Sunday, June 15, 2025

 

அமெரிக்கா கோல்டன் கேட் முதன்மைப் பாலம்

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


மனித மனங்கள் இன்றும்

மண்ணிலெ இணையா நிலையே

 தனித்தனி உயர்ந்த மலைகள்

தகைமையாய் இணைத்தே பாலம்

இனிமையாய் மரின் பகுதி

 இணைத்திடும் தொங்கு பாலம்

 நனிபுகழ் அமெரிக் காவின்

நலம்உயர் முதன்மைப் பாலம் !

 

கடற்கரை கீழே ந்ன்று

கலையுர் பாலம் கண்டேன்

திடமெனெ வான உச்சி

திண்ணமாய் தூணே இன்றி

கடந்திட  சென்றநூற் றாண்டில்

செழுமையாய்க்  கண்ட பாலம்

தடைகளை கடக்க மனிதன்

தந்திடும் உழைப்பு என்னே  !

 

கடலினைத் தாண்டிச் செல்லும்

      கற்பனைக் கெட்டா விந்தை

தடமென கண்ட பாதை

      தனித்த பொறியியல் உச்சம்

இடமெலாம் இணையும் போது

இணையிலா பொருளா தாரம்

திடுமென உய்ர்ந்து அங்கே

 திகழ்புகழ மாட்சி அன்றோ !

 

இந்திய மண்ணில் இங்கு

இணையிலா வளர்ச்சி இன்று

 தந்திடும் இணைப்புப் பாலம்

தகுதியாய் தில்லி மும்பை

 முந்திடும்  கொங்கன் மலையை

முழுமையாய் குடைந்து செல்லும்

எந்தமிழ் நாட்டின் பாம்பன்

எழுச்சிப் பாலம் நன்றே !

Thursday, June 12, 2025

             அமெரிக்கா டென்வர் எழில்

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


அமெரிக்கா வின் டெனவர்

      அகிலம் போற்றும் நகரே

இமைக்க ந்கரின் எழிலை

      இயைந்தே காணும் கண்கள்

எமையே ந்கரைச் சுற்றி

      எழுச்சி கவினும் வந்தார்

உமையாள் தாங்கும் பசுமையாய்

      உய்ர்ந்த மலையில் படரும் !

 

நடக்கும் பாதை ந்கரின்

நளின வளைவாய் உண்டு

            கடக்கும் நாயின் கழிவை

கவர் பெட்டி வைத்தே

            வட்க்கும் தெற்கும் நடக்க

                  வலிமை செழுமைச் சாலை

            மிடுக்கும் நடையில் யானும்

மிளிரும் பால்கன் பூங்கா !

 

            மலையின் மீதே ஊர்தி

ம்கிழ்ந்தே கவினும் ஓட்ட

சலசல வென்றே நீரும்

சட்டென ஏரியில் செல்லும்

தலமுயர் கைலேன்சு பூங்கா

 தகுதியாய் யாணும் கண்டேன்

குலக்கொடி மாரி பற்றாய்

 குவலயப் பதிவு செய்தார்!

 

குளூமை டென்வர் நகரம்

      கன்றுகள் எங்கும் தோன்றும்

ப்ழுதிலா மக்கள் நன்றே

பல்நலம் பேணிச் செல்வர்

நிலைஉயர் நிலங்கள் ந்கரில்

 நித்தமும் தென்றல் வீசும்

கலைவளர் அமெரிக் காவின் !

கவினார் காட்சி அன்றோ

மகன் 

Wednesday, May 28, 2025

 

 

பிரபாகரன் தலைவன்

எங்கள் பெம்மானைப்

        போற்றுகின்றோம்

 

.பாரிலே தமிழர் உயர்த்தி

பண்புடை படைநலம் கூட்டி

தேரிலே தமிழர் தலைமை

தாங்கிய புரட்சி வீரன்

 ஊரிலே உரிமை காக்க

உன்னத தியாகத் தோழன்

வீரனாம் புறநா நூற்றின்

வேந்தர் புகழ் ஓங்குக

 

அறத்தின் மூச்சாய்க் கொண்டோன்

ஆயுதம் தாங்கிக் காத்தோன்

மறவரம் தமிழர் வீரம்

மண்ணிலே உயர்த்திக் காட்டி

பிரபாகரன் தலைவன் எங்கள்

 பெம்மானைப் போற்று கின்றோம்

உரமான கொள்கை நோக்கி

உயிரையே ஈந்த அண்ணல்

 

தற்குரித் தமிழர் எல்லாம்

தன்னல வழியில் சென்றார்

அற்புதத் தலைவன் அங்கே

அணியென குடும்பம் சேர்த்தே

 நற்றமிழ் வீரப் புலிகள்

நனிபுகழ் இன்றும் சொல்லும்

தற்கொலை தன்னை ஈந்து

தலத்திலே ஈழப் போரே

 

பிள்ளையைக் கொன்றார் ஈனர்

பிரபாகரன் உயிரை ஈந்தார்

பிஞ்சுகள் முதுமை யெல்லாம்

பிணமென ஈழ மண்ணில்

பன்றிகள் தின்றார் உயிரை

பாரினில் சிங்கள் மோசம்

 பண்புள தலைவர் அங்கே

படுதுயில் கொடுமை அந்தோ

Friday, May 23, 2025

 

செங்கல்பட்டு திருக்குறள் பேரவையின் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு 11  ஆம் தொடர் விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் சார்பில் 11ஆம் தொடரில் பங்கேற்பதில் பெரும்கிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.அருமை சகோதரர் காவியப்புலவர் புதுகை வெற்றி வேலனார் எம்மை அழைத்தபோது பெருமிதம் கொண்டேன். அருமைக் கவிஞரின் வேலு நாச்சியார் காவியத்தை அண்மைய்ல் படித்து பரவசமடைந்தேன். கதைச் செறிவும் பாவகையும் மண்ணின் பெருமையும் குடிப் பெருமையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார் நம் காவியப் புலவர், தம் கவிதைப் பணிகளுக்கிடையில் திருக்குறள் பேரவை நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நட த்தும் காப்பியக் கவிஞரின் நெஞ்சாரப் போற்றுகிறேன்.. செயலர் சீனி கவிஞர் இரவிபாரதி எம் நெடுநாளைய நண்பர். பொருளர் சு. கணேசன் நண்பர் வி,கே.பாண்டியன் மற்றும் திருகுறள் பாடிய மாணவர்கள் கவிதை பாடிய கவிஞர்கள் வருகை தந்துள்ள அனைவருக்கும் என் முதற்கண் வணக்கதைத்தெரித்துக் கொள்கிறேன்.

அடிகளார் அவர்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை. தமிழர்கள் ஆன்மீகப் பணிகளின் தொண்டறத்தை சொல்லறத்தை தம் வாழ்நாள் இறுதி வரை காத்த பெருமகன். திருக்குறள் பேரவையை நிறுவி தமிழ்நாடு முழுவதும் குறளறத்தை போதித்து பேரவைக்கு அடித் தளத்தை அமைத்த  பேராசான்..

அன்றைய தஞசை மண்ணில் 1925ஆம் ஆண்டு சூலை 11ஆம் நாள் சீனிவாசனார்  சொர்ணாச்சி இணையருக்குப் கடைசி மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் அரங்கநாதன்.அரங்கநாதர் தம் அக்காளின் மெய்யாத்தூர்  இல்லத்தில் சிறிது காலம் வளர்ந்துபின் தந்தையிடம் திருவேட்களம் ஊரில் ;வ்ளர்ந்தார்.அரங்கநாதரின் அண்ணன் கோபாலகிருட்டிணன் அண்ணமலைப் பல்கலக் கழ்கத்தில் வித்வான் படிக்க விரும்பினார். அப்போது அரங்கநாதருக்கு வயது 6.

