Sunday, May 11, 2025

 

பெண்ணின் பெருமை கலை நீடு வாழ்க வாழ்க

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

உரையாசிரியர் தமிழ் இலக்கியங்கள் உலமெலாம் தமிழர் கைகளில் தவழ அரும் பணியாற்றியவர் புலியூர் கேசிகனார் திருமகள் கலைச்செல்வி தந்தை வழியில் அரும்பணியாற்றும் கவிஞர் எழுத்தாளர் சிறந்த ஒருங்கிணைப்பாளார் விழா அமைப்பாளர் என பன்முக ஆற்றல்களின் அடையாளம். அண்மயில் தந்தையார் 32ஆம் ஆண்டு நினைவு நாளிற்கு அழைதிருந்தார். அங்கு கவி முனைவர் தகுதி திவாகரன் தம் துணைவியார் சுலக்சனா எல்.எல்.பி. ஊடகச் செம்மல் முத்துக்குமாரசாமி அவர்களோடும் இரட்டையர் முகம் ஆசிரியர் இளமாறன் கவிஞர் முருகையன்  மற்றும் பெருமக்கள் வருகை த்ந்தனர். தம் தந்தையார் அருமை பெருமைகளை புகழ்ந்து எம்மோடு பகிர்ந்து கொண்டார் கலை. நாங்கள் அனைவரும் ஐயாவின் புகழ் பாடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம்

.அக்காவின் வளையல் என்ற நூலை அனுப்பி வாழ்த்துரை வேண்டினார். நூலைப்படித்து மெய்மறந்தேன்.வளையல் பெண்களின் அடையாளம் அந்த வளையல் தம் வாழ்வில் அம்மா அக்கா நட்பு உறவு என அனைத்து உறவுச் சுரங்கமாக உள்ளதை இந்த அக்காவின் வளையல் உணர்த்துகிறது. வேண்மாள் வழங்கிய பகுத்தறிவு வளையல் அன்னை நான்காவது மகளாகப் பிறந்தபோது செல்வச்செழிப்பில் வளர்ந்த விதம் இந்த வரிகள் பக்ர்கிறது

எடுத்தெனை இறுக்கி  அனைத்து

 இட்டனராம் முத்தங்கள் நூறு

தந்தது மட்டுமா சொல்வாள் அம்மா

 பத்தரை மாற்றுத் தங்கத்தில்                                    

எனது பத்து விரல்களில் மோதிரம்

இட் டதைப் புகல்வாள்

தங்க் காப்பு இட்ட தை சொல்லி மாள்வாள்

 அக்காளின் வளைகாப்பு  மகபேற்றில் உயிரிழந்த சோக நிகழ்வை ஆன்ந்தமும் கண்ணீரும் பொங்க கவிதை நடையில் அக்காவின் வளையல் பெண்ணின் மகத்துவத்தை உணர்த்துகிறது

தங்கைக்கு வளை காப்பு எம்

தங்க மங்கைக்கு வளைகாப்பு

சின்னவள் எம் வீட்டின் 

வைரச் சிலைக்கு வளைகாப்பு

கடைக்குட்டிச் செல்வத்துக்கு

கைவளை அணிகிற ந்ல்விழா சகோதரியின் வளைகாப்பு நிகழ்வை கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார் கலை.

தன் நூல் விற்பனையில் தங்க வளையல் வாங்கி அணிந்த தை புரிப்போடு கூறுகிறார்.

நான் எழுதிய கவிதைகள்

ஈரநெஞ்சங்கள் நூலாக

      நூலக ஆணை கிடைத்திட மகிழ்ந்தேன்

 

தற்போது நாகரிகம் என்ற போர்வையில் மகத்துவ அணிகலன்கள் போனதை வருத த்தோடு பதிவிடுகிறார்.

கைநிறை வளையல் அணிந்து

 கலகலக்க ஒலியெழுப்பிய

பெண்ணவள் எங்கே போனாள்

பூசிய மஞசள்  முகங்கள்

பேசிடும் பெண்ணின் பெருமை

எங்கே போனது எங்கே போனதோ

அருமைத் தங்கை கலை புலியூர் கேசிகனார் புகழ் பர்ப்பும் ப்ணியாகவே தம் வாழ்வைக் கொண்டு ஐயா பேரிலேயே அமைப்பும் கண்டு இளைஞர்களை மகளிர் மாமணிகளை உருவாக்கும் சிறந்த பெண்மணி.. தமிழ் வளர்சித்துறையில் தலைவர் கலைஞரால் பணியமர்த்த்ப்பட்டு அளப்ரிய தொண்டாற்றிய தொண்டறச் செல்வி. அவர் படைத்துள்ள  இலக்கியங்கள் அவர் பெற்ற விருதுகள் கலையின் பெருமைப் பெட்டகங்கள். பணி ஓய்வு பெற்ற பின்னும் அளப்பரிய தொண்டாற்றும் கலைச்செல்வி பணி போற்றத் தக்கது. நாலாவது பிற்ந்த நன்மகள் நாடேபோற்றும் மகளாக உள்ளார். பெண்ணின் பெருமை கலை நீடு வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

 

No comments:

Post a Comment