Wednesday, May 30, 2012

ஆறு. அழகப்பனார் எனும் ஆல விருட்சம்

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(26-5-2012 அன்று மதுரையில் தமிழ்மாமணி திருக்குறட்செம்மல் தலைமையில் நடைபெற்ற ஆறு அழகப்பனார் பவள விழாவி கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்  ஆற்றிய உரை)

ஆறு அழகப்பனார் தமிழ் காக்கும் தமிழாகரர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழ் தமிழர் சிந்தனைக்கு தன்னை ஒப்படைத்த தமிழ்ப்போராளி. பேராசிரியப் பெருந்தகை எங்களது குடும்ப நண்பர். ஐயா அவர்களின் பொன்விழாமலரை தமிழ்ப்பணி வெளியிட்டது இன்றும் பசுமையாக உள்ளது. வேட்டி சிப்பா துண்டு என் பாரம்பரிய தோற்றத்திலும், வெள்ளை கால் உடை அரைக்கை சட்டை தரித்த பல்கலைக்கழக உடையில் உலா வரும் மாமனிதர். மனிதம் போற்றும் மாண்பாளர்.

ஆறு அழகப்பனார் எங்கள் பகுதியில் குடிபெயரும்போது ஒரு இல்லத்தை தேர்ந்தெடுத்தபோது என்னைக் கருத்துக் கேட்டார். அவசியம் வாங்குங்கள் எனக் கூறினேன். அந்த இல்லத்தில் குடியேறிய பேராசியப் பெருந்தகை தன்னுடைய இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின்போது என்னைத் தலைமை தாங்க வைத்த பெருமனத்தர். இப்போது தமிழ்ச்சுரங்கம் இல்லத்தைக் கடக்கும்போது மக்கள் அனைவரும் திருவள்ளுவரை வணங்கிச் செல்கின்றனர். ரிசிகேசில் திருவள்ளுவர் சிலையை நிறுவி சாதனை படைத்த மாவீரர் நம் ஆறு அழகப்பனார். திருவள்ளுவர் நாடகத்தைத் தாயாரித்து உலகெங்கும் நடத்தி வரும் நாடகக் காவலர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருதைப் பெற்ற பெருமைக்குரிய  சாதனையாளர் முனைவர் பெருமகன்

செம்மொழிப் போராட்டத்தின்போது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் மற்றும் பெருமக்களோடு உண்ணாநோண்பில்; பங்கேற்று அன்றைய பாரதப் பிரதமர் வாச்பாய்  குடியரசுத் தலைவர் அப்துக் கலாம் ஆகியோரைச் சந்தித்து செம்மொழிக் கொள்கையை உரம் பெறவைத்தவர்.

அறநெறிக்கழகத்தின் சார்பில் பேராசிரியரும் யானும் பர்மா சென்றிருந்தோம். பத்து நாட்கள் பேராசிரியரும் யானும் மியான்ம்ரின் பல பகுதிகளுக்குச் சென்றோம். பேராசிரியரின் தந்தையார் பர்மாவில் வாழ்ந்தவர். பர்மாவில் வாழ்ந்து அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் கணக்கிலடங்கா. அந்தப் பொருள்களையெல்லாம் மீட்டெடுக்க அவர் அங்கு ஆற்றிய திரட்டிய கோப்புகள் செயற்பாடுகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. யங்கூன்  தண்டபாணி முருகன் கோயிலில் கரூவூலப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக கோபுரம் போல் குவியலாக குவிந்திருந்தது. நம் செட்டிநாட்டுப் பெரும்க்களின் வணிகம் எப்படித் தழைத்திருந்திருக்கும் என்பது இப் பெட்டிகளைக் கண்டாலே புலப்படும். அப் பெருமக்களின் சொத்துக்களை மீட்டெடுக்க இன்றும் அவர் ஆற்றிவரும் பங்கு மகத்தானதும் ஐயா அவர்கட்கு அரசும் நாமும் ஒத்துழைத்தோமானல் மீட்டுவிடுவார் என்பது திண்ணம்.

இன்று பர்மாவில் தமிழ்ப் பத்திரிக்கைகளோ வெளியீடுகளோ ஏதும் இல்லை. நம் தொலைக்காட்சிகள்தான் அவர்கள் பேசும் நல்ல தமிழையும் கெடுத்து தமிங்கிலத்தைப் பரப்புகின்றனர். மூவ விற்குப் பிறகு எந்த இலக்கியமும் அம் மக்களுக்குப் புலப்படவில்லை. அங்கு நம்பேராசிரியர் அவர்கள் தமிழ் பயில குறுவட்டுகளையும், மங்கையர்களுக்கு கோலங்களையும் வழங்கிய சான்றோன்.

