Friday, May 23, 2025

 

செங்கல்பட்டு திருக்குறள் பேரவையின் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு 11  ஆம் தொடர் விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் சார்பில் 11ஆம் தொடரில் பங்கேற்பதில் பெரும்கிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.அருமை சகோதரர் காவியப்புலவர் புதுகை வெற்றி வேலனார் எம்மை அழைத்தபோது பெருமிதம் கொண்டேன். அருமைக் கவிஞரின் வேலு நாச்சியார் காவியத்தை அண்மைய்ல் படித்து பரவசமடைந்தேன். கதைச் செறிவும் பாவகையும் மண்ணின் பெருமையும் குடிப் பெருமையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார் நம் காவியப் புலவர், தம் கவிதைப் பணிகளுக்கிடையில் திருக்குறள் பேரவை நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நட த்தும் காப்பியக் கவிஞரின் நெஞ்சாரப் போற்றுகிறேன்.. செயலர் சீனி கவிஞர் இரவிபாரதி எம் நெடுநாளைய நண்பர். பொருளர் சு. கணேசன் நண்பர் வி,கே.பாண்டியன் மற்றும் திருகுறள் பாடிய மாணவர்கள் கவிதை பாடிய கவிஞர்கள் வருகை தந்துள்ள அனைவருக்கும் என் முதற்கண் வணக்கதைத்தெரித்துக் கொள்கிறேன்.

அடிகளார் அவர்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை. தமிழர்கள் ஆன்மீகப் பணிகளின் தொண்டறத்தை சொல்லறத்தை தம் வாழ்நாள் இறுதி வரை காத்த பெருமகன். திருக்குறள் பேரவையை நிறுவி தமிழ்நாடு முழுவதும் குறளறத்தை போதித்து பேரவைக்கு அடித் தளத்தை அமைத்த  பேராசான்..

அன்றைய தஞசை மண்ணில் 1925ஆம் ஆண்டு சூலை 11ஆம் நாள் சீனிவாசனார்  சொர்ணாச்சி இணையருக்குப் கடைசி மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் அரங்கநாதன்.அரங்கநாதர் தம் அக்காளின் மெய்யாத்தூர்  இல்லத்தில் சிறிது காலம் வளர்ந்துபின் தந்தையிடம் திருவேட்களம் ஊரில் ;வ்ளர்ந்தார்.அரங்கநாதரின் அண்ணன் கோபாலகிருட்டிணன் அண்ணமலைப் பல்கலக் கழ்கத்தில் வித்வான் படிக்க விரும்பினார். அப்போது அரங்கநாதருக்கு வயது 6.

தந்தையார் பால் வியாபாரம் செய்து வந்தார். ஈழத்தைச் சேர்ந்த சுவாமி விபுலானந்த அடிகள் அண்ணாமலை ப்ல்கலைக் கழ்கத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். அவரோடு சொல்லின் செல்வர் இரா.பி சேதுப்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சர்க்கரைப் புலவர் போன்றவர்கள் தமிழ்த்துறையில் பணியாற்றினர். அனைவருக்கும் பால கொடுக்கும் பணியை அரங்கநாதர் செய்து வந்தார். விபுலானந்தருக்கு சிறுவன் அரங்கநாதன் மேல் தனிப் பற்று இருந்தது.அடிகளார் வெளொய்ய்ர்ப்பயணம் செல்லும் போதெல்லம் சிறுவனையும் அழைத்துச்செல்வார். ஏழைச் சேரிப் பிள்ளைகளுக்கு அடிகளாருடன் துப்புரவுப் பணி கல்விப்பணி செய்துவந்தார். உடன் லாந்தர் விளக்கை எடுத்துகொண்டு தொண்டறப்பணிக்கு துணைநின்றவர் அரங்கநாதன். இளமைவயதில் அறிஞர் பெருமக்களின் தொடர்பே குன்றக்குடி அடிகளாராக உயர்த்தியது.

