Wednesday, May 2, 2012

மலேசியமண்ணில் சிம்பாங்க் அம்பாட் பகுதியில் திருக்குறள் வகுப்பு


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(அறநெறிக் கழகத்தின் சார்பில் 11- 4- 2012 அன்று மலேசிய மண்ணில் சிம்பாங்க் அம்பாட் பகுதியில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் நடத்திய திருக்குறள் வகுப்பு)

மலேசிய மண்ணில் சிம்பாங்க் அம்பாட் பகுதி திருக்குறள் மனம் பரப்பும் மாசிலாப் பகுதியாக உள்ளது. யான் மலேசியா வந்தவுடன் விசயன் அவர்களையும் இலக்குமணன் அவர்களையும் தொடர்பு கொண்டு என் வருகையைத் தெருவித்தேன். பின் கோலாலம்பூர், சித்தியவான் ஈப்போ , சிங்கை, சோகூர் பகுதிகளில் நிகழ்வுகள் முடித்து இன்று தங்கள் நிகழ்ச்சியில் உள்ளேன். என்னை இலக்குமணன் அவர்கள் தெலுக்கின்சன் பகுதிக்கு பேருந்தில் வரப் பணித்தார்கள் பின் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி. வழியில் அவர்து தொழிற்சாலைக்குச் சென்றிருந்தேன் பேருழைப்பு நல்கும்  தமிழ்ப் பெருமக்களைக் கண்டு மகிழ்ந்தேன். செம்பனையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அடுத்த தொழில் மனையில் செம்பனைக் காய்கள் குவியலாக இருப்பதைக் காண்பித்தார். வியப்பாக இருந்தது. ஒவ்வொரு பழங்களும் 5 கிலோவிலிருந்து 30 கிலோவரை இருந்தது. மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிப்பது செம்பனைகள்.

    இங்குவருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். விசயனும் தாமைரையும் இலக்குமணனும் இணைந்து நடத்தும் திருக்குறள் வகுப்பிற்கு வருகை தந்துள்ள  மாணவச் செல்வங்களே உங்கள் அனைவருக்கும் வாழ்துக்களைத் தெருவித்துக் கொள்கிறேன்.

    மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தமிழை மலேசியத் தமிழர்கள் ஆர்வத்தோடு பயில்வதை கண்டு மகிழ்கிறேன். இங்குள்ள பாரதி தமிழ்ப் பள்ளிக்கும் தோட்டப்புற தமிழ்ப் பள்ளிக்கும் விசயன் அவர்கள் அழைத்துச் சென்றார்கள். ஆசிரியர்களும் மாணவர்களிடமும் உள்ள பேரார்வத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
    உங்களது ஆசிரியர்கள் ஊட்டிய தமிழ் உணர்வைப் போற்றுகிறேன். தமிழ் இனத்தின் மேலும் தமிழின் மேலும் உள்ள பற்றால் அறநெறிக்கழகம் மூலம் திருக்குறள் வகுப்பு நடத்துகின்றனர். இன்று தங்களுக்கு என்னை திருக்குறள் உரையாற்றப் பணித்துள்ளனர். மலேசிய மண்ணில் திருக்குறள் செல்வங்களுடன் பங்கேற்பது மகிழ்வான நிகழ்ச்சியாகும்.

    சகோதரி தாமரை அவர்கள் தமிழ்ப்பெயர் இல்லாத ஒவ்வொருவரையும் தூய தமிழ்ப்பெயர்வைத்து அழைக்கிறார்கள். செல்வங்களே அந்த தூய தமிழ்ப் பெயரையே நடைமுறை வாழ்கையில் கொள்ளுங்கள்.

    திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி. திருக்குறள் தமிழர்களின் மறைநூல். திருக்குறளைப் பின்பற்றியவர்கள் மிகப் பெரும் தலைவர்களாக அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக உலகை வலம் வருகின்றனர். வருகை தந்துள்ள செல்வங்களே நீங்கள் நாளைய உலகை ஆளும் தலைவர்களாக சான்றோர்களாக வருவீர்கள் என்பது திண்ணம்,

    மனத்துக்கண் எனத் தொடங்கும் தொடங்கும் திருக்குறளை யாராவது சொல்ல இயலுமா, தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள்.

    மனத்த்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீற பிற.