பேராசிரியரின் வாழ்நாள் சாதனை தமிழ்த்தாய் ஓவியம். பெருமைமிகு ஈழத்து ஓவியர் அமரர் பெனடிக்ட் அவர்களைக் கொண்டு  வரைந்து உலகுக்கு அர்ப்பணித்த பெருமைக்குரிய கலை வல்லுனர். இன்று அந்த ஒவியம் உல்கமெங்கும் பரவி தமிழ்த் தாயின் வடிவம் தமிழனை தலைநிமிரச் செய்கிறது. யாங்கள் பர்மா சென்றிருந்தபோது தட்டோன் பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்திவரும் சேகர் என்பவர் தம் பள்ளியில் ஐயா அவர்களின் தமிழ்த் தாய் ஒவியத்தை பெரிய அளவில் வரைந்து ஐயா அவர்களை கொண்டே திறக்கவைத்தார். யான் திருவள்ளுவர் படத்தைத் திறந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய தமிழ்ச்சுரங்கம் நாட்காட்டியில் தமிழ்த்தயின் படத்தை வெளியிட்டு அனைவருக்கும் வழங்கிவரும் கொடை நெஞ்சர் நம் அழகப்பனார்.

பேராசிரியர் அண்ணம்லைப் பல்கலைக் கழக்த்தில் உணர்வுமிக்க மாணவர்களை உருவாக்கிய பெரும் பேராசான். அவரைத் தொடர்ந்து அவர்வழியிக் தொண்டாற்ற தள்பதிகளை உருவாக்கியுள்ளார்.

நம் சமூகத்தை எண்ணிக் கவலைகொண்ட பேராசிரியர் தமிழ் இனத்தைச் சூழ்ந்துள்ள கவலைகள் 64 பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள கவலைகளைத் தீர்த்தோமானல் நம் இனம் மீட்சியுறும் எழுச்சியுறும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய இளைஞர்களிம்  தமிழை எவ்வாறு கொண்டு செல்வது என்பது நம் தமிழகத்தின் தலைப்பாக உள்ளது வெதனைக்குரிய ஒன்று, நம் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தென் ஆப்ரிக்கா பொறுப்பாளர் மிக்கி செட்டி அவர்கள் அண்மையில் சென்னை வருகை தந்திருந்தார், தமிழில் பேச முடியவில்லையே என வேத்னையுடன் அவர் கூறியது நெஞ்சை வறுத்தியது. நம் தமிழர்கள் தமிழகத்தில் தமிழ் ஆரவமின்றி உள்ளனரே எனபது  நெஞ்சில் குத்தும் வேலாக உள்ளது.

1.    தமிழகத்தில் வாழ்வோர் அனைவரும் தொடக்கப் பள்ளி முதல் தமிழ் வழியே பயில வேண்டும்.
2.    தமிழ்வழி பயின்றோருக்கேதொழிற்கல்வி வேலைவாய்ப்பு  அனைத்துத் துறையிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
3.    சமுகமாற்றம் கண்டுள்ள நாம் பள்ளிக் கூடங்களில் ஒரே வழியான கல்வி முறையைப் பின் பற்ற வேண்டும்.
4.    தமிழில் தலைப்பில்லாத பத்திரிக்கைளை புறக்கணிக்க வேண்டும்.
5.    தமிழில் மொழிக் கலப்பு செய்வோரை தண்டிக்க வேண்டும்
6.    தலைப்பெழுத்தை கண்டிப்பாக் தமிழில் அரசு சார்ந்த பிறப்புச் இறப்புச் சான்றிதழ்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
7.    தமிழ் இனம் உலக இனம் இங்கு நடைபெறும் ஒவ்வொன்றும் உலகெங்கும் பரவுகிறது. உணர்வாளர்கள் ஒன்றுகூடி தமிழகப் போக்கை மாற்றவேண்டும். இல்லையெனில் தமிழ்கமே மோரிசு, தென் ஆப்ரிக்கா நிலையை அடைந்துவிடும்.
8.    தமிழன் தமிழகத்தை ஆள்வதற்குரிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தவேண்டும்
9.    வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மனப்போக்கை நாம் கண்டு வெற்றிக் கொடி நாட்டவேண்டும்.
10.    செம்மொழி வாய்புப் பெற்றுள்ள நாம் ஆண்டுதோறும் உலகம் முழுமையும் அதை முறையாக பயன்படுத்த திட்டமிடல் வேண்டும்.

இளைஞர்கள் நம்மொழி இனம் காக்க இத்தகு செயல்களை நடைமுறைப் படுத்த பேராசிரியர் பவள விழாவில் சூளுரை ஏற்போம்

No comments:

Post a Comment