன் தலைவன்

எங்கள் பெம்மானைப்

        போற்றுகின்றோம்

 

.பாரிலே தமிழர் உயர்த்தி

பண்புடை படைநலம் கூட்டி

தேரிலே தமிழர் தலைமை

தாங்கிய புரட்சி வீரன்

 ஊரிலே உரிமை காக்க

உன்னத தியாகத் தோழன்

வீரனாம் புறநா நூற்றின்

வேந்தர் புகழ் ஓங்குக

 

அறத்தின் மூச்சாய்க் கொண்டோன்

ஆயுதம் தாங்கிக் காத்தோன்

மறவரம் தமிழர் வீரம்

மண்ணிலே உயர்த்திக் காட்டி

பிரபாகரன் தலைவன் எங்கள்

 பெம்மானைப் போற்று கின்றோம்

உரமான கொள்கை நோக்கி

உயிரையே ஈந்த அண்ணல்

 

தற்குரித் தமிழர் எல்லாம்

தன்னல வழியில் சென்றார்

அற்புதத் தலைவன் அங்கே

அணியென குடும்பம் சேர்த்தே

 நற்றமிழ் வீரப் புலிகள்

நனிபுகழ் இன்றும் சொல்லும்

தற்கொலை தன்னை ஈந்து

தலத்திலே ஈழப் போரே

 

பிள்ளையைக் கொன்றார் ஈனர்

பிரபாகரன் உயிரை ஈந்தார்

பிஞ்சுகள் முதுமை யெல்லாம்

பிணமென ஈழ மண்ணில்

பன்றிகள் தின்றார் உயிரை

பாரினில் சிங்கள் மோசம்

 பண்புள தலைவர் அங்கே

படுதுயில் கொடுமை அந்தோ

No comments:

Post a Comment