தந்தையார் பால் வியாபாரம் செய்து வந்தார். ஈழத்தைச் சேர்ந்த சுவாமி விபுலானந்த அடிகள் அண்ணாமலை ப்ல்கலைக் கழ்கத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். அவரோடு சொல்லின் செல்வர் இரா.பி சேதுப்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சர்க்கரைப் புலவர் போன்றவர்கள் தமிழ்த்துறையில் பணியாற்றினர். அனைவருக்கும் பால கொடுக்கும் பணியை அரங்கநாதர் செய்து வந்தார். விபுலானந்தருக்கு சிறுவன் அரங்கநாதன் மேல் தனிப் பற்று இருந்தது.அடிகளார் வெளொய்ய்ர்ப்பயணம் செல்லும் போதெல்லம் சிறுவனையும் அழைத்துச்செல்வார். ஏழைச் சேரிப் பிள்ளைகளுக்கு அடிகளாருடன் துப்புரவுப் பணி கல்விப்பணி செய்துவந்தார். உடன் லாந்தர் விளக்கை எடுத்துகொண்டு தொண்டறப்பணிக்கு துணைநின்றவர் அரங்கநாதன். இளமைவயதில் அறிஞர் பெருமக்களின் தொடர்பே குன்றக்குடி அடிகளாராக உயர்த்தியது.

காடியாபட்டியில் அண்ணன் கோபாலகிருட்டிணனுக்கு தமிழாரியர் வேலை கிடைக்க  தம்பி அரங்கநாதன் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்த்தார்.படிக்கும் காலத்திலேயே வினோபாவே வாசக சாலையை தொடங்கிய பெருமைக்குரிய்வர். பள்ளியின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தார்’ பின் வேலைக்குச் செல்வதில் கவனம் செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் இராணுவத்தில் சேருவதற்கு விண்ணிப்பித்தார். 18 வயது நிறைவடையாத தால் பணி கிட்டவில்லை. பல்வேறுமுயற்சிக்குப் பின் தருமபுர ஆதினத்தில் கணக்கர் வேலைக்கு சேர்ந்து  25ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு கயிலை குருமணி நெடுஞ்சான்ங்கடையாக விழுந்து அருட்பணியை ஏற்றார். பல்வேறு இடையூருக்குப்பின் பின் மடாதிபதி துறவு பூரணம் சம்மதமா என்றார் குடும்பத்தார் எதிர்ப்ப்பையும் மீறி துறவரம் பூண்டார். 1945 ஆண்டு சூலை மாதம் 28ஆம் நாள் அரங்கந்தாதர் கந்தசாமி பரதேசி ஆனார். குருமணிக்கு உகந்த தம்பிரானாக கந்தசாமி தம்பிரானாக பணியாற்றினார்

.தருமபுர ஆதினா தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் வித்வான் படிப்பை மேற்கொண்டார். கருத்தாழமிக்க பட்டிமன்றம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தமிழ் வளர்த்தார் தம்பிரான்.

 குன்றக்குடியின் குன்றில் ஏராளமான கல்வெட்டுகள் 1800 ஆண்டுகளுக்கு முந்தையது சமணப்பள்ளி இருந்த தாக குறிப்பு உள்ளது .குன்றின்மேலுள்ள கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் மருதுபாண்டியர் புதிப்பித்துள்ளார். மலையின் தோற்றம் மயிலைப்போன்றுஇருப்பதால் இது மயூரகிரி என வழங்கப்டுகிறது. பிரான்மலையிலிருந்து குன்றக்குடி ஆதின மடம் வந்தது. 1948ஆம் ஆண்டு  குன்றக்குடி ஆதீனம் குருபூசைக்கு அனைத்து ஆதீனங்களையும் அழைத்தனர். தருமபுர ஆதினத்திலிருந்து கந்தசாமி தம்பிரான் பங்கேற்றார்.  அந்த நிகழ்வில்  கந்தசாமித் தம்பிரானை பேச அழைத்தனர். அப்பேச்சு அனைவரின் கவனதையும் ஈரத்தது.

குன்றக்குடி ஆதினம் தரும்புர ஆதினத்திலிருந்து மகா சன்னிதானம் கயிலை மணியை வேண்டி  அழைத்து வந்தார். 1949 ஆம் 5ஆம் ஆண்டு  செப்டம்பர் 5ஆம் நாள்  குன்றக்குடி ஆதினத்தில் கந்தசாமித் தம்பிரான் அருள்மிகு தெய்வ சிகாமணி அருணாச்சல தேசிகன் எனப் பெயர் மாற்றம் பெறுகிறார். 1952ஆம் ஆண்டு சூலை 26ஆம் நாள் குன்றக்குடி ஆதினத்தின் ஆறுமுக தேசிகருக்குப் பின் தம் 27 ஆம் அகவையில் குன்றக்குடி ஆதீன மகாசன்னிதானமாக அடிகளார் பொறுப்பேற்றார்.  

குன்றக்குடி அடிகளாரின் அருட்பணியும் தமிழ்ப்பணியும் சமுதாயப் பணியும் சமத்துவ்ப் பணியும் கல்விப்பணியும்  என மிகச் சிறப்பாக தொண்டாற்றினார்.

குன்றக்குடி பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருக கூட்டுறவு சங்கங்களை நிறுவி இன்றும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறது. கல்விப் பணி சிறக்க கல்விக்கு கூடங்களை நிறுவி அறியாமையை போக்கினார்.

கிராமத்தில் வேலைசெய்யும் மக்கள் வெயில் மழையில் காலில்  செருப்பு இல்லாமல் பணிசெய்யும் கொடுமை கண்டு தானும் செருப்பு இல்லாமல் பயணித்தார் புரட்சியாளர் அடிகளார்.

இராசாசியின் குலக் கல்வியை கடுமையாக எதிர்த்தவர் நம் அடிகளார். பிரமணர்கள்தான் படிக்கவேண்டுமா என்று வினாத் தொடுத்தவர்.

குன்றக்குடி திருக்கோயில்களில் தமிழ்வழிபாடுகளுக்கு வித்திட்டவர் அடிகளார். அனைத்து ஆதினக்களையும் கூட்டி தமிழ்வழிபாட்டை நிலைநிறுத்தியவர் அடிகளார்.

முதன்முதலில்  ஈரோட்டில் தந்தை பெரியாரை சந்தித்ததை அடிகளார் பெருமகிழ்சியோடு குறிப்பிடுகிறார்.உலகத் தலைவர் பெரியார் என்று குறிப்பிட்ட பெருமைக்குரியவர் அடிகளார்.

தந்தைபெரியர் குன்றக்குடி சென்றபோது பூரணகும்ப  மரியாதை செழுத்தி திருநீர் வழங்கி வரவேற்ற நிகழ்வு உலகம் அறிந்தது

 1982 ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தின்போது அடிகளார் சென்று அமைதிக்கு பாடுபட்டார். உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் தொண்டு என வாழ்ந்தவர் அடிகளார்.

அடிகளார் இரசியா சென்றபோது சாமியாராகிய் தங்களால் எப்படி சோசலிசம் பேச முடிகிறது என்பதற்கு ஏழாம் நூற்றாண்டிலேயே சைவம் சோசலிசத்தை ஏற்றுக்கொண்டது என்றார்.

உலகத்தமிழ்நாடு நடந்தபோது அண்ணா அழைப்பிதழில் குன்றக்குடி அடிகளார் இல்லாதது கண்டு அடிகளார் இல்லாத மாநாடா என்று அழைப்பிதழில் குன்றக்குடி அடிகளாரை இணைத்தார்.

தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்தவர் நம் குன்றக்குடி அடிகளார். அது போது ஆத்திகம் நாத்திகம் என்ற பேச்சுக்கே இடமில்லை அவர் என் நெஞ்சுக்கினிய நண்பர் என்றார்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சென்றபோதும் பூரணகும்ப மரியாதை செழுத்தி வரவேற்றார் அடிகளார்.

தாய்மொழிக் கல்வியின் சிறப்பை அடிகளார் வாழ்நாள் முழுமையும் வலியுறுத்தினார். உழுதநிலத்தில் மழை பொழிதல் போல் தாய்மொழிக்கல்வி பாறையில் மழைபொழிதல் போல் பிறமொழிக் கல்வி. இருசாதிகள்தான் ஒன்று தாய்மொழிக்கல்வி மற்றொன்று பிறமொழிக்கல்வி எனக் கூறுகிறார்.

13 – 4  1995 அன்று அடிகளாருகு மார்புவலி வந்து மருத்துவர்கள் அமெரிக்கா கொண்டுசென்றல் நல்மாகும் எனக் கூறிய போது அமஎரிக்கா செல்ல திட்டமிட்டனர்.    15 – 4 – 1995 அன்று தமிழகத்தில் காலமானார்.

அடிகளாரின் அறத்தொண்டுகள் ஆன்மீகவாதிகள் அனைவரும்  பின் பற்றவேண்டிய அறம். அடிகளார் புகழ் ஒங்குக உயர்க.

Sunday, May 11, 2025

 

பெண்ணின் பெருமை கலை நீடு வாழ்க வாழ்க

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசிரியர் தமிழ்ப்பணி

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

உரையாசிரியர் தமிழ் இலக்கியங்கள் உலமெலாம் தமிழர் கைகளில் தவழ அரும் பணியாற்றியவர் புலியூர் கேசிகனார் திருமகள் கலைச்செல்வி தந்தை வழியில் அரும்பணியாற்றும் கவிஞர் எழுத்தாளர் சிறந்த ஒருங்கிணைப்பாளார் விழா அமைப்பாளர் என பன்முக ஆற்றல்களின் அடையாளம். அண்மயில் தந்தையார் 32ஆம் ஆண்டு நினைவு நாளிற்கு அழைதிருந்தார். அங்கு கவி முனைவர் தகுதி திவாகரன் தம் துணைவியார் சுலக்சனா எல்.எல்.பி. ஊடகச் செம்மல் முத்துக்குமாரசாமி அவர்களோடும் இரட்டையர் முகம் ஆசிரியர் இளமாறன் கவிஞர் முருகையன்  மற்றும் பெருமக்கள் வருகை த்ந்தனர். தம் தந்தையார் அருமை பெருமைகளை புகழ்ந்து எம்மோடு பகிர்ந்து கொண்டார் கலை. நாங்கள் அனைவரும் ஐயாவின் புகழ் பாடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம்

.அக்காவின் வளையல் என்ற நூலை அனுப்பி வாழ்த்துரை வேண்டினார். நூலைப்படித்து மெய்மறந்தேன்.வளையல் பெண்களின் அடையாளம் அந்த வளையல் தம் வாழ்வில் அம்மா அக்கா நட்பு உறவு என அனைத்து உறவுச் சுரங்கமாக உள்ளதை இந்த அக்காவின் வளையல் உணர்த்துகிறது. வேண்மாள் வழங்கிய பகுத்தறிவு வளையல் அன்னை நான்காவது மகளாகப் பிறந்தபோது செல்வச்செழிப்பில் வளர்ந்த விதம் இந்த வரிகள் பக்ர்கிறது

எடுத்தெனை இறுக்கி  அனைத்து

 இட்டனராம் முத்தங்கள் நூறு

தந்தது மட்டுமா சொல்வாள் அம்மா

 பத்தரை மாற்றுத் தங்கத்தில்                                    

எனது பத்து விரல்களில் மோதிரம்

இட் டதைப் புகல்வாள்

தங்க் காப்பு இட்ட தை சொல்லி மாள்வாள்

 அக்காளின் வளைகாப்பு  மகபேற்றில் உயிரிழந்த சோக நிகழ்வை ஆன்ந்தமும் கண்ணீரும் பொங்க கவிதை நடையில் அக்காவின் வளையல் பெண்ணின் மகத்துவத்தை உணர்த்துகிறது

தங்கைக்கு வளை காப்பு எம்

தங்க மங்கைக்கு வளைகாப்பு

சின்னவள் எம் வீட்டின் 

வைரச் சிலைக்கு வளைகாப்பு

கடைக்குட்டிச் செல்வத்துக்கு

கைவளை அணிகிற ந்ல்விழா சகோதரியின் வளைகாப்பு நிகழ்வை கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார் கலை.

தன் நூல் விற்பனையில் தங்க வளையல் வாங்கி அணிந்த தை புரிப்போடு கூறுகிறார்.

நான் எழுதிய கவிதைகள்

ஈரநெஞ்சங்கள் நூலாக

      நூலக ஆணை கிடைத்திட மகிழ்ந்தேன்

 

தற்போது நாகரிகம் என்ற போர்வையில் மகத்துவ அணிகலன்கள் போனதை வருத த்தோடு பதிவிடுகிறார்.

கைநிறை வளையல் அணிந்து

 கலகலக்க ஒலியெழுப்பிய

பெண்ணவள் எங்கே போனாள்

பூசிய மஞசள்  முகங்கள்

பேசிடும் பெண்ணின் பெருமை

எங்கே போனது எங்கே போனதோ

அருமைத் தங்கை கலை புலியூர் கேசிகனார் புகழ் பர்ப்பும் ப்ணியாகவே தம் வாழ்வைக் கொண்டு ஐயா பேரிலேயே அமைப்பும் கண்டு இளைஞர்களை மகளிர் மாமணிகளை உருவாக்கும் சிறந்த பெண்மணி.. தமிழ் வளர்சித்துறையில் தலைவர் கலைஞரால் பணியமர்த்த்ப்பட்டு அளப்ரிய தொண்டாற்றிய தொண்டறச் செல்வி. அவர் படைத்துள்ள  இலக்கியங்கள் அவர் பெற்ற விருதுகள் கலையின் பெருமைப் பெட்டகங்கள். பணி ஓய்வு பெற்ற பின்னும் அளப்பரிய தொண்டாற்றும் கலைச்செல்வி பணி போற்றத் தக்கது. நாலாவது பிற்ந்த நன்மகள் நாடேபோற்றும் மகளாக உள்ளார். பெண்ணின் பெருமை கலை நீடு வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

 

 கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை

நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள் 200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம் _ 632502 கைப்பேசி 9443490703

 பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர் அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது

.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத் தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல் படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய பெருமையடைகிறார் புலவர்.

 உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின் கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர். தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும் அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும் மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை  வழங்கிய பெருமைக்குரிய மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர். மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம் பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின் பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின் மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்

“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர் கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )

 பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று உணர முடிகிறது.

 துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )

என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின் ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல் உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும் முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம் என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை  பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )

 மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.

 ”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும் பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த் தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )

மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித் தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching went beyond the text books opening up aworl of stories history and values embedded in the tamil language” (பக்கம் 75 )

இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை வித்தகராக வலம் வருகிறார்.

சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார். “

ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)

மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர் மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார். ‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )

மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு பதுமனாரின் தொண்டை அறியலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன் எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”

நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில் குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே சாரும்” (பக்கம் 129 )

அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.

வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.

“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக நானே உள்ளேன்” (பக்கம் 158 )

பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும் வாழ்த்துவம் “

“எம்பெருமானார் இராமானுசர்போல் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப் பெருமை கொண்டவாறு  இன்னும் நூற்றாண்டு இரும்’ (பக்கம் 195 )

 வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர் கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்

இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.

உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத் தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச் சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.  வாழ்க பதுமனார் ! தொடர்க அவர்தம் தொண்டறம் !

 கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை

நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள் 200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம் _ 632502 கைப்பேசி 9443490703

 பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர் அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது

.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத் தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல் படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய பெருமையடைகிறார் புலவர்.

 உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின் கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர். தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும் அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும் மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை  வழங்கிய பெருமைக்குரிய மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர். மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம் பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின் பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின் மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்

“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர் கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )

 பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று உணர முடிகிறது.

 துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )

என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின் ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல் உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும் முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம் என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை  பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )

 மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.

 ”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும் பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த் தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )

மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித் தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching went beyond the text books opening up aworl of stories history and values embedded in the tamil language” (பக்கம் 75 )

இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை வித்தகராக வலம் வருகிறார்.

சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார். “

ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)

மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர் மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார். ‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )

மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு பதுமனாரின் தொண்டை அறியலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன் எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”

நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில் குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே சாரும்” (பக்கம் 129 )

அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.

வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.

“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக நானே உள்ளேன்” (பக்கம் 158 )

பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும் வாழ்த்துவம் “

“எம்பெருமானார் இராமானுசர்போல் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப் பெருமை கொண்டவாறு  இன்னும் நூற்றாண்டு இரும்’ (பக்கம் 195 )

 வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர் கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்

இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.

உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத் தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச் சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.  வாழ்க பதுமனார் ! தொடர்க அவர்தம் தொண்டறம் !

 கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை

நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள் 200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம் _ 632502 கைப்பேசி 9443490703

 பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர் அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது

.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத் தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல் படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய பெருமையடைகிறார் புலவர்.

 உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின் கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர். தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும் அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும் மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை  வழங்கிய பெருமைக்குரிய மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர். மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம் பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின் பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின் மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்

“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர் கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )

 பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று உணர முடிகிறது.

 துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )

என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின் ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல் உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும் முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம் என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை  பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )

 மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.

 ”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும் பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த் தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )

மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித் தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching went beyond the text books opening up aworl of stories history and values embedded in the tamil language” (பக்கம் 75 )

இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை வித்தகராக வலம் வருகிறார்.

சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார். “

ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)

மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர் மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார். ‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )

மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு பதுமனாரின் தொண்டை அறியலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன் எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”

நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில் குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே சாரும்” (பக்கம் 129 )

அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.

வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.

“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக நானே உள்ளேன்” (பக்கம் 158 )

பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும் வாழ்த்துவம் “

“எம்பெருமானார் இராமானுசர்போல் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப் பெருமை கொண்டவாறு  இன்னும் நூற்றாண்டு இரும்’ (பக்கம் 195 )

 வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர் கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்

இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.

உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத் தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச் சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.  வாழ்க பதுமனார் ! தொடர்க அவர்தம் தொண்டறம் !

 vv

கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை

நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள் 200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம் _ 632502 கைப்பேசி 9443490703

 பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர் அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது

.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத் தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல் படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய பெருமையடைகிறார் புலவர்.

 உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின் கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர். தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும் அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும் மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை  வழங்கிய பெருமைக்குரிய மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர். மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம் பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின் பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின் மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்

“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர் கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )

 பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று உணர முடிகிறது.

 துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )

என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின் ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல் உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும் முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம் என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை  பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )

 மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.

 ”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும் பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த் தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )

மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித் தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching went beyond the text books opening up aworl of stories history and values embedded in the tamil language” (பக்கம் 75 )

இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை வித்தகராக வலம் வருகிறார்.

சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார். “

ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)

மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர் மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார். ‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )

மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு பதுமனாரின் தொண்டை அறியலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன் எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”

நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில் குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே சாரும்” (பக்கம் 129 )

அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.

வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.

“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக நானே உள்ளேன்” (பக்கம் 158 )

பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும் வாழ்த்துவம் “

“எம்பெருமானார் இராமானுசர்போல் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப் பெருமை கொண்டவாறு  இன்னும் நூற்றாண்டு இரும்’ (பக்கம் 195 )

 வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர் கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்

இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.

உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத் தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச் சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.  வாழ்க பதுமனார் ! தொடர்க அவர்தம் தொண்டறம் !