காடியாபட்டியில் அண்ணன் கோபாலகிருட்டிணனுக்கு தமிழாரியர் வேலை கிடைக்க  தம்பி அரங்கநாதன் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்த்தார்.படிக்கும் காலத்திலேயே வினோபாவே வாசக சாலையை தொடங்கிய பெருமைக்குரிய்வர். பள்ளியின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தார்’ பின் வேலைக்குச் செல்வதில் கவனம் செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் இராணுவத்தில் சேருவதற்கு விண்ணிப்பித்தார். 18 வயது நிறைவடையாத தால் பணி கிட்டவில்லை. பல்வேறுமுயற்சிக்குப் பின் தருமபுர ஆதினத்தில் கணக்கர் வேலைக்கு சேர்ந்து  25ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு கயிலை குருமணி நெடுஞ்சான்ங்கடையாக விழுந்து அருட்பணியை ஏற்றார். பல்வேறு இடையூருக்குப்பின் பின் மடாதிபதி துறவு பூரணம் சம்மதமா என்றார் குடும்பத்தார் எதிர்ப்ப்பையும் மீறி துறவரம் பூண்டார். 1945 ஆண்டு சூலை மாதம் 28ஆம் நாள் அரங்கந்தாதர் கந்தசாமி பரதேசி ஆனார். குருமணிக்கு உகந்த தம்பிரானாக கந்தசாமி தம்பிரானாக பணியாற்றினார்

.தருமபுர ஆதினா தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் வித்வான் படிப்பை மேற்கொண்டார். கருத்தாழமிக்க பட்டிமன்றம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தமிழ் வளர்த்தார் தம்பிரான்.

 குன்றக்குடியின் குன்றில் ஏராளமான கல்வெட்டுகள் 1800 ஆண்டுகளுக்கு முந்தையது சமணப்பள்ளி இருந்த தாக குறிப்பு உள்ளது .குன்றின்மேலுள்ள கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் மருதுபாண்டியர் புதிப்பித்துள்ளார். மலையின் தோற்றம் மயிலைப்போன்றுஇருப்பதால் இது மயூரகிரி என வழங்கப்டுகிறது. பிரான்மலையிலிருந்து குன்றக்குடி ஆதின மடம் வந்தது. 1948ஆம் ஆண்டு  குன்றக்குடி ஆதீனம் குருபூசைக்கு அனைத்து ஆதீனங்களையும் அழைத்தனர். தருமபுர ஆதினத்திலிருந்து கந்தசாமி தம்பிரான் பங்கேற்றார்.  அந்த நிகழ்வில்  கந்தசாமித் தம்பிரானை பேச அழைத்தனர். அப்பேச்சு அனைவரின் கவனதையும் ஈரத்தது.

குன்றக்குடி ஆதினம் தரும்புர ஆதினத்திலிருந்து மகா சன்னிதானம் கயிலை மணியை வேண்டி  அழைத்து வந்தார். 1949 ஆம் 5ஆம் ஆண்டு  செப்டம்பர் 5ஆம் நாள்  குன்றக்குடி ஆதினத்தில் கந்தசாமித் தம்பிரான் அருள்மிகு தெய்வ சிகாமணி அருணாச்சல தேசிகன் எனப் பெயர் மாற்றம் பெறுகிறார். 1952ஆம் ஆண்டு சூலை 26ஆம் நாள் குன்றக்குடி ஆதினத்தின் ஆறுமுக தேசிகருக்குப் பின் தம் 27 ஆம் அகவையில் குன்றக்குடி ஆதீன மகாசன்னிதானமாக அடிகளார் பொறுப்பேற்றார்.  

குன்றக்குடி அடிகளாரின் அருட்பணியும் தமிழ்ப்பணியும் சமுதாயப் பணியும் சமத்துவ்ப் பணியும் கல்விப்பணியும்  என மிகச் சிறப்பாக தொண்டாற்றினார்.

குன்றக்குடி பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருக கூட்டுறவு சங்கங்களை நிறுவி இன்றும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறது. கல்விப் பணி சிறக்க கல்விக்கு கூடங்களை நிறுவி அறியாமையை போக்கினார்.

கிராமத்தில் வேலைசெய்யும் மக்கள் வெயில் மழையில் காலில்  செருப்பு இல்லாமல் பணிசெய்யும் கொடுமை கண்டு தானும் செருப்பு இல்லாமல் பயணித்தார் புரட்சியாளர் அடிகளார்.

இராசாசியின் குலக் கல்வியை கடுமையாக எதிர்த்தவர் நம் அடிகளார். பிரமணர்கள்தான் படிக்கவேண்டுமா என்று வினாத் தொடுத்தவர்.

குன்றக்குடி திருக்கோயில்களில் தமிழ்வழிபாடுகளுக்கு வித்திட்டவர் அடிகளார். அனைத்து ஆதினக்களையும் கூட்டி தமிழ்வழிபாட்டை நிலைநிறுத்தியவர் அடிகளார்.

முதன்முதலில்  ஈரோட்டில் தந்தை பெரியாரை சந்தித்ததை அடிகளார் பெருமகிழ்சியோடு குறிப்பிடுகிறார்.உலகத் தலைவர் பெரியார் என்று குறிப்பிட்ட பெருமைக்குரியவர் அடிகளார்.

தந்தைபெரியர் குன்றக்குடி சென்றபோது பூரணகும்ப  மரியாதை செழுத்தி திருநீர் வழங்கி வரவேற்ற நிகழ்வு உலகம் அறிந்தது

 1982 ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தின்போது அடிகளார் சென்று அமைதிக்கு பாடுபட்டார். உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் தொண்டு என வாழ்ந்தவர் அடிகளார்.

அடிகளார் இரசியா சென்றபோது சாமியாராகிய் தங்களால் எப்படி சோசலிசம் பேச முடிகிறது என்பதற்கு ஏழாம் நூற்றாண்டிலேயே சைவம் சோசலிசத்தை ஏற்றுக்கொண்டது என்றார்.

உலகத்தமிழ்நாடு நடந்தபோது அண்ணா அழைப்பிதழில் குன்றக்குடி அடிகளார் இல்லாதது கண்டு அடிகளார் இல்லாத மாநாடா என்று அழைப்பிதழில் குன்றக்குடி அடிகளாரை இணைத்தார்.

தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்தவர் நம் குன்றக்குடி அடிகளார். அது போது ஆத்திகம் நாத்திகம் என்ற பேச்சுக்கே இடமில்லை அவர் என் நெஞ்சுக்கினிய நண்பர் என்றார்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சென்றபோதும் பூரணகும்ப மரியாதை செழுத்தி வரவேற்றார் அடிகளார்.

தாய்மொழிக் கல்வியின் சிறப்பை அடிகளார் வாழ்நாள் முழுமையும் வலியுறுத்தினார். உழுதநிலத்தில் மழை பொழிதல் போல் தாய்மொழிக்கல்வி பாறையில் மழைபொழிதல் போல் பிறமொழிக் கல்வி. இருசாதிகள்தான் ஒன்று தாய்மொழிக்கல்வி மற்றொன்று பிறமொழிக்கல்வி எனக் கூறுகிறார்.

13 – 4  1995 அன்று அடிகளாருகு மார்புவலி வந்து மருத்துவர்கள் அமெரிக்கா கொண்டுசென்றல் நல்மாகும் எனக் கூறிய போது அமஎரிக்கா செல்ல திட்டமிட்டனர்.    15 – 4 – 1995 அன்று தமிழகத்தில் காலமானார்.

அடிகளாரின் அறத்தொண்டுகள் ஆன்மீகவாதிகள் அனைவரும்  பின் பற்றவேண்டிய அறம். அடிகளார் புகழ் ஒங்குக உயர்க.

No comments:

Post a Comment