     மகிழ்ச்சி உரையை யாராவது
    மனத்தில் தூய்மையாக இருப்பதே அறங்களிலெல்லாம் உயர்ந்த அறமாகும். சிறப்பாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். மந்த்தி போறாமை, சூது, வஞ்சகம், காழ்ப்பு ஏதும் இன்றி தூய்மையாக இருத்தல். அனைவரும் இணைந்து திருக்குறளைப் பாடுங்கள். மகிழ்ச்சி.

    அடுத்து எண்ணீத் எனத் தொடங்கும் திருக்குறளை யாரவது

    எண்ணித் துணீக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

    பொருள் யாராவது சொல்லுங்க அம்மா.
    ஒருசெயலைச் செய்யும் முன் அனைத்தையும் ஆராய்ந்து தொடங்க வேண்டும். தொடங்கியபின் எண்ணுவது துன்பத்தைத் தரும். மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். எந்தச் செயலைச் செய்ய எண்ணிணாலும் நிரை குறைகளை எண்ணித் தீர்வுகாணவேண்டும். திர்வுக்குப் பின் செயலில் இறங்க வேண்டும். செயல் தொடங்கியபின் மாறுபட்டு எண்ணினால் தீமையைத் தரும்.

    முயற்சி எனத் தொடங்கும் பாடலை யாரவது தம்பி நீங்க

    முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.

    பொருள் யாராவது கூறுங்க முயற்சி உடையவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள். முயற்சியில்லாதவர்கள் வாழ்வில் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.. மிகச் சரியாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    பள்ளியில் படிக்கும் தங்களையே சான்றாகக் கூறுகிறேன். பள்ளிக்குச் செல்லும் தாங்கல் முயன்று ஊன்றிப்படிக்கவேண்டும். பின்தான் தேர்வில் வெற்றிபெற்று நல்ல துறையைத் தேர்ந்தேடுத்து வாழ்வில் உயர்ந்த் நிலையை அடைய முடியும். முயற்சியே இன்றி இருந்தால் தேர்வில் தோல்வியுற்று வாழ்வில் வெற்றிபெறமுடியாது. ஆகவே முயற்சி முதன்மையானது.

    உள்ளுவது எனத் தொடங்கும் குறளை யாரவது. பாப்பா நீங்க சொல்லுங்க

    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
    தள்ளினும் தள்ளாமை நீத்து

    யாராவது பொருளைக் கூறுங்கள். நீங்களே சொல்கிறீர்களா சொல்லுங்கள்.
    எண்ணுவது அனைத்தும் உயர்வாகவே எண்ணவேண்டும் தாழ்வான எண்ணங்களுக்கு இடமே இல்லை. எண்ணங்களே நம்மை மென்மாலும் உயர்த்தும்.
    சிறப்பகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் உயர்ந்த சிந்தனைகளை மேற்கொண்டு முயன்று வாழ்வில் மேம்பட வேண்டும்.

    எண்ணிய எனத் தொடங்கும் பாடலை யாராவது. அநத் மூலையில் குறிப்பு  எழுதிக் கொண்டிருக்கும் தம்பி, தெரியலையா வேறு யாராவது

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
    திண்ணியர் ஆகப் பெரின்

    சரியாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். தம்பி இந்தக் குறளை அப்படியே தங்கள் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளுங்கள். எழுதிய குறளைப் படியுங்கள்.
மகிழ்ச்சி சிறப்பாகச் சொன்னீரகள். யாரவது பொருள் கூறமுடியுமா

    சொல்லுங்க அம்மா நாம் எண்ணிய அனைத்தையும் அடைய முடியும் அதற்குத் தகுதியான் தன்மையோடு நாம் இருந்தால். மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

அன்புச்செல்வங்களே தற்போது நாம் உரையாடிய அனைத்துக்குறளையும் எழுந்து நின்று அனைவரும் பாடுங்கள். ஒலி  போதாது சப்தமாகப் பாடுங்கள்.
மிகச் சிறப்பாகப் பாடினீர்கள்.வாழ்த்துக்கள்.
 பாடியதோடும் படித்ததோடு மட்டும் நில்லாமல் திருக்குறளை தங்களது வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். நீங்கள் உலகை ஆள்விர்கள். தங்களுக்கு உரையாற்ற வாய்ப்பளித்த விசயன், தாமரை, இலக்குமணன் ஆகியோர்க்கும் தங்களது பெற்றோர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment